புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
59 Posts - 50%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
12 Posts - 2%
prajai
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
9 Posts - 2%
jairam
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:36 am

நாங்கள் தடங்கல்களைக்
கவனிக்கிறோம்.

பாண்டி கடலில் விழுந்த
காசாய் இருளில்
தொலைந்தான்.

விழுந்தவள் விழுந்தவள்தான்.
விழிக்கவில்லை. ஐம்பது கிலோ
தங்கம் அசையவில்லை.

அந்தச் சுத்தத் தங்கத்தை
அவன் சுடவைத்துக்
கொண்டேயிருந்தான்.
தொட்டால் ஒட்டும் கெட்டி
இரவு.

மேலே பொத்தல் வானம்.
கீழே கத்தும் கடல்.

செத்துப் போன படகு.
சிறகில்லாத மனிதர்கள்.

நேற்று வந்ததும் அதே நிலா.
இன்று வந்ததும் அதே நிலா.

நேற்று வந்த நிலாவில் கறை
என்பது அதன் கன்னத்து
மச்சமாய் இருந்தது. இன்று
வந்த நிலாவில் அது கண்ணீரின்
மிச்சமாய்த் தெரிந்தது.
இயற்கை அப்படியேதான்
இருக்கிறது. அர்த்தம்
கொடுப்பவன் மனிதன்.
துள்ளி விளையாடிய ஜெல்லி
மீன்களும் உள்ளே உறங்கப்
போய்விட்டன.

அலைகள்கூட உறக்கத்தில்
புரண்டு புரண்டு படுத்துக்
கொண்டிருந்தன.
நட்சத்திரங்களைக் காவலுக்கு
வைத்துவிட்டு நிலாகூட
உறங்கிவிட்டது.

வாடைக் காற்றுக்குத்
தூக்கத்தில் நடக்கிற வியாதி
போலும். தட்டுத் தடுமாறி
வீசிக்கொண்டிருந்தது.

அந்தக் கடல்வீதியில் மீனவர்
நால்வரும் கலைவண்ணனும்
மட்டும் கண்ணுறங்கவில்லை.
விம்மிவிம்மித் தன் முகத்தில்
தானே அறைந்துகொண்டு,
அவன் தோளில் முட்டிமுட்டி
அவள் அழுதாள்.

சுமப்பவனுக்குத்தான் தெரியும்
சாலையின் தூரம்.
விழிப்பவனுக்குத்தான் தெரியும்
இரவின் நீளம்.

கலைவண்ணன் கண்கள் போலவே
கிழக்கு வானமும் சிவந்தபோது
- அந்தச் சின்னமணித்தாமரை
சிறுவிழி திறந்தது.
தலையை அசைத்தது. சங்கீதம்
முனகியது.

இரவில் அணைந்தணைந்து எரிந்த
விளக்குகளைப் போலவே அவள்
விழிகளை முடிமுடித் திறந்தாள்.
அவளுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. விழிப்படலத்தில்
விழுந்த காட்சிகள் முளைக்குச்
சென்று சேரவில்லை.

இப்போது நான்
எங்கிருக்கிறேன்?
என் மடியிலிருக்கிறாய். ஓர்
ஏழையின் உள்ளங்கையிலிருக்கும்
தங்க நாணயத்தைப் போலவும்
- தூக்கணாங்குருவிக் கூட்டின்
ஆழத்தில் கிடக்கும் அதன்
குஞ்சைப் போலவும் நீ
பாதுகாப்பாயிருக்கிறாய்.
அவள் ஞாபகக் கண்ணிகளை
அறுந்த இடத்திலிருந்து முடிச்சுப்
போட்டாள். விளங்கிவிட்டது.
பள்ளி கொண்டவள் துள்ளி
எழுந்தாள். பயந்து
கத்தினாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:36 am

படகு இனி ஓடுமா?
ஓடாதா?

பதறாமல் கேள். இந்தப்
படகு இனி ஓடாது. இதயம்
உடையாதே. எதார்த்தம்
கேள். இந்தப் படகு
இறந்துவிட்டது. இப்போது இது
பிணம். இந்தப் பிணத்தில்
மொய்த்திருக்கும் ஈக்கள்
நாம். ஆனால், என்
காதலியே. ஐப்பசி
மாதம்போல் அழுது
வடியாதே. நம் பிறவிப்
பெருங்கடல் கடந்து முடிக்க
இதுவொன்றே படகென்று
எண்ணாதே.

எல்லாக் கடலுக்கும்
கரையுண்டு. எந்தத்
துன்பத்துக்கும் முடிவுண்டு.
பொறு. மீட்சிவரும்.
நிறுத்துங்கள்.
இப்போதாவது உண்மை
சொல்லுங்கள்.
எப்போதும் உண்மைதான்
சொல்லுகிறேன்.

இல்லை. என்னை நீங்கள்
அழைத்து வந்தது சமுத்திரத்தை
அறிமுகப்படுத்தவா? இல்லை

சாவை அறிமுகப்படுத்தவா?
அதற்குமேல் பேச்சுவராமல்
சப்தம் கேட்டு ஓடிவந்த சலீம்
சமையல்கட்டுக்குச் சென்று
இரண்டு கோப்பைகள்
கருந்தேநீர் கொண்டு
வந்தான்.

கலைவண்ணன் அதைவாங்கித்
தோளில் புதைந்தவளின்
தலைதடவி, தேநீர் குடி
என்று செல்லவார்த்தை
சொன்னான்.

கண்ணீர்விட்டுக் கண்ணீர்விட்டே
உடம்பில் தண்ணீர்வற்றிப்
போனவளுக்கு அது
தேவைப்பட்டது.

விசும்பிக்கொண்டே பருகினாள்.
இரவெல்லாம் பழுதுபார்க்கும்
முயற்சியில் களைத்துப்போன
மீனவர்கள் அவர்களைச் சுற்றிப்
பரவினார்கள்.

இங்கிருந்து கரை எவ்வளவு
தூரம் பரதன்?
இடைமறித்தாள் தமிழ்.
இங்கிருந்து மரணம் எவ்வளவு
தூரம் என்று கேளுங்கள்.

கடலுக்குள் 45 கிலோ
மீட்டர் தூரம்
வந்திருப்போம். -
யோசித்துச் சொன்னான்
பரதன்.

ஆபத்தை உணர்த்தும்
அறிகுறியாய் இரவில் விளக்கை
அணைத்தணைத்து எரித்தீர்கள்.
பகலில்..?

அதோ பாருங்கள்.
பாண்டி கைகாட்டினான்.
கலைவண்ணன் அண்ணாந்து
பார்த்தான்.

இசக்கியின் இடுப்பு லுங்கியை
மேற்கூரையின் உச்சிக்கம்பம்
கட்டியிருந்தது.
இடம் பொறுத்துப் பொருள்
வேறு. இடுப்பில் கட்டினால்
லுங்கி, கம்பத்தில் கட்டினால்
கொடி.

அதுதான் இப்போது அபாய
அறிவிப்பு.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:37 am

சிவந்த கிழக்கின்
உதயரேகைகள் கடல்நீரில்
கவிதை எழுதின.

யார் முகத்திலும்
சந்தோ„மில்லை. எல்லார்
முகத்திலும் இறுக்கம்.
ஓ. படகின் மரணத்துக்கு
மெளனாஞ்சலியா?
சலனமற்ற சித்திரங்களாய் -
சப்தமற்ற வாத்தியங்களாய்
அந்த
ஆறு மனித ƒஜீவன்களும்
சொல்லறுந்து செயலிழந்து துக்கப்பட்ட
பொழுதிலே - வாழ்வின் சுமையறியாது,
மரணத்தின் பயமுமறியாது அங்கே துள்ளிக்
குதித்தாடிய ƒஜீவன் ஒன்றுண்டு.

அந்த ஏழாவது ƒஜீவன் - சுண்டெலி.
அது வால் தூக்குவதையும் வளைந்தோடு
வதையும் கிரீச் கிரீச்சென்னும் ஒரு
வார்த்தையை வைத்துக்கொண்டு அது பல
பா¨„ பேசுவதையும் தங்களை மறந்து
அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
வேளையில் - அங்கே நிலவிய அமைதி
சகிக்காத தமிழ்ரோƒஜா ஆவேசம் கொண்டு கத்தினாள்.

என்னை எப்போது கரை சேர்க்கப்போகிறீர்கள்?
சப்தம் கேட்டுப் பயந்த காற்று சற்றே ஒதுங்கி வீசியது.
அவள் தங்கத் தோள்களில் தடம்பதிய அழுத்திய
கலைவண்ணன்-

பொறுமையாய் இரு. பொறுமையாயிருந்தால்
எதையும் சாதிக்கலாம்.
எதைச் சாதிப்பீர்கள்?

பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
ஓர் இடைவேளைக்குப் பிறகு அவள் அழுகை
தொடர்ந்தது.

அவள் கரம்பற்றி விரல் இடுக்கில் விரல்
கோத்தவன் தன் அமைதிப்பணியை ஆரம்பித்தான்.
சோகம் தெரியாமல் துள்ளிக்குதிக்கிறது. நீயும்
தற்காலிகமாய்ப் பகுத்தறிவை மறந்துவிடு.
சோகத்தைச் சுண்டி எறிந்து ஒரு சுண்டெலியாகி
விடு சுந்தரி..

படகின் விளிம்பில் வால்தூக்கி நின்ற
சுண்டெலி அவளைப் பார்த்து வக்கணை காட்டியது.
அவளுக்கோ - பசித்தது. வாய்விட்டுக் கேட்க
மனமில்லை.
பொத்திவைத்த அழுகை பொத்துக் கொண்டது.

மனிதன் நினைக்கிறான் -
இந்தப் பிரபஞ்சமே
தனது பிடியிலென்று.
வானம் இடிந்தாலும் பூமி
பிளந்தாலும் ஊழிவெள்ளம்
உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளை
நனைத்தாலும்
தன் புகழ் அழியாதென்று
தருக்கித் திரிகிறான்.

எனது புகழ் - எனது சாதனை
- எனது இலக்கியம் -
எனது பெயர் இவையெல்லாம்
காலம் என்ற பரிமாணத்தின்
கடைசி வரை, காலத்தையே
வென்றுவாழும் என்று
கனாக்காண்கிறான்.

ஆனால், பூமி அவனைப்
பார்த்துப் பொறுமையாய்ப்
புன்னகைக்கிறது.
இந்தப் பூமி பிறந்து இருநூறு
கோடி ஆண்டுகள்
இருக்குமென்பது ஆராயப்
புகுந்தவர்களின்
தோராயக் கணக்கு.

இதில் முதல் உயிர் முளைத்தது
முன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு
முன்புதானாம்.
196 1/2 கோடி ஆண்டுகள்
இந்தப் பூமி வெறுமையில்...
வெறுமையில்... யாருமற்ற
தனிமையில்.

காற்றின் ஓசையும் - கடலின்
ஒலியும் - இடியின்
பா¨„யும் தவிர 196 1/2
கோடி ஆண்டுகள் வேறோன்றும்
சப்தமில்லை.

முதல் உயிர் பிறந்தது
முன்றரைக் கோடி ஆண்டுகட்கு
முன்புதான் என்றால்
குரங்கிலிருந்து மனிதன் குதித்தது
35 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்புதான்.

பூமியின் காலக்கணக்கில் மனிதன்
என்பவன் ஒரு துளி.
இந்த இடைக்காலத்தில் இந்தப்
பூமி என்னும் கிரகத்தில்
எத்தனையோ ƒஜீவராசிகள்
தோன்றித் தோன்றித்
தொலைந்திருக்கின்றன.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:37 am

மனிதன் என்பவனும் இந்தப் பூமி
என்னும் கிரகத்தில் வந்துபோன
ஒரு ƒஜீவராசி என்று நாளை
வரலாறு பேசலாம்.

இதுவரை வந்த ƒஜீவராசிகளில்
மனிதனே சிறந்தவனெனினும் -
பூமியைப் புறங்காணும் புƒபலம்
மிக்கவனெனினும்
காலச்சூழலில் அவனும்
காணாமல் போகலாம்.

எனவே இதில் நிலை என்றும்
நிரந்தரமென்றும்
சொல்வதெல்லாம்
அறியாமையின்
அடுக்குமொழிகளே தவிர
வேறல்ல.
வாழும் வாழ்க்கை வரை
நிஜƒம். இருப்பதொன்றே
இன்பம்.

இரை தேடுவதும்
இரையாகாமல் இருப்பதுமே
உயிரின் குணம்.
இன்பமே உயிரின் வேட்கை.
புலன்களின் தேவைகள் தீர்த்து
வைப்பதே வாழ்தலின்
அடையாளம்.

எனக்குப் பசிக்கிறது
என்றாள் தமிழ் ரோƒஜா.
அப்படிக் கேளடி என்
தங்கமே.

மடியில் கிடந்தவளை
இறக்கிவைத்துவிட்டு, உள்ளே
ஓடிப்போய்
மீனவர்கள் பயன்படுத்தும்
பற்பசை கொண்டுவந்தான்
கலைவண்ணன்.

விரலில் பசைபிதுக்கி ஈறுகளிலும்
பற்களிலும் இழுக்கத்
தெரியாமல் இழுத்து,
கொஞ்சத் தண்ணீரில் அவள்
கொப்பளித்துத் துப்பினாள்.

தட்டேந்தி வந்தான் சலீம்.
அதிலிருந்த பொங்கலுக்கும்
சட்னிக்கும் வித்தியாசம்
பிரித்தறியத்தக்க சாட்சியங்கள்
இல்லாமல் அவள்
தடுமாறினாள்.

அதை உருட்டி உருட்டி
விழுங்கவைத்தது அவளை
மிரட்டிக்கொண்டிருந்த பசி.
என்ன சலீம். கப்பல்,
படகு ஏதேனும் கண்ணுக்குத்
தட்டுப்படுகிறதா?

அவன் சமையலை அவனே
சாப்பிட்டதுபோல் முகம்
கோணிநின்ற சலீம்
உங்களுக்கு நீச்சல்
தெரியுமா?
என்றான்.
ஏன் கேட்கிறாய்?
என்றான் கலைவண்ணன்.

நாற்பத்தைந்து
கிலோமீட்டரை
நான்கு நாட்களில்
நீந்திவிட முடியாதா என்று
பாண்டிக்கும் பரதனுக்கும்
பட்டிமன்றம் நடக்கிறது.
சொல்லிவிட்டு
மறைந்துவிட்டான். அவன்
சொன்ன சொற்கள்
மறையவில்லை.

கப்பலோ படகோ
வரவில்லையென்றால் கரைசேர
முடியுமா கலைவண்ணன்?
ஏதாவதொரு அதிசயம்
நிகழ வேண்டும்.

அதிசயமா?
மேகங்களை
விலக்கிக்கொண்டு சில
தேவதைகள் வரவேண்டும்.
அல்லது திடீரென்று சிறகு
முளைத்து
இந்தப் படகே பறவையாக
வேண்டும். அல்லது
நீலக்கடல் வற்றி நிலமாக
வேண்டும். அல்லது இந்துமகா
சமுத்திரத்தில் இதுவரை
இல்லாத எரிமலை ஒன்று
கண்விழித்து, நிலத்தடி மண்ணை
அள்ளிப் பொழிந்து
மின்னல் வேகத்தில் ஒரு மேடு
உண்டாக்க வேண்டும்.
அல்லது பால்கன் தீவு
மாதிரி...
அது என்ன பால்கன்
தீவு? - அவள்
ஆர்வமானாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:37 am

ஆ…திரேலியாவுக்குக்
கிழக்கே இரண்டாயிரம் மைல்
தூரத்திலிருந்த பால்கன் தீவு
திடீரென்று மறைந்து
விட்டது. பதின்முன்று
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
பளிச்சென்று மேலெழுந்தது.
அப்படி இங்கே
முழ்கிய தீவு ஏதேனும்
முகம் காட்ட வேண்டும்.

அப்படிக்கூட
நேர்வதுண்டா?
அங்கே நேர்ந்தது,
இங்கே நேரவில்லை. இங்கு
மட்டும்
அப்படி நேர்ந்தால் -
கொடுங்கடல் கொண்ட
குமரிக்கண்டம்
மீண்டும் குதித்து வந்திருக்கும்.
தமிழர்களின் சாகாத
நாகரிகத்துக்குச் சாட்சி
கிடைத்திருக்கும். குணகடலின்
இளவரசி என்று
கொண்டாடப்பட்ட பூம்புகார்
மீண்டும்
பூத்து வந்திருக்கும்.
நேரவில்லையே.

பால்கன் தீவுக்கு நேர்ந்த
மறுபிறப்பு
எங்கள் பழந்தமிழ் பூமிக்கு
நேரவில்லையே.
நேராது. கடலுக்குத்
தமிழ்மேல் ஆசை.

வெயில் ஏறியது. வேறோரு
வாழ்க்கைக்குப் படகு
தயாராகிக் கொண்டிருந்தது.
மீனவர் ஒவ்வொருவரும்
விசைப்படகின் விளிம்புக்கு வந்து
வந்து கப்பலோ படகோ
தெரிகிறதா என்று
கடல்வெளியெங்கும் கண்களை
வீசினார்கள்.

நல்ல செய்தி சொல்லிக்
கரைவதற்கு ஒரு காக்கைகூடக்
கண்ணுக்குத்
தட்டுப்படவில்லையே.

வெயில் ஏற ஏற, உடம்பில்
வேர்வையும் மனதில்
சோர்வும் கசியக் கசிய
அங்கங்கே உட்கார்ந்து
உறைந்தார்கள்.

சோகமில்லாதது சுண்டெலி
மட்டுந்தான்.

ஆறுபேர்க்கும் சேர்த்து அது
சந்தோ„மாயிருந்தது.
சில்லென்று துள்ளிச் சில்மி„ம்
செய்து - வேகமாய்த்
தாவித்தாவி வித்தை காட்டி
தன் பின்னங்கால்களைத்
தளத்தில் பதித்து -
முன்னங்கால்களாலும் வாலாலும்
அபிநயம் புரிந்து வேடிக்கை
காட்டி விளையாடியது.

அ·றிணைகள் சாகும்வரை
மகிழ்ச்சியாகவே
இருக்கின்றன.
மனிதன்தான்
பாதி வாழ்க்கையிலேயே
படுத்துவிடுகிறான்.

கீழே விழும்வரை ஒரு
தென்னங்கீற்று காற்றோடு
பாடும் சங்கீதத்தை நிறுத்திக்
கொள்வதில்லை.
மரணத்தின் முன்நிமி„ம் வரை
பட்டாம் பூச்சித் தன்
சிறகுகளைச் சுருக்கிக்
கொள்வதில்லை.

ஒரு கலப்பையின்கொழு
தன்னை இடறும்வரை
ஒரு மண்புழு தன் தொழிலைக்
குறைத்துக் கொள்வதில்லை.

எந்தப் பகுத்தறிவு,
பிராணிகளைவிட்டு மனிதனைப்
பிரித்துக் காட்டுகிறதோ அதே
பகுத்தறிவுதான்
கனவுகளால் நிராசைகளால்
அவனை வருத்தியும் வைக்கிறது.
எங்கு பார்த்தாலும் நீலம்.
கீழும் மேலும் நீலம்.
பார்வை முடியும் பரப்பில்
வந்து கவியும் வானவட்டம்.
தமிழ் எழு. தோழர்களுக்கு
நாம் துணிவு சொல்வோம்.
வா.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:38 am

அவளைத் தாங்கி அழைத்துத்
தளம் வலம் வந்தான்.
அவர்களைப் பார்த்ததும்
அச்சடித்த சித்திரங்கள்
அங்கங்கே அசைந்தன.
பாண்டி. பரதன். என்ன
இது? படகே முழ்கிப்
போன மாதிரி ஏன் முகம்
கறுத்து நிற்கிறீர்கள்?
எப்போதும் போலவே
இருங்கள். இப்போது
நம்மிடம் இரண்டு வாகனங்கள்.
ஒன்று படகு.

இன்னொன்று நம்பிக்கை.
படகு கவிழ்ந்தாலும்
கரைசேர முடியும். நம்பிக்கை
கவிழ்ந்தால் கரைசேர
முடியுமா?

மீனவர் உதடுகளில் ஒரு வாடிய
புன்னகை ஓடியது.

நாங்கள் வருந்துவது
எங்களுக்காக அல்ல. சிக்கலில்
உங்களையும்
சிக்கவைத்துவிட்டோமே.
அதற்குத்தான்.

இது சிக்கல்தான்.
எல்லோரும் சேர்ந்து
சிக்கெடுப்போம்.

ஒவ்வொரு படகிலும்
தேசியக்கொடி பறக்க
வேண்டுமாமே.
கொடி எங்கே?

உள்ளே இருக்கிறது.
உடனே எடுங்கள்.

அபாயக்கொடி மட்டும்
போதாது.

அதற்குப் பக்கத்தில் அதைவிட
உயரமாய்
தேசியக்கொடியும் சேர்ந்து
பறக்கட்டும்.

ஏன்? நாம் இந்து மகா
சமுத்திரத்தில்தானே
இருக்கிறோம். எதற்காகத்
தேசியக்கொடி?
என்றாள் தமிழ்ரோƒஜா.

இந்துமகா சமுத்திரம்
இந்தியாவுக்கு மட்டும்
சொந்தமல்ல.

எந்த நாட்டுக் கடலும்
கரையிலிருந்து ஐந்து
கிலோமீட்டர்வரைக்கும்தான்
அந்த நாட்டுக்குச் சொந்தம்.
அதன் பிறகு வருவது
பொதுக்கடல்.

எந்தக் கலமானாலும் அந்த
நாட்டுத் தேசியக்
கொடியைத்
தாங்கியிருக்கவேண்டும்.
தேசியக்கொடி இல்லாதது
கொள்ளைக்கலம் என்று
கருதப்படும்.

நாம் சுடப்படலாம்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அபாயக்கொடிக்குப்
பக்கத்தில் இந்தியாவின்
தேசியக்கொடி பறந்தது.
ஏதோ ஒரு
நம்பிக்கைமொழியைத்
தேசியக்கொடி
அவர்களோடு படபடத்துப்
பேசியது.

பார்ப்போம்,
பாலைவனத்தைக்கூட மேகம்
கடக்கிறதே.

இந்தப் படகை ஒரு
படகு கடக்காதா?
அவர்களின் திருடப்பட்ட
சந்தோ„த்தின் முதல்
தவணை திருப்பித் தரப்பட்டது.

தத்தித்தாவும் அலைகளில்
தள்ளாடிக்
கொண்டேயிருந்தது படகு.
இது என்ன கலத்தின் கீழே
ஒரு தளம்?
- பிள்ளைக்கேள்வி கேட்டாள்
தமிழ்ரோƒஜா.

அது பனிக்கட்டிப்பெட்டி.
அதுதான் மீன் கிடங்கு.
பார் அங்கே. பிடித்த
மீன்களைப் பதப்படுத்தி
வைக்கப்
பெட்டிப் பெட்டியாய்ப்
பனிக்கட்டிகள்.

பெரிய கிடங்கு இது. இறங்கிப்
பார்ப்போமா?
அவள் மறுத்தாள். அவன்
இழுத்தான்.

வலக்கரத்தால் அவன்
கரத்தையும் இடக்கரத்தால்
தன் முக்கையும்
பிடித்துக்கொண்டே அவள்
இறங்கினாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:38 am

ஆறடி ஆழம், பதின்முன்றடி
நீளம். பன்னிரண்டடி
அகலம். அது சற்றே
இலக்கணம் மீறிய சதுரம்.

குப்பென்று அடித்த
மீன்வாசத்தில் நெஞ்சடைத்தது.
தொகுதி தொகுதியாய்ப்
பனிக்கட்டிப் பெட்டிகள்.

அங்கங்கே இறைந்து கிடக்கும்
சில்லறைப் பொருட்கள்.
தரையில் செதில்களின் பிசுக்கு.

ஓரத்தில் இரண்டு பீப்பாய்கள்.

உள்ளறையில் பார்வை பரப்பிய
தமிழ்ரோƒஜா
கலைவண்ணன் கையிலிருந்து
தன்னைக்
கழற்றிக்கொண்டு - நீங்கள் மேலே
போங்கள் நான் வருகிறேன் என்றாள்.

ஒன்றும் புரியாமல் விழித்தவன் சட்டென்று
பிரகாசமாகி ஓ. அதுவா? என்று சிரித்து மேலே
போனான்.

தளத்திற்கு வந்தான் மீண்டும் கடல்பார்த்தான்,
மீண்டும் வான் பார்த்தான்.

தலைக்குமேலே ஒரு பறவைக்கூட்டம்
படபடவென்று சிறகடித்துப் பறந்து தூரத்து
வானத்தில் தொலைந்தது.

ஓ பறவைகளே. நீங்கள் மட்டும் கரைக்குத்
தகவல் சொல்லி ஒரு கலம் அழைத்துவந்தால்
சாகும்வரைக்கும் நான் சைவனாயிருப்பேனே.

சற்றுநேரத்தில் தமிழ்ரோƒஜா செம்பருத்திப்
பூவாய்ச் சில்லென்று பூத்து வந்தாள்.

மலர்ந்திருந்தது முகம், பொலிந்திருந்தது தேகம்.

திறந்த விழிகளால் வியந்துநின்ற கலைவண்ணன்,
பனியில் குளித்த பாரிƒஜாதமாய் வந்திருக்கிறாயே...
எப்படி? என்றான்.

குளித்தேன் என்றாள்.
குளித்தாயா? தண்ணீர்..?
இரண்டு பீப்பாய்கள் இருந்தன. ஒரு
பீப்பாய்த் தண்ணீர் போதவில்லை.

இரண்டாவது பீப்பாயிலும் கொஞ்சம்
எடுத்துக் குளித்தேன். அப்போதைக்கிப்போது
அழகாய் இருக்கிறேனா?
அடிப்பாவி.

அதிர்ச்சியடைந்தான் கலைவண்ணன்.
குடிக்க வைத்திருந்த தண்ணீரைக்
குளித்துவிட்டாயே தாயே - சலீம் அழுதான்.

சொல்லின் அர்த்தம்
தீர்மானிப்பது சொல்லல்ல.
இடம்.

ஒரே ஒரு முத்தம் கொடு .
- இந்தத் தொடருக்குக்
கட்டிலில் பொருள் வேறு.

தொட்டிலில் பொருள் வேறு.
பாடையில் பொருள் வேறு.

குளித்தல் என்பது ஒரு
செயல்தான். அதற்குக்
கரையில் பொருள் வேறு.
நின்றுபோன கலத்தில் பொருள்
வேறு.

குளித்தல் என்பது அங்கே
சுகாதாரம். இங்கே
துரோகம்.

உப்புத்தூளுக்குப் பதிலாய்
வைரக்கற்களை அம்மியில்
வைத்து அரைத்துவிடுகிற ஒரு
குழந்தை மாதிரி - குடிநீர்
என்று தெரியாமல் அதில்
குளித்து முடித்த தமிழ்ரோƒஜா
இப்போது
அழுது அழுது அழுக்கானாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:38 am

ஆனால், அதுவும்
நன்மையானது.

உலகமகா யுத்தத்தில் முதல்
குண்டு விழுந்தவுடன்
சுறுசுறுப்படைந்துவிடும் ஒரு
தலைநகரத்தைப் போல
இருப்புக் கணக்கெடுக்கத்
தயாரானது படகு.

எப்படியும் இரண்டொரு நாளில்
கரை சேரலாம். ஆனாலும்
ஆபத்தைத்தான் நாம் அதிகம்
சிந்திக்க வேண்டும்.

மழைக்காலத்தில்
கூடு கட்டிக் கொள்ளலாம்
என்று தூக்கணாங்குருவி
கோடையில்
தூங்கிக்கொண்டிருக்கக்
கூடாது.

சரி... சரி... சரி
பார். அரிசி எவ்வளவு? அள.
காய்கறி எவ்வளவு?

கணக்கெடு. நீ எவ்வளவுண்டு
நிறு. எண்ணெய் - மிளகாய் -
கடுகு எத்தனை நாள் வரும்?
எண்ணிச் சொல்.

உலையில் குமிழி கொதிக்குமே.
அப்படிப் படபடவென்று பேசி
முடித்தான் பாண்டி.

இதோ பாருங்கள் பாண்டி.
முன்று நாள் தேவைக்குத்தான்
உணவுப்பொருள் கொண்டு
வந்தோம். அதற்குள்
திரும்பிவிடுவதாய்த் திட்டம்.

உண்மை சொல்கிறேன்.
உணர்ச்சிவசப்படாமல்
கேளுங்கள். கொண்டு வந்த
அரிசி 12 கிலோ. முன்று
நாளைக்கு. 4 கிலோ
வெந்தது போக, இருப்பு 8
கிலோ. தண்ணீர் 200 லிட்டர்
கொண்டு வந்தோம். அதில்
குடித்ததும் - குளித்ததும்
போக எஞ்சியிருப்பது 80
லிட்டர். ரவை, மைதா
இன்றுமட்டும் வரும். தக்காளி
அழுகாமலிருந்தால் அடுத்த
நாளைக்கும் வரும். இப்போது
படகில் நிறைய இருப்பது டீசல்
மட்டும்தான்.
இல்லை.

நம்பிக்கையும்தான்.
கவலைஅறிக்கை வாசித்த
சலீமைக் கலைவண்ணன்
இடைமறித்தான்.

சில நூற்றாண்டுகளுக்கு
முன்னும் மழை இல்லை. சில
நூற்றாண்டுகளுக்குப் பின்னும்
மழை இருக்கப் போவதில்லை
என்ற வருந்தத்தக்க வானிலை
கொண்ட பாலைவனத்திலும்
காற்றின் ஈரப்பசையை உண்டு
வாழும் தாவரம் உண்டு. சில
நாட்களுக்காவது நாம்

ƒஜீவிக்க முடியாதா? உணவு
என்பது பழக்கம்.

உணவிருந்தால் மனிதன்
உபரியாய்த் தின்கிறான்.
உபரியாய்க் குடிக்கிறான். ஒரு
படகு தட்டுப்படும் வரை நாம்
உடம்புக்காக உண்ண
வேண்டாம். உயிரின் வேருக்கு
மட்டும் கொஞ்சம் ஈரம்
வார்ப்போம்.

சொல்லுங்கள்... இன்னும் ஆறு
வேளைக்குத்தான் உள்ள இந்த
உணவை அதிக வேளைக்கு
நீட்டிப்பது எப்படி?
கேள்வியின் பயங்கரத்தில்
அங்கே மையம் கொண்டதொரு
மெளனம்.

படகின் தளக், தளக், ஓசை
மட்டும் அந்த மெளனம்
பார்த்துச் சிரித்தது.

பரதன் அந்த மெளனத்தைக்
கனைத்துக் கலைத்தான்.
இனிமேல் ஒரு நாளுக்கு ஒரு
வேளைதான் உணவு. ஒரு
டம்ளர்தான் தண்ணீர்.

சரிதானா?

அதை முதலில் ஒரு தைரியசாலி
வழிமொழியட்டும் என்று
எல்லோரும்
பேசாமலிருந்தார்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:39 am

சரி...
ம்...
ஆகட்டும்...
அப்படியே
செய்வோம்... ஆண்களில்
எல்லோரும் அவசரமாய்
வழிமொழிய, தமிழ்ரோƒஜா
மட்டும் உதடுதிறக்கவில்லை.
பத்துக் கண்களும் அவள் இரண்டு
கண்களை மொய்த்தன.

இறுதியில் அவள் எண்ணத்தை
எழுத்துக் கூட்டினாள்.

குடிப்பதற்குச் சரி...
குளிப்பதற்கு..?
குடிப்பதற்கு ஒரு
டம்ளர்தான் இருக்கிறது. நீ
குளிப்பதற்கு ஒரு கடலே
இருக்கிறது.

கலைவண்ணன் தன்
வார்த்தைகளையும் அவள்
உள்ளங்கைகளையும் ஒரே
நேரத்தில் அழுத்தி
உச்சரித்தான்.

எடுத்த முடிவு அடுத்த
நிமிடத்தில்
அமல்படுத்தப்பட்டது.
அதுவரை அரிசியை அளந்து
சமைத்துக்கொண்டிருந்த சலீம்
எண்ணிச் சமைக்க
ஆரம்பித்தான்.

முன்பெல்லாம் உருளைக்கிழங்கை
அவித்துத்
தோலைஉரித்தெறிகிறவன்,
இப்போது அதிலும்கூடச்
சத்திருக்கும் என்று சமாதானம்
சொல்லிக்கொண்டான்.

யுத்தம் உயிரின் மதிப்பைக்
குறைக்கிறது.
பஞ்சம் உணவின் மதிப்பை
உயர்த்துகிறது.
படகின் பின்விளிம்பில் மீண்டும்
ஓர் அகதியின் போராட்டம்
ஆரம்பமானது.

தமிழ்ரோƒஜா கண்ணீர்வற்றிய
கண்களில் கோபம் குமுறியது.
இங்கே பஞ்சுமெத்தை
இல்லை. பரவாயில்லை.
தலையணை இல்லை.

தவறில்லை. மீன்
பிசுக்கடிக்காத போர்வை
இல்லை. வருந்தவில்லை. என்
குறைந்தபட்சத் தேவை,
குளிப்பது. அதற்கும் வழியில்லை
என்றால் நான் வாழ்வதா,
சாவதா?

தமிழ். உனக்கின்னும்
விளங்கவில்லை. குளிப்பதைவிட
ஒரு பெரிய பிரச்னை
வரும்போது குளிப்பது
இரண்டாம்பட்சமாகிவிடும்.

இப்போது குளித்தல் என்பது
உயிர்வாழ்தலின் அம்சமல்ல.

குளித்தே ஆகவேண்டுமென்றால்
கடலில் விழு. எழு. உனக்குள்ள
குடிதண்ணீரில் ஒரு டம்ளர்
ஒதுக்கித் துண்டை நனைத்துத்
துடை. கரைசேரும் வரை
டம்ளர்தான் உன் குளியல்
அறை.

முடியவே முடியாது. என்
உடம்பும் மனசும் நான்
சந்திக்காத வாழ்க்கைக்குத்
தயாராகாது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:39 am

உயிர்ஆசையிருந்தால் நிறம்
மாறித்தான் தீரவேண்டும்.
இந்த வி„யத்தில் நீ
விலங்குகளிடம் நிறைய
விளங்கிக்கொள்ள வேண்டும்.
விலங்குகளா?

ஆமாம். கடல் விலங்குகள்.
இதோ, விரிந்து பரந்து
செறிந்து நெகிழ்ந்து நிற்கிறதே
இந்த நீலத்தண்ணீர்...
இதற்குக் கீழே பவளம்
மட்டுமல்ல. மனிதனுக்குப்
பாடமும் இருக்கிறது. இந்தச்
சூரியக்கதிர் இருக்கிறதே, இது
350 அடி ஆழம் வரைதான்
தண்ணீர்துளைக்கும். அதற்குக்
கீழே இருள்தான். இருள்தான்.

இந்தக் கடல் தோன்றிய
நாள்தொட்டு இன்றுவரை
அங்கே இரவுதான். ஆனால்,
அங்கே வாழும் பிராணிகள்
இருளில் இறந்து போகவில்லை.

…குவிட்போன்ற
பிராணிகள், தங்கள்
உடம்பிலேயே வெளிச்சம்
போட்டு உலவுகின்றன -
தங்கள் சொந்தச் செலவில்
சுயவெளிச்சம்
போட்டுக்கொள்ளும் சில
மனிதர்களைப்போல.
அப்படியா?

ஆமாம். எல்லாப்
பிராணிகளுக்கும் இரண்டே
லட்சியங்கள்.
என்னென்ன?

இரை தேடுவது.

இரையாகாமல் இருப்பது.
ஆக்டோப… என்ன செய்யும்
தெரியுமா?
தெரியாது.

எதிரி துரத்தினால் அதன்
உடம்பு சில வண்ணத் திரவங்கள்
கக்கும். கடல் நீரை
நிறம்மாற்றி எதிரியின் கண்ணைக்
குருடாக்கும். தண்ணீர்
தெளிவதற்குள்
தப்பித்தோடிவிடும்.

இந்தக் கதையெல்லாம்
எனக்கெதற்கு?
சூழ்நிலையை வெற்றி
கொள்ளும் சூத்திரம் தெரிய
வேண்டும் உனக்கு.
வாழ்க்கையை வாழப்பார்.
அல்லது வாழ்க்கைக்கேற்ப
உன்னை வார்க்கப்பார்.

அழுவதுதான் அவமானமே தவிர
- அவதி தாங்குதல் அவமானம்
அல்ல. வெற்றி என்ற தேருக்கு
எதிர்ப்பு, துன்பம் என்று
இரண்டே சக்கரங்கள். சிரமம்
வாழ்வின் சேமிப்பு. வளையாத
அம்பின் சக்தி என்பதென்ன?
வளைந்த வில்தானே.
சந்தர்ப்பம்தான் சக்தி
தருகிறது.

எல்லாம்
கற்பனாவாதம்.
அவள் கத்திமுடித்துக் காது
பொத்தினாள்.

அவன் நெருங்கி
உட்கார்ந்தான். அவள் ஒதுங்கி
உட்கார்ந்தாள்.

நீங்கள் மனிதகுல
மீட்சிக்காகப் பேசுகிறீர்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக