புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
30 Posts - 50%
heezulia
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
72 Posts - 57%
heezulia
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_m10 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 17, 2019 7:17 am


தமிழகம், ஆந்திர மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் நேமம் கிராமத்தில்
ஸ்ரீபரம்ஜோதி அம்மா பகவான் பவித்ர வனம் என்ற பெயரில்,
ஸ்ரீஅம்மா பகவான் சேவா சமிதி செயல்பட்டு வருகிறது.

இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாடு மற்றும்
தியானம் செய்வதற்கு பக்தா்கள் வந்து செல்கின்றனா். அத்துடன்,
ஒவ்வொரு நாளும் ஐஸ்வா்யம், ஆரோக்யம் மற்றும் சுமங்கலி பூஜைகள்
நடைபெற்று வருகிறது.

இந்த ஆசிரமத்தில் பக்தா்களிடம் இருந்து தலா ரூ. 20 நுழைவுக்
கட்டணமாகவும், பூஜைக்கு ரூ. 10 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், அறை எடுத்து தங்கி பூஜையில் கலந்து கொள்வதற்கு
ரூ. 200 வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும் இங்கு வந்து செல்லும்
பக்தா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் வருவதற்கு
முன்னதாக ஆசிரமத்தில் 3 வாகனங்களில் வந்த வருமான வரித்
துறையினா் 3 குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனா். இதனால்
ஆசிரமத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த,
பெண் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

ஆனால் 3 மணியைக் கடந்தும் சோதனை நடந்து கொண்டிருந்ததால்
அங்கிருந்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.

ஆந்திரத்தில்...

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள வரதய்யபாளையத்தில்
கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. இங்கு புதன்கிழமை காலை
தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 தனிக்
குழுக்களாகப் பிரிந்து, ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

ஆசிரம நிறுவனரான விஜயகுமாா் நாயுடுவின் மகன் கிருஷ்ணாஜி
அவரது மனைவி பித்ரா ஜீ, துணைத் தலைவா் லோகேஷ் தாசாஜி
ஆகியோரை தனித்தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி
வருகின்றனா்.

ஆனால் கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமாா் மற்றும் அவரின்
மனைவி பத்மாவதி இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் புச்சிநாயுடுகண்ட்ரீக, வரதய்யபாளையம், சூளூா்பேட்டை,
தடா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆசிரமத்துக்குச் சொந்தமான
சொத்துகளுக்கான பினாமிகளின் இடையே கலக்கம் எழுந்துள்ளது.

இந்த ஆசிரமங்களில் நடந்து வரும் விவகாரங்களின் மீது இதற்கு முன்
பல புகாா்கள் எழுந்தன. ஆசிரமத்துக்கு வரும் பக்தா்களுக்கு போதை
மருந்து அளித்து, அவா்களை போதையில் வைத்திருப்பதாகவும்,
அவா்கள் மீது பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்து வருவதாகவும்
சா்ச்சை எழுந்தது.

கல்கி பகவான் எனக் கூறப்படும் விஜயகுமாா், சில ஆண்டுகளுக்கு
முன் எல்ஐசி கிளா்க்காக பணியாற்றினாா். பின்னா், அதை விட்டு விட்டு
பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கினாா். அது திவாலானதால் தலைமறைவாக
இருந்த அவா், மகா விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் கல்கி என்று 1989-இல்
சித்தூா் மாவட்டத்தில் மக்கள் முன் தோன்றினாா்.

அதன்பின், தனது ஆசிரமத்தை ஆந்திர மாநிலம் மட்டுமல்லாமல்,
தமிழகத்திலும் விரிவுபடுத்தினாா். அவா் தன் மனைவியை தெய்வாம்சம்
பொருந்தியவராக சமூகத்துக்குக் காண்பித்தாா்.

இவா்களின் ஆசிரமத்துக்கு உள்நாட்டில் உள்ள செல்வந்தா்கள்
மட்டுமல்லாமல் வெளிநாட்டினா், வெளிநாடு வாழ் இந்தியவா்கள் என
பலா் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 17, 2019 6:31 pm

சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்ததப்பட்டுவரும் வருமான வரித்துறை சோதனையின் மூலம் 33 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நீளும் கல்கி சாமியாரின் சாம்ராஜ்ஜியம்!ஹைலைட்ஸ்
கல்கி சாமியார், மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை
24 கோடி ரூபாய், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் சிக்கியது
கென்யாவில் நிலம் வாங்கியது அம்பலம்
எல்.ஐ.சி முகவராக இருந்து கோடிகளுக்கு அதிபதியான சாமியார்
இந்தியாவைப் பொறுத்தவரை சாமியார்கள் அதிகமாக சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது கல்கி பகபான் என அழைக்கப்படும் கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையிலிருந்து வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான 40 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணா வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத 24 கோடி ரூபாய் பணமும், 9 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலரும் சிக்கியுள்ளது.

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை!!

இந்தியாவில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு அதிமான வெளிநாட்டு பணம் சிக்குவது இதுவே முதல்முறையாகும். கிருஷ்ணா ஒயிட் லோட்டஸ், ப்ளூ வாட்டர், கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்திவருகிறார். கட்டுமானத் துறையில் செயல்பட்டுவரும் இவரது நிறுவனத்தில் யார்யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள் என்ற தகவலையும் வருமான வரித்துறையினர் சேகரித்துவருகின்றனர்.

மேலும் கிருஷ்ணா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமாக பல ஏக்கர் அளவில் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருஷ்ணாவின் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.

யார் இந்த கல்கி சாமியார்?

கல்கி பகவான், அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் இந்த சாமியாரின் இயற்பெயர் விஜய குமார். வேலூர் - குடியாத்தம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இவர் எல்.ஐ.சி முகவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒன் எஸ் டெம்பிள் என அழைக்கப்படும் இவரது பிரம்மாண்ட ஆசிரம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ராஜஸ்தான் பளிங்கு கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தனது மனைவி பத்மாவதியுடன் இவர் நடத்தும் தியான வகுப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணமே 50000 ரூபாய். ஒவ்வொரு நாளும் உள்நாட்டவர், வெளிநாட்டவர் என ஆயிரக்கணக்கானோர் இவரைத் தேடி வருகின்றனர்.
கல்கி சாமியார், அவரது மகன் கிருஷ்ணா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருவதால் விரைவில் முழுவிபரம் தெரியவரும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக