புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
74 Posts - 44%
heezulia
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
71 Posts - 43%
prajai
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
6 Posts - 4%
Jenila
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
jairam
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
kargan86
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
10 Posts - 5%
prajai
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
8 Posts - 4%
Jenila
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
4 Posts - 2%
Rutu
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
3 Posts - 1%
jairam
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_m10முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 1:32 pm

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள் – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

لسلام عليكم و رحمة الله و بركاته

நஹ்மதுஹூ வநுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்.

முன்னுரை
“என்னைக் குறித்து அறிவியுங்கள். அது சிறியதோர் செய்தியாயினுஞ்சரியே”.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள்,
நூல்: புகாரீ.


முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Muhammad3அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திரு மொழியின்படி, அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நான் படித்தறிந்த
விஷயங்களைத் தொகுத்து ஒரு சிறிய புத்தகத்தை எழுத நாட்டம் கொண்டேன்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா இப் புத்தகத்தை எழுதுவதற்கான ஹிதாயத்தையும்,
அறிவையும், ஆற்றலையும் கொடுத்தான். அதனைக் கொண்டு இச்சிறிய புத்தகத்தை
எழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய உம்மத்துகள் மீது நீங்காத
பற்றும் பாசமும், கவலையும் கொண்டவர்களாக இருந்தார்கள். “இறைவனே! என்
சமுகத்தார், என் சமுகத்தார்” எனக் கூறி அழுதவர்களாக இருந்தார்கள்.
இம்மையிலும், மறுமையிலும் அவர்களின் வாட்டம் போக்க நாட்டம் கொண்டவர்களாக
இருந்தார்கள்.


ஆனால்,
உம்மத்துகளில் ஒரு கூட்டத்தார் அன்னாரை கண்ணியப்படுத்துவதில் குற்றம்
காண்கிறார்கள்! அன்னார் மீது ஸலவாத்து ஓதுவதில் குற்றம் காண்கிறார்கள்!
அன்னாரின் நேரிய வழிமுறைகளில் குற்றம் காண்கிறார்கள்!


மனிதர்கள்தான்
இவ்விதம் குற்றம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்! ஆனால், அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலாவோ தன்னுடைய ஹபீபை ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணியப்படுத்தி
சிறப்பித்திருக்கிறான். யாருக்கும் வழங்காத பல்வேறு அந்தஸ்துகளை வழங்கி
சிறப்பித்திருக்கிறான். அன்னார் மீது தன்னுடைய அருளையும், அன்பையும்
பொழிந்து சிறப்பித்திருக்கிறான். இப்படியாக சிறப்புகளை எல்லாம் சிறப்பாக
வழங்கி சிறப்பித்திருக்கிறான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கிய சிறப்புகளில் சிலவற்றைத்தான்
இப்புத்தகத்தில் தொகுத்தெழுதியுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்.


இந்நூலில்
பல்வேறு ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல்வேறு ஹதீஸ் நூல்களிலிருந்து
எடுத்து பயன்படுத்தியுள்ளேன். அவ்விதம் இப்புத்தகத்தில் நான்
பயன்படுத்தியுள்ள ஹதீஸ் நூல்களின் மூல ஆசிரியர்களுக்கும், மொழிபெயர்ப்பு
செய்தவர்களுக்கும், பதிப்பித்தவர்களுக்கும் எனது நன்றியினை
காணிக்கையாக்குகிறேன். மேலும், அன்னவர்களின் ஹக்கில் துஆ செய்தவனாகவும்
இருக்கிறேன்.


இப்புத்தகத்தில்
என்னையறியாமல் ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சுட்டிக்காட்டி,
திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
பொருட்டால், இச்சிறிய புத்தகத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் பயன்
கிடைக்கும்படி செய்வானாக. மேலும், குறைவின்றி இம்மை மறுமை பேறுகளையும்
தந்தருள்வானாக. ஆமீன்.
சென்னை,


அன்பு சகோதரன்,
(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி)


14 .6 .1430 ( 8 .6 .2009 ).

முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar
பொ௫ளடக்கம்




1 சிறப்பான தலைமுறை


2 பிறப்பு


3 திருப்பெயர்


4 மனிதகுலம் முழுமைக்கும் நபியாக


5 ஐந்து பேறுகள்


6 இறுதி நபி


7 உயிர்களைவிட மேலானவர்


8 நபிமார்களுக்கு இமாம்


9 ஸலவாத்து


10 இறை தரிசனம்


11 புனித மிஃராஜ் பயணம்


12 கவ்ஸர் நதி


13 போர்களில் வானவர்கள்


14 உடுக்கை இழந்தவன் கைபோல


15 ரஹ்மத்தல்லில் ஆலமீன்


16 ஷபாஅத்து


17 திருமதீனாவும் மஸ்ஜிதுந் நபவீயும்


18 தவ்ராத்திலும் இன்ஜீலிலும்


19 மாண்பும் மகிமையும்


20 அற்புதங்கள்




1.சிறப்பான தலைமுறை

அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பான
வம்சா வழியிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் வம்ச பாரம்பரியத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதற்கொண்டு,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலைமுறை வரை வந்த அனைவருமே
சிறப்பானவர்களாக இருந்தனர். இது குறித்த விவரம் ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ளது.


“ஆதம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழி வழி வந்தவர்களில் மிகவும்
மேலானவர்களிலிருந்துதான் நான் அனுப்பப்பட்டேன். நான் இருக்கும் இந்தத்
தலைமுறை வரை ( அனைவரும் சிறப்பானவர்களாகவே இருந்தனர். )” என்று அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹூரைரா ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.


“இஸ்மாயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்களில் கனானா குலத்தினரைத்தான் அல்லாஹ்
தேர்ந்தெடுத்தான். கனானா குலத்தினரிடமிருந்து குறைஷி குலத்தினரை அல்லாஹ்
தேர்ந்தெடுத்தான். குறைஷிக் குலத்தினரிடமிருந்து பனூ ஹாஷிம் குலத்தினரை
அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தினரிடமிருந்து அவன் என்னைத்
தேர்ந்தெடுத்தான்” என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்ம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: வாஸிலாதுப்னுல் அஸ்கஃ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்: முஸ்லிம்.


ஒரு
முறை மக்கள் பேசிகொண்ட சில விஷயங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு எட்டின. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் உடனே மிம்பரில் ஏறினார்கள். மக்களிடம், “நான் யார்?” என்று
கேட்டார்கள். அதற்கு மக்கள், “தாங்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்” என
பதிலளித்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,
“நான் அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மது (
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) ஆவேன். நிச்சயமாக அல்லாஹ் படைப்புகளைப்
படைத்தான். என்னை அப்படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆக்கினான்.
அந்த மக்களை அல்லாஹ் இரண்டு பிரிவினர்களாக ஆக்கினான். அதில் சிறந்த
பிரிவினரில் நின்றும் என்னை ஆக்கினான். அம்மக்களை பல கோத்திரங்களாக அல்லாஹ்
ஆக்கினான். அவற்றில் சிறந்த கோத்திரத்தில் நின்றும் அல்லாஹ் என்னை
ஆக்கினான். அவர்களை அல்லாஹ் பல வீடுகளாக ( குடும்பத்தார்களாக ) ஆக்கினான்.
அவற்றில் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் உங்களில் சிறந்த
குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். மனத்தாலும் உங்களில் சிறந்தவனாக
இருக்கிறேன். அறிவிப்பவர்: அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். ( இமாம்
அஹ்மது ).


மேலும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வமிசத் தொடரில்
இடம்பெற்றுள்ள அனைவருமே நிக்காஹ் உறவின் மூலமே பிறந்தவர்கள்! அவர்களில்
எவருமே விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள் அல்லர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரர்களில் ஒருவரான இமாம் முஹம்மதுல் பாகிர்
(ரஹ்மதுல்லாஹி அலைஹி ) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் நிக்காஹ் மூலமே (
என் பெற்றோர் மற்றும் மூதாதையர்களின் நிக்காஹ் உறவின் மூலமே )
வெளிப்படுத்தப்பட்டேன். விபச்சார உறவின் மூலம் அல்ல” என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( அப்துர் ரஜ்ஜாக் )


ஒரு
முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
சொற்பொழிவாற்றினார்கள். அதில் கூறினார்கள்: “நான் அப்துல்லாஹ்வின் மகன்
ஆவேன். அவர் அப்துல் முத்தலிபின் மகனாவார். அவர் ஹாஷிமின் மகனாவார்.
அவர் அப்து முனாஃபின் மகன் ஆவார். அவர் குஸையின் மகன் ஆவார். அவர்
கிலாபின் மகன் ஆவார். அவர் முர்ராவின் மகன் ஆவார். அவர் கஃபின் மகன்
ஆவார். அவர் லுஅய்யின் மகன் ஆவார். அவர் காலிபின் மகன் ஆவார். அவர்
பஃஹரின் மகன் ஆவார். அவர் மாலிகின் மகன் ஆவார். அவர் நள்ரின் மகன்
ஆவார். அவர் கினானாவின் மகன் ஆவார். அவர் குஜைமாவின் மகன் ஆவார். அவர்
முத்ரிகாவின் மகன் ஆவார். அவர் இல்யாஸின் மகன் ஆவார். அவர் முளரின் மகன்
ஆவார். அவர் நிஜாரின் மகன் ஆவார். மக்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்தால்,
அதில் சிறந்த பிரிவிலேயே அல்லாஹ் என்னை ஆக்கி வைத்தான். என்
பெற்றோரிலிருந்து அல்லாஹ் என்னை வெளிப்படுத்தினான். அறியாமைக் கால
விபச்சாரத் தொடர்பு என்னைத் தொடவில்லை. நான் நிக்காஹ் மூலம் வெளியானேன்.
விபச்சாரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆதம் ( அலைஹிஸ்ஸலாம் )
அவர்களிடமிருந்து என் தாய், தந்தை அளவில் நான் வந்து சேறும் வரை
நிக்காஹ்வின் மூலமே கொண்டுவரப்பட்டேன். நான் உங்களில் சிறந்தவன். நான்
உங்களின் வமிசத்திலும் சிறந்தவன். ( பைஹகீ ).


ஹளரத்
இமாம் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் நபித்துவம் பற்றிய தலைப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் வம்ச வரலாறு பற்றி கீழ்கண்டபடி
குறிப்பிட்டிருக்கிறார்கள். (1) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள். (2) அப்துல்லாஹ், (3) அப்துல் முத்தலிப், (4) ஹாஷிம், (5)
அப்துமனாப், (6) குஸய்யு, (7) கிலாப், (8) முர்ரா, (9) கஃபு, (10)
லுவய்யு, (11) காலிப், (12) பிஹ்ர், (13) மாலிக், (14) நள்ர்,
(15) கினானா, (16) குஜைமா, (17) முத்ரிக்கா, (18) இல்யாஸ், (19)
முளர், (20) நிஜார், (21) மஅத்து, (22) அத்னான்.


இவர்களில்
கடைசியாக கூறப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
ஆரம்பத் தந்தையான அத்னான் அவர்கள், ஹஜ்ரத் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் பேரப்பிள்ளைகளில் உள்ளவராவார்!


இவ்விதம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
சிறப்பான வம்சா வழியிலே தேர்ந்தெடுத்து சிறப்பித்திருக்கிறான்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar

2.பிறப்பு

அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் அல்லாஹூ ஸூப்ஹானஹூ
தஆலா சிறப்பாக்கினான்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பிறந்த பொழுது பல்வேறு அதியங்களும் அற்புதங்களும் வெளிப்பட்டன. அதன் மூலம்
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
உயர்ந்த அந்தஸ்தை வெளிப்படுத்தி சிறப்பித்தான்.


யமன்
நாட்டு மன்னனான அப்ரஹா புனித கஃபாவை இடிக்கும் நோக்கத்துடன் படையெடுத்து
வந்தான். அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனையும், அவனுடைய யானைப் படையையும்
பொடிக்கற்களைக் கொண்டு அழித்தான்! புனித கஃபாவையும் காத்தருளினான். இந்த
நிகழ்ச்சிக்கு ஐம்பது நாட்கள் கழித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் பிறந்தார்கள். அதன்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம், பன்னிரண்டாம் தேதி, திங்கட்கிழமை வைகறைப்
பொழுதில் பிறந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பிறந்த தேதி குறித்து அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம்
பன்னிரண்டாம் தேதி பிறந்தார்கள் என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின்
கருத்தாக உள்ளது.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது பல்வேறு
அற்புதங்களும், அதிசயங்களும் நிகழ்ந்தன! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர் ( ஒளி ) வெளிப்பட்டது! வீடு
ஒளியால் நிரம்பியது! நட்சத்திரங்கள் இறங்கி அன்னாரின் பக்கம் நெருங்கின!


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயார் ஆமினா அவர்கள் கூறியதாக
உம்மு ஸலமா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான்
அண்ணலாரைப் பெற்றெடுத்த இரவில் ஒரு மாபெரும் ஒளியைப் பார்த்தேன். அதன்
ஒளியில் ஷாம் நாட்டின் கோட்டைகள் இலங்குவதை நான் பார்த்தேன். (அபூ நுஅய்ம் )


உஸ்மான்
பின் அபில் ஆஸ் தம்முடைய தாயாரும் ஸஹாபிப் பெண்மணியுமான உம்மு உஸ்மான்
அஸ்ஸகபிய்யா அஸ்ஸஹாபிய்யா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்களின் வாயிலாக
அறிவிக்கிறார்கள்: நபியவர்களின் பிரசவத்தின் பொழுது நான் அவர்களின்
இல்லத்தில் இருந்தேன். அவர்கள் பிறந்ததும் அவர்களின் வீடு ஒளியால்
நிரம்பியது. நட்சத்திரங்கள் இறங்கி அவர்களின் பக்கம் நெருங்கி
வந்துவிட்டன. எந்த அளவெனில் என் மீது அவை விழுந்து விடும் என நான்
எண்ணுகிற அளவுக்கு நெருங்கின! அண்ணலாரை, ஆமினா பெற்றெடுத்ததும்
அவர்களிடமிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. அவ்வொளியில் அந்த அறையும், அந்த
வீடும் பிரகாசித்தது! அதனால் ஒளியைத் தவிர வேறு எதையும் பார்க்காதவளாக
நான் ஆகிவிட்டேன். ( பைஹகீ, திப்ரானி ).


இமாம்
இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் “அல்பிதாயா வந்நிஹாயா” என்னும்
நூலில் பின்வரும் அற்புதங்களையும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள்: அணணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பொழுது ஒரு நூர்
வெளிப்பட்டது. அது பூமியில் இறங்கி மண்டியிட்டு நின்றது! வானத்தின்
பக்கம் தன் தலைப்பாகத்தை உயர்த்தியது. அண்ணலார் பிறந்த இல்லத்தில் ஒளி
பரவியது. வானிலுள்ள நட்சத்திரங்கள் அவர்களை நெருங்கி வந்தன. கிஸ்ரா
மன்னனின் மாடங்கள் அசைந்தாடி இடிந்து விழுந்தன. நெடுங்காலமாக
பாதுகாக்கப்பட்டு வந்த நெருப்பு நூர்ந்துவிட்டது! இவை தவிர மற்றும் பல
அற்புதங்களும் நிகழ்ந்தன.


மக்ஜூம்
பின் ஹானி என்பவர் தம் தந்தை வாயிலாக அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் மாடங்கள்
உடைந்தன. அவற்றில் பதினான்கு மாடங்கள் இடிந்து கீழே விழுந்தன. ஆயிரம்
ஆண்டுகளாக நூர்ந்து விடாது எரிந்துக் கொண்டிருந்த பாரசீக நாட்டின்
நெருப்புக் குண்டம் நூர்ந்தது. “ஸாவா” நகரத்தில் இருந்த சிறிய கடல் போன்ற
ஏரி வற்றிப்போனது. ( பத்ஹூல் பாரி ). இந்த அற்புதங்களை ஹதீஸ்
அறிவிப்பாளர்களான இமாம்கள் பைஹகீ, அபூ நுஅய்ம், கராஇதி, இப்னு அஸாகிர்,
இப்னு ஜரீர் போன்ற மார்க்க மாமேதைகளும் கூறியுள்ளனர்.


இப்படியாக
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பையும் சிறப்பாக்கி,
அன்னாரின் சிறப்பையும், அன்னாரின் தூதுவத்தையும் வெளிப்படுத்தியுள்ளான்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar

3.திருப்பெயர்

நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் முஹம்மத் என்பதாகும்.
இத்திருப்பெயரை அன்னாரின் பாட்டனார் ஹளரத் அப்துல் முத்தலிப் அவர்கள்
சூட்டி மகிழ்ந்தார்கள். “இத்திருப்பெயரை சூட்ட காரணமென்ன?” என்று மக்கள்
கேட்டபோது, ” இப்பிள்ளைக்கு முஹம்மத் என்னும் திருப்பெயரையே சூடடும்படி
கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன். இப்பிள்ளையின் புகழ் உலகின் ஒவ்வொரு
மூலை முடுக்கிலும் எதிரொலிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் ” என பதில்
கூறினார்கள். முஹம்மத் என்னும் திருப்பெயருக்கு ” புகழப்பட்டவர் ” என்பது
பொருளாகும்.


அன்னை
ஆமினா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘அஹ்மது’
என்னும் திருப்பெயரை சூட்டினார்கள். அன்னை ஆமினா அவர்கள் நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கருவுற்றிருக்கும் போது, அன்னாருக்கு
ஆண் குழந்தை பிறக்கும் என்றும், அக்குழந்தைக்கு அஹ்மது என்னும் திருப்பெயரை
சூட்டும்படியும் கனவின் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படியே அன்னை ஆமினா
அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அஹ்மது என்னும்
திருப்பெயரை சூட்டினார்கள். அஹ்மது என்னும் திருப்பெயருக்கு ‘புகழ்பவர்’
என்பது பொருளாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் போல்
புகழப்பட்டவரும் எவருமில்லை. ஒவ்வொரு கணமும் வானவர்களும், மனிதர்களும்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து என்னும்
புகழ்மொழியை ஓதிக் கொண்டுதானே இருக்கிறார்கள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களைப் போல் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை புகழ்ந்தவரும்
எவருமில்லை! அதனால்தான் இத்திருப் பெயர்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா சூட்டச்
செய்தான் போலும்!


முஹம்மது,
அஹ்மது என்னும் இவ்விரு திருப்பெயர்களும் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு
கூறப்பட்டுள்ளன. முஹம்மது என்னும் திருப்பெயர், ஸூரத்துல் ஆலஇம்ரான், வசனம்
– 144, ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40, ஸூரத்து முஹம்மது, வசனம் – 2,
ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் – 29 , ஆகிய நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது.
அஹ்மது என்னும் திருப்பெயர் ஸூரத்துஸ் ஸஃப்பு, வசனம் – 6 ல்
இடம்பெற்றுள்ளது.


நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்றாத் வேதத்தில்
முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம் –
29 ல் கூறப்பட்டுள்ளது. இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி, ” மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: ” இஸ்ராயீல் மக்களே! எனக்கு
முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் ; எனக்குப் பின்னர் வரவிருக்கும்
” அஹ்மது ” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்
இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன் ” என்று
கூறிய வேளையை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக! ) என்று, ஸூரத்துஸ் ஸஃப்பு,
வசனம் – 6 ல் கூறப்பட்டுள்ளது.


மேலும்,
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
‘முத்தஸ்ஸிர்’ (போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்று அழைத்திருக்கிறான்.
இது குறித்த விவரம் ஸஹீஹூல் புகாரீயில் இடம் பெற்றுள்ளது.


வஹீ
(தெய்வ அறிவிப்பு) நின்றிருந்ததைக் குறித்து ஜாபிறுப்னு அப்தில்லாஹில்
அன்ஸாரி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியபோது, “நான் நடந்துக்
கொண்டிருக்கும் போது வானிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்று, என் தலையை
உயர்த்தினேன். அப்பொழுது ஹிராவில் என்னிடம் வந்த அதே வானவர், வானுக்கும்
பூமிக்குமிடையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே, அவருக்கு நான் பயந்து
திரும்ப (வீட்டுக்கு ) வந்து “எனக்குப் போர்த்துங்கள், எனக்குப்
போர்த்துங்கள்” என்று கூறினேன். ( துப்பட்டியை போர்த்திவிட்டார்கள்.
அப்பொழுது )


“(1)
( போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! (2) நீர் எழுந்து ( மக்களுக்கு
) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. (3) மேலும், உம் இறைவனைப் பெருமைப்
படுத்துவீராக. (4) உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
(5) அன்றியும் அசுத்தத்தை வெறுத்து ( ஒதுக்கி ) விடுவீராக” என்னும்
வசனங்களை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அருளினான். ( பார்க்க: அத்தியாயம் 74,
ஸூரத்துல் முத்தஸ்ஸிர், வசனம் – 1 – 5 . ) வஹீ தொடர்ந்து வந்தது” என்று (
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ) கூறியதாக அவர் சொன்னார்.
அறிவிப்பவர்: ஜாபிறுப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.


இதன்
காரணமாக முத்தஸ்ஸிர் என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் திருப்பெயராக உள்ளது. இதைப் போலவே அத்தியாயம் 73, ஸூரத்துல்
முஸ்ஸம்மில், வசனம் 1 – ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘முஸ்ஸம்மில்’
என்பதும் அண்ணல் நபீ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப் பெயராக
உள்ளது.


“(1)
தாஹா. (2) ( நபியே! ) நீர் துன்பப் படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது
இறக்கவில்லை. ” இவை, அத்தியாயம் 20, ஸூரத்து தாஹாவின் தொடக்க
வசனங்களாகும். இதில், முதல் வசனமாக கூறப்பட்டுள்ள ‘தாஹா’ என்பதும் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் திருப்பெயரேயாகும் என சில அறிவிப்புகளில்
கூறப்பட்டுள்ளது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 6, பக்கம் – 64 . )


இப்னு
ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், அத்தியாயம் 36, ஸூரத்து யாஸீனில்
குறிப்பிடப்பட்டிருக்கும் ‘யாஸீன்’ என்பதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரே என அறிவித்திருக்கிறார்கள். ( மஆரிபுல்
குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 363 . ) ஹூரத்துல் அஃராஃப், 157, 158
வசனங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ( எழுதப் படிக்கத்
தெரியாத ) ‘உம்மி’ நபி என அழைக்கப் பட்டிருக்கிறார்கள்.


நபிபெருமானார்
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்களைப் பற்றி ஸஹீஹில்
புகாரி ஷரீபில், கீழ்கண்ட ஹதீஸ் உள்ளது. ” எனக்கு ஐந்து
பெயர்களிருக்கின்றன. நான் முஹம்மது, அஹ்மது ( என்னும் பெயர்களுள்ளவர் ) .
நான்தான் அல்மாஹீ, அதாவது என் மூலமாக அல்லாஹ் குப்ரை அழிக்கிறான.
நான்தான் அல்ஹாஷிர், அதாவது இறுதி நாளில் எனக்குப் பின்னர்தான் மனிதர்
யாவரையும் அல்லாஹ் ( உயிர்த் தெழுப்பி ) ஒன்று சேர்ப்பான். நான்தான் கடைசி
நபி. ( எனக்குப் பின்னர் நபி இல்லை ) ” என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜூபைறுப்னு முத்இம்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். இந்த ஹதீஹில், நபிபெருமானார் ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் ஐந்து பெயர்கள் கூறப்பட்டுள்ளன.


இப்படியாக
திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுடைய திருப்பெயர்கள் பலவும் கூறப்பட்டுள்ளன. இத்திருப் பெயர்கள்
யாவும் நபிமார்களால் அறிவிக்கப் பட்டவையும், வேத நூல்களில்
சொல்லப்பட்டவையுமாகும். இவை தவிர இன்னும் பல்வேறு திருப்பெயர்களும் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உள்ளன. அவை விர்து ( ஜபம் )
நுல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.


அல்லாஹூ
ஸூப்ஹானஹூ தஆலா தன்னுடைய ஹபீபு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் திருப்பெயர்களை கண்ணியப் படுத்தியிருக்கிறான். இதற்கு சாட்சியாக
திருக்குர்ஆன் இருக்கிறது. திருக்குர்ஆனில். நபிமார்களை குறிப்பிட்டுக்
கூறும் பொழுது அவர்களுடைய பெயர்களைக் கொண்டே அழைக்க ப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் பொழுது ‘யா
ஆதமு’ ( ஆதமே! ) என்றே கூறப்பட்டிருக்கிறார்கள். இதைப்போலவே நூஹூ
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா நூஹூ’ ( நூஹே! ) என்றே
அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா
இப்ராஹீமே’ (இப்ராஹீமே! ) என்றும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா மூஸா’
( மூஸாவே! ) என்றும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா ஈஸா’ (ஈஸாவே! )
என்றும் திருக்குர்ஆனில் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்விதமே மற்ற
நபிமார்களும் பெயர்களைக் கொண்டே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா முஹம்மத்’ என்றோ, ‘யா
அஹ்மத்’ என்றோ பெயரைக் கொண்டு அழைக்கப்படவில்லை! இதற்கு மாறாக அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பிட்டுக் கூறும் இடங்களில்
பெரும்பாலும் ‘யா அய்யுஹன் நபியு’ ( நபியே! ) என்றோ, ‘யா அய்யுஹர்
ரஸூலு’ ( தூதரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முஸ்ஸம்மிலு’ ( போர்வை
போர்த்திக் கொண்டிருப்பவரே! ) என்றோ, ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ ( (
போர்வை ) போர்த்திக் கொண்டு இருப்பவரே! ) என்றோதான்
அழைக்கப்பட்டுள்ளார்கள்! திருக்குர்ஆன் முழுமையிலும் வெறும் நான்கு
இடங்களில் மட்டும்தான் – அதுவும் தேவையைக் கருதி, முஹம்மத் என்னும்
திருப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்! இவ்விதமாக அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர்கள் திருக்குர்ஆனில்
கண்ணியப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஹளரத் முஃப்தி முஹம்மத் ஷபீஈ
ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மஆரிபுல் குர்ஆன், பாகம் – 8, பக்கம் – 91 ல்,
ஸூரத்துல் பஃத்ஹூ, வசனம் – 29 க்கான தப்ஸீரில் குறிப்பிட்டு
எழுதியுள்ளார்கள்.


மேலும்,
திருக்கலிமா, பாங்கு, இகாமத் மற்றும் இது போன்ற காரியங்களில் அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலாவை நினைவு கூறும்போதெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரையும் சேர்த்து நினைவுகூறும்படியாக அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா ஏற்பாடு செய்திருக்கின்றான். இவ்விதமாகவும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் சிறப்பிக்கப்பட்டுள்ளது. (
மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 222. )


இவ்விதம்
சிறப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரிய அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருப்பெயரை கூறும்போதும், கேட்கும்போதும் அன்னார் மீது
ஸலவாத் ஓதுவது ஈமான் கொண்ட அனைவர் மீதும் வாஜிபு ஆகும். ஏனெனில், “எவர்
முன்னிலையில் என் பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத்துக் கூறவில்லையோ
அவருடைய மூக்கை மண் அரிக்கட்டும்!’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்
அறிவித்துள்ள இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு
ஹதீஸில், “எவர் முன் என்னைக் குறிப்பிடப்பட்டு, அவர் என் மீது ஸலவாத்துக்
கூறவில்லையோ அவரே ( உண்மையில் ) உலோபியாவார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை ஹளரத் அலி கர்ரமல்லாஹூ
வஜ்ஹஹூ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஹதீஸூம் திர்மிதீயில்
உள்ளது.


முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar



avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 1:34 pm

5.ஐந்து பேறுகள்

அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும்
விசேஷமாக ஐந்து பேறுகளை வழங்கி சிறப்பித்திருக்கிறான். இந்த ஐந்து பேறுகளை
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வேறு எவருக்குமே வழங்கவில்லை!


(1)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்லம் அவர்களின் திருப்பெயரை கேட்டே மக்கள்
பணிந்தனர். இதன் காரணமாக போர் செய்யவேண்டிய அவசியமில்லாமலேயே ஒரு மாத வழி
தூரமுள்ள நாடுகள் பணிந்தன. இந்த பேறு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு மட்டுமே அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வழங்கி யிருக்கிறான்.


(2)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட
நபிமார்கள் மஸ்ஜிதில் மட்டுமே தொழ அனுமதிக்கப் பட்டனர். இதனால் மஸ்ஜிது
அல்லாத வேறு இடங்களில் தொழ அவர்களால் முடியாதிருந்தது. ஆனால், அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் ஸூஜூது செய்யும்
இடமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால்,
அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர் மஸ்ஜிதுகளிலும்
தொழுது கொள்ளலாம். மஸ்ஜிது இல்லாத இடங்களில் தாம் இருக்கும் இடத்திலேயே
தொழுது கொள்ளலாம். இவ்விதமாக பூமியின் எப்பகுதியிலும் தொழுது கொள்ள இந்த
உம்மத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூமி முழுவதும் ஸூஜூது செய்யும்
இடமாக ஆக்கி அருளப்பட்டுள்ள இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


(3)
போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச்சென்ற பொருள்களை எடுத்து
அனுபவித்துக்கொள்ள முற்காலத்து நபிமார்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, போரில் பகைவர்கள்
விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து உபயோகித்துக் கொள்ள அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா அனுமதித்துள்ளான். இந்த பேறும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.


(4)
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஷபாஅத்து ( பரிந்துரை )
செய்யும் பேறும் அளிக்கப்பட்டுளளது. மறுமை நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா
மனிதர்களில் முந்தியவர்களையும், பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று
திரட்டுவான். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக்
கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது
மனிதர்களில் சிலர் சிலரை நோக்கி, “நீங்கள் இருக்கும் நிலையைக்
கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய நிலை நேரந்திருக்கிறது என்பதை
நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து
பேசுபவரைத் தேடிப் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அப்போது
மக்கள் நபிமார்களிடம் சென்று, தமக்கு நேர்ந்திருக்கும் துன்ப நிலையை அகற்ற
அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் பரிந்துரை செய்யும்படியாக முறையிடுவார்கள்.
முதலில் ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும், பிறகு ஹளரத் நூஹூ, ஹளரத்
இப்ராஹீம், ஹளரத் மூஸா, ஹளரத் ஈஸா அலைஹிமுஸ் ஸலாத்து வஸ்ஸலாம் ஆகிய எல்லா
நபிமார்களிடமும் முறையிடுவார்கள். ஆனால், அந்நாளில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ
தஆலாவிடம் பரிந்துரை செய்ய எந்த நபிமாரும் முன்வரமாட்டார்கள். அச்சமயம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே,
மனிதவர்க்கத்தாருக்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவிடம் ஷபாஅத்து (பரிந்துரை)
செய்யும் பேறு பெற்றிருப்பார்கள். அவ்வேளை, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிடம், மனிதவர்க்கத்தாருக்காக
பரிந்துரை செய்வார்கள். அந்த பரிந்துரையின் பயனாக மனிதவர்க்கம் முழுவதும்
தங்களுக்கு ஏற்பட்டிருந்த கஷ்டத்திலிருந்து மீட்சி பெறுவார்கள். இந்த பேறு
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உரியதாகும்.


(5)
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
மனிதகுலம் முழுமைக்கும் பொது நபியாக ஆக்கி அனுப்பினான். ஆனால், அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட நபிமார்கள்
யாவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டனர்.
மனிதகுலம் முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு –
பேறு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே
கிடைக்கப்பெற்றது.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சிறப்பாக அளிக்கப்பட்ட
இந்த ஐந்து விசேஷ பேறுகளைப் பற்றிய விவரம், புகாரீ ஷரீபில் உள்ள கீழ்கண்ட
ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது:


“எனக்கு
ஐந்து காரியங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னர் ஒருவருக்கும்
அவைகள் அளிக்கப்படவில்லை. ஒரு மாதத் தொலைவு தூரம் ( உள்ள பிரதேசம் ) வரை
திடுக்கத்தால் (மட்டும் யுத்தமின்றி ) வெற்றியடைந்தேன். எனக்கு பூமி
முழுவதம் ஸூஜூது செய்யும் இடமாகவும் சுத்தமானதாகவும் ஏற்பட்டிருக்கிறது.
என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எந்த இடத்தில் தொழுகைக்கு நேரமானாலும் அவர்
தொழுதுவிடவேண்டும். எனக்கு பகைவர் விட்டுச் சென்ற பொருள்கள் அனுமதிக்
கப்பட்டிருக்கின்றன. எனக்கு முன்னருள்ள ( நபிமார்களில் ) எவருக்கும் அது
அனுமதிக்கப்படவில்லை. எனக்கு ஷபாஅத்துச் செய்யும் உரிமை
அளிக்கப்பட்டிருக்கிறது. நபிமார்கள் (இதற்கு முன்) தங்கள் சமூகத்தாருக்கு
மட்டிலுமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் அனைவருக்கும் ( மனித
வர்க்கம் முழுவதற்கும் பொது நபியாக ) நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
ஜாபிர் இப்னு அப்தில்லாஹி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.


மேலும்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, மற்ற சமூகத்தினரை விட
மூன்று விஷயங்களில் மேன்மை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஹதீஸ்: “மற்ற
சமூகத்தினரை விட மூன்று விஷயங்களில் நமக்கு மேன்மை அளிக்கப்பட்டுள்ளது.
(1) நம் படை அணி வானவர்களின் படை அணியைப் போன்று ஆக்கப்பட்டு விட்டது.
(2) பூமி எல்லாம் நமக்குத் தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது. (3) நாம்
தண்ணீரை அடையவில்லை என்றால், அதன் மண்ணும் நமக்குத் துப்புரவு அளிக்கும்
பொருளாக ஆக்கப்பட்டுள்ளது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹூதைஃபா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்,
நூல்: முஸ்லிம்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar

6.இறுதி நபி

இந்த
உலகத்தில் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களும், இறைவனுக்கு
இணைவைக்கும் காரியங்களும், பாவகரமான காரியங்களும் பெருகிடும் போது, மக்களை
நல்வழிப்படுத்துவதற்காக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நபிமார்களை
அனுப்பிவைத்தான். இவ்விதம் இந்த உலகத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களின்
உண்மையான எண்ணிக்கையை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவே நன்கு அறிவான். ஆனால்,
இந்த உலகத்தில் இறுதி நபியாக அனுப்பப்பட்டவர் என்னும் சிறப்பு அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே கிடைத்துள்ளது. இதைப்பற்றி
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:


“முஹம்மது
(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக
இருக்க வில்லை ; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம்
இறுதி(முத்திரை)யாகவும் இருக்கின்றார் ; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள்
பற்றியும் நன்கறிந்தவன். (ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 40. )


அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனின் இந்த வசனத்தில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இறுதி முத்திரையாக
இருக்கின்றார், எனக் கூறியுள்ளான். இதன்மூலம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களுடன் நபித்துவம் முடிந்துவிட்டது, இனி உலகில் எவரும்
‘நபி’ என்ற அந்தஸ்துடன் அனுப்பப்படமாட்டார்கள் என்ற உண்மையையும்
வெளிப்படுத்தியுள்ளான்.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக – நபிமார்களின்
முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது அன்னாரின் பிரத்யேகமான, பூரணத்துவம்
பெற்ற, உயர்ந்த ஸ்தானத்தை வெளிப் படுத்துகிறது. ஏனெனில், எந்த ஒரு
காரியமும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்து, தொடர்ந்து,
முடிவை அடைகிறது. காரியத்தின் இறுதி நிலையான ‘முடிவு’ என்பது, எந்த
நோக்கத்திற்காக காரியம் ஆரம்பிக்கப்பட்டதோ, அக்காரியம் முழுமை பெற்று, அதன்
நோக்கமும் நிறைவேறிவிட்டது என்பதையே காட்டுகிறது. ( மஆரிபுல் குர்ஆன்,
பாகம் – 7, பக்கம் – 161. )


இந்த
உலகில் எந்த நோக்கத்திற்காக நபிமார்கள் அனுப்பப்பட்டார்களோ அந்த நோக்கம்
முழுமை பெற்றுவிட்டது என்பதையே அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் நபிமார்களின் முத்திரையாக அனுப்பப்பட்டிருப்பது காட்டுகிறது.
இதற்கு அனுகூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதகுலம்
முழுவதற்கும் பொது நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள். கியாமத்து (இறுதி)
நாள் வரைக்குமான காலத்திற்கும் நபியாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.
மேலும், கியாமத்து நாள் வரைக்குமான மக்களுக்கு வழிகாட்டியாக, வேதநூலாக
திருக்குர்ஆன் அளிக்கப் பட்டிருக்கிறது. திருக்குர்ஆனை கியாமத்து நாள்
வரையிலும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவே ஏற்றுக்
கொண்டுள்ளான். கியாமத்து நாள் வரைக்கும் நடைமுறைப்படுத்தும் விதமாக ஷரீஅத்
வகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. உலக மக்களுக்கு ‘வாழ்க்கை வழிகாட்டியாக’
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஸூன்னத்தான நடைமுறைகள்
அமைந்துள்ளன. இவ்விதமாக, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களை இறுதி நபியாக அனுப்பியும், அதற்கு அனுகூலமாக பல்வேறு
விஷயங்களை ஏற்படுத்திக் கொடுத்தும் சிறப்பித்திருக்கிறான்.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காதமன் நபியீனாக
அனுப்பப்பட்டிருப்பது பற்றி பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சில:


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் இரு விரல்களை (அதாவது)
நடுவிரலையும், பெருவிரலுக்கு அடுத்துள்ளதையும் ( ஆள்காட்டி விரலையும் )
இணைத்து, நானும் ( நியாயத் தீர்ப்புக்குரிய ) அவ்வேளையும் இவ்வாறு
இருக்கும் நிலையில் (நபியாக) அனுப்பப்பட்டேன் என்று கூற நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ.


“நான்
உலக முடிவு நாளுக்குரிய அடையாளத்திலேயே அனுப்பப்பட்டுள்ளேன். ஆனால் அதற்கு
நான் முந்திக் கொண்டுவிட்டேன். இந்த (கலிமா) விரல் இந்த (நடு) விரலுக்கு
முந்தி இருப்பது போல்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறி தங்களின் சுட்டு விரலையும் நடு விரலையும் சாடை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர்: மிஸ்தவ்ரிதுப்னு ஷத்தாதில் கிஹ்ரிய்யி ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்: திர்மிதீ.


“என்னுடைய
நிலையும், (ஏனைய) நபிமார்களின் நிலையும் ஒரு மனிதன் ஒரு வீட்டைக் கட்டி
ஒரு செங்கல்லுடைய இடத்தைத் தவிர அதனை பூர்த்தி செய்து அதனை
அழகாக்கியதையும், மக்கள் அதில் நுழைந்து ஆச்சரியப்பட்டு, இந்தச் செங்கலுடைய
இடம் ( மட்டும் குறையாக இருக்கிறதே, இந்தக் குறையும் ) இல்லாமல்
இருக்கக்கூடாதா? என்று கூறுவதையும் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்
இப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.


ஹளரத்
அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறிய மற்றோர் அறிவிப்பில்: “ஒரு
மூலையில் ஒரு செங்கல்லுடைய இடம் காலியாக இருக்கிறதே என்று மக்கள்
கூறுவதைப் போலிருக்கிறது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியதாகச் சொல்லிவிட்டு, அதன் முடிவில், “நான் தான் அந்தச்
செங்கல், நான் தான் இறுதிநபி” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியதாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.


“அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக்குக்குப் புறப்பட்டார்கள்.
அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ ) அவர்களை பிரதிநிதியாக நியமித்தார்கள்.
‘பையன்களிடமும், பெண்களிடமும் என்னைப் பிரதிநிதி யாக்குகிறீர்களா?’ என்று
அலீ (கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ) அவர்கள் வினவினார்கள். அதற்கு, “மூஸாவுக்கு
ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடத்தில் நீர் இருக்க விரும்பமாட்டீரா?
என்றாலும், எனக்குப் பின்னர் (வேறு ) நபியே இல்லை” என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு
அபீவக்காஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.


இந்த
ஹதீஸ்கள் மூலமாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே இறுதி
நபியாக அனுப்பப் பட்டிருக்கிறார்கள் என்னும் உண்மையை அறியலாம். மேலும்,
ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் இவ்வுலகில் வரக்கூடியவராக
இருக்கிறார்கள். அவ்விதம் அன்னார் மீண்டும் இவ்வுலகில் வரும்போது ஒரு
நபியாக வரமாட்டார்கள். ஒரு சாமான்யராகவே வருவார்கள். எனவே, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே நபிமார்களின் முத்திரையாக – நபிமார்களில்
இறுதிநபியாக இருக்கிறார்கள். அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா இந்த சிறப்பையும்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே வழங்கியிருக்கிறான்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar

7.உயிர்களைவிட மேலானவர்

அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா திருக்குர்ஆனிலே, “இந்த நபிதான் முஃமின்களுக்கு அவர்களுடைய
உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்” என்று, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்பிக்கும் வகையில் கூறியுள்ளான்.
திருக்குர்ஆனில் இந்த வசனம், ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் – 6 ல் உள்ளது.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை
விட மேலானவர்களாக இருப்பதற்கான காரணத்தை மேற்படி வசனத்தின் விரிவுரையில்
இவ்விதம் எழுதப்பட்டுள்ளது:


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களுக்கு வழிகாட்டியாக
இருக்கிறார்கள். இதன்மூலம் முஃமின்களுக்கு இலாபத்தையும், நன்மைகளையும்
கொடுப்பதில் அவர்களுடைய ஆத்மாவை விட மிக உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
காரணம், மனிதனுடைய ஆத்மா சில நேரங்களில் இலாபத்தையும், சில நேரங்களில்
நஷ்டத்தையும் கொடுப்பதாகவே உள்ளது. அதாவது, மனிதனின் ஆத்மா நன்மையின்
பக்கம் இருந்து, நன்மையான காரியங்களைச் செய்தால், அது மனிதனுக்கு இலாபமாக
அமைகிறது! மனிதனின் ஆத்மா தீமையின் பக்கம் அமைந்து, தீய காரியங்களைச்
செய்யுமேயானால், அது மனிதனுக்கு கேடாக அமைகிறது. இதற்கு மாறாக, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும், போதனைகளும்
மனிதனுக்கு இலாபத்திற்கு மேல் இலாபத்தை மட்டும் கொடுக்கக்கூடியதாகவும்,
நன்மைகளுக்கு மேல் நன்மைகளை மட்டும் கொடுப்பதாகவுமே உள்ளன. மேலும்,
மனிதனுடைய ஆத்மா நன்மையின் பக்கமாக இருந்து, நன்மையான காரியங்களை செய்து,
இலாபத்தையும், நன்மைகளையும் அடைவதாக இருந்தாலும் அது, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலாலும், போதனைகளாலும்
கிடைக்கக்கூடிய இலாபத்திற்கும் நன்மைகளுக்கும் ஈடாகாது! ஏனெனில்,
மனிதனுடைய ஆத்மா நன்மையான, தீமையான காரியங்களின்பால் தவறான
நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொள்ளக்கூடும்! அவற்றை
செயல்படுத்தவும்கூடும்! காரணம், மனிதனுக்கு நன்மை, தீமை பற்றி முழுமையான
அறிவு இல்லை. இதற்குமாறாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
வழிகாட்டுதல்களில், போதனைகளில் இலாபமும் நன்மையும் தவிர வேறு கெடுதி
எதுவுமே இல்லை! இதனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
முஃமின்களுக்கு இலாபத்தையும், நன்மையையும் கொடுப்பதில் அவ்களுடைய
ஆத்மாக்களைவிட உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆகையினால், அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முஃமின்கள் யாவரும் தங்களுடைய
உயிர்களைவிட மேலானவர்களாக கொள்வது கடமையாகிறது.


அந்த
கடமையை, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை முழுமையாக பின்பற்றி
வாழ்வதன் மூலம் நிறைவேற்ற வேண்டும். அன்னாருக்கு கீழ்படிவதன் மூலம்
நிறைவேற்ற வேண்டும். அன்னாரை கண்ணியப் படுத்துவதன் மூலம் நிறைவேற்ற
வேண்டும். ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 7, பக்கம் – 85. )


(
நபியே ) நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப்
பின்பற்றுங்கள் ; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களை
உங்களுக்கு மன்னிப்பான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மிகக்
கிருபையுடையவனுமாக இருக்கிறான். ( ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் – 31. )


முஃமின்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் ;
(ஸூரத்துல் அன்பால், வசனம் – 20.) இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள் ;
(அவன்) தூதருக்கும் வழிபடுங்கள் ; (ஸூரத்துல் மாயிதா, வசனம் – 92. )


ஆகவே
எவர்கள் அவர்மீது ஈமான் கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு
உதவிசெய்து, அவருடன் இறக்கி வைக்கப்பட்ட அந்த( வேத ) ஒளியை
பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (ஹூரத்துல் அஃராஃப்,
வசனம் – 157.) இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப்
பின்பற்றுவது பற்றியும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
கீழ்ப்படிவது பற்றியும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
கண்ணிப்படுத்துவது பற்றியும் பல்வேறு வசனங்கள் திருக்குர்ஆனில்
இடம்பெற்றுள்ளன. எனவே. அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
முழுமையாக பின்பற்றுவதும், அன்னாருக்கு முழுமையாக கீழ்ப்படிவதும், அன்னாரை
யாவரையும்விட உயர்வாகக் கொண்டு கண்ணியப் படுத்துவதும் முஸ்லிம்கள் அனைவர்
மீதும் கடமையாகும்.



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முஃமின்களுக்கு
அவர்களுடைய உயிர்களைவிட மேலானவர்களாக இருக்கின்றார்கள்’, என்பதை
கீழ்காணும் ஹதீஸ் மூலமாகவும் அறியலாம்.


அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நாங்கள் இருந்து
கொண்டிருந்தோம். அப்பொழுது அவர்கள் உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களுடைய
கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, “இறைத்தூதர் அவர்களே!
எல்லாவற்றையும்விட தாங்கள் எனக்கு அதிகப் பிரியமானவர்கள். ஆனால், என்
உயிரைத் தவிர” என்று உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு “இல்லை, எவன் கரத்தில் என் ஆன்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக(க்
கூறுகிறேன்). உம்முடைய உயிரைவிட உமக்கு நான் அதிக பிரியமாக ஆகும்வரை”
என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே,
“நிச்சயமாக இப்பொழுது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக(க் கூறுகிறேன்). என்
உயிரைவிட தாங்கள் எனக்கு அதிகப் பிரியமானவர்களாக இருக்கிறீர்கள்” என்று
உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், “உமரே! இப்பொழுதுதான் (நீர்
பரிபூரணமான விசுவாசத்தை அடைந்தீர்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.


மேலும்,
ஒரு முஸ்லிமானவர் தம் தந்தையைவிடவும், தனயனைவிடவும், உலக மக்கள்
யாவரைவிடவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையே அதிகப்
பிரியமானவர்களாகக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அவர் முழுமையான ஈமான் (
விசுவாசம் ) கொண்டவராவார். இதுகுறித்தும் ஹதீஸ்கள் உள்ளன.


“யார்
கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவர் மீது ஆணையாகக் கூறுகிறேன். உங்களுடைய
ததந்தையையும், தனயனையும் விட அதிகப் பிரியமானவராக நான் உங்களுக்கு ஆகாதவரை
உங்களில் எவரும் ( முழுமையான ) விசுவாசங் கொண்டவராக ஆகமாட்டார்” என்று
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.


“ஒருவருக்குத்
தம் குடும்பத்தார், தமது செல்வம், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான்
பிரியமானவனாக ஆகாதவரை எந்த அடியாரும், அல்லது எந்த மனிதரும்
இறைநம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்: முஸ்லிம்.


ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே
இவ்வுலகிலும், மறுவுலகிலும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். “ஒவ்வொரு
முஸ்லிமுக்கும் மற்றவர்களைவிட நானே இவ்வுலகிலும் மறுவுலகிலும் மிகவும்
முக்கியமானவன். இதற்கு ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,
‘இந்த நபிதான் முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக
இருக்கின்றார்….’ என்ற அத்தியாயம் 33 ல், 6 வது வசனத்தை ஓதுங்கள். எனினும்
எந்த முஸ்லிமாவது பொருள்களை விட்டு இறந்தால், அவர்களின் வாரிசுகளே அவற்றை
அடையட்டும். ஆனால் எந்த முஸ்லிமாவது கடனையோ அல்லது மனைவி மக்களையோ விட்டு
இறப்பின் அவர்கள் என்னிடமே வரவேண்டியது. ஏனெனில் அவர்களுக்கு நானே மிகவும்
முக்கியமானவன்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம்.


இப்படியாக
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை, முஃமின்களுடைய
உயிர்களைவிடவும் மேலானவர்களாக ஆக்கி, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா
சிறப்பித்திருக்கிறான்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி End_bar

8.நபிமார்களுக்கு இமாம்

அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா ஹளரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம் அவர்களை மக்களுக்கு இமாமாக
(தலைவராக) ஆக்கி சிறப்பித்திருக்கிறான். இதுகுறித்து திருக்குர்ஆனில்,
‘இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான் ; அவற்றை அவர்
முழுமையாக நிறைவேற்றினார் ; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக
ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான் ; (ஸூரத்துல் பகரா, வசனம் – 124.) எனக்
கூறப்பட்டுள்ளது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
நபிமார்களுக்கு இமாமாக – இமாமுல் அன்பியாவாக இருக்கிறார்கள்.


புனித
மிஃராஜ் இரவில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து)
பைத்துல் முகத்தஸிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான்.
இதுகுறித்த விவரம் திருக்குர்ஆனில், ஸூரத்து பனீ இஸ்ராயீல், வசனம் – 1 ல்
இவ்விதம் கூறப்பட்டுள்ளது. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன்
அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ் விலிருந்து
தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில்
அழைத்துச் சென்றான் ; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம்
அபிவிருத்தி செய்திருக்கின்றோம் ; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக்
காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) ; நிச்சயமாக அவன்
(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் ; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
இவ்விதமாக, புனித மிஃராஜ் இரவில், மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு வந்த அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை
நிறைவேற்றி வைத்தார்கள். இதுகுறித்த விவரங்கள் புனித மிஃராஜ் பற்றிய
அறிவிப்புகளிலும், விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளன.


சில
அறிவிப்புகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பைத்துல்
முகத்தஸிலிருந்து விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் முன், அங்கு
குழுமியிருந்த நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி
வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புகளில் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி ஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக்கொண்டு
மீண்டும் பைத்துல் முகத்தஸ் திரும்பிய பிறகு நபிமார்களுக்கு இமாமாக இருந்து
தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.


“நான்
(கஃபாவில்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன்” எனத் தொடங்கும்
278 ஆவது ஹதீஸின் இறுதிப் பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: “(பைத்துல்
முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள்
(யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட
உடல் உள்ள மனிதராக இருந்தார்கள். அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்
மனிதர்களிலேயே ( என் தோழர் ) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக
நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)
அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக
நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான் ) தான். அப்பொழுது (ஒரு)
தொழுகையின் நேரம் வந்துவிடவே, இறைத்தூதர்களுக்கு நான் தலைமைத் தாங்கித்
தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ
இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்!” என்று
கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக்கொண்டு எனக்கு
ஸலாம் சொல்லிவிட்டார்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்: முஸ்லிம்.


இந்த
ஹதீஸில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு
இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றிவைத்த விவரம் கூறப்பட்டுள்ளது. மேலும்,
இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸூரத்து பனீ இஸ்ராயீல்,
வசனம் – 1 க்கான விரிவுரைக்குப் பிறகு இவ்விதம் கூறியுள்ளார்கள்: ‘அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக்
கொண்டு மீண்டும் பைத்துல் முகத்தஸில் வந்து இறங்கினார்கள். அன்னாரை
வழியனுப்பி வைக்கும் முகமாக, வானங்களில் சந்தித்த நபிமார்களும் அன்னாருடன்
பைத்துல் முகத்தஸ் வந்தார்கள். அச்சமயம் ஒரு தொழுகைக்கான நேரம்
வந்துவிட்டது. நபிமார்கள் அனைவரும் தொழுகைக்கு வரிசையாக நிற்க, ஹளரத்
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சைகை மூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றும்படி கூறினார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இமாமாக இருந்து தொழுகையை
நிறைவேற்றிவைத்தனர். இந்த நிகழ்வின் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு மற்ற அனைவர் மீதும் இருந்த மேம்பாடு
வெளிப்படுத்தப்பட்டது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் – 5, பக்கம் – 440. )


[url=http://azeezahmed.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/]மற்றொரு அறிவிப்பில் ஹளரத் அபூஸயீது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:08 pm

8.நபிமார்களுக்கு இமாம்


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா ஹளரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸாம் அவர்களை
மக்களுக்கு இமாமாக
(தலைவராக) ஆக்கி சிறப்பித்திருக்கிறான். இதுகுறித்து திருக்குர்ஆனில்,
'இப்ராஹீமை அவருடைய
இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்
; அவற்றை அவர் முழுமையாக
நிறைவேற்றினார்
; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகிறேன்"
என்று அவன்
கூறினான்
; (ஸூரத்துல் பகரா, வசனம் - 124.) எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள்
நபிமார்களுக்கு இமாமாக - இமாமுல் அன்பியாவாக
இருக்கிறார்கள்.



புனித மிஃராஜ் இரவில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து
(கஃபத்துல்லாஹ்விலிருந்து)
பைத்துல் முகத்தஸிலுள்ள மஸ்ஜிதுல்
அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான்.
இதுகுறித்த விவரம் திருக்குர்ஆனில்,
ஸூரத்து பனீ
இஸ்ராயீல்
, வசனம் - 1 ல் இவ்விதம் கூறப்பட்டுள்ளது. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ் விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான் ; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம் ; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக
(அவ்வாறு அழைத்துச் சென்றோம்)
; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் ; பார்ப்போனாகவும் இருக்கின்றான். இவ்விதமாக, புனித மிஃராஜ் இரவில், மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள். இதுகுறித்த விவரங்கள் புனித மிஃராஜ் பற்றிய அறிவிப்புகளிலும், விரிவுரைகளிலும் கூறப்பட்டுள்ளன.



சில அறிவிப்புகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் பைத்துல்
முகத்தஸிலிருந்து விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும் முன்,
அங்கு குழுமியிருந்த நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புகளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி ஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பைத்துல் முகத்தஸ் திரும்பிய பிறகு நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.



"நான் (கஃபாவில்) ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன்" எனத் தொடங்கும்
278 ஆவது ஹதீஸின்
இறுதிப் பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:
"(பைத்துல் முகத்தஸில்) இறைத்
தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்.
அங்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ
குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட
உடல் உள்ள மனிதராக
இருந்தார்கள்.
அங்கு மர்யமின் மைந்தர் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அவர்கள்
மனிதர்களிலேயே ( என் தோழர் ) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ
அவர்களுக்கு மிக
நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம்
(அலைஹிஸ் ஸலாம்)
அவர்களும் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். மக்களில்
அவர்களுக்கு மிக
நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான் ) தான்.
அப்பொழுது (ஒரு)
தொழுகையின் நேரம் வந்துவிடவே, இறைத்தூதர்களுக்கு நான் தலைமைத் தாங்கித் தொழுகை நடத்தினேன். தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர்,
"முஹம்மதே! இதோ இவர்தாம் நரகத்தின் காவலர் மாலிக். அவருக்கு ஸலாம் சொல்லுங்கள்!"
என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பியபோது அவர் முந்திக்கொண்டு எனக்கு ஸலாம் சொல்லிவிட்டார்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
முஸ்லிம்.



இந்த ஹதீஸில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
நபிமார்களுக்கு
இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றிவைத்த விவரம்
கூறப்பட்டுள்ளது. மேலும்
, இமாம் இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸூரத்து பனீ
இஸ்ராயீல்
, வசனம் - 1 க்கான விரிவுரைக்குப் பிறகு இவ்விதம் கூறியுள்ளார்கள்: 'அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ் பயணத்தை முடித்துக்
கொண்டு மீண்டும்
பைத்துல் முகத்தஸில் வந்து இறங்கினார்கள்.
அன்னாரை வழியனுப்பி
வைக்கும் முகமாக
, வானங்களில் சந்தித்த நபிமார்களும் அன்னாருடன் பைத்துல் முகத்தஸ்
வந்தார்கள். அச்சமயம் ஒரு தொழுகைக்கான நேரம்
வந்துவிட்டது.
நபிமார்கள்
அனைவரும் தொழுகைக்கு வரிசையாக நிற்க
, ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சைகை
மூலமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை இமாமாக இருந்து தொழுகையை
நிறைவேற்றும்படி கூறினார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இமாமாக
இருந்து தொழுகையை
நிறைவேற்றிவைத்தனர். இந்த நிகழ்வின் மூலம் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு மற்ற அனைவர் மீதும் இருந்த மேம்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ( மஆரிபுல் குர்ஆன், பாகம் - 5, பக்கம் - 440. )



மற்றொரு அறிவிப்பில் ஹளரத் அபூஸயீது ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கீழ்கண்டபடி
கூறியுள்ளார்கள்:



அண்ணல் நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை ஹளரத் ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் புனித கஃபாவிலிருந்து அக்ஸா பள்ளிவாசலுக்கு அழைத்து
வந்தார்கள்.
அங்கு இருவரும் இரண்டு ரக்அத்து தொழுதார்கள். அச்சமயம் அங்கு நபிமார்கள் பலரும் தனித்தனியாக தொழுதுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ருகூஉவிலும், சிலர் ஸூஜூதுவிலுமாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் தொழுது முடித்த பிறகு ஒருவர் பாங்கு கூறினார். நபிமார்கள் அனைவரும் தொழுகைக்கு அணிவகுத்து நின்று, தொழுகையை முன்னின்று நிறைவேற்றி வைக்கும் இமாமை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஹளரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தைப் பிடித்து, அன்னாரை இமாமாக முன்னிருத்தினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்தார்கள். ( பைஹக்கீ ).



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இமாமாக இருந்த இந்த
தொழுகையில்
ஹளரத் மூஸா, ஹளரத் இப்ராஹீம், ஹளரத் ஈஸா அலைஹிமுஸ்ஸலாம் ஆகியவர்களும் முக்ததீகளாக இருந்தனர்! இப்படி நபிமார்களுக்கு இமாமாக இருந்து தொழுகையை நிறைவேற்றி வைத்த பெருமையும், சிறப்பும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'இமாமுல் அன்பியா' என போற்றப்படுகிறார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Clip_image001


9.ஸலவாத்து


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, தன்னுடைய ஹபீபான அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து என்னும் புகழ்மொழியைக் கூறும்படியாக முஃமின்களுக்கு கட்டளையிட்டு சிறப்பித் திருக்கிறான். இதுகுறித்து திருக்குர்ஆனில் கட்டளையும் பிறப்பித்திருக்கிறான்.


நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது 'ஸலவாத்து'
( புகழ்மொழி ) கூறுகிறார்கள். எனவே, முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துக் கூறி, அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.
( ஸூரத்துல் அஹ்ஜாப்,
வசனம் - 56.
)



அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, திருக்குர்ஆனின் மூலமாக பல்வேறு கட்டளைகளை முஸ்லிம் பெருமக்களுக்கு பிறப்பித்திருக்கிறான். தொழுகையைக் கடைபிடிக்கும்படி, ஜகாத்தை கொடுத்து
வரும்படி
, நோன்பு நோற்கும்படி, ஹஜ்ஜை பூர்த்தி செய்யும்படி, இப்படி பல்வேறு கடமைகளைப் பற்றி கட்டளைகளை
பிறப்பித்
திருக்கிறான். 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும்
(ஒழுங்காகக்)
கொடுத்து வாருங்கள் ;' என்று தொழுகையைப் பற்றியும், ஜகாத்தைப்
பற்றியும்
கட்டளையிட்டிருக்கிறான். 'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப் பட்டுள்ளது ;' என்று நோன்பு பற்றி கட்டளையிட்டிருக்கிறான். 'ஹஜ்ஜையும்,
உம்ராவையும்
அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்
' என்று ஹஜ்ஜைப் பற்றி கட்டளையிட்டிருக்கிறான்.



இந்த கடமைகளை எல்லாம் நிறைவேற்றும்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா
நேரிடையாகவே
கட்டளை யிட்டிருக்கிறான். ஆனால், ஸலவாத்து கூறும்படி கட்டளையிடும்போது,
'நபி மீது ஸலவாத்து
கூறுங்கள்
' என்று நேரிடையாக கூறாமல், 'அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்து கூறுகிறார்கள்'
என்று முதன்மைப் படுத்திக் கூறிவிட்டு, பிறகே 'முஃமின்களே! நீங்களும் நபியின் மீது ஸலவாத்தையும்,
ஸலாமையும்
கூறுங்கள்
' என கட்டளையிட்டிருக்கிறான். இதன் மூலம் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தன்
ஹபீபுடைய சிறப்பையும்
, ஸலவாத்துடைய சிறப்பையும் வெளிப்படுத்தியுள்ளான்.



மேற்படி வசனத்தின் சிறப்பு பற்றியும், ஸலவாத்தின் சிறப்பு பற்றியும்
திருக்குர்ஆன்
விரிவுரையில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது:
"இந்த வசனத்தின்
அசல் நோக்கம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில்
ஸலவாத்தும் ஸலாமும்
ஓதும்படி முஃமின்களுக்கு உத்தரவிடுவதேயாகும். ஆனால், இதன் சிறப்பை
மேலும்
விளக்கும் வகையில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவும், வானவர்களும்
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறுவதாக
முதன்மைப்
படுத்திக் கூறிய பிறகு, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
பேரில்
ஸலவாத்தும் ஸலாமும் கூறும்படியாக முஃமின்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவும் வானவர்களும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறுவதாக
கூறப்பட்டிருப்பது
, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உயர்ந்த ஸ்தானத்தையும்,
கீர்த்தியையும்
வெளிப்படுத்துகிறது.
மேலும், ஸலவாத்து ஓதும் முஃமினுக்கும் ஓர் உயர்ந்த
ஸ்தானத்தை வழங்குகிறது.
அதாவது, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா புரிகின்ற ஒரு
செயலை
, வானவர்கள் புரிகின்ற ஒரு செயலை அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகின்ற
பாக்கியத்தை முஃமின்களுக்கு வழங்குகின்றது!
எனவே, இந்த பாக்கியத்தை
போற்றும் விதமாகவும்
, நன்றி செலுத்தும் விதமாகவும் முஃமின்கள் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் அதிகம் அதிகமாக
ஸலவாத்தையும்,
ஸலாமையும்
கூறிடவேண்டும்.
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே இஸ்லாமிய
மார்க்கம் முஃமின்களுக்கு
கிடைத்துள்ளது. இந்த
உபகாரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவும்
முஃமின்கள் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் அதிகம்
அதிகமாக
ஸலவாத்தையும் ஸலாமையும் கூறிடவேண்டும்".



ஸலவாத்து என்னும் அரபி சொல்லுக்கு ரஹ்மத்து (கிருபை), துஆ (பிரார்த்தனை),
தோத்திரம் போன்ற பொருள்கள் கூறப்பட்டுள்ளன. மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவின் புறத்திலிருந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து கூறப்பட்டிருப்பது, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் கிருபை செய்வது என்பதாகவும், வானவர்கள் புறத்திலிருந்து ஸலவாத்து சொல்வது என்பதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பிரார்த்தனை செய்வது என்பதாகவும், முஃமின்கள் புறத்திலிருந்து ஸலவாத்து சொல்வது என்பதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் தோத்திரம் என்னும் புகழ்மொழி கூறுவது என்பதாகவும் விரிவுரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர். (மஆரிபுல் குர்ஆன், பாகம் - 7, பக்கம் - 221.)



சரி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதுவது எப்படி? இதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.


'"இறைத்தூதர் அவர்களே, தங்களுக்கு ஸலாம் சொல்வதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
ஸலவாத்து எப்படி(ச் சொல்வது?)" என்று வினவப்பட்டது. "அல்லாஹூம்ம ஸல்லி அலாமுஹம்மதின்(வ்)
வஅலாஆலி முஹம்மதின் கமாஸல்லைத அலாஇப்ராஹீம வஅலாஆலி
இப்ராஹீம இன்னக ஹமீதும்
மஜீத்.
அல்லாஹூம்ம பாரிக் அலாமுஹம்மதின்(வ்) வஅலாஆலி
முஹம்மதின் கமாபாரக்த அலாஇப்ராஹீம வஅலாஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும்
மஜீத் (நாயனே! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்மீதும், இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய குடும்பத்தார்
மீதும் நீ அருள் செய்தது போல்
, முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும்,
முஹம்மத்
(ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ
அருள்புரிவாயாக.
நிச்சயமாக நீ புகழ் பெறுவதற்கு உரியவனும் மாண்பு மிக்கவனும் ஆவாய்.
நாயனே!
இப்ராஹீம்
(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீதும்
, இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ பரக்கத்
(விருத்தி)
செய்தது போல் முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள்
மீதும்
, முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடைய குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்வாயாக. நிச்சயமாக நீ புகழ் பெறுவதற்கு உரியவனும் மாண்பு மிக்கவனும் ஆவாய்.) என்று கூறுங்கள்" என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் இப்னு உஜ்ரத்த
ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ அவர்கள்.
நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ.



தறூதே இப்ராஹீம் என்னும் இந்த ஸலவாத்தைப் போலவே அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் பேரில் ஓதும் ஸலவாத்துக்கள் இன்னும்
மிகுதியாக உள்ளன.
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில்
ஸலவாத்து ஓதவேண்டியதன்
அவசியம் குறித்தும், ஸலவாத்து ஓதுவதால்
கிடைக்கும் இம்மை மறுமை பேறுகள்
பற்றியும் பல்வேறு ஹதீஸ்களில்
கூறப்பட்டுள்ளன.



"மறுமையில் எனக்கு மிகவும் அருகில் இருப்போர் எவரெனில், என் மீது எவர்
அதிகமாக
ஸலவாத்து கூறுகிறாரோ அவர்தாம்" என்று அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு
மஸ்ஊத் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்: திர்மிதீ.



"எவர் என் மீது ஒரு முறை ஸலவாத்துக் கூறுகிறாரோ, அவரை அல்லாஹ்
பத்து முறை
வாழ்த்தி விட்டு, அவரை விட்டும் பத்து பாவங்களை அழித்து, அவருக்குப் பத்து பதவிகளையும் உயர்த்துகிறான்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள்.
நூல்: நஸாயீ.



ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
(வெளியில்) வந்தார்கள்.
அப்பொழுது அவர்களின் திருமுகம்
மலர்ந்திருந்தது. அப்பொழுது நாங்கள் அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி
, " (இறைத்தூதரே!) நிச்சயமாக,
நாங்கள் தங்களின்
முகத்தில் சந்தோஷத்தின் அறிகுறியைப்
பார்க்கின்றோம். (அதற்கான காரணம்
என்ன
?)" என்று கேட்டோம். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,
"நிச்சயமாக
இப்பொழுது ஒரு வானவர்
என்னிடம் வந்து, 'முஹ்மதே! எவர் உங்கள் மீது ஒரு முறை
ஸலவாத்துக்
கூறுகிறாரோ, அவர் மீது தாம் பத்து முறை வாழ்த்துவதாகவும், தவிர, எவர் தங்கள் மீதுஒரு முறை ஸலாம் கூறுகிறாரோ அவர் மீது தாம் பத்து முறை ஸலாம்
(சாந்தி)
கூறுவதாகவும் நிச்சயமாக தங்களின் இறைவன் கூறுவது தங்களை
மகிழ்விக்கவில்லையா?'
என்று கூறிச்
சென்றார்"
என்றார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
நஸாயீ.



ஸலவாத்து ஓதுபவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கக்கூடிய
பேறுகள் பற்றி
மஆரிபுல் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதாவது:
(1) ஸலவாத்து ஓதுபவர்
செய்த
பிழைகளுக்கு அது கஃப்பாராவாக (தவறுக்குரிய பரிகாரம்)
அமையும்.
(2) செய்யும் கிரியைகளை பரிசுத்தமாக்கும்.
(3) அந்தஸ்துகளை
உயர்த்தும்.
(4) பாவங்கள் மன்னிக்கப்படும். (5) அடிமைகளை விடுதலை
செய்வதைக் காட்டிலும்
அதிகமான புண்ணியத்தைக் கொடுத்து, அதன் காரணமாக
ஆபத்துகளை நீக்கும்.
(6) பொருளில் செழுமையும், அபிவிருத்தியும் கிடைக்கும்.
(7) வறுமையையும்,
இறுக்கமான
ஜீவனாம்சத்தையும் போக்கும்.
(8) அமல்களில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவிற்கு
மிகவும் பிடித்தமான அமலாக இருக்கும்.
(9) சபைகளுக்கு அலங்காரமாக
அமையும்.
(10) விரோதிகளை அடக்கி ஆளும் திறமையை பெறுவதற்கான வழியாக இருக்கும். (11) உள்ளங்களை கபடம் போன்றவற்றை விட்டும் சுத்தப்படுத்தும்.
(12) மக்களின்
உள்ளங்களில் பிரியத்தை ஏற்படுத்தும்.
(13) கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களின் திருத்தரிசனம்
கிடைக்கச் செய்யும். (14) மரணத்திற்கு
முன்பாகவே சுவனத்தில் தம்முடைய
இருப்பிடத்தைக் காணும் பாக்கியத்தைக்
கொடுக்கும்.
(15) அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய
ஷஃபாஅத்து (பரிந்துரை) ஸலவாத்து
ஓதுபவர் மீது வாஜிபு ஆக்கும்.
(16) அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலாவின் உவப்பும்
, கிருபையும் கிடைக்கும். (17) கியாமத்து நாளின்
கடுமையான தாகத்திலிருந்து
சாந்தியைக் கொடுக்கும்.
(18) ஸிராத்து பாலத்தை
நிதானமாகக் கடந்திட
உதவிடும். (19) ஜஹன்னம் என்னும் நரக நெருப்பை விட்டும்
விடுதலையைக்
கொடுக்கும். (20) கவ்ஸர் என்னும் தடாகத்தில் பிரவேசிக்கும்
பாக்கியத்தைக்
கொடுக்கும். (21) சுவனத்தில் மிக அதிகமான மனைவியரை அடையும்
பாக்கியம்
கிடைக்கும். (22) கியாமத்து நாளில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய பாக்கியத்தைக்
கொடுக்கும். அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து
ஓதுபவர்களுக்கு இது
போன்று பற்பல பேறுகள் இன்னும் இன்னும் கிடைக்கும்.



மேலும், கஅபாவின் திசையை முன்னோக்கி, அல்லாஹ்விற்காக தொழும் தொழுகையிலும் கூட அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஓதப்படுகிறது. தொழுகையின் காஃதா இருப்பில் ஸலவாத்து ஓதுவது ஸூன்னத்து முஅக்கதா என மார்க்க அறிஞர்கள் பலரும் ஏகோபித்து கூறியுள்ளனர். ஆயினும்,
இமாம் ஷாபிஈ,
மற்றும் இமாம்
அஹ்மதுப்னு ஹன்பல் ஆகியோர் தொழுகையின்
இருப்பில் ஸலவாத்து ஓதுவது வாஜிபு
என்பதாகக் கூறியுள்ளனர். எனவே
தொழுகையிலும் ஸலவாத்து சிறப்புடன்
ஓதப்படுகிறது.



ஸலவாத்தை அதிகம் அதிகமாக ஓதும்படியாகவும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியுள்ளனர். "இரவில் இரண்டு பாகம் கழிந்த பின் அண்ணல்
நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் (தஹஜ்ஜத்) தொழ
எழுந்துவிடுவது வழக்கமாக
இருந்து வந்தது. அப்பொழுது அவர்கள்,
'மக்களே!
அல்லாஹ்வைத்
திக்ரு
(தியானம்) செய்யுங்கள். அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். (முந்திய எக்காளம் ஊதப்படின்) நில அசைவு ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து (பல) நில அசைவுகள் ஏற்படும். அதில்
எல்லோரும் இறந்துவிடுவார்கள்
' என்று கூறினார்கள். (அப்பொழுது) நான், "இறைத் தூதரே!
நிச்சயமாக
, நான் தங்கள் மீது அதிகமாக ஸலவாத்து ஓதிவருகிறேன். எனவே என்னுடைய
இறைஞ்சுதலில் எத்தனை பாகம்
தங்களுக்கென ஒதுக்கி ஓதிவரவேண்டும்?"
என்று கேட்டேன்.
அதற்கு அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "நீர் விரும்பிய
அளவு"
என்று பதிலளித்தார்கள். அப்பொழுது நான், "கால் பாகம்?"
என்றேன். அதற்கு
அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "நீர் விரும்பிய
அளவு
(ஓதிவாரும்.)
ஆயினும்
, நீர் அதிகமாக ஒதுக்கி(ஓதி வருவீரா)னால் அதனால் உமக்கு
நன்மையேயாம்"
என்று கூறினார்கள். "பாதி அளவு?" என்றேன் நான்.
(அதற்கு) அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
, "நீர் விரும்பிய அளவு.
ஆயினும், நீர் அதிகமாக
ஒதுக்கி(ஓதி வருவீரா)னால் அதனால் உமக்கு
நன்மையேயாம்"
என்றார்கள்.
"மூன்றில் ஒரு
பாகம்
?" என்றேன் நான். அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள்
, "நீர் விரும்பிய அளவு. ஆயினும், நீர் இன்னும் அதிமாக ஒதுக்கி(ஓதி
வருவீரா)னால் அதனால் உமக்கு
மேன்மையேயாம்" என்றார்கள்.
"(அவ்விதமாயின்)
என்னுடைய இறைஞ்சுதல்
அனைத்தையும் தங்களுக்கே (ஸலவாத்து) ஓதி விடுகிறேன்"
என்று கூறினேன்.
"அவ்விதமாயின்
உம்முடைய முயற்சிக்குப் போதுமான பயன் கிடைக்கும். உம்முடைய
பாவமும்
மன்னிக்கப்பட்டுவிடும்"
என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதாக எனது தந்தையார் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உபையுப்னு கஃபு
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்: திர்மிதீ.



மேலும், ஒவ்வொரு துஆவுக்கு முன்னும் பின்னும் ஸலவாத்து ஓத வேண்டும் என்றும், அவ்விதம்
துஆவுக்கு முன்னும் பின்னும் ஸலவாத்து ஓதாத போது துஆக்கள்
வவானத்திற்கும்
பூமிக்கும் இடையில் நின்றுவிடும் என்றும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். ஹஜ்ரத் இப்னு மஸ்ஊத்
(ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள்
அறிவிக்கிறார்கள்:
"நான் தொழுது கொண்டிருந்தேன். அப்பொழுது அபூபக்கர்
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும்
, உமர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களும் இருந்தனர். தொழுது முடித்தபின் நான் அல்லாஹ்வைப் புகழ்வது கொண்டு என்னுடைய துஆவை துவங்கி, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பேரில் ஸலவாத்து ஓதிய பிறகு என்னுடைய ஆன்ம நலத்திற்காக துஆ செய்தேன். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்,
"நீங்கள் கேளுங்கள்,
கொடுக்கப்
பெறுவீர்கள்.
நீங்கள் கேளுங்கள், கொடுக்கப் பெறுவீர்கள்" என்று திருவாய்
மலர்ந்து அருளினார்கள். ( நூல் :
திர்மிதீ. )



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 31, 2010 2:10 pm

சிறந்த தகவலுக்கு நன்றி நண்பரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:21 pm

10.இறை தரிசனம்


அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலாவை தமது
திருக் கண்களால் தரிசித்திருக்கிறார்கள்.
இந்த சிறப்பும் அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே
கிடைத்துள்ளது.



ஹஜ்ரத் மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவை தரிசிக்க விரும்பினார்கள். ஆனால், அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலாவின் தரிசனம் அன்னாருக்கு கிடைக்கவில்லை. ஆயினும், அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா மூஸா அலைஹிஸ்ஸாம் அவர்களுடன் பேசினான். எனவே, 'அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவுடன் பேசியவர்' என்னும் சிறப்பு
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து
திருக்குர்ஆனில்,
அத்தியாயம் - 7,
ஸூரத்துல் அஃராஃப்,
வசனம் - 143,
144 ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:



(143) நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான் ; அப்போது மூஸா: "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும் ;
எனக்கு உன்னைக்
காண்பிப்பாயாக!" என்று வேண்டினார்.
அதற்கு அவன், "மூஸாவே! நீர்
என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது
, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக்
கொண்டிரும். அது தன் இடத்தில்
நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!"
என்று கூறினான்.
ஆகவே அவருடைய
இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது
, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி
விட்டான்
; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர்
தெளிவடைந்ததும்
, "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன் ;
நான் உன்னிடம்
மன்னிப்பு கோருகிறேன்.
ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மை யானவனாக
இருக்கிறேன்"
என்று கூறினார்.



(144) அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும்
(உம்முடன் நேரில்)
நான் பேசியதைக் கொண்டும்
, (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவர்களாக இக்காலை) தேர்ந்து
எடுத்துள்ளோம் - ஆகவே நான் உமக்குக்
கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக்
கொள்ளும்
; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
என்று கூறினான்.



இவ்விதமாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தனது உரையாடலை மூஸா அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கு
அளித்து சிறப்பித் திருக்கிறான். தன்னுடைய தரிசனத்தையோ
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அளித்து சிறப்பித்
திருக்கிறான். இது
குறித்த விவரம் ஹதீஸ்களில் உள்ளது.



"அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை
தரிசித்திருக்கிறார்கள்
என்று நான் கூறினேன். அதற்கு இக்ரமா
அவர்கள்
, 'எவருடைய பார்வையும் அவனை அடையாது......' என்று 6
;103 ஆவது வசனத்தில்
இறைவன் கூறவில்லையா
? என்று கேட்டார்கள். அதற்கு நான்,
"உம்முடைய கை
சேதமே! இது இறைவன் தன்னுடைய
பேரொளியுடன் தோற்றம் வழங்கும் போதுதான்.
நிச்சயமாக அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை
தரிசித்திருக்கிறார்கள்"
என்று கூறினேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள். நூல்: திர்மிதீ.



திர்மிதீயில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஹதீஸில், "நிச்சயமாக,
அல்லாஹ் தன்னுடைய தரிசனத்தையும் தன்னுடைய உரையாடலையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டான். அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை இரண்டு முறை
தரிசித்தார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டுமுறை இறைவனுடன்
உரையாடினார்கள்"
என்று கூறப் பட்டுள்ளது.



"(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை"
(53;11), "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்"
(53;13) ஆகிய வசனங்கள்
குறித்து
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் கூறும்பொழுது,
"அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்" எனக் கூறியுள்ளார்கள்.



"இறைவன் மீது ஆணையாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
தமது இறைவனைக்
கண்ணாரக் கண்டனர்" என்று ஹஸன் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
அவர்கள்
சத்தியமிட்டுக் கூறியிருக்கிறார்கள். (அப்துர் ரஸ்ஸாக்கு)
இந்தக் கருத்தை
ஜூபைர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களின் புதல்வர் உர்வா
(ரலியல்லாஹூதஆலா
அன்ஹூ) அவர்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறார்கள். இப்னு
அப்பாஸ்
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்களின் மாணவர்கள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர். கஃபுல் அஹ்பார், ஷஹ்ரீ, மஃமர் ஆகியவர்களும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினர்.
"இறைவன் தனது
நேசத்தை ஹஜ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுக்கும்,
உரையாடலை ஹஜ்ரத்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும்
, தரிசனத்தை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களுக்கும்
அளித்திருக்கிறான் என்பது பற்றி நீங்கள் ஆச்சரியப்
படுகிறீர்களா
?" என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ)
அவர்கள் வினவினார்கள். இதை நஸயீ
ஆதாரத்தோடு அறிவித்திருக்கிறார்கள்.
ஹாக்கிம் அதை
உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விவரங்களை
மவ்லானா
, அல்ஹாஜ் பி.எஸ்.கே.முஹம்மது இப்ராஹீம் அவர்கள் "மிஃராஜ்
விளக்கம்"
என்னும் நூலில் குறிப்பிட் டிருக்கிறார்கள்.



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனை நேரில்
தரிசித்தார்கள்
என்று அபூதர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) , கஅபுல் அஹ்பார்
(ரலியல்லாஹூ தஆலா
அன்ஹூ) , உர்வா பின் அஸ்ஸூபைர், ஹஸனுல் பஸ்ரி, அஸ்ஸூஹ்ரீ, அபுல் ஹஸன் அல்அஷ்அரீ
(ரஹ்மதுல்லாஹி அலைஹிம்) ஆகியோரும் கூறியுள்ளனர். (ஸஹீஹ்
முஸ்லிம், பாகம் - 1,
பக்கம் - 216.
)



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தன்னுடைய
தரிசனத்தை வழங்கி
சிறப்பித்த அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, மறுமை நாளில் அன்னாரின் உம்மத்துகளுக்கும் தன்னுடைய தரிசனத்தை வழங்குவான்! இது குறித்து அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் கூறியதாவது:



மக்களில் சிலர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்
"அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச்
சிரமம்
உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை,
அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை,
அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம்
அவர்கள், "இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள்
காண்பீர்கள்"
என்று கூறினார்கள். ( புகாரீ,
முஸ்லிம் ).



இவ்விதமாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா தன்னுடைய ஹபீபான அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு தன்னுடைய தரிசனத்தை வழங்கி
சிறப்பித்திருக்கிறான்.

முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Clip_image001

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:30 pm

11.புனித மிஃராஜ் பயணம்


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே என்று சில விசேஷமான பாக்கியங்களை அளித்திருக்கிறான். இந்த விசேஷமான பாக்கியங்கள் வேறு எந்த நபிமாருக்கும் வழங்கப்படவில்லை! அத்தகைய விசேஷமான பாக்கியங்களில் ஒன்றுதான் புனித மிஃராஜ் பயணமாகும். இப்புனித பயணம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெற்று, 11- ம் ஆண்டு - ஹிஜ்ரத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் (கி.பி. 621) ரஜப் மாதம் 27- ம் தேதி திங்கட்கிழமை இரவு
நிகழ்ந்தது.
அச்சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
வயது
51 ஆண்டு, 8 மாதம், 20 நாட்களாக இருந்தது.



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்புனித பயணத்தை
விழிப்பு
நிலையில், பூத உடலுடன் மேற்கொண்டார்கள். இப் புனித பயணம்
'இஸ்ராவு',
'மிஃராஜ்'
ஆகிய
வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது.
'இஸ்ராவு' என்னும் வார்த்தைக்கு 'இரவில் செல்லல்'
என்பது
பொருளாகும்.
'மிஃராஜ்' என்னும் வார்த்தைக்கு 'ஏறுதல்' என்பது பொருளாகும். இப்புனித பயணம் ஒரு இரவிலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக இப்புனித பயணத்தை 'இஸ்ராவு' என்னும் வார்த்தையால்
குறிப்பிடப்படுகிறது.
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பைத்துல் முகத்தஸிலிருந்து விண் ஏறி தமது பயணத்தைத்
தொடர்ந்தார்கள்.
எனவே
, இப்புனித பயணத்தை 'மிஃராஜ்'
என்ற
வார்த்தையாலும்
குறிப்பிடப்படுகிறது. இப்புனித பயணம் பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், இப்புனித பயணம் பற்றிய முழுமையான விவரங்கள் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகிறது. இப்புனித பயணத்தின் தொடக்கமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெருசலேமிலுள்ள மஸ்ஜிது அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து திருக்குர்ஆனில் கீழ்கண்டபடி கூறப்பட்டுள்ளது:



(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து
(கஃபத்துல்லாஹ்
விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள )
மஸ்ஜிதுல்
அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்
; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்)
சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்
; நம்முடைய அத்தாட்சிகளை
அவருக்குக் காண்பிப் பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்)
; நிச்சயமாக அவன்
(யாவற்றையும் ) செவியுறுவோனாகவும்
; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(ஸூரத்து பனீ இஸ்ராயீல்
, வசனம் - 1.)



அதனைத் தொடர்ந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
மஸ்ஜிது
அக்ஸாவிலிருந்து வானுலக பயணத்தை மேற்கொண்டார்கள்.
அது குறித்த சில விவரங்கள் அத்தியாயம்-53, ஸூரத்துந் நஜ்மில் கூறப் பட்டுள்ளன. ஆயினும் புனித மிஃராஜ் பற்றிய விவரங்கள் யாவும் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகின்றன.



புனித மிஃராஜ் பயணம் நிகழ்ந்த இரவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம்
அவர்கள் புனித மக்கா நகரத்தில், கஃபா அருகில் உறங்கிக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சைப் பிளந்தார்கள்.
பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து அதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சத்தினுள் ஊற்றி நிரப்பினார்கள். அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருநெஞ்சை பழையபடியே மூடிவிட்டார்கள். இவ் விவரங்களை அறிவிக்கும்
ஹதீஸ்களில் சில:



ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அவர்கள்
கூறினார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு
நேரத்தில்
(விண்ணுலகப் பயணத்திற்காக) கஃபாப் பள்ளி வாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள்
(பின் வருமாறு)
கூறினார்கள்:



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (மீண்டும்) வேத
அறிவிப்பு (வஹீ)
வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள். ( நூல்: புகாரீ, முஸ்லிம் )



அபூதர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறியதாவது: "நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக்
கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை
ஊற்றி(நிரப்பி)னார். பிறகு (பழையபடியே)
நெஞ்சை மூடிவிட்டார்"
என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )



"நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி)
விழிப்பிலும் இருந்த
போது, (வானவர்) ஒருவர் (வந்து), "இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர்
(ரலியல்லாஹூ தஆலா
அன்ஹூம்) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம்
(நாம் அழைத்துச் செல்ல வேண்டும்)"
என்று கூறுவதைக்
கேட்டேன்.
பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத்
தட்டு கொண்டு
வரப்பட்டது. அதில் 'ஸம்ஸம்' நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது" என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )



"என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குச் கொண்டு சென்றார்கள்.
என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டு வந்து விடப்பட்டேன்" என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )



அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புராக்
என்னும்
வாகனத்தில் ஏறி பைத்துல் முகத்தஸ் வரை சென்றார்கள். அங்கு
இரண்டு ரக்அத்கள்
தொழுதார்கள்.



" (விண்ணுலகப் பயணத்தின் போது) என்னிடம் கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையைவிட பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் என்னும் (மின்னல் வேக)
வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத்
தனது கால் குளம்பை எடுத்து வைக்கும்.
அதிலேறி நான் பைத்துல் முகத்தஸ் இறை இல்லம் வரை சென்றேன். பிறகு இறைத் தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்து விட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டபோது (வானவர்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (என்னிடம்) ஒரு
பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டு
வந்தார்.
(அதில்
விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.)
நான் பால்
பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல்
, "இயற்கையைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டீர்"
என்று கூறினார். ( அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்
, நூல்: முஸ்லிம் )



அதன் பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்களை அழைத்துக் கொண்டு வானங்களில் பிரவேசித்தார்கள்.
வானங்களிலே ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம், யஹ்யா அலைஹிஸ்ஸலாம், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம், இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம், ஹாரூன்
அலைஹிஸ்ஸலாம்
, மூஸா அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நபிமார்களையும் கண்டார்கள்.
அதன் பிறகு
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை
'ஸித்ரத்துல்
முன்தஹா
' எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் பேரில்
ஐவேளைத் தொழுகைகளைக் கடமையாக்கினான்.
இது குறித்த ஹதீஸ் வருமாறு:



தாங்கள் இரவில் சென்றதைக் குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள்
தம்மிடம் கூறினார்கள் என்று மாலிக் இப்னு ஸஃஸஆ
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
அவர்கள் கூறிவிட்டு, "நான் ஹத்தீமில்
இருக்கும் போது - சில சமயங்களில்
ஹிஜ்ரிலிருக்கும் போது என்று கூறுவார்கள்
- என்னிடத்தில் வருபவர் வந்து
, இதிலிருந்து இதுவரையில் கிழித்து (பிளந்தார்) என்று
கூறுவதையும் நான் செவி
யுற்றிருக்கிறேன். (தொண்டைக்
குழியிலிருந்து தொப்புளுக்குக் கீழ் வரை என்று
இந்த ஹதீஸ்
அறிவிப்பாளர் கூறினார்). என்னுடைய இதயத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர், ஈமான் (மார்க்க
விசுவாசம்) நிறப்பப் பட்டுள்ள தங்கத் தட்டை
கொண்டு வந்து
என்னுடைய இதயம் கழுவப்பட்டது.
பின்னர், அதில் அது நிறப்பப்பட்டது. பின்னர், (அது இருந்த
இடத்தில்) மீண்டும் வைக்கப்பட்டது.



பின்னர், கோவேறு கழுதைக்குச் சிறியதாகவும், கழுதைக்குப் பெரியதாகவுமுள்ள ஒரு வெள்ளைப் பிராணி
என் அருகில் கொண்டு வரப்பட்டது. அதுதான் புராக்.
அது பார்வைக்கு எட்டிய
தூரத்துக்கு தன்னுடைய அடியை வைக்கிறது. நான் அதன் மீது
ஏற்றப்பட்டேன்.
என்னுடன் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்தார். அவர் என்னை
அழைத்துக் கொண்டு
முதல் வானத்திற்கு உயர்ந்து
, (அதன் கதவைத்) தட்டினார். "யார் அது?" என்று
வினவப்பட்டது.
அதற்கு அவர், "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார்.
"உங்களுடன்
(வந்திருப்பவர்) யார்
?" என்று வினவப்பட்டது. "முஹம்மத்" என்று
பதிலளித்தார்.
"அவர் அழைக்கப்பட்டாரா?" என்று வினவப்பட்டது.
(அதற்கு )
"ஆம்"
என்றார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை" என்று கூறிவிட்டு (வாயிலைத்) திறந்தார். அங்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். "இவர் உமது தந்தை ஆதம். இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்.
அவர் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டு, "நல்ல புதல்வருக்கும் நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு இரண்டாவது வானுக்கு ஏறி, அதன் கதவைத் தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. அதற்கு அவர்
, "முஹம்மத்" என்று பதிலளித்தார்.
"அவர்
அழைக்கப்பட்டிருக்கிறாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று சொல்லப்பட்டதும் (வாசல் கதவு) திறந்தது. நான் அங்கு சென்றதும் யஹ்யாவையும், ஈஸாவையும் (பார்த்தேன்). அவ்விருவரும் சின்னம்மா, பெரியம்மா மக்கள்.
"இவர்கள் யஹ்யாவும் ஈஸாவும்.
இவர்களுக்கு ஸலாம் சொல்வீராக" என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். நான் ஸலாம் கூறினேன். அவ்விருவரும் பதில் ஸலாம் கூறிவிட்டு, "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்"
என்று கூறினர்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு மூன்றாவது வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். "யார் அது?" என்று வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?" என்று வினவப்பட்டது.
"முஹம்மத்"
என்று பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார். "அவருக்கு
வாழ்த்து. நல்ல வருகை"
என்று கூறப்பட்டதும் (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான்
சென்றபோது யூஸூப் (அலைஹிஸ்ஸலாம்)
இருந்தார். "இவர் யூஸூப்.
இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்)
கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அதற்கு அவர் பதில் ஸலாம் கூறிவிட்டு,
"நல்ல
சகோதரருக்கும்
, நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. "முஹம்மத்"
என்று பதிலளித்தார். "அவர் அழைக்கப்பட்டாரா?"
என்று
(மறுபடியும்) வினவப்பட்டது.
"ஆம்" என்று ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்.
"அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை" என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான்
சென்றபோது
, இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். "இவர் இத்ரீஸ், இவருக்கு ஸலாம் சொல்வீராக" என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அவர் பதில் ஸலாம்
கூறிவிட்டு
, "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு ஐந்தாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது.
"முஹம்மத்" என்று பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று
கூறப்பட்டதும் (வான் கதவு)
திறந்தது. (அங்கு) நான் சென்றதும் ஹாரூன்
(அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர் ஹாரூன், இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்)
கூறினார். அவருக்கு ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர், "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஆறாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "
உம்முடன் யார்?" என்று வினவப்பட்டது. "முஹம்மத்" என்று
பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா?" என்று
வினவப்பட்டது. "ஆம்" என்று பதிலளித்தார். உடனே
, "அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான் சென்றதும், மூஸா (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர் மூஸா
, இவருக்கு ஸலாம் சொல்வீராக" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர்,
"நல்ல
சகோதரருக்கும்
, நல்ல நபீக்கும் வாழ்த்து" என்று கூறினார். (அவரை) நான் கடந்த போது,
அவர் அழுதார்.
"உம்மை அழச் செய்தது எது
?" என்று அவரிடம் வினவப்பட்டது. "எனக்குப் பின்னர்
ஒரு வாலிபர் நபியாகுவார். என்
உம்மத்தாரில் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களைக்
காட்டிலும் அவருடைய உம்மத்தில்
அதிகமானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள்.
(அதற்காக) நான் அழுகிறேன்" என்று
அவர் கூறினார்.



பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஏழாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார்.
"உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. "முஹம்மத்" என்று கூறினார். "அவர்
அழைக்கப்பட்டிருக்கிறாரா?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று பதிலளித்தார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான் சென்றதும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர்
உம்முடைய தந்தை இப்ராஹீம். இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அவர் பதில் (ஸலாம்)
கூறினார். பின்னர், "நல்ல புதல்வருக்கும், நல்ல நபீக்கும்
வாழ்த்து" என்று
கூறினார்.



பின்னர், எனக்காக ஸித்ரத்துல் முன்த்தஹா உயர்த்தப்பட்டது. அதன் கனி ஹஜரிலுள்ள குடத்தைப் போலவும், அதன் இலை யானையின் காதுகளைப் போலவும் இருந்தன.
"இதுதான்
ஸித்ரத்துல் முன்த்தஹா" என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அங்கு
புறத்தில் இரண்டும், அகத்தில் இரண்டும்
ஆக நான்கு நதிகள் இருந்தன. "இது
என்ன ஜிப்ரயீலே?" என்று கேட்டேன்.
"அகத்திலுள்ள இரண்டும் சுவர்க்கத்திலுள்ள
இரண்டு நதிகள்.
புறத்திலுள்ள இரண்டும் நைல்நதியும்
, புராத்நதியும்" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸஸலாம்) கூறினார்.



பின்னர், எனக்காக பைத்துல் மஃமூர் உயர்த்தப்பட்டது. அதில் ஒவ்வொரு நாளும் எழுபது ஆயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். பின்னர், மதுப் பாத்திரம், பால் பாத்திரம்,
தேன் பாத்திரம்
ஆகியவை எனக்காக கொண்டு வரப்பட்டன. நான் பாலை
எடுத்தேன்.
"அதுதான் இயற்கை (மார்க்கம்) . அதில் நீரும்
, உம்முடைய உம்மத்துகளும்
இருக்கிறீர்கள்" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.



பின்னர், என் மீது தினசரி ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பும் போது மூஸாவின் அருகில் வந்தேன். "என்ன கட்டளையிடப்பட்டீர்?"
என்று (மூஸா
அலைஹிஸ்ஸலாம்) கேட்டார். "தினசரி ஐம்பது நேரத் தொழுகைக்கு
கட்டளையிடப்பட்டேன்" என்று கூறினேன். "உம்முடைய உம்மத்துகள் தினமும்
ஐம்பது
நேரத் தொழுகைகளைத் தாங்க மாட்டார்கள். நான் அல்லாஹ்வின்
மீது சத்தியமாக(க்
கூறுகிறேன்). மக்களிடத்தில் உமக்கு முன் நான் அனுபவம்
பெற்றிருக்கிறேன்.
பனூ இஸ்ராயீல்களை மிகக் கடுமையாகப் பயிற்றுவித்தேன்,
எனவே, உமது ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்காக (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என
கேட்பீராக" என்று (மூஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.



நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை)
தள்ளுபடி செய்தான்.
பின்னர் மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று
மீண்டும் கூறினார்.
நான் (மீண்டும்) திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து
(தொழுகைகளை)
தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே
போன்று
மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு
பத்து
(தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். ஆகவே, தினசரி பத்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன். பின்னர், நான் (மூஸாவிடம்) திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன்.
(அப்போது) தினசரி
ஐந்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன்.
(நான் மீண்டும்) மூஸாவிடம் திரும்ப
வந்தேன். "என்ன கட்டளையிடப்பட்டீர்
?" என்று அவர் கேட்டார். "தினசரி ஐந்து
வேளைத் தொழுகைகளுக்கு நான்
கட்டளையிடப்பட்டேன்" என்று
கூறினேன்.



"உம்முடைய உம்மத்துகள் தினசரி ஐந்து வேளைத் தொழுகைகளைத் ( தொழ ) தாங்க
மாட்டார்கள்.
உமக்கு முன்னர் நான் மக்களிடம் அனுபவம் பெற்றிருக்கிறேன்.
பனூ இஸ்ராயீல்களை
மிகக் கடுமையாகப் பயிற்று வித்திருக்கிறேன். (எனவே
மீண்டும்) உமது
ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்கு (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என்று கேட்பீராக" என்று அவர் கூறினார். "என்னுடைய
ரப்பை
கேட்டு கேட்டு வெட்கமடைகிறேன். எனினும், நான் (இதை)
திருப்தியடைந்து
ஒப்புக் கொள்கிறேன்" என்றேன். பின்னர், (அங்கிருந்து) நான்
கடந்த போது
, என்னை அழைப்பவர் அழைத்து, "என்னுடைய கடமையை நான் ஜாரீ செய்துவிட்டேன். என் அடியார்களுக்கு நான் எளிதாக்கிவிட்டேன்" என்று கூறினார். (அறிவிப்பவர்: மாலிக்குப்னு ஸஃஸஆ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ )



"அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ்
பயணத்தின் போது
சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே முத்தாலான
கோபுரங்கள்
இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக
இருந்தது" என்று
இப்னு ஹஸ்ம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அனஸ்
பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள்.
( நூல்:
முஸ்லிம் )



[url=http://azeezahmed.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/]அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள
ஹதீஸின் இறுதிப்
பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: "நான் மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம்
இறங்கி வந்தேன். அப்போது அவர்கள்,
"உங்கள்
உம்மத்துகளுக்கு உம்முடைய என்ன
கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள்.
"ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க்
கடமையாக்கினான்)" என்று நான்
பதிலளித்தேன். "உங்கள் இறைவனிடம் திரும்பிச்
சென்று (உங்கள்
உம்மத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி
கேளுங்கள்.
ஏனெனில்
, உங்கள் உம்மத்தார் இதைத் தாங்க மாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி
அனுபவப்பட்டிருக்கிறேன்" என்று
கூறினார்கள். நான் என் இறைவனிடம்
திரும்பிச் சென்று
, "என் இறைவா! என் உம்மத்தார் மீது (ஐம்பது வேளைத்
தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!"
என்று கேட்டேன்.
இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான்
மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் திரும்பி வந்து
, "(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "உங்கள் உம்மத்துகள் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்றார்கள். இவ்வாறே நான் என் இறைவனுக்கும் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் இடையில்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:32 pm

11.புனித மிஃராஜ் பயணம்


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே என்று சில விசேஷமான பாக்கியங்களை அளித்திருக்கிறான். இந்த விசேஷமான பாக்கியங்கள் வேறு எந்த நபிமாருக்கும் வழங்கப்படவில்லை! அத்தகைய விசேஷமான பாக்கியங்களில் ஒன்றுதான் புனித மிஃராஜ் பயணமாகும். இப்புனித பயணம், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் பெற்று, 11- ம் ஆண்டு - ஹிஜ்ரத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் (கி.பி. 621) ரஜப் மாதம் 27- ம் தேதி திங்கட்கிழமை இரவு
நிகழ்ந்தது.
அச்சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
வயது
51 ஆண்டு, 8 மாதம், 20 நாட்களாக இருந்தது.



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்புனித பயணத்தை
விழிப்பு
நிலையில், பூத உடலுடன் மேற்கொண்டார்கள். இப் புனித பயணம்
'இஸ்ராவு',
'மிஃராஜ்'
ஆகிய
வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது.
'இஸ்ராவு' என்னும் வார்த்தைக்கு 'இரவில் செல்லல்'
என்பது
பொருளாகும்.
'மிஃராஜ்' என்னும் வார்த்தைக்கு 'ஏறுதல்' என்பது பொருளாகும். இப்புனித பயணம் ஒரு இரவிலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக இப்புனித பயணத்தை 'இஸ்ராவு' என்னும் வார்த்தையால்
குறிப்பிடப்படுகிறது.
மேலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பைத்துல் முகத்தஸிலிருந்து விண் ஏறி தமது பயணத்தைத்
தொடர்ந்தார்கள்.
எனவே
, இப்புனித பயணத்தை 'மிஃராஜ்'
என்ற
வார்த்தையாலும்
குறிப்பிடப்படுகிறது. இப்புனித பயணம் பற்றி திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், இப்புனித பயணம் பற்றிய முழுமையான விவரங்கள் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகிறது. இப்புனித பயணத்தின் தொடக்கமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெருசலேமிலுள்ள மஸ்ஜிது அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து திருக்குர்ஆனில் கீழ்கண்டபடி கூறப்பட்டுள்ளது:



(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் ; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து
(கஃபத்துல்லாஹ்
விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள )
மஸ்ஜிதுல்
அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்
; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்)
சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்
; நம்முடைய அத்தாட்சிகளை
அவருக்குக் காண்பிப் பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்)
; நிச்சயமாக அவன்
(யாவற்றையும் ) செவியுறுவோனாகவும்
; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(ஸூரத்து பனீ இஸ்ராயீல்
, வசனம் - 1.)



அதனைத் தொடர்ந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
மஸ்ஜிது
அக்ஸாவிலிருந்து வானுலக பயணத்தை மேற்கொண்டார்கள்.
அது குறித்த சில விவரங்கள் அத்தியாயம்-53, ஸூரத்துந் நஜ்மில் கூறப் பட்டுள்ளன. ஆயினும் புனித மிஃராஜ் பற்றிய விவரங்கள் யாவும் ஹதீஸ்கள் மூலமாகவே அறியப்படுகின்றன.



புனித மிஃராஜ் பயணம் நிகழ்ந்த இரவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம்
அவர்கள் புனித மக்கா நகரத்தில், கஃபா அருகில் உறங்கிக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து,
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சைப் பிளந்தார்கள்.
பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து அதை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நெஞ்சத்தினுள் ஊற்றி நிரப்பினார்கள். அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருநெஞ்சை பழையபடியே மூடிவிட்டார்கள். இவ் விவரங்களை அறிவிக்கும்
ஹதீஸ்களில் சில:



ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்மதுல்லாஹி அலைஹி)
அவர்கள்
கூறினார்கள்: அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு
நேரத்தில்
(விண்ணுலகப் பயணத்திற்காக) கஃபாப் பள்ளி வாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள்
(பின் வருமாறு)
கூறினார்கள்:



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (மீண்டும்) வேத
அறிவிப்பு (வஹீ)
வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள். ( நூல்: புகாரீ, முஸ்லிம் )



அபூதர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள் கூறியதாவது: "நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும், இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக்
கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை
ஊற்றி(நிரப்பி)னார். பிறகு (பழையபடியே)
நெஞ்சை மூடிவிட்டார்"
என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்.
( நூல்: முஸ்லிம் )



"நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி)
விழிப்பிலும் இருந்த
போது, (வானவர்) ஒருவர் (வந்து), "இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர்
(ரலியல்லாஹூ தஆலா
அன்ஹூம்) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம்
(நாம் அழைத்துச் செல்ல வேண்டும்)"
என்று கூறுவதைக்
கேட்டேன்.
பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத்
தட்டு கொண்டு
வரப்பட்டது. அதில் 'ஸம்ஸம்' நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது" என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )



"என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குச் கொண்டு சென்றார்கள்.
என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டு வந்து விடப்பட்டேன்" என அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம் )



அதன் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புராக்
என்னும்
வாகனத்தில் ஏறி பைத்துல் முகத்தஸ் வரை சென்றார்கள். அங்கு
இரண்டு ரக்அத்கள்
தொழுதார்கள்.



" (விண்ணுலகப் பயணத்தின் போது) என்னிடம் கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையைவிட பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் என்னும் (மின்னல் வேக)
வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத்
தனது கால் குளம்பை எடுத்து வைக்கும்.
அதிலேறி நான் பைத்துல் முகத்தஸ் இறை இல்லம் வரை சென்றேன். பிறகு இறைத் தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்து விட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டபோது (வானவர்) ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (என்னிடம்) ஒரு
பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டு
வந்தார்.
(அதில்
விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.)
நான் பால்
பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல்
, "இயற்கையைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டீர்"
என்று கூறினார். ( அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்
, நூல்: முஸ்லிம் )



அதன் பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்களை அழைத்துக் கொண்டு வானங்களில் பிரவேசித்தார்கள்.
வானங்களிலே ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம், யஹ்யா அலைஹிஸ்ஸலாம், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம், இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம், ஹாரூன்
அலைஹிஸ்ஸலாம்
, மூஸா அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நபிமார்களையும் கண்டார்கள்.
அதன் பிறகு
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களை
'ஸித்ரத்துல்
முன்தஹா
' எனும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் பேரில்
ஐவேளைத் தொழுகைகளைக் கடமையாக்கினான்.
இது குறித்த ஹதீஸ் வருமாறு:



தாங்கள் இரவில் சென்றதைக் குறித்து அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள்
தம்மிடம் கூறினார்கள் என்று மாலிக் இப்னு ஸஃஸஆ
(ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
அவர்கள் கூறிவிட்டு, "நான் ஹத்தீமில்
இருக்கும் போது - சில சமயங்களில்
ஹிஜ்ரிலிருக்கும் போது என்று கூறுவார்கள்
- என்னிடத்தில் வருபவர் வந்து
, இதிலிருந்து இதுவரையில் கிழித்து (பிளந்தார்) என்று
கூறுவதையும் நான் செவி
யுற்றிருக்கிறேன். (தொண்டைக்
குழியிலிருந்து தொப்புளுக்குக் கீழ் வரை என்று
இந்த ஹதீஸ்
அறிவிப்பாளர் கூறினார்). என்னுடைய இதயத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர், ஈமான் (மார்க்க
விசுவாசம்) நிறப்பப் பட்டுள்ள தங்கத் தட்டை
கொண்டு வந்து
என்னுடைய இதயம் கழுவப்பட்டது.
பின்னர், அதில் அது நிறப்பப்பட்டது. பின்னர், (அது இருந்த
இடத்தில்) மீண்டும் வைக்கப்பட்டது.



பின்னர், கோவேறு கழுதைக்குச் சிறியதாகவும், கழுதைக்குப் பெரியதாகவுமுள்ள ஒரு வெள்ளைப் பிராணி
என் அருகில் கொண்டு வரப்பட்டது. அதுதான் புராக்.
அது பார்வைக்கு எட்டிய
தூரத்துக்கு தன்னுடைய அடியை வைக்கிறது. நான் அதன் மீது
ஏற்றப்பட்டேன்.
என்னுடன் ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்தார். அவர் என்னை
அழைத்துக் கொண்டு
முதல் வானத்திற்கு உயர்ந்து
, (அதன் கதவைத்) தட்டினார். "யார் அது?" என்று
வினவப்பட்டது.
அதற்கு அவர், "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார்.
"உங்களுடன்
(வந்திருப்பவர்) யார்
?" என்று வினவப்பட்டது. "முஹம்மத்" என்று
பதிலளித்தார்.
"அவர் அழைக்கப்பட்டாரா?" என்று வினவப்பட்டது.
(அதற்கு )
"ஆம்"
என்றார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை" என்று கூறிவிட்டு (வாயிலைத்) திறந்தார். அங்கு ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். "இவர் உமது தந்தை ஆதம். இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்.
அவர் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டு, "நல்ல புதல்வருக்கும் நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு இரண்டாவது வானுக்கு ஏறி, அதன் கதவைத் தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. அதற்கு அவர்
, "முஹம்மத்" என்று பதிலளித்தார்.
"அவர்
அழைக்கப்பட்டிருக்கிறாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று சொல்லப்பட்டதும் (வாசல் கதவு) திறந்தது. நான் அங்கு சென்றதும் யஹ்யாவையும், ஈஸாவையும் (பார்த்தேன்). அவ்விருவரும் சின்னம்மா, பெரியம்மா மக்கள்.
"இவர்கள் யஹ்யாவும் ஈஸாவும்.
இவர்களுக்கு ஸலாம் சொல்வீராக" என்று ஜிப்ரயீல் (அலைஹிஸ்ஸலாம்) கூறினார். நான் ஸலாம் கூறினேன். அவ்விருவரும் பதில் ஸலாம் கூறிவிட்டு, "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்"
என்று கூறினர்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு மூன்றாவது வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார். "யார் அது?" என்று வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?" என்று வினவப்பட்டது.
"முஹம்மத்"
என்று பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார். "அவருக்கு
வாழ்த்து. நல்ல வருகை"
என்று கூறப்பட்டதும் (வான் கதவு) திறந்தது. (அங்கு) நான்
சென்றபோது யூஸூப் (அலைஹிஸ்ஸலாம்)
இருந்தார். "இவர் யூஸூப்.
இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்)
கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அதற்கு அவர் பதில் ஸலாம் கூறிவிட்டு,
"நல்ல
சகோதரருக்கும்
, நல்ல நபீக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு நான்காம் வானத்தில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. "முஹம்மத்"
என்று பதிலளித்தார். "அவர் அழைக்கப்பட்டாரா?"
என்று
(மறுபடியும்) வினவப்பட்டது.
"ஆம்" என்று ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்.
"அவருக்கு வாழ்த்து, நல்ல வருகை" என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான்
சென்றபோது
, இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார். "இவர் இத்ரீஸ், இவருக்கு ஸலாம் சொல்வீராக" என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அவர் பதில் ஸலாம்
கூறிவிட்டு
, "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை அழைத்துக் கொண்டு ஐந்தாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது.
"ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது.
"முஹம்மத்" என்று பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா
?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று கூறினார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று
கூறப்பட்டதும் (வான் கதவு)
திறந்தது. (அங்கு) நான் சென்றதும் ஹாரூன்
(அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர் ஹாரூன், இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்)
கூறினார். அவருக்கு ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர், "நல்ல சகோதரருக்கும், நல்ல நபீக்கும் வாழ்த்து"
என்று கூறினார்.



பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஆறாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார். "
உம்முடன் யார்?" என்று வினவப்பட்டது. "முஹம்மத்" என்று
பதிலளித்தார். "அவர்
அழைக்கப்பட்டாரா?" என்று
வினவப்பட்டது. "ஆம்" என்று பதிலளித்தார். உடனே
, "அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான் சென்றதும், மூஸா (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர் மூஸா
, இவருக்கு ஸலாம் சொல்வீராக" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன். அவர் பதில் (ஸலாம்) கூறினார். பின்னர்,
"நல்ல
சகோதரருக்கும்
, நல்ல நபீக்கும் வாழ்த்து" என்று கூறினார். (அவரை) நான் கடந்த போது,
அவர் அழுதார்.
"உம்மை அழச் செய்தது எது
?" என்று அவரிடம் வினவப்பட்டது. "எனக்குப் பின்னர்
ஒரு வாலிபர் நபியாகுவார். என்
உம்மத்தாரில் சுவர்க்கம் பிரவேசிப்பவர்களைக்
காட்டிலும் அவருடைய உம்மத்தில்
அதிகமானவர்கள் சுவர்க்கம் புகுவார்கள்.
(அதற்காக) நான் அழுகிறேன்" என்று
அவர் கூறினார்.



பின்னர், என்னை (அழைத்துக்) கொண்டு ஏழாம் வானில் ஏறி (அதன் கதவைத்) தட்டினார்.
"யார் அது?"
என்று
வினவப்பட்டது. "ஜிப்ரயீல்" என்று பதிலளித்தார்.
"உம்முடன் யார்?"
என்று
வினவப்பட்டது. "முஹம்மத்" என்று கூறினார். "அவர்
அழைக்கப்பட்டிருக்கிறாரா?" என்று வினவப்பட்டது. "ஆம்" என்று பதிலளித்தார்.
"அவருக்கு வாழ்த்து,
நல்ல வருகை"
என்று கூறப்பட்டு (வான் கதவு) திறந்தது.
(அங்கு) நான் சென்றதும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) இருந்தார்.
"இவர்
உம்முடைய தந்தை இப்ராஹீம். இவருக்கு ஸலாம் சொல்வீராக"
என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அவருக்கு நான் ஸலாம் கூறினேன்.
அவர் பதில் (ஸலாம்)
கூறினார். பின்னர், "நல்ல புதல்வருக்கும், நல்ல நபீக்கும்
வாழ்த்து" என்று
கூறினார்.



பின்னர், எனக்காக ஸித்ரத்துல் முன்த்தஹா உயர்த்தப்பட்டது. அதன் கனி ஹஜரிலுள்ள குடத்தைப் போலவும், அதன் இலை யானையின் காதுகளைப் போலவும் இருந்தன.
"இதுதான்
ஸித்ரத்துல் முன்த்தஹா" என்று (ஜிப்ரயீல்
அலைஹிஸ்ஸலாம்) கூறினார். அங்கு
புறத்தில் இரண்டும், அகத்தில் இரண்டும்
ஆக நான்கு நதிகள் இருந்தன. "இது
என்ன ஜிப்ரயீலே?" என்று கேட்டேன்.
"அகத்திலுள்ள இரண்டும் சுவர்க்கத்திலுள்ள
இரண்டு நதிகள்.
புறத்திலுள்ள இரண்டும் நைல்நதியும்
, புராத்நதியும்" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸஸலாம்) கூறினார்.



பின்னர், எனக்காக பைத்துல் மஃமூர் உயர்த்தப்பட்டது. அதில் ஒவ்வொரு நாளும் எழுபது ஆயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். பின்னர், மதுப் பாத்திரம், பால் பாத்திரம்,
தேன் பாத்திரம்
ஆகியவை எனக்காக கொண்டு வரப்பட்டன. நான் பாலை
எடுத்தேன்.
"அதுதான் இயற்கை (மார்க்கம்) . அதில் நீரும்
, உம்முடைய உம்மத்துகளும்
இருக்கிறீர்கள்" என்று (ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.



பின்னர், என் மீது தினசரி ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பும் போது மூஸாவின் அருகில் வந்தேன். "என்ன கட்டளையிடப்பட்டீர்?"
என்று (மூஸா
அலைஹிஸ்ஸலாம்) கேட்டார். "தினசரி ஐம்பது நேரத் தொழுகைக்கு
கட்டளையிடப்பட்டேன்" என்று கூறினேன். "உம்முடைய உம்மத்துகள் தினமும்
ஐம்பது
நேரத் தொழுகைகளைத் தாங்க மாட்டார்கள். நான் அல்லாஹ்வின்
மீது சத்தியமாக(க்
கூறுகிறேன்). மக்களிடத்தில் உமக்கு முன் நான் அனுபவம்
பெற்றிருக்கிறேன்.
பனூ இஸ்ராயீல்களை மிகக் கடுமையாகப் பயிற்றுவித்தேன்,
எனவே, உமது ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்காக (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என
கேட்பீராக" என்று (மூஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.



நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை)
தள்ளுபடி செய்தான்.
பின்னர் மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று
மீண்டும் கூறினார்.
நான் (மீண்டும்) திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து
(தொழுகைகளை)
தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே
போன்று
மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு
பத்து
(தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். பின்னர், மூஸாவிடம் திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன். என்னை விட்டு பத்து (தொழுகைகளை) தள்ளுபடி செய்தான். ஆகவே, தினசரி பத்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன். பின்னர், நான் (மூஸாவிடம்) திரும்ப வந்தேன். அவர் அதே போன்று மீண்டும் கூறினார். நான் திரும்பச் சென்றேன்.
(அப்போது) தினசரி
ஐந்து வேளைத் தொழுகைகளுக்கு நான் கட்டளையிடப்பட்டேன்.
(நான் மீண்டும்) மூஸாவிடம் திரும்ப
வந்தேன். "என்ன கட்டளையிடப்பட்டீர்
?" என்று அவர் கேட்டார். "தினசரி ஐந்து
வேளைத் தொழுகைகளுக்கு நான்
கட்டளையிடப்பட்டேன்" என்று
கூறினேன்.



"உம்முடைய உம்மத்துகள் தினசரி ஐந்து வேளைத் தொழுகைகளைத் ( தொழ ) தாங்க
மாட்டார்கள்.
உமக்கு முன்னர் நான் மக்களிடம் அனுபவம் பெற்றிருக்கிறேன்.
பனூ இஸ்ராயீல்களை
மிகக் கடுமையாகப் பயிற்று வித்திருக்கிறேன். (எனவே
மீண்டும்) உமது
ரப்பிடம் திரும்பச் சென்று, உம்முடைய உம்மத்துகளுக்கு (தொழுகைகளைக்) குறைக்க வேண்டும் என்று கேட்பீராக" என்று அவர் கூறினார். "என்னுடைய
ரப்பை
கேட்டு கேட்டு வெட்கமடைகிறேன். எனினும், நான் (இதை)
திருப்தியடைந்து
ஒப்புக் கொள்கிறேன்" என்றேன். பின்னர், (அங்கிருந்து) நான்
கடந்த போது
, என்னை அழைப்பவர் அழைத்து, "என்னுடைய கடமையை நான் ஜாரீ செய்துவிட்டேன். என் அடியார்களுக்கு நான் எளிதாக்கிவிட்டேன்" என்று கூறினார். (அறிவிப்பவர்: மாலிக்குப்னு ஸஃஸஆ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ )



"அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் புனித மிஃராஜ்
பயணத்தின் போது
சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே முத்தாலான
கோபுரங்கள்
இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக
இருந்தது" என்று
இப்னு ஹஸ்ம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அனஸ்
பின் மாலிக் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ)
ஆகியோர் அறிவித்திருக்கிறார்கள்.
( நூல்:
முஸ்லிம் )



[url=http://azeezahmed.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/]அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அறிவித்துள்ள
ஹதீஸின் இறுதிப்
பகுதியில் இவ்விதம் கூறப்பட்டுள்ளது: "நான் மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம்
இறங்கி வந்தேன். அப்போது அவர்கள்,
"உங்கள்
உம்மத்துகளுக்கு உம்முடைய என்ன
கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள்.
"ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க்
கடமையாக்கினான்)" என்று நான்
பதிலளித்தேன். "உங்கள் இறைவனிடம் திரும்பிச்
சென்று (உங்கள்
உம்மத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி
கேளுங்கள்.
ஏனெனில்
, உங்கள் உம்மத்தார் இதைத் தாங்க மாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி
அனுபவப்பட்டிருக்கிறேன்" என்று
கூறினார்கள். நான் என் இறைவனிடம்
திரும்பிச் சென்று
, "என் இறைவா! என் உம்மத்தார் மீது (ஐம்பது வேளைத்
தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!"
என்று கேட்டேன்.
இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான்
மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் திரும்பி வந்து
, "(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "உங்கள் உம்மத்துகள் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்றார்கள். இவ்வாறே நான் என் இறைவனுக்கும் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் இடையில்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:33 pm

13.போர்களில் வானவர்கள்


அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒவ்வொரு காரியத்திலும் உதவி செய்திருக்கிறான். ஒவ்வொரு கஷ்டத்திலும் உதவி செய்திருக்கிறான். அந்த வகையில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போர்களிலும் கூட உதவி செய்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படையுடன் சேர்ந்து போரிடும்படியாக வானவர்களை அனுப்பி யிருக்கிறான். வானவர்களும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் படையுடன் சேர்ந்து, சன்மார்க்க விரோதிகளுடன் போர் புரிந்திருக் கிறார்கள். இது குறித்த விவரங்கள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன.


அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சன்மார்க்க விரோதிகளை
எதிர்த்து
முதன் முதலாக போரிட்டது பத்ரு போர்களத்தில்தான்! இப்போரில்,
மக்கத்து குரைஷிகள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்தம் தோழர்களையும், அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் அழித்து ஒழித்திட வேண்டும் என்ற வெறியுடன் பத்ரு களத்தில் பாளையமிட்டிருந்தனர். அந்த வெறிக் கூட்டத்தில் ஆயிரம் வீரர்கள் இருந்தனர்! புகழ் பெற்ற போர்த் தளபதிகள் பலரும் இருந்தனர்! நூறு குதிரைகள் இருந்தன! போர்க் கருவிகள் ஏராளமாக இருந்தன! ஆடிப்பாடி போர் வெறியைத் தூண்டும் பெண்களும் இருந்தனர்!



இதற்கு மாறாக அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சிறு
படையிலே
முன்னூற்று பதின்மூன்று வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
அவர்களிலும் சிலரிடம்
மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
மற்றவர்களிடம் போதிய ஆயுதங்களும் இருக்கவில்லை!
மேலும், அப்படையில் இரண்டு
குதிரைகள் மட்டுமே இருந்தன! இந்நிலையைக் கண்டு
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கரம் ஏந்தி அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலாவிடம்
துஆ செய்தனர். உதவி கோரினர். முடிவில்
, அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா "(அணி அணியாக
உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம்
மலக்குகளைக்
கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்னும் சுபச்
செய்தியை வஹீ மூலமாக அருளினான். இது குறித்த ஹதீஸ் வருமாறு:



"பத்ருப் போர் நாளின் போது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள்
இணைவைப்பவர்(களின் படை)கள் ஆயிரம் பேர் இருப்பதையும்,
தம் படையில் முன்னூற்று பத்தொன்பது ஆண்கள் இருப்பதையும் கண்டு, கிப்லாவை நோக்கித் தம் இரு கரங்களையும் ஏந்தி தம் இறைவனிடம் தாழ்மையோடு இறைஞ்சினர். "இறைவனே! நீ என்னிடம் வாக்களித்ததைப் பூரணமாக்கி வைப்பாயாக! இறைவனே! நீ எனக்கு வாக்களித்ததைத் தந்தருள்வாயாக! இறைவனே! முஸ்லிம்களின் இந்த (சிறு) கூட்டத்தினரை நீ அழித்து விடுவாயானால், இவ்வுலகில் உன்னை வணங்கப்பட மாட்டாது" என்று கூறினர். (இவ்விதம் கூறி) தம் இரு கைகளையும் அடிக்கடி உயர்த்தித் தம் இறைவனிடம் தாழ்மையோடு இறைஞ்சி வந்தார்கள், அவர்களின் போர்வை தோளிலிருந்து கீழே விழும் வரை! அப்பொழுது அபூபக்ர் (ரலியல்லாஹூதஆலா அன்ஹூ) அவர்கள், அண்ணலாரிடம் வந்து அன்னவர்களின் போர்வையை எடுத்து அன்னாரின் தோளில் போட்டு விட்டு, அண்ணலாருக்கு பின்னிருந்து அவர்களைக் கட்டிப் பிடித்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் நீங்கள் இறைஞ்சியது
போதும். ஏனெனில்,
நிச்சயமாக அவன்
உங்களுக்கு வாக்களித்ததை அதி விரைவில்
நிறைவேற்றி வைப்பான்" என்று
கூறினர். அப்பொழுது
,



'(நினைவு கூறுங்கள்புன்னகை உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை
நாடிய போது:
"(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்குப் பதிலளித்தான்.' என்னும் 8:9 -வது வசனம் அருளப்பட்டது. எனவே இறைவன் வானவர்களைக்
கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி
புரிந்தான், என உமர் (ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ) அவர்கள் எனக்கு அறிவித்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: முஸ்லிம்,
திர்மிதீ.



பத்ரு போரைப் பற்றி பல வசனங்கள் திருக்குர்ஆனில் அருளப்பட்டுள்ளன. அவைகளாவன:


(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர்
அத்தாட்சி நிச்சயமாக
உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது ; பிரிதொன்று
காஃபிர்களாக
இருந்தது ; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப் போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத்
தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்
; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை
இருக்கிறது. (
ஸூரத்துல் ஆல இம்ரான், வசனம் - 13. )



'பத்ரு' போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான் ; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு
அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.



(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: "உங்கள் ரப்பு
(வானிலிருந்து) இறக்கப்பட்ட
மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு
உதவி செய்வது உங்களுக்குப்
போதாதா?" என்று.



ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால்,
பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம்
வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். ( ஸூரத்துல் ஆல
இம்ரான், வசனம் - 123, 124, 125. )



(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: "நிச்சயமாக நான்
உங்களுடன் இருக்கிறேன்
; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் ; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கிவிடுவேன் ; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் ; அவர்களின் விரல் நுனிகளையும் வெட்டிவிடுங்கள்" என்று
(வஹீ மூலம்)
அறிவித்ததை நினைவு கூரும். ( ஸூரத்துல் அன்பால்
, வசனம் - 12. )



மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் பத்ரு போரைப் பற்றியும், அதில் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா வானவர்களைக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவியதையும் கூறுகின்றன. மேலும், பத்ரு போரில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கலந்துக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சார்பில் போரிட்டிருக்கிறார்கள்! இது குறித்த ஹதீஸ் புகாரீ ஷரீபில் இடம்பெற்றுள்ளது. 'பத்ருடைய தினத்தன்று, "தங்களுடைய குதிரையின் தலையைப் பிடித்துக் கொண்டு இதோ ஜிப்ரயீல் இருக்கிறார். அவரிடம் போர்க் கருவிகள் இருக்கின்றன" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.


இவ்விதம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவின்
பொருட்டாலும்
, அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் உதவியாலும், வானவர்களின் வருகையாலும் பத்ரு போரில் முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. மக்கத்து குரைஷிகள் தோற்றோடினார்கள்! அவர்களில் இருபத்து நான்கு தலைவர்களும், வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர்! எழுபது வீரர்களும் சிறைப் படுத்தப் பட்டனர்! முஸ்லிம்களில்
பதினான்கு பேர்கள் மட்டுமே ஷஹீதானார்கள்.



உஹது போரிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன்
சேர்ந்து
வானவர்கள் போரிட்டுள்ளனர். இது குறித்த விவரம் கீழ்கண்ட
ஹதீஸ் மூலம்
அறியப்படுகிறது.



"உஹதுடைய தினத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
நான் பார்த்தேன்.
அவர்களுடன் (சேர்ந்து) இரண்டு மனிதர்கள் (அண்ணலார்
சார்பாகக்) கடுமையாகப்
போரிட்டுக் கொண்டிருந்தனர். அவ்விருவரின்
மீது வெள்ளை உடைகளிருந்தன.
(அதற்கு) முன்னரும், பின்னரும் அவர்களை நான் பார்க்கவில்லை". அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ.
"அவ்விருவரும்
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்
, மீக்காயில் அலைஹிஸ்ஸலாம் ஆகிய வானவர்கள்"
என்று முஸ்லிம் ஷரீபில் கூறப்பட்டுள்ளது. இவ்விதம் உஹது போரில்
வானவர்கள், மனித உருவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து போரிட்டுள்ளனர்.



அகழ் போரிலும் அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவியாக வானவர்களின் படையை ஏவியுள்ளான்! இது குறித்த விவரம் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.


முஃமின்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை
நினைத்துப் பாருங்கள்
; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும்,
நீங்கள் (கண்களால்)
பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம்
ஏவினோம் ; மேலும், நீங்கள் செய்வதை
அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
( ஸூரத்துல் அஹ்ஜாப், வசனம் - 9. )



திருக்குர்ஆனின் இந்த வசனம் அகழ் போரின் போது அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா,
வானவர் படையை
அனுப்பி
முஃமின்களுக்கு புரிந்த அருட்கொடையைப் பற்றி கூறுகிறது.



அகழ் யுத்தம் ஹிஜ்ரீ 5 -ம் வருடம், துல்கஃதா மாதத்தில் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் அரப்
நாட்டிலிருந்த பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்
ஒன்று சேர்ந்து,
சுமார் இருபத்து
நான்காயிரம் பேர்கொண்ட பெரும் படையை
திரட்டினார்கள். யூதர்களும் இவர்களுடன்
சேர்ந்துக் கொண்டனர். இப்பெரும்படை
திருமதீனாவைத் தாக்க புறப்பட்டது.



இதை அறிந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்
தோழர்களுடன்
ஆலோசனை செய்தார்கள். இறுதியாக, ஸல்மான் பாரிஸீ ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களின் ஆலோசனைப்படி திருமதீனா நகரில் உள்ள பாதுகாப்பற்ற இடங்களில் அகழிகளை வெட்டி பகைவர்களின் படையைத் தடுப்பது எனவும், அகழிக்கு இப்பக்கமாகவே
இருந்துக் கொண்டு எதிரிகளை எதிர்கொள்வது எனவும் முடிவு
செய்யப்பட்டது.



அகழி வெட்டும் பணி இருபது நாட்கள் வரை தொடர்ந்தது. அகழி வெட்டும்
பணியில்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம்
தோழர்களுடன் சேர்ந்து
பணிபுரிந்தார்கள்! அச்சமயம், போதிய உணவுப்
பொருள்கள் இல்லாத காரணத்தால்
அனைவரும் கடும் பசியுடன் அகழிகளை
வெட்டினர்! அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள்
கடும் பசியை அகற்ற தமது திருவயிற்றில் கல்லைக் கட்டிக்
கொண்டு அகழியை
வெட்டினர்!



போர் தொடங்கியபோது, அகழியை கடந்து வருவதற்கான முறையை அறியாத எதிரிப் படைகள்,
அகழிக்கு அப்பால்
இருந்து கொண்டு போரிட்டனர். இப்போர் சுமார் ஒருமாத காலம்
வரை தொடர்ந்தது.
ஆயினும் எதிரிப் படைகளுக்கு வெற்றி கிடைக்க வில்லை!
கடைசியாக, கூட்டு
சேர்ந்திருந்த யூதர்களும்
, குரைஷி கோத்திரத்தார்களும் மனந்தளர்ந்து
பிளவு பட்டார்கள்!



அந்த சந்தர்ப்பத்தில்தான் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, திருக்குர்ஆன்
வசனத்தில்
குறிப்பிட்டுள்ளபடி கடுங் குளிருடன் கூடிய புயற்காற்றை
எதிரிப் படைகள் மீது
வீசச் செய்தான்! அதன் காரணமாக எதிரிகள் மனம் கலங்கிப்
போனார்கள்!
அவர்களுடைய கூடாரங்கள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டன!
பாத்திரங்கள் எல்லாம்
காற்றில் பறந்து போயின! அதேசமயம் அல்லாஹூ
ஸூப்ஹானஹூதஆலா வானவர்களையும்
எதிரிப்படைகள் மீது ஏவிவிட்டான். அவர்கள்
எதிரிகளின் மனங்களில் கிலியை
ஏற்படுத்திவிட்டனர். அதன் காரணமாக
எதிரிப் படைகள் போர்க்களத்தை விட்டும்
ஓடிப் போனார்கள்! இந்த யுத்தத்தில் ஆறு
முஸ்லிம்கள் ஷஹீதானார்கள். எதிரிப்
படையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்!


இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, போர்களில் வானவர்களை அனுப்பி அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறான். வெற்றிகளைத் தந்திருக்கிறான். எதிரிகளை தோற்றோடச் செய்திருக்கிறான்!


avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:34 pm

14.உடுக்கை இழந்தவன் கைபோல


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை தன்னுடைய ஹபீபாக ஆக்கி சிறப்பித்திருக்கிறான். தன்னுடைய ஹபீபுக்கு சன்மார்க்க விரோதிகள் பேச்சாலும், செயலாலும் துன்பத்தைக் கொடுத்த போது உடனடியாக வஹீ மூலமாக ஆறுதலைக் கொடுத்திருக்கிறான். தன்னுடைய ஆதரவைக் கொடுத்திருக்கிறான். அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் விசனத்தைப் போக்கியிருக்கிறான். இதற்கு ஆதாரமாக பல்வேறு சம்பவங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் நடைபெற்றுள்ளன. அவை ஹதீஸ்கள் மூலமாக கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் காணலாம்.


* ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். அப்பொழுது ஏதோ ஒரு தவறு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள், "பார்த்தீர்களா, நிச்சயமாக இவருக்கு இரண்டு இதயங்கள்
இருக்கின்றன. ஒரு இதயம் உங்களுடனும் மற்றொன்று ஏனையோரிடமும்
இருக்கிறது"
என்று கூறினார்கள். அப்பொழுது
,



"எந்த மனிதனுக்கும் அவனுடைய நெஞ்சில் இரண்டு இதயங்களை அல்லாஹ்
ஏற்படுத்தவில்லை..."



என்னும் 33 : 4 ஆவது வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ
அவர்கள். நூல்:
திர்மிதீ.



* ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபா (என்னும் குன்றின்) மீது ஏறி, "யா ஸபாஹாஹ்" என்று (கூறி) அழைத்தார்கள். அவர்களிடம் குரைஷியர் ஒன்று கூடி "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று
கேட்டார்கள்.
"காலையிலோ அல்லது மாலையிலோ உங்களிடம் பகைவர்கள் வருவார்கள் என்று உங்களுக்கு நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். "ஆம்
(நம்புவோம்)"
என்று அவர்கள் (பதில்) கூறினார்கள். அப்பொழுது,
"நிச்சயமாக நான்
எதிரிலுள்ள
மிகக் கடுமையான வேதனையைக் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை
செய்கிறேன்"
என்று கூறினார்கள். அதற்கு, "உமக்கு நாசத்தை (ஏற்படுத்தட்டும்).
இதற்காகவா
எங்களை நீர் ஒன்று திரட்டினீர்?" என்று அபூலஹப்
கூறினார். அப்பொழுது
,



(1) அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக ; அவனும் நாசமாகட்டும். (2) அவனுடைய பொருளும், அவன்
சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. (
3) விரைவில் அவன் கொழுந்து
விட்டெரியும் நெருப்பில் புகுவான். (
4) விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
(5) அவளுடைய கழுத்தில்
முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான்
(அதனால் அவளும் அழிவாள்). என்னும் ஸூரத்துல் லஹப்
அருளப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்:
புகாரீ, முஸ்லிம், திர்மிதீ.



* "நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு ஒரு மகனும் இல்லை. அவரும் விரைவில் இறந்துவிடுவார். அவருடைய அடையாளம் அறுபட்டு(மறைந்தொழிந்து) விடும்" என்று குரைஷிகள் கூறினார்கள். அப்பொழுது,


(1) (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
(
2) எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானீயும் கொடுப்பீராக. (3) நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன் தான் சந்ததியற்றவன். என்னும் 'ஸூரத்துல் கவ்ஸர்' ஐ இறைவன் அருளினான். அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ்
ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
ஆதாரம்: ரஜீன்.



* அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் ஒருநாள், தொழுது முடித்து இறைவனைப் பிரார்த்திக்கும் போது,
"யா அல்லாஹ்! யா
ரஹ்மான்!"
என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த
அபூஜஹ்லும்
, அவனுடைய தோழர்களும், "பல தெய்வங்களை வணங்க வேண்டாம் என்று
எங்களுக்கு முஹம்மத் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள்
உபதேசம்
செய்கிறார். ஆனால்
, அவர் 'யா அல்லாஹ், யா ரஹ்மான்' என்று பல தெய்வங்களை பிரார்த்திக்கிறார்" என்று கூறினர்.
அப்பொழுது
,



"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள் ; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள் ; எப்பெயரைக் கொண்டு
நீங்கள் அழைத்தாலும்
, அவனுக்கு(ப் பல) அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன"
என்று (நபியே!)
கூறுவீராக
;...என்னும் ஸூரத்து பனீ இஸ்ராயீல், 110 - வது வசனம் அருளப்பட்டது. ( புகாரீ. )



* ஒரு சமயம் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்றிருந்தனர்.
(அதன் காரணமாக)
அவர்கள் ஓரிரவு அல்லது இரண்டு இரவுகள்
(தஹஜ்ஜூத் தொழ) எழுந்திருக்கவில்லை. அப்போது ஒரு பெண் அண்ணல்
நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "முஹம்மதே!
நிச்சயமாக உம்முடைய இறைவன் உம்மைக் கைவிட்டு விட்டான் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்" என்று கூறினாள். அப்பொழுது,



(1) முற்பகல் மீது சத்தியமாக - (2) ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக -
(3) உம்முடைய இறைவன்
உம்மைக் கைவிடவுமில்லை
; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை....என்று தொடங்கும் 'ஸூரத்துள் ளுஹா'
அருளப்பட்டது. அறிவிப்பவர்: ஜூன்துப் இப்னு ஸூஃப்யான் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ. மற்றோர் அறிவிப்பில், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம்
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
வருவதில் சுணக்கம் ஏற்பட்டதைக் கண்ட
இணைவைப்போர்
, "நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கை விடப்பட்டார்"
என்று கூறினர். அப்பொழுது, "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை".
என்னும்
'ஸூரத்துள் ளுஹா', 3 - வது வசனம் அருளப்பட்டது என குறிப்பிடப்
பட்டுள்ளது.



* "நிச்சயமாக நாங்கள் உங்களை பொய்யராக்கவில்லை ; எனினும் நீங்கள் எதனைக் கொண்டு வந்தீர்களோ அதனையே பொய்யாக்குகின்றோம்" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் அபூஜஹ்ல் கூறினான். அப்பொழுது,


(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக்
கவலையில்
ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம் ; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ;
ஆனால் இந்த
அநியாயக் காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அல்லவா மறுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.



என்னும் 'ஸூரத்துல் அன்ஆம்', 33 - வது வசனம் அருளப்பட்டது. அறிவிப்பவர்: அலீ கர்ரமல்லாஹூ
வஜ்ஹஹூ அவர்கள்.
நூல்: திர்மிதீ.



* அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போரில் வெற்றி கண்டு திருமதீனாவுக்கு வந்து சேர்ந்த பின்னர், யூதர்களை ஒருங்கு சேர்த்து,
"குரைஷி களுக்கு
ஏற்பட்ட துன்பத்தைப் போன்று உங்களுக்கும் துன்பம்
நேரிடுவதற்கு முன்
நீங்கள் முஸ்லிம்களாக ஆகிவிடுங்கள்"
என்று கூறினார்கள்.
அதற்கு அவர்கள்,
"முஹம்மதே!
போர் செய்யத்
தெரியாத சில அறிவற்ற குரைஷிகளை
நீங்கள் வெட்டி வீழ்த்தி வெற்றி
பெற்றுவிட்ட எண்ணமானது உங்களை மயக்கிவிட
வேண்டாம். நீங்கள்
விரும்பினால் எங்களுடன் போர் செய்யுங்கள். அப்பொழுது
, நாங்களும் மனிதர்கள் தாம் என்பதையும்,
எங்களைப்
போன்றவர்களிடம் நீங்கள்
மோதிக் கொள்ளவில்லை என்பதையும் நீங்கள்
அறிந்து கொள்வீர்கள்"
என்று கூறினர். அப்பொழுது,



(12) நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: "வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள் ; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட
படுக்கையாகும். (
13) (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும்
உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக
இருக்கிறது ; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது
; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது ; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப் போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத்
தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்
; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை
இருக்கிறது.



என்னும் ஸூரத்துல் ஆல இம்ரான், 12 , 13 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. அறிவிப்பவர்:
இப்னு அப்பாஸ்
ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்: அபூதாவூத்.



* பனு தமீம் கூட்டத்தாரில் பலர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அப்பொழுது, அபூபக்ர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம், கஃகாஃ இப்னு மஃபதை அவர்களுக்கு
தலைவராக நியமிக்கும்படி வேண்டினார்கள்.
ஆனால் உமர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களோ அக்ரஃ இப்னு ஹாபிஸைத் தலைவராக நியமிக்கும்படி வேண்டினார்கள். (அப்பொழுது) அபூபக்ர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் (உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு விரோதமாகவே எதனையும் கூற ஆசைப்படுகிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு உமர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், "தங்களை விரோதிப்பது எனது நோக்கமல்ல" என்று கூறினார்கள். இவ்விதமாக பேச்சு வளர்ந்து அவ்விருவரின் சப்தமும் உயர்ந்து விட்டது! அப்பொழுது,



(1) முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள் ; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள் ; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன் ; நன்கறிபவன். (2) முஃமின்களே! நீங்கள் நபியின்
சப்தத்திற்கு மேலே
, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள் ; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல்,
அவரிடம் பேசாதீர்கள். (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் (நற்செயல்கள்) அழிந்து போகும்.



என்னும் அத்தியாயம் - 49 (ஸூரத்துல் ஹூஜூராத்), 1, 2 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள்.
நூல்:
புகாரீ, திர்மிதீ, நஸாயீ.



* குரைஷிகளிலுள்ள நிராகரிப்போர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விதியைப் பற்றி தர்க்கம் செய்தார்கள். அப்பொழுது,


(48) அவர்களுடைய முகங்கின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (49) நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக
(குறிப்பான)
அளவின்படியே படைத்திருக்கின்றோம்.



என்னும் அத்தியாயம் - 54 ( ஸூரத்துல் கமர் ), 48, 49 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன.
முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Clip_image001

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Sat Jul 31, 2010 2:34 pm

15.ரஹ்மதல்லில் ஆலமீன்


அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஒரு அருட்கொடையாக ஆக்கி சிறப்பித்திருக்கிறான். இது குறித்து திருக்குர்ஆனில், ஸூரத்துல் அன்பியா, வசனம் - 107
ல்,
"(நபியே!) நாம்
உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக -
ஓர் அருட்
கொடையாகவேயன்றி அனுப்பவில்லை".
எனக் கூறியுள்ளான். இந்த வசனத்திற்கான
விரிவுரையில் கீழ்கண்ட விளக்கம் கூறப்பட்டுள்ளது.



இந்த வசனத்தில் உள்ள 'ஆலம்' என்னும் அரபி சொல்லில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதவர்க்கம், ஜின் வர்க்கம், விலங்கினம், தாவரவினம் ஆகிய அனைத்து படைப்பினங்களும் அடங்குகின்றன. எனவே,
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் மேற்கண்ட அனைத்து
சிருஷ்டிகளுக்கும் ரஹ்மத்தாக - அருட்கொடையாக
ஆக்கி
அனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும்
, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக்
கொண்டே இந்த அகிலத்தில் அல்லாஹ்வுடைய இபாதத்தும்
, திக்ரும் நிலை பெறும்படியாகவும்
அனுப்பப்பட்டுள்ளார்கள். இவ்விதம்
அகிலத்திலுள்ள சிருஷ்டிகளுக்கெல்லாம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் ஒரு அருட்கொடையாக
அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பது,
இந்த அகிலத்தின்
உண்மையான ஆத்மா
' அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவை இபாதத்து செய்வதும், திக்ரு செய்வதும்தான் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதன் காரணமாகத்தான் எப்பொழுது இந்த அகிலத்தை விட்டு இந்த ஆத்மா வெளியேறி விடுகிறதோ, அதாவது இந்த அகிலத்தில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ரும் முற்றிலுமாக இல்லாமல் போகிறதோ, அப்பொழுது இந்த அகிலமும், அனைத்து சிருஷ்டிகளும் அழிந்துபோகும், அதாவது கியாமத்து வந்துவிடும்!



அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ருமே இந்த அகிலத்தின் உண்மையான ஆத்மா என அறிந்துகொண்டால், அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இந்த அகிலத்தின் அருட்கொடையாக ஆக்கியிருப்பதின் நோக்கம் தாமாகவே வெளிப்பட்டுவிடுகிறது! ஏனெனில், இந்த அகிலத்தில் கியாமத்து நாள் வரையில் அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலாவின் இபாதத்தும், திக்ரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காரணமாகவும், அன்னாரின் போதனைகளாலுமே நிலை பெற்றிருக்கும்!
இதன் காரணமாகத்தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள்,
"நான்
அல்லாஹூதஆலாவின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட ரஹ்மத்தாக -
அருட்கொடையாக
இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்கள். (மஆரிபுல் குர்ஆன்
, பாகம் - 6,
பக்கம் - 233.)



அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
சிருஷ்டிகளுக்கெல்லாம் அருட்கொடையாக
இருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக மனித
வர்க்கத்தார் மட்டுமின்றி
, ஜின் வர்க்கத்தாரும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின்
முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்!
அண்ணல் நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு
சிலைகளும் சாட்சியம் கூறியுள்ளன! அண்ணல்
நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களின் விரல் அசைவிற்கு சந்திரன் இரண்டு
பகுதிகளாக
பிளந்தது! தாவரங்கள் நடந்தன
, பேசின! கற்களும் கலிமா கூறின! விலங்குகளும் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையீடு
செய்தன!



இப்படியாக அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா, அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்களை
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பி
சிறப்பித்திருக்கிறான்.

முஹம்மத் நபி (ஸல்) – ஸய்யத் மன்ஜூர் அஹ்மத் ஹூஸைனி Clip_image001

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக