புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
76 Posts - 51%
heezulia
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
16 Posts - 3%
prajai
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
4 Posts - 1%
jairam
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_m10மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 6:39 pm

மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா N1409354433_30205334_8527
நானறிந்த வரை புரட்சியாளர்களிலேயே பலரையும் மிக மிகக் கவர்ந்தவர் சே குவேரா.அவரைப்பற்றி நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.ழீன் பால் சாத்ரே குவேராவை அவர் வாழ்ந்த காலத்தில் சே ஒரு முழுமையான மனிதன் என்று கூறினார். நெல்சன் மாண்டேலாவோ சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம் என்று கூறினார்.

மனித நேயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிய சே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தான். அப்படி ஒடுக்கப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்ய முன் வந்தவன் அவன். எப்பேர்ப்பட்ட மனித நேயம் அது. முதன் முதலாக தன் நண்பன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் லேட்டின் அமெரிக்காவில் பயணம் செய்யும் போது தொழு நோயாளிகளிடம் காட்டிய அவன் பரிவு அவனை மற்ற மானுடர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது.

சே பொலிவிய காட்டில் கொல்லப்பட்ட போது இலத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் அவர் ஒரு ஹீரோவாகவே மதிக்கப்பட்டார். ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய மருத்துவத் தொழிலை கைவிட்டு, தான் பிறந்த ஊரை மறந்து எங்கோ வாழும் மக்களின் துயர் துடைக்க ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் மற்ற சகாக்களுடனும் கியூபாவை முற்றுகையிடும் பொருட்டு கள்ளத் தோணியில் கரிப்பியனைக் கடந்தார். அப்போது கியூபாவை பாட்டிஸ்டா என்ற கொடுங்கோலன் தன் இரும்புப்பிடியில் வைத்திருந்தான். அந்நிய நாட்டில் பழக்கமில்லாத சூழ்நிலையில் தன் சகாக்கள் பலரை இழந்தான். மிஞ்சியவர்களின் துணையோடு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹவானாவிற்குள் நுழைந்து இலத்தீன் அமெரிக்காவின் முதலும் கடைசியுமான சோஷலிச புரட்சியின் வெற்றிக் கொடியை நாட்டினான்.ஆஸ்துமா நோயாளியான சே குவேரா மக்களினத்தை அடிமைப்படுத்துதலும் கொடுங்கோலாட்சியும் எங்கு நடந்தாலும் எதிர்த்து வந்தான். 39 வயதில் பொலிவிய வீரர்களிடம் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது,கோழைகளா சுடுங்கள். உங்களால் சே என்ற ஒரு மனிதனைத்தான் கொல்லமுடியும் என்று கொஞ்சம் கூட கலங்காமல் கர்ஜித்தவன். அவன் கண்களின் தீட்சண்யத்தைத் தாங்கமுடியாமல் கொல்ல வந்த வீரன் பயந்து ஓட அவனை மறுபடியும் சென்று கொல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

யேசு கிறிஸ்த்துவைப்போல் இரண்டு கைகளையும் விரித்து வைத்து அவனைச் சுட்டு கொன்ற அந்த கோழைகள் அவன் இறந்த பிறகும் பயம் நீங்காதவர்களாக அவன் கைகளிரண்டையும் வெட்டி தனியே புதைத்து விட்டார்கள். குவேராவின் இறப்பை நம்ப முடியாத மக்கள் அவன் மீண்டும் உயிர் பெற்று வருவான் என்று தீவிரமாக நம்பினர். இளையர்கள் மக்கள் குவேராவை மறக்க விட மாட்டோம் என்று சத்தியப் பிரமாணமே எடுத்துக்கொண்டனர். சே இறந்து 37 வருடங்கள் கழிந்த பின்பு இன்றும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் காணப்படுகிறான். ஆல்பெர்டோ கொர்டா 1960ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தில் சே குவேரா உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்களுக்கு கடவுளாகவே காட்சியளித்தான்.

சே தன்னுடைய பெரெட்டுடனும் (ராணுவத்தினர் அணியும் தொப்பி) ஒரு தீர்க்கதரிசியின் பார்வையுடனும் ஒரு நினைவாஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது கொர்டா எடுத்த படம் அது. இன்று காபி மக்குகள், போஸ்டர்கள், பனியன்கள் போன்ற எல்லாவித நினைவுப் பொருட்களிலிருந்தும் சே இந்த உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். கொர்டா தனது 72வது வயதில் சமீபத்தில் இறந்து போனது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி பிறந்த எர்னெஸ்டோ குவேரா தனது மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு 1951ம் ஆண்டு தனது நண்பன் கிரானாடோவுடன் சிலி நாட்டுக்கும் பெருவிற்கும் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் பயணமானான். பிறகு குஷ்டரோகிகளின் காலனியான ஹுவாம்போவில் சில காலம் தங்கியிருந்து அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி புரிந்தான். பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்த சே பொகாட்டாவிற்கும் காரகாஸிற்கும் சென்றான். 1953ம் ஆண்டு நாடு திரும்பியவன் தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து பட்டம் பெற்றான். ஃபெர்ரர் என்ற நண்பனுடன் பொலிவியாவிற்குச் சென்றவன் வெனிசுவேலா நாட்டிற்குப் போவதற்கு திட்டமிட்டான். மற்ற அர்ஜென்டைனா மக்களைச் சந்தித்தவன் மத்திய அமெரிக்காவிற்குச் செல்ல முடிவெடுத்தான். பனாமா, கோஸ்டரீகா மற்றும் க்வட்டமேலா வழியாகச் சென்றவன் அங்கு ஹில்டா கடெயா என்ற பெண்ணைச் சந்தித்தான். சில காலத்திற்குப் பின் அவளை மெக்ஸிகோவில் மணந்தான். அங்கு பெருவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது.

1954ம் ஆண்டு ஜூன் மாதம் க்வாட்டமேலாவை முற்றுகையிடும்போது தப்பியோடும் நிலை ஏற்பட்டு மெக்ஸிகோவில் தஞ்சம் புகுந்தவன் நாடு கடத்தப்பட்ட கியூபா மக்களைச் சந்தித்தான். 1955ம் ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோவைச் சந்தித்தவன் கியூபாவை முற்றுகையிடும் திட்டத்தை காஸ்ட்ரோ கூறியபோது அதற்கு ஆதரவளித்து அக்குழுவில் சேர்ந்து ராணுவப் பயிற்சி மேற்கொண்டான்.

1957ம் ஆண்டு கொரில்லாப் படைக்குக் கமாண்டராக அறிவிக்கப்பட்டு, பின்னர் 1958ம் வருடக் கடைசியில் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினான். கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டா ஸாண்டா டொமிங்கோவிற்குத் தப்பியோடினான்.

1959ம் வருடம் குவேராவை ஒரு கியூபன் என்று அறிவித்தபிறகு அந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் துறை தலைவராகவும் பின்பு தேசிய வங்கியின் அதிபராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்டான். 1960ம் வருடக்கடைசியில் சோஷலிஸ்ட் நாடுகளான சீனா, ரஷ்யா மற்றும் செக்கொஸ்லொவேக்கியா ஆகிய நாடுகளுக்கு சென்றான். 1961ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து தொழிற்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டான். அந்த வருடம் சம்பவங்கள் நிறைந்த ஆண்டாக கழிந்தது. ‘ப்லேயா கிரோன் ‘ஐ முற்றுகையிட்டது, உருகுவேயில் நடந்த CIES கூட்டத்தில் கியூபாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டது, அர்ஜெண்டைனாவின் அதிபருடன் ரகசிய ஆலோசனை, பிரேசில் அதிபரால் கெளரவிக்கப்பட்டது என்று பல சம்பவங்கள்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் மாசெட்டியின் தலைமையில் ஒரு கொரில்லாப்படையை அர்ஜெண்டைனாவின் வடக்குப் பகுதிக்கு அனுப்பினான். அந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசும்போது சோஷியலிசத்தை அடைவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியேயில்லை என்று அறிவித்த பிறகு மாலி, கினியா, கானா, டாஹோமே மற்றும் டான்ஸானியா ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டான். 1964ம் வருடம் பீகிங், பாரீஸ், அல்ஜீரியா, மாஸ்கோ, நியூயார்க் ஆகிய நகரங்களுக்கு சென்று பென் பெல்லா போன்றவர்களைச் சந்தித்தான்.

1965ம் ஆண்டு காங்கோவிற்கு சென்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் பற்றி அதிபரிடம் விவாதித்தான். பிறகு கினியா, கானா, டாஹோமே, அல்ஜீர்ஸ், பாரீஸ் வழியாக செல்லும்போது மாசெட்டியின் தோல்வி பற்றிய செய்தி கிடைத்தது. காங்கோ புரட்சியாளர்களை மறுபடியும் சந்தித்து விட்டு பீகிங்கிற்கு ஒரு ரகசிய பயணம் முடித்துவிட்டு வந்தவன், ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னிலையில் தனது எல்லா பதவிகளையும் கியூபா நாட்டு குடியுரிமையையும் துறந்தான். அந்த வருட ஜூலை மாதம் கெய்ரோ வழியாக காங்கோவிற்கு ரகசியமாகப் பயணித்தான். அவனது பதவி மற்றும் கியூபாவின் குடியுரிமை துறப்பு பற்றி செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோ அக்டோபர் மாதம் கியூபன் மக்களுக்கு அறிவித்தார்.



மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 27, 2010 6:39 pm

1966ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கோவை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உருகுவே, பிரேஸில், பராகுவே, அர்ஜெண்டைனா, பொலிவியா நாடுகளில் பயணம் செய்தவன் 1967ம் ஆண்டு பொலிவியாவில் நடந்த கொறில்லாப் புரட்சியின் போது பொலிவிய வீரர்களால் பிடிபட்டு கொல்லப்பட்டான்.

காஸ்ட்ரோவை விட்டு பிரிவதற்கு முன் சே எழுதிய கடிதத்தை ஒரு பொதுக் கூட்டத்தில் காஸ்ட்ரோ படித்தார். அதில் என்னை கியூபாவின் புரட்சியுடன் தொடர்புபடுத்திய கடமை முடிந்துவிட்டது. அந்தக் கடமையை நான் செவ்வனே முடித்து விட்டேன். உங்களிடமும், மற்ற காம்ரேடுகளிடமும், என்னுடைய மக்கள் ஆகிவிட்ட கீயூபன் மக்களிடமும் நான் விடை பெறுகிறேன் என்று எழுதியிருந்தான்


அமெரிக்க உளவுத் துறையின் ஆவணங்கள் சே குவேராவின் வீழ்தலுக்குப் பல காரணங்களை அலசி ஆராய்ந்திருக்கின்றன. அதில் முக்கியமான காரணமாக குவேராவின் அதிவேக தொழில்மயமாக்கல் திட்டமும், மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் திட்டமுமே என்று சுட்டப்படுகின்றன. இத்திட்டங்களால் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த முதல் வருடங்களில் பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டதை சுட்டுகிறார்கள். சே குவேராவின் திட்டங்கள் சோவியத் அரசின் பொருளாதார கொள்கையினின்று மாறுபட்டு சீனாவின் கொள்கைகளை ஒத்திருந்தது கருத்து வேறுபாட்டுக்கு வித்திட்டது. 1964ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அமைச்சர்களின் நியமன சம்பவம் பொருளாதாரக் கொள்கைகளில் அமைச்சர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஒரு வாய்ப்பாகியது. அவ்விரு நியமனங்களுமே குவேரா வெளியேறுவதற்கு ஒரு தூண்டுகோலாகியது. மற்றுமொரு காரணம் குவேராவின் எண்ணமும் விருப்பமுமான மற்ற லேட்டின் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் புரட்சி வெடிக்கச் செய்யும் திட்டம். மற்ற தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பது அதைவிட முக்கியம் என்று போர்க்கொடி தூக்கினார்கள். 1964ம் ஆண்டு டிசம்பர் மாதம் குவேரா அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு மூன்று மாத அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தனது அதிகாரப்பிடி தளர்ந்து போனதை குவேரா அறிந்து கொண்டான். அதனால் கியூபாவை விட்டு விலகி மற்ற நாடுகளில் புரட்சி ஓங்குவதற்கு உதவி புரியும் பொருட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தான் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

சே குவேராவை அவரது விசிறிகள் தெய்வத்துக்குச் சமமாக உயர்ந்த பீடத்தில் வைத்ததன் விளைவு அவனுடைய மறுபக்கம் வெளி வரவே வாய்ப்பில்லாமல் போனது என்ற ஒரு சாரார் கூறுகின்றனர். கியூபாவில் போராட்டம் நடத்திய ‘சே ‘ வேறு அவன் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரத்தைக் கையாண்ட ‘சே ‘ வேறு என்ற கூற்றில் எந்த அளவு உண்மை என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவன் அதிகாரத்தை பெற்றிருந்த போது கியூபாவில் பல கைதிகளை முறையான விசாரணையின்றி கொல்ல உத்தரவிட்ட செயல் அவனுடைய குணாதிசயங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது. காயமடைந்த பகைவரது படையைச் சேர்ந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தவனும் தனக்கு ஏற்பட்ட காதல் உணர்வினால் போரில் தன் செயல் திறன் மங்கிவிடுமோ என்று அஞ்சி காதலையே துறக்க முன்வந்தவனுமான சே குவேராவும்அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு இருந்த சே குவேராவும் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு மனிதர்களாகவே தோன்றினர்.

எது எப்படி ஆயினும் சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவனைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. பிரெஞ்சு அதிபர் மிட்டராண்ட்டின் மனைவி தன்னை சே குவேராவிடம் அடையாளம் காண்பதாய்க் கூறினார். சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர் என்று மிட்டராண்ட் கூறினார்.

குவேராவுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ‘லா ஹிகுஏரா ‘ என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய குவேராவின் சிலையை ராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

அர்ஜெண்டைனாவின் அதிபர் கார்லோஸ் மெனெம் ஃபிடெல் காஸ்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும் சே குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார். அப்போது அவர் குவேராவை ஒரு உலகத்திற்கே உரிய நபர் என்று புகழ்ந்தார்.

குவேரா உண்மையில் இறந்தது அக்டோபர் மாதம் 9ம் தேதியாகயிருப்பினும், கியூபாவில் இன்றும் ஒவ்வொரு அக்டோபர் 8ம் தேதியன்று சே குவேராவின் நினைவு நாளாக அவனது பங்களிப்புக்கு தலை வணங்கி போற்றுகின்றனர். குவேராவின் நினைவாக கான்ஸெர்ட்டுகளும், கியூபாவின் அரசு தரப்பிலிருந்து வெளிவரும் நாளேடான ‘க்ரான்மா ‘வில் நினைவஞ்சலியாக பல பக்கங்கள் ஒதுக்குவதும் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் இயக்கமான ‘பயனீயர்ஸ் ‘ என்ற இயக்கத்தில் ஆறு வயது சிறுவர்கள் சேர்ந்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் சுயநலமில்லாமல் சமுதாயத்திற்கே தங்களை அர்ப்பணிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

அலைடா குவேரா மார்ச் கூறியது போல் ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை. ஏரியேல் டோர்ஃமேன் ‘கம்யூனிஸம் என்ற தீ அதன் முழு தாக்கத்தை இழந்த போதும் புரட்சிக்கும் அதன் கவர்ச்சிக்கும் சே குவேரா ஒரு சின்னமாக விளங்கினான் ‘ என்று கூறினார். எப்பேர்ப்பட்ட உண்மை!

நன்றி
பேரின்பராஜ் ரவிகாந்தன்



மனிதனாக வாழ்ந்தவர்களில் ஒருவன் சேகுவேரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 27, 2010 6:49 pm

மாவீரன் மரணிபப்தில்லை.
மனதில் வாழ்கிறான்.
மனக்கண் முன் நடமாடுகிறான்
இறப்புக்கள்,இருமாப்புக்கொள்ளும்,
மாவீரனை அடையும்போது...
பதிவுக்கு நன்றி தலை...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக