புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
64 Posts - 58%
heezulia
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
106 Posts - 60%
heezulia
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_m10இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை காணாத புது செய்தி போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 25, 2012 12:54 am

அதிர்வு தளத்தில் கண்டது.இதில் செய்தி நம்பத்தகுந்ததா என்று எனைக் கேட்காதீர்கள் . அதற்கு நான் பொறுப்பில்லை. கண்டதை பகிர்ந்துகொள்கிறேன் . காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்
அமெரிக்கா வின் உதவி தமிழருக்கு கிடைக்கும் போது இப்படி எதிர்ப்பு ஏற்ர்படுத்தும் விதமாக இப்போது செய்தி வரக் காரணம் ஏதும் உண்டா?

அமெரிக்கா


இதுவரை காணாத புது செய்தி  போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு Amee



இந்தக் கைது 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பின்னர் அவர்கள் வசமிருந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்நாள் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்த நெருக்கமான உறவுகளுக்கமையவே அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதில் ஒருகட்டமாக இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளுக்கமைய ��US-Hawai Pacific Fleet�� படையணியின் ��7th Fleet-USS Blue Ridge�� கப்பல் இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்தது.



இந்தக் கப்பலிலிருந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதுடன், இதிலிருந்து பெறப்பட்ட செய்மதிப் புகைப்படங்கள் அமெரிக்க தூதரகத்தின் ஊடாக இலங்கை அரசாங்கப் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடனேயே விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அத்துடன், புலிகளுக்கான ஆயுத விநியோகமும் பெருமளவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்காவினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட செய்மதிப் புகைப்படங்களை (Satalite Images) ஆராய்ந்து செயல்படுத்தக் கூடிய அதிகாரியொருவர் அப்போது இலங்கை பாதுகாப்புத் தரப்பில் இருக்கவில்லை. இதனால், உடனடியாக செயற்பட்ட அமெரிக்கத் தூதரகம், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் "மத்துமகே" என்ற அதிகாரிக்கு இதுதொடர்பான புலமைப்பரிசில் ஒன்றை ''கொலராடோ மிலிடரி அகடமி'' இல் பெற்றுக்கொடுத்தது.

இதனையடுத்து 700 கடல்மைல் தொலைவிலுள்ள ஆழ்கடலில் நடைபெற்றுவந்த விடுதலைப் புலிகளின் கப்பல் போக்குவரத்தை இலங்கை இராணுவத்தினரால் துல்லியமாக கணிக்க முடிந்துள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கடலில் முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகள் இலகுவாக திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் புலிகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அமெரிக்க இராணுவம், இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது. இதனை செயற்படுத்துவதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும் அமெரிக்காவே வழங்கியுள்ளது. இதற்காக அந்நாள் கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் வசந்த கரண்ணாகொட உள்ளிட்ட குழுவினருக்கு அமெரிக்கா ஒரு மாத கால விசேட பயிற்சியொன்றை வழங்கியுள்ளது.

இந்த விசேட பயிற்சிகளின் பின்னர் 700 கடல்மைல் தொலைவில் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கவும், அதனை முறியடிப்பதற்கும் தேவையான உதவிகளை இந்து சமுத்திரத்தில் நங்கூரமிட்டிருந்த அமெரிக்காவின் ��7th Fleet-USS Blue Ridge�� கப்பல் முழுமையாக இலங்கைக் கடற்படைக்கு வழங்கியிருந்தது. இலங்கை கடற்படையினர் 2008 ஆம் ஆண்டு நம்வபர், டிசம்பர் மாத இடைவெளியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பல ஆயுதக் கப்பல்களை கடலில் தாக்கியழித்திருந்தனர். இவ்வாறு தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 07, 08 கப்பல்களின் ஆயுதங்கள் அந்த இயக்கத்திற்குக் கிடைத்திருந்தால் இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவுகள் பெரும்பாலும் வேறுவிதமாக இருந்திருக்கும் என எமது இணையத்தளத்திற்கு தகவல் தந்த குறித்த சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

இதனைத்தவிர, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகள் குறித்த விரிவான தகவல்களை இனிவரும் காலத்தில் வெளியிட ''மேன் ஸ்ரிம்'' அணியில் இருந்த சிலர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது அணியின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேக்கா தொடர்ச்சியாக நன்றி தெரிவித்து வந்தார். இந்த நாடுகள் உதவி வழங்கவில்லையெனில் யுத்தத்தை வெற்றிகொண்டது சாத்தியமாகியிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவற்றை மறந்துபோன தற்போதைய மகிந்த ராஜபக்�ஷ நிர்வாகம், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயிற்சிகளை இலங்கை இராணுவத்திடம், வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது நகைப்பிற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா செய்த உதவிகளை மறந்து, இலங்கை சீனாவுடன் தனது உறவுகளை திடீரென வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனை அடுத்து அமெரிக்காவின் கடுங்கோபத்துக்கு ஆளாகியுள்ளது இல்லை. தன்னை புறந்தள்ளினால் என்ன தோன்றும் என்பதற்காக சிறிய சாம்பிள் ஒன்றையே தற்போது அமெரிக்கா, ஐ.நா சபையில் காட்டியுள்ளது. அத்தோடு தனது உற்ற நண்பனான சரத் பொன்சேகாவை இலங்கையின் ஜனாதிபதியாக்கவே அது விரும்புவதாகவும், அவரை சிறையில் இருந்து வெளியே விடவேண்டும் என அது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மகிந்தர் பெருஞ்சிக்கலில் மாட்டியுள்ளார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இதனை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார்களா ?

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Mar 25, 2012 1:12 am

புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா முடிந்த அளவு உதவிகளையும் , என்ன போர்க்குற்றம் செய்தாகிலும் புலிகளை அழிக்க ஆசீர்வாதமும் வழங்கியிருந்தது என்பதும் உண்மையே.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 25, 2012 3:27 am

அகிலன் wrote:புலிகளை அழிப்பதற்கு அமெரிக்கா முடிந்த அளவு உதவிகளையும் , என்ன போர்க்குற்றம் செய்தாகிலும் புலிகளை அழிக்க ஆசீர்வாதமும் வழங்கியிருந்தது என்பதும் உண்மையே.

உண்மைதான்! ஆனால் வேறுவிதமான ஆய்வுகளும் உண்டு.
இது முழுப்பழியையும் அமெரிக்காவில் தூக்கி போடுவதாக தெரிகிறது. அதற்கு உள்நோக்கம் உண்டா தெரியவிலை. இந்தக் கட்டுரையையும் பாருங்கள்

இலங்கை இனப்படுகொலையும்இந்திய அரசியலும் – பா.செயப்பிரகாசம்

உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.

தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் ஸ்லேவேனியா,கொசாவோ,மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் என்ற நாடுகள் தேசிய இன விடுதலைக்குச் சான்றாய் நின்றன.இன்றும் நடைபெறுகிற காஷ்மீர்,நாகலாந்து,மணிப்பூர்,மேற்கு இரியான்,திபேத்து,ஈழம் போன்ற இவற்றுக்குள் கூர்மை பெற்று முன்னணியில் இருக்கும் போராட்டம் ஈழப் போராட்டம்.

தமிழீழம் சரியா, பிழையா என்ற விவாதத்தை வரலாறு கடந்து விட்டது. தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள அரசுடன் இனியொருபோதும் இணக்கப் போக்கு சாத்தியமில்லை. இனப் படுகொலைகளை நடத்திய இடத்திலிருந்து இன விடுதலையின் அடுத்த நகர்வைத் தொடங்க வேண்டும். இது தொடர்பில்- “ வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல் இனப்படுகொலைக்கு ஆளான எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான்,அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948-இனஅழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது., பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும், உரிய இழப்பீடும் ஆகும்’’ என்று பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ளவேண்டும். (பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty International)) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்)

நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அறவழிப் பாதையில் இருக்கிறபோது உலகில் யாரும் கவனம் கொள்வதில்லை. ஆயுதப் போராட்ட வடிவெடுக்கையில் மாத்திரமே சர்வதேச கவனமும் தலையீடும் பெறுகிறது.

ஈழத்தமிழர் விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம் வரை கண்டு கொள்ளவில்லை. காந்தீய வழிப் போராட்டத்தை அங்கீகரித்து, அப்போதே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணும் முன்னெடுப்பை இந்தியா செய்திருக்க முடியும்.

1972லும் அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.

“இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவிட்டு, அதனைக் கையாளுவதே இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது. எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் பிரச்சனைகளை தனது நலனுக்குகந்த அளவில் ஓரளவு தீர்த்து வைப்பதும், தனது தலைமையை இலங்கை அரசை ஏற்க வைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.’’ என்பது எண்பதுகளின் மத்தியில் ஈழத்தில் சொல்லப்பட்ட ஒருகருத்தாகும்...............(முடியவில்லை)..................................................................................

மிகுதியையும்.. பார்த்துகொள்ளுங்கள் இங்கே


இலங்கை இனப் படுகொலையும் இந்தியாவின் பங்கும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Mar 25, 2012 9:21 am

யாரு ப்ளான் போட்டாலும் இறந்தது அப்பாவி மக்கள் தானே! அந்த பாவம் அவர்களை சும்மாவிடாது. சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 25, 2012 10:27 am

அட இதுக்கென்ன இப்போ ,

தமிழக மக்களே இன்று மானாட மயிலாட இருக்கு , கையில் ஒரு கோடி இருக்கு அதெல்லாம் விட்டுட்டு என்ன கொடுமை சார் இது இந்த செய்தியெல்லாம் படிக்காதீங்க.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:30 am

ராஜா wrote:அட இதுக்கென்ன இப்போ ,

தமிழக மக்களே இன்று மானாட மயிலாட இருக்கு , கையில் ஒரு கோடி இருக்கு அதெல்லாம் விட்டுட்டு என்ன கொடுமை சார் இது இந்த செய்தியெல்லாம் படிக்காதீங்க.

அது அண்ணே ... நமீதா டிரஸ் எப்டி இருக்குனு பார்க்கணும்

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 25, 2012 10:34 am

அமெரிக்காவும் சேர்ந்து அழிதூ முடிதது என குழந்தைக்கு கூட தெரியும் ,,, அமெரிக்காவின் சொல் பேசு கேட்கும் அதிபரை இலங்கையில் அமர்தவே இந்த தீர்மான நாடகம் ...

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Mar 25, 2012 2:41 pm

ராஜா wrote:அட இதுக்கென்ன இப்போ ,

தமிழக மக்களே இன்று மானாட மயிலாட இருக்கு , கையில் ஒரு கோடி இருக்கு அதெல்லாம் விட்டுட்டு என்ன கொடுமை சார் இது இந்த செய்தியெல்லாம் படிக்காதீங்க.
நெருப்பு காலடிக்கு வரும்போது மக்கள் வெகுண்டெளுந்துவிடிவார்கள் என்று நம்புகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக