புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Rutu
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Jenila
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
புதையல் தீவு - Page 3 Poll_c10புதையல் தீவு - Page 3 Poll_m10புதையல் தீவு - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் தீவு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:16 pm

First topic message reminder :

புதையல் தீவு

- பா.ராகவன்



"ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல்" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னதுமே பாலுவுக்கு அழுகை வந்துவிட்டது. அடக்கடவுளே! ரெண்டு இட்லியும் ஒரு வடையும் ஒரே வாயில் உள்ளே போய்விடும். ஒரு கரண்டி பொங்கல் என்பது உள்ளே போவதுகூடக் கஷ்டம். பல்லுக்கு மட்டும்தான் அது போதுமானது! அப்புறம் பசி எங்கிருந்து அடங்கும்?

சின்னப்பையன்களுக்குக் கச்சாமுச்சாவென்று பசிக்காது என்று யார் இந்த மகாலிங்க வாத்தியாரிடம் சொன்னது? அதுவும் தன்னைப்போல பீமபுஷ்டிப் பையன்கள் ஐயோ பாவம் என்று ஏன் இவருக்குத் தோன்றவே தோன்றுவதில்லை?

அவனுக்கு அன்றைய காலை மெனுவைக் கேட்டதுமே அழுகை அழுகையாக வந்துவிட்டது. குறைந்தபட்சம் பத்து இட்லிகள் வேண்டும். பொங்கல் என்றால் மூணு ப்ளேட். வடைக்கு லிமிட் உண்டா என்ன? எத்தனை ஆனாலும் சம்மதமே.

"குண்டா! கொஞ்சம் சாப்பாட்டைக் குறைக்கணும்டா. ஸ்கவுட்ல இருக்கற பையன் இவ்ளோ குண்டா இருந்தா எப்படி ஓடி ஆடி வேலை செய்யமுடியும்?" என்று கேட்டார் வாத்தியார்.

பாலுவுக்கு சிரிப்பு வந்தது. அவன் குண்டுதான். செம குண்டு! பின்னால் நின்று வேறு யாராவது இறுக்கிப் பிடிக்கப் பார்த்தால், அவன் தொப்பை ஒருபோதும் இரு கைகளுக்கு அடங்காது! மூக்கில் வழுக்கி வழுக்கி விழும் கண்ணாடியும் அவன் தொப்பையும், வாரவார அடங்காமல் தூக்கிக்கொண்டு முன்னால் நிற்கும் தலைமுடியும் சேர்ந்து அவனை வகுப்பறையில் ஒரு கார்ட்டூனாகத்தான் எப்போதும் காட்டும். ஆனால் யாரும் அவனை கிண்டலுக்காக 'குண்டா' என்று கூப்பிடமாட்டார்கள். அது ஒரு செல்லப்பெயர்.

"க்ளாஸுக்கு ஒரு புள்ளையார் இருந்தா நல்லதுதானே சார்" என்பான் பக்கத்து டெஸ்க் பத்மநாபன்.

"இவர் கொழுக்கட்டை சாப்பிடற பிள்ளையார் இல்லே... கொழுக்கட்டையாவே இருக்கற பிள்ளையார்!"

"அதுவும் சாதாரண கொழுக்கட்டை இல்லே.. ஜம்போ கொழுக்கட்டை!"

வகுப்பறையே சிரிப்பில் வெடிக்கும். பாலுவும் சேர்ந்து சிரிப்பான். அவனது உருவத்தைப் பற்றி யார் பேசினாலும் அவனுக்குக் கோபமோ, வருத்தமோ வராது. எல்லாமே அன்பால் செய்யப்படும் தமாஷ் என்றுதான் எடுத்துக்கொள்ளுவான். குறிப்பாக மகாலிங்க வாத்தியார். அப்பா! எப்பேர்ப்பட்ட கிண்டல் பேர்வழி! அதுவும் பாலுவைச் சீண்டுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சே, கொழுக்கட்டை சாப்பிடுவது மாதிரி.

கிண்டல் முடிந்த சூட்டிலேயே அவர் இன்னொன்றும் சொல்லுவார். அதுதான் அவரிடம் பாலுவுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

"பாருங்கடா! நம்ம புள்ளையாருக்கு உடம்பு மட்டுமில்லை... மூளையும் பெரிசு. இன்னி வரைக்கும் க்ளாஸ்லே அவனளவுக்கு வேற யார் மார்க் வாங்கியிருக்காங்க, சொல்லுங்க பாப்போம்? ஒரு எக்ஸாம்லயாவது ௬பர்ஸ்ட் ரேங்க்கைத் தவிர வேற வாங்கியிருக்கானா? நாம சாப்பிடற இட்லியெல்லாம் உடம்புல கீழ் நோக்கிப் போவுது... நம்ம புள்ளையாருக்கு மட்டும்தான் உள்ள போற எல்லாமே மேல்நோக்கிப் போவுது" என்பார்.

பாலுவுக்குப் பரம சந்தோஷமாக இருக்கும். மனசுவிட்டு ஒரு வாத்தியார் இப்படி அத்தனை மாணவர்களூக்கு எதிரில் பாராட்டுவதைவிட வேறென்ன வேண்டும்? இதற்காகவே இன்னும் நன்றாகப் படிக்கலாம்! இதற்காகவே இன்னும் பத்து இட்லி கூடுதலாகச் சாப்பிடலாம்!

அவன் அம்மாவுக்குத்தான் அந்த விஷயம் கவலையளித்தது. பார்க்கிற டாக்டர்களிடமெல்லாம் தவறாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். "என் பிள்ளை ஏன் டாக்டர் இவ்ளோ குண்டா இருக்கான்?"

என்னமோ சில ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதனால்தான் குண்டர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று எல்லா டாக்டர்களும் சொன்னார்கள்.

"டயட்ல இருக்கணும். தினமும் வாக்கிங் போகணும். சின்னப்பையந்தானே... பதினாறு, பதினெட்டு வயசாறதுக்குள்ள இளைச்சுடுவான்" என்பார்கள்.

ஆனால் பாலுவுக்கு இளைக்கிற உத்தேசமே இல்லை! எதற்கு இளைக்க வேண்டும்? குண்டாக இருப்பதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ரொம்ப முக்கியம், அத்தனைபேரின் கவனத்தையும் சுலபமாகக் கவரமுடிகிறது. வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி. யாரும் அதிகமாக வேலை வாங்குவதில்லை. சும்மா இருக்கிற நேரங்களில் உட்கார்ந்து உருப்படியாக நிறையப் படிக்க முடிகிறது. செஸ் விளையாட முடிகிறது. வம்புச் சண்டைக்கு வரும் பையன்களைச் சமாளிப்பதும் ரொம்ப சுலபம்! கையைக்காலை ஆட்டி அடித்து உதைக்கவே வேண்டாம். தொபுக்கட்டீர் என்று மேலே விழுந்து அப்படியே படுத்துக்கொண்டுவிட்டால் போதும்! ஐயோ, அம்மா என்று அலறி, தம் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடுவார்கள்!

இப்படியான காரணங்கள் மட்டுமில்லை. இயல்பிலேயே அவனுக்கு நொறுக்குத்தீனி என்றால் ரொம்பப் பிடிக்கும். கட்டுப்படுத்தமுடியாத ஒரே பெரிய கெட்ட பழக்கம் அது. வறுத்த வேர்க்கடலை, பொறித்த அப்பளம், சமோசா, ப௬ப், பஜ்ஜி, வடை, பூரி கிழங்கு என்று எதெல்லாம் நாக்குக்குப் பிடிக்கிறதோ, அதெல்லாம் ஏனோ உடம்புக்குப் பிடிப்பதில்லை. நாக்குக்கும் உடம்புக்கும் அப்படியென்ன ஜென்மப்பகையோ? ஐ டோண்ட் கேர்! என் ஓட்டு நாக்குக்குத்தான் என்று தெளிவாக இருந்தான் பாலு.

"நல்லா படிக்கறே. கெட்டிக்காரனா இருக்கே. கொஞ்சம் தீனியைக் குறைச்சுக்கோடா பாலு" என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மகாலிங்க வாத்தியாரும் அதையேதான் எப்போதும் சொல்லுவார். "பாலு, இன்னிக்கு மத்தியானம் மட்டும் நீ உண்ணாவிரதம் இரேன்!"

"ஓயெஸ். இருக்கேன் சார். அதுக்கு முன்னாடி கொஞ்சம் சாப்டுட்டு வந்துடறேனே. கொஞ்சம் தெம்பா இருக்கலாமே!" என்பான் அதே நகைச்சுவையுடன்.

"குண்டா! குண்டா! புள்ளையாரே!" வாத்தியார் செல்லமாக அவன் தொப்பையில் குத்துவார்.

அத்தனை தூரம் அவனைப்பற்றி நன்கு அறிந்த வாத்தியார்தான் இன்றைக்கு இப்படி இரக்கமே இல்லாமல் ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு கரண்டி பொங்கல் என்று சொல்லுகிறார்! அடுக்குமா இது! பாவம், அவன் வயிறு என்ன பாடுபடும்?

"புள்ளையாரே! நாம ஸ்டீம் போட்டுல போகப்போறோம். அந்தத் தீவுல ஆசுபத்திரியெல்லாம் ஒண்ணும் கிடையாது. உடம்புக்கு ஒண்ணுன்னா ரொம்பக் கஷ்டமாயிடும். லிமிட்டா சாப்பிடறதுதான் நல்லது. தவிர, கடல் பயணத்தின்போது நிறைய சாப்பிடறதும் நல்லதில்லை" என்று மகாலிங்க வாத்தியார் சொன்னார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:30 pm

ஆக, மூன்று புதையல்கள்!

பாலுவுக்கு இப்போது ஓரளவு தெளிவாக யோசிக்க முடிந்தது. அவர்கள் இழுத்து வந்தது பூதமல்ல. புதையலுமல்ல. ஏதோ ஒரு பெரிய இரும்பு டிரம். அல்லது கேன். உருளை வடிவானது. ரே?ன் கடைகளில் பார்ப்போமே, மண்ணெண்ணெய் வைத்திருக்கும் டிரம் மாதிரி... எப்படித்தான் இழுத்துவந்து தூக்கிப் படகில் போட்டார்களோ! சத்தமே அதன் கனத்தைச் சொன்னது.

ஆ?ா! புதையல் என்ற பெயரில் இவர்கள் என்னவோ கடத்தல் வேலையல்லவா செய்கிறார்கள்!

பாலுவுக்குத் தன் கண்டுபிடிப்பு சரிதானா என்று பார்த்துவிடும் உத்வேகம் எழுந்தது. இதுதான் எல்லை. இதுதான் க்ளைமாக்?! இப்போது விட்டால், இவர்களது திருட்டுத்தனத்தை அப்புறம் நேரில் பார்த்தறிய முடியாமல் போய்விடும்.

ஒருகணம் யோசித்தான். பிறகு என்ன ஆனாலும் சரி என்று பிடித்துக்கொண்டிருந்த கயிற்றை இன்னும் இழுத்து, காலால் படகை உந்தி உந்தி மேலே ஏறி, தானும் தொப்பென்று படகினுள் குதித்தான்.

ஒரு வினாடியில் அவர்கள் கண்ணில் தாம் பட்டுவிடுவோம் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அதற்குள் அந்தப் புதையல் டிரம்மில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவது என்று விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் அப்படியே உருண்டு அந்த டிரம்மை அடைந்தான். அவசர அவசரமாக முகர்ந்து பார்த்தான். அதன் வாய்ப்பகுதியில் அவனுக்கு விடை கிடைத்தது.

பெட்ரோல்!

ஓ, இவர்கள் புதையல் எடுக்கவில்லை... பெட்ரோல் கடத்துகிறார்கள்!

இதெல்லாமே அரை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பாலுவுக்குப் புரிந்துவிட்டது. அதற்குள் குண்டர்கள் அவனைப் பார்த்துவிட்டார்கள்.

படகுக்குள் விழுந்தவன் தப்பிப்பதாவது!

"டேய்! அங்க பாருடா!" என்றான் ஒரு குண்டன்.

"ஒண்ணுக்குப் போறேன்னு வந்த பொடியன் தானே இவன்!" என்றான் இன்னொருவன்.

"என்னப்பா தம்பி? பெரிய சிஐடி ஆபீசரா நீயி?" என்று இளக்காரமாகக் கேட்டான் இன்னொருவன்.

"பாவம், சிஐடி தம்பி! இப்ப கடலுக்குள்ளார ?லசமாதி ஆகப்போறாரு" என்றான் வேறொருவன்.

"திட்டம்போட்டு வந்திருக்காங்கடா.. சும்மா விடக்கூடாது இந்தப் பசங்களை" என்றான் முதலில் பேசியவன்.

"இவனை அப்படியே படகுல ஏத்திக்கிட்டுப் போய் நடுக்கடல்ல தள்ளிடலாம். அது பிரச்னை இல்லை. மத்த ரெண்டு பசங்க அங்க ரூம்புல இருக்கானுக இல்ல? அவனுகளை நீ கவனிச்சிக்க. அடிச்சிக் கொன்னு வீசிட்டுப் போயிடு" என்று தன் அடியாளுக்கு உத்தரவிட்டான் தலைமைக் குண்டன்.

படகில் நான்கு குண்டர்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவன் பாலுவின் அருகே வந்து தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டான்.

"சரி, வரோம்" என்று புறப்பட்டார்கள். கரையில் இருந்த மற்றவர்கள் படகைப் பிடித்துத் தள்ள, அது மெதுவாகக் கடலுக்குள் இறங்கி மிதக்க ஆரம்பித்தது. பிறகு நகரத் தொடங்கியது.

பாலுவுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் ஒரு பந்துபோல் திரண்டு மேலேறி வந்து தொண்டையை அடைத்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:31 pm

குண்டர்களின் இரும்புப்பிடியில் பாலு அகப்பட்டுக்கொண்ட அதே சமயம், அங்கே பாழடைந்த பங்களாவில் இருட்டு அறையில் தனியே இருந்த குடுமி நாதனும் டில்லிபாபுவும் என்ன நடக்கிறது, பாலு எங்கே போனான் என்றே புரியாமல் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

குடுமி, "நிச்சயம் அவன் ஒண்ணுக்குப் போவதற்காகப் போகலைடா டில்லி. எனக்கென்னவோ, அவன் இவங்களை உளவு பார்க்கறதுக்குத்தான் வெளில தப்பிப் போயிருக்கான்னு தோணுது. இல்லாட்டி, அரை மணிநேரமாவா ஒருத்தன் ஒண்ணுக்குப் போவான்?" என்றான்.

"கரெக்டு. எனக்கும் அப்படித்தான் தோணுது. ஆனா இந்த குண்டன் ஏன் இப்படி செய்யணும்? நமக்கும் ஒரு வார்த்தை சிக்னல் குடுத்திருந்தா, நாமும் கூடப் போயிருக்கலாமில்ல?" என்று அங்கலாய்த்தான்.

"இருக்கலாம். அவன் ரகசியமா எதையாவது நமக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கலாம். நாம் கவனிக்கத் தவறியிருப்போம். இப்ப அதைப் பேசிப் பிரயோ?னமில்லை. முதல்ல இங்கேருந்து தப்பிச்சாகணும். அதுக்கு எதனா வழி சொல்லு" என்றான் குடுமி.

"இனிமே வழிகிழியெல்லாம் பார்த்துட்டிருந்தா முடியாது. எப்படியும் இந்நேரம், அந்தப் புதையல் என்ன, இவங்க யாரு, என்ன செய்யறாங்கன்னு பாலு கண்டுபிடிச்சிருப்பான். அவனுக்கு எதாவது ஆபத்து வந்தாலும் வந்திருக்கலாம். நாம கதவை உடைச்சிக்கிட்டு ஓடிடவேண்டியதுதான். முதல்ல பாலுவைப் பார்த்துடணும். அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்றான் டில்லி.

இருவரும் ஒரு முடிவுடன் எழுந்து, இருளில் நடந்து வந்து அந்த அறையின் கதவருகே நின்று லேசாகத் தொட்டார்கள். யாரும் இல்லாவிட்டால் கதவை மோதித் திறக்கப் பார்ப்பது, அல்லது அறையின் ஒரு ஓரத்தில் இருந்த ஒரே ஒரு சன்னலை உடைத்து எடுத்து வெளியே குதித்துவிடுவது என்று திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லாதவகையில், அந்த அறையின் கதவு தொட்டதுமே திறந்துகொண்டுவிட்டது!

"அதிர்?டம்டா நமக்கு" என்றான் டில்லி.

யாரும் வழியில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவர்கள், 'ஒன், டூ, த்ரீ' என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் தடதடவென்று இறங்கி, வெளிக்கதவை அடைந்து பாய்ந்து வெளியேறி, கண்ணை மூடிக்கொண்டு தலைதெரிக்க ஓட ஆரம்பித்தார்கள்.

சுமார் ஐம்பதடி தூரம் ஓடியபிறகுதான் அவர்கள் நின்று திரும்பிப்பார்த்தார்கள். சே, எல்லோரும் தான் புதையலை எடுக்கப் போயிருப்பார்களே, இங்கு யாருக்காகத் தாங்கள் இப்படி பயந்தோம் என்று அவர்களுக்கே ஒரு கணம் வெட்கமாக இருந்தது.

சரி, உடனடியாக பாலுவைச் சந்திப்பதுதான் முக்கியம். அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மீண்டும் நினைவூட்டினான் டில்லி.

"என்னடா செய்யலாம்?"

"ரெண்டே ரெண்டு சாத்தியங்கள்தான் குடுமி. ஒண்ணூ, பாலு புதையல் ரகசியத்தைக் கண்டுபிடிச்சிட்டு, பாதுகாப்பா எங்கயாவது பதுங்கியிருக்கலாம். அல்லது, ரகசியம் தெரிஞ்சிக்கிட்டு குண்டர்கள் கிட்ட மாட்டிக்கிட்டிருக்கலாம். முதலாவதுக்கு சாத்தியங்கள் குறைவு. அடுத்ததுக்கே வாய்ப்பு அதிகம். எப்படியானாலும் அவன் கண்டுபிடிக்காம இருக்கமாட்டான். எனக்கு அவனை நல்லா தெரியும்" என்றான் டில்லி.

"சரி, வா அவனைக் கண்டுபிடிப்போம்" என்றான் குடுமி.

"அதுக்கு முன்னால ஒரு நிமி?ம்" என்ற டில்லிபாபு, தன் நி?ாரின் பொத்தான்களை நெகிழ்த்தி, உள்புறம் கையை விட்டு எதையோ எடுத்தான்.

"என்னடா பண்ற?"என்று அலுத்துக்கொண்டான் குடுமி.

"ஒரு நிமி?ம் இரு, இதோ வந்துடறேன்" என்று சட்டென்று பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியின் மறைவுக்கு ஓடிய டில்லிபாபு, சரியாக ஒன்றரை நிமிடங்கள் கழித்துத் திரும்பினான்.

"என்னதுடா?" என்று மீண்டும் கேட்டான் குடுமி.

"ம்? ஒண்ணுமில்லை. நேத்து சாயங்காலத்திலிருந்து எங்க மீனவர் சங்கத்தலைவர் ஒரு பொருள் காணாம தேடிட்டிருந்திருப்பார். திரும்பிப் போனதும் அவருக்கு விளக்கம் சொல்லணும்" என்றவன், "இப்ப உனக்கு சொன்னா புரியாது. நீ வா, நாம பாலுவைத் தேடுவோம்" என்று நடக்க ஆரம்பித்தான்.

"இவன் எப்பவுமே இப்படித்தான்" என்று அலுத்துக்கொண்ட குடுமி அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அவர்கள் கடற்கரை வெளியை அடைவதற்கும் பாலுவை குண்டர்கள் படகில் பார்த்துவிட்டு, கொத்தாக அவன் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:31 pm

இருவரும் அதிர்ந்துபோனார்கள். ஐயோ, பாலு மாட்டிக்கொண்டுவிட்டான்! இந்த புதையல் குண்டர்கள் அவனை என்ன செய்வார்களோ. நிச்சயம் கடலுக்குள் இழுத்துப்போய் தள்ளித்தான் விடுவார்கள். நீச்சல் தெரியாத பாலுவால் ஒரு நிமிடம் கூடத் தண்ணீரில் தாக்குப்பிடிக்க முடியாது! அதுவும் குண்டன் வேறு. கிரிமினல் குண்டர்களெல்லாம் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார்கள். இந்த நல்ல பாலு மட்டும் ஏந்தான் இப்படி நி? குண்டனாக இருக்கிறானோ?

"ம்?ும். யோசிக்கவே நேரமில்லைடா குடுமி. விபரீதம் ஆரம்பிச்சாச்சு. நாம படகில் ஏறிக் கிளம்பியாகணும். எப்படியாவது பாலுவை மீட்கணும்" என்றான் டில்லி.

அவர்கள் வந்திருந்த கட்டுமரம், அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. அதாவது, வட்ட வடிவமான தீவின் ஒரு முனையில் அவர்கள் அப்போது நின்றுகொண்டிருந்தார்கள். சரியாக நூறடி நடந்து வலப்புறம் கடற்கரை திரும்பும் இடத்துக்குப் போனால், பாலுவும் நண்பர்களும் வந்த படகு இருக்கும்.

"இதுவும் நல்லதுக்குத்தான். நாம கிளம்பறதை குண்டர்கள் பார்க்க முடியாது. நீ என் பின்னாலேயே ஓடிவா" என்று உத்தரவிட்டுவிட்டு டில்லிபாபு, மரங்களின் பின்னால் வேகவேகமாக ஓட ஆரம்பித்தான். அவனைப் பிந்தொடர்ந்து குடுமி நாதனும் தன் குடுமி காற்றில் பறக்க, ஓடத் தொடங்கினான்.

அவர்கள் தம் படகை அடைந்து, மணலில் அதனைத் தேய்த்துத் தள்ளித் திருப்பி கடலுக்குள் வேகமாகத் தள்ளிவிட்டுப் பாய்ந்து ஏறிக்கொண்டதும், கட்டுமரம் நீரில் ஒய்யாரமாக மிதக்க ஆரம்பித்தது. முதலில் இருந்த வேகமான ஆட்டம் சற்றே குறைந்து, ஒரு பேலன்? கிடைத்ததும் டில்லிபாபு வேக வேகமாகத் துடுப்பை வலிக்க ஆரம்பித்தான். ஓர் அரை வட்டமடித்துத்தான் பாலு போய்க்கொண்டிருக்கும் படகை அடைய முடியும்.

அதற்குள் அவர்கள் வெகுதூரம் போயிருப்பார்களா என்கிற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது.

"சே, தப்பு பண்ணிட்டோமேடா. பாலுவுக்கு எதனா ஆனா, அவன் வீட்டுக்கு என்ன சொல்றதுன்னு கவலையா இருக்குடா" என்றான் குடுமி.

"உ?. இப்ப வேண்டாத பேச்சுகள் வேணாம். நல்லதை நினைத்து, நம்ம கடமையைச் செய்வோம். க?டமான சமயங்கள்ள கலங்காம இருக்கறதுதான் வீரம். எங்க மீனவர் சங்கத் தலைவர் அடிக்கடி சொல்லுவார் இதை" என்றான் டில்லிபாபு.

ஐந்து நிமிடங்களில் அவர்கள் பாலு போய்க்கொண்டிருந்த படகைப் பார்த்துவிட்டார்கள். 'அதோ, அதோ' என்று குடுமிநாதன் கத்தினான்.

"கவனமா கேள் குடுமி. நான் இப்ப வேகமா கட்டுமரத்தை செலுத்துவேன். எப்படியும் ஒரு இருபதடி தூரத்தில் அந்தப் படகுக்கு நெருக்கமா கொண்டு போயிடுவேன். கிட்ட போனதும் நீ பாலுவைப் பார்த்து குதிக்கச் சொல்லிக் கத்து. பாலு பயப்படாம தண்ணில குதிச்சிடணும். அவன் குதிச்சதும் நான் துடுப்பை உன்னிடம் குடுத்துட்டுத் தண்ணில குதிப்பேன். எப்படியாவது அவனை இழுத்துட்டு வந்து நம்ம கட்டுமரத்துல சேர்த்துடறது என் பொறுப்பு. அதுவரைக்கும் கட்டுமரம் கவிழாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, கட்டுமரத்தை எப்படித் தள்ளவேண்டும் என்று சில எளிய வழிகளை குடுமிக்கு போதித்தான் டில்லிபாபு.

இரு புறங்களிலும் சமமான அளவு அழுத்தம் தரவேண்டும். தண்ணீருக்குள் அழுந்தும் துடுப்பை மிகவும் அழுத்தத் தேவையில்லை. ஓரளவு அழுந்தினால் போதும். ஆனால் ஒரு சீரான வேகத்தில் நீரைத் தள்ளவேண்டும். சரியாகத் தள்ளுகிறோமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயப்படவேண்டாம். கட்டுமரத்தின் திசை மாறினாலும் நிச்சயம் மூழ்காது.

இவ்வாறு சொல்லிவிட்டு, ஆவேசம் வந்தவன் மாதிரி பாலு போய்க்கொண்டிருந்த படகை நோக்கிக் கட்டுமரத்தைச் செலுத்தினான் டில்லி. எப்படியாவது பாலு தங்களைப் பார்த்துவிட்டால் பரவாயில்லை என்று கடவுளை வேண்டிக்கொண்டான். ஆனால் அந்த இருட்டில் ஒரு கட்டுமரம் வருவது கண்ணில் படுவதே சிரமம். படகுக்குள்ளாவது ஒரே ஒரு ?ரிக்கேன் விளக்கு இருப்பது தெரிந்தது. இருளில் ஒரு கட்டுமரம் எப்படிக் கண்ணில் படும்? இருப்பினும் குத்துமதிப்பாக அந்தப் படகைக் குறிவைத்து வேக வேகமாகச் செலுத்தியவன் அடுத்த பத்து நிமிடங்களில் கணிசமாக நெருங்கி வந்துவிட்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:31 pm

"குடுமி, இதான்! இதான் சமயம்! நீ குரல் கொடு!" என்று உத்தரவிட்டான் டில்லி.

"பாலு! நாங்க வந்துட்டோம். நீ குதி, குதிச்சிடு, குதிச்சிடு!" என்று தொண்டை கிழியக் கத்தத் தொடங்கினான் குடுமிநாதன்.

படகில் இருந்த பாலுவுக்கு நாலைந்து முறை குடுமியின் குரல் மங்கலாகவே கேட்டது. தன் பிரமையாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தான். குண்டர்கள் படகில் அமர்ந்து சீட்டாடத் தொடங்கியிருக்கவே அவன் கடலை நோட்டமிடுவதற்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. தற்செயலாகத்தான் அவன் குடுமியும் டில்லியும் வந்துகொண்டிருந்த கட்டுமரத்தைப் பார்த்தான். ஒருகணம் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. கட்டுமரத்தில் டான்? ஆடியபடி நின்றுகொண்டு 'பாலு!பாலு!' என்று கத்திய குடுமிநாதனைப் பார்த்ததுமே அவனுக்கு வீரம் வந்துவிட்டது.

"குதி! குதி!'' என்ற அவனது குரல் இப்போது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஒரே ஒரு கணம் தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தான். ஆனால், இது நீச்சல் கற்றுக்கொள்ளும் சமயம் அல்ல. கடலை எதிர்த்துப் போராட வேண்டிய சமயம். நண்பர்கள் நிச்சயம் ஏதாவது திட்டமுடன் தான் வந்திருப்பார்கள்.

சுற்றுமுற்றும் பார்த்தான். "என்னடா பாக்கற" என்றான் ஒரு குண்டன்.

அவ்வளவுதான். கபாலென்று படகின் விளிம்பைப் பிடித்து ஒரு காலைத் தூக்கிப்போட்டு மேலே ஏறினான். கண்ணிமைக்கும் நேரம் கூட இல்லை.

கடவுளே காப்பாத்து என்று மனத்துக்குள் கத்திக்கொண்டபடி தொபீரென்று நடுக்கடலில் குதித்தான் பாலு.

அதே சமயம் டில்லிபாபு, கட்டுமரத்தின் துடுப்பை பாலுவிடம் கொடுத்துவிட்டு, சட்டையைக் கழட்டிவிட்டுத் தயாராக இருந்தான். பாலு குதித்ததைப் பார்த்ததும் அவனும் கட்டுமரத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்தான்.

கடலில் ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் அலைகள் இருக்காது. மேற்புறம் ஒரு குளம் போலத்தான் தோற்றமளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களில் நீரில் அழுத்தம் அதிகம் இருக்கும். நீச்சலில் மிகுந்த தேர்ச்சி உள்ளவர்கள் மட்டுமே நீந்திக் கடக்க இயலும். அலை இருந்தாலாவது ஒரு பக்கமாக இழுத்துப்போகும். அலையும் இல்லாத இடம் என்றால் ஒரே அழுத்து! அவ்வளவுதான்.

குண்டர்களின் படகிலிருந்து பாலு குதித்த இடம் அத்தனையொன்றும் ஆழமானதல்ல. அதே சமயம், அலையடிக்கும் இடமும் அல்ல. சுமாராக நீந்தத் தெரிந்த ஒருவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு நீச்சலடித்தால் பக்கத்தில் சற்றுத்தொலைவில் இருந்த கட்டுமரத்தை நெருங்கி ஏறிவிடமுடியும். ஆனால் நீச்சல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய பாலுவால் என்ன செய்துவிட முடியும்? மேலும் அவனது உடம்பு வேறு ஒரு கொழுத்த பூசணிக்காய் போல இருக்கும். தரையில் நடந்தாலே மேல்மூச்சு வாங்கக்கூடியவன். சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டாக்களும் வெஜிடபிள் சமூசாக்களும் ஐஸ் கிரீம்களும் கொஞ்சநஞ்சமா? வாத்தியார் கிண்டல் செய்தபோதெல்லாம் அது அத்தனை பெரிய விஷயமாகத் தெரியவில்லை. சக மாணவர்கள் கேலி செய்தபோதெல்லாம் 'போடா சர்தான்' என்று விட்டுவிட்டான். 'சாப்டா பரவால்லடா பாலு. கூடவே எக்ஸஸைஸ் பண்ணிடணும்' என்று அப்பாவும் அம்மாவும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார்கள். கேட்டால்தானே?

கடவுள் ஏன் என்னை மட்டும் குண்டு பையனாகப் படைத்தான்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய உடம்பு? தூக்கமாட்டாமல்? எனக்கு மட்டும் ஏன் இப்படி வினோதமான சங்கடங்களெல்லாம் வருகின்றன? அதுசரி. இப்போது வீராதி வீரனாக நடுக்கடலில் குதித்துவிட்டேனே, எப்படிக் கரை சேரப்போகிறேன்? எந்தக் கடல்தேவதை வந்து என்னைக் காப்பாற்றப் போகிறது?

ஒரு வினாடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். பாலு படகின் மீது ஏறி நின்று, தொபுக்கட்டீரென்று குதித்து நீரில் அமிழத் தொடங்கும் நேரத்துக்குள் இத்தனையையும் யோசித்துப் பார்த்தான். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் எப்படியும் தப்பித்துவிடுவோம் என்று ஒரு சின்ன துணிச்சலும் இருந்தது. நீச்சலில் தேர்ந்த டில்லிபாபு தன்னைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து, அதோ நீந்தி வந்துகொண்டிருக்கிறான். எப்படியும் காப்பாற்றிவிட மாட்டானா என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:32 pm

ஆனால் டில்லி அவனை நெருங்குவதற்குள் அவன் கடலின் அடியாழத்தைத் தொட்டுவிடுவான் போல இருந்தது. முதலில் எப்படி மூச்சு விடுவது என்று தெரியவில்லை. நீச்சலின் பாலபாடமே மூச்சை அடக்குவதுதான்! ஆனால் எத்தனை நேரம் அடக்குவது? எப்படி அடக்குவது? வாயைத் திறந்தால் உப்புநீர் உள்ளே போய்விடும். சனியன், இந்த நேரத்தில் அறிவியலெல்லாம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. உள்ளே நீரைக் குடிக்கக் குடிக்க உடலின் கனம் அதிகமாகும். மேற்கொண்டு கையைக் காலை ஆட்ட முடியாமல் போய் இன்னும் மூழ்க வேண்டிவரும். மேலும் உப்புநீரை சுவைத்தும் குடித்துத் தொலைக்க முடியாது. குமட்டிக்கொண்டு வாந்தி வரும். கடலில் வாந்தி எடுத்தால் ஒரே ஒரு சௌகரியம், துடைத்துக் கழுவவேண்டிய அவசியம் இருக்காது.

சே, நான் ஏன் இப்படி தறிகெட்டு யோசிக்கிறேன்! என்ன ஆயிற்று எனக்கு? புத்தி பிசகத் தொடங்கிவிட்டதா? உயிர் போகும்போது இப்படித்தான் ஆகுமா?

அவனுக்கு முதல் முறையாக பயப்பீதி பிடித்துக்கொண்டது. தன்னால் முடிந்தவரை கால்களை வேக வேகமாக உதைத்துப் பார்த்தான். கைகளை முன்னும் பின்னும் அசைத்து நீரைக் கிழித்து மேலே வர முடியுமா என்று முயற்சி செய்தான். இந்த டில்லிக் கடங்காரன் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறான்? இந்நேரம் பாய்ந்துவந்து காப்பாற்றியிருக்க வேண்டாமா?

இவ்வாறு அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே தன் தலைமுடியைக் கொத்தாக யாரோ பிடிப்பது போல உணர்ந்தான். ஆ! டில்லி வந்துவிட்டான்! காக்கும் கடல் தேவதை அவந்தானா?

ஆனால் பாலுவால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. தலை சுற்றி மயக்கத்தின் விளிம்புக்குப் போய்க்கொண்டிருந்தான். தன்னைக் கொத்தாகப் பிடித்த உருவம் அப்படியே இழுத்துக்கொண்டு மேலே போய்க்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவனால் உணரமுடிந்தது. எப்படியும் பிழைத்...

அவ்வளவுதான். பாலுவுக்கு முற்றிலுமாக நினைவு மறைந்துபோனது. முழுமையான மயக்கத்துக்குத் தன்னைத் தந்தவனுக்கு அதன்பின் நடந்தது எதுவுமே தெரியவில்லை.

உண்மையில் பாலுவின் தலைமுடியைப் பற்றித் தூக்கியது டில்லி அல்ல. படகில் அவனை ஏற்றி வந்த குண்டர்களில் ஒருவன் தான். பாலு கடலில் குதித்ததுமே சுதாரித்துக்கொண்டு எழுந்து வந்து பார்த்த குண்டர்கள், தொலைவில் கட்டுமரத்தில் டில்லியும் குடுமிநாதனும் வருவதைப் பார்த்துவிட்டார்கள்.

"டேய், இவனுகளை வெறும் பொடிப்பையன்கள்னு நினைச்சி விட்டது தப்புடா. மூணுபேரையும் சேர்த்துப் பிடிச்சிட்டுப் போயிடணும். நம்ம நாட்டுக் கடல் எல்லை தாண்டினதும் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" என்று அவர்களில் தலைவன் போலிருந்த பெருங்குண்டன் சொன்னான்.

அவன் சொன்னதை ஆமோதித்த இன்னொரு குட்டி குண்டன் உடனே தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டுக் கடலில் பாய்ந்தான். பாலுவை எப்படியாவது தூக்கி வந்துவிடுவதே அவன் நோக்கமாக இருந்தது. அதே சமயம், பாலுவைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் பாய்ந்து நீந்தி வந்துகொண்டிருந்த டில்லிபாபுவைக் குறிவைத்து இன்னொரு குண்டனும் நீரில் பாய்ந்தான்.

"அந்தக் கட்டுமரத்துல ஒரு பையன் இருக்கான் பாஸ்" என்று இன்னொருவன் சுட்டிக் காட்ட, "இருக்கட்டும், இருக்கட்டும்... ரன்னிங் ரேஸா ஓடமுடியும் இங்க? இவனுகளைப் பிடிச்சிப் போட்டுட்டு அவனைப் போய் அள்ளிப்போம்" என்றான் பெருங்குண்டன்.

இப்படியொரு விபரீதம் நேரலாம் என்று டில்லி எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் என்ன செய்வது என்றும் அவனுக்குப் புரியவில்லை. டில்லிக்கு நீச்சல் தெரியும். கண்டிப்பாக அவன் ஒருவனாகவே பாலுவை இழுத்துப் போய்க் காப்பாற்றிவிட முடியும். ஆனால் தடி தடியாக குண்டர்கள் நடுக்கடலில் சண்டைக்கு வந்தால், பாவம் சின்னப்பையனால் என்ன செய்துவிட முடியும்? உடனே அவனுக்கு அழுகை வந்துவிட்டது. இத்தனை சிரமப்பட்டு புதையல் தீவின் ரகசியங்களை பாலு தனியொருவனாகக் கண்டுபிடித்திருக்கிறான். அந்த ரகசியம் என்னவென்று வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த முடியாமலேயே போய்விடுமா? அட, வெளியுலகம் கிடக்கட்டும். பாலுவின் முயற்சிகளுக்குப் பக்கபலமாகக் கூட வந்த தங்கள் இருவருக்குமே கூடத் தெரியாமல் போய்விடுமா? கடவுளே, இதென்ன சோதனை!

ஒரு குண்டன் பாலுவைப் பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்துவிட்டான். இன்னொரு குண்டன் டில்லியை கோழி அமுக்குவது போல அமுக்கி இழுத்துக்கொண்டு வந்தான். இருவரையும் பந்துபோலச் சுருட்டித் தூக்கிப் படகில் போட்டுவிட்டு இருவரும் ஏறிக்கொண்டார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:32 pm

"ம்.. அந்தக் கட்டுமரத்தாண்ட போய்யா" என்று குரல் கொடுத்தான் பெருங்குண்டன்.

கட்டுமரத்தைத் தள்ளத் தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருந்த குடுமி, நடந்த காட்சிகளை இருட்டில் அரைகுறையாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் ஏற்கெனவே பயந்துபோயிருந்தான். அம்மா, அம்மா என்று அழவே ஆரம்பித்திருந்தான். பாலுவையும் டில்லியையும் குண்டர்கள் தூக்கிப் போய்விட்டால், நடுக்கடலில் தன் கதி என்ன என்கிற கவலை அவனுக்கு ஏற்பட்டது. 'குண்டர்களே! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், என்னையும் அழைத்துக்கொண்டு போய்விடுங்களேன்' என்று கத்தலாமா என்று பார்த்தான்.

சே, எத்தனை அபத்தம்! இப்போது தான் செய்யக்கூடியது என்ன? நண்பர்கள் இருவரும் ஆபத்தில் இருக்கிறார்கள். தன்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்க வேண்டும். ம்ஹும். வாய்ப்பில்லை. நடுக்கடல். நீச்சல் தெரியாத நிலைமை. எதிரிகளோ, உருட்டுக் கட்டை பேர்வழிகள். தவிரவும் இருட்டு. என்ன தான் செய்வது?

அவன் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. ஐந்து நிமிடங்களில் குண்டர்களின் படகு குடுமி இருந்த கட்டுமரத்தின் அருகே வந்துவிட்டது.

"டேய், அந்தப் பொடியனைத் தூக்கிப் போடுங்கடா" என்று ஒரு குரல் கேட்டது. படகிலிருந்து ஒரு கயிறை இறக்கினார்கள். வேறு வழியில்லாமல் குடுமி அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். படகின் விளிம்பை அவன் எட்டிப்பிடித்தபோது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்த ஒரு தடியன் அப்படியே தோசை திருப்பிப் போடுவது போல அவனைத் தூக்கிப் படகில் போட்டான்.

"மூணு பேர் தானேடா? இன்னும் ஏதாவது சுண்டெலி இருக்கா?" என்று எகத்தாளமாகக் கேட்டான் குண்டர் தலைவன். பாலுவுக்கு அப்போதுதான் லேசாக நினைவு திரும்பத் தொடங்கியிருந்தது. இருப்பினும் தொடர்ந்து மயக்கத்தில் இருப்பது போலவே நடிப்பது என்று முடிவு செய்துகொண்டான். ஏதாவது செய்யவேண்டும். ஏதாவது செய்து தப்பித்தே ஆகவேண்டும். இவர்களது சட்டவிரோத, தேச விரோத நடவடிக்கைகளை உலகுக்குத் தெரியப்படுத்தியே ஆகவேண்டும். விடக்கூடாது என்று மனத்தில் வைராக்கியம் பூண்டான்.

ஆனால் குண்டனின் பேச்சு அவனுக்குக் கவலையளித்தது.

"டேய், இந்த மூணு பேரையும் சும்மா விடக்கூடாது. கரெக்டா நம்ம நாட்டுக் கடல் எல்லை தாண்டினதும் அஞ்சாம் திட்டு நெருங்கறப்ப இவனுகளைக் கழுத்தை நெரிச்சி, கடல்ல தள்ளிடுவோம். கண்டிப்பா இன்னிக்கு சுறாக்களுக்கு நல்ல பிரியாணி விருந்துதான்" என்று பி.எஸ். வீரப்பா போல் சிரித்தான்.

ஆனால் விதி வேறு விதமாகச் சிரித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:33 pm

குண்டர்களால் நிறைந்த அந்த இயந்திரப்படகு, மணிக்குப் பதினைந்து கடல்மைல் வேகத்தில் நீரைக் கிழித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. நல்ல கும்மிருட்டு. படகை ஓட்டிய இன்னொரு புதிய குண்டனுக்கு அந்தக் கடல்பாதை நல்ல பழக்கம் போலிருக்கிறது. சில இடங்களில் வேகத்தைக் கூட்டியும் சில இடங்களில் குறைத்தும் சில இடங்களில் அரை வட்ட வடிவமாகவும் இன்னும் சில இடங்களில் முற்றிலும் எஞ்சினை அணைத்துவிட்டும் படகைச் செலுத்திக்கொண்டிருந்தான். எப்படியும் அதிகாலை நட்சத்திரங்கள் தென்படத் தொடங்கும் முன் இந்தியக் கடல் எல்லையைக் கடந்துவிடவேண்டும் என்பதே அவர்களின் லட்சியமாக இருந்தது.

பாலு, டில்லி, குடுமிநாதன் மூவரையும் அவர்கள் ஒரு கயிற்றினால் பிணைத்து, படகின் ஒரு மூலையில் கோணி மூட்டை போல் உருட்டிவிட்டிருந்தார்கள். பாலு இன்னும் தனக்கு நினைவு திரும்பாதது போலவே நடித்துக்கொண்டிருந்தான். டில்லி, என்ன செய்யமுடியும் என்று யோசித்துக்கொண்டிருந்த அதே வேளையில் குடுமிநாதன் மனத்துக்குள் தனக்குத் தெரிந்த கடவுள்களையெல்லாம் அழைத்து, தங்களைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டிருந்தான். அப்போதுதான் டில்லி சொன்னான்:

"ஒண்ணும் பிரச்னை இருக்காதுன்னுதான் நினைக்கறேன். எப்படியும் நாம தப்பிச்சிடுவோம்!"

"எப்படிடா?" என்றான் குடுமி. அவன் கண்களில் ஆர்வம் கொழுந்துவிட்டு எரிந்தது.

"ஒரு யூகம்தான். ஒரு காரியம் செஞ்சிருக்கேன். அது பலன் தருதான்னு பாப்போம்" என்றான் சிந்தனையில் லயித்தபடி.

அவன் சொல்லிமுடித்தநேரம் படகைச் செலுத்திக்கொண்டிருந்த புதிய குண்டனின் நடவடிக்கையில் ஒரு பரபரப்பு தெரிந்தது. வெளியே உட்கார்ந்திருந்த தலைமைக் குண்டனும் பிற தொண்டர் குண்டர்களும் தபதபவென்று எஞ்சின் அறையை நோக்கிப் போவதை அவர்கள் பார்த்தார்கள்.

"நோ!நோ!" என்று அங்கிருந்து சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் பாலுவுக்குப் புரியவில்லை. கண்ணைத் திறந்துவிடலாம் என்று நினைத்தான். சத்தமிட்டு கலாட்டா செய்துவிடக்கூடிய குடுமிக்குத் தெரியாமல் நைசாக டில்லியின் வலது காலைச் சொறிந்து, தான் விழித்துக்கொண்டிருப்பதை முதலில் தெரியப்படுத்தினான். பிறகு, சைகை மூலம் என்ன நடக்கிறது என்றும் கேட்டான்.

"கருவி வேலை செஞ்சிடுச்சின்னு நினைக்கறேன்" என்றான் டில்லி.

"என்னது?" என்றான் குடுமி.

"நாம படகில் ஏறுமுன் ஒரு மரத்தடிக்கு மறைவா போய் ஒரு நிமிஷம் தியானம் செஞ்சிட்டு வந்தேன் நினைவிருக்கா?" என்று கண்ணடித்தான் டில்லி.

"ஆமா?"

"அதான். கருவி வேலை செஞ்சிடுச்சி."

"என்னமோ உங்க மீனவர் சங்கத் தலைவர் எதையோ தேடுவார்னு சம்பந்தமில்லாம உளறின?"

"அதேதான்" என்றவன் கட்டுகளிலிருந்து தன் கையை மட்டுமாவது விடுவித்துக்கொள்ளமுடியுமா என்று பார்த்தான். ம்ஹும். பலமான கட்டு! இருப்பினும் தன் கண்ணாலேயே தன் டிராயரின் பாக்கெட்டைச் சுட்டிக்காட்டியவன், அங்கே மேடாக இருந்த பகுதியைப் பார்த்தபடி, "இதுதான். எங்க தலைவரோட மொபைல் போன்! எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துக்கிட்டு வந்துட்டேன். ஆனா போன் அடிச்சி யாரையும் உதவிக்குக் கூப்பிடும் நிலைமைல நாம இல்லை. அதனால அந்த மொபைல்ல இருந்த அத்தனை நம்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ். குடுத்துட்டேன். ஒரே ஒரு மெசேஜ்! பன்றித்தீவில் ஆபத்தில் இருக்கிறோம். காப்பாற்றுங்கள். அவ்வளவுதான். வந்துட்டாங்கன்னு நினைக்கறேன்!" என்றான் டில்லி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஓர் அதிசயம் நடந்தது. அவர்கள் போய்க்கொண்டிருந்த படகிலிருந்து சுமார் முப்பதடி தூரத்தில் சுற்றிலும் ஏராளமான மீன்பிடிப்படகுகளும் விசைப்படகுகளும் கட்டுமரங்களும் அணிவகுத்திருந்தன! ஒரு கடற்படை விசைப்படகும் அங்கே இருந்ததை பாலுதான் முதலில் பார்த்தான்!

"என்னடா இது! நம்பவே முடியலை என்னால?" என்றான் குடுமி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:33 pm

"அவ்ளோதான். நாம தப்பிச்சிட்டோம். எஸ்.எம்.எஸ். வேலை செஞ்சிடுச்சி. மீனவர் சங்கத்தலைவரோட மொபைல்லேருந்து செய்தி குடுத்ததால, அவருக்குத்தான் ஏதோ ஆபத்துன்னு மக்கள் நினைச்சிருப்பாங்க. நாம முதல்ல அவங்களுக்கு புரியவெக்கணும்" என்றபடி டில்லி, "காப்பாத்துங்க, காப்பாத்துங்க" என்று உரக்கக் குரல் கொடுக்க ஆரம்பித்தான்.

அதற்குள் தப்பிக்க ஏதாவது வழியுண்டா என்று குண்டர்கள் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடியபடி பேசிக்கொண்டிருக்க, மீனவப் படகுகள் அந்த இயந்திரப் படகை நெருங்கி, ஏழெட்டுபேர் உருட்டுக்கட்டையுடன் முதலில் அந்தப் படகுக்குள் ஏறிக் குதித்தார்கள்.

இரண்டே நிமிடங்கள். படகில் இருந்த அத்தனை குண்டர்களும் அதே கயிற்றால் கட்டப்பட்டு ஒரு மூலையில் உருட்டப்பட, பாலு, டில்லி, குடுமி மூவரும் விடுவிக்கப்பட்டு, அந்தப் படகிலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, பாதுகாப்பாகக் கடற்படைப் படகில் ஏற்றப்பட்டார்கள்.

பாலுவுக்கு ஆசுவாசம் செய்துகொள்ளக்கூட அவகாசம் இல்லை. கடற்படை அதிகாரிகளைப் பார்த்ததுமே ஓடிப்போய் விவரங்களைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

"இதுதான் சார் நடந்தது. அன்னிக்கு நாங்க ஸ்கவுட்ஸ் ஸ்டூடண்ட்ஸ் பன்றித்தீவுக்கு வந்தபோது, அங்கிருந்த பாழடைந்த கட்டடத்துல நாலுபேர் என்னவோ புதையல்னு பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன். என்னன்னு கண்டுபிடிக்க நினைச்சேன். என் நண்பர்கள் குடுமிநாதன், டில்லி ரெண்டுபேரும் உதவி செய்ய முன்வந்தாங்க. நாங்க மூணுபேரும் வீட்டுக்குத் தெரியாம இந்தத் தீவுக்கு நேத்து ராத்திரி புறப்பட்டு வந்தோம். டில்லிக்குக் கட்டுமரம் செலுத்தத் தெரியும்ங்கறதுதான் இதை சாத்தியமாக்கியது..." என்று ஆரம்பித்தவனை இடைமறித்த கடற்படை அதிகாரி, "அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பார்த்திங்க இந்தத் தீவுல? அதைச் சொல்லுங்க முதல்ல?" என்று ஆர்வமுடன் பரபரத்தார்.

"சொல்றேன் சார். இது ஒரு சமூகவிரோதக் கூட்டம். புதையல்னு இவங்க குறிப்பிட்டது என்ன தெரியுமா? பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள்! நம்ம நாட்டுலேருந்து திருட்டுத்தனமா அதைக் கடத்தி எடுத்துக்கிட்டு வந்து இந்தப் பன்றித்தீவுல புதர்களுக்கு இடையில் பதுக்கி வெச்சிக்கறாங்க. மாதம் ஒருமுறை அதை இங்கேருந்து ஸ்டீம் போட்ல ஏத்தி வெளிநாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறாங்க" என்றான் பாலு.

"ஓ, மை காட்!" என்ற கடற்படை அதிகாரி, "எனக்குப் புரிஞ்சிடுச்சி. கொஞ்சநாளாவே எங்களுக்கு இங்கேருந்து பெட் ரோல் கடத்தப்படுதோன்னு சந்தேகம் இருந்தது. அண்டை நாட்டுல புரட்சி நடந்துக்கிட்டு இருக்கு. அங்க உள்ள பல்வேறு குழுக்களுக்கு இங்கேருந்து எரிபொருள், உணவுப்பொருள்கள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து செய்தி வந்துக்கிட்டே இருந்தது. சரியா பொறிவெச்சிப் பிடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். பொடிப்பசங்க நீங்க எப்படியோ இதைக் கண்டுபிடிச்சிட்டிங்களே" என்றபடி பாலுவைத் தட்டிக்கொடுத்தார்.

கடற்படை அதிகாரிகளில் சிலர் வேறு ஒரு படகில் பாலுவை அழைத்துக்கொண்டு மீண்டும் பன்றித்தீவுக்குப் போனார்கள். அங்கே பாலு பெட் ரோல் பேரல்களைக் கண்டெடுத்த இடம், அவர்கள் பதுங்கியிருந்த பழைய பங்களா போன்ற இடங்களைத் துப்புறவாகச் சோதனையிட்ட கடற்படை அதிகாரிகள், பாலு சொல்வது அத்தனையும் உண்மையே என்பதைக் கண்டறிந்தார்.

"வெல்டன் மை பாய்ஸ்! உங்க வயசுக்கு மிக அதிகமான காரியத்தைச் செய்திருக்கிங்க. இதோட மதிப்பு உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.

"தெரியும் சார். வீட்டுக்குச் சொல்லாம இப்படியொரு காரியத்தை நாங்க செய்யப் புறப்பட்டது தப்புதான். ஆனா தேசவிரோத சக்திகளை இனம்கண்டு கைது செய்ய நாங்க ஒரு கருவியா இருந்திருக்கோம்ங்கற வகையில் ரொம்ப சந்தொஷமாகவும் பெருமையாகவும் இருக்கு சார்!" என்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:33 pm

பாலு, டில்லி, குடுமி நண்பர்களும் அவர்களை மீட்கப்போன மீனவர்களும் கடற்படை அதிகாரிகளும் பன்றித்தீவில் வேலைகளை முடித்துவிட்டு, கைது செய்த குண்டர்களுடன் கரைக்கு மீள்வதற்குள் பொழுது விடிந்துவிட்டது. அதற்குள் அதிகாரிகள் கரையில் இருப்போருக்குத் தகவல் தெரிவித்துவிட்டிருந்ததால், கடற்கரையெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்று அவர்கள் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். க்ரூப் ஸ்டடி என்று கதை விட்டுவிட்டு இப்படியொரு காரியத்துக்குத் தங்கள் மகன்கள் போயிருக்கிறார்கள் என்பதை இன்னமும் நம்பமுடியாத பாலு மற்றும் குடுமியின் பெற்றோரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.

"பாருங்களேன்! நம்பவே முடியலை. நம்ம பாலுவும் பத்மநாபனுமா இந்தக் காரியத்தை சாதித்திருக்காங்க?" என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள் அவர்கள். பாலுவின் பள்ளி ஆசிரியர்கள், அவன் வசிக்கும் தெருவில் வசிக்கும் பிற மக்கள் அத்தனை பேரும் அங்கே குழுமி இருந்தார்கள்.

தூரத்தில் பாலு வருகிற படகு தெரிந்ததுமே மக்கள் மத்தியில் ஆரவாரம் எழுந்துவிட்டது. தொலைவிலிருந்து இதையெல்லாம் பார்த்த பாலு உற்சாகத்தில் அங்கிருந்தபடியே கையசைத்தான்.

படகுகள் கரையைத் தொட்டதும் இளைஞர்கள் சிலர் தண்ணீரில் ஓடி, படகிலிருந்த பாலுவையும் குடுமியையும் டில்லியையும் அப்படியே அலேக்காகத் தலையில் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

"எவ்ளோ பெரிய சாதனை! மிகப்பெரிய கடற்படைப் பிரிவே செய்திருக்க வேண்டிய வேலையை மூணு பொடிப்பசங்க செஞ்சிட்டாங்களே!" என்று பாலுவின் வகுப்பு ஆசிரியர் சொல்லிக்கொண்டிருந்தார்.

"கரெக்டு சார். பசங்களோட தன்னம்பிக்கை, தேசபக்தி, விடாமுயற்சி ஆச்சர்யமளிக்குது. தக்க சமயத்துல இவங்க கரையில் இருக்கறவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாங்களே அதான் ஆச்சர்யமா இருக்கு." என்றார் கடற்படை அதிகாரி.

"மொபைல் போன்கள் இப்பல்லாம் குக்கிராமம் வரைக்கும் பிரபலமாயிடுச்சே. இதென்ன பெரிய விஷயம்! அந்த நடுநிசி நேரத்துல செய்தியைப் பார்த்துட்டு தக்க நடவடிக்கை எடுக்க உதவிய மக்களைச் சொல்லணும்"

ஆளாளுக்குப் பேசிக்கொண்டே இருந்தார்கள். கரை இறங்கியதும் டில்லி நேரே தங்கள் மீனவர் சங்கத் தலைவரிடம் போய் அவரது மொபைல் போனைக் கொடுத்துவிட்டு "மன்னிச்சிக்கங்கசார். உங்களைக் கேக்காம இதை எடுத்துக்கிட்டுப் போயிட்டேன். நம்ம தலைவர்தானேன்னு ஒரு உரிமைல செஞ்சிட்டேன். ஆனா இது இல்லாட்டி இந்நேரம் நாங்க மூணுபேரும் நடுக்கடல்ல ஜலசமாதி ஆகியிருப்போம்" என்றான்.

"அட நீ ஒண்ணு! உங்க மூணு பேருக்குமே நானே மொபைல் போன் வாங்கிப் பரிசளிக்கப்போறேன்" என்றார் தலைவர்.

அத்தனைபேரும் சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தபோது, அவர்களது சந்தோஷத்தைப் பலமடங்காக்குவது போலக் கடற்படை அதிகாரி ஒரு விஷயத்தைச் சொன்னார்.
]
"ஒரு விஷயம் தெரியுமா? நம்ம ஜனாதிபதி இன்னிக்கு நம்ம ஊருக்கு வரார். பக்கத்து ஊர்ல ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்து வைக்க வர்றவர், அப்படியே அவரோட சொந்த ஊரான நம்மூருக்கும் வரப்போறதா அவசரச் செய்தி வந்திருக்கு. அதனால நம்ம சூப்பர் ஹீரோக்கள் மூணு பேருக்கும் ஜனாதிபதியை வைத்தே ஒரு மினி பாராட்டு விழா நடத்தக் கடற்படை முடிவு செய்திருக்கு" என்றார்.

ஓ, ஓ, ஓ என்று ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

அன்று மாலை ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அலையலையாக மக்கள் குவிந்திருக்க, சரியாக ஐந்து மணிக்கு ஜனாதிபதியின் வாகனம் வந்து சேர்ந்தது. அத்தனை பேரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

பாலு, டில்லி, குடுமிநாதன் மூன்றுபேரையும் கடற்படை அதிகாரிகள் அழைத்து ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினார். "இவங்கதான் சார். சட்டவிரோதமா அந்நிய நாட்டுக்கு எரிபொருள் கடத்தற கும்பலைக் கண்டுபிடிச்சவங்க. சின்னப்பசங்கன்னாலும் தேசபக்தியிலேயும் விடாமுயற்சியிலேயும் தன்னம்பிக்கையிலும் ரொம்பப் பெரிய பசங்க" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 30, 2009 3:34 pm

ஜனாதிபதி அவர்களை அன்புடன் பார்த்தார். அருகே அழைத்து ஆரத் தழுவிக்கொண்டார். பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு அளித்தார். அவசரமாக ஆர்டர் கொடுத்து செய்து எடுத்துவரப்பட்டிருந்த பதக்கங்களையும் அணிவித்தார். தமது மிகச்சிறிய உரையில், மூன்று சிறுவர்களையும் மூன்று ரத்தினங்களாக உயர்த்திப் பேசினார். கரகோஷத்தில் அந்தச் சிறிய மீனவக் கிராமமே அதிர்ந்தது.

விழா முடிந்து காரில் ஏறுமுன் ஜனாதிபதி பாலுவை அழைத்தார். "ஒரே ஒரு கேள்வி"

"சொல்லுங்க சார்!"

"கொஞ்சம் கஷ்டமான கேள்வி. பரவால்லையா?"

பாலுவுக்கு முதலில் புரியவில்லை. என்னவாக இருக்குமோ என்று சற்றே சிந்தித்தபடி, "எதுன்னாலும் சொல்லுங்க சார். நாங்க இங்கேருந்து புறப்பட்டு பன்றித்தீவுக்குப் போனதுலேருந்து, திரும்பி வந்ததுவரை நடந்த அத்தனை விஷயங்களையும் ஆபீசர்கிட்ட சொல்லியிருக்கேனே" என்றான்.

"அதெல்லாம் இல்லை. இது ரொம்பக் கஷ்டமான கேள்வி"

"சொல்லுங்க சார். எனக்கு ஆர்வம் அதிகமாகுது."

"கேட்டுடட்டுமா? நிஜமா கேட்டுடுவேன்?"

"சாஆஆஆஆஆஆஆஆஆஅர்..." என்று கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில் அவர் கரங்களைப் பற்றியவன் "சீக்கிரம் கேளுங்க சார்"

"உன் நண்பன் பத்மநாபனுக்குக் குடுமியே இல்லையே? அப்புறம் ஏன் அவனைக் குடுமின்னு கூப்பிடறிங்க?"

பாலுவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

"ஓ, அதுவா! பத்மநாபனுக்கு நீளமா முடி வளர்த்து ஸ்டைலா காத்துல பறக்கவிடணும்னு ஆசை சார். ஆனா அவங்க அப்பா மாதம் ஒருமுறை நல்லா ஒட்ட சதுரவட்டை அடிச்சிடுவார். இயல்புல இல்லாத குடுமியை, பேர்லயாவது வெக்கலாமேன்னுதான் அப்படியொரு பட்டப்பெயர் வெச்சோம்" என்றான்.

ஜனாதிபதி குழந்தைபோல் சிரித்தார். கூடியிருந்த மக்கள் அவரது சிரிப்பில் கலந்துகொண்டார்கள். அந்தக் கடலோர கிராமத்துக் குழந்தைகள் அத்தனைபேரும் பாலுவையும் குடுமியையும் டில்லியையும் பெருமைபொங்கப் பார்த்தார்கள்.

அவர்கள் தேசத்துக்கே பெருமை தேடித்தந்திருப்பவர்கள். ஆனாலும் அந்தப் பெருமையின் பெரும்பகுதியை அவர்களின் விளையாட்டுத் தோழர்கள் சொந்தம் கொண்டாடுவதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாதல்லவா?


(முற்றும்)


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக