புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
1 Post - 1%
bala_t
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
1 Post - 1%
prajai
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
293 Posts - 42%
heezulia
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
6 Posts - 1%
prajai
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_m10கார்த்திகை மாத ராசி பலன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை மாத ராசி பலன்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:58 pm

மேஷம்: சொத்து யோகம்!

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட மேஷராசி அன்பர்களே!
நீங்கள் கடந்த மாதத்தைவிட முன்னேற்றம் காண்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அவர் டிச.4ல் 9-ம் இடத்தில் இருந்து 10-ம் இடத்திற்கு செல்வதால் அவரால் முன்போல் நன்மை செய்ய முடியாது.செவ்வாய் 5-ம் இடமான சிம்மத்தில் இருந்தாலும், ராசிநாதன் என்பதால் அவர் இந்த இடையூறு உண்டாகாது. நவ.30ல் செவ்வாய் 6-ம் இடமான கன்னிக்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும்.

பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். நகை வாங்குவீர்கள். புதன் 7-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். ஆனால் புதன் நவ.28ல் 8-ம் இடத்திற்கு செல்வதால் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.நவ.28 க்கு பிறகு புதிதாக சொத்து வாங்க யோகம் கூடி வரும்.செவ்வாயாலும், புதனின் பலத்தாலும் நவ.28க்குப் பிறகு வேலையில் பளிச்சிடுவீர்கள்.தொழிலில் மாத பிற்பகுதியில் பிரச்னை நீங்கி வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்கலைஞர்கள் சிறப்பான முன்னனேற்றம் காண்பர்.

மதிப்பு, பாராட்டு கிடைக்கும். டிச.4க்குப் பிறகு பிறகு புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் சிறப்படையலாம். தேர்வு முடிவுகள் பலருக்கு எதிர்பார்த்த படி அமையும். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் கால்நடை மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறும்.பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கலாம். மாத பிற்பகுதியில் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சூரியனால் உடல் நலம் பாதிக்கப்படும்.

அதிர்ஷ்ட எண்: 4,5 நிறம்: சிவப்பு, பச்சை
நல்லநாள்: நவ.17, 20,21,22,28,29,30,டிச.1,6,7,8,9,10,13,14
கவனநாள்: டிச.2,3 சந்திராஷ்டமம்
வழிபாடு: புதனன்று குலதெய்வம், சாஸ்தாவை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:59 pm



சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

ரிஷப ராசிக்கு 7ல் சூரியன் இருக்கும் காலம்தான் கார்த்திகை மாதம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 8ல் இருப்பதால் வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். டிச.4க்கு பிறகு பொருளாதார வளம் கூடும். சூரியன் விருச்சிகத்தில் இருக்கும்போது நன்மை தராவிட்டாலும், குரு,சனி,ராகு நற்பலன் அளிப்பர். செவ்வாயால் தீமை உண்டானாலும், நவ.30க்கு பிறகு பிரச்னை தீரும். ஆனால், உடல்நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.புதன் 6-ம் இடத்தில் உள்ளதால் சுப நிகழ்ச்சி நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். நவ.28க்குப் பிறகு கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலருக்கு மனக்கவலை வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீட்டில் திருட்டு நடக்கலாம்.சுக்கிரன்,குருவால் விருப்பம் நிறைவேறும். டிச.8,9,10 தேதிகளில் எதிர்பாராத நன்மை உண்டாகும்.

மாத பிற்பகுதியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிலில் ஆற்றல் மேம்படும். மாத தொடக்கத்தில் வருமானமும், பிற்பகுதியில் புதனால் விரயமும் ஏற்படலாம். டிச.13,14 தேதிகளில் சந்திரனால் தடை வரலாம். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். டிச.4க்குப் பிறகு பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் நன்மை காண்பர். நெல், நிலக்கடலை, கிழங்கு வகைகள் போன்றவை நல்ல மகசூலைக் கொடுக்கும்.மாணவர்கள் வளர்ச்சி காண்பர். நவ.28க்குப் பிறகு படிப்பில் அக்கறை தேவை.பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். டிச.6,7 தேதிகளில் வயிறு தெடர்பான சிற்சில பிரச்னை வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, நீலம்
நல்ல நாள்: நவ.18,19,23,24,30, டிச.1,2,3,8,9,10,11,12,15
கவன நாள்: டிச.4,5 சந்திராஷ்டமம்
வழிபாடு: சூரிய வழிபாடு நடத்துங்கள். துர்க்கை வழிபாடு துயரம் போக்கி, தைரியத்தை வரவழைக்கும். புதனன்று குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:01 pm



புதனை ஆட்சி நாயகனாக கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 5-ம் இடமான துலாமில் புதன் இருப்பது சுமாரான நிலை. குடும்பத்தில் பிரச்னை வரலாம். எனவே விட்டுக் கொடுத்து போகவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் அதிகரிக்கும். அவர் நவ.28ல் விருச்சிகத்திற்கு செல்கிறார். அவரால் பொருளாதார வளம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சியை நடத்துவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.சுக்கிரன் 7-ம் இடமான தனுசில் இருக்கிறார்.

இதனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர் டிச.4ல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். பணவசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். செவ்வாயால் பக்தி மேம்படும். ஆனால் அவர் நவ.30ல் கன்னி ராசிக்கு வருகிறார். அதனால் நண்பர்களால் அவதியுறலாம். கவனம் தேவை.விருச்சிகத்தில் இருக்கும் சூரியனால் எதிரியை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மதிப்பு உயரும். குரு உங்கள் ராசியில் இருப்பதால் நன்மை தரமாட்டார். ஆனால் அவரது பார்வைகளால் நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறது. எது எப்படி அமைந்தாலும் முக்கிய கிரகங்களில் ஒன்றான கேது 11-ம் இடத்தில் இருந்து வெற்றியை அள்ளித் தருகிறார்.கலைஞர்கள் டிச.4க்குப் பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று வளம் காண்பர். நற்பெயர் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். மாணவர்கள் இந்த மாதம் கல்வி வளர்ச்சி காண்பர். புதனால் நவ.28க்குப் பிறகு நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். விவசாயிகள் நவீன உத்தியைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம். நவ.30க்குள் புதிய சொத்து வாங்கலாம்.பெண்களுக்கு அக்கம் பக்கத்தினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். நவ.28க்குப் பிறகு சுப நிகழ்ச்சி கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நவ.30க்கு பிறகு செவ்வாயால் உடல் நலம் பாதிப்பு வரலாம்.

அதிர்ஷ்டஎண்: 3,9 நிறம்: செந்தூரம், பச்சை
நல்ல நாள்: நவ.17,20,21,22,25,26,27,டிச.2,3,4,5,11,12,13,14
கவன நாள்: டிச.6,7 சந்திராஷ்டமம்
வழிபாடு: பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனியன்று சனிபகவானுக்கும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:02 pm


சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட கடக ராசி அன்பர்களே!

செவ்வாய் 2ம் இடமான சிம்மத்தில் இருக்கிறார். அங்கு அவரால் பகைவர் வகையில் தொல்லை வரும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதே நேரம் நவ.30 முதல் செவ்வாய் 3ம் இடமான கன்னி ராசிக்கு சென்று நன்மை தருவார். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம்.

பொருளாதார வளம் மேம்படும்.சூரியன் உங்கள் ராசிக்கு 5ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் போது பகைவர்கள், வியாதி தொல்லை இருக்கும். புதனால் மாதத் தொடக்கத்தில் பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நவ.28ல் அவர் 5-ம் இடமான விருச்சிக ராசிக்கு வந்து நற்பலனை கொடுக்க முடியாது. குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். சுக்கிரனாலும் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். டிச.4க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். ஒதுங்கி இருக்கவும்.முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதமாக அமையவில்லை. 4ம் இடத்தில் சனிபகவானும், ராகுவும் இணைந்திருப்பது சில பிரச்னைகளை தரலாம். ஆனால், சனிபகவானின் பார்வையால் நன்மை கிடைக்கும். குருபகவான் 12ம் இடத்தில் இருப்பதும், கேது 10-ம் இடத்தில் இருப்பதும் சிறப்பானது அல்ல கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.

எதிரிகளின் தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை.கலைஞர்கள் மனதில் சோர்வு ஏற்படும். டிச.4க்குப் பிறகு பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் மனதிருப்தியோடு காணப்படுவர். மாணவர்கள்போட்டிகளில் வெற்றி காணலாம். நவ.28 க்குப் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். விவசாயம் வேலைப்பாடு அதிகமாக இருந்தாலும் வருமானம் குறையாது. நவ.30க்குப் பிறகு புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. பெண்களிடம் அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நவ.30க்குப் பிறகு நல்ல பலன்கள் நடக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, சிவப்பு
நல்ல நாள்: நவ.17,18,19, 23,24, 28,29, டிச.4,5, 6,7, 13,14,15.
கவன நாள்: டிச.8,9,10 சந்திராஷ்டமம். அனாவசிய வாக்குவாதம் தவிர்க்கவும்.
வழிபாடு: காலையில் சூரியனை வழிபடுங்கள். வியாழக்கிழமை4 தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். துறவிகளுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:03 pm

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு ஆகியோர் நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே சிறப்பான பலனை காணலாம். புதன் ராசிக்கு 3 ல் உள்ளார். அவரால் பகைவர் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.நவ.28ல் புதன் விருச்சிகத்திற்கு செல்கிறார். அதன்பின் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியன் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால், பெண்களிடம் விரோதம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படும். செவ்வாயால் மாத தொடக்கத்தில் முயற்சியில் தடைகள் வரலாம்.

நவ.30ல் கன்னி ராசிக்கு செல்கிறார். வீட்டில் திருட்டு போக வாய்ப்புண்டு. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். சுக்கிரன் டிச.3 வரை தனுசில் இருப்பதால் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகள் துவங்கும் யோசனை வலுப்பெறும். பணியாளர்கள் இடமாற்றம், சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்கு இடமிருக்கிறது. அதன் பிறகு சுக்கிரன் மகரத்திற்கு செல்வதால் முயற்சியில் தடை ஏற்படும். வரவு செலவு விஷயங்களை நேரடியாகக் கண்காணிப்பது நன்மை தரும். செவ்வாய், சூரியன், கேது ஆகியவை சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் பலம் பெற்று உள்ளன. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் காண்பர். டிச.4 க்குப்பிறகு விவாதம் செய்வது கூடாது.

அரசியல்வாதிகள் மகிழ்ச்சியோடு இருப்பர். தலைமையுடன் இணக்கம் ஏற்படும். விவசாயிகளுக்கு செலவு அதிகமாகும் பயிரை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும். விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் மாணவர்கள் வளர்ச்சி காண்பர். தேர்வு சிறப்பாக அமையும். புதனால் நவ.28க்கு பிறகு கல்வி வளம் பெருகும். போட்டியில் வெற்றி காணலாம்.பெண்கள் பிள்ளைகளால் முன்னேற்றம் காணலாம். நவ.11,12 தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: மஞ்சள்,நீலம்
நல்ல நாள்: நவ.18,19,20,21,22,25,26,27,30,டிச.1,6,7,8, 9,10, 15
கவன நாள்: டிச.11,12 சந்திராஷ்டமம்
வழிபாடு: வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்க்கு துவரை படைத்து வணங்கி வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:07 pm


புதனை ஆட்சி கிரகமாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன் 4-ம் இடத்தில் இருப்பதால், மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். டிச.4ல் அவர் மகரத்திற்கு சென்றாலும் நன்மை தர தவறமாட்டார். அதன்பின் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். சூரியன் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கிறார். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். உடல் நலம் சிறப்படையும். புதன் 2-ம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் அவப்பெயர் வரலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்குமனக்கவலை வரலாம். அவர் நவ.28ல் 3-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். பகைவர் இடையூறு நேரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.செவ்வாய் 12ல் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படலாம். நவ.30ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். அதன்பின் முயற்சியில் தடை வரலாம். உடல் நலம் பாதிக்கலாம். சுக்கிரனின் பலத்தால் வாழ்வில் நன்மை உருவாகும். சுற்றுலா சென்று வரலாம். கலைத்துறையினர் மேம்பாடு காண்பர்.மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், குரு, சனியின் பார்வை சாதகமான அமைந்துள்ளன. சனியின் பார்வையால் நன்மை கிடைக்கும். ஆனால், போராடி வெற்றி காண்பீர்கள். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சனி, ராகு மீது குருபார்வை விழுவதால் கெடுபலன் ஏற்படாது.

எனவே இந்த மாதம் சிறப்பாக பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். அரசியல்வாதிகள் எதிர் பார்த்த முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு பழவகை, கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சற்று ஒதுங்கி இருக்கவும். பெண்களால் குடும்பம் சிறப்படையும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

அதிர்ஷ்ட எண்: 5,9 நிறம்: செந்தூரம்,வெள்ளை
நல்ல நாள்: நவ.20,21,22,23,24,28,29,டிச.2,3,8,9,10,11,12
கவனநாள்: டிச.13,14 சந்திராஷ்டமம்
வழிபாடு: வியாழக்கிழமை குருவுக்கு கொண்டை கடலை படைத்து வணங்கலாம். சனியன்று ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:08 pm

சுக்கிரனை ஆட்சி நாயகனாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

குருபகவானும், சுக்கிரனும் நன்மை தருவார்கள். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் 3-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். டிச.4ல், சுக்கிரன் 4-ம் இடத்திற்கு சென்றபின், மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.சூரியன் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருக்கிறார்.

சூரியன் இந்த இடத்தில் இருக்கும்போது பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம். புதன் மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கிறார். இவரால் வீட்டினுள் சில பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். பணியாளர்கள் இடமாற்றம் அடைவர். டிச.4ல் புதன் 2ம் இடத்திற்கு செல்கிறார். அதன்பின் குடும்பத்தில் அனுகூலங்கள் ஏற்படும். ராசிக்கு நட்பு கிரகமான செவ்வாய் 11ம் இடமான சிம்மத்தில் உள்ளார். இது சிறப்பான இடம். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் செவ்வாயின பலத்தால் நவ.30க்குள் புதிய நிலம், வீட்டு மனை வாங்கலாம்.

பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காண்பர். கலைஞர்களுக்கு விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்படுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். மாணவர்களில் பெரும்பாலானோருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் சிரத்தை எடுத்தால் வெற்றி கிட்டும்.விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் காணலாம். சொத்து வாங்கலாம். பசு வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைக்கும். பெண்கள் உற்சாகமான நிலை அடைவர்.

அதிர்ஷ்ட எண்: 4,8. நிறம்: மஞ்சள்,வெள்ளை.
நல்ல நாள்: நவ.17, 23,24,25,26,27, 30, டிச.1, 4,5, 11,12,13,14.
கவன நாள்: நவ.18,19, டிச.15 சந்திராஷ்டமம். அனாவசிய வாக்கு வாதம் தவிர்க்கவும்.
வழிபாடு: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். மேலும் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:09 pm


செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

நிழல் கிரகமான கேது 6ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.உங்கள் ராசி நாயகன் செவ்வாய், தற்போது 10ம் இடத்திற்கு உள்ளார். இதனால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால், அவர் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன் உங்களைப் பாதிக்காது. அவர் நவ.30ல் 11ம் இடத்திற்கு செல்வதால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார்.

அவர் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். அதன்பின் 3ம் இடத்திற்கு சென்று குடும்பத்தில் மகிழ்ச்சி தருவார். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கும், உடல் நலம் பாதிக்கப்படலாம்.புதனும் சாதகமற்ற இடத்தில் உள்ளார். எதிரிகளால் தொல்லை வரலாம். உங்கள் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படலாம்.

ஆனால் அவர் நவ.28ல் உங்கள் ராசிக்கு வருவதால் வீட்டினுள் சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடும், பொருள் இழப்பும் ஏற்படலாம். சிலர் இடமாற்றம் காணலாம். கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. எள், கரும்பு, பனை பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும்.புதிய சொத்து வாங்க நவ.30க்கு பிறகு அனுகூலமான காற்று வீசும்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்களால் குடும்பம் தழைத்து ஓங்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: சிவப்பு, வெள்ளை
நல்ல நாள்: நவ.17,18,19, 25,26,27,28,29, டிச.2,3, 6,7, 13,14, 15.
கவன நாள்: நவ.20,21,22 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:10 pm


குருபகவானை ஆட்சி நாயகனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

சூரியன் 12ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். தொழிலில் நஷ்டம் உருவாகலாம். பணியில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. ஆனால், கல்விகாரகன் புதன் தற்போது துலாமில் சனி,ராகுவோடு இணைந்திருக்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். நவ.28ல், புதன் 12ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். அப்போது எதிரிகளால் தொல்லை வரலாம். முயற்சிகளில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகலாம்.

உடல்நிலை பாதிக்கலாம்.பூமிகாரன் செவ்வாய் நவ.30ல் கன்னி ராசிக்கு வருகிறார். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசியில் இருக்கிறார். அது சிறப்பான இடம். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். டிச.4ல்தேதி மகரத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம்பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அர” சலுகை கிடைக்கும். முக்கிய கிரகங்களில் குருபகவான்7ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபங்களையும் தருவார்.

மேலும் சனிபகவானும், ராகு பகவானும் சாதகமான நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க உறுதுணையாக இருப்பார்கள். கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது. மாணவர்களின் வளர்ச்சி வளர்முகமாக இருக்கும். நவ.28 க்கு பிறகு சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தாமதமாகும். பெண்கள் நகை வாங்கலாம். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

அதிர்ஷ்ட எண்: 8,9 நிறம்: மஞ்சள், நீலம்
நல்ல நாள்: நவ. நவ.18, 19,20,21,22, 28, 29,30, டிச.1, 4,5, 8,9,10, 15.
கவன நாள்: நவ.23, 24 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: செவ்வாயன்று முருகன் கோயில் சென்று ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். சூரிய வழிபாடு செய்யலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 1:11 pm


சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் பலன்கள் கிடைக்கும். கடந்த மாதம் நிலவிய பின்தங்கிய நிலை மறைந்து முன்னேற்றத்துக்கு வழிவகை காணலாம்.சுக்கிரன் தற்போது 12ம் இடமான தனுசில் உள்ளார். இதனால் காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். டிச.4ல் உங்கள் ராசிக்குவருகிறார். இது சிறப்பான இடம்.பெண்களால் சுகம் கிடைக்கும். பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.கல்வி காரகனான புதன் தற்போது 10-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது சிறப்பான இடம்.

நவ.28ல் விருச்சிகத்திற்கு வருகிறார். 11-ம் இடமான அங்கும், அவர் பல்வேறு நன்மைகளை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த செயல் வெற்றி அடையும்.பூமிகாரகன் செவ்வாய் 8ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. உஷ்ண, பித்தம், மயக்கம் உபாதைகள் வரலாம். அவர் நவ.30ல் கன்னிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம்.சூரியன் 11ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இதனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.சனிபகவான் துலாம் ராசியில் உச்சம்பெற்று இருந்தாலும் சாதகமாக காணப்படவில்லை. அவரோடு இணைந்திருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார்.

ஆனால், அந்தக் கிரகங்கள் மீது குருவின் பார்வை படுவதால் அவர்கள் கெடுபலனை தரமாட்டார்கள். கேதுவால் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். எனவே முகம் தெரியாத நபரிடம் எச்சரிக்கையாக பழகவும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ் கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு பெண்களால் பொருள் சேரும். மாணவர்களுக்கு காலத்தை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில்தான் உள்ளது.விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் விரைவில் வரும். பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.

அதிர்ஷ்ட எண்:1,3 நிறம்: செந்தூரம், பச்சை.
நல்ல நாள்: நவ.20.21.22.23.24, 30,டிச.1,2,3, 6,7,11,12
கவன நாள்: நவ.25,26,27 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக