புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
46 Posts - 40%
prajai
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
4 Posts - 3%
Jenila
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%
kargan86
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%
jairam
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
8 Posts - 5%
prajai
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%
jairam
வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_m10வலிது, வலிது; திருமணம் வலிது....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிது, வலிது; திருமணம் வலிது....!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 1:20 pm



ஒவ்வொரு பெண்மணியும் மறக்க முடியாத மறக்க விரும்பாத நாள் தங்களின் திருமண நாளாகும். சுற்றமும் உற்றவர்களும் சூழ, வேதியர்கள் மந்திரங்கள் ஓத, மங்கல இசை ஒலிக்க மங்கல நாண் பூணும் நேரம் உலகிலேயே மிக முக்கியமான நேரமாகக் கருதப்படுகிறது.

ஆனால் அதே பெண் சில வருடங்கள் அல்லது பல வருடங்கள் கழித்து, குடும்ப நல கோர்ட்டில், வக்கீல்கள் புடைசூழ நிற்க நீதிபதி "இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது' என்று கூறுகையில் அப்பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும்?

திருமணம் நடக்கையில் இருக்கும் பயமும், புதுமையும் விவாகரத்து முடிந்து தனி வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுதும் அதே பயமும், தயக்கமும், புதுமையும் இருக்கும் அல்லவா?

"பிடித்திருந்தால் திருமணம், பிடிக்காவிட்டால் டைவர்ஸ்' என்று இன்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். குடும்பக் கோர்ட்டுக்கு வந்து பார்த்தால், அங்கு முட்டி மோதும் கூட்டத்தை கண்டு திகைப்படைவீர்கள். தற்சமயம் சனி, ஞாயிறு கூட குடும்ப நல கோர்ட் பணி செய்கிறது என்று ஆழ்ந்த வருத்தத்துடன் குடும்ப நல கோர்ட்டு வக்கீலான திரு. எல்.ஆர்.கி÷ஷார்குமார் கூறுகிறார்.

"இந்திய வாழ்க்கை முறையில் பல கேடுகள் வந்துவிட்டன. அதனால் குடும்ப வாழ்க்கை குலைந்து வருகிறது' என்று மூத்த தலைமுறையினர் புலம்ப, "பிடிக்கவில்லை என்றால் விலகுவதுதான் சரியான முடிவு' என்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர்.

"இந்த இரண்டுமே தவறு. திருமணம் என்பது இருவரின் உணர்வுகளின் சங்கமம். அதைச் சற்றே அறிவுப்பூர்வமாக அணுகுவதுதான் சரியான முறையாகும். திருமண பந்தங்கள் ஐந்து வகைப்படும். அதை அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் சந்தித்தால், இன்று கோர்ட்டில் உள்ள பல விவாகரத்து கேஸ்கள் தோற்றுப்போய் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழலாம்' என்று ஈ மாவிஸ் ஹெதெரிங்க்டன் எனும் அமெரிக்கர் கூறுகிறார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவாகரத்து கேஸ்களில் ஆராய்ச்சி செய்துள்ளார், இப்பெண்மணி. கணவன் மனைவிக்குள் ஏற்படம் மோதல்களில் அடிப்படையானது அபிப்ராய பேதத்தால்தான். முரண்பாடுகளின்றி நடக்கும் காதல் திருமணங்களும், மரபுவழி முறையாக நடத்தப்படும் திருமணங்கள் இவை இரண்டுமே உறுதியான திருமண பந்தமாக இருக்கின்றன.

மேவிஸ் ஹெதெரிங்க்டன் மூன்று விதமான திருமண பந்தங்களைப் பற்றி கூறுகிறார். அனுசரித்து நடப்பவர் விலகிச் செல்பவர், இடையே திருமணம் பந்தத்தை விட்டு ஒதுங்கும் திருமணங்கள்; உடல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தப்படம் திருமணங்கள் இவை மூன்றிலும் எப்பொழுதும் விவாகரத்திற்கான காரணங்களே அதிக ஆழமாக இருக்கின்றன.

ஒட்டி உறவாடும் தன்மை கொண்ட திருமணங்களும், தனித்தன்மை மற்றும் சுதந்திர முடிவுகளோடு கொண்ட திருமணங்கள் ஆகிய இரண்டு விதமான திருமணங்களில் கம்மியான விவாகரத்து பிரச்சினைகளில் இரண்டாம் இடத்தை பிடிக்கின்றன.

இவ்வகை திருமணங்கள் மூலம் இணைந்த தம்பதிகள், ஒவ்வொரு கணமும் ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிட்டு ஒட்டி உறவாடுவதில்லை என்றாலும் அவர்களுக்கு ஓர் இணைப்பு உள்ளது.

இவ்வகை திருமணங்கள் தத்தம் பணிகளை முடித்துவிட்டு, கூட்டை நோக்கி வரும் பறவைகள் போன்று புதுப்பித்தக் கொள்ளுதல், ஆதரவு அளித்துப் பெற்றுக் கொள்ளுதல், பாசம் மற்றும் சிநேகம் ஆகியவற்றை அளிக்கின்றன என்று ஹெதெரிங்க்டன் கூறுகிறார்.

பெற்றோர்கள் ஆலோசித்து நிச்சயிக்கும் திருமணங்களில் ஆண் சம்பாதித்துப் பெண்ணிடம் அளிக்க, மனைவி வீட்டில் இருந்தபடி குடும்பத்தை நடத்தும் திருமணங்கள் மிகக்குறைவான பிரச்னைகளுடன் நிரந்தரத்தன்மையும் உள்ளன என்பது ஓர் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

இப்படிப்பட்ட திருமணங்கள் உயர்ந்து, நன்றாக செழிக்க, கணவனும் மனைவியும் தத்தம் கடமைகளைச் சரிவரச் செய்து, அதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு, ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 80% திபருமணங்களில் அனுசரித்து நடப்பவர் மனைவியாக அமைகிறார். அவள் பிரச்சனைகளை இனம் கண்டு, பேசி சரி செய்யும் எண்ணத்தை மேற்கொள்கிறாள். ஆனால் கணவன், விலகிச் செல்வது, பிரச்னைகளை இனம் கண்டு கொள்ளாமல் இருப்பது, உட்கார்ந்து நேருக்கு நேர் பேசத் தவறுவது ஆகிய மூன்றøயும் கடைப்பிடித்துத் தள்ளி நின்று உறவுமுறையை கையாளும் வழியைப் பின்பற்றுகின்றனர் என்று ஹெதரிங்க்டன் கண்டுபிடித்தார்.

உதாரணமாக, மனைவி ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசுகிறார். அப்பொழுது கணவன் செய்தித்தாளை படிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்ப்பது, அல்லது அவற்றை வெறித்து பார்ப்பது, பதிலேதும் கூறாமல் உணவை உண்பது போன்றவற்றைச் செய்கிறார். இதனால் மனைவிக்கு வெறுப்பு வந்து, தன் மனதையும் எணணங்களையும் சுருக்கிக் கொள்கிறாள். அதே போன்று கணவன் மனைவியின் பேச்சைத் தொண-தொணப்பு என்று எண்ணுகிறான்.

தனித்தன்மை கொண்ட திருமணங்கள் இரண்டு தனித்தன்மை வாய்ந்தவர்களை இணைக்கின்றது. இவர்களுக்கு நெருக்கமான உறவுமுறை தேவையில்லை எனும் எண்ணம் அல்லது உறவு முறைகளைக் கையாள இயலாது எனும் பயம் காரணமாக, ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதில்லை.

இவர்களுக்குள் அதிகமான விவாதங்கள் இருப்பதில்லை. தினமும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் எனும் அவசியம் அவர்களிடம் இருப்பதில்லை.

இவையனைத்தும் மேற்பார்வைக்குச் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் இவர்கள் தனித்தனியாகத் திருமணத்திற்கு முன் வாழ்ந்தது போன்றே வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ஆனால் பாசம், ஆதரவு போன்றவை இவ்வகை திருமணங்களில் இடம் பெறாது.

மூன்றாவது வகையான திருமண வாழ்க்கையில் உடல் சார்ந்த உணர்வுகளுக்கும், மன உணர்ச்சிகளுக்கும் மிக அதிகமான இடம் கொடுக்கப்படுகின்றது. சில சமயம் அதிக சந்தோஷம், சில சமயம் மிக அதிக வருத்தம் என்று இவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் சண்டை சச்சரவுகளும், அச்சண்டையில் கோபத்தைத் தணிக்க, உடல் ரீதியாக செயல்படுவதும் இவர்களிடம் மிக அதிகமாகக் காணப்படும்.

ஹெதரிங்க்டன் தன் ஆராய்ச்சியில் இம்மூன்றாவது வகை திருமணங்களில் மற்ற இரண்டுவகை திருமணங்களைவிட உடல் சார்ந்த திருப்தி இவர்களிடம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது என்று தெரிவிக்கின்றார்.

கோபம் - சண்டை - உடல் சார்ந்த திருப்தி என்ற வாழ்க்கை நடத்துகையில், கோபம் மற்றும் சண்டை காரணமாக மிகக் கோபமான வார்த்தைகளை அள்ளி வீசுவதினால் ஒருவரையொருவர் மிகக் கடுமையாகச் சாடுகின்றார்கள். இவ்வகைத் திருமணங்களில் பொதுவாக கணவன்தான் முதலில் விவாகரத்திற்கு வழி கோருகிறார்.




வலிது, வலிது; திருமணம் வலிது....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 18, 2011 1:21 pm

இன்று இந்தியாவிலும் சுயமாக சிந்தித்து, சம்பாதிக்கும் எண்ணங்கள் பெண்களுக்கும், அதிகரித்து வருவதால் விவாகரத்துக்கள் பெருகி வருகின்றன. பணத்தைவிட உறவும், பாசமும் முக்கியம் எனும் எண்ணம் தோன்றுகையில் காலம் கடந்துவிடும் ஆபத்தும் உள்ளது.

பேச்சு கலை : இன்றைய காலகட்டத்தில் வேகமான வாழ்க்கை முறையில் திருமணங்கள் ஆல் போன்று தழைத்து நிற்க முதலில் ஒருவர் மற்றவருடன் பேசுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டில் பல்லாயிரக் கணக்கான திருமணமான ஜோடிகளைப் பேட்டி கண்டு வீடியோ எடுத்ததை அந்த உரையாடல்களை கணினி மூலமாகப் பல பிரிவுகளாகப் பிரித்து ஆராய்ச்சி செய்தனர்.

அவற்றில் திருமணமான கணவன் மனைவியிடையே நடைபெறும் ஒரு சில வகை பேச்சு வார்த்தைகள், நிச்சயமாக அவர்களை விவாகரத்து வரையில் இழுத்து செல்லும் என்று தெரிய வருகின்றது.

பிரச்னைகளைத் தவிர்ப்பது : பொதுவாக திருமணமான கணவன் மனைவி பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எதுவும் போசாமல் மௌனமாக, அமைதியா இருப்பது ஓர் சுலபமான வழி என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இத்தகைய நடைமுறை திருமண வாழ்விற்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றது.

ஓர் குறிப்பிட்ட ஜோடியைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து மூன்று வருடங்கள் அவர்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்தனர்.

திருமணமான புதிதில் அதிகம் விவாதங்கள் புரியாத ஜோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் குறைத்த அளவான விவாதங்களோடு இணைத்தனர்.

ஆனால் 3 வருடங்கள் கழித்து நிறைய மாறுதல்கள் அவர்களுக்கிடையே ஏற்பட்டன. மனம் திறந்து பேசுவதின் மூலம் தங்களுக்குள் உள்ள மன வேற்றுமைகளைத் தீர்த்துவிட்டு, நிம்மதியான வாழ்வு வாழ்வதாக எண்ணிய அவர்கள், விவாகரத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

அமைதியாக இருப்பதும், மண வாழ்வில் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பதும் ஆனால் மனதில் அதற்கான காரணங்களை வைத்துக் கொண்டு புழுங்குவதும், மனதளவில் பிரிவினை ஏற்பட்டு விடும் ஆபத்தை உண்டாக்குகின்றது. இதனால் நல்ல உறவு முறையைப் பேணி வழி நடத்தும் தன்மையை இழக்கின்றனர்.

அலட்சியப்போக்கு : கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் பேசுகையில் அலட்சியப் போக்கு இருந்தால் அத்திருமணம் பிரச்சனையில் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

அலட்சியமான பேச்சு, மற்றவர்கள் கூறுவதை மறுப்பது, பேசுவதை உன்னிப்பாகக் கேட்காமல் குறுக்கே புகுந்து மறுப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்றவை இவற்றில் ஒன்றாகும்.

திருமண வாழ்க்கை முறையை ஆய்வு செய்யும் டாக்டர் ஜான் கோட்மான் எனும் அமெரிக்க மனநலம் நிபுணர் "அலட்சியப்போக்கு கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு இருந்தால் கூட அது நிச்சயம் விவாகரத்திற்கு வழி வகுக்கும்' என்று கூறுகிறார்.

தவறான எண்ணங்கள் மற்றும் ஏமாற்றமடைவது : திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போன்று அமையாதது, அல்லது ஏமாற்றமடைவது போன்ற எண்ணங்கள் கட்டாயமாக விவாகரத்திற்கு வழி வகுக்கும்.

நம்பிக்கை மோசம் : குட் மாஷர் ஸ்தாபனம் திருமண வாழ்வில் நம்பிக்கை துரோகம் செய்யும் காரண காரியங்களை ஆராய்ந்தது.

இந்த ஆய்வில் 2598 ஆண்களையும் பெண்களையும் பேட்டி கண்டனர். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள பெண்களிடம் பேசினர். அப்பெண்கள் 1992ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் சமூகவியல் வாழ்வு முறை கண்ணோட்டம் எனும் கருத்தரங்கில் பங்கு கொண்ட திருமணமானவர்கள்.

பொதுவாக ஒருவரையொருவர் ஏமாற்றுவது என்பது 11 சதவிகிதமே உள்ளது. தன் மனைவியை ஏமாற்றும் கணவன்மார்கள் அதிகம் உள்ளனர். ஏனென்றால் மனதளவிலும் உடலளவிலும் பல மாற்றங்களைச் சந்திக்கும் இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுகின்றார்கள்.

இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மாற்றம், வெளிநாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறை, இளவயதிலேயே அளவுக்கு அதிகமான பணபுழக்கம், என்று இந்தியாவிலும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது என்பது வருந்தத்தக்கதாகும்.

இந்திய வாழ்க்கை முறையில் திருமணமான முதல் 5 வருடங்கள் மிகக் கடுமையானவை. இச்சமயத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அவசர முடிவுகளுக்குச் செல்கின்றனர். அது மட்டுமல்ல; பெற்றவர்களும் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பேசுகின்றனர்.

உயர்ந்த படிப்பு, பெரிய பதவி, அபரிதமான செல்வம் இவை மட்டுமே திடமான திருமண வாழ்க்கையை அறிவிப்பதில்லை. அவற்றையெல்லாம் ஒதுக்கி, ஒருவரையொருவர் நல்ல பண்பு, குணம், உண்மை போன்றவற்றிற்காகப் புரிந்து வாழ்வது உறவைப் பலப்படுத்தும்.

நம்பிக்கை, அன்பு, மரியாதை, பாசம் எனும் நான்கு தூண்களை ஆதாரமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் செழித்து வாழ்கின்றன. அனைத்து திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லை.

அதற்கு முக்கிய காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, செயல்படுவது, சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல் விட்டு கொடுப்பது, உண்மையான அன்பு, பாசம் செலுத்துவது, தவறுகளை மன்னிப்பது போன்றவை வலுவான திருமணப்பந்தத்திற்கு பலமான அஸ்திவாரமாகும்.

காந்தலட்சுமி சந்திரமௌலி



வலிது, வலிது; திருமணம் வலிது....! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Tue Jan 10, 2012 10:18 am

நம்பிக்கை, அன்பு, மரியாதை, பாசம் எனும் நான்கு தூண்களை ஆதாரமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் செழித்து வாழ்கின்றன. அனைத்து திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லை.

அருமையான கட்டுரை சூப்பருங்க



ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக