புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
64 Posts - 58%
heezulia
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
106 Posts - 60%
heezulia
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா மிகப்பெரிய .................


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 31, 2011 7:04 pm

பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை: கேள்விக் குறியாகிறதா இந்திய நீதித்துறை...?

- நந்தன்

ஆளும் அதிகாரவர்க்கத்தின் ஆடுகளமாகி விட்டதா....? அல்லது நடுநிலை பார்வைக் கோளாறில் பரிதவிக்கிறதா...? இந்திய நீதித்துறை என எண்ண வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நீதிமன்றம் ஒரு மனித நேய மருத்துவருக்கு ஆயுள்தண்டனை அளித்து வழங்கிய தீர்ப்பு. பினாயக் சென் என்ற அந்த குழந்த்தைகள் நல மருத்த்துவர் செய்த ஒரே காரியம் அபலைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததுதுதான். இன்னமும் அப்பாவிகளாகவே வாழும் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களின் நலனுக்காக மருத்துவர் பினாயக் சென் மனித உரிமைப் போராளியாக மாறியதுதான் அவரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாய்க் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்ததும் இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகள் பெற்றதும் அவரது சிறப்புக்கள். உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன்மன் விருது பெற்ற முதல் இந்தியர் என்பதைவிட, தெற்காசியாவிலேயே இந்த விருதை வென்ற முதல் வெற்றியாளர் என்பது பினாயக் சென்னின் கூடுதல் சிறப்பு. சத்தீஸ்கர் மாநில மக்களின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து நிலையைக் கண்காணித்து நல்லதொரு ஆரோக்கிய அறிவுரையை வழங்கியது மட்டுமல்லாமல், பழங்குடி மற்றும் வறுமையில் வாழும் நபர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து மனித உரிமைப் போராளியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் பினாய்க் சென்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்கள், அந்த மாநில அரசின் முழு ஆதரவுடன் அந்நிய நிறுவனங்களால் நிர்மூலமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நடவடிக்கையானது பழங்குடி மக்களின் வாழ்க்கையை வேட்டைக்காடு ஆக்கிவிடும் எனக்கூறி அதற்கு எதிராக களம் இறங்கினார்கள் மாவோயிஸ்டுகள். இதனை எதிர்கொள்ளத் திராணியற்ற அந்த மாநில பாஜக அரசு பழங்குடி மக்களிடையே ஒரு அணியை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, மாவோயிஸ்ட்களுடன் மோத விட்டது. "சல்வா ஜுடும்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த கும்பல் பல்வேறு கொடுமைகளைச் செய்வதாக மனித உரிமையாளர்கள் அம்பலப்படுத்தினார்கள். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் அபரிமிதமாக இருக்கும் இயற்கை வளங்களை அம்மநில அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூறுபோட்டு விற்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிவருகிறார்கள். சதிஸ்கார் மாநில அரசும், வெளிநாட்டு நிறுவனங்களும் கூட்டடாகச் சேர்ந்து மேற்கொள்ளும் சுரண்டலுக்கு எதிராக காட்டுக்குள் இருந்து போராடுபவர்களில் முக்கியமான ஒரு தலைவர்தான் நாராயண் சான்யால் என்பவர்;. இந்த நாராயண் சான்யால் மீது நல்ல அபிப்ராயம் கொண்டவராக இருந்த டாக்டர் பினாயக் சென் சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளைத் வழங்கி வந்ததால், அவருடன் மிகவும் நெருக்கமானார். அதன் வெளிப்பாடு நாராயண் சான்யால், அம்மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, உடல் நலம் குன்றி இருந்த அவருக்கு சிறைக்குள் சென்று சிகிச்சை அளித்தார் மருத்துவர் பினாயக் சென்.

மருத்துவம் பார்க்க சிறைக்குள் வந்த பினாயக் சென், வெளியே என்ன நடக்கிறது என்ற தகவலை எடுத்து வந்து நாராயண் சான்யாலுக்கு சொன்னார் - மாவோயிஸ்ட் இயக்க நடவடிக்கைகளை விவரித்தார் - அப்போது சில கடிதங்களை பினாயக் சென்னிடம் நாராயண் கொடுத்தார் - அதை அவர் வாங்கிச் சென்று பிஜு குஹாவா என்பவரிட்ம் கொடுத்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு 2007-ம் ஆண்டு மே 14 ஆம் தேதி, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சத்தீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார் பினாயக் சென். இந்த பிஜு குஹாவா என்பவர் நாராயண் சான்யாலுக்குப் பொருளாதார ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவம் வெளியில் இருந்து உதவியவர் எனத் தெரிவிக்கப்படுபவர்

கைது செய்யப்பட்ட பிநாயக் சென் மீது சதிஸக்கார் மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுப்ட்டவர் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பினாயக்கை விடுதலை செய்யுமாறு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட அவர்கள் சத்தீஸ்கர் அரசுக்கு இது தொடாபாக விளக்கம் அளிக்கமாறு அனுப்பிய நோட்டீசுக்கு நக்சல்களுடன் தொடர்புடையவர் இவர் என்று அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்து. இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட சென் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் 2009-இல் விடுதலை செய்யப்பட்டார். அவா மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வீட்டில் பல முறை சோதனைகள் செய்தும் வலுவான ஆவணங்களோ, சாட்சியங்களோ அரசுக்குச் சிக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்த பொதுவுடைமைக் கோட்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் சில கடிதங்களை எடுத்துச் சென்று அவற்றை மட்டுமே நீதிமன்ற ஆதாரமாக வைத்திருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லி வந்தார்கள்.

இந்நிலையில் பிநாயக் சென் மீதான வழக்கின் விசாரணை ராய்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2010 டிசம்பர் 24 அன்று நடந்து முடிந்தது. டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோகம்(124-யு), கூட்டுச் சதி (120-டீ), சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (8 (1)) ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண சன்யால், பிஜு குஹாவா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்து..

இவ்வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பினாயக் சென்னிற்கு எதிராக சாட்சியம் அளிக்காத நிலையிலும்இசத்தீஸ்கர் காவல்துறையின் புனைவு நிறைந்த குற்ற அறிக்கையை ஏற்றும், சட்டத்தைச் சாராமலும் ராய்பூர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. இந்திய நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு இந்திய நீதி வழங்கும் முறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. மற்றவர்கள் போல் நகரத்தில் தொழில் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமல்,பழங்குடியின மக்களின் நலனுக்காக கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து வரும் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதோடு கண்டனத்திற்கும் உரியது. இலட்சக்கணக்கான மக்கள் செத்துப்போன போபால் விச வாயுக்கசிவு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு இரண்டு வருட சிறை. ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்குச் செலவிட்டவருக்கு ஆயுள் தண்டனையா...? என்று கொந்தளித்து இருக்கிறார் பிhபல எழுத்தாழரும் சமூக ஆர்வலரமான அருந்ததி ராய்.

மகாத்மா காந்தி போன்ற தலைவர்களே தேசத்துரோகிகள் எனப் பார்க்கபப்ட்டு தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பினாயக் சென்னுக்கு தண்டனை வழங்கியுள்ளது அவருக்கு பெருமைக் குறைவு இல்லை என்று எண்ண வைத்தாலும், சட்டத்தை மதித்து நடக்கும் ஒருவரை தேசதுரோகி என நீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையதல்ல. அவரது மனைவி லீனா கூறியது போல் இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள ஒரு சவாலாகும்.வெள்ளையர்களை எதிர்த்து சுதந்தரத்திற்காக போராடியவர்கள் மீது அடக்கு முறையை ஏவ 1898-இல் கொண்டு வரப்பட்டதே இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-யு என்பதும் நேரு பிரதமராக இருந்த போது இச்சட்டம் ஜனநாயக இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல மிகவும் ஆட்சேபகரமானது, என இந்திய பாராளுமன்றத்தில் எதிர்த்துக் கூறியதும் கவனிக்கத்தக்கது. இந்த 124-யு சட்ப்பிரிவை முக்கியமாக்கி பிநாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தேசத்துரோகத் தீர்ப்பை சர்வதேச மன்னிப்பு சபை முதல் உள்ளூர் மனித உரிமை அமைப்புக்கள் வரை அனைவரும் கண்டித்துள்ளனர். புகழ் பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி, வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர், முன்னாள் நீதிபதி

ராஜேந்தர் சச்சார் உள்ளிட்டவர்களும் இத் தண்டனையை காட்டமாக எதிர்த்துள்ளனர். ஒரு நாட்டில் மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில்,நீதி வேண்டும் மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதிமன்றங்களும் அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பது என்பது மனித உரிமையை ஒட்டு மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிடும் ஆபத்துள்ளது. ஒரு அரசை எதிர்த்து போராடினாலோ அல்லது குரல் கொடுத்தாலோ அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள், அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள், தலைவர்களை கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்து சிறையில் அடைத்து முடக்கிவிட நினைப்பதை அரசுகளின் கையாலாகாத் தனமாகவே கொள்ள வேண்டும்.

மக்களுக்காக, அவர்களின் ஊட்டச்சத்துக் குறைவை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவந்த, ஜல்வா ஜுடும் போன்ற கொடூரங்களுக்கு எதிராக போராடிய பினாயக் சென் மீது தேசத்துரோக வழக்கு பாயக் காரணம் இது போன்ற மனிதநேயச் செயல்பாடுகள் தான் என்றால்,எது தேச பக்தி...? எது தேச துரோகம.;..?. அந்நிய நாட்டு நிறுவனங்கள் சொந்த நாட்டு கனிம வளங்களை கொள்ளையடிப்பதை அனுமதிப்பது தேச துரோகமா...? அதை எதிர்த்துப் போராடுவது தேச துரோகமா...? அப்படி போராடும் மக்களை அரசாங்கங்களே கூலிப்படைகளை அமைத்து ஆயுதங்கள் வழங்கி கொன்று குவிப்பது தேச துரோகமா...? அதை அம்பலப்படுத்திப் போராடுவது தேச துரோகமா...? எது தேசபக்தி...? எது தேச துரோகம்...? என்பது சட்த்தின் கண்களுக்கு சிலவேளை தெரியாமல் போகலாம் ஆனால் அமைதியை விரும்பும் சமாதானத்தை லிரும்பும் உலக சமுதாயம் அநீதிக்கு எதிராகவே செயல்படும்.

பினாயக்சென்னின் ஆயுள்தண்டனையை எதிர்த்து, இந்தியாவின் பிரபல சட்டமேதையும் பாஜக ஆட்சியில் மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்தவருமான ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வாதாடப் போவதாக அவராகவே அறிவித்துள்ளதானது பினாயக் சென் மீதான நீதிமன்றத் தீர்ப்பில் அடங்கியள்ள (அ)நீதியை வெளிப்படுத்துவதுடன் நீதியான நீதியை பாரம்பரியம்மிக்க இந்திய நீதித்துறை வெளிப்படுத்தும் என்பதே உலகம் முழுதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக