புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
31 Posts - 36%
prajai
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
3 Posts - 3%
Jenila
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%
jairam
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
7 Posts - 5%
prajai
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
6 Posts - 4%
Jenila
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
4 Posts - 3%
Rutu
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
2 Posts - 1%
viyasan
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_m10செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி


   
   
pmutrhappan
pmutrhappan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 02/11/2010

Postpmutrhappan Mon May 16, 2011 4:37 pm

தமிழ்
மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின்
உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப்
படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக
இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப்
படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது.

செம்மொழித்
தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை
என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப் பண்பை
வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

பட்டினப்பாலை என்ற
பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை சார்ந்த வணிக முறைமையை
மிக்கச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பண்ட மாற்றுமுறையில்
வணிகம் நடைபெற்றுள்ளது. கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை
தரும் வணிக வழக்கம்தான் ஆரம்பகால வணிக வழக்கமாகும். பிற்காலத்தில்தான்
பணம் கொடுத்துப் பொருள் பெறும் முறை தொடங்கியுள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில்
அகலமான வணிகத் தெருக்கள் இருந்துள்ளன. அத்தெருக்களின் இருபுறங்களிலும்
கடைகள் காணப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கடையின் முன்பகுதியிலும் கொடி
தொங்கவிடப்பெற்றிருக்கிறது. அக்கொடி விற்கும் பொருளின் அடையாளத்தை
உணர்த்துவதாக இருந்துள்ளன. இக்கடைகளில் பொருள் வாங்குவோரும், பொருள்களைத்
தருவோரும் மிகுந்து காணப்பட்டனர். இவர்களிடத்தில் விளைபொருள்களைப்
பெறும்போதும், அதற்கேற்ப மாற்றுப் பொருளைத் தரும்போதும் ஒரு நன்முறை
பின்பற்றப் பெற்றுள்ளது.

நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
(பட்டினப்பாலை 206211)

என்ற
அடிகள் சங்க கால நடுவுநிலை மிக்க வணிக வாழ்க்கை முறையை விளக்கி
நிற்கின்றன. உழவர்கள் பயன்படுத்தும் நுகத்தடி எனப்படும் உழுகருவியல்
தைக்கப்படும் பகலாணி நடுநிலையாக நிற்பதைப் போல வணிகர்கள் நடுவுநிலை
உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் பொருள்களையும், பிறர்
பொருள்களையும் ஒப்ப நாடி வணிகம் செய்துள்ளனர். பொருள்களைக் கொள்கின்றபோது
அதிகமாகக் கொள்ளாமலும், பொருள்களைக் கொடுக்கின்றபோது குறைவுபடாமலும் தம்
தொழிலைச் செய்துவந்தனர் என்ற இந்தப் பகுதிகள் சங்க கால நடுநிலைமை மிக்க
வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

திருக்குறளும்
மற்ற நீதி நூல்களும் நடுவுநிலைமையை ஒப்பற்ற சான்றோர் குணமாக கருதுகின்றன.
`நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி' (திருக்குறள் 115) என்கிறது
திருக்குறள். வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணும் முறைமை எது எனில்
பிறவும் தமபோல் செய்தல் என்று வள்ளுவர் பட்டினப்பாலையின் வழிவந்து
வணிகமுறையின் நன்முறையை உரைக்கின்றார். (திருக்குறள் 120)
முடிமுனைதல்,
மஞ்சள்பூசுதல் போன்றன மனிதர்க்கு அழகல்ல. நல்லம் யாம் என்னும் நடுவு
நிலைமையால் கல்வி அழகே அழகு (நாலடியார் 131) என்று கல்வி கற்றோர்க்கு உரிய
அழகாக நடுவுநிலைமை என்பதை நாலடியார் காட்டுகின்றது.

நடுவுநிலை தவறிய பாண்டிய மன்னனின் இறுதியைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே(சிலப்பதிகாரம்20,7276)

என்ற
பகுதியில் ஒருவன் சொன்ன சொற்களை உண்மை என்று எண்ணி மாற்றார் பக்கத்தைக்
காணாது விடடுவிட்ட மன்னனின் அறம் தவறிய நிலை நடுவுநிலையில் பிறழ்ந்த
நிலையாகிவிடுகின்றது. நடுவுநிலை தவறாது வணிகம் செய்த வணிகமுறையினரை
நடுவுநிலைத் தவறி அரசன் தண்டித்த கதை சிலப்பதிகாரமாகின்றது.


இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் நடுநிலை பற்றிய பல செய்திகள் உள்ளன. இவை
தமிழ் மொழியின் நடுவுநிலைத் தன்மைக்குச் சான்றாக நிற்கின்றன. இவை புறம்
சார்ந்த நடுவுநிலை என்பதாகக் கொள்ளலாம்.


தொல்காப்பியத்திலும் நடுவுநிலைமைப் பண்பு காணப்படுகிறது. தொல்காப்பியர்
காலத்தில் பாலைத்திணை என்ற பெயர் ஏற்படவில்லை. நடுவணது திணை என்றே அதனைத்
தொல்காப்பியர் அழைக்கின்றார். பாலை ஏன் நடுவணது திணை என்று அழைக்கப்பட்டது
என்பது ஆராயத்தக்கதாகும்.

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
(தொல்காப்பியம் பொருளதிகாரம். 11.)
என்ற தொல்காப்பிய நூற்பாவில் மிகத் தெளிவாக பாலைத் திணையை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் காட்டுகின்றார்.

"காலையும்
மாலையும் நன்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி நீரும் நிழலும்
இன்றி நிலம் பயன் துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பம் இன்றித்
துன்பம் பெருகுவதொரு காலமாதலின் இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு
நன்பலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று '' என்று நச்சினார்க்கினியர்
இதற்குப் பொருள் கொள்ளுவார். அதாவது காலை , மாலை என்ற நாள் பொழுதில்
நடுவில் வருவது நன்பகல். அந்த நன்பகலை சிறுபொழுதாகக் கொண்ட பாலை நிலத்தை
நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் அழைத்திருக்கிறார் என்று
நச்சினார்க்கினியார் முடிகின்றார்.

இருப்பினும் இன்பம்
துன்பம் என்ற இரண்டில் தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பத்தைத் தருவது
குறிஞ்சி என்ற திணை. மற்ற நான்கு திணைகளிலும் இருத்தல், ஊடல், இரங்கல்
என்று துயரத்தின் சாயலே மிக்கு இருக்கின்றது. ஆனால் பாலையில் தலைவன்
மட்டும் பிரியலாம். அல்லது தலைவனும் தலைவியும் தம் சொந்தங்களை விட்டுப்
பிரியலாம். இந்தச் சூழலில் பிரிதல் என்பதை இன்பத்துள் வைப்பதா,
துன்பத்துள் சேர்ப்பதா என்று கருதிப் பார்த்தால் நடுவுநிலைக்குள்
தொல்காப்பியர் வைத்தது சரி எனப்படும்.

குறிஞ்சி, முல்லை
என்ற இரண்டிலும் தலைவன் வந்துவிட்டான், வருவான் என்ற உறுதி உள்ளது.
மருதம், நெய்தல் இவற்றில் தலைவன் திரும்பி வருவானா வாரானா என்ற சந்தேகம்
நிலைப்படுகிறது. இவை இரண்டு இரண்டாக பிரிவு பட்டு நிற்கும் நிலையில் பாலை
என்பது நடுவணதாக நிற்க வாய்ப்புள்ளது. தலைவன் ஏதோ ஒரு காரணம் கருதி
பிரிகின்றான். அந்தக் காரணம் நிறைவேறும் வரை தலைவன் தலைவி இருவரும்
காத்திருந்து அதன்பின் அனுபவிக்கப் போகிற இன்பத்தை எண்ணி வாழும் பாலை
வாழ்க்கை நடுவணதாகத்தான் இருக்க இயலும். எனவே தமிழர் அக வாழ்விலும் நடுவு
நிலை ஆட்சி செய்துள்ளது என்பது தெளிவாகின்றது.


வடமொழியானது மெய்ப்பாடுகள் அதாவது இரசங்கள் ஒன்பது என்று கொள்ளும்.
நடுவுநிலை அதாவது சாந்தம் என்பதையும் அது ஒரு சுவையாகக் கொள்கின்றது.
ஆனால் தொல்காப்பியர் அதனை விடுத்து எண் சுவைகளை மட்டுமே மெய்ப்பாடாகக்
கொள்ளுகின்றார். இருப்பினும் நடுவுநிலை என்ற மெய்ப்பாட்டை விட்டுவிடாது
பிற நிலைக்கலன்கள் என்ற வரிசையில் தருகின்றார். (தொல்காப்பியம்
மெய்ப்பாட்டியல் 11) அகமும் புறமும் சார்ந்த மெய்ப்பாடாக நடுவுநிலை என்ற
மெய்ப்பாடு விளங்கி நிற்கிறது.

எனவே தமிழ்மொழியைப்
பொறுத்தவரையில் அதன் நடுவுநிலை என்பது அகம், புறம், இரண்டிற்கும்
பொதுவானது என்ற முன்று நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளது என்பது
உணரத்தக்கதாகும்.

இவ்வாறு நடுவுநிலைப் பண்பு என்பது
தமிழர் வாழ்வியலின் சிறப்புப் பொருளாகித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து
வருகிறது. இப்பெருமை தமிழ்மொழியைச் செம்மொழி வரிசையில் தகுதி பெற
வைத்துள்ளது.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 16, 2011 4:43 pm

செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  224747944 செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி  677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக