புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழை நார் புடவை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை அனகாபுத்தூருக்கு ஒரு வரலாறு உண்டு. பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் இங்கு நெசவு செய்து வருகிறார்கள். இங்கு கையால் நெய்யப்பட்ட புடவைக்கும், லுங்கி, சட்டைக்கும் உலகெங்கும் ஏக கிராக்கி. இந்தப் பெயரை தக்கவைக்கவும், உலகமயமாக்கலை எதிர்கொள்ளவும் 53 வயதாகும் சேகர் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அதுதான் வாழைநார் புடவைகள்!‘‘மூணு தலைமுறைகளா இந்தத் தொழிலை செய்யறோம்.
நெசவு, நூல், தரி, வண்ணங்களோடதான் நான் வளர்ந்தேன். 13 வயசுல நானும் நெசவு செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்ப பருத்திலதான் செய்துட்டு இருந்தோம். தொழிலும் நல்லா போயிட்டு இருந்தது. எங்க உடைகளை நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்தோம். அங்க திடீர்னு ராணுவ ஆட்சி வந்ததால எங்களால தொடர்ந்து எக்ஸ்போர்ட் செய்ய முடியலை.
பருத்தியை நெய்துகிட்டே சில்க், காட்டன் பக்கம் மாறினோம். அந்த சமயத்துல புத்தகத்துல நான் படிச்ச ஒரு விஷயம் என்னை அப்படியே கட்டிப் போட்டது. அது ராமாயணம். சீதையை கடத்திட்டு போய் அசோகவனத்துல சிறை வைக்கிறான் ராவணன். சீதைகிட்ட மாற்றுத் துணியில்லை. ராவணன்கிட்ட துணி கேட்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்த சீதை அங்க இருந்த வாழை நாரை நெய்து புடவையா உடுத்தறாங்க.
இதை படிச்சதுலேந்து என்னால தூங்க முடியலை. எந்நேரமும் இதைப் பத்தின சிந்தனைதான். வாழை நார்ல உடை நெய்ய முடியுமா? இந்தக் கேள்வி துரத்திகிட்டே இருந்தது...’’ சுவாரஸ்யத்துடன் பேச ஆரம்பிக்கும் சேகர், இதன்பிறகு கோயில் திருவிழா, கல்யாணங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் வாழை மரங்களை கீறிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.
‘‘நூல் மாதிரி வாழை நாரை மாத்த முடியுமானு யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனா, சரியான வழி கிடைக்காம திண்டாடினேன். இதுக்கு இடையில சணல்ல புடவையும், கைவினைப் பொருட்களும் செய்ய ஆரம்பிச்சோம். ஆனா, தொழில் போட்டி பலமா இருந்ததால போதுமான லாபம் கிடைக்கலை.
குழப்பமான மனநிலைல இருந்தப்ப கோயில்பட்டிலேந்து கலைக்கல்லூரி மாணவர்கள் எங்களை சந்திக்க வந்தாங்க.அவங்களுக்காக வாழை நார்ல புடவை தயாரிக்கிற என் எண்ணத்துக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினேன். நல்ல ரிசல்ட் கிடைச்சது...’’ என்ற சேகர் இதன் பிறகு முழுமூச்சுடன் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘‘பக்காவா வாழை நாரிலிருந்து நூல் எடுக்க முடிஞ்சது கூட பெரிய விஷயமில்லை. எல்லா நாடுகள்லயும் வாழை விளையுதே... அதுதான் முக்கியம்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனா, நாரிலிருந்து நூல் எடுக்கறது சுலபமில்லை. கத்தியால அதைக் கீறி நார்களை பிரிச்சு எடுக்கணும். அப்புறம் அதை சுத்தி வைக்கணும். பிறகு நமக்குத் தேவையான சாயத்துல அதை நனைக்கணும். கடைசியா தறியில சேர்த்து நெய்யணும். இயற்கை முறைல தயாராகிற வண்ணங்களைத்தான் நாங்க பயன்படுத்தறோம். இண்டிகோ நீலம், கருப்பு, சிவப்பு, மஞ்சள், டெரகோட்டா... எல்லாமே கெமிக்கல் கலக்காதது.வாழை நாரோட பருத்தி, பட்டு, கற்றாழை, அன்னாசிப்பழ இலை நார்... இப்படி எல்லா இயற்கை நூல்களையும் இணைச்சுதான் இந்தப் புடவையை நெய்யறோம். ஒரு புடவையை நெய்ய சுமாரா 500 கிராம் நார் தேவை. ஆனா, ஒரு வாழை மரத்துலேந்து 150 கிராம் நார்தான் எடுக்க முடியும். அதனாலதான் மற்ற இயற்கை நார்களையும் உடன் கலக்கறோம்.
வெறும் வாழை நாரிலிருந்தே புடவை நெய்ய இப்ப முயற்சி செய்துட்டு வர்றோம். பெரிய நூல் கண்டா வாழை நாரை சுத்தற அளவுக்கு அதை பக்காவா நூலாக்கும் ஸ்பெஷல் கருவியை இப்ப எங்களுக்காக அஞ்சு பொறியியல் மாணவர்கள் தயாரிச்சுட்டு வர்றாங்க. இது சக்சஸ் ஆனதும் முழுக்க முழுக்க வாழை நார் புடவை விற்பனைக்கு வந்துடும்...’’ என்று சொல்லும் சேகர், மலைவாழ் மக்களிடமிருந்து வாழை மரங்களைப் பெறுகிறார்.‘‘ஜவ்வாது மலைல வசிக்கிற பழங்குடியின மக்களிடமிருந்துதான் வாழை மட்டைகளை வாங்கறோம். அவங்க இயற்கை முறைலதான் விவசாயம் செய்யறாங்க. அதனால பட்டையிலிருந்து எடுக்கப்படும் நாரால எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதே மாதிரி மலைல கிடைக்கிற இயற்கை சாயத்தைதான் பயன்படுத்தறோம். பாரம்பரிய டிசைன்லதான் நெய்யறோம்.
தொடரும்.............
வெறும் வாழை நாரிலிருந்தே புடவை நெய்ய இப்ப முயற்சி செய்துட்டு வர்றோம். பெரிய நூல் கண்டா வாழை நாரை சுத்தற அளவுக்கு அதை பக்காவா நூலாக்கும் ஸ்பெஷல் கருவியை இப்ப எங்களுக்காக அஞ்சு பொறியியல் மாணவர்கள் தயாரிச்சுட்டு வர்றாங்க. இது சக்சஸ் ஆனதும் முழுக்க முழுக்க வாழை நார் புடவை விற்பனைக்கு வந்துடும்...’’ என்று சொல்லும் சேகர், மலைவாழ் மக்களிடமிருந்து வாழை மரங்களைப் பெறுகிறார்.‘‘ஜவ்வாது மலைல வசிக்கிற பழங்குடியின மக்களிடமிருந்துதான் வாழை மட்டைகளை வாங்கறோம். அவங்க இயற்கை முறைலதான் விவசாயம் செய்யறாங்க. அதனால பட்டையிலிருந்து எடுக்கப்படும் நாரால எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அதே மாதிரி மலைல கிடைக்கிற இயற்கை சாயத்தைதான் பயன்படுத்தறோம். பாரம்பரிய டிசைன்லதான் நெய்யறோம்.
தொடரும்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிலர் விரும்பிக் கேட்பாங்க. அப்ப அவங்க கேட்கிற டிசைனுக்கு நெய்து தருவோம்...’’ என்ற சேகரிடம் தொழில் கற்க வெளிநாட்டு மாணவர்கள் மற்றும், உள்ளூர் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்களும் வருகிறார்கள். புடவை தவிர சட்டைகளையும் நெய்து தரும் இவர், விரைவில் ஸ்பெஷல் ஃபேஷன் ஷோ நடத்தப் போகிறார்!‘‘பட்டுப்புடவையை எப்படி பராமரிக்கிறோமோ அப்படிதான் இந்த வாழை நார் புடவைகளையும் பாதுகாக்கணும். ஆர்கானிக் கலர்ஸை பயன்படுத்தறதால சாயம் போகாது. சாதாரணமா கைல துவைச்சா போதும். 25 வருஷங்களுக்கு முன்னாடி 5 ஆயிரம் தறி இங்க இருந்தது. இப்ப 300 கூட இல்ல. குடிசைத் தொழிலா, அடிப்படை வசதிகள் இல்லாமதான் இப்பவும் இயங்கறோம்.இப்பவும் இந்தத் தொழிலை 99% பெண்கள்தான் செய்யறாங்க. அரசு எங்களுக்கு கருணை காட்டினா நிச்சயமா நாங்க முன்னேறுவோம்...’’ என்று சொல்லும் சேகர் தயாரித்த ஒரு புடவைக்கு லிம்கா சாதனை விருது கிடைத்திருக்கிறது. ‘இகோ ஃப்ரெண்ட்லி’ விருதும் பெற்றிருக்கிறார். சேகரின் அடுத்த டார்கெட், வாழை நாரில் ஜீன்ஸ்! கலக்குங்க பாஸ்!
நன்றி தினகரன்
நன்றி தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ராவணன்கிட்ட துணி கேட்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்த சீதை அங்க இருந்த வாழை நாரை நெய்து புடவையா உடுத்தறாங்க.//
அவர் இந்த செய்தியை எங்கு படித்தார் என்று தெரியவில்லை, எனக்கு தெரிந்தவரை, ஸீதா தேவி அந்த பத்து மாதங்களும் எந்த உடையையும் மாற்றிக்கொள்ளவே இல்லை. அவர் உடுத்தி இருந்தது முனிவரின் மனைவி கொடுத்த புடவை, அது எத்தனை நாள் ஆனாலும் அப்படியே இருக்கும் . அதைத்தான் ஸீதா தேவி உடுத்திக்கொண்டிருந்தார்
அவர் இந்த செய்தியை எங்கு படித்தார் என்று தெரியவில்லை, எனக்கு தெரிந்தவரை, ஸீதா தேவி அந்த பத்து மாதங்களும் எந்த உடையையும் மாற்றிக்கொள்ளவே இல்லை. அவர் உடுத்தி இருந்தது முனிவரின் மனைவி கொடுத்த புடவை, அது எத்தனை நாள் ஆனாலும் அப்படியே இருக்கும் . அதைத்தான் ஸீதா தேவி உடுத்திக்கொண்டிருந்தார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரைப்பற்றிய மற்றும் ஒரு கட்டுரை :
சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.
தொடரும்...............
வாழை நார் ஆடைகள்
பொதுவாக பருத்தி, பட்டு, பாலியஸ்டர் போன்றவற்றைக் கொண்டுதான் ஆடைகள் தயாரிப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாழை நாரி லிருந்து துணிகளை தயாரித்து வருவது பலருக்கும் தெரியாது.
சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
''பருத்தி நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும் ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.
இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.
இந்த வாழை நார் ஆடை களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டோம். ''தமிழகம், குஜராத் பகுதிகளில் இந்த புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள பெரிய கடைகள் இதற்கான ஆர்டர்களை தந்து வாங்கிச் செல்கிறார்கள். தவிர, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் மாதத்திற்கு பத்தாயிரம் ஆடைகள் வேண்டுமென எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆர்டரை சப்ளை செய்கிற அளவுக்கு எங்களிடம் இடவசதி இல்லை.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தவிர, பருத்தி நூல் போல இதனை எளிதில் தயாரித்துவிடவும் முடியாது. ஒவ்வொரு இழையாகப் பிரித்து, காய வைத்து, அதை நீளமான நூலாக மாற்றி, நெய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நீளமான நூலை உருவாக்கும் டெக்னாலஜி மட்டும் வந்து விட்டால், இன்னும் வேகமாக இந்த ஆடைகளை தயாரிக்க முடியும்'' என்றவர், இந்த தொழில்நுட்பத்துக்கான பேடன்ட் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.-யில் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.
[size][size]
''எங்களுக்கு போதிய இடவசதியை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால், இன்னும் அதிக அளவில் இந்த ஆடை களை உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்வோம்'' என்று கோரிக்கை வைத்தவர், தேங்காய் நார், மூங்கில், கடல் புல் போன்ற 25 வகையான இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகளை தயாரித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்.[/size]
[/size]
K J விஜய் குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலே உள்ளது 2014 இல் வந்த கட்டுரை...............கீழே உள்ளது, 2007 இல் வந்தது
வாழ வைக்கும் வாழைக்கு ஜே!
‘யா னை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்! என்று சொல்லப்படுவதைப் போல! வாழை இருந்தாலும் இறந்தாலும் பலன்தான். பூ, காய், பழம், இலை, தண்டு என்று எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கற்பக விருட்சம்தானே.
வாழை மட்டை, நாராகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பெரும்பான்மையான விவசாயிகள் அதைக் கழிவுப்பொருளாக வீசிவிடுகிறார்கள்.
ஆனால், வெளி நாடுகளைப் பொறுத்த வரையில் வாழை மட்டையும் வளமான வருமானம் தரக்கூடியது. நாரிலிருந்து விதவிதமான பொருட்கள் தயாரிக்கிறார்கள். நம் நாட்டிலோ... மிகமிகக் குறைந்த அளவிலேயே வாழை நார் பொருட்கள் தயாரிப்பு நடக்கிறது. வாழை நாரைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்ய போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை என்பதோடு.... அந்த வேலை அவ்வளவு சுலபமானதல்ல என்பதும் இதற்கு காரணம்.
‘‘ஜப்பான், பிலிப்பைன்ஸ் மாதிரியான நாடுகளில் வாழை நாருக்கு நல்ல மார்க்கெட் உண்டு. அதை வைத்து துணி முதல்கொண்டு பொம்மை வரைக்கும் செய்கிறார்கள். வாழை நாரில் தயாரிக்கப்படும் காகிதம் வெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம். அங்கே நார் எடுக்க பிரத்யேக இயந்திரங்கள் உண்டு. ஆனால், நான்கைந்து பிளேடுகள் சேர்ந்த மாதிரியான கருவியை வைத்து, கையினால்தான் நம்ம ஊரில் நாரைப் பிரித்து எடுப்பது வழக்கமாக இருக்கிறது. அது ரொம்ப சிரமமான வேலை. ஒரு நாள் முழுக்க பிரித்து எடுத்தாலும், கால் கிலோ நார் கூட ஒரு நபரால் எடுக்கமுடியாது. அதற்கான மாற்றுதான் என் புதிய இயந்திரம்.
வாழ வைக்கும் வாழைக்கு ஜே!
‘யா னை இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்! என்று சொல்லப்படுவதைப் போல! வாழை இருந்தாலும் இறந்தாலும் பலன்தான். பூ, காய், பழம், இலை, தண்டு என்று எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் விவசாயிகளுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கற்பக விருட்சம்தானே.
வாழை மட்டை, நாராகப் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், பெரும்பான்மையான விவசாயிகள் அதைக் கழிவுப்பொருளாக வீசிவிடுகிறார்கள்.
ஆனால், வெளி நாடுகளைப் பொறுத்த வரையில் வாழை மட்டையும் வளமான வருமானம் தரக்கூடியது. நாரிலிருந்து விதவிதமான பொருட்கள் தயாரிக்கிறார்கள். நம் நாட்டிலோ... மிகமிகக் குறைந்த அளவிலேயே வாழை நார் பொருட்கள் தயாரிப்பு நடக்கிறது. வாழை நாரைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்ய போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை என்பதோடு.... அந்த வேலை அவ்வளவு சுலபமானதல்ல என்பதும் இதற்கு காரணம்.
இந்தச் சூழலில், வாழை மட்டை யிலிருந்து நார் பிரிக்கும் ஒரு மந்திர இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினீயரான முருகன். வாழை விவசாயிகளின் வாழ்வில் விளக்கை ஏற்றி வைக்கப் போகும் ஆர்வத்துடன் தன் கண்டுபிடிப்பை இங்கே விவரிக்கிறார்.
‘‘ஜப்பான், பிலிப்பைன்ஸ் மாதிரியான நாடுகளில் வாழை நாருக்கு நல்ல மார்க்கெட் உண்டு. அதை வைத்து துணி முதல்கொண்டு பொம்மை வரைக்கும் செய்கிறார்கள். வாழை நாரில் தயாரிக்கப்படும் காகிதம் வெளிநாடுகளில் ரொம்பவே பிரபலம். அங்கே நார் எடுக்க பிரத்யேக இயந்திரங்கள் உண்டு. ஆனால், நான்கைந்து பிளேடுகள் சேர்ந்த மாதிரியான கருவியை வைத்து, கையினால்தான் நம்ம ஊரில் நாரைப் பிரித்து எடுப்பது வழக்கமாக இருக்கிறது. அது ரொம்ப சிரமமான வேலை. ஒரு நாள் முழுக்க பிரித்து எடுத்தாலும், கால் கிலோ நார் கூட ஒரு நபரால் எடுக்கமுடியாது. அதற்கான மாற்றுதான் என் புதிய இயந்திரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு இயல்பாவே புதுப் புது கண்டு பிடிப்புகளில் ஆர்வம் உண்டு. அந்த வகையில் வாழை நார் பற்றி இன்டர்நெட்டில் தேடிப் பார்த்தபோது, பிலிப்பைன்ஸில் நார் பிரிக்கும் கருவி இருப்பது தெரிந்தது. அதன் விலை எழுபது லட்ச ரூபாய். அவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கி சாதாரண விவசாயிகளால் பயன்படுத்த முடியாது. அது போன்ற இயந்திரத்தை குறைந்த செலவில் வடிவமைக்க விரும்பினேன். என் முயற்சி பல தடவை தோல்வியில் முடிந்தாலும் நாற்பதாவது தடவை அதை உருவாக்கிவிட்டேன்'’ என்று சொல்லி பெருமையாகப் பார்த்தவர்,
‘‘இந்த இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு நாளைக்கு பத்து கிலோ நார் பிரித்து எடுக்கலாம். ஒரு கிலோ நார் இந்திய சந்தையில 250 ரூபாய் விற்கிறது. இதுவே சர்வதேச சந்தையில் ஐந்து மடங்கு மதிப்பு கூடும். இப்போதைய நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு இந்த இயந்திரத்தை என்னால தயாரிக்க முடியும். சுமார் பத்து கிலோ எடையே இருப்பதால் ஓரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சுலபமாக இந்த இயந்திரத்தைக் கொண்டு போயிடலாம்.
ஜப்பான் மாதிரியான நாட்டில் இந்த வாழை நாரில் தயாரிக்கப்படும் துணி வகைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாழை நாரில் உருவாக்கப்படும் புடவைக்கு ஏக மரியாதை. ஒரு புடவை குறைந்தது 60 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரைக்கும் விலைபோகிறது’’ என்றபடியே தான் தயாரித் திருக்கும் வாழை நார் துணிகளைக் காட்டினார்.மிருதுவான பட்டுபோல பளபளக்கிறது துணி.
தொடரும்,.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
‘அதிகபட்சமாக பூ கட்டுவதற்கான நாரை எடுக்க மட்டும்தான் வாழை மட்டை இங்கே பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி தூக்கி வீசிவிடுகிறார்கள். என்னுடைய கண்டுபிடிப்பு பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் நிலைமையே தலைகீழாக மாறிவிடும். ஆரம்பத்தில் ஒரு வாழை மரம் இருபது ரூபாய் வரை விலைபோகும் என எதிர் பார்க்கிறேன். தமிழ்நாடு முழுக்க எல்லா இடங்களிலும் இந்த நார் இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும் வகையில் தொழில் வளர்ந்தால், மரங்களுக்கு விலை இன்னும் கூடலாம். ஒரு ஏக்கரில் வாழை போட்டிருக்கும் விவசாயிக்கு வழக்கமான வருமானம் போக, மேற்கொண்டும் மரத்துக்கு இருபது ரூபாய் கிடைத்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்..?
தொடரும்..............
காற்றடித்தாலும், மழை பெய்தாலும் முதலில் பாதிக்கப்படுவது வாழைதான். அப்படி பாதிக்கப்பட்டால் வாழைத்தார்தான் வீணாகும். மட்டையைத் தாராளமாக பயன்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக நஷ்டமடைவதிலிருந்து தப்பிக்கலாம். என் இயந்திரத்துக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளேன். சீக்கிரமே கிடைத்துவிடும்'' என்கிறார் நம்பிக்கையாக.
தொடரும்..............
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|