புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
62 Posts - 57%
heezulia
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
104 Posts - 59%
heezulia
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_m10டாக்டரிடம் கேளுங்கள்- - Page 3 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரிடம் கேளுங்கள்-


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Wed Apr 21, 2010 12:22 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
மெலிந்த தேகம்.. மாறாத சோகம்!
‘‘எனக்கு வயது[You must be registered and logged in to see this link.] 43. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பப் பை நீக்கப்பட்டது. கேன்சர் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று டாக்டர் சொன்னாலும், குழப்பமாக உள்ளது. வெள்ளைபடுவது, வலது மார்பில் பால் போல் திரவம் வருவது என்ற பிரச்னைகளால் பயந்துகிடக்கிறேன். எனக்கு தெளிவு தாருங்கள், டாக்டர்.’’
டாக்டர் ஆர்.ஆர்.ராய் (கேன்சர் சிறப்பு நிபுணர், சென்னை):- ‘‘கர்ப்பப் பையை நீக்கியவர்களுக்கெல்லாம் கேன்சர் வரும் என்று பயப்படத் தேவை இல்லை. கர்ப்பப் பை நீக்கும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களைப் பொதுவாக மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு தடவை செக்கப்புக்கு வரச் சொல்வார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மருத்துவரிடம் தெளிவாகக் கூறி விளக்கம் பெறுங்கள்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது எல்லாமே நார்மலாக உள்ளது. பயப்படவும், குழம்பவும் அவசியமில்லை. வெள்ளைப்படுதல், மார்பகத்தில் திரவம் வருதல் போன்றவை இன்ஃபெக்ஷனால்கூட இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபயாடிக் மாத்திரை கள் எடுக்கலாம். கர்ப்பப் பை நீக்கியதும் சில பெண்களுக்கு இதுபோல் வருவதுண்டு. கவலைப் படவேண்டாம். நல்ல உணவு, ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை | இவை போதும், உங்களைத் தெளிவாக்க!’’
——————————————————————————————————–
‘‘என் வயது 53. இரண்டு ஆண்டுகளாக யானைக்கால் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளேன். இந்த நோய்
பூரணமாகக் குணமாக எந்த ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்? இதற்கான இலவச மருத்துவமனை
எங்காவது உள்ளதா? தற்போது இடது காலில் உள்ள நோய், வலது காலுக்கும் பரவுமா? மேலும்
பரவாமல் தடுக்க என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’
டாக்டர் ஏ.டி.செல்வகுமார் (இணை இயக்குநர், நோய்பரப்பி களால் உண்டாகும் நோய் தடுப்புப் பிரிவு, சென்னை): ‘‘பைலேரியா என்னும் யானைக்கால் நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க முடியாது. சிகிச்சை மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்; மேலும் பரவாமல் தடுக்கலாம். சுடுநீர் தெரபி, காற்றழுத்த தெரபி, மின்காந்த தெரபி போன்ற சிகிச்சை முறைகள் வீக்கம் அதிகமாகாமல் தடுக்கும்.நோயால் பாதிக்கப்பட்ட காலை நீங்கள் சுத்தமாக கழுவிப் பராமரித்தல் அவசியம். சாதாரண சோப்பு அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு தினந்தோறும் கழுவ வேண்டும். விரல் இடுக்குகள் மற்றும் தோலின் மடிப்பு பகுதிகளில் ஈரப்பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் புண் ஏற்பட்டால் நைட்ரோ ஃப்யூரோசான் களிம்பும், விரல் இடுக்கில் வரும் சேத்துப் புண்ணுக்கு விட்ஃபீல்டு பசையையும் தடவவேண்டும். கால், கை நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சொத்தைப்பல் இருந்தால் அகற்ற வேண்டும். கால் வீக்கம் இருந்தால், தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தவறாது எலாஸ்டிக் பேண்டேஜ் கட்டவேண்டும். தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும் காலை சற்று உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சியும் மசாஜும் அவசியம்.உணவில் கொழுப்பையும் உப்பையும் குறைத்து, கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொசுவலை, கொசுவத்தி, கொசு தடுப்பு களிம்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை இரவில் உபயோகித்து, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும். இந்நோய் உங்களிடமிருந்து பிறருக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் குடும்பத்தினர் அனைவரும் டி.இ.சி என்ற மாத்திரை எடுப்பது அவசியம். இந்த மாத்திரை, யானைக்கால் நோயை உண்டாக்கும் லார்வாக்களை அழிக்கும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற உறுப்புகளுக்கு நோய் பரவாமலும் தடுக்கும்.யானைக்கால் நோய் பரம்பரை வியாதி அல்ல. க்யூலக்ஸ் என்ற கொசுக்களால் ஏற்படுவது. இந்நோய் வந்த மனிதனின் ரத்தத்தில் மைக்ரோ பைலேரியா என்னும் லார்வாக்கள் (குட்டிப் புழுக்கள்) கலந்துள்ளன. அந்த மனிதனை கொசு கடிக்கும்போது, ரத்தத்தோடு சேர்ந்து இந்தக் குட்டி புழுக்களும் கொசுவின் உடலுக்குள் சென்று வளர்கின் றன. பிறகு, இன்னொரு
மனிதனை அந்தக் கொசு கடிக்கும்போது அவனது உடலுக்குள் லார்வாக்கள் செலுத்தப்படு கின்றன. அவை வளர்ந்து, ரத்த நாளங்களில் கலந்து நிணநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் கால் வீக்கம், விரைவீக்கம், பெண்களுக்கு மார்பகம், பிறப்புறுப்பு போன்றவை பாதிக்கப்படு கின்றன. யானைக்கால் நோய்க்கான சிகிச்சை மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் அரசு பொது மருத்துவமனை களில் செயல்படுகின்றன. இங்கே டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன..’’
———————————————————————————————————-

‘‘எனது பெண்
குழந்தைக்கு இப்போது 10 மாதம். 6.9 கிலோ எடை தான் இருக்கிறாள். இந்த வயதுக்கு இது
குறைவான எடை என்று தோன்றுகிறது. எவ்வளவு போராடினாலும் சிறிதளவுதான் சாப்பிடுகிறாள்.
அவளது இந்த ஒல்லி உடல்வாகு வாழ்நாள் முழுதும் தொடருமா (என் கணவரும் மாமியாரும்
ஒல்லி உடல்வாகு உடையவர்கள்)? எந்த உணவை, எந்த அளவு கொடுத்தால் அவள் புஷ்டியாக
ஆவாள்?’’
டாக்டர் ஜே. விஸ்வநாத்(குழந்தை மருத்துவ நிபுணர், சென்னை): ‘‘பொதுவாக 10 மாதங்களில் இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 7 கிலோதான். எனவே, எடை குறைவாக இருப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். பிறக்கும்போது குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும். இது ஆறு மாதங்களில் இரு மடங்காகும். ஒரு வருடத்தில் மூன்றரை மடங்காகும். இரு வருடத்தில் 4 மடங்காகும். பிறக்கும்போது சராசரி 51?செ.மீ. ஆக உள்ள குழந்தையின் உயரம், ஒரு வருடத்தில் 77? செ.மீ. ஆகிறது. அதேபோல், பிறக்கும்போது தலைச் சுற்றளவு சராசரியாக 35?செ.மீ. இருக்கும். ஓராண்டில் 45? செ.மீ. வரை வரும். இந்த அளவுகளுடன் ஒப்பிட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளது.மேலும், பிறந்தபோது ஒல்லியாக இருக்கும் குழந்தை எப்போதுமே அப்படி இருக்கும் என்பதில்லை. அப்பாவோ, அம்மாவோ மெலிந்த தேகம் கொண்டிருந்தால் குழந்தையும் அப்படி இருக்கும் என்று நினைப்பதும் தவறு. உங்கள் குழந்தைக்கு புரோட்டீன், கார்போஹைட் ரேட், கொழுப்பு, தாதுப்பொருள் கலந்த சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். அப்படியும் மெலிந்து கொண்டே போனால், குழந்தைநல நிபுணரின் ஆலோசனையுடன் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை இருந்தால் சிகிச்சை மேற்கொள்ளவும். 9 மாதங்கள் ஆனதுமே காலையில் இரண்டு சிறிய இட்லிகளும், மதியம் மற்றும் மாலையில் சாதம், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றோடு நெய் கலந்தும் தரவேண்டும். இவற்றுடன் தாய்ப் பால் அல்லது 500 மி.லி. பிற பாலும் தரவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை, மீன் கொடுக்க லாம்.சிறிது சிறிதாக சாதத்தின் அளவு அதிகரிக்கப்படவேண்டும். பருப்பு சோறு இருவேளை தரலாம். தாய்ப்பால் அல்லது வேறு பால் அருந்தும் குழந்தைக்கு டானிக்குகள் தேவை இல்லை..’’
————————————————————————————————————–

‘‘எனக்கு வயது 50. மூன்று குழந்தைகள். எல்லாமே சுகப்பிரசவம். கடந்த சில ஆண்டுகளாக, இருமினாலும், தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் வெளியேறிவிடுகிறது. சிலசமயம், சிறுநீர் கழிக்க டாய்லெட் செல்வதற்குள் போய்விடுகிறது. வயதானால் இப்படி ஆகுமா? இதைப்பற்றி எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டே இதுநாள் வரை இருந்துவிட்டேன். என் பிரச்னைக்கு ‘அ.வி’ ஒரு வழி சொல்லுமா?’’
டாக்டர் கார்த்திக் குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட் மற்றும் பெல்விக் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜன்): ‘‘சிறுநீர் அடக்க முடியாமல் போவது மற்றும் உங்களுக்கு இருக்கும் அடியிறக்கம் போன்றவை வயதானதால் மட்டும் வரும் பிரச்னைகள் இல்லை. இரண்டு, மூன்று குழந்தை பிறந்த பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வரும் பிரச்னைகள் இவை.பிறப்பு உறுப்பு வழியாக அடிக்கடி பிரசவம் (நார்மல் டெலிவரி) ஆகும்போது, அப்பகுதியின் தசைகளும் நரம்புகளும் பாதிக்கப்படுவதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம். நார்மல் டெலிவரியான பெண்களில், 40 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்னை உண்டு. உங்களுக்கு முதலில் ‘யூரின் – கல்ச்சர் டெஸ்ட்’ செய்ய வேண்டும். ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதில் தெரிந்துவிடும். சிறுநீரகத்தில் கல் எதுவும் இருக்கிறதா என்று அறிய ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கும் செய்துகொள்ளலாம். இவை முதல்கட்ட பரிசோதனைகள். பிறகுதான் உங்கள் பிரச்னைக்கு உரிய பிரத்யேக டெஸ்டான ‘யூரோடைனமிக்ஸ்’ என்ற பரிசோதனை செய்யவேண்டும். என்ன வகையான சிகிச்சை தேவை என்பதை அறிய இந்தப் பரிசோதனை உதவும்.அவசரமாக சிறுநீர் போகவேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளிலேயே குணப்படுத்தி விடலாம். அடியிறக்கம் இருப்பதால் சிரித்தாலும் தும்மினாலும் சிறுநீர் வந்துவிடும் பிரச்னைக்கு, ஸ்லிங் ஆபரேஷன் என்று ஒரு அறுவைசிகிச்சை செய்யலாம்..’’
—————————————————————————————————————–

‘நான்கைந்து மாதங்களுக்கு முன் என் கணவர் திடீரென, தனக்கு மயக்கமாக வருவதாகவும், இரு கண்களிலும் பார்வை தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு, காலையில் எழுந்ததும் மயக்கம் வருகிறது என்றார். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை பார்த்தது,
தூக்கமின்மை, நேரத்துக்கு சாப்பிடாதது ஆகியவை காரணங்கள் என டாக்டர் சொன்னார். அவர் வயது 37. அவருக்கு வந்திருப்பது குறைவான ரத்த அழுத்த நோயா? அப்படி இருந்தால் கண்பார்வை மங்குமா?’’
டாக்டர் தேவதாஸ் (பொது மருத்துவ நிபுணர், திருச்சி):
‘‘சாதாரணமாக நல்ல உடல்நலத்துடன் இருப்பவர் களுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் வரவே வராது. அனீமியா போன்ற அதிக ரத்தம் விரயம் ஆகும் குறை பாடு உள்ளவர்களுக்கோ, விபத்தின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கோ மற்றும் இதயத் துடிப்பு அதிகமாகத் துடிப்பவர்களுக்கோ மட்டும்தான் இது ஏற்படும்.இதனால் உடலின் வலு முழுவதும் குறைந்து, உடம்பே ஒருவித குளிர்நிலைக்கு வரலாம். உங்கள் கணவருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இல்லாததால், அவருக்கு குறைந்த அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் கண்கள் பாதிக்கப்பட்டதற்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பார்வை மங்குவதை அப்படியே விட்டுவிடாமல், தகுந்த கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். எதற்கும் கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது..’’

[You must be registered and logged in to see this link.]



pillaignpthy
pillaignpthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/02/2013

Postpillaignpthy Sat Feb 09, 2013 12:59 pm

எனக்கு பெண்ணாக மாற ஆசையாக இருக்கிறது! அதற்க்கு ஒன்னரை லட்சம் வரை செலவாகும் என்று சொல்கிறார்கள்! யாராவது உதவி செய்வார்களா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 09, 2013 6:45 pm

pillaignpthy wrote:எனக்கு பெண்ணாக மாற ஆசையாக இருக்கிறது! அதற்க்கு ஒன்னரை லட்சம் வரை செலவாகும் என்று சொல்கிறார்கள்! யாராவது உதவி செய்வார்களா?
இவருக்கு என்ன உதவி வேணுமாம் ?? ஒன்னரை லட்சம் கேட்கிறாரா?! இல்லை மருத்துவமனை எங்கிருக்கிறது என கேட்கிறாரா என்ன?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 09, 2013 10:38 pm

ராஜா wrote:
pillaignpthy wrote:எனக்கு பெண்ணாக மாற ஆசையாக இருக்கிறது! அதற்க்கு ஒன்னரை லட்சம் வரை செலவாகும் என்று சொல்கிறார்கள்! யாராவது உதவி செய்வார்களா?
இவருக்கு என்ன உதவி வேணுமாம் ?? ஒன்னரை லட்சம் கேட்கிறாரா?! இல்லை மருத்துவமனை எங்கிருக்கிறது என கேட்கிறாரா என்ன?
இரண்டும் இல்லைன்னு நினைக்கிறேன் ஹி ஹி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக