புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆறாம் விரல் ...  Poll_c10ஆறாம் விரல் ...  Poll_m10ஆறாம் விரல் ...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாம் விரல் ...


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Sep 13, 2011 8:58 pm

"மாமா... நம்ம கல்யாணம் நம்ம பெத்தவங்க ஆசிர்வாதபடி நடக்குமா? " கல்யாணி அவள் மாமன் பிரகாஷ் மடியில் படுத்துக் கொண்டு கேட்டாள் அந்த வைக்கோல் களத்தில்....

"மண்டு மண்டு...அனாவிசியமாக எதையும் மனசுல போட்டு கொழப்பிக்காத....எல்லாம் நல்ல படியாக நடக்கும்..."

"அதுக்கு இல்ல மாமா...நேத்து என் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்து அப்பா கூட எதோ ஒரு வரன் பற்றி பேசிகிட்டு இருந்தார்...அதான்...எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கு.. "

கல்யாணி பிரகாஷின் அத்தை மகள்...பேருக்குதான் சொந்தம் மத்தபடி இரு வீட்டிற்கும் ஆகாது...கல்யாணிக்கு ஆறு வயதாக இருக்கும் போது, அவளுக்கு காது குத்தும்போது நடந்த சண்டை...எல்லோர் விட்டிலும் நடக்கும் மாமன் மச்சினன் சண்டை...இன்னும் புகை விட்டுக்கொண்டுதான் இருக்கிறது....

பிரகாஷுக்கும் நிச்சியமாக தெரியும் இந்த கல்யாணம் நடப்பது ரொம்ப கஷ்டம் என்று, இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கை எப்படியாவது இரு வீடும் ஒன்று சேர்ந்து விடும், தங்களது கல்யாணம் நடந்து விடும் என்று....அது ஒரு கானல் நீர் என்று அவனுக்கு தெரியாது....

"மாமா நீ 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லு, பெட்டி படுக்கையோட வீட்ட விட்டு ஓடி வந்துடுறேன்...." கலங்கிய பார்வைகளோடு கல்யாணி பிரகாஷிடம் கேட்டாள்.

கல்யாணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவனை சற்று உலுக்கியது...இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் " அசடு நீ சமத்தையா என் கிட்ட வாங்க போற.."

"எங்க நீ என்ன அடிச்சிடுவியா....எங்க அடி பார்போம்..." என்றாள் சற்று கேலியாக...கலங்கிய கண்களுடன்....

"நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு மாசம் தூங்க மாட்ட...வீடு போயி சேரமாட்ட..." என்றான் அவளை பார்த்து....

"தோடா...என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு....மொக்க மாமா இந்த பாட்டு பாடுற நேரமா இது...."

"ஏண்டி வீட்டுக்கு போக டைம் ஆகலையா ..இன்னும் ஏன் கூட பேசிகிட்டு இருக்க...எப்பவுமே வந்தவொடனே...கால்ல சக்கரத்த கட்டுன மாதிரி ஒடுவ...இன்னக்கு என்ன ஆச்சி...."

"வீட்டுல நண்பி விட்டுக்கு படிக்க போறேன் ..லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டேன்...."

"அப்ப அம்மணி இன்னைக்கு என் கூட தான்..." என்று சொல்லிக்கொண்டே அவனது கைகள் விளையாட தொடங்கின....

"காலையில பத்து மணி வரைக்கும் என்னடா தூக்கம்... எழுந்திரிடா... அம்மாவின் குரலை கேட்டு கொண்டவாறே பிரண்டு படுத்தான்..."

"நான் சொல்லுறத என்னைக்காவது கேட்டுருக்கியா நீ....உன் அப்பா கூப்பிடுறார் பார்...போயி என்னான்னு கேளு..." என்று சொன்ன மறு கணமே....கிழே அவன் அப்பா முன் நின்றான்...

"டேய் உனக்கு ஒரு தபால் வந்திருக்கு...என்னான்னு பிரிச்சி படி.." என்றார்

கடிதத்தில் வந்த வார்த்தைகளை சற்று மேய்ந்த பிறகு .." அப்பா எனக்கு டி சி எஸ் கம்பெனில வேலை கடைசிருக்கு...மாசம் இருபது ஆயிரம் சம்பளம்...நாளைக்கே வேலையில சேர சொல்லி நியமன உத்தரவு அனுப்பி இருகாங்க " என்றான் சந்தோசமாக.....குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியது...

"இப்ப தாண்ட உனக்கு ஒரு விடிவூ காலமே பொறந்து இருக்கு...என்ற அம்மாவிடம் ...அம்மா நான் போயி இத என் பிரிண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வரேன்...என்று தன் சைக்கிள்ளை கல்யாணி வீட்டை நோக்கி ஓட்டினான்...."

வீட்டில் பூட்டு தொங்குவதை பார்த்து மனம் வெதும்பிய பிரகாஷ்...அன்று மட்டும் கல்யாணியின் தெருவை தன் வீடு போல நினைத்து சைக்கிளில் சுற்றினான்.....

வேலையில் சேர்ந்த முன்றாம் மாதத்திலேய...பிரகாஷ்க்கு அவன் பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துவிட்டார்கள்...கல்யாணிக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவன் அம்மா சொன்னதால் ஒரு மனதோடு கல்யாணத்திற்கு சம்மதித்தான்....

வருடங்கள் உருண்டோடின.....பிரகாஷ் இப்போது ஒன்றை வயது பெண் குழந்தைக்கு தந்தை....

ஊர் திருவிழாவிற்காக தன் மனைவியுடன் காரில் சென்னையில் இருந்து கிளம்பினார்கள்....

"கல்யாணியை பார்த்து என்ன ஒரு இரண்டு வருஷம் இருக்குமா?... என்றாள் பிரகாஷின் மனைவி கிரிஜா அவனை பார்த்து கேட்டாள்.

"உம் ..என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தி கொண்டான்.."

"திருவிழா முடிஞ்சவுடனே ..அவுங்க வீட்டுக்கு நாம போறோம்..." என்றாள்...மறுபடியும் அந்த ஒற்றை சொல்லுடன் நிறுத்தி கொண்டான்..

மூன்று நாட்கள் திருவிழா முடிந்த கையோடு கிளம்பினார்கள் கல்யாணியை பார்பதற்காக....அன்றும் வீடு பூட்டியே கிடந்தது....வீடு முன்னால் அவர்கள் நிற்பதை கவனித்த ராமசாமி..." ஐயா நீங்க யார தேடி வந்து இருக்கீங்க?.."

"இங்க கல்யாணின்னு" .....என்று சொல்லும் போதே ராமசாமி...
"சார் நீங்க பிரகாஷ் தானே என்றான்...."

தன் பெயரை அவன் கூறியபோது, "கல்யாணி இவனிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போல..." என்று மனதிற்குள் நினைத்துகொண்டான்.

" இந்த வீட்ட கல்யாணியோட அய்யன் ஆத்தா வித்துபுட்டு, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு அவுக போய் சேந்துட்டாங்க...நாங்க இப்போ அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்க தான் குடும்பம் நடத்தி கொண்டிருகோம்..." என்று சொல்லியவாறே அவர்களை அழைத்து சென்றான்..

"ஏய் கல்யாணி யார் வந்திருகாங்க பாரு....குடிக்க கொஞ்சம் மோர் தண்ணி கொண்டுவா புள்ள..."

கையில் மோருடன் வந்த கல்யாணி பிரகாஷை பார்த்ததும் கண்ணீருடன் "எப்படி மாமா இருக்கே...." என்றாள்...

சிலமணிநேரங்கள் பேசிய பின், வீட்டில் விளையாடிகொண்டிருந்த தன் பிள்ளையை ராமசாமி அவர்களிடம் அறிமுக படுத்தினான்..."இவன் தாங்க என் புள்ள பிரகாஷ்....கல்யாணி தான் பேரு வச்சா உங்க ஞாபகார்த்தமாக..."

"கல்யாணியின் குழந்தையை கொஞ்சியவாறே ...எங்க பொன்னு பேரு கல்யாணி...அவர் தான் பேரு வெச்சார் என்றாள் கிரிஜா..."

சரி அப்ப நாங்க கேளும்புறோம்....என்று சொல்லிக்கொண்டே பிரகாஷ் நகர தொடங்கினான்...அவனால் அவன் மனதை கட்டு படுத்த முடியவில்லை அதற்கு மேல்.....

"ஏங்க நீங்க ஒன்னு கவனிச்சிங்களா...." என்றாள் கிரிஜா கார் ஓட்டும் பிரகாஷை பார்த்து....

"என்ன ?..."

"உங்கள மாதிரியே கல்யாணி குழந்தைக்கும் சுண்டு விரலுக்கு பக்கத்துல ஆறாவது விரல் இருந்திச்சு...."

கிரிஜா சொல்லிய அடுத்து நிமிடமே அவனோட நினைவுகள் அந்த வைக்கோல் களத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது....
TMT நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆறாம் விரல் ...  Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 13, 2011 9:10 pm

நல்ல கதை ! பகிர்வுக்கு நன்றி கார்த்தி. ஆமாம் எழுதியவர் பெயரென்ன !?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 2:06 am

சூப்பருங்க சூப்பருங்க



ஆறாம் விரல் ...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Sep 14, 2011 6:40 am

பகிர்வுக்கு நன்றி கார்த்தி.
கதையில் சிறு குழப்பம். கல்யாணி குழந்தை என்பது பிரகாஷின் மகள்தானே? அதற்கு ஆறு விரல் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Sep 14, 2011 7:33 am

கே. பாலா wrote:நல்ல கதை ! பகிர்வுக்கு நன்றி கார்த்தி. ஆமாம் எழுதியவர் பெயரென்ன !?
இங்கு இருந்து எடுதேன் அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆறாம் விரல் ...  Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 12:24 pm

[quote="மகா பிரபு"]பகிர்வுக்கு நன்றி கார்த்தி.
கதையில் சிறு குழப்பம். கல்யாணி குழந்தை என்பது பிரகாஷின் மகள்தானே? அதற்கு ஆறு விரல் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.[/குஓட்டே0
கல்யாணி என்ற குழந்தைக்கு இல்ல பிரபு.கல்யாணியோட குழந்தைக்கு



ஆறாம் விரல் ...  Uஆறாம் விரல் ...  Dஆறாம் விரல் ...  Aஆறாம் விரல் ...  Yஆறாம் விரல் ...  Aஆறாம் விரல் ...  Sஆறாம் விரல் ...  Uஆறாம் விரல் ...  Dஆறாம் விரல் ...  Hஆறாம் விரல் ...  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக