புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_m10“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர்


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 3:53 pm

சென்னை: தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள் என்று சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ் கூறியதால், தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தூதராக பொறுப்பேற்றுள்ள பெண் மவுரீன் சாவ். இவர் நேற்று முன்தினம் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் இடையே பேசினார்.

தனது பேச்சில் அவர் தமிழர்களை மிகவும் இழிவுபடுத்தினார். ஆனால் இதைக் கேட்டு அப்போது எந்த எதிர்ப்பும் காட்டாமல், வட இந்திய மாணவர்களோடு சேர்ந்து கைதட்டியுள்ளனர் தமிழ் மாணவர்களும்.

அவர் பேச்சின் விவரம்:

“20 ஆண்டுகளுக்கு முன்பு நானும், உங்களைப் போல ஒரு மாணவராக இருந்தேன். அப்போது வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் இந்தியாவை, அதன் கலாச்சாரம் மற்றும் மதத்தால் கவரப்பட்டு தேர்ந்தெடுத்தேன். இந்தியாவின் கலாச்சாரத்தை நன்கு அறிய கிராமங்களில் பயணம் செய்தேன்.

அப்போது இந்த நாட்டு மக்களின் நட்பையும், பரிவையும் கண்டு வியந்தேன். ஒருமுறை டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு, நான் ரெயிலில் பயணம் செய்தேன். 24 மணி நேரத்தில் போய் சேர வேண்டிய பயணம் அது. ஆனால், 72 மணி நேரங்கள் ஆகியும் அந்த ரெயில் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை. இந்த பயணத்தின்போது என்னுடைய தோல் தமிழர்களை போல அழுக்காகவும், கருப்பாகவும் மாறிவிட்டது”, என்றார்.

அப்போது அங்கிருந்த தமிழ் மாணவர்களும், மேடையில் இருந்த மற்ற பெரியவர்களும் கூட இதற்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டவில்லை. மாறாக அந்த பெண்ணுக்கு மாலை மரியாதை செய்து பவ்யமாக வழியனுப்பி வைத்தனர்.

நேற்று காலையில் பத்திரிகையில் இந்த செய்தி வந்ததற்கு பிறகு தமிழர்களுக்கு மானம், மரியாதையெல்லாம் திடீரென நினைவுக்கு வந்துவிட்டது. அந்த கல்லூரி மாணவர்களும் இப்போது ‘பொங்க’ ஆரம்பித்துள்ளனர்.

சென்னையில் பணியாற்ற வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், தமிழர் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதா என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேளுங்கள் – முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மவுரீன் சாவின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவின் இன வெறி கொண்ட பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.

எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகம் விளக்கம்

இதைத் தொடர்ந்து மவுரீன் சாவின் பேச்சுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில், “எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் துணை தூதர் மவுரீன் சாவ் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தன்னுடைய வெளிநாட்டு படிப்பு தொடர்பான நல்ல நினைவுகளை விளக்கி பேசியிருக்கிறார். அந்த பேச்சின்போது, அவர் பொருத்தமற்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.

என்வழி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,“தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 4:06 pm

கருப்புனு சொல்லியிருந்தா கூட கவல பட மாட்டோம் ஏன்ன அது நம்ம கலரு அழுக்குனு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்களே... கோபம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 4:36 pm

இங்கே உழைப்பவர்கள் அதிகம்
அதனால் அழுக்கு படியத்தான் செய்யும்
எங்கள் சமூகம் உழைக்கும் சமூகம்
என்று கூறி உங்களை பெருமை படுத்தி கொண்டதாக நினைத்து விட்டுவிடுகிறோம்.........

உலகை உழுக்கி கொண்டிருபவர்கள் அழுக்கான தமிழர்களே....பதினான்கு வயதில் ஒரு பெரிய நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு வகிப்பதும் எங்கள் அழுக்கு தமிழச்சியே......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2011 5:00 pm

அப்ப கைதட்டுனவங்களுக்கு புரிஞ்சுருக்காதுன்னு நினைக்கிறேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:35 pm

பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே மகிழ்ச்சி அநியாயம் மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” – அமெரிக்க துணை தூதர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 4:46 am

ராஜா wrote:அப்ப கைதட்டுனவங்களுக்கு புரிஞ்சுருக்காதுன்னு நினைக்கிறேன்
அங்க மறுபடியும் படிப்ப தொடர முடியாம போயிடும். இருப்பினும் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது கட்டியிருக்கலாம். நாகரீகமாக சில வார்த்தைகளை கேட்டிருக்கலாம்
1. இன்று ஏத்தின பூட்டி சரக்கு அடுஸ்சிங்க?.
2. நேத்து அடுஸ்சது இன்னிக்கு ஏறங்களிய?
3. எங்களுக்கு சொரியசிஸ் போன்ற நோய்கள் உங்களை விட குறைவு.
4. ஏற்க்கனவே ஆப்கானில் 2 லட்சத்திர்க்கும் மேல் டிக்கட் கொடுத்து அனுப்சாசு, இன்னும் ஏத்தினை பேர்த்துக்கு கொடுக்கலனு இருக்கரிங்க.
ஏதாவது கேட்டத்தா மறுபடியும் ஏதாவது பேசுவதற்க்கு முன்னாடி யோசிச்சு பேசுவாங்க...
நான் என்ன நினைக்கிறேனா " தன்னை விளம்பர படுத்ததான் " இது போன்ற முயற்சி..

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 4:53 am

balakarthik wrote:பாஸ் இதுக்காக அமெரிக்கதூதரகம் மற்றும் வெள்ளை மாளிகை நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதே மகிழ்ச்சி அநியாயம் மகிழ்ச்சி
அவுங்க கேட்டது மன்னிப்பே இல்ல.
இந்த துரதிர்ஷ்டவசமான கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நிச்சயமாக அது தனது நோக்கம் இல்லை என்றாலும், அதற்காக அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது

மன்னிப்புன எப்படி இருக்கணும்னா, வடிவேல் காமடில வர மாதிரி " இந்த புள்ள இடுப்ப கிள்ளுனதுக்கு உங்கவிட்டு புல்லையா நினைச்சு என்னை மன்னிஸ்சுருங்க"
பாஸ் இது எப்படி இருக்கு.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Aug 15, 2011 7:42 am

நாம் அழுக்கானவர்கள் அல்ல, அழகானவர்கள். ஆம் அதுதான் உண்மை.
கலையில் அழகானவர்கள்
காலாச்சாரத்தில் அழகானவர்கள்
கவர்வதில் நாம் அழகானவர்கள்
காந்தம் போன்ற கண்களை உடையவர்கள்

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்
நம்மைப் பற்றி அறியாத, தெரியாத சில விஷமிகள்
சொன்னதை பெருந்தன்மையோடு விடுவோம்.
இப்படி பல விசயங்களில் பெரியவர்கள, சிறந்தவர்கள்
தமிழன் என்ற பெருமைக்குரிய நாம்.

வாழ்க தமிழினம்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Aug 15, 2011 10:51 am

தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".

குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 8:28 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
என் பிரிய தோழமைகளே, இதற்கு அமெரிக்க தூதரகம் வருந்தியதாலும், மன்னிப்பு கோரியதாலும் அவர்களை மன்னிப்போம். தமிழனுக்கு மன்னிக்கவும் தெரியும் அழகு உள்ளதென நிரூபிப்போம்.
"அவர் நன்னயம் செய்து விடல்".

குறிப்பு :
ஒரு வரலாற்று தகவல், அமெரிக்கா என்பது, லண்டன் சிறை கைதிகளின் வம்ச வழியினரே அமெரிக்கர்கள். மேலும் லண்டனில் மிக கொடூர தவறு செய்த மரணதண்டனை கைதிகளை, கடலோடிகள் தங்களின் நாடு கண்டு பிடிக்கும் ஆய்விற்கு பயன் படுத்திக்கொண்டனர். கைதிகள் கப்பலில் கொண்டு சென்று தீவுகளில் இறக்கி விடப்பட்டு வாழும் சூழலுக்கு தீவு சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய பயன் படுத்தினார்.
அவ்வாறு செய்கிற வேளையில் சில சமயம் அவர்கள் இறந்து போனால் நஷ்டமில்லை. அப்படி இல்லாமல் நாடு கண்டுபிக்கப்பட்டால் அவர்கள் அங்கேயே வாழ கடலோடிகள் அனுமதி தந்தனர். அவ்வாறு வந்தவர்களின் தலைமுறையினாரே அமெரிக்கர்கள். இதற்கு சரியான வரலாற்று சான்று உள்ளது.

செல்ல கணேஷ் சார், இது போன்றுதானே இலங்கையர் வரலாறு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக