புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
19 Posts - 49%
heezulia
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
2 Posts - 5%
Guna.D
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 3%
Shivanya
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
10 Posts - 2%
prajai
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
jairam
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டத்தால் என்ன பயன்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 8:43 am

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும்படி எல்லா உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
:-
ஒரு பிரச்னை ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிப் புரட்டிப் போட்டிருக்கிறது.இப்போதாவது, இதுவரை விசும்பலும், அவமானமுமாக மூடி மறைக்கப்பட்ட அநீதிகள், அரங்கத்துக்கு எடுத்து வரப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
அதேநேரத்தில்,சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இந்தப் பிரச்னைக்குச் சட்டம் மட்டுமே தீர்வாகிவிடுமா என்பதுதான் அது.
:-
டிசம்பர் 16 ஆம் தேதி இரவு நடந்த அந்தக் கொடிய சம்பவம்முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம்ஆகப் போகிறது. இன்னமும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இதுவரை காவல்துறையும், நீதிமன்றமும், அரசும் இந்தப் பிரச்னையை உளப்பூர்வமான உறுதியுடன் எதிர்கொண்டுள்ளதா? தேர்தல்முடிந்து ஆட்சி மாறினால், முதல்வரின் படத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு அலுவலகங்களில் மாற்றி விடுகிறார்களே, அதேபோல, சம்பவம் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்போது, இதற்குள் இந்தியாவில் உள்ள அத்தனை காவல் நிலையங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளிருக்கு, சட்டப்படி என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன என்கிற தகவல் பலகை பளிச்சென்று பார்வையில் படுவதுபோல வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? ஏன் இல்லை?
பாலியல் வன்கொடுமைப் பிரச்னையில் காவல்துறையின்மெத்தனமும், குற்றவாளிகள்மீது அவர்கள் காட்டும் அனுதாபமும்தான் பாதிக்கப்பட்ட மகளிரைக் காவல் நிலையத்தை அணுக விடாமல் தடுக்கின்றன. மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். அந்த மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களும், ஆணாதிக்கக் காவல்துறை அதிகாரிகளின் கைப்பாவையாகச் செயல்படும் அவலம்தான் காணப்படுகிறதே தவிர, தன்னிச்சையாகப் பெண்களுக்காக அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை நிலை.
:-
இரண்டு வாரங்களுக்கு முன்னால், மேகாலய மாநிலத் தலைநகர் இம்பாலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 18 வயதுப் பெண், புகார் கொடுக்கக் காவல்நிலையத்தை அணுகி இருக்கிறார். நடந்ததுஎன்ன தெரியுமா? அவர் ஐந்து நாள்கள் காவல்துறைக் கண்காணிப்பில் காவலில் வைக்கப்பட்டார். எதற்குத் தெரியுமா? அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய!
:-
இந்தியக் குற்றவியல் சட்டப்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர் விசாரணைக்காகவோ, குற்றப்பதிவு செய்வதற்காகவோ காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்படக்கூட சட்டம் அனுமதிக்கவில்லை. இதெல்லாம்அவரை விசாரணைக்குக் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்ட காவல்துறை அதிகாரிக்கும், அதற்கு அனுமதித்த விசாரணை நீதிபதிக்கும் தெரியாதா என்ன? காவல் நிலையத்தில் குற்றப்பதிவுக்காகக் காவலில் வைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்த்தால் - நிச்சயமாக, வார்த்தைகளால் எள்ளிநகையாடவாவது செய்திருப்பார்கள், மனதைக் காயப்படுத்தும் விதத்தில் கேள்வி கேட்டிருப்பார்கள் - அந்தப் பெண் இதைவிடப் பாலியல் வன்கொடுமையே மேல் என்கிற எண்ணத்துக்கு வந்திருப்பார்.
:-
கடந்த 15 நாள்களில் நடந்தேறியிருக்கும் சில சம்பவங்கள் இவை.
:-
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினரால்தரப்பட்ட தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
:-
பெங்களூரில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்யப்படாமல், காவல்துறையும், ஊர்ப் பெரியவர்களும் சேர்ந்து, ஏற்கெனவே திருமணமாகி இருந்த குற்றவாளிக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி இருக்கிறார்கள். காவல்துறையே, பாலியல் வன்கொடுமை செய்தவனுக்குச் சாதகமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகப் பெண்ணின் தந்தை முறையிட்டிருக்கிறார்.
:-
கேரளத்தில் 16 வயதுப் பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியவழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்றம் 36 பேருக்குத் தண்டனை வழங்கியது. நான்கு ஆண்டுகள் நீண்டு நின்ற வழக்கில், 2005 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம், போதிய சாட்சியங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டி 35 பேரை விடுதலை செய்துவிட்டது. அந்த வழக்கு மேல் முறையீட்டில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வழக்கு பலவீனமானதற்குக் காரணம், குற்றவாளிகளுக்கு எதிராகப் பலமான சாட்சியங்களையோ, சட்டப் பிரிவுகளையோ காவல்துறை பயன்படுத்தாமல் விட்டதுதான்.
:-
கடுமையான சட்டம் கொண்டு வருவதும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீலிக்கண்ணீர் வடிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சாதகமாகக் காவல்துறை இல்லாமல் போனால் சட்டங்களால் என்ன பயன்? கடந்த 40 ஆண்டுகளில் இதுவரைஆறு உயர்நிலைக் குழுக்கள் காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பித்துவிட்டன. இதுவரை, அவற்றில் ஓர் அறிக்கை வேண்டாம், ஒரு பரிந்துரைகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
:-
உச்ச நீதிமன்றம் காவல்துறை சீர்திருத்தங்களை உடனடியாகநடைமுறைப்படுத்தச் சொல்லியும், எந்தவொரு மாநிலமும், மத்திய அரசும் அதைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால், நமது அரசியல்வாதிகள் காவல்துறையின் பாதுகாப்பிலும், காவல்துறையினர் அரசியல்வாதிகள் தரும் பாதுகாப்பிலும் இருப்பதுதான் காரணம். இந்த லட்சணத்தில், சட்டங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகத்தான் இருக்கும்!
:-
தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:39 am

சட்டம் வழக்குகள் தீர்ப்புகள் மட்டுமே
திருத்திவிடாது சமுதாயத்தை

சீர்கெட்ட சிலர் சீரானாலே
சமுதாயம் மேன்மை அடையும்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக