புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
2 Posts - 2%
prajai
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
1 Post - 1%
Rutu
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
18 Posts - 2%
prajai
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
8 Posts - 1%
Rutu
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_m10சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்  (நற்றிணையிலிருந்து) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)


   
   

Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Aug 07, 2016 10:42 pm

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)

உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
            ஊரார்கண் படட்டும் படட்டும்
            உற்றார்கண் படட்டும் படட்டும்
            ஆடவர்கண் படட்டும் படட்டும்
            உண் கண்ணே பட ட்  டும்
                       
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது.      (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்)  பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா  சீயக்காய்  நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................                     (ஃபாரவர் ( forever)  இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு  இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு,  மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும்  இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே  மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8)  மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.

நரை கூந்தல் - முதுமை

தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ………………………                                                         (நற். 10: 1-4)

என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல்  முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை

அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)

என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.

புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.


கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்

முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.

……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)

என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு

மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)

சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக்  கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே          (நற். 141 ; 11 – 12)

என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்

பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ  - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)

மேற்குறித்த பாடல்கள்  பொருள்வயிற் பிரிந்தால்  தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.

பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று  கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)

வணர்ந்து  ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்                 (நற். 139; 7- 8)

நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு     ( நற். 197 :5>6)

இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.

கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்

திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில்  ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்

நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)

எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு

                      நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)

தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம்  ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Aug 08, 2016 10:43 am

தொடருங்கள் பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டோ

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 08, 2016 11:55 am

மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு வேண்டுகோள். ஊடகங்களில் வரும் வாசகர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க வாய்ப்பில்லை. வேறுபட்ட இரசனையுடன் அணுகுவார்கள். இலக்கிய ஆக்கங்கள் கதை போல் படிக்க முடியாது. படித்து புரிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதனால் நீண்ட உங்கள் தொடரை சிறு பகுதியாக வெளியிட்டால் படிப்பவர்கள் கருத்திடவும்,சந்தேகம் கேட்கவும் வழி பிறக்கும்.

பாலையில் நக்கீரனின், -நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு- என்பதில் மழை வீழ்ச்சி என்பதை மழையினாலேற்பட்ட நீர்வீழ்ச்சி என படிக்கலாமா? ஏனெனில் மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சி நீண்ட கூந்தலைப் போல் இருப்பதைக் காண முடிகிறது.அல்லது பாலை-வனப்- நிலப் பாடல் என்பதால் மலை இல்லா ,மழை நீர் வீழ்ச்சி எனக் கொள்ளலாமா?

தொடக்கத்தில் உள்ள உண் கண்ணே என்பதை உன் கண்ணே எனவும்,எண்சான் என்பதை எண் சாண் எனவும் படிக்கலாமா அல்லது வேறு விளக்கம் உண்டா?

நன்றி.தொடருங்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 09, 2016 9:48 pm

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Aug 11, 2016 12:43 am

தோழமைக்கு வணக்கம்.

தாங்கள் எழுப்பியுள்ள பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டோ? எனும் கேள்விக்கு உரிய என்
பதிலினைக் குறுந்தொகை நூலின் தரவுகள் கொண்டு எழுதியிருக்கிறேன்.

பொதுவாக வியர்க்கும் எவ்வகை உயிரினத்திற்கும் அதன் வாழிடம் மற்றும் உணவுமுறை சார்ந்து உடலில் மணம் வீசுவது என்பது இயல்பு. அம்மணம் விரும்பக் கூடியதா? இல்லையா? என்பதை அவ்வுயிரினத்தோடு சேர்ந்து வாழுகிற பிறிதொரு உயிரினத்தைச் சார்ந்ததாக அமையும்.

இச்சூழலில் அனைவரும் விரும்பக் கூடிய மணம் என்பது இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதனாலேயோ அல்லது இயற்கை மற்றும் செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதனாலேயோ கிடைக்கிறது. குறுந்தொகைப் பதிவுகள் அனைத்தும் பெண்களின் கூந்தல் மலர்களாலும் மண்ணாலும் பலவகை நறுமணப் பொருட்களாலும் மணமூட்டப்படுவதையே குறிப்பிடுகின்றன. ஆகையினால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா? இல்லையா? என்றுஎழுப்பப்படும் கேள்வி எனக்கு அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.

இது குறித்த விளக்கமான பதிவைத் தங்களுக்கு நான் வேறொரு தொடரில் தருகின்றேன்.

தோழமைக்கு நன்றி.




முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Aug 11, 2016 1:36 am

தோழமைக்கு வணக்கம்.

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டது போன்று இனி தொடரைச் சிறுசிறு பகுதிகளாகவே தருகின்றேன். ஏனென்றால் தங்களைப் போன்றோர் எழுப்பக் கூடிய வினாக்கள்தான் என் தேடுதலை விரிவுபடுத்தும்.

தாங்கள் இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்

பாலையில் நக்கீரனின், -நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு- என்பதில் மழை வீழ்ச்சி என்பதை மழையினாலேற்பட்ட நீர்வீழ்ச்சி என படிக்கலாமா? ஏனெனில் மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சி நீண்ட கூந்தலைப் போல் இருப்பதைக் காண முடிகிறது.அல்லது பாலை-வனப்- நிலப் பாடல் என்பதால் மலை இல்லா ,மழை நீர் வீழ்ச்சி எனக் கொள்ளலாமா?

என்று தாங்களே கேள்வியையும் கேட்டு விளக்கமும் அளித்துள்ள முறை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உண்மையில் - நின் தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு என்ற தொடருக்கு உனது தாழ்ந்து தழைந்த கூந்தலைப் போல இறங்கிய மழை வீழ்ச்சியோடு என்பது பொருள்.

இதில் வரும் வீழ்ந்தகால் என்பது மழைபெய்ய இறங்கும் நீர்வீழ்ச்சியைக் குறிக்கும்.

ஆகவே தாங்கள் முன் குறித்தது போன்று மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சியே பெண்களின் நீண்ட கூந்தலுக்கு ஒப்பு காட்டப்படுள்ளது.

மேலும் தாங்கள் எழுப்பியுள்ள தொடக்கத்தில் உள்ள உண் கண்ணே என்பதை உன் கண்ணே எனவும்,எண்சான் என்பதை எண் சாண் எனவும் படிக்கலாமா அல்லது வேறு விளக்கம் உண்டா?

என்று கேட்டிருக்கின்றீர்கள் உண்மையில் தாங்கள் சுட்டிக்காட்டியது போன்றுதான் ( உன் கண்ணே, எண் சாண் ) படிக்க வேண்டும். உன் - உண் எனவும் சாண் - சான் எனவும் பிழையாக வந்துள்ளது.

சொற்பிழை என்று சுட்டிக்காட்டாமல் அதற்கு வேறு விளக்கங்களும் இருக்கக் கூடுமோ என்று கருதிய தங்களின் என் மீதான மதிப்பீட்டிற்கு மனங்கனிந்த நன்றி.

இனிவரும என் எழுத்துக்களின் மீதான கவனத்தை அதிகப்படுத்திக் கொள்கிறேன்.

தோழமைக்கு நன்றி





முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Aug 11, 2016 1:38 am

ஆகவே தாங்கள் முன் குறித்தது போன்று மலையில் இருந்து விழும் மழை நீர் வீழ்ச்சியே பெண்களின் நீண்ட கூந்தலுக்கு ஒப்பு காட்டப்படுள்ளது. (காட்டப்பட்டுள்ளது.)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 11, 2016 10:06 am

நற்றிணையில் ஒவ்வொரு பாடலாக எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுத்திருந்தால் , சிறப்பாக இருந்திருக்கும் .

தங்களுடைய சீரிய முயற்சி தொடரட்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Aug 11, 2016 10:28 am

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 11, 2016 11:14 am

நற்றிணைக்கும் மற்ற சங்க இலக்கியங்களுக்கும் பலர் பொருள் குறி விளக்கம் தந்துள்ளார்கள். இப்படி ஒரு பொருளை வைத்து புதிய முறையில் விளக்கம் தருவதும் நன்றாகவே உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் ஒன்றாக மின்நூலாக தொகுத்து வெளியிடலாம்.இலவசமாக மின் நூல் ஆக்க இணையங்கள் பல வசதி செய்து தருகின்றன.

[You must be registered and logged in to see this image.]

மின் நூலாக தொகுக்கும் பொது பொருளுக்கு உரிய படத்தையும் சேர்க்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 12 1, 2, 3 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக