புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழமொழியில் இந்துமதம் Poll_c10பழமொழியில் இந்துமதம் Poll_m10பழமொழியில் இந்துமதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியில் இந்துமதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:51 am

தமிழ் ஒரு வளமான மொழி. இதில் இருபதாயிரத்துக்கும் மேலான பழமொழிகள் உள்ளன. பழமொழிகள் ஆழமான கருத்துடைய சிறிய சொற்றொடர்கள் ஆகும். எழுத்தறிவில்லாத பாமர மக்களும் கூட இவைகளைச் சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியைப் போல வேறு எந்த மொழியிலாவது இவ்வளவு பழமொழிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில் 400 பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு பழமொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு பதிகம் முழுவதையும் பழமொழிகளை வைத்தே பாடியுள்ளார். இந்த மாதிரி நூலோ பதிகமோ வேறு எந்த மொழியிலும் இல்லை. கம்பரும் இராமாயணத்தில் நிறைய பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

பழமொழி என்றால் என்ன?

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தில், ஒரு பண்பாட்டில் உருவான நம்பிக்கைகளை, எண்ணங்களை, கருத்துக்களை, புத்திமதிகளை, அனுபவங்களை நறுக்குத்தெரித்தாற்போல நாலு வார்த்தைகளில் சொல்வதே பழமொழி. இது இலக்கிய நயமான சொற்களில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொச்சையான கிராமத்தான் சொற்களிலும் இருக்கலாம். ஆனால் அதிலுள்ள ஆழமான கருத்தை விளக்க ஒரு பெரிய ஆய்வுக் கட்டுரையே தேவைப்படும். பாமர மக்களும் பழமொழிகளைச் சரளமாகப் பயன்படுத்துவது ஒரு பண்பாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது.

இனி இந்து மதத் தத்துவங்களை விளக்கும் சில பழமொழிகளைப் பார்ப்போம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:52 am

1. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் எப்படிக் காப்பற்றினான் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது. அது வரை தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். இந்த சம்பவத்தின் மூலம் கிருஷ்ணன் அவனுக்கு பெரிய உண்மையை உணர்த்தினான். இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்ததது. இப்போது யாருக்கு ஒரு பெரிய ஆபத்து வந்து அதிலிருந்து பிழைத்தாலும் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:52 am

2. கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?

இந்தக் கதையை பொதுவாகவும் திருவள்ளுவர் மனைவியோடு இணத்தும் சொல்வார்கள். கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே நிமிர்ந்து பார்த்தார். அவரது தவ வலிமையில் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார். பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை. அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா என்று கேட்டாராம். பத்தினிப் பெண்களுக்கு முக்காலமும் உணரும் சக்தி உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. முனிவர் தன்னுடையதவ வலிமையை விட கடைமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரியது என்பதை உணர்ந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:53 am

3. கற்றவனிடமே வித்தையைக் காட்டுகிறாயா?

சிவ பெருமான் கருணைக் கடல். கேட்டவருக்கெல்லாம் வரம் தருவார். ஒரு முறை பஸ்மாசுரன் என்ற அசுரன் அவரை நோக்கி தவம் புரிந்து அவரது அருளுக்குப் பாத்திரமானான். வேண்டிய வரத்தைக் கேள் என்றார். அவன் எவன் மீது கை வைக்கிறேனோ அவன் எரிந்து போகவேண்டும் என்று கேட்டான். சிவன் அவ்வாறே ஆகுக என்று வரம் கொடுத்தார். பஸ்மாசுரன் அவர் மீதே அதை சோதித்துப் பார்க்கவிரும்பினான். சிவன் உயிருக்குப் பயந்து ஒட நேரிட்டது. அப்போது விஷ்ணு மோஹினி உருக்கொண்டு அவனை மயக்கி நாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுத்தார். ஒரு கட்டத்தில் தலை மீது கை வைக்கும் அபினயம் வந்தது. அவனை அறியாமலே அவன் தன் தலைமீது கை வைத்து எரிந்து இறந்தான். இதுதான் கற்றவன் கிட்டேயே வித்தை காட்டுதல். இதில் பல நீதிகள் இருக்கின்றன. கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கும் இதை உதாரணமாகக் கூறலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:53 am

4.குருவை மிஞ்சிய சிஷ்யன்

குருவை மிஞ்சிய சிஷ்யனுக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. இராமானுஜர் என்ற சிறுவன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு குரு வந்தார். சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவனுக்கு ஒம் நமோ நாராயாயணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படி சொல்லிக் கொடுக்கும்போது ஒரு நிபந்தனை விதித்தார். இதை யாருக்கும் சொல்லிக் கொடுக்கக்கூட்டாது. அப்படி சொல்லிக் கொடுத்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும் என்றார். ஆனால் ராமானுஜனோ மந்திரம் பலிதம் அடையும் நிலையில் வந்தவுடன் ஊர் கோவில் கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு எல்லோரையும் அழைத்து மந்திரத்தை உபதேசித்தார். இதைப் பார்த்த குருவுக்கு கோபம் வந்தது. இராமானுஜனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது உங்கள் கட்டளையை மீறியதற்காக நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை.. இத்தனை பேர் சொர்கத்திற்கு போவார்கள் இல்லையா? என்று ராமானுஜன் கூறினார். இவர் குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆகி உலகப் புகழ் பெற்றார். இதையே இன்னொரு விதத்தில் பார்த்தால் சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர் ஆகியோரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக விளங்கினவர்கள்தாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:54 am


5. வினை விதைத்தவன் வினை அறுப்பான்,தினை விதைத்தவன் தினை அறுப்பான்


இந்தக் கருத்து எல்லா மதப் புத்தகங்களிலும் உள்ளது. ஆனால் இந்துக்கள் மறு ஜன்மத்திலும் இது பொருந்தும் என்று நம்புகிறார்கள். பல புராணக் கதைகளில் இந்த ஜன்மத்தில் ஒருவர் துன்பப்படுவதற்கு காரணம் பூர்வ ஜன்ம வினைதான் என்று காட்டப்படுகிறது. குறள், கீதை, பைபிள் ஆகிய எல்லா நூல்களிலும் இதைக் காணலாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழியும் இதையே விளக்குகிறது. கர்ம வினை பற்றிய கொள்கை சமண மதத்தில் இன்னும் வலுவாக உள்ளது. தமிழ்க் காவியமான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியனவற்றில் வினைப் பயன் நன்றாக விளக்கப் பட்டுள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:54 am


6. உள்ளது போகாது, இல்லாதது வாராது


இது ஆத்மாவின் அழியாத்தன்மையை காட்டுகிறது. அறிவியலில் energy can neither be created nor destroyed என்ற பெரிய தத்துவம் உள்ளது. இதே போலத்தான் ஆத்மாவும். இதை யாரும் அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது. இது பரமாத்மாவுடன் ஒன்றுபட முடியும். அவன் மீண்டும் சிருஷ்டி காலத்தில் உலகைப் படைக்கும்போது அவை உயிர்களாக இயங்கும். மதத்தையும் அறிவியலையும் மறந்துவிட்டு சாதாரண உலகை எடுத்துக் கொண்டாலும் மந்திர தந்திரச் செயல்களைச் செய்வோருக்கு இதை பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் உருவாக்கும் பொருட்கள் ஏதோ ஒரு இடத்திலிருந்துதான் வருகின்றன. உற்பத்தி செய்யப்பட்டது இல்லை என்று கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:55 am


7. இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்


இராமாயணத்தின் அழியாத் தன்மைக்குக் காரணம் இராம பிரானின் அபூர்வ குணங்களாகும். எங்கெல்லாம் ஒரு மனிதன் ஆசைக்கு எளிதில் இரையாவானோ அங்கெல்லாம் இராமன் சூப்பர் மனிதனாகச் செயல் படுகிறான். இதனால் கதைப் போக்கு நாம் எதிர்பாராத விதமாக அமைகிறது. இது உண்மையில் நடந்தது என்று அறியும்போது இராம பிரானின் மீதான அன்பு பெருகுகிறது. இந்தப் பிறப்பில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன் என்ற அவனது கூற்று அந்தக் காலத்தில் யாரும் செய்யாத செயலாகும். அவனது தந்தை உட்பட எல்லா அரசர்களும் பல மனைவிகளை வைத்திருந்த காலத்தில் அவன் ஒரு மனைவியக் கூட அனுபவிக்க முடியாத நிலையில் இப்படி இரு மாதரைச் சிந்தையாலும் தொட மாட்டேன் என்று சபதம் செய்கிறான். அதனால்தான் இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான் என்ற பழமொழி வந்தது. அவனது தம்பி இலக்குவன் இதற்கும் ஒரு படி முன்னால் சென்றவன். அன்னை சீதா பிராட்டியின் காலில் இருந்த மெட்டியைத் தவிர அவளது உருவத்தையே காணாதவன். இதனால் இராமாயணம் படித்து அதன் கருத்தை உள்ளத்தில் கொண்டவர்களுக்கு காமம் இராது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:55 am


8. படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா? விடிய விடிய இராமாயணம் கேட்டுவிட்டு சீதைக்கு இராமன் சித்தப்பன் என்றானாம்.


இந்தப் பழமொழிகள் சமுதாயத்தில் இராமாயணம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதைக் காட்டுவதோடு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பவர்களை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஒருவன் நீண்ட நேரம் ஒரு காரியத்தில் செலவு செய்து விட்டு ஒன்றுமே புரியாமல் இருப்பதை இரண்டாவது பழமொழி நன்றாக எடுத்து காட்டுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Jan 19, 2009 1:55 am

9. சாது மிரண்டால் காடு கொள்ளாது

இந்து மத சந்நியாசிகள் பொதுவாக சாதுக்கள். சந்நியாசம் எடுக்கும்போது குருவுக்குத் தரும் வாக்குறுதியில் எந்த உயிருக்கும் சிந்தையாலும் தீங்கு செய்ய்யமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். அவர்கள் யார் மீதும் கோபப்படமாட்டார்கள். ஆனால் யாரையாவது சபித்தால் அந்தச் சாபம் பலித்துவிடும். மேலும் ஒரு முறை சபித்து விட்டால் அதை அவர்களேகூட மாற்றமுடியாது. அந்தச் சாபத்திற்கு விமோசனம் மட்டும் தர முடியும். அப்பேற்பட்ட சக்தியுடையவர்களை சில நேரத்தில் மன்னர்கள் கொடுமைப்படுத்தியது உண்டு. வேனன், இந்திரன், நகுஷன் ஆகியோர் சாதுக்களை பகைத்துக் கொண்டு கூண்டோடு அழிந்தரர்கள். திருவள்ளுவர் பெரியோரைப் பகைத்தால் என்னாகும் என்று ஒரு அதிகாரம் முழுவதும் கூறுகிறார். மொகலாய மன்னர்கள் அளவு கடந்து அநியாயம் செய்த போது வித்யாரண்யர் என்ற சந்நியாசியும் சமர்த்த ராமதாச் என்ற சந்நியாசியும் இந்து சாம்ராஜ்யங்களை உண்டாக்கி மதத்தைக் காப்பற்றினார்கள். இதுபோல எத்தனையோ மன்னர்கள் சாதுக்களைப் பகைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு பின்னர் அவர்களிடமே மன்னிப்புக் கேட்ட கதைகளும் இருக்கின்றன.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக