புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
62 Posts - 57%
heezulia
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
104 Posts - 59%
heezulia
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_m10'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:23 am

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... 02VpznHIT3aUSvfW9ZgO+53569_thumb

விடைபெற்றார் ஆச்சி : நடிகை மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல் மயிலாப்பூரில் கைலாசபுரம் மயானத்தில்
தகனம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகை மனோரமா நேற்றிரவு காலமானார். தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹசான், சரத்குமார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... BYNt5BysTWGObMUADXau+man

மாலை 4.30 மணிக்கு தி.நகரில் இருந்து மனோரமாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் பங்கேற்றனர் .ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்களை வீசி மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மயிலாப்பூர் கைலாசபுரம் மயானத்துக்கு அவர் உடல் கொண்டு வரப்பட்ட போது, அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அவர்களை மிகுந்த சிரமத்துக்கிடையே போலீசார் கட்டுப்படுத்தினர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளுக்கு பிறகு இறுதியாக இரவு 7 .05 மணியளவில் நடிகை மனோரமாவின் மகன் பூபதி அவரது சிதைக்கு தீ முட்டினார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:24 am

'பெண் நடிகர் திலகம் நடிகை மனோரமா'- நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா புகழாரம் !

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... HYUSTo01SEm6bPBKQ6sG+jaya_vc1

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

பழம்பெரும் நடிகையான மனோரமா நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் மனோரமா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுதாவூரில் இருந்து இன்று பிற்பகலில் சென்னை வந்த முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் தி.நகர் சென்றார். அங்கு மனோரமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, "மனோரமா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனக்கும், மனோரமாவுக்கும் இருந்த பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. திரையுலகில் எனது மூத்த சகோதரியாக விளங்கியவர் மனோரமா. நடிப்பில் மேதையான மனோரமாவை பெண் நடிகர் திலகம் என்றே சொல்லலாம். எம்ஜிஆர், சிவாஜியின் அன்புக்குரியவராக திகழ்ந்தவர் மனோரமா. தமிழ் திரையுலகில் மனோரமாவை போன்ற சாதனையாளர் இருந்ததில்லை" என்றார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:27 am

நடிகை மனோரமாவுக்கு கருணாநிதி நேரில் அஞ்சலி- இரங்கல் !

மறைந்த நடிகை மனோரமாவுக்கு திமுக தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... RGwihr6TiuesYCUDBX4a+karu_vbc1


திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் செய்தியில், "ஆச்சி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர். அண்ணா அவர்கள் எழுதிய “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்”, நான் எழுதிய “உதய சூரியன்”, “மணிமகுடம்”, தம்பி சொர்ணம் எழுதிய “விடை கொடு தாயே” போன்ற நாடகங்களில் “அல்லி” போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா.

1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து “கின்னஸ்” உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும். ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர். “பத்மஸ்ரீ” விருது, “புதிய பாதை” திரைப்படத்தின் மூலம் “சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி விருது” என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விருக்கிறார் என்ற செய்தி வந்தது.

அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:30 am

மனோரமா மறைவு: கமல்ஹாசன் இரங்கல் !

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... TVoEo6OeR6WfC3a8QCvO+kamalmanorama_2580414f
நடிகை மனோரமா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒரு வாரம் முன்பு அவரைச் சந்தித்தேன். நாங்கள் மூத்த சினிமா பத்திரிகையாளர்களுக்கு கவுரவிப்பு விழா நடத்திக் கொண்டிருந்தோம்.

அப்போது அனைவரும் ஆச்சரியத்தக்க வகையில் மனோரமா விழா மேடைக்கு வருகை தந்தார், பிறகு பார்வையாளர்கள் அனுமதியுடன் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி அவர்கள் எழுதிய 3 பக்க வசனத்தை தனது நினைவிலிருந்து பேசினார்.

இதனை அவர் எதற்கு செய்து காட்டினார் என்றால் இன்னமும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் அவர் நடித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனது அவரை பாதித்தது.

அன்றைய தினம் அந்த 3 பக்க வசனத்தை அவர் பேசி முடித்தவுடன் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது. எனது அனுமதிக்காக அவர் என்னைப் பார்த்த போது எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

3 வயது குழந்தை நடிகர் என்ற நிலையிலிருந்து அவர் என்னை அறிந்தவர். நேசிக்கக் கூடிய பெண்மணி, மிகப்பெரிய திறமைக்காரர். தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக்கு மனோரமா, நாகேஷ் ஆகியோர் தாயும், தந்தையும் போன்றவர்கள் என்றே நான் கூறுவேன்.

எனது நடிப்பை அவர்கள் பார்த்து, பாராட்டி, கருத்துக் கூறியது எனக்குக் கிடைத்த ஆகப்பெரிய மரியாதையாகப் பார்க்கிறேன். இவ்வாறு என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்கள்.

முதுகுக்குப் பின்னால் என்னை விமர்சிப்பவர்களிடத்தில் எனக்காக அவர்கள் வாதாடியுள்ளனர். குறிப்பாக மனோரமா அவர்கள். லட்சக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவனாக நானும் அவரை இழந்துள்ளேன். மனோரமா அவர்களுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் 1000 படங்களைக் கடந்தார்.

அவருடைய வாழ்க்கை முழுமையானது, ஆனாலும் அவரது ரசிகர்களான எங்களுக்கு இன்னமும் ஏதோ பூர்த்தியடையாதது போலவே உள்ளது.

அவரது இறுதிச் சடங்கிலும் கூட சிலர் மனோரமா அவர்கள் அளித்த மறக்க முடியாத திரைக் கணங்கள் நினைவுக்கு வர கவனக்குறைவாகவேனும் சிரித்து விடலாம். உங்களது கூர்மையான நகைச்சுவையால் எங்கள் முகங்களில் சிரிப்பை வரவழைத்த உங்களுக்கு நன்றி அம்மா.

எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட மகிழ்வான, மற்றும் துயரமான தருணங்களுக்கு நன்றி. தற்போதைய தற்காலிக துயரத்தின் மீது உங்களது நகைச்சுவை பிரதிமை தாமே விரைவில் படிந்து விடும் என்பது உண்மை. அன்பும், வேடிக்கையுமான என் அம்மாவுக்கு எனது பிரியாவிடை." என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 12:31 am

மனோரமாவுக்கு 'ஆச்சி' என்று பெயர் வந்தது எப்படி?

நகைச்சுவை அரசி மனோரமா 'ஆச்சி' என்று திரையுலகில் அன்போடு அழைக்கப்படுபவர். அவருக்கு ஆச்சி என்ற பெயர் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் இது...

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... SK5iAQlaTl87tdE4r4hR+achi(2)

'' நான் செட்டிநாட்டில் வளர்ந்தவள். 1962ஆம் ஆண்டு க.கி.சுப்பிரமணியத்தின் ' காப்பு கட்டி சத்திரம் ' என்ற நாடகத்தில் நடித்தேன். இந்த நாடகம் ரேடியோவில் 66 வாரங்கள் ஒளிபரப்பாகியது. அதில் நானும் நாகேசும் சேர்ந்து நடித்தோம்.

அந்த நாடகத்தில் 'பன்னர் பாக்கியம்' என்ற கேரக்டரில் இளநீர் விற்கும் பெண்ணாக நடித்தேன். செட்டிநாட்டு பாஷை பேசி அந்த நாடகத்தில் நான் நடித்ததை பார்த்த ஒரு மேக்அப் மேன் 'ஆச்சி ' என்று அழைத்தார். பின்னர் அனைவரும் ஆச்சி என்று அழைக்க அந்த பெயரே நிலைத்து விட்டது''

இவ்வாறு மனோராமா கூறியுள்ளார்.

நன்றி விகடன் மற்றும் தி ஹிந்து




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2015 5:59 am

'ஆச்சி' மனோரமாவை பற்றிய செய்தித் தொகுப்பு....தொடர் பதிவு... XcjYhiovRq6LVFxTXuTj+MANORAMA2_2579789p
-
போலீஸ்காரன் மகள் படத்தில் ஒரு காட்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக