புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
3 Posts - 2%
jairam
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
1 Post - 1%
சிவா
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
17 Posts - 4%
prajai
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
8 Posts - 2%
jairam
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_m10இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 5:55 am



- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Ilaiyaraja1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு. என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் நுழைந்து மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S. Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக்கண்டேன். அட்டையில் அவரது ஓவியம், உள்ளே J.S. Bach ன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப்பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. கனதியான அந்நூலை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பதும் தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை, எனினும் அதைவாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். ” பெற்றுக்கொண்டேன் நன்றி ” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் எளியதும் நியாயமானதுமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாகி இன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் விட்டன. பதில் இன்றுவரை இல்லை.

சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக கவிஞர் இரவிபாரதி வந்திருந்தார். அவர் என்னுடனேயே சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘ மறுபடியும் ’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ” ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா ” என்கிற துள்ளுப்பாடலை எழுதியவர். (இன்னும் எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனுமாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) இரவிபாரதி மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப்பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bach இன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு “ என்றுவிட்டுத் தன் கதையைச்சொனார் இரவிபாரதி:

“ ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று குதித்துக்கொண்டு என் ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு அங்கு சென்றேன். போனால் அது வேறு விஷயம். என்னவென்றால் அவர்கள் வீட்டில் திடிருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (உண்மையான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார்.

பொலீஸுக்குப்போனால் விஷயம் கெட்டுவிடுமென்று நினைத்தார்களோ, அல்லது வேறேதும் காரணமோ தெரியவில்லை. ’ நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்து நைச்சியமாகப்பேசிப் பணத்தை எப்படியாவது மீட்டுத் தந்துவிடுங்கள் ’ என்றனர் அவரும் மனைவியுமாக.

இவ்வளவு தொகையைத் திருடிச்சென்றவனிடம் பேசிமீட்பதாவது…………. எனக்குச் சற்றேனும் நம்பிகையில்லை, சரி ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதிக்காமல் உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் துணைக்குக்கூட்டிக்கொண்டு திருச்சிக்குப்புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்ததும் எமது வண்டியைதூரத்தில் ஓரங்கட்டி நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப்போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக்கண்டவுடன் ஆள்சிறிது கலவரமாவதை உணரக்கூடியதாக இருந்தது. அவன் சாப்பிட்டுமுடிக்கும்வரையில் காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப்போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத்தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக்கொடுத்தோம். ’ கண்ணா இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, அவர் உன்னை என்னவேணுமின்னாலும் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன் பார்த்தியா, உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழுவருஷங்கள் உள்ள தள்ளிக் கழி திங்கவைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும்போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தை ஒழுங்காக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்………….சார். அவங்கமேலும் தப்புத்தான்……… கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்றான். எமக்கும் நம்பிக்கை வந்தது. இருங்க சார் என்றவன் வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக்கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க வழிச்செலவுக்கு ’ என்றான். பின் ”இம்மாந்தூரம் வந்திருக்கீங்க இன்னிக்குச் சாப்பிட்டுத்தான் நீங்க போவணும்” என்றும் உபசரித்தான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே இந்தப்பெரியவருக்கு ’நன்றி’ என்றொரு வார்த்தை சொல்லவோ எம்மை உபசரிக்கவோ தெரியலை. கடேசி எமது வண்டிச்செலவையோ பெற்றோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா மனுஷனுக்கு? இன்றுவரை இன்னொரு படத்துக்கு என்னை ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று முடித்தார்.

ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்துகொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் இளையராஜவிடம் கேட்டாராம் ” ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? “ இளையராஜா அக் கேள்வியையே காதில் விழாததுபோல் இருக்கவும் அதேகேள்வியைத் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “ கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா? “ என்று கேட்கவும் நான் ருசியான முழுச்சாப்பாடு போடுகிற சமையல்காரன் கண்ணா…….எங்கிட்ட பொப்கார்ண் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’ பொப் கார்ண் ’என்கிற வார்த்தையை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் பிரயோகித்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக்கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக்கொள்வதில் தயக்கம்.

இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக முத்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக்கொண்டாலும் அவரது சனாதன வழிபாட்டு முறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன நடவடிக்கைகள் எல்லாம் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் அவர் இன்னும் தேறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப்போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர்பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்கமுடியாது.

இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்றும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.

நாட்டுப்புற இசையை அரங்கறியச்செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமுமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக ” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்ததால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.

மானுஷ விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருக்கட்டும் சகித்துக்கொள்வோம். ஆனால் அற்புத இசைஞானமும், வண்ண வண்ணக்கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது எமது கடமையும்.


இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  678642


submit_url ="http://sathish777.blogspot.com/2010/03/blog-post_09.html"




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat Mar 19, 2011 6:38 am

என்ன? என்ன? என்ன?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 19, 2011 9:26 am

திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?



இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Uஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Dஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Aஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Yஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Aஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Sஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Uஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Dஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  Hஇசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  A
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sat Mar 19, 2011 9:58 am

உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 19, 2011 10:10 am

சில நேரங்களில் சில மனிதர்கள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 10:19 am

இந்த இடத்தில் மாமேதை அப்துல் கலாம் அவர்களை அன்புடன் நினைவுக்கு கொண்டு வருகிறேன்..... யார் ஒரு கடிதம் எழுதினாலும் அதற்கு தன் கையாலயே பதில் எழுதக்கூடியவர் அந்த மாமேதை......

நானும் இளையராஜாவுக்கு எதிரி இல்லை.... அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் தேன்.....

எத்தனை உயர்வுள்ள இடத்தில் இருந்தாலும் கொஞ்சம் தன்னடக்கமும் சேர்ந்து இருந்துவிட்டால் கிரீடத்தில் வைத்த வைரம் போல் ஜொலிக்கும்....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 11:18 am

எல்லா மனிதர்களின் அந்தரங்கங்களையும் பார்த்தால் அத்தனையும் சொத்தைதான்... இதில் இளையராஜா என்ன விலக்காம்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Mar 19, 2011 11:48 am

sivasangker wrote:
உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அப்பா ரஹ்மான் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?ஆனால் அவர் அப்படி இல்லையே ?எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 19, 2011 11:54 am

kannan3536 wrote:
sivasangker wrote:
உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும். அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அப்பா ரஹ்மான் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?ஆனால் அவர் அப்படி இல்லையே ?எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்

யாரு அவரு ? ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:59 am

எனக்கும் இளையராஜாவின் இந்த குணம் அறிந்தப்ப அதிர்ச்சியாக தான் இருந்தது....

மேன்மக்கள்னு நினைத்து போற்றினால் அப்புறம் தானே தெரிகிறது எல்லா விஷயமும்?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?  47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக