புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
62 Posts - 57%
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
104 Posts - 59%
heezulia
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_m10வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Feb 17, 2012 7:36 pm

First topic message reminder :

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மொகலாயப் பேரரசிற்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு முக்கிய காரணங்களாக திகழ்ந்தவை யாவை? அவை பெரும்பாலும் சமயம் (ரிலீஜியஸ்) சார்ந்ததாக இருந்ததா? அல்லது பொருளியல் (எக்கனாமிக்) சார்ந்தவையாக இருந்தனவா?



மொகலாயப் பேரரசு ஏப்ரல் 21, 1526 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. முகலாயர்கள் டிமுரிட்ஸ் வம்ஸாவழியைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்தது, ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் பிற்பாதியில் வீழ்ச்சி பெற துவங்கி 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்தது. இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை, அதாவது கிழக்கே பெங்காலிலிருந்து மேற்கே பலோகிஸ்தான் வரையிலும், வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே காவேரி வரை அவர்களின் ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. இந்திய துணைக்கண்டம் முழுமையும் அவர்கள் ஆட்சி அதிகாரம் இருந்தது எனக் கூறலாம்.

மொகலாயப் பேரரசின் முதல் பேரரசர் ஜாகீருதின் முஹம்மத் பாபர் (1526-1530), எளிதாய் பாபர் என்று அனைவராலும் அறியப்படுபவர். இவரை தொடர்ந்து நிறைய பேரரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள்

  • ஹூமாயூன் (1530-1539) & (1555 - 1556)

  • அக்பர் (1556 - 1605)

  • ஜஹாங்கீர் (1605 -1627)

  • ஷாஜகான் (1627 - 1658)

  • ஔரங்கஷிப் (1658 - 1707)


ஔரங்கஷிப் இன் ஆட்சிக்காலத்தில் மொகலாயப் பேரரசு பெரும் வீழ்ச்சிகளுக்கு உட்பட்டது, அதற்கு முக்கிய காரணங்களாக இருந்ததவை அவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சத்னமி (Rebellion of Satnami) கிளர்ச்சி , ஜேட்ஸ் (Rebellion of Jats) கிளர்ச்சி மற்றும் சீக்ஸ் (Rebellion of Sikhs) கிளர்ச்சி போன்ற கிளர்ச்சிகளே. இப்படி தொடர்ந்த் கிளர்ச்சிகளாலும், பலகீனமான அரசர்களாலும் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்டு, இறுதியில் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டு, மொகலாயர் ஆட்சி ஜூன் 20, 1858 இல் முழுதும் முடிவிற்கு வந்தது. பஹதூர் ஷா ஜாஃபர் மொகலாயப் பேரரசின் கடைசி அரசராக திகழ்ந்தார். இவர் ஆட்சி ஆங்கிலேயரால் கைப்பற்றப் பட்டு பர்மாவிற்கு நாடு கடத்தப் பட்டார்.

இதுவே மொகலாயப் பேரரசின் சிறு குறிப்பு, இனி மொகலாயர் ஆட்சி சம்பந்தப் பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆராய்ந்து அலசி, சிறப்பாக இருந்து வந்த மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை கொணர்வோம்.


குறிக்கோள்:

1. மொகலாயப் பேரரசின் அனைத்து சாராம்ஸங்களையும், அரசர்களின் சிறப்புகளையும் அறிந்து கொள்வது.

2. அரசர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்சி முறை மாற்றங்களும், கொள்கைகளும் எந்த விட மாற்றங்களை கொண்டு வந்தன என்றும், அந்த மாற்றங்களால் விளைந்த விளைவுகளையும் ஆராய்ந்து தெளிவு பெறுவது.

3. ஆட்சி காலத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகள் ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து அதற்கு முக்கிய காரணமாக இருந்தவற்றை அறிந்து கொள்வது. .



விதிமுறைகள்

1. அரட்டை கூடாது. அரட்டை பதிவுகள் முன்னறிவிப்புடன் நீக்கப்படும்.

2. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

3. கேள்விகளை அடுக்காமல், ஒரு கேள்வியை கேட்டு, அதற்கான விடை பெற்ற பின் அடுத்த கேள்வியை மற்றவர்களோ, அல்லது அவரேவோ கேட்கலாம்.

4. கேள்விக்கான பதில் யாருக்காவது தெரிந்திருந்தாலோ, அல்லது, கேள்விக்கான பதிலை யாராவது கூற விரும்பினாலோ. கேள்விக்கு அடுத்த பதிவில், நான் பதில் கூறுகிறேன் என்று பதிவை தொடங்கி விட்டு, பதிலை அதே பதிவை திருத்தி இணைத்துக் கொள்ளலாம். காரணம், அதே கேள்விக்கு மற்றவரும் விடை தேட வாய்ப்புள்ளது, நேர விரையத்தை தடுப்பதற்காகவே இந்த முறை.

5. அனைவரும் தேடுவதால் தவறில்லை. தேடி பின் மற்றவர் பதில் அளித்திருந்தால், கொஞ்சம் மன சங்கடம் ஏற்படலாம். இதை தவிர்க்கவே இந்த முறை.


அடுத்த ஐந்தாவது நாளில், மொகலாயப் பேரரசைப் பற்றி எந்த கோணத்தில் கேட்டாலும். நாம் பதில் சொல்லும் வகையில் தேரி இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

மிக்க நன்றிகள் உறவுகளே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Feb 25, 2012 11:18 pm

ஜஹாங்கீர் 1569 - 1627

முக்கிய செய்திகள்

1. இவருடைய காலத்தில் இருந்து, தந்தையையே மகன் அரியணைக்காக எதிர்ப்பது துவங்கியது எனலாம், காரணம், இவர் வயது வந்த பின் தந்தை அக்பருக்கு எதிராக கலகங்கள் நிகழ்த்தினார், ஆனால், அக்பர் இறந்து விடவே இவர் எளிதாய் அரியணைக்கு வந்துவிட்டார்.

2. இவருடைய மூத்த மகன் குஷ்ரோ, இவருக்கு எதிராய் கலகம் செய்ய, அதனை ஒடுக்கினார், அதேசமயம் குஸ்ரோவிற்கு (Kushrau) உதவி புரிந்த ஐந்தாம் சீக் குரு குரு அர்ஜூன் டேவ் (Guru Arjun Dev) ஐ ஐந்து நாள் சித்திரவதைக்கு பின் விடுவித்தார். (எப்படி எல்லாம் சித்தரவதை செய்தார் என்பதை படித்தாலே பயம் பற்றிக்கொள்ளும்)

3. இவருடைய மிகப்பெரிய தோல்வியும் இழப்புமாக கந்தகர் இழப்பு உள்ளது, இதனை பாரசீகர்களிடம் (Persians) இழந்தார், அதே சமயம் ஜஹாங்கீர் பாரசீகரிடமும், உஜ்பெக்ஸ் (Uzbeks) களிடமும் பயந்து வந்தார் என்பது குறிப்பிடக் தக்கது.

4. ஜஹாங்கீர் ஆட்சியில் அவருக்கும் பிறருக்கும் நிகழ்ந்த சில திருமண நிகழ்வுகள், கந்தகர் (Kandhahar) ஐ மீண்டும் கைப்பற்ற தடங்களாய் இருந்துள்ளது.

5. ஆங்கிலேயர்கள் கேப்டன் ஹக்கின்ஸ் (Captain Hawkins) மற்றும் சர் தாமஸ் ரோ (Sir Thomas Roe), இவரது ஆட்சி காலத்தில், இவரது அவைக்கு வந்துள்ளனர்.

6. புகையிலை பயிரிடுதல் தொடங்கியது.

குறைகள்

1. இவர் இவரது தந்தை விட்டுச் சென்ற பாதையில் எந்த மாற்றமும், முன்னேர்ற்றமும் மேற்கொள்ளவில்லை, அந்த அளவு இவருக்கு அனுபவம் இல்லை என்றே கூறலாம்.

2. இவர் அதிகமாய் போர்களில் பங்கேற்றதே இல்லை, அக்பர் இருந்த காலத்திலும், எந்த போரிலும் தலைமை ஏற்று நடத்தவில்லை, இவர் ஆட்சி ஏற்ற பின்னும், முக்கிய போர்களில் பங்கேற்கவில்லை, இவருடைய துடிப்பான மகனான ஷாஜகான் தான் போரில் தலைமை ஏற்று நடத்தில் உள்ளார்.

1627 இல் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட, இவருடைய மூன்றாம் மகன் குர்ராம் பட்டம் ஏற்று தன் பெயரை ஷாஜகான் என்று பிரகடனப் படுத்திக் கொண்டார்.





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Feb 26, 2012 8:44 am

வணக்கம் பிஜி !

என்னுடைய கேள்வி இங்கு சரியானதா என தெரியவில்லை. இந்தியாவின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது ?
தாங்கள் ஏன் முகலாய பேரரசு என்பதில் இருந்து தொடங்கியிருக்கிறீர்கள் ?





வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 26, 2012 3:27 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வணக்கம் பிஜி !

என்னுடைய கேள்வி இங்கு சரியானதா என தெரியவில்லை. இந்தியாவின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது ?
தாங்கள் ஏன் முகலாய பேரரசு என்பதில் இருந்து தொடங்கியிருக்கிறீர்கள் ?

அண்ணா, தங்களின் முதல் கேள்விக்கு, தகவல் தேடித் தருகிறேன், அல்லது தெரிந்தவர்கள் கூற விட்டுவிடுகிறேன்.....

உங்களுடைய இரண்டாம் கேள்விக்கான என் பதில் இதோ,

நான் மொகலாயப் பேரரசில் இருந்து துவங்கவில்லை, ஆனால், அப்படி தான் தெரியும், காரணம், நான் கேட்டுள்ள கேள்வி அது போன்றது. இந்த கேள்வியை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள்,

ஒன்று, ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஆரம்பிப்பதற்கு முன்பு இறுதியாக ஆண்ட பேரரசு மொகலாயப் பேரரசு, இதனால் வரலாற்றில் இந்த பேரரசின் முக்கியத்துவம் அதிகம், அதானால், இந்த கேள்வியை தேர்ந்தெடுத்தேன்.

இரண்டு, இந்த கேள்வி சிவில் சர்வீஸ் தேர்வில் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு காரணங்கள் தான் நான் இந்த கேள்வியை கேட்டதற்கு, அதுவுமின்றி, இந்த கேள்வியை வைத்து பல கிளை கேள்விகளை எழுப்பி, பல தகவலை அறிந்து கொள்ள முடியும் என்பது மற்றொரு காரணம்.

நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Feb 26, 2012 6:22 pm

ஷாஜகான் 1592 - 1666

முக்கிய சிறப்புகளும் நிகழ்வுகளும்

1. ஷாஜகான் (Shajahan) சிறந்த மேலாண்மைத் திறமும், ஆளுமையும் கொண்டவர். இருந்தும் அவருடைய ஆரம்ப ஆட்சி காலத்தில், பண்டல்கண்டிலும் Bundelkhand) மற்றும் தக்காணத்திலும் (Deccan) கலகங்கள் (Revolts) ஏற்பட்டன.

2. தக்காணத்தை (Deccan Policy) தான் பேரரசுடன் இணைக்கும் தான் கொள்கையில் வெற்றியும், அஹ்மத்நகரை (Ahmednagar) பேரரசுடன் இணைத்ததும், பிஜபுரும் (Bijapur), கோல்கொண்டா (Golconda) இவருடைய மேலாண்மைக்கு கீழியங்க சம்மதித்ததும் முக்கியமானவை.

3. ஹுக்லி (Hughly) இல் இருந்து போர்ச்சுகீஸ்களை வெளியேற்றியது.

4. 1639 இல் ஜஹாங்கீர் இழந்த கந்தகரை (Khandhahar) மீட்டு அரண் ஏற்படுதினார், இருந்தும் 1639 இல் மீண்டும் பாரசீகர்களால் (Persican) கைப்பற்றப் பட்டது, அதன் பின் மும்முறை முயற்சித்தும் கந்தகரை மீட்க இயலாது போனது.

5. 1636 இல் ஔரங்க்ஷிப்பை தக்காணத்தின் வைஸ்ராய் (Viceroy) ஆக்கியது, மீண்டும் இரண்டாம் முறை ஔரங்க்ஷிப்பே வைஸ்ராய் ஆனதும், அவருடைய வருவாய் முறை சிறப்பாக இருந்தது, ஔரங்காஷிப்பிற்கு முஷ்ஜித் குலி கான் (Mushjid Kuli Khan) திவானாக செயல்பட்டார்.

6. மேலும் இவருடைய ஆட்சிக் காலம், மொகலாயப் பேரரசின் பொற்காலம் (Golden Age) எனப்பட்டது.

பொற்காலம் என அழைக்கப்பட்டதன் காரணம்

1. பேரரசில் நிழவிய அமைதி. இதனால் மக்களிடையே ஏற்பட்ட நிம்மதி பல தொழில்களில் ஈடுபட வைத்தது.

2. மக்களின் பலவகை தொழில் ஈடுபாட்டால், அரசிற்கு வருமானம் பெருகி பேரரசு செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது.

3. யாராக இருந்தாலும், அவர் அரசில் உயர் பதவி வகித்தாலும், அனைவருக்கு சமமான நீதி வழங்கியது.

4. பேரரசு பல மாநிலங்களுடன் பறந்து இருந்தது, மொத்தம் 22 மாநிலங்களைக் கொண்டு திகழ்ந்தது ஷாஜகானின் பேரரசு.

5. சிறப்பான கட்டிடக் கலை, உதாரணத்திற்கு செங்கோட்டை, ஜாமி மசூதி, முத்து மசூதி, திவானி ஆம், திவானி காஸ் மற்றும் தாஜ்மஹால்.


இவருடைய பேரரசு ஒன்றும் பொற்காலமாக இருக்கவில்லை என்று பலர் கருத்து கூறினாலும், அதற்கு சான்றுகள் இல்லை ஆனால் இவருடைய ஆட்சி பொற்காலமாக இருந்தததற்கு நிறைய சான்றுகள் உள்ளன.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 27, 2012 10:48 am

அய்யம் பெருமாள் .நா wrote:

என்னுடைய கேள்வி இங்கு சரியானதா என தெரியவில்லை. இந்தியாவின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது ?
மிகவும் சரியான கேள்வி பெருமாள். பதில் இதோ.

பொதுவாக இந்திய வரலாறு என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே துவங்குகிறது. இந்த வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பல கால கட்டங்களாக பிரிக்கிறார்கள். அவற்றில் சில, (ஆனால் இந்திய துணைகண்டம் முழுமையும் இந்த கால வரையறை பொருந்தாது)

பழைய கற்காலம்: (கிமு 500000-8000)

இக்காலக்கட்டத்தில் இந்த்திய துணை கண்டத்தில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளனர்.

சோன் பள்ளத்தாக்கு, நர்மதை பள்ளத்தாக்கு, மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா, ஆந்திராவின் கர்னூல், சென்னை அத்திரம்பாக்கம் ஆகிய இடங்களில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளது.

இவர்கள் பாறை கற்களால் ஆன கருவிகளை பயன்படுத்தினர்.

இடைகற்காலம்: (கிமு 8000-4000)

இடை கற்கால சின்னங்கள் குஜராத் , ம.பி , ராஜஸ்தான், உ.பி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவை இக்காலத்தில் தான் துவங்கியது.

புதிய கற்காலம்: (கிமு 4000-1800)

காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகார், உ.பி பிளான் சமவெளி மற்றும் தென்னிந்தியாவின் பல இடங்களில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது.

கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மண்பாண்டம் செய்தல் ஆகியவை வளர்ச்சி அடைந்தது. சக்கர உதவியால் பானைகள் தயாரிக்கப்பட்டது.

ஓரிடத்தில் வாழ்ந்து பழகி சமூக கிராமங்களாக வாழ்ந்தனர்.


ஆக வரலாறு என்பது மேற்சொன்ன காலத்திலேயே துவங்குகிறது.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 27, 2012 5:40 pm

மிக்க நன்றிகள் பிரபு அண்ணா......அடுத்து

ஔரங்கஷிப் 1618 - 1707

நான் முதலில் கேட்டுள்ள கேள்வியில் அதிகம் தொடர்புடையவர், ஔரங்கஷிப் தான், ஆகையால் அவரைப் பற்றி நாம் அங்கேயே பலவற்றை தெரிந்து கொண்டோம். இங்கு ஔரங்கஷிப் என்றால், எவையெல்லாம் நியாபகத்திற்கு வரவேண்டும் என்பதைப் பார்போம்.

முக்கிய நிகழ்வுகள்


1. பலம் வாய்ந்த மொகலாயப் பேரரசை ஆண்ட கடைசி ஆட்சியாளர் இவர். அக்பருக்கு அடுத்து அதிக ஆண்டுகள் பேரரசராக இருந்தவரும் இவரே, பாதி நூற்றாண்டுகள் ஆட்சி செய்தார்.

2. தனது சகோதரர்களுடன் புரிந்த வாரிசுரிமை போர், அதில் பெற்ற வெற்றியும், பேரரசர் ஆனதும். 1959 இல் "அபுல் முகாபர் முகிவுதீன் ஔரங்கஷிப் பகதூர் ஆல்ம்கிர் பாதுஷா காஸி" என்ற பட்ட பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினார். எளிதாய் ஆளாம்கிர் என்றழைக்கப்பட்டார்.

3. 1658 முதல் 1707 வரை இவர் புரிந்த போர்களான, கிழக்கு திசை போர் (இவர் அரியணை ஏறியதும் கிழக்கு திசை மீது பற்று கொண்டிருந்தார் அதன் விளைவே இந்த போர்கள்),

4. வடமேற்க்கு கொள்கை யும் அதன் விலைவாய் ஏற்பட்ட போர்களும்.

4. ராஜபுத்திரக் கொள்கையும், 1679 முதல் 1707 வரை ராஜபுத்திரர்களை வெற்றி கொள்ள இவர் எடுத்த முயற்சிகள் இதில் அடங்கும். குறிப்பாக மார்வார், மேவார், இளவரசர் அக்பர் செய்த கலகம் ராஜா புத்திரர்களுடன் இணைந்து கொண்டு அடுத்து தக்காணக் கொள்கை. இறுதியாக மராத்தியர்களுடன் நிகழ்ந்த போர்கள்.

5. சமயக்கொள்கை பற்றியும், ஜாட்கள் கலகம், சட்னாமீஸ் கலகம், பாண்டேலா கலகம், இவரது ஆட்சியில், இந்த கலகங்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

6. 1679 இல் அக்பரால் தடைசெய்யப்பட்ட ஜெஸ்சியா வரியை மீண்டும் கொண்டு வந்தார்,

இவரது ஆட்சியில் பல கலகங்கள் போர்கள் எதிர்ப்புகள் கிழம்பிய போதும், 50 ஆண்டுகள் திறமையாக மிகப் பெரும் பேரரசை ஆண்ட ஒரே மோகலாய மன்னர் என்ற பெருமையை பெஊகிறார் ஔரங்கஷிப்.




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 27, 2012 5:46 pm

ஔரங்கஷிப் பத்தி நான் ஒரு கட்டுரை படிச்சு இருக்கேன் ராமன்.
ஆனா நீங்க sonna மாதிரி அவர் கொடுமையானவர் இல்லை என்பது மாதிரி தான் படிச்சு இருக்கேன். அவரோட சாவுக்கு கூட ஆடம்பரமா செலவு பண்ணக்கூடாது என்றும் தான் இறந்த பிறகு தான் குரான் எழுதியும்,மற்ற சிறு வேலைகள் செய்தும் சம்பாதித்த பணத்தில் தான் காரியங்களை செய்யணும் என்று சொன்னதாகவும் படிச்சு இருக்கேன்.
அது மட்டும் இல்லை ஆடம்பரங்களை அடியோடு வெறுத்தவர் என்றும் படிச்சு இருக்கேனே



வரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Uவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Dவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Aவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Yவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Aவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Sவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Uவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Dவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 Hவரலாறு : மொகலாயப் பேரரசு- முடிவுற்றது !!! - Page 4 A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 27, 2012 5:56 pm

உதயசுதா wrote:ஔரங்கஷிப் பத்தி நான் ஒரு கட்டுரை படிச்சு இருக்கேன் ராமன்.
ஆனா நீங்க sonna மாதிரி அவர் கொடுமையானவர் இல்லை என்பது மாதிரி தான் படிச்சு இருக்கேன். அவரோட சாவுக்கு கூட ஆடம்பரமா செலவு பண்ணக்கூடாது என்றும் தான் இறந்த பிறகு தான் குரான் எழுதியும்,மற்ற சிறு வேலைகள் செய்தும் சம்பாதித்த பணத்தில் தான் காரியங்களை செய்யணும் என்று சொன்னதாகவும் படிச்சு இருக்கேன்.
அது மட்டும் இல்லை ஆடம்பரங்களை அடியோடு வெறுத்தவர் என்றும் படிச்சு இருக்கேனே

அருமை அக்கா..........

அவர் கொடுமைக்காரர் என்பதற்கு ஒரு உதாரணம் கூறினாலே போதுமானதாக இருக்கும்,

அவருக்கு அவரையும் சேர்த்து நான்கு சகோதரர்கள், நால்வரும், அப்பா ஷாஜகானின் கட்டளைப்படி நான்கு மாநிலங்களை தலமை வகித்து ஆண்டு வந்தனர், ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதும், ஆக்ரா நோக்கி வரும் வழியில் தம் சகோதரர்கள் அனைவரையும் தோற்கடித்து விட்டு, ஆக்ரா அடைந்து தந்தையாகிய ஷாஜகானை சிறை வைத்தார். இது அவரது பதவி ஆசையையும், இரக்கமற்ற பாசமற்ற தன்மையையும் குறிக்கிறது.

மேலும் கூற வேண்டும் என்றால்,

அக்பரால் தடைசெய்யப் பட்ட, கடுமையான வரி விதிப்பு முறையான ஜெஸ்சியாவை மீண்டும் கொண்டு வந்தார், அடுத்து, முஸ்லிம் மதத்தை அரசின் மதம் அப்டினு சொன்ன அவர், அனைவரையும் அதை பின்பற்ற வற்புறுத்தியது. இதற்கு சான்றுகள், அவரது ஆட்சியில், நிகழ்ந்த கலகங்களே.

மற்றும் இவரது ஆட்சியில் பல கோவில்களை இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறார், மக்கள் மீது அதிகாரிகளை ஏவி விட்டும் இருக்கிறார்.

ஆனால், மிகவும் திறமையான அரசர் ஔரங்கஷிப் என்பதில் ஐயம் இல்லை.

நன்றிகள் அக்கா.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 27, 2012 10:27 pm

முடிவுரை

17 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில், ஏற்பட்ட கலகங்களுக்கான காரணங்கள் சில அந்தக் கலகங்களுக்கு பின்னாடி இருந்தாலும், அவை முழுவதும், சமயம் சார்ந்தோ அல்லது பொருளியல் கோட்பாடுகள் சார்ந்தோ இருக்கவில்லை.

ஜாட்கள் கலகம் சமயம் சார்ந்ததாக இருந்தது எனக் கூறலாம், காரணம் கலகத்தின் துவக்கம், 1669 இல் மதுராவில் இருந்த இந்து கோவிலை இடித்து பெண்களை இழிவு படுத்திய பின்னரே கோகுலே தலமையில் துவங்கி ஔரங்காஷிப் ஆட்சி முடியும் வரை அவர்களின் கலகங்களும் தொடர்ந்துள்ளது. ஆக, இதற்கு சமயக் கொள்கையும், அடக்குமுறையும் காரணமாக இருந்துள்ளது.

அடுத்து சத்னாமீஸ் கலகத்தை எடுத்துக் கொண்டால், சமயக் கொள்கையோ, பொருளியல் கொள்கையோ கலகத்திற்கு காரணமாக இருக்கவில்லை, இந்த கொள்கைகளின் தாக்கம் அவர்களுள் இருந்தாலும், மொகலாய வீரர் ஒருவர் சத்னாமி ஒருவரை கொன்றதால், சத்னாமிகள் இதனை மொகலாயர்கள் மீதான தங்களின் அதிருப்தியை கலகத்தின் மூலமாக காட்ட தூண்டுதலாக இருந்தது எனலாம்.

இவைபோன்றே, சீக்ஸ் கலகமும், பண்டேலா கலகமும், மக்கள் தங்களுக்குள் ஔரங்காஷிபின் அரசுக்கு எதிராக தங்களுக்குள் இருந்த அதிருப்தியை காட்டுகின்றன.

இவை அனைத்திற்கும், மக்களிடையே இழையோடிக்கொண்டிருந்த ஔரங்கஷிப் அரசின் அடக்குமுறையும், இஸ்லாத்தை அடுத்த மதத்தவரிடம் திணித்ததும், கடுமையான வரி விதிப்பு முறையான ஜெஸ்சியாவை கொண்டுவந்ததும். 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட கலகங்களுக்கு காரணங்களாக இருந்துள்ளன.

நன்றிகள் உறவுகளே




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Feb 27, 2012 10:50 pm

அன்பு உறவுகளுக்கு,

இந்த திரியில் ஆரம்பம் முதலே படித்துக் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். மட்டுமின்றி, ஆவலாய் திரியில் கலந்து கொண்ட திலீப், பாலாஜி அண்ணா, ரேவதி, பகவதி, பிரபு அண்ணா, அதிபொண்ணு, சதாசிவம் ஐயா, நந்திதா, நேரு அவர்கள், கொலவெறி, அய்யம் பெருமாள் அண்ணா மற்றும் உதய சுதா அக்கா, என அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திலீப்பின் முதல் கேள்வி மிகவும் அருமையாக இருந்தது, காரணம், கேட்கப்பட்ட கேள்வியை மீறி அவருடைய கேள்வி இருந்தது, ஆனால், அதனுடன் தொடர்புடைய முக்கியமாய் தெரிந்து கொள்ளவேண்டிய கேள்வி அது. இது போன்ற கேள்விகளே, நுண்ணறிவை பெற உதவி புரியும். நன்றிகள் திலீப்.

அடுத்து பாலாஜி அண்ணா, கேள்வியுடன் தொடர்பு கொண்ட கேள்வியைக் கேட்டார், இது போன்ற கேள்விகள், தலைப்பில் இருந்து நம்மை வேறு இடத்திற்கு சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளும். நன்றிகள் அண்ணா.

அடுத்து, பகவதியின், முதலில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர் யார் என்ற கேள்வி, தலைப்புடன் ஒத்து போகவில்லை என்றாலும், இதுவும் முக்கியமான கேள்வி தான், காரணம், மோகலாயப் பேரரசு தான், ஆங்கிலேயர் ஆள்வதற்கு முன்னாள் இருந்த கடைசி பேரரசு, அதே சமயம், மோகலாய ஆட்சி இந்தியாவில் இருக்கும் பொழுது தான் ஆங்கிலேயர்கள் வருகிறார்கள். இதை வைத்து ஆங்கிலேயர்தான் முதலில் வந்தார்களோ என்று எண்ணிவிட வாய்ப்புண்டு, பகவதி கேட்ட இந்த கேள்வி, இந்த எண்ணத்தை போக்கிவிடும். நன்றிகள் பகவதி.


அடுத்து அய்யம் அண்ணா கேட்ட முக்கியமான கேள்வி, வரலாற்றின் துவக்கம் எங்கே, மற்றும் கேள்வியின் காரணம், இக்கேள்விகள், கேள்வியின் காரணத்தை பிறர் அறிய வகை செய்தன, வரலாற்றின் துவக்கத்தை அறியவும் வழிசெய்தன. நன்றிகள் அண்ணா.....முதல் கேள்விக்கு பதில் தந்த பிரபு அண்ணாவிற்கு என் நன்றிகள்.

இறுதியாக உதய சுதா அக்காவின், கேள்வி ஔரங்கஷிப்பை வேறு ஒரு கோணத்தில் காட்டிய கேள்வி, ஆனால், பெரும்பான்மையான வரலாற்று நூலாசிரியர்களும், நூற்களும், ஔரங்காஷிப்பின் அடக்குமுறையை, சமயவெறியை அப்பட்டமாய்க் கூறுகின்றன. அதை எங்கு படித்தீர்கள் என்று நியாபகப் படுத்தி கூறுங்கள் அக்கா......மிக்க நன்றிகள் அக்கா......

மீண்டும் அனைத்து உறவுகளுக்கும், தனி பகுதி ஏற்படுத்தி தந்த சிவா அண்ணாவிற்கும் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

அடுத்த கேள்வியை. பிரபு அண்ணா நாளை துவங்குவார்.......

நன்றிகள் உறவுகளே....




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக