புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
74 Posts - 44%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
10 Posts - 5%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
8 Posts - 4%
Jenila
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் 1


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:04 am

First topic message reminder :

1 என்னுடைய பசி இந்தியாவின் பசி


காந்திஜி வங்காளத்திலுள்ள சோதேபூரில் தங்கியிருந்தார். பலதரப்பட்ட மக்கள் இடைவிடாது அங்கு வந்து சந்தித்து அடிகளின் இயக்கத்திற்கு நன்கொடை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் விடுதலை இயக்கத்தைப் பற்றியும், சிற்சில சமயம் தீண்டாமை ஒழிப்பு சம்பந்தமாகவும் மற்றும் சில நேரங்களில் கதர்ப்பிரச்சாரம் சம்பந்தமாகவும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அன்று கல்கத்தாவிலுள்ள பாகீரத்கனோடியா குடும்பத்திலுள்ள சில பெண்மணிகள் அவரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் காந்திஜிக்கு வணக்கம் செலுத்தினார்கள். பின், கொஞ்சம் பணத்தை கையில் எடுத்து அவருடைய காலடியில் சமர்ப்பித்தார்கள். காந்திஜி அப்பணத்தின் மேல் தன் பார்வையைச் செலுத்தி விட்டு ”இவ்வளவுதானா” என்றார்.

அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூகத்தொண்டர் திரு. சீதாராம் ஸக்கஸேரியா, அந்தச் சமயம் அங்கேயே பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். காந்திஜி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ”பாபு, நன்றாகப் பாருங்களேன். இவ்வளவு ரூபாய் குறைவாகவா தோன்றுகிறது? உங்களுடைய பசி அடங்குவதில்லையே!” எனக்கூறினார்.

உண்மையிலேயே அதில் போதுமான பணம் இருந்தது. ஆனால் காந்திஜி உடனே ‘நீ சரியாகவே சொன்னாய். என்னுடைய பசி எப்படி அடங்கும்? எனது பசி இந்தியாவின் பசி ஆயிற்றே” என்று பெருமிதத்துடன் கூறினார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:08 am

21. பேதி எடுக்கத் தேவையில்லை


பண்டிட் தோதாராம் சனாட்ய, காந்தி அடிகளுடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவருடைய மனைவி திருமதி கங்கா பஹனும் அவரோடு தங்கியிருந்தார். ஒருநாள் அவருக்கு உடம்பு சௌகரியமில்லாமல் போய்விட்டது. வழக்கம்போல் காந்தியடிகள் அவரை கவனித்து சிகிச்சை செய்து வந்தார்.

அன்று திங்கட்கிழமை. காந்திஜி மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். கங்கா பஹனைப் பார்க்கச் சென்றார். ஏதோ அவசர வேலை ஏற்பட்டு விட்டதால் உடனே திரும்ப வேண்டியதாயிற்று. மருந்துகள் பற்றியோ, என்ன சாப்பிட வேண்டும் என்றோ அறிவிக்கவும் நேரமில்லை…

இரவு சுமார் இரண்டு மணிக்கு அவர் தூக்கம் கலைந்தது. காங்கா பஹனுக்குத்தாம் இன்று மருந்து அறிக்கைகொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் சிறு துண்டுக் காகித்தத்தில் பென்சிலால் எழுதினார்- பேதி எடுக்கத்தேவையில்லை. இன்றும் பால் கொடுக்க விரும்புகிறேன். ஆரஞ்சு, திராஷை ரசத்தைக் குடிக்கவும். எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ, அவ்வளவு குடிக்கலாம். தொட்டி ஸ்நானம் செய்து பனிக்கட்டியால் உடம்பை நன்றாகத் தேய்த்துகொள்வாய் சோடாவும் உப்புத் தண்ணீரும் சாப்பிடலாம். இன்றும் வயிற்றைச் சுற்றி மண்பற்றை இறுக்கி கட்டிக்கொள். இப்போடே கொய்னா மாத்திரைகள் நான்கு, எலுமிச்சைச் சாறுடன் சோடாவுடனும் சேர்த்துச் சாப்பிடவும். நேரம் இரவு இரண்டு அடித்து ஐந்து நிமிடம்.’

அந்தக் காகித்த்தை ஆசிரமத்திலுள்ள ஒரு சகோதரியிடம் கொடுத்து உடனே தோதாராம் சனாட்ய அவர்களுக்கு கொடுத்தனுப்பினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:09 am

22. இராமனுடைய பெயரைச் சொல்லி கொண்டே இறப்பேன்


டில்லியில் நடந்த பயங்கரச் சம்பவத்தை கேட்கும் போது காந்திஜி மிகுந்த கலவரமடைந்தார். யாரை அவர் மிகுந்த அன்பாகவும் நெருங்கிய நணபாராகவும் கொண்டு மதித்தாரோ அவர்களிடமும் அவருக்கு அன்று அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திருக்கும் அகதிகளின் பிரச்னைகள், அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. 1948ம் வருடம் ஜனவரி மாதம் 29ம் தேதி இரவு அவர் மிகவும் களைப்புமேலிட்டுச் சோர்வடைந்தார். காந்திஜியின் தலையில் சிறிது எண்ணெய் தேய்த்துத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள் மனு. தேய்த்துக் கொண்டிருக்கும்போத் காந்திஜி ‘என் தலை சுற்றுகிறது. நான் எங்கு நிற்கிறேன், என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. இன்றைய குழப்பச் சூழ்நிலையில் நான் எப்படி அமைதியை நிலை நாட்டப்போகிறேன்.?’ என்று வருத்தத்துடன் சொன்னார்.

அதன் பின் துக்கம் தோய்ந்தத குரலில் உருதுக் கவிடையின் ஒரு அடியைப் பாடினார். ‘மிக்க பூரிப்புடன் கிளம்பும் நீர்குமிபோன்றது இவ்வுலக வாழ்வு’ என்பது அதன் கருத்து.

இப்பாட்டின் கருத்து இவ்வளவு சீக்கிரத்தில் அவருடைய வாழ்க்கையிலேயே பலிக்கும் என அப்பொழுது யார் அறிவார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருடைய இளைய மகன் தேவதாஸ் காந்தி அங்கு வந்தார். பேசிகொண்டிருக்கும்போதே காந்திஜிக்கு பலமான இருமல் வந்தது. மனு பென்சிலின் மருந்தை சாப்பிடுமாறு வற்புறுத்தினாள். ஆனால் அவரா இதற்கெல்லாம் கட்டுப்படுவார்? ராம நாமத்தை உச்சரிப்பதில் அவருக்கு அபார நம்பிக்கை. கருணை தோய்ந்த குரலில் காந்தியடிகள் மனுவிடம் கீழ்கண்டவாறு கூறினார். என்னுடைய இந்த வேள்வியில் இவளு ஜனங்களுக்கிடையில் நீ மட்டுமே தனியாக நின்று என் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாயே, என்ன்னுடைய தாயாக பாவித்து நான் உனக்க்கு கற்பித்திருக்கும் கல்வி வேறு யாருக்குமே கற்பித்ததில்லை. ஒரு வேளை நான் வியாதியால் பீடிக்கப்பட்ட்உஓ அல்லது சிறு கொப்பளத்தால் அவதிப்பட்டோ இறந்தால் ‘இந்த மகாத்மா ஓர் அகம்பாவி, இத மாகத்மா ஓர் ஏமாற்றுக்காரன், ன்று நீ உலகத்தாருக்குத் திரம்பத் திரும்பச் சொல்லவேண்டும். நீ இம்மாதிரி சொல்வதால் மக்கள் உன்னைத் தூற்றுவார்கள், கொல்லவும் முயற்சிக்கலாம். அதனால் பரவாயில்லை. அப்போது நான் எங்கிருந்தாலும் என்னுடைய ஆத்மாவிற்கு அமைதி உண்டாகும்.

ஒரு வாரத்திற்கு முன் எப்படி வெடிகுண்டு வீசி என்னைக் கொல்ல முயற்சிக்கப்பட்டதோ, அதே மாதிரி யாராவது என்னை துப்பாக்கியால் சுட, நான் வீரத்துடன் அந்தக் குண்டை மார்பில் தாங்கியும், வெறுப்பு அல்லது அச்சத்தால் சற்றும் பெருமூச்சுகூட விடாமலும், ஆனால் அதே சமயத்தில் ராம நாமத்தையே உச்சரித்துக் கொண்டே இறப்பேனேயானால் அப்பொழுது தான் நீ உலகத்தாருக்கு நான் உண்மையான மகாத்மாவாக இருந்தேன் என்று எடுத்துரைக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:09 am

23.எப்படி என் கற்பனை?


ஒரு சமயம் ஹிந்துஸ்தானி பிரசார சபைக்கூட்டம் காந்திஜியின் குடிசையிலேயே நடைபெற்றது. அங்கு மேசை நாற்காலிகள் இல்லை. சுத்தமான மண் தரையில் மீது பாயை விரித்து அதன் மேல் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே காந்திஜி தன் இடத்தை விட்டு எழுந்தார்; ஒரு நாற்காலியை கொண்டு வரச் சொன்னார். அவர் தாமே எழுந்து சென்று ஒரு சிறிய முக்காலியையும் கொண்டு வந்தார். அதன்மேல் மண்ணால் ஒரு சிறு மேடை அமைத்தார். இந்து வேடிக்கையை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இதன் பொருள் யார்க்கும் விளங்கவில்லை. ”பாபுஜி, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என ஒருவர் கேட்டார்.

காந்திஜி சிரித்தார், ”மௌலானா சாஹிப் வரபோகிறாரல்லவா! அவருக்கு தரையின் மீது உட்காரும் பழக்கம் கிடையாது. அவருக்குத்தான் இந்த ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறேன்” என்றார் காந்திஜி.

மறுபடியும் அதே நபர் காந்திஜியிடம், ”ஆமாம், இந்த மண் குதிர் எதற்காக?” என்றார்.

வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே காந்திஜி, ஓ! இதைப் பற்றியா கேட்கிறாய்? இது தான் அவர் எச்சில் உமிழ்வதற்கான பாத்திரம். ஏன், எப்படி இருக்கிறது என் கற்பனை? என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:09 am

24. உன்னுடைய கண்கள் ஒன்றும் கெட்டுப் போகவில்லையே?


ஒரு சமயம் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் காந்திஜிக்கு தேகப்பயிற்சி, விளையாட்டு, நாடகம் முதலியவைகளைச் செய்து காண்பிக்க விரும்பினார். ‘போல் ஜம்ப்’(Pole Jump) விளையாடி காண்பித்தனர். மார்தண்ட் உபாத்தியாயா அவனையோத்த வயதுள்ள மாணவர்ளுள் ‘போல் ஜம்ப்’ தாவுவதில் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை வகித்தான். ஆனால், அன்று அவனுடைய துரதிருஷ்டம் போலும்! மூன்று முறை முயன்றும் காந்திஜியின் முன் தாவும் போது அவன் வழக்கமாக எவ்வளவு உயரம் தாவுவானோ, அந்த அளவு முடியவில்லை. ஒன்று அவன் கயிற்றுக் முன்னாலேயே விழுந்தான். அல்லது கயிற்றில் கால் சிக்கியது. விளையாட்டு முடிந்த பிறகு காந்திஜி மார்தண்டனைக் கூப்பிட்டு ” ஏன், உன் கண்கள் ஒன்றும் கெட்டுப்போகவில்லையே?” எனக்கேட்டார்.

”அம்மாதிரி ஒன்றும் தோன்றவில்லை. ஆனா விளையாடும்போது கயிறு தெளிவாகத் தெரியவில்லை, ஆகையால் வெற்றி பெறமுடியவில்லை. ஒரு வேளை வெயில் காரணமாக இருந்தாலும் இருக்கலாம்” என்று பதிலுரைத்தார் மார்த்தாண்டன்.

அதற்குக் காந்திஜி ”இல்லை, நாளை உன் கண்களை பரிசோதித்துக்கொள். அவர் உடனே ஏற்பாடு செய்துவிடுவார்!’ என்றார்.

மறுநாள் ஜம்னாலால்ஜி மார்த்தாண்டனை ஆமதாபாத்திலுள்ள ஒரு டாக்டரிடம் அனுப்பிவைத்தார். கண்ணில் கோளாறு இருக்கிறதென்று முதல் பரிசோதனையிலேயே டாக்டர் தெரிந்து கொண்டார். பரிசோதித்ததில் இரு கண்களிலும் ‘-2′ அளவுக்குக் குறை இருப்பது தெரியவந்தது. அதற்கேற்றபடி மூக்குக்கண்ணாடி தயாரித்து அதை எப்போதும் அணிந்துகொள்ளும்படி டாக்டர் ஆலோசனை கூறினார். இவ்விஷயத்தை சிறுவன் காந்திஜியிடம் கூறினபோது ”நீ குதிக்கும்போது அடிக்கடி முழித்துக்கொண்டிருந்தாய். ஒவ்வொரு தடவையும் கயிற்றின் மீதோ அல்லது அதற்கு முன்னாலோ குதித்தாய். இதிலிருந்து உன் பார்வை கெட்டுப்போயிருக்க வேண்டுமெனக் கருதினேன்” என்றார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:09 am

25. இரண்டாயிரம் ஆண்டுகள் தங்களுக்கு அதிகமாகத் தோன்றுகிறதா?


லண்டனில் வட்ட மேஜை மகாநாடு முடிந்தவுடன் காந்திஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ரொமைன் ரோலண்ட் அவர்களைச் சந்திப்பதற்காகப் பாரீஸ் வழியாக ஸ்விட்ட்ஜர்லாந்து சென்றார். ஒருவாரம் அவருடைய மாளிகையின் அருகிலிருந்த இல்லத்தில் தங்கியிருந்தார் இந்தச் சந்தர்ப்பத்தில் லோஜானிலும் ஜெனோவாவிலும் காந்திஜி உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏதோ ஒரு சொற்பொழிவுக்குப் பின்னர் காந்தியடிகளிடம் ஒருவர், ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசி கிறிஸ்து இவ்வுலகத்திற்கு கொடுத்து சென்ற உபதேசமும் அதில் அவர் தோல்வி கண்டார் என சரித்திரம் கூறுவதையும், இவற்றைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லும்போது தங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படவில்லையா’ எனக்கேட்டார்.

தமக்கே உரிய புன் சிரிப்புடன், ‘எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று தாங்கள் கூறினீர்கள்? என காந்திஜி எதிர்க்கேள்வி எழுப்பினார்.

கேள்விக்க கேட்டவர் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர். ‘ சென்ற இருபது நாற்றாண்டுகளாவே வீணாக இவ்விஷயங்களைப் பற்றிப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்று சொன்னேன்” என அவர் பதிலளித்தார்.

‘அப்படியானால் தீமையை நன்மையால் வெல்வதைப்போன்ற அருமருந்தான விஷயங்களைக் கற்க இரண்டாயிரம் ஆண்டுகள் உங்களுக்கு அதிகமாகத் தோன்றுகிறது போலும் என் காந்திஜி கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:10 am

26. எனக்கு ஆபரேஷன் செய்யும்போது…


காந்திஜி ஆகாகான் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இதர சில கைதிகள் வேலை செய்வதற்காக அவரோடு தங்கியிருந்தார்கள். அவர்களில் ஒருவருக்குக் கண் பக்கத்தில் கொப்புளம் ஆகியிருந்தது. இதனால் அங்கு வீக்கம் ஏறபட்டு கண்ணையே மறைத்திருந்தது. கத்தியால் கீறிக் கொப்புளத்தை உடைத்துவிடலாம் என்று டாக்டர்களால் தீர்மானிக்கப்பட்டது. ‘கீறல்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே அவன் பயந்துவிடுவான் என்ற ப்யாரேலால் சொன்னார். ஒரு வேளை மயக்கம் போட்டும் விழலாம். ஆகையால் அவனுக்குத் தெரியாமல் கத்தியால் கீற வேண்டும்’ என்றும் கூறினார்.

‘இல்லை, இவர்களெல்லாம் தைரியசாலிகள். இருந்தாலும் உனக்கு எப்படி சௌகரியமோ அப்படி செய்’ என்றார் காந்திஜி.

டாக்டர் சுசிலா நாயர் அவனை உட்காரவைத்தே கட்டியை கீறினார். காந்திஜி மிகுந்த ஆர்வத்துடன் சிகிச்சை முடியும் வரை பக்கத்திலேயே இருந்து அவ்வப்போது தன்னாலான உதவிகளை செய்து கொண்டு இருந்தார். கட்டுப்போடும் போது, துணி ஒன்றை அதோடு சேர்க்கவும் வேண்டியதாயிற்று. இதையெல்லாம் பார்த்து விட்டு காந்திஜி, ‘ஆபரேஷன் செய்யும்போது இம்மாதிரி சிறு துணி எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பிப்பாயா? முதலிலேயே நீளமான துணியை எடுத்துக் கொண்டிருக்கவேண்டும்’ என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:10 am

27. அவர்கள் அம்மணமாக இருப்பது அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தவில்லையா?


1921ம் வருடம் காந்திஜியும் மௌலானா முகம்மது அலியும் தென்னிந்தியாவில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். வாலதேரை அடைந்த போது மௌலானா முஹம்மது அலியை இந்திய அரசாங்கம் கைது செய்த்து. திருமதி முஹம் அலியும் தம் கணவரோடு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். மிகுந்த தைரியத்துடன் அவர் இந்த துக்கத்தைத் தாங்கிக் கொண்டார். மேலும் சென்னையில் நடைபெற்ற கூட்டங்களுக்கு காந்திஜியுடன் சென்றார். இதைக் கண்டு காந்திஜி மிகுந்த சந்தோஷமடைந்தார்.

இதன் பின், திருமதி முகமதலியை சென்னையிலேயே விட்டுவிட்டு மதுரைக்கு புறப்பட்டார் அடிகள். அவர் இருந்த ரயில் பெட்டியில் வேறு பிரயாணிகளும் இருந்தனர். ஆனால் ஏறக்குறைய அனைவருக்குமே அப்பொழுது நடந்து கொண்டிருந்த சம்பவங்களைப் பற்றி அவ்வளவு தெரியாது.உண்மையில் அவர்களுக்கு இவைகளைப் பற்றிய கவலை சிறிதும் கிடையாது. அவர்கள் அனைவரும் அந்நிய நாட்டுத் துணியை உடுத்தியிருந்தனர். அவர்களில் சிலருடன் பேச முயன்றார் காந்திஜி. கதர் அணியும்படி அவர்களை வற்புறுத்தினார். தலையசைத்துக்கொண்டே அவர்கள் ‘கதர் வாங்க முடியாத அளவுக்கு நாங்கள் ஏழைகள். அது விலையுயர்ந்துது கூட’ என பதிலளித்தனர்.

காந்திஜிக்கு அவர்கள்பேசியதன் பொருள் விளங்கிவிட்டது. அவர் ஆழ்ந்து சிந்தனை செய்யத் தொடங்கினார். ‘நான் சட்டை, தொப்பி, முழுநீள வேஷ்டி அணிந்திருக்கிறேன். அதேசமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் 4 அங்குலமும் 4 அடி நீளமுள்ள கௌபீனத்தைத் தவிர வேறுதுவும் உடுத்திக் கொள்ள முடியாதிருக்கிறது. வேறு வழியின்றி அவர்கள் ஆடையில்லாமல் அம்மணமாக இருக்கவேண்டியதாயிருக்கிறது. அவன் இப்படி இருப்பத் அப்பட்டமான உண்மையை வெளிப்படுத்தவில்லையா? நாகரீகமான நிலையில் இருந்து கொண்டு, நான் உடுக்கும் ஆடையல் எவ்வளவு சிக்கனப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்யவில்லையென்றால் மக்கள் முன் தைரியத்துடன் மனம் கூசாமல் இதற்குச் சரியான பதிலளிப்பது எவ்வாறு?

இவ்வாறான சிந்தனைகளின் விளைவாக மதுரையில் கூட்டம் நடந்த பிறகு முழங்கால் அளவு சிறு துண்டைத்தான் இனித் தாம் உடுத்துவதென முடிவு செய்து விட்டார் காந்தியடிகள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:10 am

28. இன்று உங்களுடைய திருமண நாளாயிற்றே!


சேட் ஜம்னாலால் பஜாஜின் குமாரத்தி மதால்ஸாவக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கும் வார்தாவில் ‘பச்சராஜ் பவன்’ மாளிகையில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அவர்களுக்குக் காந்திஜியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. அன்று ‘நல்ல மழை பெய்து கொண்டிருந்து. எனினும் குறித்த நேரத்தில் காந்திஜி கஸ்தூரிபாவுடன் கல்யாணமண்டபத்தை அடைந்தார். ஆசிரம வழக்கப்படி விவாகச் சடங்குகள் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிட்டன. சடங்குகள் நடைபெறும் போது காந்திஜி சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார். சடங்குகள் முடிந்தவுடன் திருமணத் தம்பதிகள் அவரை வணங்கும் போது அவர்களுக்குத் தம் கையாலேயே நூற்ற கதர்மாலையை அணிவித்தார் பாபுஜி. அன்று மாலையே உணவருந்த சேவா கிராமத்திற்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.

மாலைப்பொழுது தம்பதிகள் ஜம்னாலால்ஜியின் ‘ஆக்ஸ்போர்டு’ வண்டியில் சேவாகிராமத்திற்குப் புறப்பட்டனர். இது காளை மாட்டு வண்டிதான். ஆனால் பழைய ‘போர்டு’ காரின் எஞ்சிய பகுதியால் இந்த வண்டி செய்யப்பட்டிருந்தது. அதனால் இதற்கு ‘ஆக்ஸ்போர்டு’ எனப்பெயரிடப்பட்டது. ‘ஆக்ஸ்’ என்றால் ஆங்கிலத்தில் காளை என்று பொருள். ‘போர்டு’ வண்டி.

மழை தொடர்ந்து பெய்துகொண்டு தான் இருந்தது. வழி நெடுக ஈரம், நாலாபக்கமும் ஒரே சகதி எப்படியோ அவர்கள் குறித்த நேர்த்தில் ஆசிரம்ம் போய் சேர்ந்தனர். காந்திஜி அவர்களின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். குறித்த நேரத்தில் மற்ற ஆசிரமவாசிகளுடன் அவர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். காந்திஜி தம்கையாலேயே பரிமாறும் தட்டை ஒவ்வொருவருக்கும் வைத்துக்கொண்டிருந்தார். தம்பதிகளின் தட்டும் அதே மாதிரி மிகுந்த அன்புடன் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்தது; அவரவர்கள் தங்கள் தங்கள் தட்டை நன்றாக்க் கழுவி தட்டுகளுக்கான இடங்களில் வைக்க வேண்டுமென்பது நியதி. ஆனால் தம்பதிகள் தங்கள் தட்டைக் கையிலெடுக்க முயற்சித்தபோது காந்திஜ புன்முறுவலுடன், ‘அடே இன்று உங்களுடைய திருமண நாளாயிற்றே! இன்று நாங்கள் தட்டு தூக்கக் கூடாது. நீங்கள் எழுந்திருந்து கை கழுவிக்கொள்ளுங்கள்”என்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:10 am

29. எனக்கில்லை சங்கர்லாலுக்கு மருத்துவம் செய்யுங்கள்


காந்திஜி சோதனைகளுக்கு ஒரு முடிவே கிடையாது. பாதாம் கொட்டை பாலையும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்கும் சோதனையில் இறங்கியிருந்தார். தொடக்க்தில் உட்கொள்ளும் அளவு மிக்க்குறைவாக இருந்தது. இதனால் உடல் நலிந்து காணப்பட்டது. ஆனால் சிறிதும் காந்திஜி தளவில்லை; வேலையின் அளவும் குறையவில்லை. குஜராத் வித்யா பீடத்தைச் சீரமைக்கும் எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டிருந்த நேரம். இச்சமயம் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் கலவிக் கூடத்தின் ஆண்டுவிழாவை நடத்தினர். அவர்கள் ஒரு நாடகத்தையும் நடத்திக் காட்டினர். சர்க்காவில் நூற்றுக்கொண்டே நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தார் காந்திஜி. பக்கத்திலிருந்த நண்பர்கள் அவர் மிகுந்த முகவாட்ட மடைந்திருந்ததைப் பார்த்தனர். அவரை எப்படியாவது சிரிக்க வைக்க முயற்சித்தும் பலன் இல்லை

சிறிது நேரம் கழித்து அவர் சர்க்காவில் நூல் நூற்பதை நிறுத்திவிட்டார். ஒரு மாணவன் நூலை வீச ஆரம்பித்தான். அப்போது காந்திஜி மெதுவாக அருகிலிருந்த மீரா பஹன் கையைத் தாங்கி எழுந்திருக்க முயற்சிப்பதை ஹரிபாபு உபாத்தியாயர் பார்த்தார். பலவீனத்தினால்தான் இப்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது. அதே சமயத்தில் அவருடைய கால்கள் தொங்க ஆரம்பித்தன. அடிகளுடைய உடம்பின் முழு பாரமும் மீரீபஹினின் மீது விழுந்தது. ”காந்திஜிக்கு வலிப்பு வந்து விட்டது. ஹரிபாபு அவருடைய கால்களைப் பிடித்துக்கொள்” என்று ஜம்னாலால்ஜி கூறினார்.

கண்மூடித் திறப்பதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. மஹாத்மாவின் உடல் வெளுத்துவிட்டது. கண்விழிகள் நின்றுவிட்டன; கழுத்தும் திரும்பியிருந்தது.

அண்டசராசரமே புயல் வேகத்தில் சுழல்வதாகத்தோன்றியது. இப்போது தான் இரண்டு தினங்களுக்கு முன் பிரார்த்தனைக் கூட்டத்தில், ‘இறப்பதானால், ‘சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார், நூற்றுக்கொண்டே இறந்தார்’ என்றும், அல்லது பேசிக்கொண்டிருந்தார்’ பேசிக்கொண்டிருக்கையிலேயே மூச்சு நின்றது’ என்றும் ஆகவேண்டும்” என காந்திஜி சொல்லியிருந்தார்.

அது ஒரு விசித்திரமான காட்சியாக இருந்தது. கூடியிருந்த மக்கள் சோக்க்கடலில் மூழ்கியவராய் தம்மாலான சிகிச்சைகள் அனைத்தையும் அடிகளுக்குச் செய்து கொண்டிருந்தனர். எவ்வளவுதான் அழுகையை நிறுத்த முயன்றும் அவர்களால் முடியவில்லை. ஆனால் இவ்வளவும் நடைபெறுவது மூன்று நிமிடம் கூட இருக்காது; அதற்குள மஹாத்மாஜி கண்களைத் திறந்து நாடகமேடையைப் பார்த்தார். மிக மெதுவான குரலில் ”நாடகத்தை ஏன் நிறுத்திவிட்டீர்கள். அது தொடரட்டும்’ என்றார்.

நாடகம் மீண்டும் தொடங்கியது. ஜனங்களுக்கும் உயிர் திரும்பி வந்தாற்போலிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன. ‘என்னுடைய நூல் சுற்று ஆகியிருக்கிறது? எண்ணினீர்களா? எவ்வளவு குறைந்திருக்கிறது? ” என காந்திஜி கேட்டார்.

‘பதினாறு சுற்று குறைவாக இருக்கிறது” என்றார் ஒரு சகோதரர்.

காந்திஜி ”என்னுடைய சர்க்காவைக் கொண்டுவா. குறைந்ததை நூற்கவேண்டும்.” இதைக் கேட்டு ஜனங்களுக்கு ஆத்திரம் வந்தது; அடராமா! இவர் எவ்வளவு கொடூர உள்ளம் படைத்தவர் போன உயிர் இன்னும் சரிவரத் திரும்பி வரவில்லை. அதற்குள் நூல் நூறகவேண்டும் என்று சொல்கிறாரே!”

பாபுஜி! இன்று நீங்கள் நூற்காமலிருந்தால் உடம்பு சரியாய்விடும்” என ஜம்னாலால்ஜீ கூறினார்.

”அது எப்படி முடியும்?” என்றார் காந்திஜி. ”நீங்கள் இவ்வாறு சொல்லமாட்டீர்களே” என்று ஜம்னாலாலைப் பார்த்து குறைப்படுக் கொள்வதைப் போன்ற முகபாவம் அடிகளுக்கு ஏற்பட்டது.

சங்கர்லால்ஜிக்கும் மிகுந்த தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இந்நேரத்தில் நூற்பேன் என்று பிடிவாதம் பிடிப்பது எமனை வலிய அழைப்பதற்கு ஒப்பாகும், என அவர் நினைத்தார். ஆனால், காந்திஜி அல்லவா; காந்திஜியாகவே இருந்தார்; சர்க்கா வந்தவுடன் நூற்பதற்கு உட்கார்ந்தார். அப்போது வந்து சேர்ந்தார் டாக்டர். காந்திஜியைப் பார்த்து ”இவர் நன்றாகத்தானே இருக்கிறார்? பின் இவரைப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார்.

காந்திஜி சிரித்துக்கொண்டே, ”எனக்கில்லை, சங்கர் லாலுக்கு மருத்துவம் செய்யுங்கள்’ என்றார்.

அதே சமயம் நாடக மேடையில் ஒரு பாத்திரம் , ”பார், இன்னும் இரண்டு நிமிடத்திற்குப் பிறகு எனக்கு மரணம் ஏற்படப்போகிறது. தர்மத்தைப் பற்றி ஏதாவது கேட்கவேண்டியிருந்தால் இப்போதே கேட்டுக்கொள்” என்று சொல்லிக்கொண்டிருந்தது.

30. தன்மானம் இழந்த பின் நான் பாரத நாட்டிற்குப் பயன்படமாட்டேன்


காந்திஜி ஆகாகான் மாளிகையில் கைதியாக இருந்து ஒரு வருடம் நிறைவுபெற்றது. தேசத்தின் நிலைமையைப் பற்றி அரசாங்க்துடன் கடிதப் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தியாவின் மீதான தன்னுடைய இழிவான சூழ்ச்சிகளைக்காந்தியடிகள் இல்லாத போது அமல் நடத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கத்தில் அரசு அடிகளைச் சிறைக்குள் தள்ளவேண்டுமென்று தீர்மானமாக இடுப்பை வரிந்து கட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பாரத்த்தலைவர்கள் காந்தியடிகளை வெளியே வைத்திருக்க விரும்பினர். சீனிவாச சாஸ்திரி காந்திஜியுடன் கருத்து வேறுபட்டவராக இருந்தார். ஆனால் அவர்களுடைய உறவு நல்லபடியாகத்தான் இருந்தது. காந்திஜி சிறை பிடிக்கப்படுவதை சீனிவாச சாஸ்திரி அவர்கள் விரும்பவில்லை. அவருடைய விடுதலைக்காக சாஸ்திரி ஒரு பகிரங்க்க் கடிதம் எழுதினார். காலையில் உலாவச் செல்லும்போது ப்யாரேலால், ‘இக்கடித்த்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என காந்திஜியிடம் கேட்டார்.

‘மொழி நன்றாக இருக்கிறது. மற்றபடி ஒன்றும் இல்லை, என பதிலளித்தார் காந்திஜி.

‘எப்படியாவது தாங்கள் வெளியே வரவேண்டம்’ - இதுதான் சாஸ்திரியின் ஆசை என்றார் ப்யாரேலால்.

அதற்குக் காந்திஜி ‘அவருக்குத் தெரியாது போலும். நான் எப்படியாவது வெளியே வந்து ஒரு வேலையும் செய்ய முடியாதென்று’

சாஸ்திரியின் கடித்த்திற்கு பதில் எழுதட்டுமா?’ எனக் கேட்டார் ப்யாரேலால்.

‘பதில் தான் ஒரு நிமிடத்தில் எழுதி விடலாமே பதில் இவ்வளவுதான். தன் மானம் இழந்த பின் நான் பாரதநாட்டிற்கு பயன்படமாட்டேன்.’ என்றார் காந்திஜி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 7:11 am

31. அவள் என்னைக் குறை கூறுகிறாளா?


உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்திஜீ தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசாவின் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும்போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்திஜியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர். திடீரென்று அவள் காந்திஜியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும்படி நடந்து கொள்ளுகிறீர்கள்’ என்றாள்.

சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘என் வருத்தம்; என் வெட்கம்’ என்ற உணர்ச்சி மிக்க கட்டுரையைக் காந்திஜி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாக்க் கொடுத்திருக்கிறார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் ‘பா’ சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது. இதனை மனதில் எண்ணிக்கொண்டுதான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்திஜியிடம் மேற்சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால் காந்திஜியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக்கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன், உடுக்க துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.

‘நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக்கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றார் அம்மையார்.

மகாத்மாஜி இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை, ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்கவேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காக்க் கஷ்டப்பட்டு நிதிசேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்கவிரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்துவிடுங்கள்’

கடைசியில் அம்மையார் ‘பா’வுக்கு கொண்டுவந்திருந்த காசை அந்த நிதிக்கே கொடுத்துவிட்டார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக