புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
4 Posts - 3%
prajai
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
2 Posts - 2%
jairam
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%
kargan86
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
8 Posts - 5%
prajai
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
2011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_m102011 ம் வருடமும் சாமானியனும் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 ம் வருடமும் சாமானியனும் !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 31, 2011 1:23 pm


2011 ம் வருடமும் சாமானியனும் !









ஒரு சாமானியனின் கவலைகள் என்பதா ,கேள்விகள் என்பதா ,ஆதங்கம் என்பதா அல்லது இயலாமை என்பதா தெரியவில்லை .


  • ஆட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன .
    ஆனால் , அதிகார மையங்களின் பிடியிலிருந்து மக்கள் இன்னும் வெளியே
    வரமுடியவில்லை . பிரதமர் ,முதல்வர் போன்ற மேல் நிலை ஊழியர்களிலிருந்து
    அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை சாமானிய மக்கள் மீது அதிகாரம்
    செலுத்துபவர்களாகவே இருக்கின்றனர் . மக்களின் வரிப்பணம் தான் தனக்கு சோறு
    போடுகிறது என்ற மனநிலை அவர்களுக்கில்லை . சாமானியர்கள் மீது அதிகபட்ச
    அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பவர்கள்
    காவல்துறையைச் சேர்ந்தவர்கள் . பொய் வழக்கு ,லாக்கப் சித்திரவதை , தடியடி ,
    துப்பாக்கிச்சூடு என்று சாமானியர்கள் மீது பாயும் அதிகாரத்தின் நீளம்
    அதிகம் . உலகமே அதிகார மையங்களின் கட்டுப்பாட்டிலே இருப்பதாகத் தெரிகிறது .
    உண்மையான மக்களுக்கான ஆட்சி எங்குதான் நடைபெறுகிறது ? யாராவது
    சொல்லுங்களேன் .


  • லஞ்சம் ,ஊழல் என்பது மனித விலங்குகளின்
    ஜீனிலியே பதிந்துபோன விசயமாக மாறிவிட்டது . லஞ்சம் , ஊழல் குறைவான நாடு
    வேண்டுமானால் உலகில் இருக்கலாம் .ஆனால் , லஞ்சம் ஊழலே இல்லாத நாடு என்று
    ஒன்று உலகில் இருக்க வாய்ப்பில்லை.



  • அண்ணா ஹசாரே போராட்டத்தை ஒரு சில
    ஊடகங்கள் காந்தியவழிப் போராட்டம் , மக்களுக்கான போராட்டம் என்று சொல்கின்றன
    . இல்லை ,இது கார்பரேட் கம்பெனிகளின் போராட்டம் , மத்திய தர மக்களின் உடல்
    நோகா மெழுகுவர்த்தி போராட்டம் என்று வேறு சில ஊடகங்கள் ஏசுகின்றன . அதிகம்
    படிப்பறிவில்லாத சாமானியர்களான நாம் எதை நம்புவது ?


  • அண்ணா ஹசாரே, எத்தனை
    முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு
    தரும் ஊடகங்கள் , இரோம் சர்மிளா , ஓடிஸா போஸ்கோ , பழங்குடியினர்
    ,கூடங்குளம் மற்றும் பல பிரச்சனைகள் குறித்து வாயே திறக்காமல் இருப்பது
    நம்மை யோசிக்க வைக்கிறது .




  • சுயஒழுக்கம் என்பதை
    சட்டங்களால் உருவாக்க முடியாது . சிறந்த கல்விமுறையாலும் , சிறந்த குழந்தை
    வளர்ப்பாலும் மட்டுமே சுய ஒழுக்கத்தை உருவாக்க முடியும் . ஆனால் , இன்றைய
    கல்விமுறை கண்ணை மறைத்து , கடிவாளம் பூட்டிய குதிரையைப் போல கொள்ளுக்கும்
    ,புல்லுக்கும் ஓடுவது போலவே உள்ளது .




  • இந்த வருடம் நடந்த
    ஆட்சிமாற்றம் எல்லோருக்கும் மகிழ்ச்சியே . பலன் ??? ஒரு நாடக நடிகர்
    பதவியிலிருந்து இறக்கப்பட்டார் , ஒரு சர்வாதிகாரி பதவியில்
    அமர்ந்திருக்கிறார் அவ்வளவுதான் . மக்களைப்பற்றி எந்தவித அக்கறையும்
    இல்லாமல் பிடிவாதமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன . பழையபடி காவல்துறை
    சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . சே ! இந்த முறையும் நம்ம
    ஓட்டு வேஸ்டு தானா . எப்ப தான் நாம் போடும் ஓட்டுக்கான பலனை அனுபவிக்கப்
    போகிறோமோ ?




  • 50 ஆண்டுகளுக்கும் மேலாக
    அடக்குமுறைக்கு ஆளான தெற்கு சூடான் ஜூலை 9 , 2011 அன்று தனிநாடாக உதயமானது . சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை யார்
    மீட்டெடுப்பது ? ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை எப்படிப் போக்குவது ?
    உலகெங்கும் நடக்கும் அடக்குமுறைகளை யார் தட்டிக்கேட்பது ?




  • இதுவரைக்கும் அணுஉலை பற்றிக்
    கவலைப்படாத நாடுகள் கூட புகுசிமா நிகழ்விற்குப் பிறகு அணுஉலை பற்றி
    அச்சமும் ,அணுவைப் பயன்படுத்துவதில் தயக்கமும் கொண்டிருக்கின்றன . எப்படிப்
    பார்த்தாலும் அணுசக்தி பூமிக்கு ஆபத்தானது தான் . 20 ஆண்டுகளுக்கும் மேலான
    கூடங்குளம் மக்களின் போராட்டத்தை கேலிப்பொருளாக்கி 5 மாவட்ட மக்களுக்காக
    கவலைப்படாமல் , 14000 கோடிக்காக மட்டுமே கவலைப்படுகிறது தற்போதைய காங்கிரஸ்
    அரசு . இதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையுடன்
    ஒப்பிடும் போது இந்த 14000 கோடி மிகவும் சொற்பமானது .




  • தொடர்ந்து இயற்கைக்கு எதிராக
    செயல்படும்வரை நமக்கு வீழ்ச்சிதான் . நமது செயல்பாடுகள் இயற்கையின்
    அனைத்து கூறுகளையும் பாதித்துவிட்டன . நம்மால் இயற்கையைக் கட்டுப்படுத்தவோ ,
    வெற்றி கொள்ளவோ எப்போதும் முடியாது . விதவிதமான நோய்களின் எண்ணிக்கை
    நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன . குறிப்பாக உச்சந்தலை முதல்
    உள்ளங்கால் வரை கட்டிகள் மற்றும் புற்றுநோய் அதிகரித்துக்கொண்டே
    இருக்கின்றன . தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே
    போகின்றன . மற்ற நாடுகளில் தடை செய்யப்பட மருந்துகள் இப்போதும் விற்பனை
    செய்யப்படுகின்றன . காரணம் ?




  • பிரிவினைவாத அரசியலின்
    பலிகடாவாக எப்போதும் இருப்பது சாமானிய மக்கள்தான் . ஜாதி அரசியல் ,மத
    அரசியல் , கட்சி அரசியல் என்று பிரிவினைகளை உருவாக்கி தங்கள் ஆதாயத்திற்கு
    சாதாரண மக்களை முட்டாள்களாக்கி , உணர்ச்சிவசப்படவைத்து குளிர்காய்வதுதான்
    அரசியல்வாதிகளின் வேலையாகிவிட்டது . தமிழ்நாட்டுக்கும் , கேரளாவுக்கும்
    இடையிலான பிரச்சனையை தமிழர்களுக்கும் ,மலையாளிகளுக்கும் இடையிலான
    பிரச்சனையாக மாற்றிய பெருமை இரு மாநில அரசியல் கட்சிகளையும் , ஊடகங்களையுமே
    சேரும் . முன்பு , காவிரிப் பிரச்சனையில் கர்நாடகாவில் இருந்த தமிழர்கள்
    தாக்கப்பட்டார்கள் . கர்நாடகாவில் இருந்த தமிழர்கள் , தமிழர்கள் என்று
    அடையாளப்படுத்தவே பயப்பட்டனர் . ஆனாலும் , இன்றும் எத்தனையோ தமிழர்கள்
    பிழைப்புக்காக அங்கு வாழ்கின்றனர் . அதே பிழைப்புக்காக கர்நாடாக மக்களில்
    சிலர் இங்கும் வாழ்கின்றனர் . அதுபோல , இன்று சண்டை கட்டிக்கொண்டாலும் நாளை
    மலையாளிகள் தமிழ்நாட்டிலும் , தமிழர்கள் கேரளாவிலும் பிழைப்புக்காக
    வாழத்தான் போகின்றனர் .


  • இலக்கியம் படிக்க முயற்சி செய்யும்
    என்னைப்போன்ற பட்டிக்காட்டனுக்கு நிறைய கேள்விள் எழுகின்றன . அரசியல்
    கட்சிகள் எந்தப்பிரச்சனையிலும் ஒற்றுமையாக செயல்படுவதில்லை என்று
    விமர்சிக்கும் எழுத்துலகம் , அரசியல் கட்சிகளை விட அதிக பிரிவினைகளைக்
    கொண்டிருக்கிறது . எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் ஆளாளுக்கு
    ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர் ; நம் மண்டை காய்கிறது . இலக்கியம் என்றாலே
    பொது தானே அப்புறம் ஏன் பெண் இலக்கியம் , ஆண் இலக்கியம் , தலித் இலக்கியம்
    என்று ஏகப்பட்ட பிரிவினைகள் . இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு இந்த
    பிரிவினை இலக்கியங்களால் சமத்துவத்தை உருவாக்க முடியுமா ? முதலில் படைப்பு
    தான் பேசப்பட வேண்டும் . பிறகு தான் அதை யார் எழுதியது என்று பார்க்க
    வேண்டும் .பிரிவினைகளைப் புறந்தள்ளி உலக இலக்கியங்களுக்கு இணையான தரமான
    இலக்கிய படைப்புகள் உருவாக்குவதை நோக்கியும் , சமூகத்தை சீர்படுத்துவதில்
    இலக்கியத்திற்கு இருக்கும் மாபெரும் பங்கை உணர்ந்தும் எழுத்துலகம்
    பயணிக்குமா ?




  • சினிமாவில் இன்னும் அருவாள்
    தூக்கும் கும்பல் இடம்பெறுகிறது . அதிகபட்ச வன்முறைக்காட்சிகள்
    பார்ப்பவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்து மனதை மரத்துப்போகச் செய்கின்றன .
    சமீபகாலப் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் திரைக்கதையின் வேகத்தைக்
    குறைக்கின்றன . கண்டிப்பாக 5 கும் மேற்பட்ட பாடல்கள் இருக்க வேண்டும் என்ற
    விதியை விட்டுக்கொடுக்கும் மனநிலையில் நிறைய இயக்குனர்கள் இல்லை . கதையை
    மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் கடந்த 2 ஆண்டுகள் ஓரளவு
    வரவேற்பைப் பெற்று இருக்கின்றன . இது நல்ல விசயம் . " ஆரணிய காண்டம் " ,
    "எங்கேயும் எப்போதும் " மற்றும் " பாலை" இந்த ஆண்டின் சிறந்த படங்களாக
    இருக்கக்கூடும் .




  • இந்த ஆண்டு , உலக சாம்பியன்
    கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவிலும் ,பெண்கள் பிரிவிலும் உலகக்கோப்பைகளை
    வாங்கி ஆட்டோவில் பயணித்து வீடு வந்து சேர்ந்தனர் ,இந்திய கபடி அணியினர் .
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது
    இந்தியா . எவ்வளவு பெரிய பிரச்சனையையும் மறக்கவைக்கும் சக்தி கிரிக்கெட்
    விளையாட்டிற்கு உள்ளது .பெருமளவு மக்களின் பிடித்தமான பொழுதுபோக்காக
    இருப்பதும் அதுவே . இது அரசியல் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு வசதியாகப்
    போய்விட்டது .முதல் முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் இந்த ஆண்டு
    இந்தியாவில் நடைபெற்றது . மற்ற விளையாட்டுகள் பற்றி ஊடகங்களுக்கும் ,
    நமக்கும் எந்தவித கவலையுமில்லை . ஒலிம்பிக் பதக்கம் ???


  • ஒவ்வொரு ஆண்டும் விளம்பரங்கள் வாயிலாக
    நம் மூளை சலவை செய்யப்படுவதன் மூலம் நமது வீடுகளில் இறக்குமதியாகும்
    விதவிதமான பொருட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . இந்தியா மிகப்பெரிய
    வணிக சந்தையாக மாறிவிட்டது . சிறிய ,பெரிய எந்தக் குடும்பமாக இருந்தாலும்
    ஒவ்வொரு மாதமும் உணவிற்காக செய்யும் செலவைவிட மற்ற பொருட்கள் வாங்கவே
    அதிகம் செலவு செய்கிறது .


  • இந்த ஆண்டில் தான் அனந்த பத்மநாபசாமி
    கோவில் , ஒரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளாக மாறியது . தங்கம் மட்டும்
    இன்று ஓட்டைக் காலணா போல புழக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால்
    தங்கத்திற்கு எந்த மதிப்பும் இருந்திருக்காது . தங்கம் , பல ஆயிரம்
    ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது மிகப்பெரிய சரித்திர
    நிகழ்வு . இன்று ,சாமானியன் தங்கம் வாங்க நினைப்பதே பெரிய சாதனை தான் .


  • காலம், கொண்டாட்டத்திற்கு இடம்
    ஒதுக்கும்போதே துயரங்களுக்கும் ,மரணங்களுக்கும் சேர்த்தே இடம்
    ஒதுக்குகிறது . மார்ச் 11 ,2011 அன்று ஜப்பானை உலுக்கிய சுனாமி இந்த
    ஆண்டின் துயரமாக பதிவாகியுள்ளது . ஜப்பானுக்கு சுனாமி ஒன்றும் புதிதல்ல .
    புகுசிமாவில் இருந்த அணுஉலைகள் பாதிக்கப்பட்டு , கதிர்கள் வெளியேறியது தான்
    கொடூரம் . இயற்கையால் பாதி அழிகிறது ,மனிதனால் பாதி அழிகிறது . இயற்கை
    அழிவுகளில் நீடித்த பாதிப்புகள் இல்லை . மனிதனால் ஏற்படும் அழிவுகளால்
    நீடித்த பாதிப்புகள் உருவாகின்றன . மலேசியா வாசுதேவன் மரணமும், ஸ்டீவ்
    ஜோப்ஸின் மரணமும் இந்த ஆண்டின் மறக்க முடியாத மரணங்கள் . மரணங்கள்
    எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன .ஆனால் , ஒரு சில
    மரணங்கள் மட்டுமே கவனிக்கப்படுகின்றன . காரணம் ?

இவ்வளவுக்கும் மத்தியில் தொடர்ந்து வாழ நமக்கு சக்தி அளிப்பவை , இயற்கை
மீதான பிடிப்பும் , நம்பிக்கையும் மற்றும் மற்றவர்கள் நம் மீது காட்டும்
அன்பும் , நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பும் தான் .

ஆமாம் .2012 ல உலகம் அழியப் போகுதாமே !
2000 ஆண்டைப் போல 2012 ஆண்டும் சுவாரசியமாகி விட்டது . மனிதன் தொடர்ந்து இயங்க இந்த மாதிரியான சுவாரசியங்கள் அவசியமாகின்றன .

வலுத்தது நிலைக்கும் !

http://jselvaraj.blogspot.com/2011/12/2011.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக