புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
46 Posts - 40%
prajai
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Jenila
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
kargan86
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
jairam
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
8 Posts - 5%
prajai
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
jairam
உலகப் போர்கள் - Page 5 Poll_c10உலகப் போர்கள் - Page 5 Poll_m10உலகப் போர்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:42 am

இரண்டாம் உலகப்போர் (அணுகுண்டு வீச்சு)


ஹிட்லர் இறந்தபின் இனி சரண் அடைவது தவிர வேறு வழி இல்லை என்று ஜெர்மனி தளபதிகள் முடிவு செய்தனர். அதன்படி 1945 மே 8-ந்தேதி ஜெர்மனி சரணாகதி அடைந்தது. நேச நாடுகளின் தளபதி மக்ஆர்தரிடம் ஜெர்மனி தளபதிகள் சரணாகதி பத்திரம் எழுதிக்கொடுத்தனர். அத்துடன் உலகப்போர் முடிந்திருக்க வேண்டும். ஆனால் போரை நிறுத்த ஜப்பான் மறுத்தது. பசிபிக் மகாசமுத்திரத்தில் போய்க்கொண்டிருந்த அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீசின. கப்பல் தீப்பிடித்து எரிந்து 343 பேர் பலியானார்கள்.

ஜெர்மனி சரண் அடைந்ததும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், ரஷிய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும், ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் என்ற இடத்தில் சந்தித்துப் பேசினார்கள். 1945 ஜுலை 17-ந்தேதி இந்த சந்திப்பு நடந்தது. "உடனே சரண் அடையுங்கள். இல்லாவிட்டால் ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று மூவரும் ஜப்பானை எச்சரித்துக் கூட்டறிக்கை விடுத்தனர். ஜப்பான் இதை லட்சியம் செய்யவில்லை. தொடர்ந்து போரில் ஈடுபட்டது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:42 am

யுத்தம் மேலும் தொடர்ந்தால் விபரீதமாகிவிடும் என்று ட்ரூமன் கருதினார். ஜப்பானை ஒடுக்க அணுகுண்டு வீசுவதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஜப்பான் மீது அணுகுண்டு வீசுமாறு, விமானப்படைக்கு கட்டளையிட்டார். 1945 ஆகஸ்டு 6-ந் தேதி, ஜப்பானிய நேரம் காலை 8 மணிக்கு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் மீது, "எனோலா கேய்" என்ற பெயருடைய அமெரிக்க போர் விமானம், உலகின் முதல் அணு குண்டை வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "லிட்டில் பாய்" (சின்னப் பையன்).

ஐந்து டன் எடையுள்ளது. அணுகுண்டு வெடித்தபோது இடி முழக்கம் போல பயங்கர சத்தம் கேட்டது. வானத்துக்கும், பூமிக்குமாக நாய்க்குடை வடிவில் புகை மண்டலம் சூழ்ந்தது. இரண்டாவது அணு குண்டுவீசப்பட்டதால் ஹிரோஷிமா நகரின் 60 சதவீதப் பகுதிகள், கண் மூடிக் கண் திறப்பதற்குள் தரைமட்டமாயின. 80 ஆயிரம் மக்கள் நொடிப் பொழுதில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர்.

ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும், சரண் அடைய ஜப்பான் மறுத்தது. எனவே, மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 9-ந்தேதி) அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது வீசியது. இந்த அணுகுண்டின் பெயர் "குண்டு மனிதன்". இதனால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். (அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட சாவு பற்றி, அப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது.)

இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ரேடியோவில் பேசினார். "உடனே சரண் அடையாவிட்டால், ஜப்பானை அடியோடு அழித்து விடுவோம்" என்று இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:43 am

போர் டைரி 1943:

ஜன. 13: ஸ்டாலின்கிராடில், ஜெர்மனி படைகள் மீது ரஷியப் படைகள் அதிரடித்தாக்குதல் நடத்தின.

ஜன. 31: ஸ்டாலின் கிராடில் இருந்த ஜெர்மனி தளபதி வான் பவுலஸ், ரஷியாவிடம் சரண் அடைந்தார்.
தொடர்ந்து, அங்கிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஜெர்மனி ராணுவத் தினர் சரண் அடைந்தனர்.

பிப். 25: ஜெர்மனி தளங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் இரவு பகலாக குண்டு வீசித் தாக்கத் தொடங்கின.

மார்ச் 13: ஹிட்லர் சென்ற விமானத்தை வெடி வைத்து தகர்க்க நடந்த முயற்சி தோல்வி அடைந்தது.

மே 24: ஜெர்மனியில் உள்ள டார்ட் மண்ட் நகரின் மீது, பிரிட்டிஷ் விமானங்கள் 2 ஆயிரம் டன் எடையுள்ள குண்டுகளை வீசின.

ஜுன் 22: ஜெர்மனியில் உள்ள வாபர்டால் நகரின் மீது நடந்த குண்டு வீச்சில், 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

ஜுலை 23: போரில் ஏற்பட்ட சரிவு காரணமாக, முசோலினி செல் வாக்கு இழந்தார். அவரை பிரதமர் பதவியில் இருந்து மன்னர் விக்டர் இம்மானுவேல் டிஸ்மிஸ் செய்தார்.

ஜுலை 28: முசோலினியின் "பாசிஸ்ட்" கட்சி கலைக்கப்பட்டது.

ஆக. 17: இத்தாலியைச் சேர்ந்த சிசிலி தீவை அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றின.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:44 am

செப். 3: இத்தாலி சரணாகதி அடைந்தது.

அக். 20: போர்னியோ தீவைக் கைப்பற்றிய ஜப்பான், அங்குள்ள நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களை கொன்று குவித்தது.

அக். 25: பர்மாவில் ரெயில் பாதை அமைக்க, போர்க்கைதிகளையும், பர்மிய மக்களையும் ஜப்பான் ஈடுபடுத்தியது. இந்த முயற்சியில் 60 ஆயிரம் பேர் பலியானார்கள். அதன்பின் ரெயில் பாதை அமைத்து முடிக்கப்பட்டது.

நவ. 26: சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின் ஆகிய முப்பெரும் தலைவர்கள், ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரான் நகரில் சந்தித்துப் பேசினார்கள்.

டிச. 22: ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் மீது நேசப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 17 ஆயிரம் பேர் கொல் லப்பட்டனர். இதனால் ஹிட்லரின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது.

டிச. 24: நேசப்படைகளின் பிரதம தளபதியாக ஐசனோவர் நியமிக்கப்பட்டார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:45 am

இரண்டாம் உலகப்போர் (ஜப்பான் சரணாகதி)


போரின்போது ஜப்பானிய மன்னராக இருந்தவர் ஹிரோ ஹிட்டோ. அவர் போரை விரும்பவில்லை. என்றாலும், அவரைக் கேட்காமல் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தவர் பிரதமர் டோஜோ. போரில் ஜப்பான் ஈடுபட அவரே காரணம். போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, அவரை ஜப்பான் மக்கள் புகழ்ந்தனர். ஆனால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது, மக்களின் வெறுப்புக்கு உள்ளானார். ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ மனம் கலங்கினார். 1945 ஆகஸ்டு 9-ந்தேதி ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார். ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசியது வாழ்நாளில் இதுவே முதல் தடவை. அதுமட்டுமல்ல நேச நாடுகளின் சேனாதிபதியாக இருந்து போரை நடத்திய அமெரிக்க தளபதி மக்ஆர்தரைச் சந்தித்து "போருக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" என்றார்.


ஜப்பானிய தளபதிகள், அமெரிக்காவின் "மிசவுரி" என்ற போர்க்கப்பலுக்குச் சென்றார்கள். அங்கு அமெரிக்காவின் பிரதம தளபதி மக்ஆர்தர் இருந்தார். அவரிடம், சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். ஏற்கனவே ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால், ஐரோப்பாவில் போர் முடிந்துவிட்டது. இப்போது ஜப்பான் சரண் அடைந்ததைத் தொடர்ந்து உலகப்போர் முடிந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:45 am

போருக்கு ஜப்பான் பிரதமர் டோஜாதான் காரணம் என்பது நேச நாடுகளுக்குத் தெரியும். அவரைக் கைது செய்யத் தளபதிகள் சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். என்றாலும் அவர் முயற்சி தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார். அணுகுண்டு வீசப்பட்டதும், ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க தளபதி மக்ஆர்தரை சந்தித்து, ஜப்பான் சரண் அடைவதாக தெரிவித்தார். விசாரணையின்போது, டோஜோ "போருக்கு நான்தான் காரணம்; மன்னர் நிரபராதி" என்று கூறினார்.

டோஜோ குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் சில ஜப்பான் ராணுவ அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று யாராலும் சரியாகக் கணக்கிட இயலவில்லை. போர் வீரர்களும், பொதுமக்களும் மொத்தம் 5 கோடிப்பேருக்கு மேல் பலியானதாக மதிப்பிடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் அழிந்தன. நாசமான நகரங்களுக்கு கணக்கே இல்லை. அணுகுண்டு வீச்சினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் படுகாயம் அடைந்த பலர், சில நாட்களில் மரணம் அடைந்தனர். ஹிரோஷிமா நகரில் உள்ள கல்லறைகளில், இறந்தவர்களின் 1,38,890 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அணுகுண்டுகள் வெடித்த போது ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்கள், உடல் வெந்து கருகிப் போனவர்கள் பல லட்சம் பேர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:46 am

போர் டைரி 1944:

ஜன. 2: நிர்கினியாவை அமெரிக்கா கைப்பற்றியது.

ஜன. 27: ஜெர்மனி ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட லெனின் கிராட் மீட்கப்பட்டது.

பிப். 16: சில இடங்களில் ஜப்பானிய ராணுவத்தை அமெரிக்க ராணுவம் தோற்கடித்தது.

பிப். 17: கானேவ் என்ற இடத்தில், ஜெர்மன் ராணுவத்தின் 10 டிவிஷன்களைச் சேர்ந்தவர்களை ரஷிய ராணுவம் சிறை பிடித்தது.

பிப். 20: ஜெர்மனி மீது பெரும் தாக்குதலை நேசப்படைகள் தொடங்கின.

பிப். 26: இந்த பெரும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க விமானப்படை வீரர்கள் 2,600 பேர் கொல்லப்பட்டனர்.
மார்ச். 18: ஹங்கேரி நாட்டை ஜெர்மனி கைப்பற்றியது.

மார்ச். 24: பெர்லின் மீது விமானத் தாக்குதல் நடத்திய நேச நாடுகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 392 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மார்ச். 28: ஜெர்மன் சிறையிலிருந்து தப்ப முயற்சித்த நேசப்படை வீரர்கள் 47 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப். 4: இந்தியாவில் உள்ள கோஹிமாவை ஜப்பானிய ராணுவம் தாக்கியது.

ஏப். 9: ஜப்பான் கைப்பற்றியிருந்த பர்மாவுக்குள், நேசப்படை வீரர்கள் 'பாரசூட்' மூலம் குதித்தனர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:48 am

ஜுன் 4: ரோம் நகருக்குள் நேசப்படைகள் நுழைந்தன.

ஜுன் 5: இத்தாலி மன்னர் விக்டர் இம்மானுவேல் முடிதுறந்தார்.

ஜுன் 7: பெல்ஜியம் மன்னர் லியோ போல்டு கைது செய்யப்பட்டார்.

ஜுன் 13: இங்கிலாந்து நாட்டை தாக்க வந்த ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஜுன் 28: போப்ரூயிஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் 34,000 ஜெர்மனி வீரர்கள் உயிர் இழந்தனர்.

ஜுலை 3: மின்ஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் ஜெர்மனியை ரஷியா தோற்கடித்தது. அங்கு 1 லட்சம் ஜெர்மனி ராணுவத்தினர், ரஷியாவிடம் யுத்தக் கைதிகளாகப் பிடிபட்டனர்.

ஜுலை 18: ஜப்பான் பிரதமர் டோஜோ ராஜினாமா செய்தார்.

ஜுலை 30: பர்மாவில் 'மியிட்கினா' என்ற இடத்திலிருந்து ஜப்பான் படைகள் வெளியேறின.

ஆக. 2: இங்கிலாந்து நாட்டில், ஜெர்மனி விமானத் தாக்குதல்

ஜுன் 13 முதல் இதுவரை 5,000 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஆக. 8: போலந்து நாட்டில் வார்சாவில் நடந்த போரில் போலந்தை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மாண்டனர்.

ஆக. 15: பிரான்ஸ் தென்பகுதியில் நேசப் படைகளின் விமானப் படையினர் ஆயிரக்கணக்கில் இறங்கினர்.
பாரீஸ் மீட்பு

ஆக. 25: ஜெர்மனி பிடியில் இருந்து, பாரீஸ் விடுவிக்கப்பட்டது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:50 am

செப். 2: பெல்ஜியத்துக்குள் பிரிட்டிஷ் படை நுழைந்தது.

செப். 6: செக்கோஸ்லேவியா நாட்டுக்குள் ரஷியப்படை நுழைந்தது.

செப். 21: பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின.

அக். 7: ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் பெரும் கிளர்ச்சி செய்தனர். யூதர்களை விஷ வாயு மூலம் படுகொலை செய்யும் இடங்கள் அழிக்கப்பட்டன.

அக். 18: செக் நாட்டுக்குள் ரஷியாவின் செம்படைகள் புகுந்தன.

அக். 19: ïகோ தலைநகர் பெல்கிரேடை ரஷியப்படைகள் கைப்பற்றின.

அக். 20: ஒரு லட்சம் ராணுவத்தினருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நேசப்படைகளின் தளபதி மக் ஆர்தர் புகுந்தார்.

நவ. 4: அமெரிக்க ஜனாதிபதியாக நான்காவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவ. 19: பர்மாவை ஜப்பானிடம் இருந்து மீட்க இங்கிலாந்து படைகள் பெருந்தாக்குதல் நடத்தின.

நவ. 20: யுத்தம் காரணமாக லண்டனில் இருந்த "இருட்டடிப்பு" முறை (இரவில் விளக்குகளை அணைத்து விடுவது) நீக்கப்பட்டது.

நவ. 25: ஜப்பானின் சரக்கு கப்பலை பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் தகர்த்தது.

டிச. 1: அமெரிக்காவின் முதலாவது "ஐந்து நட்சத்திர" அந்தஸ்து தள பதியாக ஐசனோவர் பொறுப்பு ஏற்றார்.

டிச. 4: ஜெர்மனி நகரங்கள் மீது பிரிட் டிஷ் விமானங்கள் குண்டு வீசின.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:51 am

இரண்டாம் உலகப்போர் (போருக்குப்பின்...)


ஹிட்லர் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டதும், ஜெர்மனியை நேசநாடுகள் பங்கு போட்டுக் கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் சார்புடைய அராசாங்கம் மேற்கு ஜெர்மனியிலும், ரஷிய சார்புடைய அரசாங்கம் கிழக்கு ஜெர்மனியிலும் அமைக்கப்பட்டன. ஜெர்மனி தலைநகரமான பெர்லின், குண்டு வீச்சின் காரணமாகப் பாழடைந்துபோய் விட்டது.

அந்த நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மேற்கு பெர்லின் மேற்கு ஜெர்மனியிலும், கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியிலும் சேர்க்கப்பட்டன. 1950-ல் கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது. எனவே, அகதிகள் போவதை தடுக்க கிழக்கு பெர்லினையும், மேற்கு பெர்லினையும் பிரிக்கும் வகையில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக