புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
47 Posts - 51%
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
12 Posts - 2%
prajai
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
9 Posts - 2%
Jenila
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 1%
jairam
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 7:22 pm

எந்த சரக்கும் அடிக்காமலே மலையேறி விட்டார் குமரன். அறுபடை வீடுகளில் ஒன்றல்ல எனினும் அந்த மலைக்கோயிலுக்கு வரும் பகதர்களின் எண்ணிக்கைக்கு குறைவல்ல. சரியாக கீழிருந்து 54வது படியில் அமர்ந்திருந்தார் கண்ணாயிரம். இப்படி சில நேரம் ஆகிவிடுவது உண்டு. நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி, கண்ணாயிரமும் அந்த வகைதான். இரண்டும் கண்ணும் தெரியாமல் போவதற்கு முன்னிருந்தே அவர் கண்ணாயிரம் தான்.

தன்னுடைய தட்டை தட்டு தடுமாறி தொட்டுப் பார்த்தார். தட்டு மாறிவிடக்கூடும் அளவிற்கு வரிசையாக அமர்ந்திருந்தனர் அவரது கொலீகுகள். தடுமாறி தட்டு மாறிவிடமால் தொட்டவரின் கைகளில் எட்டு நாணயங்களே தட்டுப்பட்டன. பத்து ரூபாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆரோக்கியசாமியிடம் நேரம் என்னவிருக்கும் என்று கேட்க எத்தனிப்பதற்குள் அப்பா என ஓடி வந்தான் கண்ணாயிரத்தின் மகன் செல்வம். ஆசையோடு அள்ளி அணைத்தார். பள்ளிக்கூடத்துல இன்னைக்கு என்னப்பா சொல்லிக் கொடுத்தாங்க என்ற அவரின் கேள்வியை Pass செய்த செல்வம், பசிக்குதுப்பா என்றான். தட்டில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ரெண்டு தக்காளி சாதம் வாங்கி வரச் சொன்னார்.

துள்ளி ஓடிய செல்வம் 108 படிகளை அசாதரணமாய் கடந்து இரண்டு பொட்டலங்களுடன் வந்தான். அப்பாவை அருகிலிருந்த பாறைக்கு அழைத்து சென்று அமர வைத்தவன், பாட்டிலில் தண்ணிப் பிடிக்க அருகிலிருந்த டேங்க்கை நோக்கி ஓடினான். தண்ணியோடு வந்தவன் எங்கப்பா பாக்கெட்டு என்றான். சட்டையே இல்லாத கண்ணாயிரம் என்னப்பா என்றார். தக்காளி சாதம் ரெண்டு வச்சேனே என்று பார்வையை திருப்பினான். நாய்கள் இரண்டு கவ்விக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. நாய் தூக்கிட்டு போச்சுப்பா என்று கத்திய செல்வத்தை அணைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்கினார் கண்ணாயிரம்.

கொஞ்சம் பொறுத்துக்குப்பா என்று மீண்டும் லைனில் சென்று அமர்ந்தார். சற்று நேரத்தில் ஐந்து ரூபாய் ஒரே காய்னாக தட்டில் விழ செல்வம் செல்வம் என்று செல்வத்தை தேடினார். ஓடி வந்தான். இந்தாப்பா. நீ போய் சாப்பிட்டு வா என்றார். உனக்கும் வாங்கிட்டு வர்றேன். எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கே என்றான்.

ஏது?

நானும் லைன்ல உட்க்கார்ந்தேன்ப்பா.

அடித்து விட்டார் கண்ணாயிரம். உனக்கு எதுக்குடா இந்த பொழப்பு? இதெல்லாம் வேணாம்ன்னு தானே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வேணாம் டா கண்ணு. உனக்கு படிப்பு வரலைன்னாலும் பரவாயில்ல. உழைச்சு சாப்பிடனும்டா. எந்த வேலை செஞ்சாலும் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடு. உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான். என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு. உனக்கென்ன என்று அழத் தொடங்கியவரை அழாதப்பா என்றான் செல்வம். தக்காளி சாதம் வாங்கிவர மீண்டும் கீழே வந்தான்.

E252 ரக Benz கார் அங்கிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. கையில் ஒரு பெட்டியுடன் இறங்கினார் அந்த கோட்டு சூட்டு மனிதர். யாரையோ தேடியவர் பின் மலையை நோக்கி நடந்தார். அவரை நோக்கி ஓடிய செல்வம் “அய்யா. நான் இந்தப் பொட்டிய தூக்கிட்டு வரவா? கொடுக்கறத கொடுங்க” என்றான். இதுக்குத்தான் ஆள தேடினேன் என்றவர் சிரித்தப்படி கொடுத்தார். மலை உச்சிக்கு அவர்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும். நடை சாத்தப்பட்டிருந்தது.

என்னப்பா கோயில் மூடியிருக்கு என்றார் அவர்.

தெர்ல சார். வாரம் ஒரு நாள் இப்படி மூடுவாங்க. என்னைக்குன்னு தெரில என்றான்.

இங்க உண்டியல் இருக்குதாப்பா?

அதோ.அங்க இருக்கும் சார்.

கண்களை மூடி கையெடுத்து கும்பிட்டு சொன்னார். “குமரா.உன்னை நம்பித்தான் இந்த பிசினச ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாபடியாய் போது. என் காணிக்கையா இத ஏத்துக்குப்பா என்றவர், பெட்டியில் இருந்த சில கரன்சி கட்டுகளை எடுத்து உண்டியலில் போட்டார். மலையை விட்டு இறங்கியவர் செல்வத்திடம் அஞ்சு ரூபாய் நோட்டை நீட்டினார். சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்.

ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்று அஞ்சு ரூபாயை தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். செய்வதறியாமல் நின்ற செல்வம் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து குனிந்து அஞ்சு ரூபாயுடன் அருகில் இருந்த கூரான கல்லையும் எடுத்தான். ”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.




ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:30 am

அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 11:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை கதை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக