புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
21 Posts - 66%
heezulia
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
63 Posts - 64%
heezulia
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_m10அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Sep 25, 2011 3:44 pm


அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?


டாலர் மதிப்பு சரிவதைக் காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 98 உலக நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என இந்தியா உலக அரங்கில் மார்தட்டிக் கொள்ளலாம். வல்லரசான அமெரிக்காவில் பெட்ரோலின் விலை இந்தியாவை விடக் குறைவாம்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது என காரணம் கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது புதிதாக டாலர் மதிப்பு சரிந்து விட்ட காரணத்தையும் கண்டுபிடித்து பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தும் மொத்த பெட்ரோலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்தியாவில் எடுக்கப் படும் கச்சா எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையோ அல்லது டாலர் சரிவோ வரப் போவதில்லை.

எனினும் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பொது மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. காரணம் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயின் லாபத்தை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதுதான்.

அண்மையில் கூட கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுச் செலவைப் பலமடங்கு உயர்த்திக் காட்டி பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெட்ரோலிய அமைச்சகத்துக்குப் பட்டை நாமம் சாத்தியுள்ளது என தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக கணக்கு காட்டி கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடான கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!.

குஜராத்தில் முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுனர் நியமித்து விட்டார் என்று மக்களவையை நடத்த விடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய பாஜக, ரிலையன்ஸ் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கைக் குறித்து வாய் திறக்கவில்லை.

சாதாரண அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக் கூடிய டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளாளுக்குத் தங்கள் பங்குக்கு வரிகளைப் போட்டு ரூ 30 க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ 70 க்கு விற்று வருகின்றன. தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை விட பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகம்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆடம்பர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரி விதிப்பே கிடையாது. ஆனால் அத்தியாவசிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதிக்காத எந்த மாநிலமாவது இந்தியாவில் உண்டா? 2004 ம் ஆண்டு ரூ 35 க்கு விற்ற பெட்ரோலின் இன்றைய விற்பனை விலை ரூ 71. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோலின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
எத்தனை அடித்தாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என்ற நிலையில் இருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவ்வாறு அநியாய அரசியல் செய்பவர்களை மாற்ற முடியாது. ஏதோ சில அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதோடு நில்லாமல் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்துவதோடு எனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் இத்தகைய மோசடித்தனங்களைப் பாமர மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல்,டீசல் விலை குறித்து வாயே திறக்காத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் எரிபொருளின் விலையினைக் கட்டுக்குள் கொண்டுவர தனியாரின் கையில் கொடுக்கப்பட்ட விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும்வரை, மாதத்துக்கு மும்மாரி கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் இந்த அராஜகம் நிற்கப்போவதில்லை!

அத்தியாவசியம் - ஆடம்பரம், இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் வரிவிதிப்புக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும், லஞ்சத்தைக் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்களுக்குப் பங்குகளாகவும் தரும் தனியார் நிறுவனங்கள் கொளுத்து வளர அப்பாவி பொது ஜனங்களைச் சுரண்டும் ஆட்சியாளர்களும் இருக்கும் வரை இந்தியா ஒரு போதும் முன்னேற்றங் காணப் போவதில்லை என்பதை உரக்கவே சொல்லுவோம்.








--






ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 25, 2011 3:46 pm

பகிர்வுக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Sep 25, 2011 4:10 pm

காங்கிரஸ் அல்லது பாஜாகா யாராக இருந்தாலும் மக்களை பற்றி என்ன கவலை. அவர்களுக்கு தேவை எலக்ஷனுக்கு நிதி, கட்சிக்கு நிதி, தனக்கு நிதி. இருக்கும் நிதியை வைத்து பெறுவார் ஓட்டு. மக்களாவது மன்னாவது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக