புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 49%
heezulia
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
12 Posts - 2%
prajai
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 2%
jairam
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under வைரமுத்து on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 5 matches for வைரமுத்து



பாடலாசிரியர் #வைரமுத்து மீது பல ஆண்டுகளாக பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இதுபற்றி சமூகவலைதளத்தில் அவர் கருத்து பதிவிட்டாலே அவரை வசைபாட ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. இருப்பினும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதோடு வைரமுத்துவிற்கு எதிரான தனது குற்றச்சாட்டில் உறுதியோடு இருக்கிறார்.

அரசியல்வாதியை எப்படி நம்புவது


இந்நிலையில் டில்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். சிலதினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன், "மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக அவர்களை போராட வைக்க வேண்டிய நாம், தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அவர்களை போராட வைத்துவிட்டோம். நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது விளையாட்டு வீராங்கனைகள் மீதா அல்லது அதிக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதி மீதா?" என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலடியாக #சின்மயி, "தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ஒருவர், தன்னிடம் அத்துமீறிய பாலியல் குற்றவாளியை வெளிச்சம்போட்டு காட்டியதற்காக 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். அந்த கவிஞர் உங்களுக்கு நெருக்கமானவர் என்பதால் அதைப்பற்றி பேசவில்லை. கண்முன்னே நடக்கும் துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டு பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் அரசியல்வாதியை எப்படி நம்ப முடியும்” என குறிப்பிட்டார். இவரின் பதிவு வைரலானது.

எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு வேண்டுகோள்


இந்நிலையில் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார் சின்மயி. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட நீண்ட பதிவின் சுருக்கம் வருமாறு : மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.... இந்தியாவில் எங்கு பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்ஸோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது.

சினிமா துறையில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. உங்கள் நண்பரும், ஆதரவாளருமான வைரமுத்து மீது 17-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்தும் உங்கள் பாதுகாப்பில் அவர் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இதனால் அவரைப்பற்றி பெண்கள் மேலும் பேச முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் உங்கள் கட்சி அவரைத்தான் முன்னிலைப்படுத்துகிறது. தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகள் பணி செய்ய தடையுடன் அதை எதிர்த்து வழக்கு பதிவு செய்து போராடி வருகிறேன். அதற்கு முடிவு கிடைக்குமா என தெரியவில்லை. இன்னும் 20 ஆண்டுகள் கூட இந்த வழக்கு நடக்கலாம், அதை எதிர்கொள்ள எனக்கு பலம் உள்ளது.

நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷன் பெயரைக் கூறியுள்ளார்கள். அதேபோல் தான் 17 க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு நெருக்கமாக உள்ள அவர் என்னையும் மற்ற பெண்களையும் அடக்க நினைக்கிறார். எங்கள் அனைவரின் திறமையைவிட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை. உங்கள் கண் எதிரே இது நடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுங்கள். அப்போது தான் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும். எனது துறையில் இதுபோன்றவர்கள் இனி நடக்ககூடாது என்பதற்காக நான் பேசுகிறேன். ஆனால் மற்ற பெண்கள் பேச பயப்படுகிறார்கள்.

போக்ஸோ உள்ளிட்ட அமைப்புகள் சரியாக செயல்பட தயவு செய்து ஆவண செய்யுங்கள். எங்கள் துறையில் அனைத்து இடங்களிலும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க வழிவகை செய்யுங்கள். தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை டி.வி.யில் தொகுத்து வழங்கியபோது ரமேஷ் பிரபா குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெயரும் வெளியானது. எனவே, அனைத்துக்கும் ஆவண செய்ய வேண்டும்”

இவ்வாறு சின்மயி தெரிவித்திருக்கிறார்.

சின்மயின் இந்த பதிவால் வைரமுத்து மீதான பாலியல் புகார் தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது
.


தினமலர்

"யாத்தா! வந்திருக் கறவரு வாலாந்தூர்த் தலையாரி மொக்கச்சாமி. ஒரு * தாவா விசயமா நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு."

"என்னாப்பா தாவா? சொன்னாத் தானே தெரியும்"அடித் தொண்டை யில கேக்குறாரு இருளப்பக் கோடாங்கி.

"இது சொக்கத்தேவன்பட்டி தான?"வாலாந்தூர்த் தலையாரி வெறைப்பாக் கேக்குறாரு.

"சொல்லியா தெரியணும்... சொக்கத்தேவன்பட்டிதான்."

"காளியம்மன் கோவில் தெருவு... கதவு எண் பன்னண்டு இதானே?"

"ஆமா... அதுக்கென்ன..?"

"இந்த வீடு குப்பணம்பட்டி சோலமலைத் தேவருக்குக் கிரயமாயிருக்கு. உரியவுக வீட்டக் காலி பண்ணிக் குடுக்கணும். அனுப்ப வேண்டிய ஆளுக அனுப்பி அதிகாரத்தோட வந்திருக்கேன்."

கருவாச்சி நெஞ்சுல கை வச்சு நிக்க முடியாமக் கதவுல சாஞ்சு சரிஞ்சுபோனா.

ஊருக்கே ஒண்ணும் புரியல. கசமுசகசமுசன்னு சாதிசனத்துக் குள்ளயே சலம்ப லாகிப் போச்சு.

"இதென்னாப்பா இது. மொட்டைத் தலைக்கும் மொழங் காலுக்கும் முடிச்சுப் போட்ட கதையா வுல்ல இருக்கு சொக்கத்தேவன்பட்டி எங்க இருக்கு? குப்பணம்பட்டி எங்க இருக்கு? எவ வீட்ட எவன் எழுதி வாங்கறது?"

வந்த தலையாரி மேல வள்ளுன்னு விழுந்தாரு காவக்காரச் சக்கணன்.

தலையாரி ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சல.

"அய்யா கோவிக்காதீக. அழகுசிங்கம்கிறது யாரு?"

"ஆமா! எங்கூருப் பயதான். கருவாச்சி மகன்தான்."

"கட்டையன் மகன்னு சொன்னாகளே..."

"ஆமா! அப்படியும் சொல்லலாம்"எரிச்சலா வந்துச்சு ஒரு சத்தம்.

"சிறுகச்சிறுக அப்பப்ப அழகுசிங்கம் வாங்குன கடனுக்காக இந்த வீட்ட, சோலமலைத் தேவருக்கு அவரு கிரயம் பண்ணிக் குடுத்திட்டாரு."

"மீனாட்சியம்மன் கோவில்கூட எம் பேர்ல இருக்குன்னு எந்தப் பிச்சைக்காரனும் சொல்லிக்கிரலாம். ஆதாரமிருக்காப்பா?"

"சிந்துவம்பட்டியில பதிஞ்ச பத்திரத் தோட வந்திருக்கேன் படிக்கிறேன். கேளுங்க.

"பிரமதூத வருசம் புரட்டாசி மாசம் 17-ந் தேதி பெரியகுளம் தாலுகா அன்னஞ்சி கிராமம் சொக்கத்தேவன் பட்டி காளியம்மன் கோவில் தெருவில் கதவு எண் பன்னிரண்டில் குடியிருக்கும் கட்டையத் தேவர் மகன் அழகு சிங்கமாகிய நான், மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் கிராமம் குப்பணம்பட்டியில் குடியிருக்கும் பெரிய மாயத்தேவர் மகன் சோலமலைத் தேவருக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரம்.

என் வியாபாரத்துக்காகவும் சொந்தச் சிலவுகள் மற்றும் சில்லறைக் கடன் தீர்ப்பதற்காகவும் தங்களிடம் நான் வாங்கிய மொத்தப் பணம் ரூ.240 (இருநூற்றி நாற்பது)க்காக எனக்குப் பூர்வீகப் பாத்தியப்பட்ட நான் அனுபவித்து வரும் அடியிற் கண்ட வீட்டை நான் தங்கள் பெயருக் குக் கிரயம் செய்து கொடுத்துவிட்டேன். இது முதல் அடியிற்கண்ட வீட்டை தாங்களே சர்வ சுதந்திரமாய் ஆண்டனுபவித்துக்கொள்வீர் களாகவும்."

தலையாரி படிச்சு முடிச்சதும் ஒண்ணும் பேசல ஒருத்தரும்.

தரையோட சரிஞ்சு உரலக் கட்டிப் புடிச்சுத் தம்பாயமில்லாமக் கெடந்தவள ஓடி வந்து தூக்குறாக கனகமும் பவளமும்.

"நாளைக்கே காலி பண்ணுங்கன்னு நாங்க சொல்லல. கெடு கேட்டாக் குடுக்கச் சொல்லிக் கிரயதாரர் உத்தரவு."

பத்திரத்த வாங்கி உத்து உத்துப் பாத்து உண்மைதானான்னு சோதிச்சாக ஊர்ப் பெருசுக.

அது அழகுசிங்கம் கையெழுத்து தான்னு உறுதி செஞ்சான் கூடப் படிச்ச ஒருத்தன்.

"வீட்ட விட்டு ஓடிப் போயிக் கல்யாணம் முடிச்ச பய வீட்டையும் வித்துப்புட்டானேப்பா."

"கடைசிக் காலத்துல ஆத்தாளுக்குக் கஞ்சி ஊத்தலேன்னாலும் நெஞ்சுல ஏறி மிதிக்காம இருந்திருக்கலா மில்ல."

"அதெல்லாம் காலி பண்ண முடியாது. வாங்குனவனயும் வித்தவன யும் வரச் சொல்லுங்கப்பா."

"பத்து ரூவாப் பத்திரத்துல பதிஞ்சதுக்கப்பறம் விட மாட்டேன் வீட்டன்னா விடுமா சட்டம்?"

சிதறிக்கிடந்த ஊரு சேந்து குமிஞ்சு போச்சு கருவாச்சி வீட்டு வாசல்ல.

கருவாச்சி வீட்டவிட்டு வெளி யேறப்படாதுன்னு ஒரு கூட்டமும், வேற வழியில்லப்பா வெளியேறித்தான் ஆக ணும்னு ஒரு கூட்டமும் முட்டிமோதி நிக்க டங்குடங்குடங் குன்னு எட்டு வச்சுக் கூட்டத்த வெலக்கி வாரா திம்சு.

அதுவரைக்கும் மொசப் புடிக்கிற நாய்க் காது மாதிரி வெடச்சு நின்ன வாலாந்தூர்த் தலையாரி அவளக் கண்டதும் தண்ணிக்கு அலையிற நாய் நாக்கு மாதிரி தொங்கிப் போனான்.

"யப்பா! வாலாந் தூர்த் தலையாரி... எந்த ஊர்க்காரன் எழுதி வாங்கறது எங்கக்கா வீட்ட? எம் மகன் வாங்குன கடன நான் அடைச் சுடுறேன். ஒங்க சோல மலைத் தேவங்கிட்ட சொல்லி, எம் பேருக்கு எழுதிக் குடுக்கச் சொல்லு. காலம் போற கடைசி வரைக்கும் என் வீட்லயே இருந்துட்டுப் போறா எங்க அக்கா."

கருவாச்சிய ஒரு கீழ்ப் பார்வ பாத்து உதடு கடிச்சு உசுப்பேத்துறா திம்சு. கொழுப்பெடுத்து நிக்கிறவளக் குறுகுறுன்னு பாத்தா கருவாச்சி. நீ குடியிருக்கிற வீடே ஒனக்கு நான் போட்ட மடிப்பிச்சைதானடி கண்ணுல வந்து சொல்லுது திம்சு திமிரு. சுடுகாட்ல போயிக் குடியிருப்பாளே தவிர, நீ போட்ட பிச்சையில எச்சிப் பொழப்புப் பொழைக்க மாட்டாடி கருவாச்சிஅவ நெனைக்கிறது வரிவரியா ஓடுது அவ கண்ணுமுழியில.

கொடத்துல தண்ணி சொமந்து வந்த கொண்ணவாயன் என்னமோ ஏதோன்னு பதறிக் கூட்டத்த வெலக்கி வீட்டுக்குள்ள வந்தான்.


[You must be registered and logged in to see this link.]


"யாத்தா பேயம்மா! கருவேலமரத்துல கட்டையச் சாச்சு நிக்கிறவளே! இதெல்லாம் இந்த ஊர்ல எனக்கு மட்டும்தான் தெரியும். என்னிய வரிவரியா வகுந்தாலும் ஒரு ஆளுக்கும் இந்த உண்ம சொல்ல மாட்டேன் பயப்படாத. பொழைக்க வந்தவ. பொழைச்சுட்டுப் போ. ஆனா, ஒன்னியக் கையெடுத்துக் கும்பிடறேன் தாயி... பொழைக்க விடு. கெழவனக் கட்டிலோட சேத்துக் கட்டிப்புட்ட. புருசன முந்தானையில முடிஞ்சு மூலையில வச்சுக்கிட்ட. சடையத்தேவன் வீட்டுத் தானியத்த விட்டெறிஞ்சு உள்ளூருக் கோழிகள எல்லாம் உன் வீட்டு வாசல்ல குமிச்சிட்ட. போ பொழச்சுப் போ. ஆனா எம் பிள்ளய மட்டும் எங்கிட்டயிருந்து பிரிச்சிராத."

கையெடுத்துக் கும்பிட்டா கருவாச்சி. கலங்கி ஒழுகுது கண்ணு அவளுக்கு. முந்தானைய எடுத்துக் கண்ணத் தொடைக்கப்போனா.. அதுல ஒட்டியிருந்த இண்டம் முள்ளு ஒண்ணு கிழிச்சிருச்சு இடது கண்ணுக்குக் கீழ.

ஒரு பேச்சும் பேசாம வெறிச்ச பார்வை வெறிச்ச மேனிக்கு நிக்கிறா திம்சுங்கிற பேயம்மா. கத தெரிஞ்சுபோச்சு இவளுக்கு. என்னைக்கிருந் தாலும் காட்டிக் குடுத்திருவா. கருவறுக்க வேண்டிய கணக்குல இவளையும் சேத்துக்கிர வேண்டியது தான். தீர யோசிச்சு முடிவுபண்ணிட்டா திம்சு.

"என் கத எல்லாமே தெரியுமா உனக்கு?" உடம்பு அசையாம ஒதடு மட்டும் அசையுது அவளுக்கு.

"தெரியும்" கண்ணத் தொடச்சுக்கிட்டே சொல்றா கருவாச்சி.

"ஒனக்குத் தெரியாத ஒரு கதையும் சொல்லட்டுமா?"

பதறிப்போன கருவாச்சி, "என்னா கதையடி ஆத்தா?"ன்னு கேட்டா வெறகுக்கட்டத் தாங்கிக்கிட்டே.

"அழகுசிங்கம் பொண்டாட்டி இப்ப முழுகாம இருக்கா."

வெறகுக் கட்ட விட்டுட்டு ரெண்டு கையையும் நெஞ்சிலடிச்சு "யாத்தே"ன்னு அலறினா கருவாச்சி.

ஓடி உருண்டு, ஊருணியில விழுந்துபோச்சு வெறகுக்கட்டு.

சத்தம் கேட்டுக் கர்ர புர்ர கர்ர புர்ரன்னு கத்திக்கிட்டே பறக்குதுக கரையோரத்து நாரைக. பயத்துல தவ்வி ஓடி ஒரு தண்ணிப்பாம்பு வாயில விழுந்துபோச்சு தவக்கா.

காட்டாறு மாதிரி கட்டுக்கடங்காமத் திரிஞ்ச அழகுசிங்கம், திம்சு வெட்டுன பள்ளத்துல போய் விழுந்ததுல ஆச்சரியமில்ல.

அனாதி காலந்தொட்டுப் பள்ளத்துக்கும் வெள்ளத்துக்குமான ஒப்பந்தம் இயற்கையாப் பாத்து ஏற்படுத்துனதா இல்லையா?

ஒரு கிராமத்துல வெள்ளிந்தியா அலஞ்சு திரியிற வெடலப்பயலுக்கு லட்சியம்னு என்ன பெரிசா இருந்திரப் போகுது?

வெள்ளிக் காசு நெல்லுச் சோறு மல்லிகப் பூவு இந்த மூணும் பத்தாதா?

அழகுசிங்கத்துக்கு இந்த மூணுக்கும் பஞ்ச மில்லாதபடிக்கு ஒரு ஏற்பாடு பண்ணிப் புட்டா திம்சு.

சித்தெறும்பக் கொண்டு போயிச் சீனிப் பொட்டிக்குள்ள ஒளிச்ச மாதிரி அவனுக்கு வசதி உண்டாக்கி வளச்சுப் போட்டுட்டா.

கடந்த ரெண்டு மூணு மாச மாவே அந்தி மசங்க ஆடு மாடு தொழுவடைய சலவைக்காரி வீட்ல சந்திச்சுக்கிட்டாக நல்லத்தாளும் மகனும்.

வெல்லம் போட்டு இடிச்ச எள்ளுத் தொக்குன்னா வீட்ட அடகுவச்சிருவான் பய. அது தெரியும் அவளுக்கு. இடிச்சுக் கொண்டாந்த எள்ளுத் தொக்க உருட்டி உருட்டி உருண்ட புடிச்சு ஊட்டிவிட்டுக்கிட்டே ஒரு நாள் சொன்னா...

"அய்யா அழகுசிங்கம்! எம் புருசன் மகனே! நல்ல கோளாறு நாலு சொல்றேன் கேளப்பா. கருவாச்சி ஒன்னியப் பெத்தெடுத்த வப்பா. நான் ஒன்னியத் தத்தெடுத்தவப்பா. கோட்டையில கொடி கட்டி ஆளப் பெறந்த மகராசன் நீயி குண்டித் துணிக்கு அலையலாமா..? அப்படி ஒன்னிய அனாதிக் காட்ல விட்ருவனா..? விட்டுர மாட்டேன். நீ இருக்க வேண்டிய ஊரு சுண்டெலிக்குக் கூட சோளக்கருது இல்லாத இந்தச் சொக்கத்தேவன்பட்டியா? கெழக்குச் சீமைக்குப் போ.

குப்பணம்பட்டியில ஒம் மாமன் வீட்டுல அதான்டா மகனே என் அண்ணன் வீட்ல போயி இரு. அப்பறம் பாரு ஒம் பொழப்ப. பருத்தி வேட்டியாக் காய்க்கும். பாறாங்கல்லு பூவாப் பூக்கும்."

எள்ளுருண்டைய ஊட்டிவிட்டுக் கிட்டேயிருந்தவ செத்தவடம்...

அவன் வாயில வச்ச வெரல வெளிய எடுக்கல. அவ வச்ச காரியம் பலிச்சிருச்சு கறிச்சுன்னு கடிச்சுப்பிட்டான் பய.

அவ விசுக்குன்னு வெரல எடுத்து ஒதற... யாத்தேன்னு அவன் பதறிப் போனான்.

"ஒண்ணும் ஆகாதுடா மகனே, நீ கடிச்சாலும் வலிக்காது அடிச்சாலும் ஒறைக்காது ஆத்தாளுக்கு. நான் போகச் சொல்ற எடத்துக்குப் போவியா?"

"எங்க போகச் சொன்னாலும் போவேன்"னான் இன்னொரு உருண்டைய முழுங்கிக்கிட்டே. அவனுக்கு ஊட்டிவிட்டே உசுர வாங்குறா எள்ளுருண்டைக்குள்ளயே பொதைக்கிறா.

[You must be registered and logged in to see this link.]
இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு திரைப்படவாகனத்தைப் பயன்படுத்த ஆசைப்படுகிறேன். ஆனாலும் நான் நினைத்தபடி எழுத முடியாது. என்றைக்குத் தொழில் என்று ஆகி விடுகிறதோ அன்று கட்டுப்பாடும் வந்து விடுகிறது. திரைப்படம் என்பது தொழில். அதில் சமரசம் தேவைப்படுகிறது.இதையும் தாண்டி பல விஷயங்கள் நான் சொல்லத்தான் செய்கிறேன். உதாரணமாக, ஜீன்ஸ் படத்தில்,

இருதயம் துடிப்பது நின்றாலும் இரண்டொரு நிமிடம் உயிர் இருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கணம் என்னுயிர் தாங்காது


என்ற பாடலில் இதயம் நின்றால் மட்டும் மரணம் வாராது.மூளை மரணித்தால்தான் மரணம் என்பதை சொல்லி இருக்கிறேன். படிக்காத மக்கள் பாட்டுக்கேட்பதில் விருப்பமுள்ள மக்கள் இந்தக் கருத்தை வேறெப்படித்தெரிந்து கொள்ள முடியும்?பாடல் எங்கு போய்ச் சேருகிறது என்று தெரிந்துகொண்டுதான் அதை அஞ்சல் செய்கிறேன்.அதனால்தான் உங்கள் ரசனைகளுக்கேற்றார்போல் எழுத முடிகிறது.

எங்கு சென்றாலும் அசைவுகளை, வானத்தை, பூமியை, மனிதர்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். இப்படிச் சேர்த்து வைத்த விஷயங்களைத்தேவைப்படும்போது உடைத்துச் செலவளிக்கிறேன். நான் ரசித்ததின் மிச்சம்தான் பாட்டு.

ஒரு சிற்பத்தின் அழகு எதில் இருக்கிறது என்றதற்கு ஒரு சிற்பி 'சிற்பி சிற்பத்தின் அழகு அது நஷ்டப்பட்ட கல்லில் இருக்கிறது' என்றார். சிற்பி வேண்டாத பகுதிகளை விலக்கி கல்லுக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிற்பத்தை வெளிக்கொணர்ந்தார். வாழ்க்கையும் அப்படித்தான். நம்மைச் சுற்றி அவலங்கள், துயரங்கள் , அவநம்பிக்கைகள். நம் வாழ்க்கையிலும் தேவை இல்லாத அவநம்பிக்கை, மூடநம்பிக்கை, அதைரியம் இவற்றை எல்லாம் நீக்கி விட்டால், உள்ளே உள்ள வாழ்க்கை விளங்கும்.

தமிழ் நாட்டில் மிகவும் மலிவாகக் கிடைப்பது உப்பல்ல -உயிர். ஒரு உயிர் மண்ணுக்குச் செலுத்தவேண்டிய கடமையும், அந்த உயிருக்கு ஒரு அரசாங்கமும் சமூகமும் செலுத்தவேண்டிய கடமையும் இன்னும் நிர்ணயம் ஆகவில்லை. தற்கொலை என்பது ஒரு மனிதன் வாழ்க்கைக்குக் காட்டுகிற எதிர்ப்பு. இந்த அவநம்பிக்கை சமூகத்திலிருந்து வருகிறது. எந்த சமூகத்தில் தற்கொலை குறைவாக இருக்கிறதோ அது நல்ல சமூகம். எங்கு அடியோடு இல்லையோ அது நாகரீகமான சமூகம். இந்திராகாந்தி இறந்தபோது அதிகமாக தற்கொலை ¦சைதுகொண்டவர்கள் தமிழர்கள்தாம். இதற்குக் காரணம் என்ன? நாம் தன்னம்பிக்கையை வாழ்க்கையில் மறுதலித்து விட்டோம். தம்ழ்நாட்டிற்கு வெளியே வசிக்கும் தமிழ் பெருமக்களாகிய நீங்கள் சொந்த நம்பிக்கையையும் பெறுங்கள். தாய் மண்ணுக்கு தன்னம்பிக்கை என்ற இரத்ததானத்தையும் நீங்கள் வழங்குங்கள்.

தமிழர் முக்கனி, முத்த்மிழ், மூவேந்தர் என்று பிரித்ததுபோல் எங்கு சென்றாலும் தாமும் பிரிந்துவிடுகிறார்கள்.கருத்து இருந்தால்தானே கருத்துவேறுபாடு? வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே பெருமை. இதை நாமெல்லோரும் உணர வேண்டும்.

தன் உரையை முடித்தபின் தமிழ் நண்பர்களுடன் கவிஞர் உரையாடினார்:

ஏன் தமிழ் கற்கவேண்டும் என்று கேட்கும் எமது பிள்ளைகளுக்கு ஒரு பதில் சொல்லுங்களேன்!

ஆங்கிலம் என்பது இரப்பைக்கான மொழி. தமிழ் என்பது இதயத்துக்கான மொழி. இரப்பைக்காக இருதயம் இல்லாத உடம்பை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? இது தமிழுக்கு மட்டுமல்ல - எல்லத்தாய்மொழிக்கும்தான். தாய்மொழியைக்கற்றபின் உலகுக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலம் நாகரீகத்துக்கான மொழி. தாய்மொழிதான் பண்பாட்டுக்கான மொழி.

ஒரு குழந்தை தாய் மொழியைத் தொலைக்கிறபோது தன் நாட்டையும் பண்பாட்டையும் தொலைத்துவிடுகிறது. தமிழ்ப் பண்பாடுதான் உலகிலேயே பாதுகாப்பான பண்பாடு. எனவே தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களைவிட அயல்நாட்டிலிருக்கும் தமிழர்களிடம் மொழி மற்றும் கலாச்சாரப்பற்று அதிகமாகக் காணப்படுகிறதே... அதைப்பற்றி...?

அது ஏக்கத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் நினைக்கிறேன். எதுவுமே நமக்குக் கிடைக்காதபோதுதானெ அதன் மேலுள்ள ஏக்கம் அதிகமாகிறது.

உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களை சொல்லமுடிகிறது? உதாரணமாக தண்ணீர் தேசத்தில் நீங்கள் சொல்லியிருக்கிற புள்ளிவிபரங்கள் வியக்கவைக்கின்றன.

தண்ணீர் தேசத்துக்காக ஆறு மாதங்கள் உழைத்தேன்.

ரஜினிகாந்துக்கு மட்டும் சிறப்பாக எழுத எதேனும் காரணம் உண்டா?


எல்லோருக்கும் ஒரே மதிரிதான் பேட் விற்கிறேன். டெண்டுல்கர் மட்டும் சத்ம் அடிக்கிறார் என்கிற மாதிரிதான் இதுவும்.

எல்லாக் கவிஞர்களும் திரைப்படப்பாடல்கள் எழுத முடியுமா?

திரைப்பாடல்களின் தேவையே வேறு. அதற்குக் கவிஞனாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை.

- நிலா

#தமிழ் #வைரமுத்து #தமிழ்_மொழி
கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள் லண்டன் தமிழ் மக்களின் அன்பு கருதி லண்டன் தமிழ்ச்சங்கத்துக்கு வருகை தந்து அவர்களுன் முறைசாரா முறையில் கலந்துரையடினார் (informal chat) .அவரின் உரை மற்றும் கலந்துரையாடலின் சாராம்சம்:

கடல் கடந்திருந்தாலும் கூட, இடம் மாறி இருந்தாலும் கூட தமிழ்ப்பெருமக்கள் தடம் மாறிப் போக மாட்டார்கள் என்பதற்கு நீஙகளெல்லாம் உதாரணம். உங்களைப்பார்க்கிறபோது எனக்கு நம்பிக்கை வருகிறது. நீங்களெல்லாம் வைரமுத்து ஒரு தமிழன்,தமிழ் கவிதைக்குப் பிரதிநிதி, தமிழ்க் கலாச்சாரத் தூதுவன் என்றெண்ணி உங்கள் நேரத்தைச் செலவழித்து இங்கு வந்ததற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்கு ஒரு சகோதரர் கேட்டதுபோல் ரஜினியும் ஒருமுறை என்னைக்கேட்டார் : 'நீங்கள் சிகரத்தில் ஏறி விட்டீர்கள்... வானத்தையும் அடைந்தாகிவிட்டது... அதன் பின் என்ன?'. அவருக்குச் சொன்ன அதே பதிலைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்: 'சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. சிகரம் கூர்மையானது. அதில் வசிக்கமுடியாது. அதனால் வானத்தில் ஏறு. வானத்தில் ஏறியபின் அதற்கு மேல் போய்விடாதே. மக்கள் இதயங்களுக்குள் போகவேண்டும். இறங்கி வா.' அதுபோல சிகரத்துக்குப் போனாலும், வானத்துக்குப் போனாலும் நிலாவிலே குடியேறினாலும் கூட தமிழ் மண்ணுக்குத் தமிழ் இதயங்களைத் தேடித்தான் நாங்கள் வருவோமே தவிர தமிழ் மண்ணைவிட்டு விலகிப் போய்விடவே மாட்டோம்.

இங்கு கவிதைபடித்த நண்பர்களின் கவிதைகள் மிகவும் நன்றாக இருந்தன.'வா' என்று சொன்னவுடன் உங்கள் வாசலுக்குத் தமிழ் வரக்கூடிய தூரத்தில் வைத்திருப்பதற்காக என்னுடைய வாழ்த்துக்கள்.

இன்று தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் கவிதைகள்தான். பெண் பார்க்கப்போனால் 'வீணைவாசிக்கத் தெரியுமா' என்று கேட்ட காலம் போய், 'பெண்ணுக்குப் புதுக்கவிதை தெரியுமா' 'பையனுக்கு கவிதை எழுதத்தெரியுமா' என்றுதான் கேட்கிறார்கள். ஆனாலும் எந்தப்பூவில் என்ன தேனோ என்று நான் பார்க்கவிழைவதுண்டு. சமீபத்தில் ஒரு கிராமத்து இளைஞனின் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது:

'இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களாம்
அதனால்தான் திரும்பிப்பார்க்கமுடியவில்லை...


எவ்வளவு நாசூக்கு! கவிதை என்பதென்ன...'உள்ளத்தில் கவிவது... நெஞ்சில் தைப்பது.'சிறந்த உத்திகளால் இங்கு கவிதை படைத்தீர்கள்,மிக்க மகிழ்ச்சி.

இங்கு இருக்கும் எத்தனை பேருக்குப் படைப்பாற்றல் உண்டோ அத்தனை பேரும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று தொடர்ச்சியாக எழுதிப்பழகுங்கள். உங்களுக்குக் கிட்டி இருக்கும் அனுபவம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குக் கிட்டி இருக்காது. கலாச்சார நெருக்கடியைப் பற்றியோ, கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க நீங்கள் கொடுக்கும் விலை பற்றியோ நாங்கள் எழுத முடியாது. இங்கிருக்கும் சிந்தனையாள்ர்களும் எழுத்தாளர்களும்தான் அதைப்பதிவு செய்யமுடியும். பதிவுசெய்வதன் மூலமாக, இந்தப் புதிய சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காணமுடியும் என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும்.

இந்த நாடு புறத்தில் சிறந்த நாடு - சிறந்த உடைகள், சிறந்த நாகரீகம், சிறந்த வாழ்க்கைமுறை, சிறந்த தோற்றம் இவை எல்லாமும் உண்டு. ஆனால் அகத்தில் சிறந்த நாடு இந்தியா என்பதில் எந்தத்தலைமுறையிலும் மாற்றமில்லை - பணபாட்டில் சிறந்த நாடு, உலகுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய நாடு. இருபத்தோராம் நூற்றாண்டு நிறைவதற்குள் ஒரு புதிய கலாச்சாரத்தின் கலப்பு நடக்கத்தான் போகிறது. மேற்கத்திய நாகரீகம் என்கிற புறவடிவத்தையும் இந்தியப்பண்பாடு என்கிற அகவடிவத்தையும் ஒன்று சேர்க்கிறபோதுதான் இந்த பூமியில் ஒரு புதிய கலாச்சாரமும் ஒரு புதிய மனித குலமும் பிறக்கும் என நான் நம்புகிறேன். வெளி நாட்டில் வந்து குடி ஏறும்போது நாகரீகம் என்கிற புறம் மாறலாமே தவிர, பண்பாடு என்கிற அகம் மாறக்கூடாது.

பலபேருக்குத் திரைப்படப்பாட்டு இலக்கியமாகுமா, அவற்றை எழுத வைரமுத்து வேண்டுமா என்று ஒரு கேள்வி இருந்துகொண்டே இருக்கும். இதைப்ப்ற்றி ஆழமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். நம் நாடு கல்வியில் குறைந்த நாடு. கண் வழியாகப்படிப்பது என்பது குறைவாகவும் காது வழியாகக் கேட்பது என்பது மிகுதியாகவும் இருக்கிற நாட்டில் ஒரு கவிஞன் திரைப்படத்தைத் தவிர்த்துவிட்டு எழுத்தாளராக மட்டும் இருந்தால் அவன் ஒரு சமுதாயத்தையே நிராகரிக்கிறான் என்று அர்த்தம்.

திரைப்பாடல்களிலும்கூட சில வளமான கருத்துக்கள் வரத்தான் செய்கின்றன. 'உனக்குள் ஒரு சக்தியிருக்கு.அதை உசுப்பிட வழிபாரு' என்று நம்பிக்கை கொடுக்கும் பாடல்களும் வரத்தான் செய்கின்றன.

'எரிமலை எப்படி பொறுக்கும்
உன் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?'

'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்
உலகம் விடியும்'


என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்து பிறந்தபோது தமிழகத்தில் ஒரு மெல்லிய மின்சாரம் பாய்ந்தது. இளைஞர் கூட்டம் திரும்பிப்பார்த்தது. இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு திரைப்படவாகனத்தைப் பயன்படுத்த ஆசைப்படுகிறேன்.

#தமிழ் #வைரமுத்து #தமிழ்_மொழி

Back to top