புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக விழுமியம் – மயிர்
Page 1 of 1 •
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவை இடுகிறேன்.
தொடர் - ௫
சமூக விழுமியம் – மயிர் தொடர் 5
(ஐங்குறுநூற்றிலிருந்து)
முன்தொடர் சுருக்கம்
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி……………….
தொடர் – 5
ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ஐநூறும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டிருக்கின்றன.
மகளிர் கூந்தல்
ஐவகை நிலத்தினில் எந்நிலத்துப் பெண்களாயினும் அவர்களையும் அவர்களின் கூந்தலைப் பற்றியும் குறிப்பிடும்போது அம்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் ( ஐங். 49:1,299:3,391:6,394:3, 448:5) ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோர் (ஐங். 67:5), துயல் வரும் கூந்தல் (ஐங். 72: 2), தண்ணருங் கதுப்பே (ஐங். 74: 4) பைஞ்சாய் கூந்தல் (ஐங். 76:1), போது ஆர் கூந்தல் (ஐங். 82:4, 232:1, 417:4), நல்நெடுங் கூந்தல் (ஐங். 153:5), பின் இருங் கூந்தல் (ஐங். 173:4, 285:1, 294:5), நீர் வார் கூந்தல் (ஐங். 186:2) இரும்பல் கூந்தல் (ஐங்.191:2, 231:1, 281:3), கொழும்பல் கூந்தல் (ஐங். 197:2), சில்நிறை ஓதி (ஐங். 222:4), வண்டுபடு கூந்தல் (ஐங். 256:2,267:4), இணைஈர் ஓதி (ஐங்.269:4), பூக்கமழ் கூந்தற் கொடிச்சி (ஐங். 290:3), புயல் நெடுங் கூந்தல் (ஐங். 304: 4), தேம்பாய் கூந்தல் (ஐங். 324:5), முடிஅகம் புகாஅக் கூந்தலள் (ஐங். 374:3), அம்சாய் கூந்தல் (ஐங். 383: 6), தாழ்இருங் கூந்தல் (ஐங்.411: 4), பல் இருங் கூந்தல் (ஐங். 429:1), முல்லை நாறுங் கூந்தல் (ஐங். 446: 1) எனப் பலவாறாகக் கூறப்படுவதனை அறியமுடிகிறது.
ஐங்குறுநூற்றின் பல சுவையான தகவல்களுடன் தொடர் பயணிக்கும்.
தொடர் - ௫
சமூக விழுமியம் – மயிர் தொடர் 5
(ஐங்குறுநூற்றிலிருந்து)
முன்தொடர் சுருக்கம்
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி……………….
தொடர் – 5
ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ஐநூறும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டிருக்கின்றன.
மகளிர் கூந்தல்
ஐவகை நிலத்தினில் எந்நிலத்துப் பெண்களாயினும் அவர்களையும் அவர்களின் கூந்தலைப் பற்றியும் குறிப்பிடும்போது அம்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் ( ஐங். 49:1,299:3,391:6,394:3, 448:5) ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோர் (ஐங். 67:5), துயல் வரும் கூந்தல் (ஐங். 72: 2), தண்ணருங் கதுப்பே (ஐங். 74: 4) பைஞ்சாய் கூந்தல் (ஐங். 76:1), போது ஆர் கூந்தல் (ஐங். 82:4, 232:1, 417:4), நல்நெடுங் கூந்தல் (ஐங். 153:5), பின் இருங் கூந்தல் (ஐங். 173:4, 285:1, 294:5), நீர் வார் கூந்தல் (ஐங். 186:2) இரும்பல் கூந்தல் (ஐங்.191:2, 231:1, 281:3), கொழும்பல் கூந்தல் (ஐங். 197:2), சில்நிறை ஓதி (ஐங். 222:4), வண்டுபடு கூந்தல் (ஐங். 256:2,267:4), இணைஈர் ஓதி (ஐங்.269:4), பூக்கமழ் கூந்தற் கொடிச்சி (ஐங். 290:3), புயல் நெடுங் கூந்தல் (ஐங். 304: 4), தேம்பாய் கூந்தல் (ஐங். 324:5), முடிஅகம் புகாஅக் கூந்தலள் (ஐங். 374:3), அம்சாய் கூந்தல் (ஐங். 383: 6), தாழ்இருங் கூந்தல் (ஐங்.411: 4), பல் இருங் கூந்தல் (ஐங். 429:1), முல்லை நாறுங் கூந்தல் (ஐங். 446: 1) எனப் பலவாறாகக் கூறப்படுவதனை அறியமுடிகிறது.
ஐங்குறுநூற்றின் பல சுவையான தகவல்களுடன் தொடர் பயணிக்கும்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர்ச்சி ...................
சமூக விழுமியம் - மயிர் தொடர் - ௫ ( ஐங்குறுநூற்றிலிருந்து)
கூந்தல் உவமை – மயிற்தோகை
தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தால் தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கிறாள். அவள் ஊடலைத் தலைவன் தணிக்க நினைக்கிறான். அவ்வமயம் மழைபெய்தமையால் நீர் நிலைகளில் புதுவெள்ளம் (புதுப்புனல்) பெருகிவருகிறது. அதைக் கண்ணுறும் தலைவனுக்குக் களவுக்காலத்தில் தானும் தலைவியும் இதுபோன்று பெருகி வந்த புதுப்புனலில் மகிழ்ந்து விளையாடியபோது இருந்த அவள் தோற்றம் கண்முன் வருகின்றது. அதனைத் தலைவிக்கு நினைவூட்டும் விதத்தில் அவள் கேட்கும்படியாகத் தோழியிடம் இப்படி
விசும்பு இழிதோகைச் சீர் போன்றி சினே
பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே (ஐங்.74)
என்றிருந்ததாக ஓரம்போகியார் குறிப்பிடுகின்றார். அதாவது, தலைவனுடன் விளையாடும் போக்கில் ஒளிவீசும் அணிகலன்களை அணிந்திருந்த தலைவி அருகாமையில் உள்ள மருத மரத்தில் ஏறி அதன் கிளைகளிலிருந்து நீருக்குள் பாய்ந்தெழுந்து நீராடியது பார்ப்பதற்கு மயில் போலவும் அவள் கூந்தல் மயிற்தோகை போலவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்குக் கூந்தல் மயிற்தோகைக்கு உவமை காட்டப்பட்டுள்ளது.
பைஞ்சாய்க் கூந்தல்
தலைவன் பரத்தையோடு புனலாடி மகிழ்கிறான். இதைத் தலைவி அறியமாட்டாள் என்ற நினைவில் தலைவியிடம் வரும்போது ஏதும் அறியாதவன்போல பேசுகிறான். அப்போது தலைவி தலைவன் பரத்தையுடன் புனலாடி மகிழ்ந்த நிகழ்வைத் தான் அறிந்திருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அன்று தலைவனோடு பரத்தை புனல் விளையாட்டில் ஈடுபட்ட பொழுது அவளின் அழகில் ஈர்க்கப்பட்ட பலரும் அவளை வானுலகப் பெண்களுக்கு இணையாகப் போற்றிப் புகழ்ந்ததை நினைவூட்டுகிறாள். அன்று நீருள் அமிழ்ந்தருந்த பரத்தையின் அழகிய கூந்தலைப் பைஞ்சாய்க் கூந்தல் என்றும் குறிப்பிடுகிறாள். (ஐங்.76:1) இதன்மூலம் நிகழ்வை என்னிடம் மறைக்காதே என்ற தலைவன் மீதான தலைவியின் ஊடல் புலப்படுகிறது.
இதில் வரும் பைஞ்சாய் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் (பக். 167, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்றும் அதன் உரை விளக்கத்தில் பைஞ்சாய் என்பது மருத நிலத்தில் வளரும் ஒரு கோரை வகை. அது நீண்டு வளரும் இயல்பினது ஆதலின் புனலாடிய பரத்தையின் கூந்தலுக்கு உவமையாயிற்று என்பதோடு இறுதியில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதனை அதன் நாரால் தொடுத்த மாலையணிந்த கூந்தல் என்று கொள்வாரும் உளர் என்றும் குறிப்பிடுகின்றார். (பக்.168, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2004) மேலும் அதற்கு ஏற்ற வகையில் பெரும்பாணாற்றுப்படையில் கோரையால் மலர் தொடுக்கப்பட்டதைக் கூறும்
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும். 217 – 18)
என்ற பதிவொன்றனையும் எடுத்துக்காட்டுகிறார். இதற்கு உரைதரும் நச்சினார்க்கினியர் பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல் என்பதோடு பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி” (சீவக. 438) பல்லினாற் சுகிர்ந்த நாரிற் …………..’’ போது கட்டிய குழங்கன் மாலை (கூர்ம. பிலக்க. 43) என்று பல்லின் உதவியால் நாராக்கப்பட்ட கோரையினைக் கொண்டு மலர் தொடுக்கப்பட்ட தகவலை மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டுகின்றார். (பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பக். 193, பெரும்.217 – 218 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) இதில் கோரை நாராக்கப்படுவதும் அதன்மூலம் மலர் தொடுக்கப்படுவதும் பாடலடிகளினாலேயே விளக்கம்பெறுகிறது. ஆனால் பைஞ்சாய்க் கூந்தல் என்பதில் அவ்விளக்கம் இல்லை.
உ.வே.சா அவர்கள் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு தண்டான் கோரை நாரால் புனைந்த மாலையை அணிந்த கூந்தல் என்று பொருள் தருகிறார். தான் இப்படி பொருள் தருவதற்கு ஆதாரமாக
…………………………………………………………………..வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு (ஐங். 54: 4,5)
எனும் பாடலடியை உதாரணம் காட்டுகிறார். இதற்குத் தண்டான் கோரையின் நாராற் புனைந்த மாலை? பஞ்சாய்க் கூந்தல்? என்பர் என்று வினாவுடன் முடித்துள்ளார். ( உ.வே.சா அராய்ச்சி உரை பதிப்பு, பக். 76. பாடல் 76 மற்றும் பக். 54. பாடல் 54-ற்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) வேறுவிளக்கம் இல்லை. ஆயினும் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கும் பைஞ்சாய்க் கோதை மகளிர் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
கோதை எனும் சொல்லிற்கு மாலை, முத்தாரம், பூமாலை என்பது பொருள். ஆகையினால் 54ஆம் பாடலடிக்குச் சொல்லப்பட்ட உரை சரியானதாக இருக்கின்றது. ஆனால் அப்பொருளையே 76ஆம் பாடலடிக்கும் சொல்வது பொருத்தமாக இல்லை. அதனால்தானோ உ.வே.சா அவர்கள் பொருளோடு வினாவையும் சேர்த்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகின்றது.
இதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தமது உரையில் பஞ்சாய்க்கோரையாற் புணர்க்கப்பட்ட மாலையை அணிந்த மகளிர் என உரை கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, பஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தலையுடை மகளிர்’ என உரைப்பாரும் உளர் என்று விளக்கம் தருகின்றார்.
இவர் உரையில் முன்னதாகச் சொல்லப்பட்ட உரை பொருத்தமாக உள்ளது. ஆனால் பின்னது பொருத்தமாக இல்லை. ஐங்குறுநூற்றின் 383 ஆவது பாடலில் பைஞ்சாய்ப் பாவை எனும் சொல் வருகின்றது. இதற்கு அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தண்டான் கோரையால் செய்த பாவை என்று விளக்கம் தருகின்றார்.
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தரும் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் எனும் பொருளே இத்தொடரில் ஏற்கப்படுவதால் உவமைக்குள் சேர்க்கப்படுகிறது.
சமூக விழுமியம் - மயிர் தொடர் - ௫ ( ஐங்குறுநூற்றிலிருந்து)
கூந்தல் உவமை – மயிற்தோகை
தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தால் தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கிறாள். அவள் ஊடலைத் தலைவன் தணிக்க நினைக்கிறான். அவ்வமயம் மழைபெய்தமையால் நீர் நிலைகளில் புதுவெள்ளம் (புதுப்புனல்) பெருகிவருகிறது. அதைக் கண்ணுறும் தலைவனுக்குக் களவுக்காலத்தில் தானும் தலைவியும் இதுபோன்று பெருகி வந்த புதுப்புனலில் மகிழ்ந்து விளையாடியபோது இருந்த அவள் தோற்றம் கண்முன் வருகின்றது. அதனைத் தலைவிக்கு நினைவூட்டும் விதத்தில் அவள் கேட்கும்படியாகத் தோழியிடம் இப்படி
விசும்பு இழிதோகைச் சீர் போன்றி சினே
பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே (ஐங்.74)
என்றிருந்ததாக ஓரம்போகியார் குறிப்பிடுகின்றார். அதாவது, தலைவனுடன் விளையாடும் போக்கில் ஒளிவீசும் அணிகலன்களை அணிந்திருந்த தலைவி அருகாமையில் உள்ள மருத மரத்தில் ஏறி அதன் கிளைகளிலிருந்து நீருக்குள் பாய்ந்தெழுந்து நீராடியது பார்ப்பதற்கு மயில் போலவும் அவள் கூந்தல் மயிற்தோகை போலவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்குக் கூந்தல் மயிற்தோகைக்கு உவமை காட்டப்பட்டுள்ளது.
பைஞ்சாய்க் கூந்தல்
தலைவன் பரத்தையோடு புனலாடி மகிழ்கிறான். இதைத் தலைவி அறியமாட்டாள் என்ற நினைவில் தலைவியிடம் வரும்போது ஏதும் அறியாதவன்போல பேசுகிறான். அப்போது தலைவி தலைவன் பரத்தையுடன் புனலாடி மகிழ்ந்த நிகழ்வைத் தான் அறிந்திருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அன்று தலைவனோடு பரத்தை புனல் விளையாட்டில் ஈடுபட்ட பொழுது அவளின் அழகில் ஈர்க்கப்பட்ட பலரும் அவளை வானுலகப் பெண்களுக்கு இணையாகப் போற்றிப் புகழ்ந்ததை நினைவூட்டுகிறாள். அன்று நீருள் அமிழ்ந்தருந்த பரத்தையின் அழகிய கூந்தலைப் பைஞ்சாய்க் கூந்தல் என்றும் குறிப்பிடுகிறாள். (ஐங்.76:1) இதன்மூலம் நிகழ்வை என்னிடம் மறைக்காதே என்ற தலைவன் மீதான தலைவியின் ஊடல் புலப்படுகிறது.
இதில் வரும் பைஞ்சாய் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் (பக். 167, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்றும் அதன் உரை விளக்கத்தில் பைஞ்சாய் என்பது மருத நிலத்தில் வளரும் ஒரு கோரை வகை. அது நீண்டு வளரும் இயல்பினது ஆதலின் புனலாடிய பரத்தையின் கூந்தலுக்கு உவமையாயிற்று என்பதோடு இறுதியில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதனை அதன் நாரால் தொடுத்த மாலையணிந்த கூந்தல் என்று கொள்வாரும் உளர் என்றும் குறிப்பிடுகின்றார். (பக்.168, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2004) மேலும் அதற்கு ஏற்ற வகையில் பெரும்பாணாற்றுப்படையில் கோரையால் மலர் தொடுக்கப்பட்டதைக் கூறும்
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும். 217 – 18)
என்ற பதிவொன்றனையும் எடுத்துக்காட்டுகிறார். இதற்கு உரைதரும் நச்சினார்க்கினியர் பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல் என்பதோடு பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி” (சீவக. 438) பல்லினாற் சுகிர்ந்த நாரிற் …………..’’ போது கட்டிய குழங்கன் மாலை (கூர்ம. பிலக்க. 43) என்று பல்லின் உதவியால் நாராக்கப்பட்ட கோரையினைக் கொண்டு மலர் தொடுக்கப்பட்ட தகவலை மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டுகின்றார். (பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பக். 193, பெரும்.217 – 218 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) இதில் கோரை நாராக்கப்படுவதும் அதன்மூலம் மலர் தொடுக்கப்படுவதும் பாடலடிகளினாலேயே விளக்கம்பெறுகிறது. ஆனால் பைஞ்சாய்க் கூந்தல் என்பதில் அவ்விளக்கம் இல்லை.
உ.வே.சா அவர்கள் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு தண்டான் கோரை நாரால் புனைந்த மாலையை அணிந்த கூந்தல் என்று பொருள் தருகிறார். தான் இப்படி பொருள் தருவதற்கு ஆதாரமாக
…………………………………………………………………..வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு (ஐங். 54: 4,5)
எனும் பாடலடியை உதாரணம் காட்டுகிறார். இதற்குத் தண்டான் கோரையின் நாராற் புனைந்த மாலை? பஞ்சாய்க் கூந்தல்? என்பர் என்று வினாவுடன் முடித்துள்ளார். ( உ.வே.சா அராய்ச்சி உரை பதிப்பு, பக். 76. பாடல் 76 மற்றும் பக். 54. பாடல் 54-ற்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) வேறுவிளக்கம் இல்லை. ஆயினும் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கும் பைஞ்சாய்க் கோதை மகளிர் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
கோதை எனும் சொல்லிற்கு மாலை, முத்தாரம், பூமாலை என்பது பொருள். ஆகையினால் 54ஆம் பாடலடிக்குச் சொல்லப்பட்ட உரை சரியானதாக இருக்கின்றது. ஆனால் அப்பொருளையே 76ஆம் பாடலடிக்கும் சொல்வது பொருத்தமாக இல்லை. அதனால்தானோ உ.வே.சா அவர்கள் பொருளோடு வினாவையும் சேர்த்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகின்றது.
இதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தமது உரையில் பஞ்சாய்க்கோரையாற் புணர்க்கப்பட்ட மாலையை அணிந்த மகளிர் என உரை கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, பஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தலையுடை மகளிர்’ என உரைப்பாரும் உளர் என்று விளக்கம் தருகின்றார்.
இவர் உரையில் முன்னதாகச் சொல்லப்பட்ட உரை பொருத்தமாக உள்ளது. ஆனால் பின்னது பொருத்தமாக இல்லை. ஐங்குறுநூற்றின் 383 ஆவது பாடலில் பைஞ்சாய்ப் பாவை எனும் சொல் வருகின்றது. இதற்கு அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தண்டான் கோரையால் செய்த பாவை என்று விளக்கம் தருகின்றார்.
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தரும் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் எனும் பொருளே இத்தொடரில் ஏற்கப்படுவதால் உவமைக்குள் சேர்க்கப்படுகிறது.
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
முடி, கேசம் என்று அழைத்தாலும் "மயிர்" என்பது நல்ல தமிழ் வார்த்தை. பயன்படுத்துவோம்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம்.
தாங்கள் சொல்வது சரிதான் ஐயா. பெரும்பாலானோர் மயிர் எனும் சொல்லை இழி சொல்லாகவே கருதுகின்றனர். பயன்பாட்டு அடிப்படையில் சொற்கள் காலப்போக்கில் வழக்கில் மதிப்பிழந்து போனதில் இச்சொல்லும் ஒன்று. அத்தகு சொற்களைக் கண்டறிந்தால் அவை நம் பண்பாட்டை எடுத்துக்காட்டுவனவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
நன்றி.
தாங்கள் சொல்வது சரிதான் ஐயா. பெரும்பாலானோர் மயிர் எனும் சொல்லை இழி சொல்லாகவே கருதுகின்றனர். பயன்பாட்டு அடிப்படையில் சொற்கள் காலப்போக்கில் வழக்கில் மதிப்பிழந்து போனதில் இச்சொல்லும் ஒன்று. அத்தகு சொற்களைக் கண்டறிந்தால் அவை நம் பண்பாட்டை எடுத்துக்காட்டுவனவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
நன்றி.
அப்படியல்ல நண்பர்களே ! நானாக இந்தக் கருத்தை முன்வைக்க வேண்டாம் என்றுதான் பார்த்தேன் ; ஆனால் நீங்கள் தொடங்கிவிட்டீர்கள் !
தமிழ் மொழி மட்டுமல்ல எந்த ஒரு மொழியுமே மரபைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும் !
புதியன புகும்போதும் மரபை ஒட்டித்தான் புகவேண்டும் ! ‘மயிர்’ என்பது , தமிழ் மரபு அடிப்படையில் , அவ்வளவாகக் கட்டுரைகளில் இடம்பெற ஏற்றதில்லைதான் ! ‘முடி’ போதுமே! அதிலும் நுணுகிப் பார்த்தால் , ‘மயிர்க் கூச்செறிந்தது’ என்பதுபோன்ற தொடர்களில் பயிலும் ‘மயிர்’ என்ற சொல்லுக்கும் , தனியாக வரும் ‘மயிர்’ என்ற சொல்லுக்குமே வேறுபாடு உள்ளது !மொழி என்பது நுட்பமானது (Languge is a very sensitive tool)
தமிழ் மொழி மட்டுமல்ல எந்த ஒரு மொழியுமே மரபைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும் !
புதியன புகும்போதும் மரபை ஒட்டித்தான் புகவேண்டும் ! ‘மயிர்’ என்பது , தமிழ் மரபு அடிப்படையில் , அவ்வளவாகக் கட்டுரைகளில் இடம்பெற ஏற்றதில்லைதான் ! ‘முடி’ போதுமே! அதிலும் நுணுகிப் பார்த்தால் , ‘மயிர்க் கூச்செறிந்தது’ என்பதுபோன்ற தொடர்களில் பயிலும் ‘மயிர்’ என்ற சொல்லுக்கும் , தனியாக வரும் ‘மயிர்’ என்ற சொல்லுக்குமே வேறுபாடு உள்ளது !மொழி என்பது நுட்பமானது (Languge is a very sensitive tool)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" மயிர் " என்னும் சொல் தற்போது அமங்கலச் சொல்லாகக் கருதப்பட்டாலும் ஐயன் வள்ளுவர் தம் குறட்பாவில் " மயிர் " என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் .
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை .
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
" மயிர் " என்னும் சொல் தற்போது அமங்கலச் சொல் என்பதைவிட ,
வசைச்சொல்லாக பயன் படுத்துவதே அதிகம்.
ரமணியன்
வசைச்சொல்லாக பயன் படுத்துவதே அதிகம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|