புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
4 Posts - 5%
Rutu
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Jenila
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_m10பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் கவிதைகள் - ஞானப் பாடல்கள்


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:39 pm

First topic message reminder :

1. அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2


muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:18 pm

39. தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்:-இனி-அஞ்சிடோம்;
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? தெய்வம்-பார்க்குமோ? 1


வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்து வோம்;-முடி-தாழ்த்துவோம்;
எந்தம் ஆருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ?-அவ-மானமோ? 2


பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ?-நாங்கள்-சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண் பிள்ளைகள்
அல்லமோ?-உயிர்-வெல்லமோ? 3


நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ?-பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்க ளோ?இது
நீதமோ?-பிடி-வாதமோ? 4


பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ?-மனஸ்-தாபமோ?
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது
குற்றமோ?-இதற்-செற்றமோ? 5


ஒற்றுமைவழி யொன்றை வழியென்பது
ஓர்ந்திட்டோம்;-நன்கு-தேர்ந்திட்டோம்;
மற்றும் நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம்
மலைவு றோம்;-சித்தம்-கலைவுறோம். 6


சதையைத் துண்டுதுண் டாக்கினும் என்னெண்ணம்
சாயுமோ?-ஜீவன்-ஓயுமோ?
இதையத் துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ-நெஞ்சம்-வேகுமோ



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:19 pm

40. நடிப்புச் சுதேசிகள்
பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ 1


கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ! 2


சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ? 3


கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
பேசிப் பயனென் னடீ! 4


யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வதுண் டோ? 5


உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய் தறியா ரடீ! 6


தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
நம்புத லற்றா ரடீ! 7


மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக்-கிளியே
பேணி யிரந்தா ரடீ! 8


தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ! 9


அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ! 10


ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ? 11


மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? 12


சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனதி லதனைக் கொள்ளார் 13


பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்! 14


நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ! 15


சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
செம்மை மறந்தா ரடீ! 16


பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ! 17


தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
வந்தே மாதர மென்பார்!



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:20 pm

5. தேசீயத் தலைவர்கள்
41. மகாத்மா காந்தி பஞ்சகம்
வாழ்க நீ! எம்மான்,இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா!நீ வாழ்க!வாழ்க! 1


அடிமைவாழ் வகன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து,செல்வம்,
குடிமையி னுயர்வு,கல்வி,ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குளே முதன்மை யுற்றாய்! 2
வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
டிமின்னல் தாங்கும் கடைசெய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற் றிடும் வண்ணம்
படிமிசைப் புதைதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்! 3

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை,தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை,பெருமான்! 4

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்;
அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவிழி யென் றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர்-‘ஒத்துழை யாமை’
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:20 pm

5. தேசீயத் தலைவர்கள்
42.குரு கோவிந்தர்
ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்ரம னாண்டு, வீரருக் கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்;
பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக்
குலத்தினை வகுத்த குருமணி யாவான். 5


ஞானப் பெருங்கடல்,நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன்,மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங்க கோமகன்,
அவன் திருக் கட்டளை அறிந்துபல் திசையினும், 10


பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்,
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான்
கூடிவந் தெய்தினர்,கொழுபொழி லினங்களும் 15


புன்னகை புனைந்த புதுமலர்த் தொகுதியும்
பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும்,
‘நல்வர வாகுக நம்மனோர் வரவு’என்று
ஆசிகள் கூறி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் 20


திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள்,
"யாதவன் கூறும்? என்னெமக் கருளும்?
எப்பணி விதித்தெமது ஏழேழ் பிறவியும்
இன்புடைத் தாக்கும்?"எனப்பல கருதி,
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே 25


ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர்,திடுக்கெனப் பீடத்து
ஏறிநின் றதுகாண்!இளமையும் திறலும்
ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிட 30


திருமுடி சூழ்ந்தோர் தேசுகாத் திருப்ப,
தூக்கிய தரத்தில் சுடருமிழ்ந் திருந்தது
கூறநா நடுங்குமோர் கொற்றக் கூர்வாள்.
என்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி,
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் 35


சிங்க்க் கூட்டம் திகைத்திருந் தாங்கு
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்,
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச்
சேயிதழசைவுறச் சினந்தோர் எரிமலை 40


குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி;
‘வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப
விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள்
தருமத் தெய்வந் தான்பல குருதிப்
பலிவிழை கின்றதால்; பக்தர்காள்!நும்மிடை 45


நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப
யார்வரு கின்றீர்!" என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்.
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது.



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:21 pm

ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே;
"குருமணி! நின்னொரு கொற்றவாள் கிழிப்ப
விடாயறாத் தருமம் மேம்படு தெய்வதத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிகவே!" 55


புன்னகை மலர்ந்தது புனித நல் வதனம்
கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல,
மற்றதன் நின்றோர் மடுவின்வந் தாலெனக்
குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டனர்.
பார்மின்? சற்குரு பளீரெனக் கோயிலின் 60


வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடிந்து முகமலர்ந் தோனாய்
மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன்.
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கிப்
பின்வரு மொழிகள் பேசுவன் குரவர்கோன்; 65


"மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச்
சித்தம்நான் கொண்டேன்;தேவிதான் பின்னுமோர்
பலிகேட் கின்றாள் பக்தர்காள்! நும்முளே
இன்னும் இங் கொருவன் இரத்தமே தந்துஇக்
காளியைத் தாகங் கழித்திடத் துணிவோன். 70


எவனுளன்?" எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்.
இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி
இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன்;
குருதியைக் கண்டு குழர்த்தினர் நடுங்கினர். 75


இங்ஙன மீண்டுமே இயற்றிப்
பலியோ ரைந்து பரமனங் களித்தனன்.
அறத்தினைத் தமதோ ரறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்,
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி 80


வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்ம்மையோர்;முத்தரும் அவரே.
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் 85


கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்;
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரைக் கண்டபின் அவ்விய லுடையார்
எண்ணில ருளரெனத் துணிந்து அன்பு எய்தினன்.
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து 90


சொர்க்கமுற் றாசெனத் தொண்டர்கொண்டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்!
ஆர்த்தனர் தொண்டர்!அருவியப் பெய்தினர்!
விழிகளைத் துளைத்து மீளவும் நோக்கினர்! 95


"ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!"
எனப்பல வாழிகள் இசைத்தனர். ஆடினர்
அப்போழ் தின்னருள் அவதரித் தனையான்.
நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு
குறுநகை புரிந்து குறையுறு முத்தர் 100





வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:22 pm

ஐவர்கள் தம்மையும் அகமுறத் தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கிக்
கடல்முழக் கென்ன முழங்கவன் காணீர்.
"காளியும் நமது கனகநன் னாட்டுத்
தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! 105


நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும்
பலியிடச் சென்றது, பவனை மன்ற
என்கரத் தாற்கொலோ நும்முயி ரெடுப்பன்?
ஐம்முறை தானம் அன்பரை மறைத்து நும்
நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! 110


தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர்நீர்
என்பது தெளிந்தேன். என்கர வாளால்
அறுத்ததுஇங்கு இன்றுஐந் தாடுகள் காண்பீர்;
சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன்;
களித்ததென் நெஞ்சம்; கழிந்தன கவலைகள் 115


குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்
‘சீடர்தம் மார்க்கம்’எனப்புகழ் சிறந்தது
இன்றும்அம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர்
‘காலசா’ என்ப. ‘காலசா’ எனுமொழி
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது 120


முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரியன்.
சமைந்தது‘காலசா’ எனும் பெயர்ச் சங்கம்.
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்,
ஆவிதேய்ந் தழிந்திலர், ஆண்மையிற் குறைந்திலர், 125


வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று
புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்.
அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு,ஓர்
தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி
மண்மா சகன்ற வான்படு சொற்களால் 130


எழுப்பிடும் காலை,இறந்துதான் கிடக்கிலள்.
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை;
சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று
உலகினோர ரறிவிடை யுறுத்தினன் முனிவன்.
ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த 135


முன்னவ னொப்ப முனிவனும ஐந்து
சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச்
சாதியை வகுத்தனன், தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்கை குரிசிலர்
நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை 140


ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு
விக்கிர மாக்க னாண்டி னில், வியன்புகழ்க்
குருகோ விந்தன் கொற்றமார் சீடரைக்
கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன்.
காண்டற் கரிய காட்சி! கவின்திகழ் 145


அரியா தனத்தில் அமர்தனன் முனிவர்கோன்
சூழ்ந்திருந் தனர்,உயிர்த் தொண்டர்தாம் ஐவரும்;
தன்திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக்
கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து 150





வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jul 19, 2011 3:23 pm

குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி,
காண்டிரோ! முதலாங் "காலசா" என்றனன்;
நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான்
அமைந்ததிச் சங்கம் அறிமின்நீர் என்றான்.
அருகினி லோடிய ஆற்றலில்நின் றையன் 155


இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து
வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி
மந்திர மோதினன், மனத்தினை யடக்கிச்
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச்
சபமுரைத் திட்டான். சயப்பெருந் திரு.அக் 160


கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்.
ஆற்றுநீர் தனையோ அடித்ததத் திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச்
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி
நல்லுயிர் நல்கினன்,நாடெலாம் இயங்கின. 165


தவமுடை ஐவரைத் தன்முனர் நிறுத்தி
மந்திர நீரை மாசறத் தெளித்து
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்;
பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால்
அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே 170


நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது!
சீடர்க ளனைவருந் தீட்சையிஃ தடைந்தனர்.
ஐயன் சொல்வான்; "அன்பர்காள்!நீவிர்
செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம்
‘அமிர்தம்’என் றறிமின் ‘அரும்பே றாம்இது 175


பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார்,
நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின்,
ஒன்றாம் கடவுள், உலகிடைத் தோன்றிய
மானிட ரெல்லாஞ் சோதரர்; மானிடர்
சமத்துவ முடையார்; சுதந்திரஞ் சார்ந்தவர் 180


சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவரும் ஒன்றே,
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்,
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, அனைவரும் 185


தருமம்,கடவுள்,சத்தியம்,சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீரச்
சாதியொன் றனையே சார்ந்தோ ராவீர்
அநீதியும், கொடுமையும் அழித்திடுஞ் சாதி;
மழித்திட லறியா வன்முகச் சாதி; 190


இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடாச் சாதி;
சோதர நட்புத் தொடர்ந்திடு சாதி;
அரசன் இல்லாது தெய்வமே யரசா
மானிடர் துணைவரா மறமே பகையாக் 195


குடியர சியற்றுங் கொள்கையார் சாதி;
அறத்தினை வெறுக்கிலீர்! மறத்தினைப் பொறுக்கிலீர்!
தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப்
புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்;
என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன்; 200


அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்;
குருகோ விந்தக் கோமகன் நாட்டிய
கொடிஉயர்ந்த தசையக் குவலயம் புகழ்ந்தது;
ஆடி மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக