புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
44 Posts - 43%
heezulia
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
prajai
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
kargan86
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
jairam
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 5%
prajai
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for பெண்கள்

Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் DI7F55L

அமெரிக்காவில், இனி பெண்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே மருந்துக் கடைகளில் கருத்தடை மாத்திரைகளைப் பெறலாம்.

சமீபத்தில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கருத்தடை மருந்தான ‘ஓபில்’லை (OPill) அனைத்து வயதுப் பெண்களும் உட்கொள்ளலாம் என அறிவித்தது.

2024-ம் ஆண்டின் துவக்கத்தில், ஓபில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட 100 நாடுகளில் நாடுகளில் கருத்தடை மாத்திரைகள் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இந்தியா, சீனா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளன.

கருத்தடை மாத்திரைகள் கொடுத்த சுதந்திரம்


முன்னர், கருத்தடை மாத்திரைகள் குறித்து பெண்கள், குறிப்பாக பதின்பருவப் பெண்களிடையே கூச்சம், தயக்கம், பயம் போன்ற உணர்வுகள் இருந்தன என்றும், இந்த அறிவிப்புக்குப்பின் அவை விலகிவிடும் என்றும் அமெரிக்காவின் பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்துடன், மகப்பேறு தொடர்பான சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களையவும் இந்த அறிவிப்பு உதவும் என்கின்றனர்.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மருத்துவ வரலாற்றில் ஆயிரக்கணக்கான மருந்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 1950-ல் கருத்தடை மருந்துகளின் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மருந்துகள் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு மகப்பேறு சார்ந்த சுதந்திரத்தையும் அளித்தது.

இந்தியாவில் கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்


மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 1952-ம் ஆண்டில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய உலகின் முதல் நாடு இந்தியா.

இத்திட்டம் துவங்கப்பட்டப் பிறகு, அது பெரிய அளவில் விரிவடைந்தது. இதன் கீழ், கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் அரசாங்கத்தால் சுகாதார மையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல் ஆஷா ஊழியர்களும் அவற்றை மக்களுக்கு வழங்குகிறார்கள்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் எஸ்.என்.பாசு கூறுகையில், “இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கருத்தடை மருந்துகள் ஒரு சிறந்த முறையாகும். இம்மருந்துகளைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டால், அவை 100% பலனளிக்கின்றன. இம்மருந்துகள், ஒரு குழந்தைக்குப் பிறகு இன்னொரு குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுதந்திரத்தையும் தேர்வையும் பெண்களுக்குக் கொடுத்தது,” என்கிறார்.

கருத்தடை மாத்திரைகளின் வகைகள் என்ன?


கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் கொண்டிருக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் ‘COC’ (Combined oral contraceptive) என்று அழைக்கப்படுகின்றன.

ப்ரோஜெஸ்ட்டிரோனை மட்டுமே கொண்டிருக்கும் மாத்திரைகள் ‘POP’ (Progestogen-only pill) என்று அழைக்கப்படுகின்றன.

தில்லியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரதிமா மிட்டல், முன்பு வாய்வழி கருத்தடைகளில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருந்தது, என்கிறார். அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் குறைந்த அளவிலேயே உள்ளது, என்கிறார்.

மும்பையில் உள்ள மகப்பேறு மருத்துவரான சுசித்ரா டெல்வி, பெண்களின் உடலில் இயற்கயிலேயே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இருப்பதாகவும், இவை பிறப்புக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும், இவை உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்.

கருத்தடை மாத்திரைகள் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன?


புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன

இந்த மூன்று மருத்துவர்களின் கருத்துப்படியும், கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆனாலும், உடலில் சில விளைவுகள் இருக்கவே செய்யும்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகள் ரத்தம் உறைந்துபோகும் சிக்கல்கள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, என்றும் கூறுகிறார்கள்.

இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் முன் ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், புற்றுநோய் போன்ற எந்த நோய்களும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தக் கருத்தடை மருந்துகளை உட்கொள்வது பெண்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அவற்றில் முக்கியமானவை:

* உடலில் நீர் கோர்த்தல்
* உடல் கனப்பது போன்ற உணர்வு
* முகப்பரு
* மார்பகப் பகுதியில் பாரம்
* மனநிலை மாற்றங்கள் (Mood swings)

நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டால் என்னவாகும்?


கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதனால் பெரிய பக்கவிளைவுகள் இல்லை என்றும் மருத்துவர் பிரதிமா மிட்டல் கூறுகிறார்.

பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்புகிறார் மருத்துவர் சுசித்ரா டெல்வி. “ஒரு பெண் புகைபிடிக்கவும் செய்து, ஈஸ்ட்ரோஜன் இருக்கும் கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டால், அது இரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும். அதே சமயம் மருந்தில் புரோஜெஸ்ட்ரோன் இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தாது, என்கிறார்.

அதேபோல், ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலைக்கும் ஏற்ப, இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் பயன்கள் அமைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கருத்தடை மாத்திரைகளின் பயன்கள் என்ன?


* எளிமையான கருத்தடை முறை
* குடும்ப திட்டமிடலுக்கு உதவுகிறது
* மாதவிடாயை சீராக்க உதவும்
* மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது
* கருப்பை புற்றுநோயின் ஆபத்து குறைகிறது

கருத்தடை மாத்திரைகள் தொடர்பான தவறான நம்பிக்கைகள்


மருத்துவர் பிரதிமா மிட்டல், இந்தக் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற தவறான கருத்து உள்ளது, எனவும், ஆனால் அது தவறான கருத்து எனவும் கூறுகிறார்.

மருத்துவர் சுசித்ரா டெல்வி, இந்த மருந்துகளை தினமும் எடுத்துக் கொண்டால், இந்த ஹார்மோன்கள் உடலில் தேங்கும் என்ற கருத்து உள்ளது, ஆனால் அப்படியில்லை, மாறாக அவை கல்லீரல் வழியாக உடலில் இருந்து வெளியேறுகின்றன, என்கிறார்.

பாதுகாப்பு இல்லாத உடலுறவில் ஈடுபட்டால் 120 மணி நேரத்திற்குள் ஐபில் ‘i-Pill’ மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், ஐபில்லில் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் பயன்படுத்தப்படுகிறது, அதன் அளவும் அதிகமாக உள்ளது.

கருத்தடை என்பது பெண்களுக்கு மட்டுமானதா?


கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சுதந்திரம் அளித்தன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதன் பொறுப்பும் பெண்களில் மீது விழ ஆரம்பித்தது. அது இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆண்களுக்குக் கருத்தடை முறைகளே இல்லை என்பதல்ல.

அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளுடன், ஆண்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படுகின்றன.

ஆனால், தரவுகளின்படி, ஆணுறைப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு ஆணுறை மற்றும் ‘வாஸெக்டமி’ எனப்படும் விதை நாள அறுவை ஆகிய கருத்தடை முறைகள் உள்ளன. ஆனால் இவை தொடர்பாக சில கடுக்கதைகள் உள்ளன.

ஆணுறை பயன்படுத்துவது பாலியல் இன்பத்தைக் குறைக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் வாஸெக்டமி செய்துகொண்டால் உடலில் பலவீனம் ஏற்படும் என்ற பயமும் உள்ளது.

இது பெண்களுக்கு எதிரான விளைவை ஏற்படுத்துகிறது.

இந்தக் கட்டுக்கதைகளை களைய அரசு சார்பில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின்மூலம் ஆண்களின் சிந்தனையில் மாற்றம் இருந்தாலும், அதன் சதவீதம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிச்சொற்கள்
#கருத்தடை
#குடும்பக்_கட்டுப்பாடு
#பாலியல்
#ஆணுறை
#பெண்கள்



பிபிசி
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Yazidi-women

கடந்த 2014ஆம் ஆண்டு, இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு (IS) குழு ஆயிரக்கணக்கான யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தது.

அவர்களது சக யாசிதிகள் தாமதிக்காமல் மீட்பு முயற்சியைத் தொடங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் பணி இன்னும் முடிவடையவில்லை.

நவம்பர் 2015இல், பஹாரும் அவரது மூன்று குழந்தைகளும் ஐந்தாவது முறையாக விற்கப்பட்டனர்.

வடக்கு இராக்கின் சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்குள் 18 மாதங்களுக்கு முன்பு நுழைந்த ஐ.எஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட பல யாசிதி பெண்களில் பஹாரும் ஒருவர். ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக இராக்கில் வாழும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த யாசிதிகள் ஐ.எஸ் போராளிகளால் ‘காஃபிர்’களாகக் (இஸ்லாத்துக்கு எதிரானவர்களாக) கருதப்பட்டனர்.

அவரது கணவர் மற்றும் மூத்த மகன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் சுடப்பட்டு கூட்டுப்புதைகுழியில் புதைக்கப்பட்டதாக பஹார் நம்புகிறார்.

பஹாரும் அவரது மற்ற மூன்று குழந்தைகளும் எப்படி தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள் என்று நினைத்து அழுதுகொண்டே ஓர் அறையில் வரிசையாக நின்றதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

அப்போதுதான் உண்மையான கொடுங்கனவு தொடங்கியது. பஹார் தன்னை விலைகொடுத்து வாங்கிய ஐ.எஸ் போராளிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது.

"அவர்கள் விரும்பும்போது நான் அவர்களுடைய மனைவிகளைப் போல் நடிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் என்னை அடிப்பார்கள்," என்கிறார். அவரது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் தாக்கப்பட்டனர். அவரது மகள்களில் ஒருவரின் முகத்தில் ரைஃபிள் துப்பாக்கியின் கைப்பிடியால் அடிக்கப்பட்டதில், அவரது முகம் படுகாயமடைந்தது.

பஹாரின் நான்காவது ‘உரிமையாளர்’ அபு கட்டாப் என்று அழைக்கப்படும் துனிசிய தேசத்தைச் சேர்ந்தவர். "நாங்கள் அவரது வீட்டில் தங்கியிருந்தோம், ஆனால் அவர் வேறு இரண்டு ஐ.எஸ் தளங்களில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்ய என்னைக் கடனாகக் கொடுத்தார். இந்த எல்லா இடங்களிலும், நான் வேலைக்குச் செல்வேன், சுத்தம் செய்வேன், கற்பழிக்கப்படுவேன்,” என்கிறார் பஹார்.

“எல்லா நேரங்களிலும் விமானத் தாக்குதல்கள் நடந்தன. ஐ.எஸ் போராளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள், ஆயுதங்களைப் கைமாற்றிக்கொள்வார்கள், அல்லது குண்டுவீச்சிலிருந்து மறைந்திருப்பார்கள். அந்தக் குழப்பம் ஒரு கொடுங்கனவைவிட மோசமானது."

ஒரு நாள், பஹாரும் அவரது குழந்தைகளும் அபு கத்தாபின் வீட்டில் இருந்தபோது, கறுப்புக் கண்ணாடிகள் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. அதன் ஓட்டுநர் பல ஐ.எஸ் போராளிகளைப் போலவே நீண்ட தாடியுடன் கறுப்பு உடை அணிந்திருந்தார்.

தானும் தன் குழந்தைகளும் மீண்டும் விற்கப்படுவதை பஹார் உணர்ந்தார். இதற்கு மேல் தாங்க முடியாத பஹர், தன்னைக் கொன்றுவிடுமாறு அந்த நபரிடம் கத்தினார். ஆனால் அடுத்து நடந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

அவர்கள் காரை ஓட்டிச் செல்லும்போது, "உன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்" என்று டிரைவர் கூறினார். பஹாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அல்லது அவர் அந்த நபரை நம்பவில்லை. அவர் வெறி பிடித்தவராக மாறினார்.

அந்த நபர் காரை நிறுத்திவிட்டு யாரையோ போனில் அழைத்தார். பின்னர் அவர் தொலைபேசியை பஹாரிடம் கொடுத்தார்.

அதில் அபு ஷுஜாவின் குரல் கேட்டது. ஐ.எஸ் குழுக்களிடமிருந்து பல யாசிதி பெண்கள், குழந்தைகளை மீட்க ஏற்பாடு செய்தவர் அபு ஷுஜா. தானும் தன் குழந்தைகளும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக டிரைவர் தன்னை விலைக்கு வாங்கியிருப்பதை பஹார் அப்போது உணர்ந்தார்.

பஹார், சிரியாவில் ரக்காவிற்கு அருகில் உள்ள ஒரு கட்டுமான தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். கார் ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டு, ஒருவர் வருவார் என்றும், ‘சயீத்’ என்ற குறியீட்டு வார்த்தையைச் சொல்லுமாறும் கூறினார். அவர் அந்த நபருடன் செல்ல வேண்டும்.

யாரோ ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த வார்த்தையை உச்சரித்தார். அவர் பஹாரையும் அவரது மூன்று குழந்தைகளையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏறச் சொல்லிவிட்டு, "நன்றாகக் கேளுங்கள், நாம் ஐ.எஸ் பிராந்தியத்தில் இருக்கிறோம், சோதனைச் சாவடிகள் உள்ளன, அவர்கள் உங்களிடம் ஏதாவது கேட்டால், ஒரு வார்த்தையும் சொல்லாதீர்கள். அவர்கள் உங்கள் யாசிதி உச்சரிப்பை அடையாளம் கண்டுவிடுவார்கள்," என்றார்.

Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் Isis

இராக்கின் யாசிதிகளுக்கு என்ன ஆனது?


அந்த நபர் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பஹார் கூறுகிறார்.

"அவர்கள் அங்கு எங்களை மிகவும் அருமையாக நடத்தினர். நாங்கள் குளித்தோம், அவர்கள் எங்களுக்கு உணவு மற்றும் வலி நிவாரணி மருந்துகளை வழங்கினர். மேலும் 'நீங்கள் இப்போது பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்' என்று எங்களிடம் சொன்னார்கள்."

மற்றொரு நபர் பஹார் மற்றும் அவரது குழந்தைகளை புகைப்படம் எடுத்து அபு ஷுஜாவுக்கு அனுப்பினார்.

மறுநாள் அதிகாலை 3 மணியளவில், பஹாரையும் அவரது குடும்பத்தினரையும் எழுப்பி, மீண்டும் பயணம் செய்யத் தயாராகும்படி சொன்னார்கள். யாருடைய வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனரோ அந்த நபர் தனது தாயின் அடையாள அட்டையை பஹாரிடம் கொடுத்து, யாரேனும் நிறுத்திக் கேட்டால், தன் மகனை டாக்டரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்ல வேண்டும் என்றார். "நாங்கள் பல ஐ.எஸ் சோதனைச் சாவடிகள் வழியாகச் சென்றோம், ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவில்லை."

இறுதியாக அவர்கள் சிரியா-இராக் எல்லையில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தனர், பஹாரை அபு ஷுஜா மற்றும் அவரது சகோதரர்கள் சந்தித்தனர். "நான் மூர்ச்சையாகும் நிலையில் இருந்தேன். "அதற்குப் பிறகு நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை," என்று அவர் கூறுகிறார்.

சின்ஜாரை ஐ.எஸ் கைப்பற்றிய பிறகு 6,400க்கும் மேற்பட்ட யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிமைகளாக விற்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேலும் 5,000 யாசிதிகள் படுகொலை செய்யப்பட்டனர், இதை ஐ.நா. ஓர் இனப்படுகொலை எனக் கூறுகிறது.

கடந்த 2017ஆம் ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, அரண்டு போயிருந்த யாசிதி சமூகம் மீள முயன்று வருகிறது.

ரேச்சல் ரைட் அறிக்கையின்படி, இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யாசிதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் முகாம்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் 26cfc0e0-20d0-11ee-941e-23d1e9ab75fa

ஆன்லைனில் விற்கப்படும் பெண்கள்


பஹாரின் மீட்புக்கு ஏற்பாடு செய்த அபு ஷுஜா மட்டும், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடவில்லை. ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே வாழ்ந்த தொழிலதிபர் பஹ்சாத் ஃபஹ்ரான், யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதற்காகவும், ஐ.எஸ் போராளிகளின் குற்றங்களைப் பதிவு செய்யவும் ‘கின்யாத்’ என்ற குழுவை அமைத்தார்.

கடத்தப்பட்ட யாசிதி பெண்களையும் குழந்தைகளையும் ஐ.எஸ் போராளிகள் ஆன்லைனில் குறிப்பாக டெலிகிராமில் வாங்கி விற்பதாக கின்யாட்டுக்கு தகவல் கிடைத்தது. "இந்த ஆன்லைன் குழுக்களில் கடன் வாங்கிய பெயர்கள் அல்லது ஐ.எஸ் போராளிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நாங்கள் ஊடுருவுவோம்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

இராக்கின் குர்திஷ் பகுதியில் உள்ள தனது அலுவலக சுவரில், அவர் பார்த்த டெலிகிராம் அரட்டைகளின் அச்சிடப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை அவர் சுட்டிக்காட்டினார். அவற்றில் ஆங்கிலத்தில், "12 வயதான பெண், கன்னி இல்லை, ஆனால் அழகானவள்" என்று ஒரு விளம்பரம் குறிப்பிட்து. அவர் $13,000 (£10,000) செலவு செய்து சிரியாவில் ரக்காவில் இருந்தார். அவர் ஒரு சோபாவில் ஒரு மாடல் அழகியைப் போல் சாய்ந்து அமர்ந்திருந்த சிறுமியின் படத்தைக் காட்டினார்.

Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் 7b081e00-20d0-11ee-941e-23d1e9ab75fa

மீட்பு முயற்சிகள் எப்படிப்பட்டவை?


இந்த டெலிகிராம் விவாதங்கள் கடத்தப்பட்ட யாசிதிகள் எங்கிருந்தார்கள் என்ற விவரங்களைத் தரும் என்று பஹ்சாத் கூறுகிறார். "நாங்கள் அங்கு வசிக்கும் மக்களைத் தொடர்புகொண்டு, இந்தக் குழந்தையைத் தேடச் சொல்லுவோம்."

சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியே அனுமதிக்கப்பட்டதால் அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது. “கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்ப வேண்டும், அப்போதுதான் சிறுவர்களை எதிர்கொள்ளும்போது, நாங்கள் உண்மையானவர்கள் என்பதற்கான ஆதாரத்தை அவர்களுக்கு வழங்க முடியும்," என்கிறார் பஹ்சாத்.

"நாங்கள் குடும்பங்களையும், குழந்தைகளுடன் உள்ள பெண்களையும் மீட்கும்போது, அவர்களைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவர்கள் தனியாக இருக்கும்போது எங்களுக்குத் தெரியப்படுத்தவும் தொடர் குறியீடுகள் அல்லது சமிக்ஞைகளை நாங்கள் வைத்திருக்க வேண்டியிருந்தது,” என்கிறார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தச் செயல்முறை வேறுபட்டது. ஆனால் ஒவ்வொன்றும் ஐ.எஸ் குழு சோதனைச் சாவடிகள் மூலம் பணம் மற்றும் போலி ஆவணங்களை உள்ளடக்கியது.

யாசிதிகள் ஐ.எஸ் பகுதிகளுக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது, எனவே சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட மதுவை மாற்றுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் கடத்தல்காரர்களின் மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

"இவர்கள் எல்லாவற்றையும் பணத்திற்காகச் செய்தார்கள். அதுதான் அவர்களின் ஒரே நோக்கம். இந்தப் பெண்களை திரும்ப வாங்க பலருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டது," என்கிறார் பஹ்சாத்.

சுமார் 6,417 யாசிதிகள் சிறைபிடிக்கப்பட்டனர், ஆனால் 3,568 பேர் தப்பியோடிவிட்டனர் அல்லது மீட்கப்பட்டனர் என்று கின்யாட் கூறுகிறது. பஹ்சாத் தானே 55 பேரைக் காப்பாற்றினார், ஆனால் ஐ.நா ஆதரவுடைய இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்படி (IOM), சுமார் 2,700 யாசிதி பெண்கள் மற்றும் குழந்தைகளை இன்னும் காணவில்லை. அவர்களில் பலர் இன்னும் கடத்தல்காரர்களுடன் இருக்கலாம், என்கிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மேலும் மேலும் சிக்கலாகிவிட்டது என்று பஹ்சாத் கூறுகிறார். ஐ.எஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு, போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். சிலர் துருக்கி, இராக், மற்றும் சிரியாவில் உள்ளனர், சிலர் ஐரோப்பாவிற்கும் சென்றனர்.

கடத்தப்பட்டபோது ஐந்து அல்லது ஆறு வயதுடைய யாசிதி குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தங்கள் மொழியை அல்லது அவர்கள் யார் என்பதை முற்றிலும் மறந்துவிட்டார்கள். "அவர்களுக்கு யாசிதி என்பது பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்கள் குடும்பத்தையும்கூட மறந்துவிட்டார்கள்," என்று பஹ்சாத் கூறுகிறார்.

'நடைபிணமாக வாழ்கிறேன்'


யாசிதி மக்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

"யாசிதிகள் பல நூற்றாண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். முஸ்லீம் மக்கள் அவர்கள் மதம் மாறவேண்டும் அல்லது இறக்க வேண்டும் என்று இன்னும் நம்புகிறார்கள்.

அதனால்தான் ஐ.எஸ் என்பது அதன் முடிவு இல்லை என்று நாங்கள் நம்புகிறோம், அது யாசிதிகளுக்கு ஒரு பெரிய பயம்," என்கிறார் ஹைதர் எலியாஸ். இவர் மிகப்பெரிய யாசிதி வக்கீல் அமைப்பான யஸ்தாவின் தலைவர்.

சுமார் 300,000 யாசிதிகள் சின்ஜாரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கிட்டத்தட்ட பாதிப் பேர் - பஹார் போன்றவர்கள் - இன்னும் இராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் கூடார முகாம்களில் வாழ்கின்றனர். சின்ஜார் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அவர்களால் திரும்பிச் செல்ல முடியாது.

ஏனெனில் அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. மேலும் இராக்/சிரியா எல்லையில் அதன் மூலோபாய நிலை அதை ஆபத்தான பிரதேசமாக மாற்றுகிறது. ஐ.எஸ் அமைப்புடன் சண்டையிட வந்த போராளிகள் இப்போது மேலாதிக்கத்திற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள்.

எந்த நேரத்திலும் இன்னொரு படுகொலைக்கு ஆளாக நேரிடும் என்று சமூகம் அச்சமடைந்துள்ளதாகவும், தற்போது பல யாசிதிகள் இடம்பெயர்ந்து வருவதாகவும் எலியாஸ் கூறுகிறார். "அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிகவும் முக்கியமானது. ஆனால், இப்போது அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை."

பஹாரின் சுதந்திரத்தை வாங்குவதற்கு சுமார் £16,000 ($20,000) செலவானது. அவருக்கு இப்போது 40 வயதாகிறது. ஆனால் அதைவிட வயதானவராகத் தெரிகிறார். அவரது தலைமுடி இப்போது பெரும்பாலும் நரைத்திருக்கிறது.

அவர் மீட்கப்பட்டதில் இருந்து எட்டு ஆண்டுகளாக முகாமில் வாழ்கிறார். கூடாரத்தின் தரையில் மெல்லிய மெத்தையில் அமர்ந்து, காணாமல் போன தன் குடும்ப உறுப்பினர்களின் படங்களுடன் ஒரு பிளாஸ்டிக் கோப்புறையை எடுக்கிறார்.

தன் கணவனுக்கும் மூத்த மகனுக்கும் என்ன நடந்தது என்று தெரியாமலும், பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாலும் ஏற்பட்ட மன உளைச்சலைக் கையாள்வது, பஹாரை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் மோசமாக்கியுள்ளது.

அவருடைய மற்ற குழந்தைகள் இன்னும் அவருடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், எல்லா நேரத்திலும் கவலையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"என் மகளுக்கு அவர்கள் அடித்த அடிகளால் காயங்கள் உள்ளன. நான் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில், நான் இப்போது ஒரு நடைபிணமாக வாழ்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

குறிச்சொற்கள் #ஐ.எஸ் #யாசிதி #பெண்கள் #இஸ்லாம் #பயங்கரவாதம்

பிபிசி
Topics tagged under பெண்கள் on ஈகரை தமிழ் களஞ்சியம் FQVoMnE

மகளிர் தினம் உருவானது எப்படி

பிரெஞ்சு புரட்சியின்போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர்.

இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.  இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். கோபன்ஹேகனில் 1910ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை அவர் கூறினார். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் வெற்றியாய் உதித்ததே சர்வதேச பெண்கள் தினம்.  எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பலவித மனம் மற்றும் பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. அந்த கதம்ப மாலையை இணைக்கும் நூலாக தியாகம் உள்ளது. தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் தியாகம் ஒன்றுதான்.

பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் இந்திய பெண்கள் வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் வகையில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை முதல் இந்திய பெண் மருத்துவர்-ஆனந்தி கோபால் ஜோஷி, முதல் பெண் தலைவர்-அன்னி பெசன்ட், முதல்  அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண்-ஸ்டெபி டிசோசா, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்-கமல்ஜீத் சந்து, பாரத ரத்னாவைப் பெற்ற முதல் இந்திய பெண், முதல் இந்திய பெண் பிரதமர் -இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்-மதர் தெரசா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்-கல்பனா சாவ்லா, பாரத் ரத்னாவைப் பெற்ற முதல் பெண் பாடகி-எம் எஸ் சுப்புலெட்சுமி, இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர்-பிரதிபா பாட்டீல் என இந்தியாவில் பெண்கள் பலர் பெருமை சேர்த்துள்ளனர்.


  குறிச்சொற்கள் #மகளிர் #மகளிர்_தினம் #மார்ச்8 #பெண்கள்

Back to top