புதிய பதிவுகள்
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
65 Posts - 52%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
47 Posts - 37%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
15 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
9 Posts - 2%
jairam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 38 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 38 of 84 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 61 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 31 Dec 2012 - 22:14

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 21 Aug 2014 - 12:37

தொடத் தொடத் தொல்காப்பியம் (297)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘அதனுடைய கிளை’ என்ற பொருளில் கூற ‘அதன் கிளை’ என்கிறோம் ! ‘அது’ என்பதுதானே பகுதி? அப்படியானால் , ‘அதுக் கிளை’ என்று வரக்கூடாதா? இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! அதனைக் காண்போம் ! :-

     “சுட்டுமுத  லிறுதி  யுருபிய  னிலையும்
      ஒற்றிடை  மிகாஅ  வல்லெழுத்  தியற்கை ” (உயிர்மயங். 61)

‘சுட்டு முதல் இறுதி ’ – அ,இ,உ ஆகிய சுட்டெழுத்துகளை முதலாக உடைய ‘உ’ ஈற்றுச் சொற்கள் ,

‘உருபியல் நிலையும்’ – உருபியல் நூற்பா 4இல் கூறியவாறு ‘அன்’ சாரியை பெறும் !

‘ஒற்று  இடை  மிகாஅ  வல்லெழுத்து  இயற்கை’ – புணர்ச்சியில் இடையே வல்லொற்று மிகாது !

1 . அது + கோடு = அதுக் கோடு ×
   அது + கோடு = அதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் கோடு – அதனுடைய கிளை)

2 . அது + செதிள் = அதுச் செதிள் ×
   அது + செதிள் = அதன் செதிள் √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் செதிள் – அதனுடைய வெட்டுத் துண்டு )

3 . அது + தோல் = அதுத் தோல் ×
  அது + தோல் = அதன் தோல் √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் தோல் – அதனுடைய தோல்)

4 . அது + பூ = அதுப் பூ ×
   அது + பூ = அதன் பூ √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அதன் பூ – அதனுடைய பூ)

உரை இறுதியில் இளம்பூரணர், சுட்டெழுத்து அல்லாத ‘உ’ ஈற்றுச் சொற்கள் சிலவற்றிற்குப் புணர்ச்சி இலக்கணம் கூறுகிறார் ! –

5 . கடு + குறை = கடுக்குறை ×
   கடு + குறை = கடுவின் குறை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கடுவின் குறை – கடு மரத்தின் குறை )

6 . ஒடு + குறை = ஒடுக்குறை ×
   ஒடு + குறை = ஒடுவின் குறை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஒடுவின் குறை – ஒடு மரத்தின் குறை )

இனி , நச்சினார்க்கினியர் காட்டும் சில கூடுதல் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கமாகக்  காண்போம் ! –

7 . எழு + புறம் = எழுப்புறம் ×
    எழு + புறம் = எழுவின் புறம் √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(எழுவின் புறம் – தூணின் வெளிப்பக்கம்)

8 . கொழு + கூர்மை = கொழுக் கூர்மை ×
    கொழு + கூர்மை = கொழுவின் கூர்மை √  (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கொழுவின் கூர்மை – ஏர்க்காலில் பொருத்தப்படும் உழு கருவியின் கூர்மை)

9 . உது + காண் = உதுவைக் காண் ×
   உது + காண் = உதுக் காண் √   (வேற்றுமைப் புணர்ச்சி)
(உதுக் காண் – உங்கே கண்பாயாக ; 7ஆம் வேற்றுமைத் தொடர் )

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 22 Aug 2014 - 11:43

தொடத் தொடத் தொல்காப்பியம் (298)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர் மயங்கியலில் ‘உ’ ஈற்றுச் சொற்களை முடித்த தொல்காப்பியர் இப்போது ‘ஊ’ ஈற்றுச் சொற்களை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார் ! –

“ஊகார விறுதி யாகார வியற்றே” (உயிர்மயங். 62)

‘ஊகார இறுதி’ -  ‘ஊ’வை ஈற்றிலே கொண்ட  பெயர்ச் சொற்கள் ,

‘ஆகார இயற்றே’ – ‘ஆ’ ஈற்றுச் சொற்களைப் போலப் புணரும் !

அஃதாவது , உயிர்மயங்கியல் நூற்பா 19இல் ‘தாரா + கடிது = தாராக் கடிது’ என்று வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்தது போல , அல்வழியில், வல்லெழுத்துச் சந்தியே வரும் !

1 . கொண்மூ + கடிது = கொண்மூ கடிது ×
    கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூ - மேகம் ; கொண்மூக் கடிது – மேகம் கடுமையானது )


2 .  கொண்மூ + சிறிது = கொண்மூ சிறிது ×
    கொண்மூ + சிறிது = கொண்மூச் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூச் சிறிது – மேகம் சிறியது )

3 . கொண்மூ + தீது = கொண்மூ தீது ×
    கொண்மூ + தீது = கொண்மூத் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
( கொண்மூத் தீது – மேகம் தீயது )

4 .  கொண்மூ + பெரிது = கொண்மூ பெரிது ×
    கொண்மூ + பெரிது = கொண்மூப் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கொண்மூப் பெரிது – மேகம் பெரியது )

இனி , நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகளாகச் சில பதிப்புகளில் வந்துள்ளவற்றையும் காண்போம் !

5 . எழு + கடிது = எழு கடிது ×
    எழு + கடிது = எழூஉக்  கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழு - தூண் ; எழூஉக்  கடிது – தூண் கடுமையானது )

6 .  எழு + சிறிது = எழு சிறிது ×
     எழு + சிறிது = எழூஉச்  சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழூஉச்  சிறிது – தூண் சிறியது )

7 .  எழு + தீது = எழு தீது ×
     எழு + தீது = எழூஉத்  தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
(எழூஉத்  தீது – தூண் தீயது )

8 .  எழு + பெரிது = எழு பெரிது ×
     எழு + பெரிது = எழூஉப்  பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
( எழூஉப்  பெரிது – தூண் பெரியது )

9 . கழு + கடிது = கழு கடிது ×
    கழு + கடிது = கழூஉக்  கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழு – கழுமரம் ; கழூஉக்  கடிது – கழுமரம் கடுமையானது )

10 .  கழு + சிறிது = கழு சிறிது ×
      கழு + சிறிது = கழூஉச்  சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழூஉச்  சிறிது – கழுமரம் சிறியது )

11 .  கழு + தீது = கழு தீது ×
      கழு + தீது = கழூஉத்  தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
(கழூஉத்  தீது – கழுமரம் தீயது )

12 .  கழு + பெரிது = கழு பெரிது ×
      கழு + பெரிது = கழூஉப்  பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
( கழூஉப்  பெரிது –  கழுமரம் பெரியது )

‘எழு’ , ‘கழு’ ஆகிய  பெயர்ச் சொற்களோடு நடந்த புணர்ச்சி ஆய்விற்குரியது !

இரு கருத்துகளை இங்கே சிந்திக்கலாம் !-

1.உயிர்மயங்கியல் நூற்பா 21 இளம்பூரணர் உரையால் , ‘அர’ என்பது , ‘அரா’ வாகி , இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்வழிப் புணர்ச்சியில் , ‘அ’பெற்று ,  ‘அர + பாம்பு = அராஅப் பாம்பு’ ஆனதுபோல , இங்கும் புணர்ச்சி நடந்துள்ளது !

 ‘அர + பாம்பு = அரப் பாம்பு’ என வந்தால் , ‘பாதிப் பாம்பு’ என்ற பிழைப் பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்காகவே , ‘அராஅ’ !

2 . உயிர்மயங்கியல் நூற்பா 59இல், வேற்றுமைப் புணர்ச்சியாயினும் , பேயைக் குறிக்கும் ‘பழு’ ,  ‘பழூஉ’ ஆகியுள்ளது !
‘பழு + பல் = பழுப்பல்’ என ஆகியிருக்கலாம் ; ஆனால் ஆகவில்லை ! ‘பழூஉப் பல்’ ஆகியுள்ளது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 23 Aug 2014 - 13:57

தொடத் தொடத் தொல்காப்பியம் (299)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஊ’ ஈற்றுச் சொற்புணர்ச்சிகளைப் பார்த்துவருகிறோம் !

‘ஊ’ ஈற்றுப் பெயர்களைக்காட்டிவந்த தொல்காப்பியர் இப்போது , ‘ஊ’ஈற்று வினைக்கு வந்துள்ளார் !

“வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும்
நினையுங் காலை யவ்வகை வரையார் !”  (உயிர்மயங். 63)

‘வினையெஞ்சு கிளவிக்கும்’ – வினையெச்சச் சொல்லுக்கும்,
‘முன்னிலை மொழிக்கும்’ – வருமொழியாகிய வினைசொல்லுக்கும் புணர்ச்சி நடக்கும் போது,
‘நினையுங் காலை’ – ஆராய்ந்து பார்த்தால்  ,
‘அவ்வகை வரையார்’ – முன் நூற்பாவில் (உயிர்மயங். 62) பார்த்ததுபோல , வல்லொற்றுச் சந்தி தோன்றும் ; அதனை ஏற்றுக்கொள்வர் !

1 . உண்ணூ + கொண்டான் = உண்ணூ கொண்டான் ×
    உண்ணூ + கொண்டான் = உண்ணூக் கொண்டான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூ  - உண்பதற்காக ;உண்ணூக் கொண்டான் – உண்பதற்காகக் கொண்டான்)

2 . உண்ணூ + சென்றான் = உண்ணூ சென்றான் ×
உண்ணூ + சென்றான் = உண்ணூச் சென்றான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூச் சென்றான் – உண்பதற்காகச் சென்றான்)

3 . உண்ணூ + தந்தான் = உண்ணூ தந்தான் ×
உண்ணூ + தந்தான் = உண்ணூத் தந்தான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூத் தந்தான் – உண்பதற்காகத் தந்தான்)

4 . உண்ணூ + போயினான் = உண்ணூ போயினான் ×
உண்ணூ + போயினான் = உண்ணூப் போயினான் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(உண்ணூப் போயினான் – உண்பதற்காகப் போனான்)

5 . கைதூ + கொற்றா = கைதூ கொற்றா ×
   கைதூ + கொற்றா = கைதூக் கொற்றா √ (அல்வழிப்  புணர்ச்சி)
               (கைதூ – கைவிடு ; கைதூக் கொற்றா – கைவிடு கொற்றா)

6 . கைதூ + சாத்தா = கைதூ சாத்தா ×
   கைதூ + சாத்தா = கைதூச் சாத்தா √ (அல்வழிப்  புணர்ச்சி)
          (கைதூச் சாத்தா – கைவிடு சாத்தா)

7 . கைதூ + தேவா = கைதூ தேவா ×
   கைதூ + தேவா = கைதூத் தேவா √ (அல்வழிப்  புணர்ச்சி)
         (கைதூத் தேவா – கைவிடு தேவா)

8 . கைதூ + பூதா = கைதூ பூதா ×
   கைதூ + பூதா = கைதூப் பூதா √ (அல்வழிப்  புணர்ச்சி)
(கைதூப் பூதா – கைவிடு பூதா)

 மேல் புணர்ச்சிகளில் , நிலைமொழியில் , ஏவல் வினைகளே வந்துள்ளன !
இளம்பூரணர் , அல்வழிக்கண் , நிலைமொழிகள் , பெயர்களாகவும் வரலாம் என்று சில எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்!-

9 . ஆடூஉ + குறியன் = ஆடூஉ குறியன் ×
     ஆடூஉ + குறியன் = ஆடூஉக்  குறியன் √ (அல்வழிப்  புணர்ச்சி)
(ஆடூஉக்  குறியன் – ஆண் குட்டையானவன்)

10 . மகடூஉ + குறியள் = மகடூஉ  குறியள் ×
      மகடூஉ + குறியள் = மகடூஉக்  குறியள் √ (அல்வழிப்  புணர்ச்சி)
(மகடூஉக்  குறியள் – பெண் குட்டையானவள்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 24 Aug 2014 - 10:42

தொடத் தொடத் தொல்காப்பியம் (300)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஊ’ ஈற்றுச் சொல்லான ‘உண்ணூ’ என்பது, அல்வழியில் எப்படிப் புணரும் என்று சற்றுமுன் பார்த்தோம் !

அப்படியானால் வேற்றுமையில் ?

இதற்குத் தொல்காப்பியர் விடை கூறுகிறார் !:-

“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 64)

அஃதாவது – வேற்றுமைப் புணர்ச்சியிலும் , ‘உண்ணூஉக் கொற்றா’ என்று வல்லொற்றுச் சந்தி வந்தது போலவே இங்கும் வரும் !

1 . கொண்மூ + குழாம் = கொண்மூ குழாம் ×
     கொண்மூ + குழாம் = கொண்மூக் குழாம் √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூக் குழாம் – மேகக் கூட்டம்)

2 . கொண்மூ + செலவு = கொண்மூ செலவு ×
     கொண்மூ + செலவு = கொண்மூச் செலவு √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூச் செலவு – மேகத்தின் ஓட்டம்)

3 .  கொண்மூ + தோற்றம் = கொண்மூ தோற்றம் ×
     கொண்மூ + தோற்றம் = கொண்மூத் தோற்றம் √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூத் தோற்றம் – மேகத்தின் தோற்றம்)

4 . கொண்மூ + பறைவு = கொண்மூ பறைவு ×
     கொண்மூ + குழாம் = கொண்மூப் பறைவு √  (வேற்றுமைப் புணர்சி)
(கொண்மூப் பறைவு – மேகத்தின் மறைவு)

கொண்மூ – இஃது இப்போது அரிய சொல் !

பறைவு – இதுவும் மறைந்துவிட்ட சொல்தான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 25 Aug 2014 - 11:28

தொடத் தொடத் தொல்காப்பியம் (301)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இன்று நாம் ‘உடு’ என்ற சொல்லால் நட்சத்திரத்தைக் குறிக்கிறோமல்லவா? அது தொல்காப்பியர் காலத்தில் ,   ‘உடூ’ என்றுதான் வழங்கப்பட்டிருந்தது !

இவ்வாறு குற்றெழுத்தை அடுத்து ‘ஊ’ ஈறு அமையுமானால் , அப்படிப்பட்ட சொற்கள் எப்படிப் புணரும் ?

இதுதான் இன்றைய வினா!

விடை தொல்காப்பியத்தில் ! :-

“குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும்
நிற்றல் வேண்டு முகரக் கிளவி ” (உயிர்மயங். 65)

‘குற்றெழுத்து  இம்பரும்’ – குறில் எழுத்துக்குப் பின்னும் ,

‘ஓரெழுத்து மொழிக்கும்’ – ஓரெழுத்து ஒருமொழியாகிய ‘ஊ’ ஈற்று மொழிக்குப்
பின்னும்,

‘நிற்றல் வேண்டும் உகரக் கிளவி’ - வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி தோன்றும்போது இடையே ‘உ’ வரும்  !

1 . உடூ + குறை = உடூக்குறை ×
    உடூ + குறை = உடூஉக்குறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉக்குறை – நட்சத்திரத்தின் குறை)

2 . உடூ + செய்கை = உடூச்செய்கை ×
    உடூ + செய்கை = உடூஉச்செய்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉச்செய்கை – நட்சத்திரத்தின் செயல்)

3 .  உடூ + தலை = உடூத்தலை ×
    உடூ + தலை = உடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉத்தலை – நட்சத்திரத்தின் தலை)

4 . உடூ + புறம் = உடூப்புறம் ×
    உடூ + புறம் = உடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூஉப்புறம் – நட்சத்திரத்தின் பக்கம்)

5 . தூ + குறை = தூக்குறை ×
    தூ + குறை = தூஉக்குறை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூ – இறைச்சி ; தூஉக்குறை – இறைச்சியின் குறை)

6 . தூ + செய்கை = தூச்செய்கை ×
    தூ + செய்கை = தூஉச்செய்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉச்செய்கை – இறைச்சியின் செயல்)

7 . தூ + தலை = தூத்தலை ×
    தூ + தலை = தூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉத்தலை – இறைச்சியின் தலை )

8 . தூ + புறம் = தூப்புறம் ×
    தூ + புறம் = தூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூஉப்புறம் – இறைச்சியின் பக்கம்)

இவற்றின் பின்னர் , இளம்பூரணர் , வேறு சில எடுத்துக்காட்டுகளை எழுதுகிறார் !

அவை -  

9 .  ஆடூ + கை = ஆடூக்கை ×
    ஆடூ + கை = ஆடூஉக்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉக்கை – ஆணின் கை)

10 .  ஆடூ + செவி = ஆடூச்செவி ×
       ஆடூ + செவி = ஆடூஉச்செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉச்செவி – ஆணின் காது)

11 .  ஆடூ + தலை = ஆடூத்தலை ×
      ஆடூ + தலை = ஆடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉத்தலை – ஆணின் தலை)

12 .  ஆடூ + புறம் = ஆடூப்புறம் ×
      ஆடூ + புறம் = ஆடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடூஉப்புறம் – ஆணின் பக்கம்)

13 . மகடூ + கை = மகடூக்கை ×
     மகடூ + கை = மகடூஉக்கை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉக்கை – பெண்ணின் கை)

10 .  மகடூ + செவி = மகடூச்செவி ×
      மகடூ + செவி = மகடூஉச்செவி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉச்செவி – பெண்ணின் காது)

11 . மகடூ + தலை = மகடூத்தலை ×
      மகடூ + தலை = மகடூஉத்தலை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉத்தலை – பெண்ணின் தலை)

12 .  மகடூ + புறம் = மகடூப்புறம் ×
      மகடூ + புறம் = மகடூஉப்புறம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(மகடூஉப்புறம் – பெண்ணின் பக்கம்)

இங்கே  இரு ஐயங்கள் தோன்றுகின்றன ! –

1. குறிலுக்கு அடுத்த ‘ஊ’ ஈற்றுச் சொல் அல்லது , ஓரெழுத்தில் நிற்கக்கூடிய ‘ஊ’ ஈற்றுச் சொல் பற்றித்தானே நூற்பாவில் கூறப்பட்டுள்ளது ?

2. ‘ஆடூஉ’ , ‘மகடூஉ’ – இவைதாமே சொற்கள் ? இவை எப்படி ‘ஊ’ ஈற்றுச் சொற்களாகும் ?

இதற்குத் தரப்படும் விடைகள் ! –

1 .  ‘உடூ’ எனக் குறிலை அடுத்து வந்த  ‘ஊ’ ஈற்றுச் சொல்போல , ஒருவகையில் ஒப்புமைப்பட்டு ‘ஆடூ’ , ‘மகடூ’ நிற்கின்றன !

2 . புணர்ச்சியில் ‘ஆடூஉ’ , ‘மகடூஉ’ ஆகியவற்றை ‘உ’ ஈறாகக் கொள்ளாமல் ‘ஊ’ ஈறாகவே கொள்ளவேண்டும் ! (ச. பாலசுந்தரம் உரைக்குறிப்பு)

மேல் அனைத்து எடுத்துக்காட்டுகளிலும் வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வருமொழிகளாக வந்துள்ளதைக் கவனிக்க !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 26 Aug 2014 - 11:05

தொடத் தொடத் தொல்காப்பியம் (302)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 ‘தூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘உ’வைச் சந்தியிலே பெற்றுத் , ‘தூஉ + குறை = தூஉக் குறை’ என வரும் என்பதைச் சற்றுமுன் பார்த்தோம் !

அப்படியானால் , ‘பூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அதே முறையில்தான் புணருமா ?

விடை வருகிறது !:-

“பூவெ  னொருபெய  ராயியல் பின்றே
  ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” (உயிர்மயங். 66)

‘பூவென் ஒருபெயர் ’ – ‘பூ’ எனும் பெயர்ச்சொல்லானது ,

‘ஆ இயல்பு அன்றே’ – அந்த இயல்பின்படிப் புணராது ! அஃதாவது , புணர்ச்சியின்போது , ‘உ’இடையே வராது !

‘ஆ வயின்’ – அப் புணர்ச்சியின்போது ,

‘வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ – ‘தூஉக்குறை’ என்பதில் , சந்தியாக ‘க்’ என்ற வல்லொற்று வந்தது போல இங்கு  வருதலும் உண்டு  ; ஆனால்  மெல்லெழுத்து வரலே மிகுதி !

1. பூ + கொடி = பூங் கொடி √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + கொடி = பூக் கொடி √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூங் கொடி , பூக்கொடி – பூவை உடைய கொடி)

2. பூ + செய்கை = பூஞ் செய்கை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + செய்கை = பூச் செய்கை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் செய்கை , பூச்செய்கை – பூவின் செயல்)

3. பூ + தாமம் = பூந் தாமம் √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + தாமம் = பூத் தாமம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூந் தாமம் , பூத்தாமம் – பூமாலை)

4. பூ + பந்து = பூம் பந்து √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + பந்து = பூப் பந்து √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூம் பந்து , பூப்பந்து – பூவால் ஆகிய பந்து)

5. பூ + சோலை = பூஞ் சோலை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + சோலை = பூச் சோலை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் சோலை , பூச்சோலை – பூக்கள் நிறைந்த சோலை)

பூ மென்மையானது என்பதற்கேற்பச் சந்தியிலும் மெல்லெழுத்து மிகுதி ஏற்பட்டதோ?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 28 Aug 2014 - 11:23

                                  தொடத் தொடத் தொல்காப்பியம் (303)
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலில் , ‘தூ’, ‘பூ’ , ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகள் , வேற்றுமையில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய சொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்தோம் !
                                      
அடுத்த ஓரெழுத்து ஒருமொழி – ஊ !
                                      
ஆம் ! ஊ – என்றால் தசை என்பது பொருள் ! ‘கறி’ என்பதும் இதுவே !
 
 இந்த ‘ஊ’ , வேற்றுமையில் , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்களோடு எப்படிப் புணரும் ?
 
விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-
 
                                       “ஊவெ  னொருபெய ராவொடு சிவணும் ” (உயிர்மயங். 67)
 
                                       ‘ஊ என் ஒரு பெயர் ’ – ‘ஊ’ எனப்படும் அந்தப் பெயர்ச்சொல்லானது ,
                                     
  ‘ஆ  ஒடு சிவணும்’ -  ‘ஆ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியைப்போலப் புணரும் !
 
             அஃதாவது –
             
 ‘ஆ + கோடு = ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 29இல் விளக்கினாரல்லவா? அதைப்போலத்தான் ‘ஊ’வும் புணரும்  !
 
1.   + குறை = ஊக்குறை ×
+ குறை = ஊன்குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊச்செய்கை ×
+ செய்கை = ஊன்செய்கை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்செய்கை – தசையின் செயல்)
 
3.   + தலை = ஊத்தலை ×
+ தலை = ஊன்தலை (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்தலை – தசையின் தலைப்பக்கம்)


4.   + புறம் = ஊப்புறம் ×
+ புறம் = ஊன்புறம் (ன் – எழுத்துப் பேறு)  (வேற்றுமைப் புணர்ச்சி)
                    (ஊன்புறம் – தசையின் வெளிப்பக்கம்)
                     
‘ஊ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி இன்று மறைந்து , ‘ஊன்’ என்ற ஈரெழுத்து மொழியே  நிற்கிறது !


இதுதான் மொழி வளர்ச்சி என்பது !
 

                              ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 28 Aug 2014 - 16:13

தொடத்                              தொடத் தொல்காப்பியம் (304)                                                                      
                                                -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                      உயிர்மயங்கியலின் ‘ஊ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !
                                    
  முன்னதாக  ‘ஊ + குறை = ஊன் குறை’ என்று ,வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய வருசொற்களோடு , ‘ன்’ பெற்றுப் புணரும் எனக் கண்டோம் !
                
    இப்போது, அதே புணர்ச்சி வேறுமாதிரியாகவும் நடக்கலாம் என்கிறார் தொல்காப்பியர் ! :-
 “அக்கென் சாரியை பெறுதலு முரித்தே” (உயிர்மயங். 68)
 
1.   + குறை = ஊன் குறை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ குறை = ஊனக் குறை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப்                                                                                                          புணர்ச்சி)
                (ஊனக் குறை – தசையில் உள்ள குறை)
 
2.   + செய்கை = ஊன் செய்கை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ செய்கை = ஊனச் செய்கை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனச் செய்கை – தசையின் செய்கை)
 
3.   + தலை = ஊன் தலை (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ தலை = ஊனத் தலை (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                            புணர்ச்சி)
                (ஊனத் தலை – தசையின் தலை)
 
4.   + புறம் = ஊன் புறம் (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
+ புறம் = ஊனப் புறம் (ன் – எழுத்துப் பேறு ; அக்கு - சாரியை) (வேற்றுமைப் 
                                                                                                      புணர்ச்சி)
                (ஊனப் புறம் – தசையின் வெளிப்பக்கம்)
 
முன்பு ,  ‘கொண்மூ + குறை = கொண்மூக் குறை’ என்ற புணர்ச்சியைப் (உயிர்மயங். 64) பார்த்தோம் ; ‘உடூ + குறை  = உடூஉக்குறை’ (உயிர்மயங். 65) என வந்ததையும்
கண்டோம் ; ‘ஊ + குறை = ஊன் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 67), ‘ஊ + குறை
= ஊனக் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 68) பார்த்துள்ளோம்!


 மேல் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர்,  ‘இன்’ சாரியை பெற்றும் இந் நிலைமொழிகள் புணரலாம் என்பதைத்  தெரிவிக்கிறார் ! –


5.கொண்மூ + குழாம் = கொண்மூவின் குழாம் (இன் - சாரியை) (வேற்றுமைப்
                                                                                            புணர்ச்சி)
                (கொண்மூவின் குழாம் – மேகத்தின் கூட்டம்)


6.உடூ + தலை = உடூவின் தலை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (உடூவின் தலை – நட்சத்திரத்தின் தலை)


7.ஊ + குறை = ஊவின் குறை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (ஊவின் குறை – இறைச்சியின் குறை)


 ‘உடூவின் தலை’ என்பதில் நடுவில் ‘உ’ வரவில்லை என்பதைக் கவனிக்க !
               

                         ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 30 Aug 2014 - 15:01

தொடத் தொடத் தொல்காப்பியம் (305)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது , ‘எ’ , ‘ஒ’ ஆகிய ஈறுகளைப் பேச வருகிறார் தொல்காப்பியர் !  :-

 “எகர வொகரம் பெயர்க்கீ  றாகா
  முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
 தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான” (உயிர்மயங். 70)

  ‘எகர ஒகரம் பெயர்க்கு ஈ றாகா’ -  ‘எ’ ,  ‘ஒ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியிலே வராதவை !

‘முன்னிலை மொழிய என்மனார் புலவர்’ – இந்த இரண்டு எழுத்துகளும் முன்னிலை வினைச் சொற்களுக்கு ஈறாக வரும் !

‘தேற்றமும் சிறப்பும் அல்வழி யான’ – தெளிவுப் பொருளிலும் , சிறப்புப் பொருளிலும் , அல்வழிப் புணர்ச்சியில்,  இடைச்சொற்களாக வருவதானால்  வினையில் இவை ஈறாக வரும் !

 (அ)முன்னிலை வினைக்கு ஈறு –

1 . ஏஎ (முன்னிலை வினைச்சொல்; இதில் ‘எ’ ஈறானமை காண்க !)
     ஏ – இந்த வினைக்கு, ‘எனக்கு ஒரு வேலை இடு ! ’ என்பது பொருள் .
           ஏஎ  எனினும் , ஏ எனினும் பொருள் ஒன்றே !

2 . ஓஒ (முன்னிலை வினைச்சொல் ; இதில் ‘ஒ’ ஈறானமை காண்க !)

     ஓ – இந்த வினைக்கு, ‘இவ்வாறு செய்வதைக் கைவிடு  ! ’ என்பது பொருள் .
              ஓஒ  எனினும் , ஓ எனினும் பொருள் ஒன்றே !

  (ஆ) தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

3. ஏஎ – இது தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘எ’ என்பதைக் கவனிக்க!
          தேற்றப் பொருள் – தெளிவுப் பொருள் .

ஏஎ கொண்டான் – அவன் பெற்றான் என்பதில் ஐயம் சிறிதுமில்லை என்பது பொருள் !

ஏஎ + கொண்டான் = ஏஎ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)

சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-

4 . ஓஒ – இது சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘ஒ’ என்பதைக் கவனிக்க!

ஓஒ கொண்டான் – பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆதலின் அவன் பெற்றான் !

ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான்  (அல்வழிப் புணர்ச்சி)
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 31 Aug 2014 - 11:51

தொடத் தொடத் தொல்காப்பியம் (306)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் ‘எ’ , ‘ஒ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் ! :-

  “தேற்ற வெகரமுஞ் சிறப்பி  னொவ்வும்
    மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா”  (உயிர்மயங். 71)

‘தேற்ற எகரமும் ’ – தெளிவுப் பொருளில் வரும்  ‘எ’ஈற்று இடைசொல்லும் ,

‘சிறப்பின் ஒவ்வும்’ – சிறப்புப் பொருளில் வரும் ‘ஒ’ ஈற்று இடைச்சொல்லும் ,

‘மேற்கூறு இயற்கை’ – மேலே , முன் சூத்திரத்தில் , கூறப்பட்டது போன்றே வல்லொற்று சந்தியாக வராது !

1. யானேஎ + கொண்டேன் = யானேஎக்  கொண்டேன்  ×
யானேஎ + கொண்டேன் = யானேஎ  கொண்டேன்  √  (அல்வழிப் புணர்ச்சி)
(அவன் பெற்றானா இல்லையா என்று ஐயம் வந்து அவனைக் கேட்கும்போது , தெளிவாக , ‘ஐயம் வேண்டாம் நானே (யானேஎ) பெற்றேன்’ எனச் சற்று நீட்டிக் கூறுகிறானல்லவா? இதுதான்
தேற்றப் பொருள் ! இதனைத் தருவதற்காகத்தான்  அந்த ‘எ’ !)

2. நீயேஎ + கொண்டாய் = நீயேஎக்  கொண்டாய்  ×
நீயேஎ + கொண்டாய் = நீயேஎ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

3. அன்னேஎ + கொண்டான் = அவனேஎக்  கொண்டான்  ×
அவனேஎ + கொண்டான் = அவனேஎ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

4. ஓஒ + கொண்டேன் = ஓஒக்  கொண்டேன்  ×
ஓஒ + கொண்டேன் = ஓஒ  கொண்டேன்  √(அல்வழிப் புணர்ச்சி)

5. ஓஒ + கொண்டாய் = ஓஒக்  கொண்டாய்  ×
ஓஒ + கொண்டாய் = ஓஒ  கொண்டாய்  √(அல்வழிப் புணர்ச்சி)

6. ஓஒ + கொண்டான் = ஓஒக்  கொண்டான்  ×
ஓஒ + கொண்டான் = ஓஒ  கொண்டான்  √(அல்வழிப் புணர்ச்சி)

ஏ , ஓ – இடைச் சொற்கள் ; ‘யானே’ என்பதில் ‘யான்’ , பெயர்ச்சொல் !

இதன்பின் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணத்தை வருமாறு காட்டலாம் !:-

7. ஏஎ + கொற்றா = ஏஎ கொற்றா ×
ஏஎ + கொற்றா = ஏஎக் கொற்றா √ (அல்வழிப் புணர்ச்சி)

8. ஏஎ + சாத்தா= ஏஎ சாத்தா ×
ஏஎ + சாத்தா = ஏஎச் சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)

9. ஏஎ + தேவா = ஏஎ தேவா ×
ஏஎ + தேவா = ஏஎத் தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)

10. ஏஎ + பூதா = ஏஎ பூதா ×
ஏஎ + பூதா = ஏஎப் பூதா √ (அல்வழிப் புணர்ச்சி)

ஏ – வினைச் சொல் ; எ – அளபெடை .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 38 of 84 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 61 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக