புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
3 Posts - 2%
prajai
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
280 Posts - 41%
heezulia
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_m10பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ? கட்டுரைப்போட்டி எண் 015


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 1:14 am

கட்டுரைப்போட்டி எண் 015

பெண் சிசுக்கொலை தீர்வுதான் என்ன ?


ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால் ,அதை அழிக்க துணிகின்றனர் பெற்றோர்.இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன?பெண்ணென்ன ? பெற்ற மனம் தான் என்ன ? .அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும்,மூட நம்பிக்கைகளும் மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது .இதே சமுதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது , இதே சமுதாயம் தான் மொழி நாடு நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது .ஆனாலும் ஏனிந்த பாகுபாடு ?.அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும் நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள் ,இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர் தாய் கருப்பையிலேயே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர் .இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன ?எங்கே இந்த நஞ்சு விதிக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.

பெண் சிசுக்கொலைக்காக கூறப்படும் காரணங்கள்

"என்ன பெண் குழந்தையா?எப்படி கட்டிக்கொடுக்க போகுற ? "போன்ற சமுதயாத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன .மேலும் நமது சமுதாய நம்பிக்கையின் படி ஆணை மட்டுமே குடும்ப வாரிசாகவும் அவனுக்கே மட்டுமே பெற்றோர் இறந்தால் கொள்ளிவைக்கும் நிலைமையும் இருக்கின்றது . வரதட்சணைப் பழக்கத்தால் மகளென்றால் செலவு என்றும்,மகனென்றால் வரவு என்றும் நினைக்கின்றனர்.இது போன்று ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன .

பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்

கிழக்காசிய நாடுகளான இந்தியா ,சீனா,திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது.ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும்.அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது ,நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது.ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன .மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020- இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் சைனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்குஅதிகமாகவே இருப்பார்.நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது .இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன.மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது.கருக்கலைப்பு செய்யும் பொழுதும் ,பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும்.உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.

பெண் சிசுக்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் - ஒரு ஆய்வு

பெண் சிசுகொலையின் தீவிரத்தை உணர்ந்த அரசு விழித்துக்கொண்டது . வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம்- 1961 அமலில் உள்ளது . இருப்பினும் அனைத்து ஆண்களும் தாங்கள் "வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோம்" என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் .

அடுத்து கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT act -1994 .மெத்தப்படித்த மகப்பேறு மருத்துவர்கள் தொழில் போட்டிக் காரணாமாகவும் பண ஆசையினாலும் கருவை அழிக்க துணிகின்றன.இதில் பெண் மருத்துவர்களும் அடங்குவர் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய செய்தி

மேலும் பெண் சிசுக்கொலை கண்டறியப்பட்டால் குறைந்தபட்ச தண்டனைப் பதினான்கு ஆண்டுகள் தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் கிடைக்கும் .உடந்தையாய் இருந்தவர்களுக்கும் கொலைக்கு தூண்டியவர்கள் என்று கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ஆய்வுக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுவதுடன் அபராதத் தொகையுடன் கூடிய தண்டனைகளும் தரப்படுகின்றன .ஆனாலும் பல உண்மைகள் மருத்துவமனைகளிலும் ,ஆய்வுக்கூடங்களிலும் மூடிமறைக்கப்படுகின்றன.நமது அரசு இந்த விசயத்தில் பாரா முகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

'தொட்டில் குழந்தைத் திட்டம்' மூலம் சிசுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது தமிழக அரசு .இதைப் பின்பற்றி கேரளாவும் 'அம்மா தொட்டில்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது .இதனால் சிசுக்கள் கொல்லப்படுவதும் குப்பைத்தொட்டியில் தெருநாய்களுக்கு இரையாவதும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது .இருப்பினும் பல தாய்மார்கள் குழந்தையை கொன்றாலும் பரவாயில்லை.தத்துகொடுக்கமாட்டேன் என்று அறியாமை இருளிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.

பெண் கல்விக்கும் உரிமைக்கும் ஆதரவான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன .இது சரியாக மக்களைப் போய்ச்சேர அரசு ஆவணம் செய்யவேண்டும்.கிராமத்து பெண்களுக்குத் தங்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு பெறவேண்டும்.குழந்தை இல்லாத தம்பதியினர் 'பெண் குழந்தைகளைத்' தத்தெடுக்க முன்வரவேண்டும்.

சாதிச் சங்கங்களினால் இந்த புரட்சியை செய்ய முடியும்.தத்தமது சாதிகளில் பெண் வீட்டார் அளவுக்கு அதிகமாக அதிக நகைகள் மற்றும் பொருட்கள் தந்து திருமணம் புரிவதைக் கண்டிக்கவேண்டும் .

பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கிடைக்கும் மனவலிமையையும் பொருளாதார மேன்மையையும் ஊடகங்கள் மூலமாக அறியச்செய்யவேண்டும். கைம்பெண்,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இது ஒரு ஊன்றுகோலாய் அமையும். இதனால் கிடைக்கபோகும் பயன் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல.இந்த சமுதாயமே உயர்வை நோக்கி செல்ல உதவும் .அரசு வேலைகளிலும் ,தேர்வுகளிலும் முக்கியமாக குடிமைப்பணிகளுக்கு பெண்ணுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அறியச்செய்ய வேண்டும் .சில தனியார் நிறுவனங்களும் பெருஞ்சேவை நோக்கத்துடன் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் , திறமையுணர்ந்து பதவி உயர்வுகள் கொடுக்கின்றனர்.

கொலைபுறிவோம் அவலத்தை

மேற்கூறியவற்றை பயன்படுத்திக்கொண்டாலே போதும்.இனி மண்ணில் உதிக்கும் பெண்மணிகளைப்பார்த்து இந்த பாரே பாடும் " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா".

இனி கொள்ளிவைக்க ஒரு மகன் இல்லையே என்று புலம்புவது அர்த்தமற்றது .பெண்களும் பெற்றோரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் நடைமுறை என்றோ வந்துவிட்டது . தன்னை வாழவைக்க பெண் பிள்ளை இல்லையே! என்று வருத்தப்படும் காலம் வந்துவிட்டது .

சட்டங்கள் மட்டும் வந்தால் போதுமா ?

ஆண்களே !உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்கப் பழகுங்கள் ,சகப்பணியாளரிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள், போகப்பொருளாய் பெண்டியரைப் பார்ப்பதை மறவுங்கள் ,உயர்ந்து வரும் பெண்மணிகளை எள்ளி நகையாடுவதை நிறுத்துங்கள் .கைகொடுத்து மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்.

பெண்மணிகளே! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா ? கயமை குணத்தை விட்டொழியுங்கள்.உங்கள் இறப்பிற்குப்பிறக்கும் உங்கள் தாய்மை குணம் போற்றப்படும் .பெண்ணின் மகத்தான சக்தியை உணருங்கள்.தவறாக பயன் படுத்தாதீர்கள். கல்வியால் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததியினரையே வழிநடத்தி செல்லும்.பெண் சிசுக்கொலை என்ற வார்த்தை அகராதியிலிருந்து அழிக்கப்படும் நாள் வெகுதூரமில்லை .



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 1:40 am

பெண்ணிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு அழகான கட்டுரை.. வாழ்த்துக்கள்.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 12:36 am

அருமையான கட்டுரை. நல்ல விழிப்புணர்வு. நன்றாக ஆராய்ந்து
எழுதியிருக்கிறார்!
பெண்சிசு கொலைக்கு எதிரான சட்டங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:30 pm

மிக மிக அருமை உண்மையும் கூட.....

பெண்ணினத்தை கொஞ்சம் கொஞ்சமாக வரதட்சணை கொடுக்க அஞ்சி , வளர்க்க சிரமம் என்று அழித்துக்கொண்டே வந்தால் பின் பெண்ணே இல்லாத சூழல் ஏற்படும் அபாயம் உண்டு.....

மிக அருமையான வரிகள் அன்பு பாராட்டுக்கள் நண்பரே..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக