புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_m10கே.பாக்யராஜ் கேள்வி பதில் - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கே.பாக்யராஜ் கேள்வி பதில்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:47 pm

First topic message reminder :

எதுவும் நம் கையில் இல்லை, எல்லாம் நம் கையில் எது சரி?

ரெண்டுமே சரிதான். எப்படின்னா...

அமெரிக்காவின் வர்ஜீனியாவில் வாழ்ந்த ராய் சி.கல்வன்ங்கறவரை, 1942ம் வருஷம் முதன் முதலில் இடி தாக்கியது. இதனால் அவர் தன் கால் கட்டை விரலை இழந்தார். ரெண்டாவது தடவையா 1969ம் வருஷம் இடி தாக்கினப்போ, இவரோட புருவமுடியெல்லாம் கருகிடுச்சு. இதே வருஷம் மூணாவது முறையா இடி தலையை தாக்கினப்ப, தலைமுடிகள் பற்றி எரிந்து போனதாம். இப்படி இதே வருஷத்துல திரும்ப திரும்ப ரெண்டு தடவை இடி தாக்கி, சிறு சிறு காயங்களோட தப்பிச்சிட்டாரு. பிறகு 6வது முறையா 1970ம் வருஷம் ஜூன் மாதம் தாக்கிய இடியால இவருக்கு கணுக்காலில் பலத்தக் காயம் ஏற்பட்டுச்சு. அதுலயும் தப்பிச்சுட்டாரு. ஏழாவது தடவையா 1977ம் வருஷம் ஜூன் மாதம் 25ம் தேதி இடி தாக்கினப்போ, மார்பிலும் வயிற்றிலும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரு.இந்த இடி தாக்கி இவருக்கு என்ன நேர்ந்ததோ தெரியல... 1982ம் வருஷம் இவர் தற்கொலை செஞ்சுகிட்டாராம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:57 pm

வித்தியாசமான வியாக்யானம் என்பது?

அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ஆபிரஹாம் லிங்கன், ஒரு தடவை கார்ல போய்கிட்டிருந்தப்போ, ஒரு பன்றி சேத்துல மாட்டிக்கிட்டு அவதிப்பட்டுச்சு. இதைப் பார்த்த ஆபிரஹாம் லிங்கன், காரை நிறுத்தி அதுலயிருந்து இறங்கி, அந்த பன்றியை சேற்றிலிருந்து காப்பாற்றினாரு.

இதைப் பார்த்த ஜனங்கள் ஒரு உயிரோட துன்பத்தை நீக்கினீங்கன்னு சொல்லி ரொம்பவே பாராட்டினாங்க.

அதுக்கு ஜனாதிபதி அபிரஹாம் லிங்கன் என் துன்பத்தை நீக்கவே நான் பன்றிக்கு உதவினேன். பன்றி சேற்றில் மாட்டக் கொண்டு துன்பப்பட்டிருப்பதைக் கண்டு என் மனம் துன்பப்பட்டது. ஆகவே என்னோட துன்பத்தை போக்கிக் கொள்ளவே நான் அதற்கு உதவினேன் னாராம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:02 am

கொஞ்ச நேரம் கொஞ்சம் பாரமாக இருக்க ஒரு கதை?




ஒரு நிஜக்கதையே இருக்கு. அதாவது...

தன்னோட எதிர்காலமும் தன் குழந்தைகளின் எதிர்காலமும் இருள் நிறைந்ததாத் தோணுறப்போ, நிறைய தாய்மார்கள் தங்களோட குழந்தைகளைக் கொன்னுட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்றாங்க.

இப்படிப்பட்டத் தாய்களைப் பாவம்னு சொல்வதா? பாவின்னு சொல்வதான்னு குழப்பமா இருக்கும்.

இப்படிப்பட்ட தாய்மார்களை நாம அனுதாப நோக்கோட பார்த்தாலும், சட்டம் தண்டிக்காம விடாது. அதுல, ஒரு வித்தியாசமான கேஸ்.

அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க்குல, மூன்று வயது சிறுமியான லெனெஸாவை மார்ச் 3ம் தேதியன்று அவளோட தந்தை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினப்போ, அவ எழுந்திருக்கவேயில்லை.

தன் மகள் எந்தவிதச் சலனமுமில்லாம கிடப்பதைப் பார்த்து அவர் உடனே டாக்டருக்கும் போலீசுக்கும் போன் செய்தார். எல்லோருக்கும் வந்த பிறகுதான், அவருக்குத் தன் மகள் கொல்லப்பட்டிருக்கிறாள்னு விபரம் தெரிஞ்சது. அதுவும், முந்தைய தினம் கொல்லப்பட்டிருந்தா.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:02 am

போலீஸ் விசாரணையில இன்னும் அதிர்ச்சியான செய்தி, அதாவது...

அவளைக் கொன்றது அவள் தாய்தான். மகள் கொல்லப்பட்ட சமயம், அந்தச் சிறுமியோட இரட்டைச் சகோதரன் (இரட்டைக் குழந்தைகளில் ஒருவன் பையன்) அங்கேயேதான் இருந்திருக்கிறான். ஆனா... தாய் அவனைத் தொடக்கூட இல்லை.

அவ ஏன் இப்படித் தன் மகளை மட்டும் கொன்றாள்? அவளுக்கு மகன் மீதுதான் பாசமா? மகளைப் பிடிக்கலையா?

இல்லை! காரணம் வேறே.

அவள் மகள், செரிப்ரல் பால்ஸி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். மகன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தான். இந்த நோய், ஒரு மூளை சம்பந்தமான முடக்குவாதம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க பிறப்பு முதல் இறப்பு வரை தங்கள் கை, கால்களையும் அவயங்களையும் விருப்பம்போல அசைக்க முடியாம, பிறரை நம்பி, பிறர் உதவியோடதான் வாழ்ந்தாகணும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:03 am

தன் மகள் அந்த சித்திரவதையை அனுபவித்து, வாழ்நாள் முழுக்க பிறரை நம்பித்தான் வாழவேண்டியிருக்கணும்ங்கற காரணத்தாலேயும், அவளுடைய வேதனையைத் தாங்க முடியாமலும்தான், தாய் அவளைக் கொன்று அந்தக் கொடுமையிலிருந்து அவளுக்கு விடுதலை அளிச்சிருக்கா.

இந்தச் சம்பவத்தைக் கேட்கும் போது, முதல்ல அந்த தாய் மேல நமக்குக் கோபமும் வெறுப்பும்தான் வரும். ஆனா... கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தா, இது பாசத்தால் தூண்டப்பட்ட வன்முறைச் சம்பவம்னு உணர முடியும்.

சட்டப்படி அவளுக்கு என்ன தண்டனை உண்டோ, அது அவளுக்குக் கிடைக்கத்தான் போகுது. ஆனா... அந்தத் தாய் நம் வெறுப்புக்கு ஆளாகாமே, அனுதாபத்துக்கு பாத்திரமாவது மறுக்க முடியாத உண்மை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:05 am

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது குறித்து?

எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாட்டாலும் ஏறக்குறைய பாதி தூக்த்துல நிச்சயிக்கப்படுதுன்னு ஒரு உண்மைச் சம்பவம் சொல்லுது.

அதாவது...

ஈபில் குஸ்தாஃப் என்பவரால் கட்டப்பட்டதுதான் ஈபில் டவர்'னு எல்லாருக்கும் தெரியும். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் நூறாவது ஆண்டைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரத்தோட உயரம் 300 மீட்டர். ஆன்டனாவையும் சேர்த்தால் 320 மீட்டர். 3 மாடிகள். புரட்சி நடந்த ஆண்டைக் குறிக்க மொத்தம் 1789 படிகள். 12,000 இரும்புக் கர்டர்களையும், 20 லட்சம் குறுக்குக் கம்பிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட விஷயம் எல்லோருக்கும் தெரிய நியாயமில்லை. இப்போது, 30,000 மின் விளக்குகளைக் கொண்டு ஜோடித்து, அதை ஜொலிக்க வைத்திருக்கிறார்கள். இதில் ஏறி உச்சிக்குப் போய், தற்கொலை செய்து கொள்வதைத்தடுக்க கம்பி வலைகளையும் அமைத்தாகி விட்டது.

நீங்க கேட்டதுக்கு வர்றேன்.

தற்கொலை செய்து கொள்வதற்கு மட்டுமில்லாம, காதலை உண்டாக்குவதற்கும் இந்த ஈபில் டவர் புகழ் பெற்றதாம். ஏன்னா...

ஒரு தடவை, ஒரு பெண் முதல் மாடியிலிருந்து தற்கொலை முயற்சியில குதிச்சப்போ, கீழே நின்றிருந்த டாக்ஸியோட கூரையில அவள் விழுந்தா.

பதறிப்போன டாக்ஸி டிரைவர், அவளை உடனடியா மருத்துவ விடுதியில கொண்டு சேர்க்க, அவள் உயிர் பிழைச்சா. அதுலயே, அவளுக்கும் அந்த டாக்சி டிரைவருக்கும் காதல் மலர, அப்புறம்... டும் டும் டும்..மாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:05 am

அரசியல்வாதிகளின் அடிப்படை குணாதிசயம்?



இடறி விழுந்தாலும், காரணம் போட்டதா காலரைத் துக்கி விட்டுக்கிறது!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:07 am

சிலரை அறிவு ஜீவி என்று கூறக் காரணம்?


சைக்காலஜி புரொபஸர் ஒருத்தர். ஒரு காலேஜுல வேலை பார்த்துட்டிருந்தார். அவர்கிட்ட சில வருஷங்களுக்கு முன்னால படிச்ச ஒரு மாணவி, கண்ணை கசக்கிட்டு வந்து, சார்! என்னுடைய மணவாழ்க்கை சிதறிவிடும்போல இருக்கிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்னு முறையிட்டார்.

ஏன்? என்னாச்சு?ன்னு அனுதாபத்துடன் கேட்டார் புரொபஸர்.

நாலஞ்சு நாட்களுக்கு முன்னால், நான் கோவாவுக்கு என் கணவருடனும், மாமியாருடனும் உல்லாப் பிரயாணம் போயிருப்பதாகக் கனவு கண்டேன். அங்கே கடலோரமாக நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, மாமியார் சற்று கடலருகே போனவுடன், நான் என் கணவரைப் பார்த்து, நானும் உங்கள் அம்மாவும் கடல் அலைகளிலே சிக்கித் தத்தளிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் நீங்கள் யாரைக் காப்பாற்றிக் கரையேற்ற முயற்சி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு... அவர், அஃப்கோர்ஸ் என் அம்மாவைத்தான் என்று மூஞ்சிலடித்தாற்போல் பதில் சொல்லிவிட்டார். அது கனவுதான் என்றாலும், அதிலிருந்து என் மனம் அமைதியில்லாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறது. கணவரை விவாகரத்து செய்து விடலாமோ என்றெல்லாம் கூடத் தோன்றுகிறது. நீங்கள்தான் இதற்கு ஏதாவது வழி சொல்ல வேண்டும்னாங்க அந்தப் பெண்மணி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:08 am

சைக்காலஜிஸ்ட் ரொம்ப நேரம் தாடியைச் சொறிந்தபடி யோசிச்சாரு. அப்புறம், உண்மையிலேயே இத கொஞ்சம் சீரியஸ் பிராப்ளம்தான். எனக்கு ஒரு நாள் டைம் கொடு. நல்லா யோசிச்சு நாளைக்கு உனக்கு முடிவு சொல்றேன்னு அவறை அனுப்பிட்டார்.

நைட் முழுக்க அவருக்கு தூக்கம் வரலை. ஒரே யோசனை. திடீர்னு விடியல்காலம் அவர் முகம் மலர்ந்தது. தன் மாணவியின் கேள்விக்குப் பதில் கிடைச்சுட்ட திருப்தி அவர் முகத்தில் பிரதிபலிச்சாது.

மறுநாள் தகவல் தர,

அந்த மாணவி வந்து, அவரைச் சந்திச்சதும்... அவர், அவகிட்ட உற்சாகமா சொன்ன பதில், உன் பிரச்னைக்கு விடை கிடைத்து விட்டது. பேசாமல் நீ நீச்சல் கற்றுக் கொள். அதுதான் பெஸ்ட் சொல்யூஷன். நம் பாதுகாப்புக்கு மற்றவர்களை நம் பாதுகாப்பிற்கு மற்றவர்களை நாம் ஏன் நம்பியிருக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:09 am

காட்டுமிராண்டி யுகம் கலியுகம் என்ன வித்தியாசம்?

பெருசா ஒண்ணும் இருக்கற மாதிரி தெரியலை. எப்படின்னா... ஒரு 20 வயது வாலிபன். பெயர் மகம்மத் அக்மல். ஒருநாள் அவன் ஊரிலிருந்த 42 வயது விவசாயி அல்தாஃப் மியான் என்பவருக்கு, வாலிபன் மேல் திடீர்னு ஒரு சந்தேகம். அதாவது

அவரோட 32 வயது மனைவிக்கும், வாலிபனான அக்மல்லுக்கும் இடையில் தகாத உறவு இருக்கிறதா அவருக்குத் தகவல் கிடைத்ததாம். அவ்வளவுதான்...

உடனே, அவர் தன் மனைவிக்குத் தலாக் கொடுத்துவிட்டு(விவாகரத்து செய்து) கிராமத்து பஞ்சாயத்தைக் கூட்டி அக்மல்லுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்னு பிடிவாதமா நின்னுட்டாரு.

போன ஜனவரி மாதம் 15ம் தேதி பஞ்சாயத்து தன் தீர்ப்பை அறிவித்தது. எப்படி? அக்கமல் அந்த விவசாயிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு அல்லது அபராதமாகக் கொடுப்பதோட, அவன் அண்ணனின் 2 வயதுப் பெண் குழந்தையை அல்தாஃப் மியாவுக்கு கட்டிக் கொடுக்க வேண்டுமாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:09 am

இந்தச் சம்பவம் நடந்தது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள முல்தான்ங்கற நகரிலிருந்து, மேற்கே 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கச்சா சௌஹான் அப்படிங்கற சிற்றூர்ல.

அடே, தண்டிக்க வேண்டும் என்றால் அக்மல்லையல்லவா தண்டிக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, ஒன்றுமறியாத அவன் அண்ணன் குழந்தையை அவ்வளவு வயதான மாப்பிள்ளைக்கா கட்டிக் கொடுக்கச் சொல்வார்கள்?

அதுல ஒரு கருணை என்ன தெரியுமா?

இப்போது கட்டிக் கொடுக்க வேண்டியதில்லை. பெண் 18 வயதை அடைந்த பிறகு, அவளை அல்தாஃப்மியாவுக்கு நிக்காஹ் செய்து கொடுத்தால் போதும்னு பஞ்சாயத்து சொன்னதாம்.

அவளுக்குப் பதினாறு வருஷங்கள் கழிச்சு 18 வயதாகும்போது, அல்தாஃப் மியா 58 வயது தாத்தாவாக இருப்பாரு. அழகான ஒரு 18 வயது பருவ மங்கை, ஆடி அடங்கின ஒரு தாத்தாவைக் கட்டி, என்ன பண்ணுவா?

இந்த வழக்கில் போலீசோ, நீதித்துறையோ பெருசா எதுவும் தலையீடு செய்யும் நிலையில் இல்லையாம். ஏன்னா... பஞ்சாயத்தோட இந்தத் தீர்ப்பை எதிர்த்து இதுவரை யாரும் எந்தப் புகாரும் கொடுக்கலையாம்? கலி காட்டுமிராண்டித்தனத்தையும் தாண்டி ஒரு காலத்துலயல்ல இருக்கோம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக