புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
3 Posts - 4%
prajai
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Jenila
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
7 Posts - 6%
prajai
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_m10உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2 - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை உலுக்கும் சினிமா:தொடர் -பாகம் 2


   
   

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 3:34 pm

First topic message reminder :

http://soundcameraaction.com/media/k2/items/cache/c6cc8653a2d1ab0297db1dc5c83099fb_XL.jpg
வாழ்க்கையில் ஒருமுறை நடந்து முடிந்த நிகழ்ச்சியை நினைவில் மட்டுமேஅரைகுறை தெளிவோடுமக்கள் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நிகழ்வை கண்முன் திரையில் காட்டமுடியும் என்பது 1880களில் கிட்டத்தட்ட கடவுளின் சக்திக்கு நிகரானசெயல்.
அப்படி எண்ணியிருந்த மக்களின் முன்னிலையில் அந்த அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்ட நாள்தான் உலகை சினிமா உலுக்கிய முதல் நாள். சினிமாவின் ஆரம்பக் காலக்கட்டத்தில் திரையில் குதிரை வண்டி வந்தால் அரங்கில் இருந்த மக்கள் அதிர்ந்துஒதுங்கினார்கள். திரைக்குள் தீப்பிடித்தால் பயந்து நடுங்கினார்கள். கிட்டத்தட்ட சினிமா என்பது அவர்களுக்கு ஒரு மாயாஜால நிகழ்ச்சியாகவே தெரிந்தது. நிஜமல்லாத நிகழ்வுகளை நிஜம்போலவே காட்டி மகிழ்விக்கும், அழவைக்கும், அலறவைக்கும் சினிமா என்ற மெய்நிகர் உலகத்திற்கு தங்களை வேகமாக பழக்கப்படுத்திக் கொண்டதோடு, கொஞ்சமே கொஞ்சமாய் அடிமைப்படுத்தியும் கொண்டார்கள்.
பொதுவாகவே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வமுள்ள மனித இனத்தின் வரலாற்றில் பல ஆயிரம் வருடங்களாக நாடகங்களும், சிலநூறு வருடங்களாக நாவல்களும் ஏற்படுத்தாத தாக்கத்தை சில ஆண்டுகளிலேயே சினிமாவால் ஏற்படுத்த முடிந்தது. நாடகங்கள் என்னதான் பல ஆயிரம் ஆண்டுகளாகமனிதனை மகிழ்வித்துக் கொண்டிருந்தாலும் அதில் இழையோடும் செயற்கைத்தனம் மனிதனை தொடர்ந்துஉறுத்திக்கொண்டேதான் இருந்தது. எவ்வளவு பெரிய நாடக அரங்காலும் அதை முற்றிலும் தவிர்க்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, நாவல் படிப்பதோ படிப்பவருக்கு நாவலில் உள்ள விஷயங்களை, வர்ணிக்கப்படும் உருவங்களை கற்பனைசெய்துபார்க்கும் ஒரு வேலையைக் கொடுத்தது. அதுமட்டுமல்லாது நாவல்கள் பலநாட்கள் எடுக்கும் 'வளவள' பொழுதுபோக்கு. மேலும் பணக்காரர்களின், படித்தவர்களின் பொழுதுபோக்காகவே நாவல் படிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் மாற்றாக, "நீ நாற்காலியில் சாய்ந்து சொகுசாகஅமர்ந்துகொள், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்ற வசதியுடன் அமர்க்களமாக தன்னை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதுதான் சினிமா!! பொழுதை போக்க நினைப்பவர்கள் எதுவுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்து திரையைப் பார்த்தால் போதும், பொழுது மின்னல் வேகத்தில் பறக்கும்! கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள், நிகழ்ச்சிகள்எல்லாம் இயல்பான பின்னணியில் திரையில் நடக்கும். அழுகை, சிரிப்பு, நடனம், காதல் என சகலவிதமான உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய நூறு சதவிகிதம் ஈடு இணையில்லாத பொழுதுபோக்கு உத்திரவாதம்! இந்த வசதிதான் சினிமாவை வெகுவிரைவாகவே மனிதன் கண்டுபிடித்த பொழுதுபோக்குகளின் அரசனாக மாற்றியது.
சரி! சினிமா எப்படி உலகை உலுக்கும்? டிடிஎஸ், 3டி, ஆரோ3டி என புதிய தொழில்நுட்பங்கள் தினமும் சினிமாரசிகர்களை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மட்டுமல்ல, 'சினிமா' என்ற சொல் சினிமாவுக்கு சூட்டப்படும் முன்பே, அதாவது உருப்படியான சினிமா கண்டுபிடிக்கப்படும் முன்பே சினிமா உலகை உலுக்கியது. பலரும் நினைப்பதைப் போல சினிமாவைக் கண்டுபிடித்தது ஆல்வா எடிசன் என்று ஒரேடியாக சொல்லிவிடமுடியாது. சினிமா என்னும் பிரம்மாண்ட கண்டுபிடிப்பின் மேல் பலரின் கைரேகைகள் பதிந்திருக்கிறது. அந்த ரேகைக் குவியலில் வெகு முக்கியமானது, 'எட்வர்ட் மய்ப்ரிட்ஜ்' (Eadweard Muybridge) என்ற புகைப்பட நிபுணரின் கைரேகை! சினிமாவுக்கு ஆரம்பபுள்ளி வைத்த ஒரு சுவையான சம்பவத்தை இங்கே கண்டிப்பாக குறிப்பிடவேண்டும்.
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நிறுவனர் லெலேண்ட் ஸ்டான்ஃபோர்டு (Leland Stanford) ஒரு குதிரைப் பிரியர். குதிரை வேகமாய் ஓடும்போது எதாவதுஒரு கட்டத்தில் அதன் நான்கு கால்களும் காற்றில் இருக்குமா அல்லதுஎப்போதுமே எதாவதுஒரு காலேனும் தரையில் இருக்குமா என்ற சந்தேகம் அப்போதுமக்களிடையே நிலவியது. இந்த 'மிகப் பெரிய' சந்தேகத்திற்கு விடை காண முடிவுசெய்து அந்த பொறுப்பை மய்பிரிட்ஜிடம் ஒப்படைத்தார் ஸ்டான்ஃபோர்ட். 1872ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி 'உண்மையை' கண்டறியும் சோதனைக்கான நாளாககுறிக்கப்பட்டது.இருபத்தி நான்கு காமிராக்களை 'சேலி கார்ட்னர்' (Sallie Gardner) என்ற குதிரையின் வழித்தடத்தில் வரிசையாகப் பொறுத்தி, அவற்றுக்கான விசைகளை குதிரையின் கால்-பதிவினாலேயே இயங்கச் செய்யும் வகையில்அமைத்தார் மய்பிரிட்ஜ். இப்படித்தான் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஒரு பண்ணையில், 'சேலி கார்ட்னர்' என்ற குதிரையின் நடிப்பில்(!!), ஸ்டான்ஃபோர்டின் தயாரிப்பில், மய்பிரிட்ஜின் ஒளிப்பதிவு-இயக்கத்தில் உலகின் முதல் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது!
பின் பொதுமக்கள் முன்னிலையில் கண்ணாடித்திரைகளில், சேலி கார்ட்னரின் படங்களை
வரிசையாக ஓட்ட அது குதிரை நின்றஇடத்திலேயே ஓடுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது! மேலும் குதிரை ஓடும் போது, ஒரு கட்டத்தில் அதன் நான்கு கால்களும்காற்றில் இருக்கும் என்ற உண்மையையும் அந்தப் படம் நிரூபித்தது! (புகைப்படங்களை வரிசையாக ஓட்டி அதை திரைப்படம் போல காட்டியதால் இதை சிலர் திரைப்படமாக ஏற்றுக்கொள்வதில்லை. உலகின் முதல்அனிமேசன் படம் எனச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்) உலகையேஆட்டிப் படைக்கப்போகும் எப்பேர்ப்பட்ட ஒரு பிரம்மாண்ட தொழிநுட்பத்திற்கான ஆரம்பப்புள்ளியை வைத்திருக்கிறோம் என்பது சில ஆண்டுகள் கழித்துதாமஸ் ஆல்வா எடிசனை சந்திக்கும் வரை மய்பிரிட்ஜிற்குத் தெரியவில்லை.
பின்னர் படிப்படியாக ஒரே நேரத்தில் ஃப்ரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் விஞ்ஞானிகள் முழுமூச்சாக சினிமா தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்க, ஒரு வழியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சினிமாகண்டுபிடிக்கப்பட்டது!



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 21, 2013 4:25 pm

அதை அரங்கேற்றிவர்கள் 'லூமியே சகோதரர்கள்'. அவர்கள் அரங்கேற்றிய வித்தையின் பெயர்சினிமா! திரையில் சினிமா ஓடியதைப் பார்த்து மெய்மறந்த அந்த 'மந்திரவாதி', அதே இடத்தில் 10000 ஃப்ராங்குகளைக் (அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை)கொடுத்து அந்த சகோதரர்களிடம் இருந்து ஒரு வீடியோ கேமிராவை வாங்கினார்!! 'ஜியார்ஜ்ஸ் மெலிஸ்' என்னும் உலகின் முதல் ஃபாண்டசி இயக்குனரின் ஆட்டம் அன்றுமுதல் ஆரம்பமானது!
இன்றிருக்கும் அனைத்து மந்திர தந்திர காட்சிகளுக்கும் கடவுளான 'ஸ்டாப் ட்ரிக்' (stop trick) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது ஜார்ஜ்ஸ் மெலிஸ் தான். 1890களின் இறுதியில் அவர் கண்டுபிடித்த இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து ஆர்தர் மார்வின் இயக்கிய30நொடிகள் ஓடக்கூடிய 'Sherlock holmes baffled' (நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில்தோன்றி மறையும் திருடனைப் பற்றியகதை) படத்தை இன்று காணினும் ஆச்சரியம் மேலிடுகிறது!
வரிசையாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சின்ன சின்ன ஃபாண்டசி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார் ஜியார்ஜஸ்மெலிஸ். லாபம் பார்க்க வேண்டுமென்பதோ, சினிமாவை வைத்து மிகப்பெரிய கோடீஸ்வரன் ஆகவேண்டுமென்பதோ அவர் நோக்கமாக இருக்கவில்லை. சினிமா கலையின் மீது, முக்கியமாகஅக்கலையில் தான் கொணர்ந்த மாற்றங்களின் மீது அலாதிபற்றுடன் செயல்பட்டார் மெலிஸ். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் உண்பதை விட அவருக்கு சமையல் பிடித்திருந்தது!உச்சகட்டமாக 1909ல் 68 படங்களை உருவாக்கினார்! மனித முகம்போல தோற்றமளிக்கும் நிலாவின் கண்களில் ஒரு ராக்கட் மோதி ரத்தம் வழிவது, விண்கப்பலை சூரியன் விழுங்குவது போன்ற எண்ணற்ற ஆச்சரியமூட்டும் காட்சியமைப்புகளுடன் (கொஞ்சம் விஞ்ஞான புனைவும்இருப்பதை கவனிக்கலாம்) அவரது திரைப்படங்கள் இருக்கவே, அசுரவளர்ச்சியும், புகழும் தேடி வந்தது.
பின் தாமஸ் ஆல்வாஎடிசன் தோற்றுவித்த திரைப்படம் எடுப்பவர்களுக்கான கூட்டமைப்பு ஏற்படுத்திய புதிய விதிகள், மெலிஸ்க்கு பல சிக்கல்களைக் கொடுத்தது. அதே நேரத்தில் சோதனை மேல் சோதனையாக பேசும் படங்களும்வந்து சேரவே மெலிஸ்ஸின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் குறையத் துவங்கியது. அடுத்தடுத்து வந்த சோதனைகளால்,தான் பலநாட்கள் கண்விழித்து எடுத்த பல படங்களின் ஃபிலிம் சுருள்களை தானே நெருப்பில் போட்டு பொசுக்கும் அளவிற்கு ஒருகட்டத்தில் அவர் விரக்தி அடைந்தார். இதற்குப் பின் முற்றிலும் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி ஒரு பொம்மை வியாபாரியாக மிகச்சராசரி வாழ்க்கை வாழும் அளவிற்கு தள்ளப்பட்டார் மெலிஸ். பின்பு பலஆண்டுகள் கழித்து, "மெலிஸ் என்று ஒருவர் இருந்தாரே? எங்கேஅவர்?" என சில பத்திரிக்கைக்காரர்கள் தேடத் தொடங்க, கிட்டத்தட்ட சமாதி ஆகியிருந்தமெலிஸின் புகழ் மேலெழும்பத் துவங்கியது. அவரால் எரிக்கப்பட்டது போக மிச்சம் கிடைத்த அவரது சொச்சம் படங்களை
எடுத்து திரையிட்டு மகிழ்ந்தார்கள். மெலிஸை, 'சினிமாவின் முதல் மந்திரவாதி' என சினிமா வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள். அவரது பலநூறு படைப்புகளில் இப்போது எஞ்சுவதுசிலநூறு மட்டுமே!
ஜார்ஜ் மெலிஸில் ஆரம்பித்த மேற்கத்திய ஃபாண்டஸி இன்றளவும் மேற்குலகில் காப்பாற்றப்படுகிறது. நம் கண்முன்விரிந்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஹாலிவுட் அதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஜேம்ஸ் காமரூன் போன்ற இயக்குனர்கள் தங்கள் கதைகளை திரையில் கொண்டு வருவதற்காக, புதிய-பிரம்மாண்ட தொழில்நுட்பங்களையே கண்டுபிடிக்கும் அளவிற்கு 'மெலிஸ்'சின் கனவைக் காப்பாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
சரி! நம்மூர்ப் பக்கம் வருவோம்! விட்டலாச்சாரியாவும், வெங்கட்ட ரெட்டியும் இருந்தார்கள், அதற்குப் பிறகு? இந்த இடத்தில் ஒரு சிறிய, ஆனால் முக்கியமான விசயத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை அவர்களது கலாச்சாரம் சார்ந்த ஒரே ஒரு ஃபாண்டசி கதை 'பைபிள்' தான். கொஞ்சமேனும் மந்திர தந்திர சம்பவங்கள், அற்புதங்கள் நிறைந்த கதை என்றால் அதையன்றிவேறெதுவுமே அங்கேதேறாது. ஆனால் எத்தனை அமெரிக்க ஃபாண்டசி படங்கள்இயேசு கதையை மையமாக வைத்தோ, பைபிளை மையமாக வைத்தோ வந்திருக்கின்றது? டென் கமாண்ட்மென்ட்ஸ்,பைபிள் என வெகுசில படங்களைச் சொல்லிவிடலாம். ஆனாலும் உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களின் ஃபாண்டசி புனைவுகளை தேடி எடுத்து திரைப்படங்களாக உருவாக்குகிறார்கள். ஆனால் நம் நாடு இதற்கு முற்றிலும் மாறுபட்டது. எந்தப் பக்கம் பார்த்தாலும் ஆயிரமாயிரம் புராணங்களும், ஃபாண்டசி கதைகளும் கொட்டிக்கிடக்கின்றது. எவ்வளவு அழகாக அதிலிருந்து பிரம்மாண்டமான படைப்புகளை எடுத்திருக்க முடியும்? எவ்வளவு அருமையானஃபாண்டசி படங்களைகொடுத்திருக்க முடியும்?
ஆனால் என்ன ஆனது?நான் இப்படி புலம்ப ஆரம்பித்திருப்பதால் நம்மூரில் ஃபாண்டசி இயக்குனர்களே இல்லை என்றோ, ஃபாண்டசி படங்களேவருவதில்லையென்றோ சொல்லப்போகிறேன் என நினைத்துவிடாதீர்கள்! நாம் காணும்தமிழ், தெலுகு, இந்தி சினிமாக்களில் 90%க்கும் மேல் ஃபாண்டசி சினிமாக்களே என்றஆச்சரியமான தகவலைதான் அடுத்து சொல்லப் போகிறேன்! ஏன்? எப்படி? என்பது அடுத்த வாரம்!
-
நன்றி :Sound camera action



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக