புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? – அது ஒரு நீண்ட பயணம்! வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது.
அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும்.
அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது’ என்ற தகவலை உணர்த்தும். அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவதில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது.
இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை. நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளை கொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப்பயணம் சரியாக நிகழும். முறையாக, முழுமையாக ஜீரணமாகி மலமும் நன்றாக வெளியேறும்.
இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும். மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும்.
உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும், இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து, நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.
பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு. நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன. பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது. சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது..
இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் இளம் வயதினருக்கு உருவாகும் ‘லைப் ஸ்டைல்’ பிரச்சினைகள். அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.
மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மலக்குடலில் இரு பகுதிகளிலும் குஷன் போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு, முக்கும்போது இந்த குஷன் பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும்.
இதைத் தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.
மூல நோயின் அறிகுறி என்ன?
மலம் கழிக்கும்போது ரத்தம் கொட்டும். ஆனால் பெரும்பாலும் வலிக்காது. அசவுகரியமாக இருக்கும்.
ஆசன வாய் வெடிப்பு என்பது என்ன?
இறுகிய மலத்தை, முக்கி வெளியேற்றும் நிலை தொடரும்போது அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும்போது கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். அரைத்த கண்ணாடியை வைத்து தேய்த்ததுபோன்ற கொடுமையை அனுபவிப்பார்கள். ரத்தம் கொட்டும். புண்ணாகி அதிக தொந்தரவை ஏற்படுத்தும்.
‘பவுத்ரம்’ என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?
மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்’ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன. அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்’ போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்’க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.
20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
பெருங்குடல் புற்று நோய்க்கு என்ன அறிகுறி?
மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.
ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்துபற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம். ‘கொலோனோஸ்கோபி’ முறையில் பரிசோதனையும் செய்யலாம்.
அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும். அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.
முகநூல்
அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும்.
அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது’ என்ற தகவலை உணர்த்தும். அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவதில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது.
இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை. நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளை கொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப்பயணம் சரியாக நிகழும். முறையாக, முழுமையாக ஜீரணமாகி மலமும் நன்றாக வெளியேறும்.
இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும். மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும்.
உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும், இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து, நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.
பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு. நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன. பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது. சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது..
இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் இளம் வயதினருக்கு உருவாகும் ‘லைப் ஸ்டைல்’ பிரச்சினைகள். அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.
மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மலக்குடலில் இரு பகுதிகளிலும் குஷன் போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு, முக்கும்போது இந்த குஷன் பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும்.
இதைத் தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.
மூல நோயின் அறிகுறி என்ன?
மலம் கழிக்கும்போது ரத்தம் கொட்டும். ஆனால் பெரும்பாலும் வலிக்காது. அசவுகரியமாக இருக்கும்.
ஆசன வாய் வெடிப்பு என்பது என்ன?
இறுகிய மலத்தை, முக்கி வெளியேற்றும் நிலை தொடரும்போது அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும்போது கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். அரைத்த கண்ணாடியை வைத்து தேய்த்ததுபோன்ற கொடுமையை அனுபவிப்பார்கள். ரத்தம் கொட்டும். புண்ணாகி அதிக தொந்தரவை ஏற்படுத்தும்.
‘பவுத்ரம்’ என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?
மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்’ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன. அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்’ போன்று உருவாகிவிடும்.
மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்’க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.
20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
பெருங்குடல் புற்று நோய்க்கு என்ன அறிகுறி?
மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.
ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்துபற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம். ‘கொலோனோஸ்கோபி’ முறையில் பரிசோதனையும் செய்யலாம்.
அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும். அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.
தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.
முகநூல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி முஹம்மத்..!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|