புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
62 Posts - 57%
heezulia
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
104 Posts - 59%
heezulia
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_m10பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 29, 2012 4:56 pm

ஒரு ஊரில் பெரிய வாள்சண்டை வீரன் இருந்தான். அவன் வீட்டில் ராட்சத சைஸ் எலி ஒன்று தொல்லை கொடுத்து வந்தது. எவ்வளவோ முயன்றும் அதைக் கொல்ல வீரனால் முடியவில்லை.
அவனுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவன் பூனைகள் வளர்த்து வந்தான்.எலிகளை விரட்டிப் பிடிப்பதில் மகா திறமைசாலியான பூனைகள் அவை.இதற்கென்ற தனி பயிற்சி வேறு கொடுத்திருந்தான். அந்தப் பூனைகளில் ஒன்றை ஒரு நாளைக்கு மட்டும் தனக்கு கொடுத்து உதவும்படி கேட்டான் வீரன்.
வாள் சண்டை வீரனுக்கு தன் ‘எலி எக்ஸ்பர்ட் பூனை’ ஒன்றைக் கொடுத்தான் பூனைக்காரன். அந்தப் பூனைக்கு கூரிய நகங்கள். ரொம்ப நம்பிக்கையோடு அந்தப் பூனையைக் கொண்டுபோனான் வீரன்.
:-
வீட்டுக்குப் போய் அந்த எலிக்கு எதிராக பூனையை நிறுத்தி, துரத்திப் பிடிக்கும்படி உத்தரவிட்டான் வீரன்.
ஆனால் எலியைப் பார்த்ததும் பூனை பயந்து பின்வாங்கிவிட்டது. பூனையைத் திருப்பிக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான் வீரன்.
‘ஓ அப்படியா… இந்த முறை நான் வேறு பூனை தருகிறேன்’,என்று கூறி, ஒரு கறுப்பு வெள்ளைப் பூனையைத் தந்தான்.
:-
‘எலி பிடிப்பதில் பல வருஷ பயிற்சி பெற்ற பூனை இது. ரொம்ப திறமைசாலி’ என்று சான்றிதழ் வேறு தந்தான் பூனைக்காரன்.
இந்தப் பூனை, எலியைக் கண்டு பின்வாங்கவில்லை. கடுமையாக சண்டையெல்லாம் போட்டாலும், கடைசியில் தோற்றுவிட்டது. எலிக்குதான் வெற்றி.
இரண்டாவது பூனையையும் திருப்பிக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான் வீரன். இம்முறை மூன்றாவதாகநல்ல கொழுத்த ஜெட் பிளாக் பூனையைக் கொடுத்தான் பூனைக்காரன்.
:-
“இந்த முறை கண்டிப்பாக எலிபிடிபட்டுவிடும். காரணம் நம்ம ஜெட் பிளாக் பூனைக்குதியானமெல்லாம் தெரியும். எப்பேர்ப்பட்ட திறமையான எலியையும் மடக்கிப் பிடித்துவிடும்,” என்றான்.
ஆனால் அந்தப் பூனையும் எலியிடம் தோற்றுத் திரும்பியது. வீரனுக்கு எலியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
:-
இம்முறை பூனைக்காரன் ரொம்ப நம்பிக்கையோடு வேறொரு பூனையைக் கொடுத்தான்.
“என்னிடம் உள்ள பூனைகளிலேயே மூத்தது இந்தப் பூனைதான்… அபார திறமை… இதுவரை தோல்வியே கண்டதில்லை. ஆனால் பார்க்கத்தான் அத்தனை நன்றாக இருக்காது,” என்று கூறி கொடுத்தான்.
வீரனும் அந்த பூனையை எடுத்துக் கொண்டு வழக்கம்போல வீட்டுக்குப் போய் எலியைக் கொல்ல அனுப்பினான்.
பூனையைப் பார்த்ததும், மீண்டும் ஆவேசமாக அதன் மீது பாயத் தயாரானது எலி. ஆனால் இந்தப் பக்கம் பூனை எந்த ஆர்வமும் காட்டாமல், அமைதியாக உட்கார்ந்து கொண்டது. இப்போது எலிக்கு லேசாக பயம் வந்துவிட்டது. சற்று தயக்கத்தோடு அந்த பூனையை பார்த்துக் கொண்டிருந்தபோதே… சட்டென்று பாய்ந்து ஒரே அடியில் எலியைக் கொன்றது பூனை!
வீரனுக்கு நிம்மதி. பூனையைஅதன் சொந்தக்காரனிடம் கொண்டுபோனான்.
:-
“இவ்வளவு வயசான கிழட்டுப் பூனை அந்த வலிமையான எலியை ஒரேயடியில் கொன்றுவிட்டது.ஆனால் இதற்கு முன் நீ கொடுத்த அத்தனை பூனைகளும் நன்கு வலிமையாகக் காணப்பட்டும், தோற்றுவிட்டது எப்படி?” என்று கேட்டான்.
:-
உடனே பூனைக்காரன், ‘என் பின்னால் வா’ என வீரனை அழைத்தான். “எலி பிடிக்கும் கலை தெரிந்த என் பூனைகளுக்கு இது நிச்சயம் மானப் பிரச்சினைதான். என்னுடன் வா… அவை நிச்சயம் இதுபற்றிவிவாதித்துக் கொண்டிருக்கக் கூடும்,” என்றான்.
உள்ளே…
எலியிடம் தோற்ற பூனைகள் வட்டமாக அமர்ந்திருந்தன. நடுவில் எலியிடம் முதலில் தோற்ற பூனை நின்றுகொண்டிருந்தத. அவற்றுடன் எலியைக் கொன்ற மூத்த பூனையும்.
:-
முதல் பூனை சொன்னது… “என் பலத்தை யாராலும் சந்தேகிக்க முடியாது..” என்று ஆரம்பித்தது.
“அப்படியானால் ஏன் அந்த எலியிடம் தோற்று ஓடி வந்தாய்? வெறும் பலம் மட்டும் போதாது தம்பி… உன்னைவிட பலசாலியான எலியும் இருக்கக் கூடுமல்லவா?” என்று திருப்பிக் கேட்டது மூத்த பூனை.
:-
அடுத்து கறுப்பு – வெள்ளைப் பூனை:
“சரி… அவனை விடுங்கள்… நான் பலசாலி மட்டுமல்ல.. எலிகளைப் பிடிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் உண்டு எனக்கு. அத்தனை வித்தைகளும் தெரியும்.. என்னால் அந்த எலியை தோற்கடிக்க முடியாதது ஏன்?”
:-
மீண்டும் மூத்த பூனை பதில்சொன்னது:
“நிஜமான களத்துக்கு வரும்போது, வெறும் பயிற்சியும், பலமும், வித்தைகளும் மட்டும் போதாதே..!”
அடுத்து பேசிய கறுப்புப் பூனை, “நல்ல பயிற்சி, தியானம் மூலம் என் உடலை அனைத்துக்கும் ஏற்ப பக்குவமாக்கிக் கொண்டிருக்கிறேன். எக்கச்சக்கமான உத்திகள் எனக்குத் தெரியும்… என்னையும்தான் அந்த எலி தோற்கடிச்சிடுச்சே!” என்றது.
:-
கறுப்புப் பூனைக்கும் மூத்த பூனை பதில் சொன்னது: “கண்ணா.. நீ நல்ல வீரன்., மகா திறமைசாலி, மனதாலும் உடலாலும் பலசாலி. ஆனால் உனக்கு எலியைக் கொல்ல வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் ஏதோ கடனுக்குப் போய் நின்றாய். உன் மனதிலிருந்த அலட்சியம், இலக்கற்ற நிலையை எலி தெரிந்து கொண்டுவிட்டது என்று அர்த்தம். உன் பலம், உத்தி, தியானம் அனைத்தையும் ஒருநிலைப்படுத்த முடியாமல் போனதால் தோற்றாய்…” என்றது.
அப்படின்னா நீங்க மட்டும் எப்படி ஜெயிச்சீங்க என்று மூன்று பூனைகளும் திரும்பக் கேட்டன.
:-
அதற்கு மூத்த பூனை ஒரு சின்ன கதை சொன்னது…
“ஒரு ஊரில் எனக்குத் தெரிந்து பூனை ஒன்று… பனி மாதிரி வெள்ளை வெளேர் முடி. வயசும் அதிகம். அத்தனை பலசாலியும் கூட இல்லை. இறைச்சி கூட உண்ணாத சைவம் அந்த பூனை. எப்போதாவது கொஞ்சம் ஒயின் சாப்பிடும். பல வருடங்களாகஎந்த எலியையும் பிடித்தது கூட இல்லை.
ஆனால்… எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாத இயல்புடைய அந்தப் பூனை வீட்டுக்குள் காலடி வைக்கும்போதே, அத்தனை எலிகளும் ஓட்டமெடுக்கும். அப்படி ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருந்தது பூனை. தூக்கத்தில் கூட எலிகளைத் துரத்திக் கொண்டே இருக்கும் அந்தப் பூனை.
:-
அந்தப் பூனையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரை வெற்றிகொள்ள வன்முறை, உத்திகள், திறமை போன்றவை முக்கியம்தான்… ஆனால் இவை அவ்வளவாக இல்லாவிட்டாலும்கூட, மனதை ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தில் இறங்குவது வெற்றியை எளிதாகத் தேடித் தரும்!”
:-
- நன்றி என்வழி தளம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:03 pm

நல்ல கருத்துள்ள சிந்தனைக் கதை .பகிர்வுக்கு நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 29, 2012 8:53 pm

பல வருடங்களாகஎந்த எலியையும் பிடித்தது கூட இல்லை.
ஆனால்…பூனை வீட்டுக்குள் காலடி வைக்கும்போதே, அத்தனை எலிகளும் ஓட்டமெடுக்கும். அப்படி ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருந்தது பூனை.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! 1357389பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! 59010615பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Images3ijfபூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக