புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
64 Posts - 58%
heezulia
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
106 Posts - 60%
heezulia
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_m10மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..


   
   
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 12:34 am

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை..

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. 220px-7763

இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே.
மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை. அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமை.
தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.]

மனைவியை மகிழச் செய்வதில் மிக மிக முக்கிய அம்சம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு அவளை திருப்தியறச் செய்வது. அதுபோன்றே மனைவியும் கணவனை இல்லறத்தில் மகிழ்விப்பது அவளது தலையாயக் கடமை. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இன்பத்தை அளிப்பவர்களாகவும் தத்தமது கற்புக்கு அரணாகவும் திகழ வேண்டும்.

பெண் இயல்பிலேயே வெட்கமும், நாணமும் மிகந்தவளாக இருப்பதால் இந்த விஷயத்தில் அவளிடமிருந்து எந்த கோரிக்கையும் வருவதை ஆண்மகள் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வப்பொழுது அவளது தேவையறிந்து நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

‘ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்பவர் குறைந்த பட்சம் அவளுடன் தொடர்ந்து 7 இரவுகள் தங்குவது அவசியம்' என்று சொன்ன நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் 'விதவையைத் திருமணம் செய்கின்றவர் தொடர்ந்து மூன்று இரவுகள் தங்கினாலும் போதும்' என்று சொன்னார்கள்.
கன்னிப் பெண்ணின் நாணம், இளமை போன்ற அம்சங்களை கவனித்து இவ்வாறு கூறியிருப்பதன் ரகசியத்தை உணரும்போது ஒவ்வொரு பெண்ணின் உடற்கூறை அனுசரித்து அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுவதும், எப்படியானாலும் மனைவியின் உணர்ச்சிக்குத் தக்கபடி இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்ற கருத்து தெளிவாகிறதல்லவா?

அதற்கும்’ கூடவா நன்மை?

‘நீங்கள் உங்கள் துணைவியருடன் உடலுறவில் ஈடுபட்டால் அதுவும் உங்களுக்கு நற்செயலாகப் பதிவு செய்யப்படுகின்றது’ என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது தோழர்கள் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டார்கள்.

‘நாயகமே! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதன் தன் மனோ இச்சையின் காரணமாக நடந்து கொள்ளும் ‘அந்த’ காரியத்துக்கும் நன்மை கிடைக்குமா?’ எப்படி இது சாத்தியமாகும் என்று வினவினார்கள்.

இதற்கு விளக்கமளித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அன்பர்களே! ஒருவன் தன் மனைவியல்லாத இன்னொருத்தியிடம் இந்த இச்சையைத் தணித்துக் கொள்வது கொடிய பாவம்தானே?’ என்று கேட்க, ‘ஆம்!’ என்று தோழர்கள் சொல்ல, ‘தவறான பாதைக்குச் சென்றுவிடாமல் உரிய முறையில் தன் மனைவியின் மூலம் ‘அந்த’ தேவையைப் பூர்த்தி செய்கின்றபோது அதற்காக நன்மை எழுதப்படுவதில் மட்டும் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?’ என்று கூறியபோது தோழர்கள் அகமகிழ்ந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமா!

நீதி தேவை

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்கின்ற ஒருவர் தம் மனைவியரிடையே உடலுறவிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை கடமையாக்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் ஒரு மனைவியிடம் ஒரு நாள் என்றால் அடுத்த மனைவியிடம் அடுத்த நாள் தங்க வேண்டும். ஒரு மனைவியிடம் தொடர்ந்து 3 நாள் தங்கினால் அடுத்த மனைவியிடமும் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்று வலியுறத்தினார்கள்.

இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே என்பதை பின்வரும் செய்தி தெளிவு படுத்துகின்றது.

உலகின் தேவை இல்லாதவர்கள்

ஒரு நாள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு தம் சகோதரர் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திப்பதற்காக வந்தார்கள். அப்பொழுது அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களின் துணைவியார் வரவேற்று அமரச் செய்தபோது அவர்களைப் பார்த்த ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு

திடுக்கிட்டார்கள். காரணம் ஒரு இல்லத்தரசியின் முகத்தில் இருக்க வேண்டிய களை, மகிழ்ச்சி அம்மாதரசியிடம் காணப்படவில்லை. அழுக்கடைந்த ஆடைகளாலும், குழிவிழுந்த கண்களாலும் இவ்வுலகத்தில் ஏன்தான் இன்னும் இருக்கிறோம் என்று எண்ணுவது போன்ற நிலையில் காட்சியளித்தார்கள்.
உடனே அப்பெண்ணிடம் சகோதர வாஞ்சையுடன், ‘ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அந்த மாதரசி ‘உங்கள் சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எந்த விருப்பமும் தேவையுமில்லை. நான் இப்படி இருந்தால் என்ன?’ என்று பதில் கூறியதும் அதிர்ச்சியுடன் விஷயத்தை ஊகித்துக் கொண்ட ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு

அவர்கள் (அப்படியா? சரி! அவர் வரட்டும் நான் பேசிக் கொள்கிறேன்’ என்று அங்கேயே அமர்ந்து விட்டார்.

இப்பொழுது என்ன நோன்பு?

சற்று நேரம் கழித்து அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். தம் ஆருயிர்ச் சகோதரரைக் கண்டதும் ஆரத்தழுவி அளவளாவியபின் உணவு கொண்டு வைத்து ‘உண்ணுங்கள், நான் நோன்பு வைத்திருக்கிறேன்!’ என்று உபசரித்தார்கள்.

‘இது ரமளான் மாதமல்லவே! இப்பொழுது ஏன் நோன்பு வைத்துள்ளீர்கள்?’ எனக் கேட்க ‘நஃபிலான நோன்புதான்’ என்றார்கள். ‘அப்படியானால் நீங்கள் நோன்பை முறித்துவிட்டு என்னோடு சாப்பிட வெண்டும். இல்லையெனில் நான் சாப்பிட மாட்டேன்’ என்று ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்ல, அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி நோன்பை விட்டுவிட்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

இரவு முழுவதும் இறை வணக்கமா?

அன்று முழுவதும் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒன்றாக இருந்து அவர்களை கண்காணித்தார்கள். இரவு வந்தது. தம் சகோதரருக்கு படுக்கை விரித்துக் கொடுத்து விட்டு தான் வணங்கப் போவதாக அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னபோது அவரைத் தடுத்து, ‘அபூதர்தாவே! நன்றாகத் தூங்குங்கள்’ என்று கட்டாயப் படுத்தினார்கள் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு.

வேறு வழியின்றி சகோதரரும் படுத்தார். சற்று நேரம் சென்றது. மீண்டும் தொழச் சென்றார்கள். இப்பொழுதும் அவர்களை இவர்கள் விடவில்லை. அவர்கள் எழுந்திருப்பதும் இவர்கள் தடுப்பதுமாக இரவில் பெரும்பகுதி கழிந்து பின்னிரவு (தஹஜ்ஜுத்) நேரம் வந்ததும் ‘வாருங்கள் இப்பொழுது நாம் இருவருமே தொழுவோம். என்று கூறி தொழுகைக்கு தயாரானார்கள்.

தொழுதபின் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் ‘அபூதர்தாவே! நிச்சயமாக உனது இறைவனுக்காக நீர் வணங்க வேண்டிய கடமை உமக்கு உண்டு. உமது உடம்புக்காக நீர் பராமரிக்க வேண்டிய கடமையும் உண்டு. அதுபோல் உமது குடும்பத்துக்கு – மனைவிக்கு செய்ய வேண்டிய மகத்தான கடமையும் நிச்சயமாக இருக்கிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் உரிய கடமையையும் உரிமையையும் கொடுத்துத்தான் தீர வேண்டும்’ என அறிவுறுத்தினார்கள்.

அதன் பின் மறுநாள் அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் அழைத்துக் கொண்டு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சமூகம் வந்து நடந்த விபரங்கள் அனைத்தையும் சொன்னார்கள். அதுகேட்டு மகிழ்ந்த திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்! ஸல்மான் சொன்னதே உண்மை’ என்று கூறினார்கள்.

சிரமத்தை ஏன் சகித்துக் கொள்கிறாள்?

இல்லறத்தின் மூலம் ஒரு பெண் அடைகின்ற இன்பத்தின் பரிசாகத் தன் வயிற்றில் குழந்தையைச் சுமக்கிறாள். கருவுற்றிருக்கும் காலத்திலும், குழந்தையைப் பிரசவிக்கும் நேரத்திலும் அவள் அடைகின்ற சிரமங்கள் கொஞ்சமல்ல. எனினும் இந்தச் சிரமங்களை எல்லாம் சகித்துக்கொள்ள அவளைத் தூண்டுவது அவளுக்குக் கணவன் மூலமாகக் கிடைக்கின்ற இல்லற சுகம்கூட ஒரு காரணமாகும். எனவே தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பிரிந்து வாழலாமா?

திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியைப் பிரிந்து வருடக் கணக்கில் வெளிநாடுகளில் வாழ்வோரும், பல மாதங்களாக வெளியூருக்குச் சென்றுவிடுவோரும் இவ்விஷயத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதே உண்மை.

இஸ்லாமியக் கொள்கையை உலகில் மேலோங்கச் செய்திடும் அறப்போருக்குச் சென்றிருப்போர் கூட குறைந்த பட்சம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தம் இல்லம் திரும்பி வந்து மனைவியுடன் தங்கிச் செல்வதை அமீருல் முஃமினீன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அனைத்து முஸ்லீம் வீரர்களுக்கும் கட்டாயமாக்கியதன் காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை. அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமையன்றோ

நன்றி : நீடூர் இன்ஃபோ

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 10:46 am

நல்ல தகவல்,ஆனால் இதை எத்தனை பெயர் கடைபிடிக்கின்றனர். திருமணம் ஆன உடனே வெளிநாடு சென்று இரண்டு வருடத்திருக்கு ஒருமுறை வரும் நபர்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர்.



சதாசிவம்
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
குரு
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011

Postகுரு Mon Nov 14, 2011 10:58 am

ஆம் சதாசிவம் அவர்களே..முற்றிலும் உண்மை. ஆனால் அவர்களது நிலைமை அப்படி. ஏழ்மை அல்லது வசதியாக வாழ நினைக்கும் பேராவல். நிறைய இழக்க வைக்கின்றன.



இன்றைய சிந்தனை :

மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 1:25 pm

திருமணம் செய்து கொண்ட பிறகு மனைவியைப் பிரிந்து வருடக் கணக்கில் வெளிநாடுகளில் வாழ்வோரும், பல மாதங்களாக வெளியூருக்குச் சென்றுவிடுவோரும் இவ்விஷயத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதே உண்மை.

பணம் என்ற ஒன்று வரும் போது எல்லாம் மறந்து விடுகிறதே அதிர்ச்சி
நன்றி குரு மகிழ்ச்சி




மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை.. Power-Star-Srinivasan
mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Thu Jul 27, 2017 2:46 pm

உண்மைதான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக