புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:04 am

கின்ஸியின் ஆராய்ச்சி, மாஸ்டர்ஸ் செய்ததைப் போல பரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும் முடியாது. அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால் முழுக்க இன்டர்வியூக்கள்தான்!

அதற்கு முன் நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமான கேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒரு படிவத்தைக் கொடுத்து, அதில் ‘டிக்’ அடிக்கச் சொல்வார்கள். இப்படி பலரும் ‘டிக்’ அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்து ஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.

ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம் இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல் திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்ல மாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர் வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள். தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிற மாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான் அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானா பல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் ‘கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும் மகப்பேறு ஆராய்ச்சி நிலையம்’ என்ற பெயரில் இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போல பாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).

ஒரு நபரிடம் இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இந்த வேகத்தில் போனால், இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன் வாழ்நாள் போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்துத் தன்னைப் போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்.

கின்ஸி ஒருநாளில் பதினாறு, பதினேழு மணி நேரம் உழைக்கிற டைப். பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும் நபர்கள் குறைவாக இருந்ததால், அவர் அமெரிக்கா முழுக்க சுற்றி பலரை சந்தித்தார். குறிப்பாக சிறைக்கைதிகள். செக்ஸ் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பலரை அவர் சந்தித்து இன்டர்வியூ செய்தார். அதோடு ஆண் செக்ஸ் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது டீம் எடுத்த மொத்த இன்டர்வியூக்களில் இருபத்தைந்து சதவிகிதம் கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம் செக்ஸ் தொழிலாளிகளுடையது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:14 am

இது தவிர பல கல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இந்த உரைகளுக்காக கட்டணம் எதையும் அவர் வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக் கேட்கும் மாணவர் களையும் மற்றவர்களையும் வந்து தங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

இவ்வளவு அனுபவங்களையும் அவர் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட போதுதான் அமெரிக்கா பற்றி எரிந்தது. அது தடிமனான புத்தகம்... சாதாரண ஆசாமிகள் படித்தாலே கொட்டாவி வருகிற அளவுக்குக் கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள் அடைத்துக் கொண்டிருந்தன. இவ்வளவும் இருந்தும் அந்தப் புத்தகம் ஐந்து மாதங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் விற்பனை வேகம் அதிகரித்த அதே அளவுக்கு எதிர்ப்புகளும் அதிகரித்தன.
ஆனால், முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை. ஆண்களை அம்பலப்படுத்திய அவர், அடுத்துக் குறிவைத்தது அமெரிக்க பெண்களை!
முந்தைய விவகாரம் அணுகுண்டு என்றால் இது ஹைட்ரஜன் குண்டு...

கின்ஸி, ஆண்களைப் போலவே அமெரிக்கப் பெண்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்கிறார் என்ற தகவல் பரவியதும், நாடு முழுக்கப் பதற்றம் தொற்றிக் கொண்டது. தங்கள் தாயின், மனைவியின், மகள்களின் அந்தரங்க வாழ்க்கையை கின்ஸி கிளறுவதாகப் பலரும் உணர்ந்தனர். பெண்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள், மதவாதிகள் என பலரும் அவருக்கு எதிராகக் கொடிபிடித்தனர்.

கின்ஸி வேலைபார்க்கும் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள் கொதிக்க, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ் கவலையோடு கின்ஸியைக் கூப்பிட்டுப் பேசினார். ‘இனிமேல் எந்த ஆராய்ச்சி செய்தாலும் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டார். அந்தக்
கல்வி நிறுவனத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவியை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் பலர் முயற்சி செய்தார்கள்.

இண்டியானா கத்தோலிக்க பெண்கள் அமைப்பு, கின்ஸிக்கு எதிராகக் காட்டமாக அறிக்கை விட்டது. ‘ஆராய்ச்சி என்ற பெயரில் தப்புத்தப்பாக எதையோ செய்கிறார் கின்ஸி. இதனால் எங்கள் பெண்கள் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான் எங்கள் பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம்’ என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால், இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில் போராட்டம் பிசுபிசுத்துப் போனது.

ஆனால், அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ் ரூபத்தில் வந்தது. செக்ஸ் தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை பல நாடுகளிலிருந்து வரவழைத்துத் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார்

கின்ஸி. 1950&ம் ஆண்டு அவரது ஆராய்ச்சிக் கூடத்தை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரெய்டு செய்தனர். அவர் ஆபாசமான பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகச் சொல்லி, எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விட்டனர் (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ் மீது வழக்கு போட்டார். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அவை ஆராய்ச்சி நோக்கில் கொண்டு வரப்பட்டவை. ஆபாச எண்ணம் இல்லை. அதனால் எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுங்கள்’ என கோர்ட் உத்தரவிட்டது. அவை திரும்பி வரும்போது கின்ஸி உயிருடன் இல்லை!).

‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது நிற்கும்’ என கணக்குப் போட்டனர், கின்ஸிக்கு எதிரானவர்கள். இந்த ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்யும் ‘ராக்ஃபெல்லர் அறக்கட்டளை’க்கு எதிராகவும் அவர்கள் பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால், அதற்குள் கின்ஸி ஆராய்ச்சியை முடித்துவிட்டார்.

சுமார் ஆறாயிரம் பெண்களிடம் இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத் தயாரிக்கும் வேலையில் இறங்கியது. ஆனால், அதற்கு வேட்டுவைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்தது. ‘கின்ஸி தனது ஆராய்ச்சியை முடித்து விட்டார். அவரது கணிப்பின்படி பல பெண்கள் விதம்விதமான தப்பு செய்கிறார்கள். அமெரிக்க பெண்களின் மோசமான நடத்தை பற்றி ‘ஷாக்’ தகவல்கள் அடங்கிய அவர் புத்தகம் விரைவில் வரப் போகிறது’ என்கிறரீதியில் பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள் விதம்விதமாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன. இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும் பெண்கள் அமைப்புகள் கோபத்தில் கொதித்தன.

இதை இப்படியே விட்டால், தன் புத்தகமே வரவிடாமல் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப் பத்திரிகைகளின் நிருபர்களை ஒருநாள் தன் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கூப்பிட்டார். ‘ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்து நீங்கள் அதிகபட்சம் ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதிக் கொள்ளலாம். ஆனால், புத்தக ரிலீ்ஸுக்கு ஒருநாள் முன்னதாகத்தான் உங்கள் கட்டுரை வெளியாக வேண்டும்’ என நிபந்தனைகளை விதித்தார். உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப் அடித்து அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அதன்பிறகே பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி பற்றிய யூகங்களை எழுதுவதை நிறுத்தின.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:15 am

1953&ம் ஆண்டு செப்டம்பர் 14&ம் தேதி. ‘Sexual behaviour in Human Female’’என்ற அந்தப் புத்தகம் வெளிவந்தது. ‘பெண்களும் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் அனுபவங்களைத் தேடுகிறார்கள். திருமணமான அமெரிக்க பெண்களில் இருபத்தைந்து சதவிகிதம் பேர் தங்கள் கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள் வேறு யாரோ ஓர் ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்’ என்ற அதிரவைக்கும் உண்மையை சொன்னது, அந்தப் புத்தகம். அதோடு மட்டுமில்லை... ‘அமெரிக்க பெண்களில் 62 சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்போ, திருமணமான பின்னரோ சுயஇன்பம் அனுபவித்து இருக்கிறார்கள். கணிசமானவர்கள் இதைத் தொடர்ச்சியான பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களும் நிறைய பேர் உண்டு’ என்பதையும் அம்பலப்படுத்தினார் கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்த பெண்கள்தான் விதம்விதமான செக்ஸ் அனுபவங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார் கின்ஸி. சுயஇன்பம் அனுபவிக்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் குறித்தும் கின்ஸி சதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம் கோபத்தின் உச்சிக்கே போனது. அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல நாடுகளுக்கும் போக, அமெரிக்க மக்கள் தாங்கள் அவமானப்படுவதாக உணர்ந்தனர். புகழ்பெற்ற பிரிட்டன் பத்திரிகையான ‘தி பீப்புள்’& கின்ஸியின் புத்தகம் வெளியானதும் அவசரமாக ஒரு சர்வே எடுத்தது. பதினெட்டு முதல் ஐம்பது வயது வரையிலான பிரிட்டன் பெண்கள் ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப் பத்திரிகை, ‘அமெரிக்க பெண்களைப் போல பிரிட்டன் பெண்கள் மோசமானவர்கள் இல்லை. நம் பெண்கள் இன்னமும் ஒழுக்கத்தோடுதான் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்ற பாரம்பரியமான மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கணவனுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் கன்னித்தன்மையைக் காக்கிறார்கள்’ என்று எழுதி, எரிகிற அமெரிக்கக் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது.

கம்யூனிச செல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக் கொண்டிருந்த சமயம் அது! கம்யூனிச தத்துவம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும் அந்த சித்தாந்தம் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அமெரிக்காவை ஆட்டிப் படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பலரையும் கம்யூனிஸ்ட்கள் என சந்தேகித்து, கேள்வி கேட்காமல் சிறையில் அடைக்கும் பழக்கம் இருந்தது. ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான் வேலை. கின்ஸியின் ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது. ‘‘கின்ஸியை ஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான். அமெரிக்க சமூகத்தை அழிக்க திரைமறைவில் கம்யூனிஸ்ட்கள் செய்த சதிதான் இது’’ என்றார் அவர். ‘ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரையாவது கின்ஸி தற்செயலாக எப்போதாவது ரோட்டில் பார்த்து சும்மா ‘ஹலோ’ சொன்னார்’ என செய்தி கிடைத்திருந்தால்கூட போதும்... கின்ஸியை சிறையில் தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள். ஆனால், கின்ஸியை சிறையில் அடைக்கும் அளவுக்கு மெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கின்ஸி தப்பித்தார்.

இருந்தாலும் மதத் தலைவர்கள் அவரை சும்மா விடவில்லை. ‘ஏற்கெனவே ஒழுக்கக் கேடு மலிந்திருக்கும் நாட்டில், இந்தப் புத்தகங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என கொதித் தார்கள். கின்ஸி அவர்களை அலட்சியம் செய்தார். ‘‘என்னுடைய ஆராய்ச்சியை விமரிசனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள் சமுதாயம் அதை மதிப்பீடு செய்யட்டும். அவர்கள் என் ஆராய்ச்சியில் தவறு இருப்பதாக சொன் னால் நான் ஏற்றுக் கொள் கிறேன்’’ என்றார்.
மார்கரெட் மீட் என்ற பெண்மணி அந்த சமயத்தில் அமெரிக்காவே மதித்த மானுடவியல் அறிஞர். அவர்தான் அறிஞர் சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக் குரல் கொடுத் தவர். "‘கின்ஸியின் புத்தகங் களை தடை செய்ய வேண்டும். அதற்காக நான் போராடுவேன்"’ என அவர் குரல்கொடுக்க,
பெண்கள் அமைப்புகள், தங்களுக்கு வலுவான ஆதரவு கிடைத்த தெம்பில் இன்னும் ஆக்ரோஷம் காட்டின.

மார்கரெட்கூட கின்ஸியின் புத்தகங்களில் புள்ளிவிவரக் குறைகளையோ, அறிவியல் ரீதியான தவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும் என்றுதான் அவர் கவலைப்பட்டார். ‘‘நிறைய பெண்கள் தப்பு செய்யலாம். நான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்கள் பயந்துகொண்டுதான் தப்பு செய்கிறார்கள். ‘மற்ற பெண்கள் எல்லாம் கற்புநெறியோடு வாழும்போது நான் மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டேன்’ என்ற குற்ற உணர்ச்சி தப்பு செய்யும் பெண்களை அடிக்கடி முள்ளாகக் குத்துகிறது. இதனால் அவர்கள் காலப்போக்கில் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகம் அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும்.

கணவனை விட்டு அடுத்த ஆணுடன் முறைகேடான தொடர்பு வைத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ‘நான் மட்டுமா தப்பு செய்கிறேன்? அமெரிக்க பெண்களில் நான்கில் ஒருத்தி செய்யும் அதே விஷயம்தானே இது!’ என நினைக்க ஆரம்பித்து விட்டால், அவ்வளவுதான்... அமெரிக்காவில் குடும்ப அமைப்பே உடைந்து சிதறிவிடும். இதைத்தான் கின்ஸி விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினார் மார்கரெட்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:18 am

ஆனால் கின்ஸி தெளிவாக இருந்தார். ‘‘அமெரிக்கர்களை அசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பை சிதைக்கவோ நான் ஆசைப்படவில்லை. நானும் அன்பான மனைவி, மூன்று குழந்தைகள் என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும் அமெரிக்கன்தான். ஆனால், குடும்பம் வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில் அமைதியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அவலங்களையும் கண்டும் காணாமல் விட்டு, ‘எல்லோரும் ஒழுக்கமான பாதையில் போகிறார்கள்’ என்று குருட்டுத் தனமாக நம்புவது, அறிஞர்களின் வேலை இல்லை. மக்கள்தொகை கணக்கில்லாமல் பெருகுவது, புதிது புதிதாக பால்வினை நோய்கள் வருவது, இளம் வயதிலேயே பெண்கள் கர்ப்பமாவது, பிஞ்சுக் குழந்தைகள் மீது செக்ஸ் சித்ரவதை என ஏராளமான விஷயங்கள் தப்புத்தப்பாக நடக்கின்றன. எதிர்காலத்தில் இவை இன்னும் மோசமாகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் குற்றவாளி... இந்தத் தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல் விட்டால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி உலகமே வெறியர்களின் கூடாரமாகி விடும். மனிதர்களின் செக்ஸ் பழக்கங்கள் பற்றி ஆராய்ந்தால்தான் இதன் பின்னணி புரியும். அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆராய்ச்சியைத்தான் நான் செய்தேன்’’ என்றார் அவர்.

செக்ஸாலஜியின் தந்தை என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார். பக்தர்கள் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை போவதுபோல, உலகெங்கும் இருக்கும் செக்ஸாலஜி நிபுணர்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர் நிறுவிய கின்ஸி ஆராய்ச்சி நிலையத்துக்குதான்! அமெரிக்க சமூகம் பற்றி அவர் சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும் உண்மை என்பது ஐம்பது ஆண்டுகள் கழித்து இப்போது புரிகிறது.

ஆனால், அவர்மீது ‘செக்ஸ் வெறிபிடித்த மனநோயாளி’, ‘குழந்தைகளை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியவர்’ என ஏகப்பட்ட குற்றங்களை பலர் சுமத்த, இன்றைய தேதிவரை அதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:22 am

எல்லா எதிர்ப்புகளையும் சமாளிக்கிற ஒருவர், அவரது குடும்பம் தாக்கப்படும்போது நிலைகுலைந்து போவார். கின்ஸியை அப்படித்தான் அழிக்கப் பார்த்தார்கள்.
‘‘செக்ஸைப் பற்றி இவ்வளவு அருவருப்பான ஆராய்ச்சியை கின்ஸி செய் யக் காரணம் இருக்கிறது. அடிப்படையில் அவர் செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளைக் கொண்ட ஒரு மனநோயாளி. அவருக்கு எந்நேரமும் செக்ஸைப் பற்றிய நினைப்புதான். திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவர் ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தார். அதனால்தான் அமெரிக்கர்கள் எல்லாம் அதே பழக்கம் உள்ளவர்களாக அவருக்குத் தெரிந்தார்கள். அது மட்டுமில்லை... தன் மனைவியையே விநோதமான செக்ஸ் உறவுகளில் ஈடுபட வைத்து, ஆபாசப்படம் எடுக்க முயன்றார் கின்ஸி. இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான உறவு இல்லாமல் போனது. தன் உதவியாளர்கள் சிலரையும் கூப்பிட்டு, ‘உன் மனைவியோடு செக்ஸ் உறவில் ஈடுபடுவதை ஆராய்ச்சிக்காகப் படமெடுக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார் கின்ஸி. இதனால் பலர் அவரிடமிருந்து விலகிவிட்டார்கள்!’’

இப்படி ஒரு வதந்தி திட்டமிட்டுக் கிளப்பப் பட்டது. இது பத்திரிகைகளில்கூட செய்தியாக வெளியானது. கின்ஸியிடம் இதுபற்றி சிலர் கேட்டனர். ‘‘விலங்குகள் எப்படி உறவு வைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய படங்கள்தான் இப்போது உள்ளன. மனிதர்கள் உறவு கொள்வது பற்றிய டாகுமென்டரி படங்களை எடுப்பது சாத்தியமில்லை. உறவுக்காட்சிகள் பற்றிய சில புகைப்படங்கள்தான் என்னிடம் உள்ளன. அதுகூட வேறுசிலர் எடுத்துக் கொடுத்தது’’ என்று வெளிப்படையாகப் பதில் சொல்லி இந்த வதந்தியை சாகடித்தார் கின்ஸி.

ஆனால், அமெரிக்காவில் சமூக ஒழுக்கத்தைக் காக்கும் ஓர் அமைப்பை நடத்திவரும் ஜூடித் ரீஸ்மேன் என்ற பெண்மணி, கின்ஸி பற்றி எழுப்பி வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, கின்ஸி நிலையம். ஆர்.எஸ்.வி.பி. (Restoring Social Virtu e and Purity in America) என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார் ரீஸ்மேன். ‘‘நடுத்தர வர்க்கத்தின் மனோபாவத்தைக் களங்கப்படுத்த அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார் கின்ஸி. முறைகேடான செக்ஸ் உறவுகளை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அமெரிக்காவில் செக்ஸ் தொடர்பான கலாசார நம்பிக்கை, சட்டங்கள், குற்றங் கள் எல்லாமே மோசமானதற்கு காரணம் அவர்தான். திருமணத்துக்கு முன்பே இளம்பெண்கள் கர்ப்பமாவது, இளம் குழந்தைகள் செக்ஸ் வெறியர்களால் சிதைக்கப் படுவது என எல்லா செயல்களுக்கும் காரணமான நரகத்தின் கதவுகளை அமெரிக்காவில் திறந்துவிட்டவர் கின்ஸி’’ என கடுமையாகக் குற்றம் சாட்டினார் அவர். மற்றவர்கள் மாதிரி வெறுமனே அவர் பேச்சோடு நிற்கவில்லை. கின்ஸியின் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். கின்ஸி செய்த ஆராய்ச்சியைக் குற்றவியல் நோக்கோடு பார்த்தன அந்தப் புத்தகங்கள். ஆனால், அவை வெளிவந்தபோது கின்ஸி உயிரோடு இல்லை. அதனால் கின்ஸிக்குப் பிறகு அவரது நிலையத் தின் இயக்குநராகப் பணிபுரிந்த பால் கெப்பார்ட், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார். ஆண்கள் தொடர்பான தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சி முடிவுகளில், ஆண் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தார் கின்ஸி.

இதைத்தான் ரீஸ்மேன் வகையாகப் பிடித்துக் கொண்டார். ‘‘இந்தப் பட்டியலில் 317 சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின் றன. இதில் சில நிகழ்வுகளை நிமிடக் கணக்கில் விவரிக்கிறார் கின்ஸி. பக்கத்திலேயே கடிகாரத்தோடு உட்கார்ந்துகொண்டு கணக் கெடுத்தால் தவிர, இவ்வளவு துல்லியமாக இதை எழுத முடியாது. அந்த சிறுவர்களின் உணர்வுகளை விவரிப்பதும் பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் சாத்தியம். கின்ஸி இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார்’’ என்று தன் புத்தகத்தில் கடுமையாகத் தாக்கி எழுதினார் ரீஸ்மேன்.

அதே சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் குடும்ப ஆராய்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு, வீடியோ படம் ஒன்றை எடுத்து, கின்ஸி மீது தாக்குதல் தொடுத்தது. பிரிட்டனில் இருக்கும் யார்க்ஷயர் டெலிவிஷன்

நெட்வொர்க், ‘கின்ஸியின் குழந்தை செக்ஸ் வெறியர்கள்’ என்ற பெயரில் பரபரப்பான டாகுமென்டரி படம் ஒன்றை எடுத்து ஒளிபரப்பியது.

இந்த எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் தெளிவாகப் பதில் சொன்னது கின்ஸி நிலையம். ‘கின்ஸி பல சிறுவர்களை இன்டர்வியூ செய்தபோதுகூட அந்த சிறுவர்களின் பெற் றோர்கள் முன்னிலையில்தான் செய்தார். அது மட்டுமில்லை... பல ஆண்கள் தங்களது சிறுவயது அனுபவங்களை அவரிடம் சொன்னார்கள். அதுவும் இதில் தொகுக் கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தகவல்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் நேரடியாகப் பார்த்த சிறுவர்களைப் பற்றிச் சொன்னவை.

இதுதவிர, ஒன்பது குற்றவாளி கள் தாங்கள் சிறுவர்கள் மீது மேற்கொண்ட செக்ஸ் வன்முறை களைப் பற்றி சொன்னார்கள். இதில் ‘மிஸ்டர் கிரீன்’ என்று புனைப்பெயர் தரப்பட்ட ஒருவன், தன் டைரியை கின்ஸியிடம் கொடுத்தான். அவன் 1917ல் ஆரம்பித்து 48ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட எண்ணூறு சிறுவர் களிடம் செக்ஸ் உறவு கொண்டான். அந்த எல்லா உறவுகளையும் ஆரம் பத்தில் இருந்து முடிக்கும் வரை நேரத்தைக் குறிப்பிட்டுத் துல்லியமாக வர்ணித்து இருந்தான். கின்ஸி அவனது செயலை மன்னிக்க முடியாத குற்றம் என கண்டித்து இருக்கிறார். அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டுதான் அவன் சிறையில் இருந் தான். அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் பெயரை மட்டும் மறைத்தார் கின்ஸி. தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளில் அவர் சொல்லியிருந்த பெரும்பாலான விஷயங்கள் "மிஸ்டர் கிரீன்" சொன்னதுதான்’ என்று விலாவாரியாக விளக்கியது கின்ஸி நிலையம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:22 am

அடுத்ததாக இன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின் ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப் படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக் குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்’ என பதில் எழுதியதாக அடுத்தக் குற்றச்சாட்டு. ‘சிறுவர்கள் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில் கின்ஸியாகத்தான் இருக்க முடியும்’ என்றனர் எதிர்ப் பாளர்கள்.

கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின் பிரதியை வெளியிட்டது. ‘உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றது’ என வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில் எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

கடைசியாக இன்னொரு விஷயமும் சொல்லப்பட்டது. ‘கின்ஸி இன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம் செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள் செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார்’ என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

இதற்காக கின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை ‘சுத்தம் செய்யும்’ வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட். 1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது. சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின் தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸி ஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாக இருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பது ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

கின்ஸியின் வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு ‘கின்ஸி’ என்ற பெயரிலேயே ஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோ யாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், இன்றைக்கு... ‘அறியாமை’ என்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடிய போராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.

கின்ஸி சந்தித்த தாக்குதல்களே பரவாயில்லை என்கிற அளவுக்கு அவருக்கு முன்னதாக சித்ரவதைகளை அனுபவித்தார், இன்னொரு ஆராய்ச்சியாளரான மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். ஹிட்லரின் எதிரியாக ஒருவர் கருதப்பட்டால், அவருக்கு என்னென்ன சித்ரவதைகள் நேரும் என்பதற்கு ஆராய்ச்சியாளர் பட்ட வேதனைகள்தான் உலக உதாரணம்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:25 am

ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட பாப்புலராக ஒருவர் ஜெர்மனியில் இருக்க முடியுமா? அப்படி இருந்தவர்தான் மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். தற்போதைய போலந்து நாட்டின் கோல்பெர்க் நகரம் அப்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கு 1868&ல் பிறந்தவர் ஹர்ஷ்ஃபீல்ட்.

அவர் அடிப்படையில் ஒரு டாக்டர். முறுக்கு மீசையோடு தோற்றம் தந்தாலும், பெண்மைத்தன்மை மிகுந்த ஆணாக அவர் இருந்தார். ‘டிரான்ஸ்வெஸ்டிசம்’ எனப்படும் கோளாறு அவருக்கு இருந்தது. அதோடு அவர் ஹோமோ செக்ஸ் பிரியராக வேறு இருந்தார். (ஆண்களுக்கு பெண்களின் உடைகளை அணிய வேண்டும் என ஆசை வருவது... இதேபோல பெண்களுக்கு ஆண்கள் உடைகளின் மீது நாட்டம் வருவது... இந்த செக்ஸ் கோளாறுக்குதான் ‘டிரான்ஸ்வெஸ்டிசம்’ என்று பெயர். ‘Transvestism என்ற இந்த வார்த்தையை அறிமுகம் செய்தவரே ஹர்ஷ்ஃபீல்ட்தான். அதற்கு முன்புவரை இப்படி உடை மாற்றி அணிபவர்களை அலிகள் எனப்படும் அரவாணிகளாகவே பலரும் கருதி வந்தனர். ஆனால், ‘அரவாணிகளுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் சேர்ந்து இருக்கிறது. டிரான்ஸ்வெஸ்டிசக் கோளாறு வெறுமனே மனதளவில் இருக்கும் பிரச்னைதான். இதை யும் அதையும் சேர்க்கக் கூடாது’ என்று விளக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட். அதோடு ஹோமோசெக்ஸ் உணர்வுள்ளவர் களையும் இந்த வகையில் சேர்த்து பலர் குழப்பிக் கொண்டி ருந்தார்கள். அதுவும் தப்பு என்பது ஹர்ஷ்ஃபீல்டின் வாதம்! மூன்றுமே தனித்தனியான குறைபாடுகள்... ஒருவருக்கே இதில் இரண்டு குறைபாடுகள் சேர்ந்து வரலாம் என்பது அவர் கட்சி!).

‘எனக்கு ஏன் இப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றுகின்றன? மற்ற ஆண்கள் எல்லோரும் மிடுக்காக கோட் சூட் அணிய, எனக்கு ஏன் பெண்களின் ஆடைகளை அணிய வேண்டும் என ஆசை வருகிறது? பெண்களைப் பார்த்தால் எந்த உணர்வும் ஏற்படாமல், ஆண் களைப் பார்த்தால் பரவசம் ஏற்படுகிறது?’ என அவருக்குள் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்தான் அவரை செக்ஸ் ஆராய்ச்சி பக்கம் திருப்பிவிட்டது. அப்போது ஜெர்மனி, ரஷ்யப் பேரரசின் அங்கமாக இருந்தது. உலகின் மற்ற முன்னேறிய நாடுகளை விட ஜெர்மனியில்தான் அந்த சமயத்தில் செக்ஸ் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகள் உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள்கூட ஜெர்மனியை உன்னிப்பாகக் கவனித்தனர்.

இதில் முதல் பரபரப்பு சிக்மண்ட் ஃபிராய்டு. அடிப்படையில் நரம்பியல் நிபுணரான ஃபிராய்டு, உளவியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருபவராக சீக்கிரமே மாறினார். வியன்னா நகரில் இருந்தபடி அவர் தந்த சிகிச்சைகளும், அவர் சொன்ன தத்துவங்களும் பலத்த சர்ச்சைக்கு ஆளாகின. கனவுகளின் அர்த்தங்கள், ஆழ்மனதின் வேட்கைகள் என பல விஷயங்களைச் சொன்ன ஃபிராய்டு, செக்ஸ் பற்றியும் அதிர வைக்கும் கருத்துகளைச் சொன்னார்.

‘‘குழந்தைப் பருவத்திலிருந்தே செக்ஸ் உணர்வுகள் தலைதூக்கி விடுகின்றன. தாயின் மார்பில் பால்குடிக்கும் குழந்தைக்கு செக்ஸ் உணர்வு இருக்கிறது. வளரவளர பெற்றோர் மீது குழந்தை காட்டும் அன்பும் இந்த திசையில்தான் போகிறது. பெண் குழந்தை அப்பா மீதும், ஆண் குழந்தை அம்மா மீதும் பாசம் காட்டும். இப்படி எதிர்ப்பாலை நாடி பாசம் காட்ட அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். நான் குழந்தையிலிருந்தே என் அம்மா மீது பாசத்தோடும், அப்பா மீது வெறுப்பு காட்டியும்தான் வளர்ந்தேன். உலகம் முழுக்க இப்படித்தான் நடக்கிறது என்பது என் ஆய்வில் தெரியவந்தது’’ என்றார் ஃபிராய்டு.

‘என்ன இது? பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றி அவர் இப்படி சொல்கிறாரே’ என சமூக அமைப்புகள் பல கொந்தளித்தன. ஃபிராய்டை ஒரு தலைசிறந்த டாக்டராக ஏற்றுக் கொண்டவர்கள்கூட அவரது இந்தக் கருத்துகளைக் கேட்டு முகம் சுளித்தனர். ஆனால், அவர் பழங்கால வரலாறுகளில் இப்படி நடந்த சம்பவங்களை ஆதாரமாகச் சொல்லி, தன் கருத்தில் உறுதியாக இருந்தார். அதோடு, ‘‘சிறு வயதில் ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்துதான் ஒருவர் இயல்பான செக்ஸ் பழக்கம் கொண்டவராகவோ அல்லது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள நபராகவோ ஆகிறார். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எந்த ஆμம் ஹோமோசெக்ஸ் பழக்கத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது’’ என்று வேறு சொல்லி எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்தார் அவர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:26 am

ஃபிராய்டு கிளப்பிய பரபரப்புக்கு மத்தியில் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் என்ற பிரிட்டன் டாக்டர் ‘செக்ஸ் உளவியல்’ என்ற தலைப்பில் ஏழு பாகங் களைக் கொண்ட ஒரு புத்த கம் வெளியிட்டார். அந்த சமயத்தில் டாக்டர்கள் செக்ஸைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய ஒரே உருப்படியான புத்தகமாக இது இருந்தது. ‘‘வாழ்க்கையின் ஆணிவேரே செக்ஸ் தான். அதுபற்றி சரியான புரிதல் இல்லாத எவரும் முழுமை பெற்ற மனிதர்கள் ஆவதில்லை’’ என்றார் அவர்.

ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவித்தல் போன்ற பல விஷயங்கள் மோசமான செக்ஸ் பிரச்னைகளாகக் கருதப்பட்ட காலம் அது! அவற்றுக்கு உளவியல் நிபுணர்கள் சீரியஸான சிகிச்சை தந்து கொண்டிருந்தனர். சில நாடுகள் இந்தப் பழக்கங்களை சட்டவிரோதமாகக் கருதி தண்டனைகளும் தந்து வந்தன. அந்த சமயத்தில் எல்லிஸ், ‘‘இதெல்லாம் செக்ஸ் பிரச்னைகளே கிடையாது. அவர்களின் செக்ஸ் பழக்கங்கள் வழக் கத்துக்கு விரோதமானதாக இருக்கிறது... அவ்வளவுதான்! இதை பெரிய விஷயமாக நினைக்கக் கூடாது. இதெல்லாம் நோயும் கிடையாது. சட்டவிரோதமும் கிடையாது’’ என்று அதிரடியாக சொன்னார்.

‘‘குற்றவியல், செக்ஸ் அறிவு ஆகிய இரண்டையும் அறிவியலின் ஒரு அங்க மாக ஆக்கி, பல்கலைக்கழகங்களில் கற்றுத் தர வேண்டும். செக்ஸ் சிரிக்கக்கூடிய விஷ யமோ, ஆபாசமோ, அருவருப்பானதோ இல்லை. அது அறிவியல்’’ என்றார் அவர். ‘குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை போதிக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும்’ என்று சொன்ன முதல் ஆராய்ச்சியாளரும் அவர்தான்.

இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி வந்ததால் அவரை பிரிட்டன் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை. அவரது புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் ஜெர்மனியில் உள்ள நண்பர்களோடு தொடர்புகொண்டு தன் புத்தகங்களை அங்கு அனுப்பினார். ஜெர்மனியில் அவை அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன. இதனால் அவர் பிரிட்டனைவிட ஜெர்மனியில்தான் பாப்புலர். அவரது புத்தகங்கள் பிரிட்டனுக்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. அங்கு அவற்றை விற்ற கடைக்காரர்கள், வாங்கியவர்கள் என எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:32 am

செக்ஸ் மனநோயாளிகள் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன் உடம்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தால்தான் அவர்களுக்கு செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும். இந்த மனநோய்க்கு ‘நார்ஸிசிஸம்’ என பெயர் வைத்தவர் எல்லிஸ்தான். சிறுவயதிலிருந்து ஒருவர் வளரும் குடும்பச் சூழல்தான் இந்த மனநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது என்றார் அவர்.

நார்சிஸஸ் என்பவன் கிரேக்க காவியங்களில் வரும் ஒரு ஹீரோ. எக்கோ என்ற தேவதை அவனைக் காதலித்தாள். ஆனால், நார்சிஸஸ் அவளிடம் நாட்டம் காட்டவில்லை. இதனால் அவனை சபித்துவிட்டாள் எக்கோ. நீர் நிலைகளில் தன்னுடைய நிர்வாண பிம்பத்தை தானே ரசிக்கும் மனநோயாளியாக அவன் மாறிப்போனான். இதுதான் சாபம். பின்னாளில் நார்சிஸஸ் ஒரு அழகிய மலராக உருவெடுத்தான் (இன்றைக்கும்கூட இந்த நார்சிஸஸ் மலர் இருக்கிறது). அவன் பெயரிலிருந்தே தன் உடலைத் தானே ரசிக்கும் நோய்க்கு பெயரைச் சூட்டினார் எல்லிஸ்.

வில்ஹெம் ரீக், ஆல்பர்ட் மால் என பல நிபுணர்கள் அடுத்தடுத்து ஆராய்ச்சி புத்தகங்களை எழுதிக் குவித்தனர். கருத்தரங்குகள், விவாதக் கூட்டங்கள் என செக்ஸ் பற்றிய வெளிப்படையான பேச்சுகள் சகஜமான விஷயங்கள் ஆயின. அதேபோல அவர்களுக்கு எதிர்ப்புகளும் வளர்ந்தன.

இவர்கள் எல்லோரையும்விட ஹர்ஷ்ஃபீல்டை அதிகம் கவர்ந்தவர், ரிச்சர்டு வான் கிராஃப்ட் எபிங் என்பவர்தான். ஜெர்மனியின் புகழ்பெற்ற உளவியல் நிபுணரான இவர் சிக்மண்ட் ஃபிராய்டின் ஆசிரியர். இவர் எழுதிய பல மருத்துவ புத்தகங்களில் ‘செக்ஸ் மனநோய்’ (லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அதன் பெயர் ’Psychopathia sexualis’) என்ற புத்தகம் இன்றைக்கும் மதிக்கப்படும் ஒன்று.

ஹோமோசெக்ஸ் பழக்கம் கொண்ட பல ஆண்களை யும், லெஸ்பியன் உறவில் ஈடுபடும் பெண்களையும் இன்டர்வியூ செய்த அவர் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். ‘‘ஓரினச் சேர்க்கைப் பிரியர்கள் மனதளவில் பாதிக்கப்பட்ட செக்ஸ் நோயாளிகள் இல்லை... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளும் இல்லை. அது உடல்ரீதியான ஒரு குறைபாடு. அவர்கள் கருவில் உருவாகும் போதே தீர்மானிக்கப்படும் விஷயம் அது. மூளையில் செக்ஸ் உணர்வுகளைத் தீர்மானிக்கும் பகுதியில் ஏற்படும் குறைபாடுதான் அவர்களை இப்படி ஆக்கிவிடுகிறது.

அவர்களையும் மற்ற மனிதர்களைப் போல நார்மலான ஆசாமிகளாகவே கருத வேண்டும். உடல்ரீதியாக ஏற்பட்ட ஒரு குறைபாட்டுக்கு பாவம்... அவர்கள் என்ன செய்வார்கள்? அதை ஒரு வகை ஊனமாகத்தான் கருத வேண்டும். ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல இவர்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும்’’ என்றார் அவர்.

ஆனால், சட்டங்கள் வேறுவிதமாக இருந்தன.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் வக்ரமான மனசு படைத்த ஆசாமிகள் என காலம்காலமாக இருந்துவந்த நினைப்பை அடியோடு நிராகரித்த எபிங்கின் கருத்து, ஹர்ஷ்ஃபீல்டுக்குப் பிடித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக அப்போது ஆசிரியர் எபிங்கைவிட அவருடைய மாணவர் ஃபிராய்டுதான் செக்ஸ் விஷயங்களில் ஜாம்பவானாக இருந்தார். ‘ஓரினச் சேர்க்கைக்கு மனசுதான் காரணம்’ என ஃபிராய்டு சொன்னதுதான் பாப்புலராக இருந்தது. எபிங் சொன்னதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். ஹோமோசெக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரீதியான தீர்வு தேடும் முயற்சியில் இறங்கும் நாம், எபிங் போட்டுக்கொடுத்த பாதையில்தான் போக வேண்டும் என முடிவெடுத்தார் ஹர்ஷ்ஃபீல்ட். 1908ல் உலகிலேயே முதன்முதலாக செக்ஸ் அறிவியலுக்காக மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தவர் ஹர்ஷ்ஃபீல்ட். புகழ்பெற்ற பல நிபுணர்களைத் தேடி வெளிநாடுகளுக்குக் கூடச் சென்று அவர்களின் கட்டுரைகளை வாங்கி அதில் பிரசுரம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் அதை மாக்ஸ் மார்க்யூஸ் என்பவரிடம் கொடுத்துவிட்டு ஹோமோ செக்ஸுவல்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் அவர். அப்போதைய ஜெர்மனியின் சூழல் மிக இறுக்கமானதாக இருந்தது. 1871ல் வில்ஹெம் மன்னர் ஜெர்மன் கிரிமினல் சட்டத்தைப் புதுப்பித்தார். இதன்படி ஹோமோசெக்ஸ், இயற்கைக்கு விரோதமான கிரிமினல் செயலாகக் கருதப்பட்டது. அந்த சட்டத்தின் 175ம் பாரா இதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. குற்றத்தில் ஈடுபடும் நபரின் பின்னணிக்கு ஏற்ப சிறைத் தண்டனை ஒரு நாள் என்ற குறைந்த அளவிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 6:32 am

ஒரு அறைக்குள் தாழிடப்பட்ட கதவுக்குப் பின்னே இரண்டு ஆண்கள் மேற்கொள்ளும் உறவை போலீஸ் எப்படி மோப்பம் பிடிக்கும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தாலும்கூட, ஹோட்டல்கள், நடன அரங்குகளில் நிறைய பேர் கையும்களவுமாக சிக்கினார்கள். தங்களுக்குப் பிடிக்காத இளைஞர்கள் பற்றி அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பு கொடுத்தார்கள். பெர்லின் நகரில் மட்டும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஐந்நூறு பேர் இப்படி கைதானார்கள். அதைவிட பெரிய கொடூரம்... பலர் தற்கொலை செய்து கொண்டது. பிரபலங்கள் பலரது ஹோமோசெக்ஸ் பழக்கத்தை எப்படியோ தெரிந்துகொண்ட கிரிமினல்களும், போலீஸாரும் அவர்களை அடிக்கடி பிளாக்மெயில் செய்து பணம் பறித்தார்கள். இதனால் சஞ்சலப்பட்டு அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

‘நான் ஹோமோசெக்ஸ் பழக்கம் உள்ளவன்தான். நான் இரவில் படுக்கையில் பெண்களோடு படுக்காமல் ஆண் தோழர்களோடுதான் படுக்கிறேன்’ என வெளிப்படையாக ஒருவர்

அறிவித்துக் கொள்வது என்பது, ஏதோ பல்லவன் பஸ்ஸில் பர்ஸ் அடித்தவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தர்மஅடி வாங்குவது போன்ற விஷயமாக இருந்தது.
ஹோமோ பிரியரான ஹர்ஷ்ஃபீல்ட், இதைப் பார்த்துக் கொதித்தார். ஹோமோவுக்கு எதிரான கெடுபிடிகளை எதிர்த்து முதலில் புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தார். ரேமியன் என்ற புனைப்பெயரில் அவர் 1896ல் வெளியிட்ட சில துண்டுப் பிரசுரங்கள் உணர்ச்சிகரமானவை. பழங்கால கிரேக்க பெண் கவிஞரான சாஃபோ (பிளாட்டோவின் ஆசிரியராக இருந்தவர்), தத்துவமேதை சாக்ரடீஸ் போன்ற பிரபலங்கள் ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் காதல் பற்றி எழுதிய கவிதைகள், கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் துண்டுப் பிரசுரங்கள் ஆக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட்.

இவை, பரபரப்பான ஒரு அடித்தளத்தைப் போட்டுக் கொடுக்க, அடுத்த ஆண்டே ஹோமோசெக்ஸ் ஆண்களை தண்டனையிலிருந்து பாதுகாக்க, ‘விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம்’ (Scientific Humanitarian Society) என்ற அமைப்பை ஆரம்பித்தார் அவர்.

‘‘எப்படி பெரும்பாலான வலதுகை பழக்கமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் சிலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அப்படி பல இயல்பான செக்ஸ் விரும்பிகளுக்கு மத்தியில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். இது அவர்களின் தவறு இல்லை. அவர்கள் வக்ரமான உணர்வு கொண்ட செக்ஸ் வெறியர்களும் இல்லை. இது பிறவிக் கோளாறு. அவர்களது உணர்வுகளுக்கும், பழக்கங்களுக்கும் உடல்ரீதியான மாறுபாடுகள்தான் காரணம். இதை அறிவியல்ரீதியாக அμக வேண்டும். அதைவிட்டு அவர்களை கிரிமினல்கள் மாதிரி நடத்தக் கூடாது. அறிவியல்தான் அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்’’ என அந்த கமிட்டி சார்பாக முழக்கமிட்டார் அவர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக