புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
5 Posts - 3%
prajai
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
4 Posts - 3%
jairam
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_m10எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 4:32 pm

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்!

படத்தயாரிப்பாளர்- தொழிலாளர்கள் ஆகிய இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்ஸி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக சம்பளப்பிரச்னை பேசித் தீர்க்கப்படாமல் இருந்தது. இதில் கடுப்பான பெப்ஸி, தன்னிச்சையாக சம்பள உயர்வை அறிவித்தது.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Images
நான்கு ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளர் சங்கம் கடுப்பாகி, “இனி பெப்ஸி தேவையில்லை. விரும்பும் தொழிலாளர்களை வைத்து படங்களை எடுப்போம்” என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்தது.

இந்நிலையில் “பெப்ஸி இல்லாமல் ஒரு அடி படம் கூட எடுக்க முடியாது” என்று தொழிலாளர்களின் தோழனாக அமீர் சொல்ல, “அமீர் இப்படிச் சொன்னதற்காக அவர் மீது நடவடிக்கை எடுப்போம்” என இயக்குனர் சேரன் தயாரிப்பாளர்கள் பக்கம் இருந்து கர்ஜனை செய்ய, ஒன்றுக்குள் ஒன்றாக உயிர் நண்பர்களாக இருந்த சேரனும், அமீரும் சேர்ந்து எரியும் பெப்சி சம்பளப் பிரச்சனையில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் தயாரிப்பாளர்களின் கை ஒங்கி படபிடிப்புகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பெப்ஸி தொழிலாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பெப்ஸி சம்பளப்பிரச்சனை மேலும் தீவிரமடைந்து வரும் இந்த நெருக்கடியான சுழ்நிலையில்…

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Ameer

இன்று காலை இயக்குனர் சேரன் பெப்சி தொழிலாளர்களை கண்டித்து காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார்… “நியாயத்தின் கதவுகளைத் திறந்து பாருங்கள்…” என்ற தலைப்புடன் சேரன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை மேலும் பிரச்னையில் சிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை..

தமிழ்லீடர் வாசகர்களுக்காக சேரனின் காட்டமான அறிக்கை கீழே…

நியாயத்தின் கதவுகளைத் திறந்து பாருங்கள்.. - இயக்குனர் சேரன்

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! 10-fefsi-logo-300
“சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை - பாரபட்சமான பொருளாதார நிலைமைகளை மாற்றியமைத்து உழைப்போர் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்ற பெருநோக்கில் ‘உலகத் தொழிலாளர்களே.. ஒன்று கூடுங்கள்..” என்று சமூக மாற்றத்திற்கான விஞ்ஞானத்தை விதைத்தவர் மார்க்ஸ்.

சமூக மறுமலர்ச்சிக்கு, புதிய தலைமுறையின் விடியலுக்கான அந்தப் பாதையில் விளைந்தது தான் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும். பாடுபடும் தொழிலாளர்களுக்கு நியாயமான, நேர்மையான ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமான, நேர்மையான ஊதியம் எது? என்பதில் தான் இப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - தொழிலாளர் சம்மேளனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை.

திரைப்படத் தொழிலாளர் சம்மேளம் முன்வைக்கும் ஊதிய உயர்வை, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?

‘லாபத்தில் பங்கு' என்பது தான் நியாயம். தொழிலாளர்களைச் சுரண்டி முதலாளிகள் கொழுத்துத் திரிய, தொழிலாளர்களோ, கஷ்டத்திலும், வறுமையிலும் வாடிச்செத்ததைக் கண்டுதான் சோஷியலிசம் - கம்யூனிசமாக உருப்பெற்றது. மிகப்பெரும் லாபமீட்டும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு மிகச்சொற்பத் தொகையை ஊதியமாகக் கொடுத்தால், அதை எதிர்க்கும் முதலணியில் முதல் ஆளாக நிற்பது என் கடமையும், உரிமையும்.

இன்றைய இந்தியா முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் ஊதுகுழலாகத்தான் சமூகத்தின் ஒட்டு மொத்த அமைப்பும் விளங்குகிறது. தொழிலாளிகள் அற்ப - சொற்ப சம்பளத்துக்கு தங்களது வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி முதலாளிகளை, பெரு முதலாளிகளாகவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இது மாற வேண்டும்.

எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றும் அமீரும் சேரனும்! Cheran
கடந்த ஐந்தாண்டுகளில் புற்றீசல் போல பெருகி நிறைந்திருக்கும் அயல்நாட்டுநிறுவனங்களுக்கு இன்றைய நம் வாழ்க்கையை அடகு வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன சாப்பிட வேண்டும்?என்ன குடிக்க வேண்டும்? எப்போது தூங்க வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்று சகலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு உழைக்க, அவர்களோ கொள்ளை லாபத்தில் கொழிக்கிறார்கள். இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், இன்றைய திரைப்படத்துறை குறிப்பாகத் தமிழ் சினிமா என்ன நிலைமையில் இருக்கிறது? திரைப்படத் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துக் கொண்டு, தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கிறார்களா? பெருவாரியான லாபத்தை எடுத்துப் பதுக்கி வைக்கிறார்களா? கோடிகளில் புரள்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு, ஒரே பதில்.. இல்லை! என்பதுதான்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமா ஆரோக்யமானதாக இருந்தது. திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என்று அத்தனை பேரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். சினிமாப்படம் தயாரிக்க நான், நீ என்று ஆளாளுக்கு ஓடி வந்தனர். ஆனால் இன்றென்ன நிலைமை?

ஏராளமான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், கொடவுன்களாகவும், வர்த்தக நிறுவனங்களாகவும் மாறி விட்டன. திரையரங்குக்கு உரிமையாளராக ஆக வேண்டும் என்ற நிலைமை மாறி, இருக்கிற தியேட்டரை விற்றால் போதும் என்றிருக்கிறது. திரைப்படங்களை வாங்கி, விற்கும் வினியோகஸ்தர்களும் அருகி விட்டனர். சரி.. திரைப்படங்களைத் தயாரிக்கவாவது யாரேனும் வருகிறார்களா என்றால், அதுவும் இல்லை.

பல முன்னணித் தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுப்பதையே கைவிட்டு விட்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். படமெடுக்கும் மிகக் குறைந்த சிலரும், நஷ்டத்தை மட்டுமே சம்பாதிக்கின்றனர். கடந்த ஆண்டில் முதல் படத்தைத் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் மீண்டும் தயாரித்தார்கள்? அப்படித் தயாரித்த எத்தனை தயாரிப்பாளர்கள் வெற்றியை அல்லது லாபத்தைக் கண்டார்கள்? கடந்த ஆண்டில் புதிதாகத் துவங்கப்பட்ட திரையரங்குகள் எத்தனை? என்று கணக்கெடுத்தாலே போதும், இதற்கெல்லாம் நமக்கு விடை கிடைத்து விடும்.

புவி வெப்பமயமாதல் அதிகரித்து, ஓசோன் மண்டலத்தில் துளை பெரிதாகிக் கொண்டிருப்பதைப் போல இன்னொரு உண்மை; தமிழ் சினிமா நசிந்து கொண்டிருக்கிறது. கோமாஸ்டேஜுக்கு சென்று கொண்டிருக்கிறது. திருட்டு வி.சி.டி.,க்கள் தொடங்கி, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வினியோக உரிமை என்று சகல விஷயங்களிலும் ஒவ்வொரு தயாரிப்பாளரும் நசுக்கப்பட்டு, செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். தற்கொலை முயற்சிக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு சினிமாவைத் தயாரிப்பது லாபமான செயலா? என்று ஒரு குழந்தையைக் கேட்டால் கூட அது மறுத்து விடும். ஒரு ஆண்டில் ஏறத்தாழ நூறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிகபட்சம் பத்து படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் தொன்னூறு சதவீத தயாரிப்பாளர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், வெளியாகும் நூறு படங்களில் தொன்னூறு சதவீத படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் தான். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் படங்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவுதான். லாபத்தில் தானே பங்கு கொடுக்க முடியும்? நஷ்டத்தில் பங்கேற்க யாரும் தயாராக இல்லை. ஒரு படம் தோல்வியடைந்து விட்டது; போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறி கொடுத்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்க முடியுமா?

அதாவது, சினிமா - மற்றைய தொழில்களைப் போலல்லாது ஒரு சூதாட்டமாகிவிட்ட இன்றைய சூழலில் தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை நூறு சதவீதம் உயர்த்திக் கேட்பது எந்த நியாயம்?

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சம்மேளனத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கமும் அங்கம் வகிக்கின்றன. தற்போதைய தொழிலாளர் விதிப்படி மேற்படி சங்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையே பெற வேண்டும். ஆனால், எதார்த்தம் என்ன? ஒரு படம் ஓடினால் மட்டுமே ஒரு இயக்குனர் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

ஒளிப்பதிவாளர்களும், படத்தின் பட்ஜெட்டிற்கேற்ப மட்டுமே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஒருவர், அடுத்ததாக சிறிய பட்ஜெட் படத்தில் பணியாற்ற நேர்ந்தால், தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துத்தான் வாங்குகிறார்.

இந்த நியாய, தர்மங்கள் - தொழிலாளர்களுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா! நூறு கோடி, ஐம்பது கோடியில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி.. ஒரு கோடி, இரண்டு கோடிகளில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி.. அவர்களுக்கு ஒரே ஊதியம் தான். எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் படங்களோ பத்து சதவீதம் தான். இது பாரபட்சமான அணுகுமுறை.

பெரிய பட்ஜெட் படங்களில் தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி வாங்கிக் கொள்ளட்டும். அதுபோல, சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பது தான் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக நான் முன் வைக்கும் கருத்து.

சினிமா நலிந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை மேலும் நலியச்செய்து திரைப்படங்களைத் தயாரிக்கவே யாரும் முன்வராத ஒரு சூழலைத் திரைப்படத் தொழிலாளர்களே ஏன் செய்ய வேண்டும்? திரைப்படம் எடுக்காத ஊரில் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்?

இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான் தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன்வைக்கிறது.

அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ஃபெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி,அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?

தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,' என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது. ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது.

இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம். சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை. டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ஃபெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!

படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதை எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.

தமிழ் இயக்குனர் சேரன்,

(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்...ARRKAY BLOGSPOT ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக