புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_m10இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 9:23 pm

First topic message reminder :

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 15cbmpconductor_924956f

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!

ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்? அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’

ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.

அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?

பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.

காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி, “அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.

காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வோம், பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.

அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.

அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!

இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டியௌ நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.

கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.

எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?

“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!

கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.

இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.

வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.

பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.

தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.

“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!

கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது… இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811

Courtesy: The ஹிந்து
http://www.thehindu.com/life-and-style/metroplus/article2896247.ece


காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Tue Dec 18, 2012 10:04 am

இந்தப்பதிவைக்கண்டவுடன் அவரைப்பாராட்டாமல் இருக்க இயலவில்லை..நேற்று மாலை அலைபேசியில் அழைத்து பாராட்டி சிறிதுநேரம் அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல மனிதர். இவரைப்பார்த்து இவரைப்போன்று இன்றைய இளைய தலைமுறையினர் வரவேண்டும் என்பதே விருப்பம். இறைவன் அவருக்கு உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்..வாழ்க வளமுடன்.



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:07 am

காயத்ரி வைத்தியநாதன் wrote:இந்தப்பதிவைக்கண்டவுடன் அவரைப்பாராட்டாமல் இருக்க இயலவில்லை..நேற்று மாலை அலைபேசியில் அழைத்து பாராட்டி சிறிதுநேரம் அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். நல்ல மனிதர். இவரைப்பார்த்து இவரைப்போன்று இன்றைய இளைய தலைமுறையினர் வரவேண்டும் என்பதே விருப்பம். இறைவன் அவருக்கு உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்..வாழ்க வளமுடன்.
அருமை காயத்ரி




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:08 am

பார்த்திபன் wrote:நடத்துனர் என்கிற சொல்லுக்கு இவர் மட்டுமே பொருத்தமானவர். பிறரை நல்வழியில் நடத்த முயலும் இவர் தான் உண்மையான நடத்துனர். நல்ல பகிர்வு. பாராட்டுகள்! மகிழ்ச்சி
சூப்பருங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:09 am

ரஷ்லக் பகிர்வு நன்று




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:10 am

ச. சந்திரசேகரன் wrote:[b]திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.
சந்திரா புகழாரம் சூப்பர்




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 1:17 pm

யினியவன் wrote:
ச. சந்திரசேகரன் wrote:[b]திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.
சந்திரா புகழாரம் சூப்பர்
இனியவருக்கு நன்றிகள்.



இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! - Page 2 425716_444270338969161_1637635055_n
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Dec 18, 2012 2:36 pm

திருவாளர் கனகு அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி ஒர் சிலேடைப் பாடல்

தினமும் திருக்குறளாய் தாவியே கத்தும்
கனைத்தே கருவை வளர்க்கும் - வினையாலே
தன்னை உணர்த்தி தவம் செய்யும்
கனகும் கழுகுமிங் கொன்று


விளக்கம்

கனகார்

1. தினமும் திருக்குறள் பயணிக்கையிலே கூறுவார்
2. அவர் கனைத்து பொருள்கூறுகையில் கருப்பொருள் விளங்கும்
3. தனது பணியின் இடையே தவமாக இதை செய்கிறார்

கழுகு

1. தினமும் திருக்குறள் போல இரண்டடி வைத்து மரத்தில் நின்று கத்தும்
2. கனப்புபோல் அணைத்து கருவை வளர்க்கும்
3. உணவு கிடைக்கும் வரையில் தன்னையறிந்து பொறுமையுடன் சுற்றும்





Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக