புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed May 05, 2010 3:18 pm

First topic message reminder :

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .




"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri May 07, 2010 7:25 pm

செங்கை ஆழியன் wrote:நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் .... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எனக்கும் தான் இருக்கு கண்ணா ...
கை + நூல் = .......................?
வெண்மை +நெய் =.........................?
உம்பர் என்பதன் பொருள் ?

விடை பகிரவும் ......



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:01 pm

அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri May 07, 2010 9:04 pm

maniajith007 wrote:அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க
ஆமா நீங்க நிறைய கத்துக்கணும் மணி ....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:10 pm

நிர்மல் wrote:
maniajith007 wrote:அப்போ இன்னும் தமிழ்ல நிறைய கத்துக்கணும் போல இருக்கே சொல்லுங்க
ஆமா நீங்க நிறைய கத்துக்கணும் மணி ....


உண்மை உண்மை பெரியவர்கள் வழிநடத்துங்கள்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 07, 2010 10:04 pm

பயனுள்ள திரி பதிவர்களிற்கு நன்றிகள் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Avatar15523pf0
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 12, 2010 1:30 pm

ஏன் இந்த அற்புதமான தொடர் கருத்துக்கள் நின்று விட்டன. உறுப்பினர்களில் யாரும் தமிழ் ஆசிரியர் இல்லையா? யாராவது ஒருவர் சந்து இலக்கணம் - அதாவது இரண்டு சொற்களை இணைக்கும் க், ப், த், போன்றவை எப்போது எங்கே வரும் என்பதை சொல்லும் இலக்கணம் - சொல்லிக் கொடுத்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தெரிந்தவர்கள் யாரேனும் செய்வீர்களா?

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Aug 13, 2010 1:47 am

தமிழ்மொழியை கற்க விரும்புவோரும் அதன் இலக்கண நடையை அறிய அனைவருக்கும் பயன்படும் வகையில் விரிவாக எழுதப்பட்ட இலக்கண ஆய்வுநூல்

இந்நூலின் ஆசிரியர் திரு.எம்.ஏ.நுஃமான்

இதை pdf கோப்பாக தரவிறக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.
தரவிறக்கம்

நன்றி
www.noolaham.org



வின்னைத்தாண்டி வருவாயா?


தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Lovefd
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Aug 13, 2010 2:00 am

பகிர்விற்கு நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Avatar15523pf0
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Aug 13, 2010 2:06 am

சந்தி இலக்கணம்

தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும்பெரிய பகுதியாகவும்
இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்திஇலக்கணம் என்பது இரண்டு சொற்கள்
சேரும்போது ஏற்படும்மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண
நூல்களைஇயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சிஇலக்கணம் என்று கூறுவர்.


எடுத்துக்காட்டாக
ஓடி + போனான் = ஓடிப்போனான் என்று வரும்.


இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும்இடையில் ப் என்ற மெய் எழுத்து தோன்றி இருக்கிறது. இவ்வாறுஇரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள்ஏற்படும்.


சந்தி வகைகள்

இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.

1. கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக
இருக்கிறது.
2. மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.
3. மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது(அழிந்தது)
4. கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்றஎழுத்தாகத் திரிந்தது (மாறியது).


எனவே இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக
வருதல்,தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும்வரும் என
அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன.முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லைவருமொழி என்றும்
கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின்இறுதி எழுத்துக்கும், வருமொழியின்
முதல் எழுத்துக்கும் ஏற்பஅமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும்
இறுதிஎழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.


வல்லின மெய்கள் அல்லது ஒற்றெழுத்துக்கள் மிகுமிடங்கள், மிகா
இடங்களை அறிந்து கொள்வதால் பிழையின்றித் தமிழை எழுதிட இயலும்.

எளிமையான சில இலக்கண விதிகளை விளக்கிக் கூறுவதால் அவர்கட்கு மொழிப்பயிற்சி இலகுவாகலாம்.

கல்லி கேள்வியா? கல்விக் கேள்வியா?
பத்து பதினைந்தா? பத்துப் பதினைந்தா?
பாடா பெண்ணா? பாடாப் பெண்ணா?
எழுத தெரியுமா? எழுதத் தெரியுமா?

இவை
போல்வன குழப்பம் தரும் சில சான்றுகள். இவற்றில் அடிக்கோடிட்ட எழுத்துக்கள்
ஒற்று / புள்ளி எழுத்துக்கள், இவை தொடரில் மிகுந்து வருதலே 'ஒற்று
மிகுதல்' அல்லது 'வல்லினம் மிகுதல்' ஆகும்.

எ-காட்டு

வேலை செய்தான்
வேலைச் செய்தான்

'வேலை
செய்தான்' என்பதில் ஒற்று மிகவில்லை. இது, பணியைச் செய்தான் என்ற பொருள்பட
அமைந்தது. 'வேலைச் செய்தான்' என்பதில் ஒற்று (ச்) மிகுந்தது. 'வேல்' எனும்
கருவியைச் (வேல்+ஐ) செய்தான் என்ற பொருள் பெற்றது.


இவ்விரு தொடர்களும் ஒற்று மிகுந்தாலும், ஒற்று மிகாமலும் இரு வேறு பொருள்பட்டன.


இரு சொற்கள் இணையுமிடத்தில் 'ஒற்று மிகுதல்' உண்டாகும். சொற்கள் இணைவதைப் ‘புணர்ச்சி’ என்பர்.

புணர்ச்சி என்பதன் விளக்கம்

மெய், உயிர் ஆகியவற்றை முதலும் இறுதியுமாகக் கொண்ட பகாப்பதம்
(பிரிக்க
முடியாத சொல்) பகுபதம் (பிரிக்கக் கூடிய சொல்) ஆகிய இரு பதங்களும்
தன்னொடுதானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிப்பொருள் அல்லது வேற்றுமைப்
பொருளினால் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவோ,
விகாரமாகவோ புணருவது 'புணர்ச்சி' எனப்படும்.
(நன்னூல். சூத்: )

எ-காட்டு

பூ + கூட்டம் = பூக்கூட்டம்
'பூ' என்பது - நிலைமொழி (நின்ற சொல்)
'கூட்டம்' என்பது - வருமொழி (வருகின்ற சொல்)

'க்' என்ற ஒற்று / மெய் / புள்ளியெழுத்து இவ்விரண்டின் இடையே மிக்கு நின்றது. 'பூக்கூட்டமானது.

வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம் - ய் ர் ல் வ் ழ் ள் - (18 மெய்கள்)

என
3 வகையாக மெய்யெழுத்துக்களமையும். வல்லின மெய்களுள் ட், ற் நீங்கிய பிற
நான்கும் (க், ச், த் ப்) 12 உயிரெழுத்துக்களுடன் சேருகின்றன. உயிர்மெய்யாக
மாறி சொல்லின் முதலில் வருகின்றன. (ட், ற் என்பன - மொழி முதலில் வாரா).


வருமொழியில் க், ச், த், ப் - வரும்பொழுது எந்த மெய் வருகிறதோ அந்த
மெய்க்கு ஏற்ற மெய்யெழுத்து புணர்ச்சியில் மிகுதலை 'வல்லினம் மிகுதல்'
என்பர்.

புணர்ச்சியின் மாற்றங்கள்:

இரு சொற்கள்
(நிலை மொழி + வருமொழி) சேருமிடத்துப் புணர்ச்சி மாற்றங்கள் நிகழும்.
அவ்விடத்து சொற்கள் இயல்பாகப் புணருதலை 'இயல்புப் புணர்ச்சி'
என்றும், விகாரமாக/ மாற்றங்களுடன் புணருதலை 'விகாரப் புணர்ச்சி' என்றும்
இரு வகைப்படுத்துவர்.

இயல்புப் புணர்ச்சி:


நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாது சேருவது இயல்புப் புணர்ச்சி.

எ-காட்டு
வாழை + மரம் = வாழைமரம்
பொன் + மலை = பொன்மலை

விகாரப் புணர்ச்சி:


புணர்ச்சியில், ஓர் (1) எழுத்தோ, சாரியையோ புதிதாகத் தோன்றுதல்,
(2) வேறுபடுதல் (3) கெடுதல் - என்ற மூன்று நிலைகளில் மாற்றம் பெறலாம்.
அம்மாற்றம், நிலைமொழி, வருமொழிகளின் முதல், இடை, கடை எனும்
மூன்று இடங்களிலும் நிகழலாம். இத்தகைய புணர்ச்சியை 'விகாரப் புணர்ச்சி'
என்பர்.

அ. 'தோன்றல் விகாரம்':

நிலைமொழி, வருமொழிகட்கிடையே புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது ‘தோன்றல் விகாரம்’ ஆகும்.

எ-காட்டு
வாழை + பழம் = வாழைப்பழம்
('ப்' - புதிதாகத் தோன்றியது)

ஆ. 'திரிதல் விகாரம்':


இரு மொழிகளிலும் உள்ள எழுத்துக்கள் மாறி வருவது, ‘திரிதல் விகாரம்’.

எ-காட்டு
மண் + குடம் = மட்குடம்
'ண்', 'ட்' ஆகத் திரிந்தது.


இ. 'கெடுதல்' விகாரம்:

இருமொழிகட்கிடையேயான எழுத்து கெட்டுப்பின் சேருவது.


எ-காட்டு
மரம் + வேர் = மரவேர்
'ம்' கெட்டது; பின் சேர்ந்தது.

மேற்சுட்டிய
புணர்ச்சி மாற்றங்களில் ஒன்றான 'தோன்றல் விகாரம்' என்பதனை ஒட்டியே நாம்
காண இருக்கும் 'வல்லினம் மிகுதல்' அல்லது 'ஒற்று மிகுதல்' அமைகிறது.

வல்லினம் மிகுதலின் விதிகள்:


1. 'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே'
(நன். சூத்: 165)

-என்பது
இலக்கணவிதி. அதாவது நிலைமொழியில் உயிர் எழுத்துக்கள் இறுதியாக நிற்க,
வருமொழி முதலில் கசதப வரின், அவ்விடத்து வந்த வல்லின மெய்கள் மிகுந்து
வரும். சிறுபான்மை மிகாமலும் வரும் என்பது பொதுவிதி.


எ-காட்டு
ஆடூஉ + குறியன் = ஆடூஉக் குறியன்

நிலைமொழி - ஆடூஉ (ஆண்மகன்)
'உ'கரம்* என்பது இதன் இறுதி எழுத்து. அதாவது உயிரீறு.

வருமொழி - குறியன் (சிறியவன்)
(க்+உ = கு)


வருமொழி
'க்' என்ற மெய்யே, இரு சொற்களின் இடையில் மிகுந்து வந்த வல்லின
மெய்யாகும். எனவே 'ஆடூஉக்குறியன்' என்றானது இதனை அல்வழிப்புணர்ச்சியில்
அடக்குவர்.



எ-காட்டு
செட்டி + தெரு = செட்டித்தெரு
(ட் + இ) (த் + எ)

நிலைமொழியில்
'இ' என்ற உயிரீறு நிற்க, வருமொழியில் 'த்' என்ற மெய்முதல் சேருமிடத்து
'த்' என்ற மெய், இடையே மிகுந்தது. ‘செட்டித்தெரு’ என்றானது, இதனை
வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.


இவ்வல்லின மெய்கள் உயிரீற்றின் முன் இவ்வாறு புணரும். இனி, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்பதன் விளக்கம் காணலாம்.



*கரம், காரம் - என்பன சாரியைகள்
கரம் - குறில் எழுத்தையும் ('எ'கரம்), ('உ'கரம்)
காரம் - நெடில் எழுத்தையும் ('ஏ'காரம்), ('ஐ'காரம்) சுட்டுவன.



புணர்ச்சியின் வகைகள்



1.வேற்றுமைப் புணர்ச்சி,
2.அல்வழிப் புணர்ச்சி
என இருவகையாகப் புணர்ச்சியைக் குறிப்பர்.

எ-காட்டு
'கடவுட் கருணை' - வேற்றுமைப் புணர்ச்சி
‘கடவுள் கருணை செய்தார்’ - அல்வழிப் புணர்ச்சி

இவை எவ்விதம் வேறுபட்டன?

'ஐ' முதல் 'கண்' வரை உள்ள வேற்றுமை உருபுகள் மறைந்தோ அல்லது வெளிப்பட்டோ வருமாறு சொற்கள் புணருதல், 'வேற்றுமைப் புணர்ச்சி'.

வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணருதல் 'அல்வழிப் புணர்ச்சி'.

தொகையும் விரியும்:


வேற்றுமைஉருபுகள் மறைந்து வந்தால் 'வேற்றுமைத் தொகை' என்றும்; மறையாமல் வெளிப்படையாக வந்தால் 'வேற்றுமை விரி' என்றும் கூறுவர்.

வேற்றுமைத் தொகை
வேற்றுமை விரி

நிலங்கடந்தான் ('ஐ' - மறைந்தது)
'நிலத்தைக் கடந்தான்'
('ஐ' - வெளிப்படை / விரிந்தது)
கல்லெறிந்தான் ('ஆல்' மறைந்தது)
'கல்லால் எறிந்தான்'
('ஆல்' / வெளிப்படை)
கொற்றன் மகன் ('கு' - மறைந்தது)
'கொற்றனுக்கு மகன்'
('கு' - வெளிப்படை)
மலை வீழருவி ('இன்' - மறைந்தது)
மலையின் வீழருவி
('இன்' - வெளிப்படை)
சாத்தன் கை ('அது' - மறைந்தது)
சாத்தனது கை
('அது' - வெளிப்படை)
குன்றக்குகை ('கண்' - மறைந்தது)
குன்றத்தின் கண் குகை
('கண்' - வெளிப்படை)

வேற்றுமையாவது யாது?

பொருளை வேறுபடுத்துவது வேற்றுமையாம்.

எ-காட்டு
'அமுதன் கொடுத்தான்' - எம்மாற்றமும் இல்லாத எழுவாய்த்தொடர்.
'அமுதனுக்குக் கொடுத்தான்' - மாற்றமுள்ள தொடர்.

பொருள் மாற்றம் தரும் எழுத்தான 'கு' என்பது வேற்றுமை உருபாகும்.



வின்னைத்தாண்டி வருவாயா?


தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் - Page 2 Lovefd
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Fri Aug 13, 2010 5:47 am

அன்புடையீர், தங்களின் நீண்ட, மிக தெளிவான விளக்கத்திற்கு மிகுந்த நன்றி! என்னுடைய கேள்வியை பொருட்டாக மதித்து பொறுமையாக பதிலளித்தற்கு மீண்டும் நன்றி! என் நீண்ட கால சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்தது. இதை ஈகரை நண்பர்களின் சிறப்பாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக