புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
30 Posts - 50%
heezulia
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
72 Posts - 57%
heezulia
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_m10புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 04, 2012 2:19 am

சென்னை: "தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ஏற்கனவே ஒதுக்கிய, 150 கோடி ரூபாய் போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

உடனே நிவாரணம் அரசு உத்தரவு : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய், முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 114 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த நிவாரண உதவிகளை உடனே வழங்க, பிற மாவட்டங்களிலிருந்து, 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை, வரும் 5ம் தேதிக்குள் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகளில் உள்ள, 174 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, 57 லாரிகள் மூலம், மீதம் 52 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னும், இரண்டொரு நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.

ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் : கடலூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும், 40 முதல் 50 சதவீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றிலும், ஓரிரு நாட்களில் முழு அளவு குடிநீர் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில், எட்டு அதிகாரிகள், பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்துக்கென, 50 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில், 27 உயரழுத்த மின் கோபுரங்கள், 4,500 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஆயிரம் மின் கம்பங்கள், 350 கி.மீ., நீளத்துக்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்ய உத்தரவிட்டதால், கடலூர், பண்ருட்டி, நெல்லிகுப்பம் ஆகிய இடங்களில், 50 சதவீதம் அளவுக்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில், 90 சதவீதம் அளவுக்கும், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதிக்குள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் வினியோகம் சீர்செய்யப்படும்.

மின் பிரச்னையை தீர்க்க ரூ.300 கோடி : மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயலால், கடலூர் மாவட்டத்தில், 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், 23 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர்கள், 5,752 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்கள், 8,947 ஹெக்டேர் பரப்பில் வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் மற்றும் பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நீர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம், 166 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

படகுகளுக்கு நிதி : கடலூர் மாவட்டத்தில், பால் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, ஆவின் நிறுவனம் தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கிறது. கட்டுமரங்கள், வல்லம், பைபர் படகுகள், விசைப்படகுகள் போன்ற, 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. தேசமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 75 ஆயிரம், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 5 லட்ச ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 3 லட்ச ரூபாய், வலைகள் மட்டுமே சேதமடைந்தவற்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.

சாலை சீர் செய்ய ரூ.150 கோடி : புயலால், 519 கால்நடைகள், 5,100 கோழிகள் இறந்துவிட்டன. மாடு ஒன்றுக்கு, 20 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு, 2,000, கோழி ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால், 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 31ம் தேதியே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அதை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் ரூ.700 கோடி : குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்துக்கு, 114 கோடி, குடிநீர் வினியோகத்துக்கு, 50 கோடி, மின் பணிகளை சீரமைக்க, 300 கோடி, பயிர் சேதங்களுக்கு, 166 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்கு, 20 கோடி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, 150 கோடி, உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல் போன்றவற்றுக்காக, 50 கோடி, ஆக மொத்தம், 850 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதில், புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட, 150 கோடி போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக