புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குதிரை சவாரியும் இலவச சேணமும்
Page 1 of 1 •
கட்டுரைகள்
குதிரை சவாரியும் இலவச சேணமும்
மா. ஆறுமுககண்ணன்
First Published : 27 Sep 2010 12:00:00 AM IST
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இப்போது ஒரு விஷயத்தில் கடும் போட்டி நிலவுகிறது என்றால் அதில் மிகையில்லை. அது, யார் அதிக இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களைத் தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். கலர் டிவி, கேஸ் அடுப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம்...என பலவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசின் பட்டியலில் இப்போது விவசாயிகளுக்கான பம்ப் செட்டும் சேர்ந்துள்ளது. டிவிக்களைப் பொறுத்தவரை கேபிள் இணைப்பு இல்லை என்றால் அவை மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதான் என்பது ஆட்சியாளர்கள் அறியாததல்ல. ஆயினும் ஏழைகள் மீது கருணை கொண்டு நிதி ஒதுக்கி கலர் டிவிக்களை இலவசமாக வழங்கினர். வழங்குகின்றனர், தொடர்ந்து வழங்குவதாகவும் கூறுகின்றனர். டிவிக்களை இலவசமாகப் பெறும் ஏழைகளோ மாதந்தோறும் கேபிள் கட்டணமாக அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் கேபிள் நிறுவனங்களைப் பொறுத்து 150 வரை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து செலுத்த வேண்டிய இந்த நெடுந்தொகை போக, முன்பணம் என்ற பெயரில் கணிசமான குறுந்தொகையும் செலுத்தினால்தான் அன்றாடக் கூலிகளான அந்த ஏழைகள் கேபிள் இணைப்புக் கிடைக்கப்பெற்று, தங்கள் டிவிக்களில் மானாடுவதையும், மயிலாடுவதையும் பார்த்து, எப்போதும் சிரிப்பொலி முழங்க சுபீட்சமாக பொழுதைக் கழிக்க இயலும். உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்த் திரைப்படங்களையும் பார்த்து பிறவிப் பயன் அடைய முடியும்! கேபிள் இணைப்பில் தனியார் நிறுவனங்களின் இந்தத் தன்னிகரற்ற தலைவிரி ஆட்டத்துக்குக் காரணம் அரசு கேபிள் அடக்கமாகச் செயல்படுவதுதான் என்பதும் ஆட்சியாளர்கள் அறிந்ததுதான். இந்நிலையில், மாநில அரசுக்குத் தானும் இளைப்பில்லை என மற்றுமொரு புதிய திடீர் திட்டத்துடன் இலவச கோதாவில் குதித்திருக்கிறது மத்திய அரசு. அது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவச கைப்பேசி வழங்கும் முன்னோடித் திட்டம். கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏழைகளுக்குக் கொடுக்க எள்ளளவும் மனமில்லாததுடன், அதுகுறித்த நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்வாதம் புரியும் மத்திய அரசு ஏழைகளுக்கு கைப்பேசி வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழு(டு)பவர்களின் வயிறுகள் கூழுக்கு அழுதுகொண்டிருக்க, அவர்களின் கொண்டைக்கு பூ முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஏற்கெனவே செல்போன் நிறுவனங்களின் சேவையால் சற்றுவசதி படைத்த மற்றும் நடுத்தர மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. செல்போன் நிறுவனங்களின் அந்தச் சேவையை ஏழைமக்களும் பெற்றே தீர வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்துடன் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. நன்கு படித்து அரசு, தனியார் பணிகளில் இருப்போரே தங்கள் கைப்பேசியில் வரும் குறுஞ்செய்திகளைப் படித்துவிட்டு அழிக்க முற்படும்போது தவறுதலாக பொத்தான்களை அழுத்திவிட்டால், கைப்பேசியில் இருக்கும் மீதித் தொகை திடீரென பாதித் தொகையாகிவிட, பதைபதைப்பாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, அதிகம் படிக்காத ஏழை மக்களும் இனி கைப்பேசிகளுடன் படவிருக்கும் பாட்டை என்ன சொல்வது? வாடிக்கையாளர்களின் மனங்களில் கோபச் சாரல் விழவிழ, செல்போன் நிறுவனங்களின் காட்டில் மேலும்மேலும் அடைமழைதான்! ஒரு வீட்டுக்குள் இலவச டிவியும், இலவச கைப்பேசியும் இருந்துவிட்டால் பார்ப்போருக்கு அந்த ஏழை மக்கள் பகட்டான வாழ்க்கை வாழ்வதாகவே தென்படும். ஆனால், இந்த இரண்டையும் பயன்படுத்துவது யானையைக் கட்டி தீனி போட்ட கதை என்பதே உண்மை. அதற்காக ஏழைகள் டிவி, கைப்பேசி போன்ற நவீன வசதிகளைப் பெறக்கூடாது எனப் பொருளல்ல. மீனைக் கொடுப்பதை விடவும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதானே ஓர் அரசுக்கு அழகான இலக்கணமாக இருக்க முடியும். வேண்டுமானால், டிவிக்களையும், கைப்பேசிகளையும் நீங்கள் வாங்குங்கள், கேபிள் இணைப்பையும், "டாப் அப்' வசதியையும் நாங்கள் தொடர்ந்து இலவசமாகத் தருகிறோம் என அரசுகள் அறிவிக்க வேண்டும். அதுதான் உண்மையான இலவசமாக இருக்க முடியும். மாறாக இப்போதைய நடைமுறை அங்குசத்தை நாங்கள் தருகிறோம். யானைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போலத்தானே! "ஒரு காசு பேணின் இரு காசு தேறும்' என்ற சொலவடைக்கு ஏற்ப வாழ்க்கையைச் சிரமத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களிடம் அளிக்கப்படும் இந்த இலவசங்கள், இருக்கின்ற காசையும் பறிப்பதல்லாமல் வேறென்ன? அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்; உள்ளூரானுக்கோ மரத்தடியில் பயம் என்பார்கள். அரசியல்வாதிகளுக்கோ எப்போதுமே தேர்தல் பயம். அதனால்தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல எதை இலவசமாகக் கொடுத்தால் வாக்குகளை எளிதாகப் பெறலாம் எனக் கணக்கிட்டு அதிலேயே குறியாக இருந்து இலவசங்களின் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். பொதுமக்கள் என்ற குதிரைகளை, தங்களுக்குச் சாதகமான வெற்றி என்ற இலக்கை நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமானால் இலவசங்கள் என்ற சேணமும், லகானும், கொஞ்சம் கொள்ளும், பச்சைப் புல்லும் அவசியம் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரிந்திருக்கிறது. ஏழைகளின் வாழ்வை முன்னேற்றி, வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்கிற வாதங்களெல்லாம் அவர்கள் தங்கள் சமாதானத்துக்காகச் சொல்லிக் கொள்பவையே. இலவசங்களை நிறுத்திவிட்டால் குதிரை எங்கே தங்களை குப்புறத் தள்ளி குழியும் பறித்துவிடுமோ என்பதே அவர்களின் அச்சம். இலவச மயக்கத்தில் இருக்கும் குதிரைகள் பகுத்தறியும் திறனைப் பெறும்வரை சுகமாய் சவாரி செய்வோரின் உதடுகள் இப்படித்தான் பாடும், ""சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ, சலோ!'
குதிரை சவாரியும் இலவச சேணமும்
மா. ஆறுமுககண்ணன்
First Published : 27 Sep 2010 12:00:00 AM IST
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இப்போது ஒரு விஷயத்தில் கடும் போட்டி நிலவுகிறது என்றால் அதில் மிகையில்லை. அது, யார் அதிக இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களைத் தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். கலர் டிவி, கேஸ் அடுப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம்...என பலவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசின் பட்டியலில் இப்போது விவசாயிகளுக்கான பம்ப் செட்டும் சேர்ந்துள்ளது. டிவிக்களைப் பொறுத்தவரை கேபிள் இணைப்பு இல்லை என்றால் அவை மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதான் என்பது ஆட்சியாளர்கள் அறியாததல்ல. ஆயினும் ஏழைகள் மீது கருணை கொண்டு நிதி ஒதுக்கி கலர் டிவிக்களை இலவசமாக வழங்கினர். வழங்குகின்றனர், தொடர்ந்து வழங்குவதாகவும் கூறுகின்றனர். டிவிக்களை இலவசமாகப் பெறும் ஏழைகளோ மாதந்தோறும் கேபிள் கட்டணமாக அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் கேபிள் நிறுவனங்களைப் பொறுத்து 150 வரை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து செலுத்த வேண்டிய இந்த நெடுந்தொகை போக, முன்பணம் என்ற பெயரில் கணிசமான குறுந்தொகையும் செலுத்தினால்தான் அன்றாடக் கூலிகளான அந்த ஏழைகள் கேபிள் இணைப்புக் கிடைக்கப்பெற்று, தங்கள் டிவிக்களில் மானாடுவதையும், மயிலாடுவதையும் பார்த்து, எப்போதும் சிரிப்பொலி முழங்க சுபீட்சமாக பொழுதைக் கழிக்க இயலும். உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்த் திரைப்படங்களையும் பார்த்து பிறவிப் பயன் அடைய முடியும்! கேபிள் இணைப்பில் தனியார் நிறுவனங்களின் இந்தத் தன்னிகரற்ற தலைவிரி ஆட்டத்துக்குக் காரணம் அரசு கேபிள் அடக்கமாகச் செயல்படுவதுதான் என்பதும் ஆட்சியாளர்கள் அறிந்ததுதான். இந்நிலையில், மாநில அரசுக்குத் தானும் இளைப்பில்லை என மற்றுமொரு புதிய திடீர் திட்டத்துடன் இலவச கோதாவில் குதித்திருக்கிறது மத்திய அரசு. அது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவச கைப்பேசி வழங்கும் முன்னோடித் திட்டம். கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏழைகளுக்குக் கொடுக்க எள்ளளவும் மனமில்லாததுடன், அதுகுறித்த நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்வாதம் புரியும் மத்திய அரசு ஏழைகளுக்கு கைப்பேசி வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழு(டு)பவர்களின் வயிறுகள் கூழுக்கு அழுதுகொண்டிருக்க, அவர்களின் கொண்டைக்கு பூ முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஏற்கெனவே செல்போன் நிறுவனங்களின் சேவையால் சற்றுவசதி படைத்த மற்றும் நடுத்தர மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. செல்போன் நிறுவனங்களின் அந்தச் சேவையை ஏழைமக்களும் பெற்றே தீர வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்துடன் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. நன்கு படித்து அரசு, தனியார் பணிகளில் இருப்போரே தங்கள் கைப்பேசியில் வரும் குறுஞ்செய்திகளைப் படித்துவிட்டு அழிக்க முற்படும்போது தவறுதலாக பொத்தான்களை அழுத்திவிட்டால், கைப்பேசியில் இருக்கும் மீதித் தொகை திடீரென பாதித் தொகையாகிவிட, பதைபதைப்பாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, அதிகம் படிக்காத ஏழை மக்களும் இனி கைப்பேசிகளுடன் படவிருக்கும் பாட்டை என்ன சொல்வது? வாடிக்கையாளர்களின் மனங்களில் கோபச் சாரல் விழவிழ, செல்போன் நிறுவனங்களின் காட்டில் மேலும்மேலும் அடைமழைதான்! ஒரு வீட்டுக்குள் இலவச டிவியும், இலவச கைப்பேசியும் இருந்துவிட்டால் பார்ப்போருக்கு அந்த ஏழை மக்கள் பகட்டான வாழ்க்கை வாழ்வதாகவே தென்படும். ஆனால், இந்த இரண்டையும் பயன்படுத்துவது யானையைக் கட்டி தீனி போட்ட கதை என்பதே உண்மை. அதற்காக ஏழைகள் டிவி, கைப்பேசி போன்ற நவீன வசதிகளைப் பெறக்கூடாது எனப் பொருளல்ல. மீனைக் கொடுப்பதை விடவும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதானே ஓர் அரசுக்கு அழகான இலக்கணமாக இருக்க முடியும். வேண்டுமானால், டிவிக்களையும், கைப்பேசிகளையும் நீங்கள் வாங்குங்கள், கேபிள் இணைப்பையும், "டாப் அப்' வசதியையும் நாங்கள் தொடர்ந்து இலவசமாகத் தருகிறோம் என அரசுகள் அறிவிக்க வேண்டும். அதுதான் உண்மையான இலவசமாக இருக்க முடியும். மாறாக இப்போதைய நடைமுறை அங்குசத்தை நாங்கள் தருகிறோம். யானைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போலத்தானே! "ஒரு காசு பேணின் இரு காசு தேறும்' என்ற சொலவடைக்கு ஏற்ப வாழ்க்கையைச் சிரமத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களிடம் அளிக்கப்படும் இந்த இலவசங்கள், இருக்கின்ற காசையும் பறிப்பதல்லாமல் வேறென்ன? அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்; உள்ளூரானுக்கோ மரத்தடியில் பயம் என்பார்கள். அரசியல்வாதிகளுக்கோ எப்போதுமே தேர்தல் பயம். அதனால்தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல எதை இலவசமாகக் கொடுத்தால் வாக்குகளை எளிதாகப் பெறலாம் எனக் கணக்கிட்டு அதிலேயே குறியாக இருந்து இலவசங்களின் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். பொதுமக்கள் என்ற குதிரைகளை, தங்களுக்குச் சாதகமான வெற்றி என்ற இலக்கை நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமானால் இலவசங்கள் என்ற சேணமும், லகானும், கொஞ்சம் கொள்ளும், பச்சைப் புல்லும் அவசியம் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரிந்திருக்கிறது. ஏழைகளின் வாழ்வை முன்னேற்றி, வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்கிற வாதங்களெல்லாம் அவர்கள் தங்கள் சமாதானத்துக்காகச் சொல்லிக் கொள்பவையே. இலவசங்களை நிறுத்திவிட்டால் குதிரை எங்கே தங்களை குப்புறத் தள்ளி குழியும் பறித்துவிடுமோ என்பதே அவர்களின் அச்சம். இலவச மயக்கத்தில் இருக்கும் குதிரைகள் பகுத்தறியும் திறனைப் பெறும்வரை சுகமாய் சவாரி செய்வோரின் உதடுகள் இப்படித்தான் பாடும், ""சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ, சலோ!'
Similar topics
» குதிரை சவாரியும் இலவச சேணமும்
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» சண்டி குதிரை நொண்டி குதிரை…
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» சண்டி குதிரை நொண்டி குதிரை…
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|