புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
87 Posts - 55%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
59 Posts - 37%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
27 Posts - 79%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
4 Posts - 12%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Apr 07, 2012 7:48 pm

நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி

தமிழில் இருக்கும் அறநூல்களில் பதினெண் கீழ் கணக்கு நூல்களில் வராத நூல்களில் மேலும் ஒரு சிறப்பான நூல் நன்னேறி. இதை எழுதியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார்.

இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார்.

இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார்.

மூதுரை, நல்வழி போல் சொல்ல வந்த கருத்தும் அதை புரிய அழகான ஒரு உதாரணத்துடன் கூடிய அழகிய வெண்பாவானால் ஆனது நன்னேறி. ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும், 40 நேரிசை வெண்பா பாடல்களும் உடையது இந்நூல். நன்னெறி என்றால் நன்மை நெறி என்று பொருள்படும்.

நல்ல தமிழ் தொடர் பதிவில் இந்த அறிய நன்னெறிப் பாடல்களைக் காண்போம்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Apr 07, 2012 8:07 pm

கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.

பொருள் விளக்கம்
மின்னும் சடா முடி உடைய விநாயகன் திருப்பாதங்களைத் தொழுது எழ, நன்னெறிப் வெண்பா பாடல்கள் நாற்பதும் இனிதாக வரும்.

நூல்
1 . உபசாரம் கருதாமல் உதவுக

என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?

பொருள் விளக்கம்

அழகான பூ அணிந்த மணமான கூந்தல் உடையவளே, தினந்தோறும் உணவின் சுவை அறியாத கை உணவை எடுத்துக் நாவிற்கு கொடுப்பது புகழுக்காகவா !! அது போல் நமக்கு அறிமுகம் ஆகாமல், நன்கு முகமன் கூறாதவருக்கும் நல்ல குணம் படைத்தவர்கள் உதவுவார்கள்.

2 . வன்சொல்லும் இனிமையாகும்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.

பொருள் விளக்கம்

குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமக்கு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும். பக்தியுடன் தொண்டர் ஒருவர் இட்ட கல்லும் அழகான மலராக மாறியது. ஆனால் கரும்பு வில் உடைய மன்மதன் எறிந்த பூ கணைகளும் சிவபெருமானுக் கோபம் ஊட்டி மன்மதை எரிக்கச் செய்தது.

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 8:21 pm

///குற்றம் இல்லாதவர், நம் மேல் அன்பு வைப்பவர் நம்முடைய நலம் பொருட்டு கூறும் கடினமான சொல்லும் நமககு நன்மைப் பயக்கும். ஒன்றுக்கும் உதவாமல் இனிதாக பேசுபவர் பிறர் சொல் இதற்கு மாறாக இருக்கும்.///

அற்புதம் சதாசிவம் அவர்களே...பகிர்விற்கு நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 8:25 pm

இரு பாடல்களுக்குமான விளக்கமும் அருமையாக இருந்தது அருமையிருக்கு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 8:39 pm

அருமை அருமை அருமை தொடருகள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 08, 2012 9:57 am

நன்றி ரா ரா, நன்றி அதி, நன்றி கேசவன்... நன்றி




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 08, 2012 10:22 am

3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.

பொருள் விளக்கம்

தங்கக் குன்று போல் அழகான தனங்களை உடைய பெண்ணே, பசுவிடம் பால் கறக்க விரும்புபவர் அதன் கன்றை காட்டி பால் கரப்பதை போல். நமக்கு உதவி செய்ய நினைக்காத ஒருவரிடன் இருந்து உதவி தேவையெனின், அவருடன் இணங்கி இருப்பவர் ஒருவர் மூலமாக அந்த உதவியை பெற வேண்டும் என்பதை உணர்ந்து கொள்.

4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

பொருள் விளக்கம்

ஒருவருக்கு உதவாத உப்புக் கடல் நீர் மேகங்களால் கவரப்பட்டு மழை நீராக மக்களுக்கு பயன்படுவது போல் ஒருவருக்கும் உதவி செய்யாத ஒருவருடைய செல்வம் இறைவனின் திருவருளால் உதவி செய்பவருடைய கைகளில் சென்று விடும்.

5 . நட்பிற்பிரியலாகாது
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.

பொருள் விளக்கம்

பூங்குழல்களை உடைய பெண்ணே, நெல் உமியுடன் சேர்ந்து இருக்கும் வரை தான் அது விதை நெல்லாக இருக்கும். அந்த உமி நெல்லில் இருந்து விலகியவுடன் மீண்டும் இணைத்தாலும் அது விதை நெல்லாக வளரும் பலம் பெறாது. அது போல் நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

தொடரும் ...



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 1:41 pm

நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

கருத்துகள் அத்தனைக்கும் நன்றிகள் அருமையிருக்கு

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 09, 2012 5:15 pm

அதி wrote:நன்கு பழகி விலகிய நண்பர்கள் மீண்டும் இணைந்தாலும், அந்த நட்பில் முன்பு இருந்தது போல் நட்பு இருக்காது. ஆதலால் நண்பர்களிடம் குற்றம் கண்டு விலகுதல் கூடாது.

கருத்துகள் அத்தனைக்கும் நன்றிகள் அருமையிருக்கு

நன்றி அதி :நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Apr 09, 2012 5:49 pm

6 . தம்பதிகள் ஒற்றுமை
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.

பொருள் விளக்கம்

பதினாறு கலைகள் நிரம்பிய முழு மதி போல் முகத்தை உடையவளே, ஒரு விஷயத்தை இரண்டு கண்களும் தான் நோக்குகின்றது, ஆனால் பார்வை ஒன்று தான். அது போல் கணவனும், அன்பு மனைவியும் இரண்டு நபர்கள் ஆனாலும் சிந்தனையில், செயலில் ஒத்து இருந்தால் சிறந்த பலன்கள் பெறுவார்கள்.

7 . கல்விச் செருக்குக் கூடாது
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.

பொருள் விளக்கம்

ஒருவருக்கு கடல் அளவு அறிவு பெற்று இருந்தாலும், சீறும் சிங்கம் போல் கர்வத்துடன் இருக்கக்கூடாது. முனிவர்களுக்கு அரசரான குறு முனி அகத்தியர் ஏழு கடலையும் குடித்து விட்டது போல், நம் ஆனவத்தை அடக்க வேறு ஒருவரும் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

8 . ஆறுவது சினம்
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.

பொருள் விளக்கம்

நீரின் அளவு பெருகி இருக்கும் போது அணையை காப்பதற்கு அவசரப்பட்டு அணையை உடைத்து சேதத்தை விளைவிப்பதை விட, நீரை கால்வாய் வழியே மென்மையாக ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே சிறந்தது. அதைப் போல் மனம் கொதித்து கோபம் வரும் போதும் அதை அடக்கி ஆளுவதே சிறந்த குணம். அதுவே சிறந்த மனிதனின் குணமென்க.

தொடரும்...




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக