புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
13 Posts - 25%
prajai
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
2 Posts - 4%
Rutu
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 2%
சிவா
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 2%
viyasan
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 8%
Rutu
என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_m10என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri May 27, 2016 6:58 pm

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?! P32a

கொடுமை:

‘என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்துசெல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா. அவர் இன்று உயிரோடிருந்திருந்தால், ‘ஒரு பெண், தனியாக பேருந்தில் எந்தவித உரசல்களும் இல்லாமல் என்று பயணம் செய்ய முடிகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என மாற்றிச் சொல்லியிருப்பார்.

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண். இன்னும் ஐந்து நிமிடங்களில் இறங்கிவிடுவாள். அதனால் அதற்கு முன்பே அவளைப் பற்றி சொல்ல வேண்டும். திருமணமாகி கணவர் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காக சென்றுவிட, கோவையில் பெண்களுக்கான  ஒரு சுமாரான விடுதியில் தங்கி, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறாள். ஈரோட்டிலிருந்து கோவைக்கு குடும்பத்தைப் பார்க்கவேண்டி வாரம் ஒரு முறை பயணிக் கிறாள். மூன்று மணிநேர பேருந்துப் பயணம்.

கோவைக்குப் பக்கத்து மாவட்டங்கள் எல்லோமே சனிக்கிழமைகளில் தூரமாகிவிடும் என்பார்கள். வார இறுதியில் சொந்த ஊருக்குக் கிளம்புவோரின் எண்ணிக்கைதான் காரணம். காத்திருந்த பஸ் வந்தபின் கூட்டம் கட்டி ஏறும். கால் மாற்றி கால் மாற்றி தவம்செய்வதைப்போல கிடைத்த இடத்தில் மூன்று மணி நேரத்தை நின்றே கடத்துவது என்பது, நிச்சயம் போன ஜென்மத்தில் வாங்கிவந்த ஏதோ ஒரு சாபமாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உட்கார ஸீட் கிடைத்தால் அருகில் ஆண் - பெண் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கால் வலி ஒவ்வொரு முறையும் நரக வேதனையைத் தருவதால் ஸீட் கிடைத்தால் உட்கார்ந்துவிடுவாள். சில நேரங்களில் நல்ல மனிதர்கள் அமைந்துவிடுவார்கள். ஆனால், பலநேரங்களில் மிக மோசமான பயண அனுபவமாக இருக்கும்.

அருகில், பின் இருக்கையில் என அமர்ந்திருக்கும் ஆண் கள் இடுப்பைத் தொடுவது, காலை வருடுவது என பாலியல் சீண்டல்களை ஆரம்பிப்பார்கள். முறைப்பு மட்டும் இவளின் பதிலாக இருக்கும். சில கேடுகெட்ட ஜென்மங்கள் தொடர்ந்து சில்மிஷங்களைத் தொடரவும் செய்யும். இதுபோன்ற கஷ்டங்களை அவளுடைய கடந்த மூன்று வருட பயண வாழ்க்கையில் நிறையவே பட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் தேளின் கொடுக்கைப்போல அவளைக் கொட்டிய அந்த வருடல்கள், போகப்போக கம்பளிப்பூச்சியின் ஊர்தல் போலத்தான் தெரிகிறது.

முதல்முறை கோபப்பட்டு பஸ்ஸில் கூச்சல் போட்டிருக்கிறாள். தனக்கு ஆதரவாக யாரேனும் பேச வருவார்கள் என்ற நினைப்பில் ஒருமுறை பஸ்ஸில் சண்டை போட்டதும், அதற்கான மோசமான எதிர்வினையும் ஞாபகத்தில் வந்து போனது. ‘விடும்மா... அதான் தெரியாமப் பட்ருச்சுனு சொல்றார்ல. இப்ப என்ன கற்பா பறிபோச்சு, இப்படி கூச்சல் போடுற?’ என்ற ஒரு பெருசின் குரலும், ‘சௌகரியம் இல்லைனா கார் வாடகைக்கு எடுத்துப் போகவேண்டியதுதானே... எதுக்கு கவருமென்ட் பஸ்ல வர்றீங்க? உங்க ஒரு ஆளுக்கோசரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட முடியாது’ என்ற கண்டக்டரின் கேலி வார்த்தைகளும் அவளை அதன்பிறகு கையாலாகாதவளாகவே ஆக்கிவிட்டன.

ஒருமுறை தன்னைப் பாலியல் தொந்தரவு செய்தவனைப் பார்த்து, ‘கண்டர்கிட்ட சொல்லவா?’ என மிரட்ட, ‘போடி, கண்டக்டர் உன் புருஷன் பாரு... அப்படியே வந்து என் தலையை சீவிடுவான்’ எனக் கேலி செய்ததையும், அதை அந்தப் பேருந்தில் யாரும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்ததையும் நினைத்துப் பார்த்து ரொம்பவே மனம் வெதும்பிப்போனாள். நாளடைவில் இந்தத் தீண்டல்களுக்கு காந்திய வழியில் எதிர்வினையாற்ற பழகிவிட்டாள். அதாவது, ஒரு முறைப்புடன் தள்ளி உட்கார்வது மட்டுமே இப்போதைய தீர்வாக வைத்திருக்கிறாள்.

சில நேரங்களில் குடிகாரர்களின் பக்கத்தில் உட்காரும் சூழலில், உள்ளுக்குள் கனன்ற நெருப்பை விழுங்கிக்கொண்டு அப்படியே எழுந்து எவ்வளவு நேரம் என்றாலும் மூட்டெலும்பு தேய நின்றபடி பயணம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டாள். சரி, நின்றாலாவது சும்மா இருப்பார்களா? `இடிஅமீன்கள்', `தடவல் தாண்டவராயன்கள்' நிறைய பேர் மூச்சுக்காற்றை கழுத்துவரை பரவவிட்டு நெருங்கி நின்று மரண அவஸ்தையைக் கொடுப்பார்கள். எல்லாவிதமான சீண்டல்களுக்கும் முறைப்பையே பதிலாக வைத்து மனதுக்குள் புழுங்கியபடி இடம் மாற்றி கால் மாற்றி நிற்க எத்தனிப்பாள்.

இதுபோன்ற பாலியல் ரீதியான அத்துமீறல் களை பேருந்தில் அச்சமின்றி நிகழ்த்தும் கேடுகெட்ட ஜென்மங்கள் பல. இந்தப் பெண்ணைப்போல எத்தனையோ பெண்கள் தங்களைச் சுருக்கிக்கொண்டு, கண்டும் காணாமல் மன்னித்து விடுவதால்தான் இதையே சலுகையாக எடுத்துக்கொள்கின்றன அந்த மிருகங்கள்.

See also: பாலியல் குற்றவாளிகளைத் திருத்தும் பாதிக்கப்பட்ட பெண்!

ரயில்களில் இருப்பதுபோல பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் பெண்களுக்கான புகார் சேவை எதுவும் பேருந்து பயணத்தின்போது ஒரு பெண்ணுக்குக் கிடைப்பது இல்லை. ‘தகுந்த சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்’, ‘குடித்திருந்தாலோ டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கிவிடப்படுவீர்’ என எழுதப்பட்டிருப்ப தோடு சரி. பயணத்தில் திருக்குறளைவிட, ஒரு பெண்ணின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா?

நாமறிந்த வகையில் தமிழ்நாட்டில் ஓடும் எந்தப் பேருந்திலும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கான புகார் எண்களோ அதற்கான விழிப்பு உணர்வு எச்சரிக்கை வாசகங்களோ இல்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி பேசக்கூட இங்கு யாருக்கும் அக்கறையும் நேரமும் இல்லை. யாரோ சில நடத்துநர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டல்களைக் கண்டிக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஆறுதல். அப்படி என்றால் பேருந்துப் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா?

இது சமூகத்தின் அசிங்கம்!

‘‘நடவடிக்கை எடுக்கப்படும்!’’

காவல்துறை உயர் அதிகாரியான சிபிசக்ரவர்த்தியின் கவனத்துக்கு, இந்த பேருந்துப் பயண பாலியல் அத்துமீறல்களைக் கொண்டுசென்றோம்.  

‘‘பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகத் தீவிரமான பிரச்னை இது. பெண்களுக்கான பாதுகாப்பை காவல்துறை எப்போதும் உறுதி செய்யும். ஏற்கெனவே பெண்களுக்கான புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு வருகிறோம். இனிமேல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை தனி புகார் எண் செயல்படுத்தி அதற்கான தனிப்படை அமைக்கும். பேட்ரோல் வாக னங்கள் மூலம் புகார் பெறப்பட்ட அடுத்த சில மணித்துளிகளில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்பு உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எல்லா மாவட்டங்களிலும் இதை செயல்படுத்த, காவல்துறையின் மேலிடத்துக்கும் பரிந்துரை செய்கிறேன்.

இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தமைக்கு அவள் விகடனுக்கு நன்றி!’’ என்றார் சிபிசக்ரவர்த்தி.

பயணங்களின்போது பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும், நம் கோபத்தையும் சமூக வலைதளங்களில் #AriseAgainstAbuse என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளாக பதிவுசெய்யலாமே ஃப்ரெண்ட்ஸ்!

நன்றி- அவள் விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 1:47 am

ரொம்ப அருமையான பகிர்வு ராஜ்..........மிக்க நன்றி !...........நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
படிக்கவே ரொம்ப கஷ்டமாய் இருக்கு சோகம்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக