புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
68 Posts - 45%
heezulia
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
5 Posts - 3%
prajai
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
4 Posts - 3%
Jenila
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 1%
jairam
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%
kargan86
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
9 Posts - 4%
prajai
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
6 Posts - 3%
Jenila
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 1%
jairam
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 1%
manikavi
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்பிரமணிய சிவா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 12:05 am

நமது சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும். இதில் விடுபட்டுபோன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம் எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884-ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார் அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார் பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார் பின்னர் கோயமுத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் ( அவற்றில் ஒன்றுகூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை ).

படிப்பு முடிந்தது குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில் போலீஸ் இலாகாவில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். சேர்ந்த மறுநாளே இந்த வேலையை விட்டு விலகிவிட்டார். இவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இதுவே. 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த ஸ்ரீ தாகூர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார் இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக் கைதியாக பிரச்சாரம் செய்து வந்தார்.

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர் இவரது பேச்சை கேட்ட பல இளைஞர்கள் தங்களை தேச சேவையில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமே பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார் இவர்களுக்காக அயராது பாடுபட்டார். அப்போது தான் அவருக்கு வ.உ.சி.-யின் நட்பு கிடைத்தது. அதே காலத்தில் தான் நெல்லை வந்திருந்த மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார். இம் மூவருடைய நட்பு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தேசிய மூம்முர்த்தினர் என்றே குறிப்பிடலாம்.

வ.உ.சி. சிவா இணைந்து செயல்பட்டதால் நெல்லை மாவட்டம் விடுதலை போராட்டத்தின் உலைகளமாக திகழ்ந்தது. இதனை கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருவரையும் சிறைக்கு அனுப்பி மகிழ்ந்தது. இது குறித்து வ.உ.சி தனது சுயசரிதையில்.

இவர் பிரசங்கம் செய்ததற்காகத்
தவம் புரியும்படிதச நல் வருடம்
தீவென் றியம்பினான் நீங்கிலேன் அதற்குக்
தாவில் உதவியை தந்ததற்காக
இருபது வருடமும் இயம்பிய நெல்லையில்
ஒரு பிரசங்கம் உரைத்ததற்காக
இருபது வருடம் தீருவனம்
கற்றோர் மனமும் கலங்கிடச் சொன்னான்
இறையும் கலங்கா தென்னும் கவர்ந்துள
இறையின் கொடையென ஏற்றேன்.

என்று குறிப்பிடுகிறார்.

பின்னால் செய்து கொண்ட மேல் முறையீட்டினால் இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிவாவுக்கு 10 வருட தண்டனை 6 வருடமாக குறைக்கப்பட்டது. சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கேலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்டிய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மோசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கோளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று இயந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர் சிவா. இதன் அடிப்படையில் 1920-ல் சென்னையில் நடைபெற்ற ட்ராட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்.

1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு. மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார். சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார். சிவா வாழ்ந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகள், போராட்டங்கள் அனைத்திலும் சிவா தனது பங்கை முழுமையாக செலுத்தியுள்ளார். அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம். அவற்றிலெல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துனிச்சல் மிக்கவர். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் இவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது. 1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. பின்னர் உவாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 27-11-1922-ல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணமாக அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. இன்றைய நிலை போல் இல்லை தொழு நோயாளியின் நிலைமை இதற்கு சுப்பிரமணிய சிவாவின் நிலைமையும் ஒரு சாட்சி, அவருடைய நோயை காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு கலங்கவில்லை சிவா, கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் தன் பயணத்தை மேற்க்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். பாரத தேசத்தை கடவுளாக கொண்ட சிவா பாரத மாதாவுக்கு கோவில் கட்ட தீர்மானித்தார். தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாலைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் இலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.

நோயின் கொடுமையிலும் ஓயாத உழைப்பு நாடு அந்நியரின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிக்கப் படவேண்டுமென்று அயராது பாடுபட்டார் இதனால் அவரது உடல் நலம் குன்றியது. இந்நிலையில் 1925-ல் கான்பூரில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்ட்கட்சினரின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். உடல் நிலை தேறியவுடன் திருநெல்வேலி வழியாக மேற்கு கடற்கரை யோரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். சிவாவின் உடல் நிலை நாட்பட நாட்பட மிகவும் மோசமடைந்து வந்ததினால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. 22-7-1925-ல் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் பாப்பாரபட்டியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர். இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார் அவரும் நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.



சுப்பிரமணிய சிவா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக