புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
17 Posts - 4%
prajai
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_m10சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 25, 2011 7:45 am

First topic message reminder :

முன்குறிப்பு : ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா ? என்ற கேள்விக்கு ஆன விடை, பாராட்டுதல்களைப் போலவே எதிர்ப்புகளும் சமகாலத்தில் பதிய வழிசெய்வது, கருத்துரிமையை மதித்தல் என்கிற புரிந்துணர்வு இருந்தால் இந்தக் கேள்வி பொருளற்றது.

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறீப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயல்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான்.

ஆன்மிக அதிசயம்: என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்த்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இராசயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடம் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள்.

நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள்.

ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை.

தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாளு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாலும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன்.

பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.

பின்குறிப்பு : எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்


govikannan.blogspot.com சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 9:18 pm

அன்பு நன்றிகள் ஆதிரா..

அன்பு நன்றிகள் மஞ்சு..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 25, 2011 9:20 pm

நான் சாயி பக்தன் தினமும் ஓம் சாயி ராம் சொல்லுவேன் எங்கள் சாயி எங்களோடுதான் இருப்பார் அவர் முகத்தை பார்க்கும்போது ஒரு வித அமைதி தோன்றும் ஈகரயில் அவரை குறித்து வெளிவந்த கட்டுரைகள் மிக மோசமாகவே மனதை பாதிக்கிறது ஆனாலும் இப்பொழுது அமைதியாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 9:28 pm

கலை நானும் தங்களைப் போல, மனோஜைப் போலத்தான். சாமியை நம்புங்கள் ஆசாமியை நம்பாதீர்கள் என்று கூறுபவள்தான். ஆனால் இது அப்படி இல்லையே. அந்த மருத்துவ மனை ஒன்று போதுமே அவர் தொண்டை பறைசாற்ற. நானறிந்து இருதய அறுவைக்கு முன்பதிவு செய்து காத்திருந்த அன்பர்கள் எத்தனை பேர் நெகிழ்வாகக் கூறக் கேட்டிருக்கிறேன் தெரியுமா? இப்போதும் அவர் செய்த சமூக சேவையைத்தான் நான் நினைக்கிறேன். இந்தியா மட்டுமன்றி அகில உலகமே அல்லவா அவரை நினைந்து அழுகிறது. அவர் தவறே செய்து விட்டுப் போகட்டுமே.



சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 9:28 pm

maniajith007 wrote:நான் சாயி பக்தன் தினமும் ஓம் சாயி ராம் சொல்லுவேன் எங்கள் சாயி எங்களோடுதான் இருப்பார் அவர் முகத்தை பார்க்கும்போது ஒரு வித அமைதி தோன்றும் ஈகரயில் அவரை குறித்து வெளிவந்த கட்டுரைகள் மிக மோசமாகவே மனதை பாதிக்கிறது ஆனாலும் இப்பொழுது அமைதியாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை

தம்பி.. ராமகிருஷ்ண பரமஹம்சரை சிலர் தூற்றிய போது அவர் அமைதியாக புன்னகைத்து ஒதுங்கிப் போனார். மகான்களின் மகத்துவம் இங்குதான் வெளிப்படுகிறது. வருந்தாதீர்கள். உரசப்படும் போது தங்கம் ஒளிர்கிறது. சுடப்படும் போது சங்கு வெளிர்கிறது. உரசப்படும் போதும் உஷ்ணப்படுத்தப்படும்போதும் இவை அழுவதில்லை. மகான்களும் அவ்வாறே.

நாவிருக்கிறது என்பதற்காக யாரும் சொல்லும் இந்த தூற்றல்கள் மகான்களைப் பாதிக்காது. அவர் வழி பக்தரான நீங்களும் பாதிக்காத வகையில் தான் இருக்கவேண்டும்.

அதிகம் சொல்லி இருந்தால் பொறுத்தருள்க.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 25, 2011 9:31 pm

கலைவேந்தன் wrote:
maniajith007 wrote:நான் சாயி பக்தன் தினமும் ஓம் சாயி ராம் சொல்லுவேன் எங்கள் சாயி எங்களோடுதான் இருப்பார் அவர் முகத்தை பார்க்கும்போது ஒரு வித அமைதி தோன்றும் ஈகரயில் அவரை குறித்து வெளிவந்த கட்டுரைகள் மிக மோசமாகவே மனதை பாதிக்கிறது ஆனாலும் இப்பொழுது அமைதியாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை

தம்பி.. ராமகிருஷ்ண பரமஹம்சரை சிலர் தூற்றிய போது அவர் அமைதியாக புன்னகைத்து ஒதுங்கிப் போனார். மகான்களின் மகத்துவம் இங்குதான் வெளிப்படுகிறது. வருந்தாதீர்கள். உரசப்படும் போது தங்கம் ஒளிர்கிறது. சுடப்படும் போது சங்கு வெளிர்கிறது. உரசப்படும் போதும் உஷ்ணப்படுத்தப்படும்போதும் இவை அழுவதில்லை. மகான்களும் அவ்வாறே.

நாவிருக்கிறது என்பதற்காக யாரும் சொல்லும் இந்த தூற்றல்கள் மகான்களைப் பாதிக்காது. அவர் வழி பக்தரான நீங்களும் பாதிக்காத வகையில் தான் இருக்கவேண்டும்.

அதிகம் சொல்லி இருந்தால் பொறுத்தருள்க.

இல்லை சார் என் மனதிர்க்கு பிடித்த மகான்களை காண மூடியாமால் போயி விட்டது சாயி அப்புறம் யோகிராம் சுரத் குமார் போன்ற என் மனதுக்கு பிடித்த மகான்களை காண முடியாமல் போயி விட்டது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 9:34 pm

maniajith007 wrote:நான் சாயி பக்தன் தினமும் ஓம் சாயி ராம் சொல்லுவேன் எங்கள் சாயி எங்களோடுதான் இருப்பார் அவர் முகத்தை பார்க்கும்போது ஒரு வித அமைதி தோன்றும் ஈகரயில் அவரை குறித்து வெளிவந்த கட்டுரைகள் மிக மோசமாகவே மனதை பாதிக்கிறது ஆனாலும் இப்பொழுது அமைதியாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை
வருந்தாதீர்கள் மணி. மகான்களின் மறைவுக்கு வருந்தக்கூடாது. கண்ணீர் சிந்தக்கூடாது. அவர் மறையவில்லை. பயன்பெற்றவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நித்தியமாக வாழ்கிறார்.

இனி வருபவர்கள் அவர் விட்டுச் சென்ற பணியைச் செம்மையாகச் செய்தால் நலம்.



சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 9:40 pm

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து.

ஆன்மிக வள்ளல் என்று உலகமே புகழும் ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 70 ஆண்டுகளாக செய்த சித்தாடல்கள் ஏராளம். அவர் கையை ஒரு சுழற்று சுழற்றினால் கைக்கடிகாரம், மோதிரம், பூ இனிப்பு என்று வந்தன. அவற்றை பெற்றவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்தன.

சாய்பாபா முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு சென்றாலே மனம் அமைதியாகி, பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக லட்சக்கணக்கானோர் கூறினார்கள். இதன் காரணமாகத்தான் சாய்பாபாவிடம் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக திரண்டது.

அதை வைத்து 1972-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையை சாய்பாபா தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபா இருந்தார். செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக மும்பை தொழில் அதிபர் இந்துலால் ஷா, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி, டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு வருமான வரி தாக்கல் ஆவணத்தின்படி புட்டபர்த்தியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புப்படி ரூ.40 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சுமார் 180 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வருவாய், சொத்துக்களை கணக்கிட்டால் அது ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சொத்து தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபாபா தனது சமூக சேவையை தன் ஊரில் இருந்தே தொடங்கினார். புட்டபர்த்தியை எல்லா வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றினார். தனக்கு வந்த நன்கொடை பணத்தையெல்லாம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு வாரி, வாரி வழங்கினார்.

ஐசக் டைகுரட் என்ற அமெரிக்க நாட்டுக்காரர் 1991-ம் ஆண்டு சாய்பாபா அறக்கட்டளைக்கு 300 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த பணத்தை கொண்டு புட்டபர்த்தியில் 10 மாதத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையை உருவாக்கினார். 360 படுக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக எல்லாவித சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல பெங்களூரில் ரூ.500 கோடி மதிப்பில் மற்றொரு நவீன மருத்துவ மனையை கட்டினார். புட்டபர்த்தியில் மருத்துவமனை தவிர பல்கலைக்கழகம், உலக ஆன்மீக மியூசியம், அறிவியல் கோளரங்கம், ரெயில் நிலையம், விளையாட்டு ஸ்டேடியம், இசை கல்லூரி, விமான நிலையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம் போன்றவை சாய்பாபா ஆசீர்வாதத்தால் கட்டப்பட்டன.

இவை தவிர நாடெங்கும் 1200-க்கும் மேற்பட்ட சத்யசாய் வழிபாட்டு மையங்கள் உள்ளன. சுமார் 180 நாடுகளில் கல்வி, கலாச்சார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 .5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் 5 லட்சம் கோடியை தாண்டும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

ஆதரவற்ற சிறுவன் அடுத்த சாய்பாபா?:

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா தன்னை சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று 1940-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அறிவித்தார். முதலில் இதை யாரும் நம்பவில்லை.

1940-ல் இருந்து 1950-க்குள் சாய்பாபா நிகழ்த்தி காட்டிய அதிசய அற்புதங்களால் மக்கள் அவரை சீரடி சாய்பாபாவின் மறுஅவதாரம் என்று நம்பத் தொடங்கினார்கள். சீரடி சாய்பாபா அருள் பெற்றவர்களும் சாய்பாபாவின் மறு அவதாரம் இவர்தான் என்று கூறினார்கள்.

சீரடி சாய்பாபா தன் இறுதி நாட்களில் மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து சென்னை மாகாணத்தில் மறுபிறப்பு எடுப்பேன் என்று அறிவித்திருந்தார். 1918-ம் ஆண்டு சீரடி சாய்பாபா முக்தி அடைந்தார். அவர் கூறியபடி சரியாக 8 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் (தற்போது ஆந்திரா) உள்ள ஆனந்தபூர் மாவட்டத்தில் கோலப்பள்ளி என்ற ஊரில் சாய்பாபா பிறந்தார்.

சிறு வயதிலேயே தன் ஆத்மா கடந்த பிறவியில் சீரடி சாய்பாபா உடலில் இருந்ததாக கூறினார். அதோடு சீரடி சாய்பாபா செய்த அற்புதங்களை மிகச்சரியாக கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார். சீரடி சாய்பாபாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் சாய்பாபாவை நேரில் பார்த்து பரிசோதித்து இவர் சீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று உறுதிப்படுத்தினார்கள்.

பலதடவை தன் அவதார நோக்கத்தை சாய்பாபா விளக்கமாக கூறியுள்ளார். 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி குரு பூர்ணிமா தினத்தன்று பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய சாய்பாபா, தன் அவதாரம் பற்றிய மிக முக்கியமான ரகசியங்களை வெளியிட்டார்.

சாய்பாபா என்பது 3 அவதாரங்களை கொண்டது. சிவசக்தி கோட்பாட்டில் இது 3 அம்சங்களை கொண்டது. அதன்படி சிவனை பிரதிபலிக்கும் வகையில் சீரடி சாய்பாபா திகழ்ந்தார். சிவ-சக்தி வடிவமாக தான் (சாய்பாபா) திகழ்வதாக கூறிய சாய்பாபா, அடுத்து பார்வதி சக்தியை பிரதிபலிக்கும் வகையில் சாய்பாபாவின் 3-வது அவதாரம் இருக்கும் என்றார்.

3-வது அவதாரத்தின் பெயர் பிரேமாசாய் என்று பிரபலமாகும் என்றும் சாய்பாபா கூறினார். பிரேமாசாய் தற்போது கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறப்பார் என்றும் சாய்பாபா கூறி இருந்தார். பிரேமாசாய் தற்போது பிறந்து விட்டதாகவும், உரிய வயதில் சாய்பாபா அவதாரம் வெளிப்படும் என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த அற்புதம் நிகழ்ந்து விடும் என்று சாய்பாபா பக்தர்கள் நம்பிக்கையோடு உள்ளனர். இதற்கிடையே சாய்பாபா வின் 3-வது அவதாரம் குறித்து ஹலகப்பா என்ற பக்தர் வேறொரு விதமான தகவலை வெளியிட்டுள்ளார்.

சக்தியின் வடிவமான 3-வது சாய்பாபா (பிரேமாசாய்) மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் காவிரி நதிக்கரையில் இருந்து வருவார் என்கிறார். ஆதரவற்ற சிறுவனாக வரும் அவரை மீனவர் ஒருவர் எடுத்து வளர்ப்பார் என்றும், அவரது பெயர் நாளடைவில் பிரேமாசாய் என்று மாறும் என்றும் ஹலகப்பா கூறினார்.

சீரடி சாய்பாபா பிறந்த ஊர் பர்த்தி என்று புகழப்பட்டது. சாய்பாபா அவதரித்த கோலப்பள்ளி கிராமம் பிறகு புட்டபர்த்தி என்று பிரபலம் அடைந்தது. சாய்பாபாவின் 3-வது அவதாரமான பிரேமாசாய் வளரும் இடம் எதிர்காலத்தில் குனபர்த்தி என்ற பெயரில் உலகம் முழுக்க பேசப்படும் என்று சொல்கிறார்கள்.

சாய்பாபா மறு அவதாரம் பற்றிய இந்த நம்பிக்கை பக்தர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. சாய்பாபா மீண்டும் அவதாரம் எடுப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி : மாலை மலர்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 9:42 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:
எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீகள் கலை. கண்களில் கண்ணீரே வருகிறது. கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்
நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன் கலை
சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 678642 . நான் சாய் பக்தை (டிவோட்டி) இல்லை என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர் வாழ்வை நிறைவாக உணர்கிறேன்.

அமைதி கொள்ளுங்க பானு.... ப்ளீஸ் கவலைப்படாதீங்க... அழாதீங்க....

இல்லை மஞ்சு. எனக்கு பிரமிப்பு. அரசியல் வாதிகளின் கொள்ளை நம்மைச் சுரண்டுகிறது. இவர்களிடம் மக்களேதானெ விரும்பி கொடுக்கிறார்கள். இத்தனை சொத்து, இத்தனை சமுதாயத் தொண்டு. இதே போல மேல்மருவத்தூர் பற்றியும் எனக்கு பிரமிப்பு உண்டு. அதே வழியில் பல நூறு முறை சென்று வந்தும் இன்னும் அக்கோவிலுக்கு நான் சென்றதில்லை. ஆனால் அவரின் கல்வித்தொண்டு எனக்குப் பிரமிப்பையே ஏற்படுத்தியுள்ளது.




சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Empty
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 25, 2011 9:47 pm

மற்றவரின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கருத்து எழுதலாமே!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 25, 2011 9:49 pm

அறிமுக நாயகன் wrote:மற்றவரின் மனநிலையை பாதிக்காத வண்ணம் கருத்து எழுதலாமே!
நாங்கள் யார் மனதையும் பாதிக்காத வகையில் தானே கருத்திடுகிறோம். எங்கேயாவது தவறி விட்டோமோ.. தெரியவில்லை நண்பரே. சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 440806



சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Tசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Hசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Iசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Rசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Aசாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....  - Page 5 Empty
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக