புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 6%
prajai
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 4%
viyasan
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 2%
Rutu
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 2%
சிவா
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 15%
Rutu
கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!! (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 11:21 pm

குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!!



புதன் காலை 6.20 / வேதியூர் காவல் நிலையம்:

ள்ளிரவு இரண்டு மணி வரை ரோந்து பணி இருந்ததால் ஆய்வாளர்(இன்ஸ்பெக்டர்) கார்த்திகேயனும், தானாக்காரர்(கான்ஸ்டபிள்) ரத்தினமும் மிக அசதியாக தூங்கி கொண்டிருந்தார்கள். அப்போது அலுவலக தொலைபேசி (அழைப்பு)எழுப்பு மணியை ஒலிக்க கார்த்திக் எழுந்து வந்து பேசினார். விஷயத்தை கேள்விப்பட்டதும் மிக அதிர்ச்சியானார் கார்த்திக். பிறகு ரத்தினத்தை எழுப்பி விட்டு “ வாயா!! கடமை நம்மை அழைச்சுருச்சு. குன்றமலை அடிவாரத்துல நம்ம பண்ணையார் பையன் குருவை யாரோ கொன்று போட்டுருக்காங்களாம்” என்றார்.

புதன் காலை 7.45 மணி / குன்றமலை அடிவாரம்:

பண்ணையார் குடும்பத்தினரும் ஊர் மக்களும் குன்றமலை அடிவாரத்தில் கூடியிருந்தனர். கூட்டத்தை கலைப்பதே காவலர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. அப்போது நோயர் ஊர்தி(ஆம்புலன்ஸ்) வந்து சேர குருவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கார்த்திக் பண்ணையாரின் உறவினர்களிடம் எதையோ விசாரித்து கொண்டிருந்தார்.

புதன் மாலை மணி 4.30 / குன்றமலை அடிவாரம்:

குன்றமலையில் கூடியிருந்த கூட்டமெல்லாம் கலைந்து விட, மீண்டும் ஒரு முறை கார்த்திக் அங்கே சென்று நோட்டமிட்டார். கொலையாளியை கண்டு பிடிப்பதற்கான தடயங்களை தேடி வந்திருந்தார். அவருடன் ரத்தினமும் வந்திருந்தார். எந்த தடயமும் சிக்காததால் சோர்வுடன் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மலை அடிவாரத்திலிருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் ஓர் தேநீர் கடையை பார்க்க தேனீர் அருந்துவதற்காக இருவரும் இறங்கினர். இருவரும் தேனீர் அருந்தி கொண்டிருக்க கடைக்காரரை அழைத்து கார்த்திக் விசாரிக்க ஆரம்பித்தார். கடைக்காரன் சொன்ன விஷயங்கள் கார்த்திக்கிற்கு ஆர்வமூட்டியது.

“நேத்து சாயந்திரம் அஞ்சு, அஞ்சரை மணி போல குரு ஐயா அவரோட கார் ல இங்க வந்திருந்தார். என்ன விஷயம்னு கேட்டதுக்கு சும்மானு சொன்னாரு” என்றான் கடைக்காரன். குரு கூட வேற யாராவது வந்திருந்தாங்களா என கார்த்திக் கேட்க “அப்படி யாரும் இல்லை ஐயா” என்றான் கடைக்காரன்.

புதன் இரவு 8.30 மணி / பண்ணையார் வீடு:

கார்த்திக் பண்ணையாரின் வீட்டிற்கு சென்றிருந்தான். தங்கள் குடும்பத்திற்கோ, குருவுக்கோ எதிரிகள் யாராவது இருக்காங்களா என விசாரித்தான். சில சந்தேகங்கள் இருந்தாலும் யார் மீதும் முழுதாய் சந்தேகிக்க முடியவில்லை கார்த்திக்கால். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த காரை கவனித்த கார்த்திக், “இந்த காரை நேத்து குரு தம்பி தான எடுத்துட்டு போனாரு” எனக் கேட்டார். “ஆமாம் சார். ஆனா ஊர் கலையரங்கம் பக்கத்துல கார் நின்னுட்டு இருந்துச்சுன்னு சொல்லி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டிரைவர் ஆதி கேசவன் வண்டியை விட்டுட்டு போனான்” என்றார் பண்ணையார்.

வியாழன் காலை 9.30 மணி / வேதியூர் காவல் நிலையம்:

ஆதி கேசவன் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தான். ஆதியிடம் விசாரித்ததில் அவன் எதுவும் தவறு செய்யவில்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கே பண்ணையார் அவரின் மனைவி மற்றும் குருவின் நெருங்கிய நண்பன் பாலா மூவரும் காவல் நிலையம் வந்திருந்தனர். “எப்படியாவது என் பையனை கொன்றவர்களை பிடித்து தூக்கிலிடுங்கள் சார்” என்று பண்ணையாரின் மனைவி புலம்பினார். என் நண்பனை இப்படி பண்ணவங்க யார் சார் என்று களேபரம் ஆனான் பாலா.

வியாழன் மாலை 4.00 மணி / வேதியூர் கலையரங்கம்:

கார்த்திக் தன் காவல் சீருடையை கலைந்து விட்டு பனியன், சட்டை, வண்துணி ஆடையுடன் கலையரங்கம் வந்திருந்தான். அப்போது பழ கடைக்கு வெளியில் செருப்பு தைத்து கொண்டிருந்த ஒருவன் சம்பவ நாளன்று தம்பி இங்க கார்’ல வந்திருந்தாரு. நான் பார்த்தேன். ஆனா எங்க போனாரு என்னனுலாம் தெரியாது என்றான்.

சனி காலை 10. 30 மணி / வேதியூர் காவல் நிலையம்:

“என்ன சார் குரு கொலை கேஸ்’ல ஏதாவது துப்பு கிடைச்சுச்சா?” என்றார் ரத்தினம். கொலையாளியவே கண்டு பிடிச்சுட்டேன். வா போயி பிடிச்சு இழுத்துட்டு வந்துரலாம் என்றார் கார்த்திகேயன். எப்படி சார் கண்டு பிடிச்சீங்க என்று ஆச்சரியமாக கேட்டார் ரத்தினம். “இரு சொல்றேன். வா முதல்ல போயி கைது பண்ணுவோம்” என்றார் கார்த்திக்.

சனி காலை 11.30மணி / வேதியூர் காவல் நிலையம்:

குருவை கொலை செய்தவனை பார்க்க பண்ணையார் காவல் நிலையம் வந்திருந்தார். அங்கே கொலையாளியை பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஆம் குருவின் நெருங்கிய நண்பன் பாலா தன் அது. “இவனா சார் என் பையனை கொலை செஞ்சான். எதுக்கு டா இப்படி பண்ண” என்று கோபமானார் பண்ணையார்

“ ஆமாம் சார். ஐந்து லட்சம் பணத்திற்காக உங்க பையனை கொலை செய்தவன் இவன் தான் சார்” என்றார் கார்த்திக். எப்படி கண்டு பிடிச்சீங்கஎன்றார் ரத்தினம். பண்ணையாரும் கேட்க கார்த்திக் நடந்ததை கூறினார்.

உங்களுக்கு தெரியாம உங்க பையன்ட இருந்து ஐந்து லட்ச ரூபாய் இவன் கடன் வாங்கியிருக்கான். ஒரு மாசத்துல கொடுத்திரேன்னு சொல்லி வாங்குனவன் ஆறு மாசமா கொடுக்கலை

பல தடவ குரு கேட்டப்ப எல்லாம் அப்ப தர்றேன் இப்ப தர்றேன் ஏமாத்தியிருக்கான். சம்பவம் நடந்த அன்னைக்கு காலை’ல குரு கேட்டதுக்கு எனக்கு இப்ப தான் தொழில்’ல நிறைய லாபம் கிடைச்சிருக்கு. சாயந்திரம் குன்றமலை’ல சரக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கேன். சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வந்துரு. அங்கே இருந்து நாம போவோம். நம்ம நண்பர்கள் எல்லாம் வருவாங்கன்னு சொல்லி வச்சிருந்தான்.

ஆனால் ஆறு மணி வாக்கில் குரு நேரா குன்றமலைக்கே போய்ட்டார். அங்க யாரும் இல்லைனதும் பாலாவுக்கு கால் பண்ண, தான் கலை அரங்கம் பக்கத்துல காத்திருப்பதாகவும், நண்பர்கள் எல்லாம் ஏழு மணிக்கு வந்திடுவாங்கணும் சொல்லி இருக்கான் பாலா. பகல் நேரத்துல எதுவும் பண்ண மாட்டிக்குவோம்’னு பயந்து போன பாலா குருவை சுத்த விட்டான். அப்புறம், அங்க இருந்து கலையரங்கத்துக்கு போயிருக்கார் குரு. அங்க இருந்து ரெண்டு பேரும் குறுக்கு பாதையில குன்றமலைக்கு பைக்’ல போயிருக்காங்க. அங்க வச்சு நல்லா சரக்கு ஊத்தி கொடுத்துட்டு குருவை பாலா கொலை பண்ணிட்டான்” என்றார் கார்த்திக். இதை கீடத்தும் அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பினார் பண்ணையார்.

சனி இரவு 10.30 மணி / வேதியூர் காவல் நிலையம்:

எப்படி சார் உங்களுக்கு பாலா மேல சந்தேகம் வந்துச்சுன்னு ரத்தினம் கேட்டார். நான் கலையரங்கம் பக்கம் போயிருந்தப்ப இவன் பக்கத்துல இருந்த கடையில சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டே வானத்துல புகை விட்டுக்கிட்டு இருந்தான். அப்போ எனக்கு எதுவும் சந்தேகம் வரலை.

குருவோட கைபேசி ரசீது பார்க்கும் போது இவனுக்கு ஆறு மணிக்கு கால் பண்ணியிருந்தார், அப்போ கூட சந்தேகம் வரலை. ஆனா அவர் கை பேசில பார்க்கும் போது இவனை அழைத்த அடையாளம் இல்லை. அதை பாலா தான் அழிச்சுருக்கான்.
அப்போ தான் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு. கைபேசியை கைரேகை நிபுணர்கள்’ட கொடுத்து ஆராய்ந்த போது இவன் கைரேகை இருப்பதை கண்டுபுடிச்சு சொன்னாங்க. எனக்கு இவன் மேல முழுசா சந்தேகம் வந்துருச்சு.

அப்புறம் தான் உனக்கே தெரியுமே’யா. இங்க கூட்டிட்டு வந்து இரண்டு தட்டு தட்டவும் உண்மையை எல்லாம் ஒத்துக்கிட்டான். “சார், நீங்க பெரிய ஆளு தான்” என்றார் ரத்தினம். “போலீஸ்’கு நாலு பக்கமும் கண் இருக்கணும்’யா என்றார் கார்த்திக். அப்போது மீண்டும் அலுவலக தொலைபேசி ஒலிக்க, எடுத்து பேசினார் கார்த்திக். பிறகு “யோவ், வாயா கடமை அழைக்குது. வடக்கு தெருவுல முகமூடி கும்பல் கொள்ளை அடிச்சுட்டாங்கலாம” என்று கூற இருவரும் கிளம்பினார்.


ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 10:33 pm

நல்ல த்ரில்லர் கதை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக