புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. |
அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), பெங்களூர் (எம். சின்னசாமி ஸ்டேடியம்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்), தரம்ஷாலா (எச்.பி.சி.ஏ. ஸ்டேடியம்), ஹைதராபாத் (ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), லக்னோ (பிஆர்எஸ்ஏபிவி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்), மும்பை (வான்கடே ஸ்டேடியம்), புனே (மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம்) உள்ளிட்ட 10 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.
மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் 2 அரையிறுதிப் போட்டிகளும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டியும் அரங்கேறுகிறது.
ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 அட்டவணையின் விவரங்களை இங்கு ஆராயலாம்.
போட்டி கடந்த 2019 பதிப்பைப் பிரதிபலிக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றுடன் முழு அட்டவணை இங்கு வழங்கப்பட்டுள்ளது. |
1 இங்கிலாந்து vs நியூசிலாந்து 5- அக்டோபர் பிற்பகல் 2 மணி அகமதாபாத்
2 பாகிஸ்தான் vs நெதர்லாந்து 6-அக்டோபர் பிற்பகல் 2 மணி ஐதராபாத்
3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் 7-அக்டோபர் காலை 10:30 மணி தர்மசாலா
4 தென் ஆப்பிரிக்கா vs இலங்கை 7-அக்டோபர் பிற்பகல் 2 மணி டெல்லி
5 இந்தியா vs ஆஸ்திரேலியா 8-அக்டோபர் பிற்பகல் 2 மணி சென்னை
6 நியூசிலாந்து vs நெதர்லாந்து 9-அக்டோபர் பிற்பகல் 2 மணி ஐதராபாத்
7 இங்கிலாந்து vs வங்கதேசம் 10-அக்டோபர் காலை 10:30 மணி தர்மசாலா
8 பாகிஸ்தான் vs இலங்கை 10-அக்டோபர் பிற்பகல் 2 மணி ஐதராபாத்
9 இந்தியா vs ஆப்கானிஸ்தான் 11-அக்டோபர் பிற்பகல் 2 மணி டெல்லி
10 ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா 12-அக்டோபர் பிற்பகல் 2 மணி லக்னோ
11 நியூசிலாந்து vs வங்கதேசம் 13-அக்டோபர் பிற்பகல் 2 மணி சென்னை
12 இந்தியா vs பாகிஸ்தான் 14-அக்டோபர் பிற்பகல் 2 மணி அகமதாபாத்
13 இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் 15-அக்டோபர் பிற்பகல் 2 மணி டெல்லி
14 ஆஸ்திரேலியா vs இலங்கை 16-அக்டோபர் பிற்பகல் 2 மணி லக்னோ
15 தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து 17-அக்டோபர் பிற்பகல் 2 மணி தர்மசாலா
16 நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் 18-அக்டோபர் பிற்பகல் 2 மணி சென்னை
17 இந்தியா vs வங்கதேசம் 19-அக்டோபர் பிற்பகல் 2 மணி புனே
18 ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 20-அக்டோபர் பிற்பகல் 2 மணி பெங்களூரு
19 நெதர்லாந்து vs இலங்கை 21-அக்டோபர் காலை 10:30 மணி லக்னோ
20 இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா 21-அக்டோபர் பிற்பகல் 2 மணி மும்பை
21 இந்தியா vs நியூசிலாந்து 22-அக்டோபர் பிற்பகல் 2 மணி தர்மசாலா
22 பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் 23-அக்டோபர் பிற்பகல் 2 மணி சென்னை
23 தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் 24-அக்டோபர் பிற்பகல் 2 மணி மும்பை
24 ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து 25-அக்டோபர் பிற்பகல் 2 மணி டெல்லி
25 இங்கிலாந்து vs இலங்கை 26-அக்டோபர் பிற்பகல் 2 மணி பெங்களூரு
26 பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா 27-அக்டோபர் பிற்பகல் 2 மணி சென்னை
27 ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து 28-அக்டோபர் காலை 10:30 மணி தர்மசாலா
28 நெதர்லாந்து vs வங்கதேசம் 28-அக்டோபர் பிற்பகல் 2 மணி கொல்கத்தா
29 இந்தியா vs இங்கிலாந்து 29-அக்டோபர் பிற்பகல் 2 மணி லக்னோ
30 ஆப்கானிஸ்தான் vs இலங்கை 30-அக்டோபர் பிற்பகல் 2 மணி புனே
31 பாகிஸ்தான் vs வங்கதேசம் 31-அக்டோபர் பிற்பகல் 2 மணி கொல்கத்தா
32 நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா 1-நவம்பர் பிற்பகல் 2 மணி புனே
33 இந்தியா vs இலங்கை 2-நவம்பர் பிற்பகல் 2 மணி மும்பை
34 நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான் 3-நவம்பர் பிற்பகல் 2 மணி லக்னோ
35 நியூசிலாந்து vs பாகிஸ்தான் 4-நவம்பர் காலை 10:30 மணி பெங்களூரு
36 இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 4-நவம்பர் பிற்பகல் 2 மணி அகமதாபாத்
37 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 5-நவம்பர் பிற்பகல் 2 மணி கொல்கத்தா
38 வங்கதேசம் vs இலங்கை 6-நவம்பர் பிற்பகல் 2 மணி டெல்லி
39 ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் 7-நவம்பர் பிற்பகல் 2 மணி மும்பை
40 இங்கிலாந்து vs நெதர்லாந்து 8-நவம்பர் பிற்பகல் 2 மணி புனே
41 நியூசிலாந்து vs இலங்கை 9-நவம்பர் பிற்பகல் 2 மணி பெங்களூரு
42 தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் 0-நவம்பர் பிற்பகல் 2 மணி அகமதாபாத்
43 ஆஸ்திரேலியா vs வங்கதேசம் 11-நவம்பர் காலை 10:30 மணி புனே
44 இங்கிலாந்து vs பாகிஸ்தான் 11-நவம்பர் பிற்பகல் 2 மணி கொல்கத்தா
45 இந்தியா vs நெதர்லாந்து 12-நவம்பர் பிற்பகல் 2 மணி பெங்களூரு
முதலாவது அரையிறுதி டி.பி.சி vs டி.பி.சி 15-நவம்பர் பிற்பகல் 2 மணி மும்பை
2வது அரையிறுதி டி.பி.சி vs டி.பி.சி 16-நவம்பர் பிற்பகல் 2 மணி கொல்கத்தா
இறுதிப்போட்டி டி.பி.சி vs டி.பி.சி 9-நவம்பர் பிற்பகல் 2 மணி அகமதாபாத்
ICC Cricket world cup 2023 Live Cricket Streaming
https://mc6.crichd.com
https://me.webcric.com/watch-world-cup-live-cricket-streaming-1.htm
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக் கோப்பை கிரிக்கெட் - ENG vs NZ: முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்
2023 உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து.
டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் தொடக்க நிகழ்வில் இந்தியாவின் மூத்த நட்சத்திரங்களுள் ஒருவரான டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.
கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.
2019 இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?
2019-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அனல் பறந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.
ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி, சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இப்போது எல்லோரது கண்முன்னாலும் வந்து போவது அந்த சூப்பர் ஓவர்தான்.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன.
முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது.
அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிய நிலையில் ஓவர்த்ரோ மூலம் அந்த பந்து பவுண்டரி சென்றதால் இங்கிலாந்துக்கு அந்த பந்தில் மொத்தம் ஆறு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடிய நிலையில் இரண்டாவது ரன் ஓடிய ரஷீத் ரன் அவுட் செய்யப்பட்டார்.
கடைசி பந்தில் இங்கிலாந்துக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அந்நிலையில் ஒரு ரன் எடுத்த இங்கிலாந்து, இரண்டாவது ரன்னுக்கு முயன்றபோது வுட்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். எனவே இங்கிலாந்து கடைசியில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.
சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?
ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முடிவு செய்யப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணியின் சார்பாக களமிறங்கிய ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இரண்டு பவுண்டரிகளை சேர்த்து 15 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் பந்து வீசினார்.
அடுத்து நியூசிலாந்து அணியின் சார்பாக கப்தில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்தின் சார்பாக ஆர்ச்சர் பந்து வீசினார். சூப்பர் ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியும் 15 ரன்களை எடுத்திருந்தது. எனவே சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
டையில் முடிந்த சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் தங்களது இன்னிங்ஸிலும், சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதன்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி 24 பவுண்டரிகளையும், நியூசிலாந்து அணி 16 பவுண்டரிகளையும் அடித்திருந்தன. இதன் மூலம் முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.
2023 உலகக் கோப்பை
13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கு முன்பே, 1987, 1996, 2011ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் பிற நாடுகளுடன் இணைந்தே அந்த தொடர்களை இந்தியா நடத்தியது. தற்போது முதன்முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது.
கடைசியாக நடைபெற்ற மூன்று 50 ஓவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் போட்டியை நடத்திய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த முறை தொடரை நடத்தும் இந்திய அணி கோப்பையை வசமாக்குமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன. இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை 1987ல் ஆண்டில் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி தான் வெல்லும் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். |
1987-ல் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். இவர் முன்னதாக, டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்து இருந்தார். இதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக் கோப்பையை யாரின் தலைமையிலான அணி வெல்லும் என்பதையும் கச்சிதமாக கணித்து இருந்தார்.
இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரை 1987ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். அவர் கணித்துள்ளதுபடி, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987, மார் 24ஆம் தேதி பிறந்தவர். இதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 1987, ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்தவர். இதனால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் உலகக் கோப்பையை வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக கோப்பை தொடரால், உயரும் இந்திய பொருளாதாரம்
நடப்பு உலக கோப்பை தொடரால், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து, இந்திய பொருளாதாரத்திற்கு ரூ.13,500 கோடி கூடுதலாக கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு கொண்டாட்டம். இந்தியாவில் உலக கோப்பை தொடர் நடப்பது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் தான். 12 ஆண்டுகளுக்கு பிறகு, சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டுமென ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம், உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுமென பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரால், இந்திய பொருளாதாரத்திற்கு 1.64 பில்லியன் டாலர், அதாவது ரூ.13,500 கோடிகள் கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ( 347.2 மில்லியன் டாலர் ) மற்றும் 2019ல் இங்கிலாந்தில் (447.8 மில்லியன் டாலர்) நடந்த உலக கோப்பை தொடர்களால் கிடைத்த பொருளாதார தாக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
உலக கோப்பை தொடரால் சுற்றுலா பயணிகள் வருகை , உள்ளூர் உணவகங்கள் விற்பனை, நினைவுப் பொருட்களை வாங்குதல், ஹோம் டெலிவரிக்கு உணவு ஆர்டர் செய்தல், சுற்றுலா தலங்களுக்குச் செல்வது உள்பட பல்வேறு நிகழ்வுகளால், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை காணும்.
1. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை :
சென்னை, ஐதராபாத், டில்லி, லக்னோ, ஆமதாபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நவ.,19ம் தேதி வரை நடைபெறும் உலக கோப்பை தொடரை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இது கோவிட் தொற்றுக்கு முந்தைய அளவை விட, 80 முதல் 90 சதவீதம் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
2. டிக்கெட் டிமாண்ட் அதிகரிப்பு.! :
உலகின் மிகப்பெரிய மைதானமான ஆமதாபாத் மோடி மைதானத்தில் 1 லட்சம் பேர் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். இதில் சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் குஜராத்தை சேராதவர்களாக இருக்கலாம். டிக்கெட்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. கூடுதலாக 4 லட்சம் டிக்கெட்களை பிசிசிஐ வெளியிட்டது. அதுவும் விரைவாக விற்று தீர்ந்துள்ளது.
3. விமான, ஹோட்டல் புக்கிங் அதிகரிப்பு :
ஆமதாபாத்தில் அக்.,14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் தினத்தன்று ஹோட்டல் புக்கிங் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து ஆமதாபாத்துக்கு விமான டிக்கெட் விலை 104 சதவீதம் அதிகரித்துள்ளது.
4. டிவி விற்பனை அதிகரிப்பு :
உலக கோப்பை தொடரை பெரும்பாலானோர் டிவியில் கண்டு ரசிப்பர் என்பதால் டிவி விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாம்சங், சோனி, எல்.ஜி, பானாசோனிக் போன்ற நிறுவனங்களின் 55 இன்ச் டிவி விற்பனை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு 100 சதவீதம் அதிகரித்துள்ளது
இவையனைத்தும் சேர்த்தால், நேரடியாக மற்றும் மறைமுகமாக என பொருளாதாரத்திற்கு ரூ.11,750 கோடி கிடைக்கும். மேலும் உள்ளூர் விற்பனையாளர்களிடம் வாங்குவது, சரக்குகள் விற்பனை உள்ளிட்டவற்றால், கூடுதலாக 15 சதவீதம் என மொத்தம் ரூ.13,500 கோடி, இந்திய பொருளாதாரத்திற்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலகக்கோப்பை கிரிக்கெட்... இந்தியாவுக்கு அற்புதம் நிகழுமா?
ஆசியக்கோப்பையை இந்தியா வென்ற கையோடு கொழும்பு பிரேமதாசா மைதானத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்கு வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்துப் பெருமிதம் பொங்க ரோகித் பேசிக்கொண்டிருக்க, மைதானத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் காதைக் கிழிக்கிறது. உடனே அங்கு கவனத்தைத் திருப்பிய ரோகித், ‘‘பட்டாசெல்லாம் உலகக்கோப்பைய ஜெயிச்சதுக்கு அப்புறம் வெடிக்கலாம்பா...’' என போகிற போக்கில் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துச் சென்றார். ரோகித்தின் வார்த்தைகள் அப்படியே பலித்துவிட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முழுநேர வேண்டுதல்.
வரலாற்றில் தமிழக வீரரான எஸ்.வெங்கட்ராகவனின் தலைமையிலிருந்து தொடங்குகிறது இந்தியாவின் உலகக்கோப்பைப் பயணம். கத்துக்குட்டியாக வெங்கட்ராகவனின் தலைமையில் 1975, 1979 என இரண்டு உலகக்கோப்பைத் தொடர்களிலுமே சேர்த்து கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே வீழ்த்தியிருந்த இந்திய அணிக்கு 1983-ல் உலகக் கோப்பையையே வென்று கொடுத்தார் கபில்தேவ். லார்ட்ஸ் பால்கனியில் கபில்தேவ் & கோ வரிசைகட்டி நின்று உலகக்கோப்பையை வென்ற தருணத்தில் ஒட்டுமொத்த தேசமுமே பெருமிதத்தில் பூரித்தது. கபில்தேவாலேயே மீண்டும் நிகழ்த்திக்காட்ட முடியாத அற்புதம் அது. 90-களில் மட்டும் 3 உலகக்கோப்பைகள் நடந்திருக்கின்றன. அத்தனையும் சச்சினை மையப்படுத்தியவை. அவரின் வருகையும் எழுச்சியும்தான் இந்த உலகக்கோப்பைகளின் கதையாடல். இந்தியாவின் சுமைதாங்கியாக சச்சின் இருந்தார். ஆனால், அவராலும் ஒரு உலகக்கோப்பையைக் கூட வென்று கொடுக்கமுடியவில்லை. கபில்தேவின் ஆக்ரோஷ அவதாரமாக வந்து நின்ற கங்குலியால் 2003-ல் இறுதிக்கோட்டை நெருங்க முடிந்ததே தவிர, வேண்டியதை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. 2007 உலகக்கோப்பை இந்திய ரசிகர்களின் பார்வையில் ஒரு அவமானத் தலைக்குனிவு. அதிலிருந்து மீட்டு இந்தியாவை மீண்டும் பெருமித நடைபோட வைத்தவர் தோனி. நிகழ வாய்ப்பில்லை என நம்பப்பட்ட ‘கபில்தேவ் மேஜிக்'கை மீண்டும் நிகழ்த்திக் காட்டினார் தோனி. மும்பையின் வான்கடே மைதானமும் வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டது. தோனி அடித்த அந்த வின்னிங் ஷாட்டில் ஒட்டுமொத்த தேசத்துடன் சேர்ந்து கபில்தேவும் உருகிப்போய் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.
வரவிருப்பது ரோகித்தின் முறை. மற்ற கேப்டன்களிலிருந்து ரோகித் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் ஐ.சி.சி கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்பதற்காகவே கேப்டன் ஆக்கப்பட்டவர். அத்தனை சாதனைகளும் செய்து இயந்திரத்தனமாக ரன் குவித்தபோதும் ஐ.சி.சி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதற்காகவே கோலியை கேப்டன் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக இறங்க வைத்தது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ. விராட் கோலியின் கையிலிருந்து ரோகித் பேட்டனை வாங்கியபோதே அவருக்கு உணர்த்தப்பட்ட செய்தி, ‘உலகக்கோப்பையை வெல்ல வேண்டும்' என்பதுதான். இதில் அவர் வென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டில் அவரின் கொடிதான் உயரே பறக்கும். ரோகித்தின் சொல்படி பி.சி.சி.ஐ கேட்கும். தோற்றால் விராட்டின் நிலை ரோகித்துக்கும் வரக்கூடும். ஆக, இது ‘கேப்டன்' ரோகித்துக்கு மாபெரும் சவால். இதுவே ஒரு அழுத்தமாக அவரின் முதுகில் ஏறி அமர்ந்து அழுத்திவிடவும் கூடாது.
சமீபகாலமாக முன்னும் பின்னுமாக நம்பிக்கை யளிக்காமல் ஆடிக் கொண்டிருந்த அணி ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியத் தொடர் என அடுத்தடுத்து வென்று சரியான நேரத்தில் வேகம் பிடித்திருப்பது ரோகித்திற்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். பேட்டிங்கி லும் சுப்மன் கில்லை சௌகரியமாக உணர வைக்கும் வகையில் ரோகித் தன்னைத் தகவமைத்துக்கொண்டு ஆடத் தொடங்கியிருப்பது சிறப்பு. கடந்த உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து பிரமிக்க வைத்த ரோகித், இந்த முறை அதற்கு சற்றும் குறைவில்லாத செயல்பாட்டைக் கொடுக்க வேண்டும். அப்போது இருந்தது வெறும் ரோகித்தான். இப்போதோ இரட்டிப்புப் பொறுப்போடு கேப்டனாக இருக்கிறார். ஆக, எதிர்பார்ப்புகளுமே கொஞ்சம் அதிகம்தான். 1992 உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 2011 உலகக்கோப்பையில் விராட் கோலி ஏற்றிருந்த அறிமுக கதாபாத்திரத்தில் இப்போது சுப்மன் கில் இருக்கிறார். முந்தைய இருவரும் தங்களின் வருகையிலேயே அதிர வைத்து அடுத்தடுத்த தசாப்தங்களை தமதாக்கிக்கொண்டார்கள். சுப்மன் கில்லுக்கு இப்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இளம்புயலாக ஓப்பனிங்கில் சுழன்றடித்தால் அவரும் ஸ்டார் ஆகலாம், இந்தியாவின் உலகக்கோப்பை வாய்ப்பும் பெருகும். இதே உலகக்கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தி ருந்தால் விராட் கோலியே அவர்மீது முழு நம்பிக்கையோடு இறங்கியிருக்க மாட்டார். அப்படித்தான் இருந்தது அவருடைய ஃபார்ம். ஆனால், உலகக்கோப்பை நெருங்க நெருங்க இறுதிக்கோட்டை எட்டும் ஓட்டப்பந்தய வீரரைப் போல வேகமெடுத்து மீண்டும் பழைய துடிப்போடு வந்து நிற்கிறார். சச்சினால் தோள்தட்டிக் கொடுக்கப்பட்ட கோலி, இப்போது அணியின் சூப்பர் சீனியர். ஜூனியர்களின் தோளில் தட்டிக்கொடுக்கும் அந்தஸ்தில் இப்போது இருக்கிறார். அவரின் கடைசி ஒருநாள் உலகக் கோப்பையாகக் கூட இது இருக்கலாம். அதற்கேற்ற மறக்க முடியாத செயல்பாட்டை கோலி கொடுத்தே ஆக வேண்டும்.
அணியின் இப்போதையே பெரும் நம்பிக்கை ஹர்திக் பாண்ட்யாதான். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே நல்ல ஃபார்மில் இருக்கும் ஒரே இந்திய வீரர் அவர்தான். 2011 உலகக்கோப்பையின் யுவராஜ் சிங்கை ஒத்த தாக்கத்தை ஹர்திக் கொடுத்தால் இந்தியாவுக்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும்.
அணி நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்துவிட்டார். துல்லியமான அவரின் யார்க்கர்கள் சரியாக பேட்டர்களின் பாதங்களைக் குறிவைத்தால் பௌலிங்கிலும் இந்திய அணி நல்ல விளைவுகளைப் பெறும். பும்ராவுக்கு ஒத்துழைப்பு நல்க சிராஜும் ஷமியும் இருக்கிறார்கள். இருவருமே ப்ளேயிங் லெவனில் இருப்பார்களா என்பது ரோகித் மற்றும் டிராவிட்டின் அன்றைய தின முடிவைப் பொறுத்தது. ஷர்துல் தாகூரும் அணியில் இருக்கிறார் என்பதை மறந்துவிட முடியாது. ஃபார்மில் இல்லாத ஜடேஜாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஹர்திக்கோடு பேட்டிங் நின்றுவிடும் என்பதற்காகவே ஷர்துலையும் அணியில் எடுத்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் பேட்டிங் ஆடுவார் என்பதுதான் ப்ளேயிங் லெவனில் அவருக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் விஷயம். ஸ்பின்னைப் பொறுத்தவரை சமீபமாக குல்தீப் மிகச்சிறப்பாகவே வீசிக்கொண்டிருக்கிறார். அவரைப் போன்ற வெரைட்டியான ஒரு பௌலர் இருப்பது எப்போதும் அணிக்கு பலமே. கடைசி நேரத்தில் ரயிலில் ஏறியிருக்கிறார் அஷ்வின். கடந்த சில வருடங்களாகவே இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிகமாக அவர் ஆடவில்லையெனினும் இன்னும் துடிப்பாகத்தான் இருக்கிறார். வார்னரை வலக்கை பேட்டராக மாற வைக்கும் அளவுக்கு அவருக்குத் திராணி இருக்கிறது. ஒவ்வொரு பந்திலும் எதையாவது அணிக்காக நிகழ்த்திக் காட்டிவிட வேண்டும் என்கிற நெஞ்சுரமும் இருக்கிறது. சேப்பாக்கத்தில் வைத்தே இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆடுகிறது, அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக! இந்திய அணி தொடரை வெற்றியோடு தொடங்க அஷ்வின் மிகமுக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார்.
என்னதான் பலமிக்க அணியாக இருந்தாலும், அணியில் சில ஓட்டைகள் இருப்பதையும் மறைத்துவிட முடியாது. இந்த உலகக்கோப்பையில் ஏறக்குறைய அத்தனை அணிகளிலும் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அதுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து என இந்தியாவிற்குப் பெரும் சவாலளிக்கப்போகும் அணிகளில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பிரதான ஆயுதமாக இருக்கிறார்கள். ஆசியக்கோப்பையிலேயே ஷாகின் அஃப்ரிடியிடம் மிரண்டுபோயினர் இந்திய பேட்டர்கள். ஸ்டார்க், பயிற்சிப் போட்டியிலேயே ஹாட்ரிக் எடுத்து திமிறி நிற்கிறார். இவர்களை இந்தியாவின் டாப் ஆர்டர் எப்படி சமாளிக்கும்?
ஃபார்மில் இல்லாத ஜடேஜா வையும் பௌலரான குல்தீப்பையும் தவிர்த்து இஷன் கிஷன்தான் அணியின் ஒரே இடக்கை பேட்டர். அவர் ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்பதில் எந்த உறுதியும் இல்லை. அந்த நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் இறங்க ராகுல், கிஷன் இருவருமே மோதித்தான் ஆகவேண்டும். இந்தியாவின் மற்ற வீரர்களுக்கு ஸ்பின்னை ஆடுவதில் சிரமம் இருந்தாலும், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை ஸ்ரேயாஸ் ஐயர் பக்குவமாக எதிர்கொண்டுவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார்? குறிப்பாக அந்த நெஞ்சுக்குக் குத்தி ஏறும் ஷார்ட் பால்களை என்ன செய்யப் போகிறார்? ஒருவேளை டாப் ஆர்டர் சொதப்புகிற பட்சத்தில் மிடில் ஆர்டரில் முழுப்பொறுப்பையும் ஸ்ரேயாஸ்தான் எடுத்தாக வேண்டும். இப்போதைக்கு முதல் லெவனில் இடமில்லாததைப் போலத் தோன்றும் சூர்யகுமார் யாதவை ரோகித் எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
பேட்டிங், பௌலிங் என்பதைக் கடந்து இந்திய அணியின் ஃபீல்டிங்குமே கொஞ்சம் கவலையளிக்கக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. விவ் ரிச்சர்ட்ஸை வீழ்த்திய கபில்தேவின் கேட்ச்சை இன்றைக்கும் கொண்டாடுகிறோம். 1987-ல் ஆஸ்திரேலியா முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றிருந்தது. அப்போதே ‘‘நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல ஃபீல்டிங் மிக முக்கிய காரணமாக இருந்தது’' என ஜெஃப் மார்ஷ் கூறியிருந்தார். 36 வருடங்கள் ஓடிவிட்டன. எனில், இப்போது ஃபீல்டிங் தரம் எப்படி இருக்க வேண்டும்! ஆனால், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் இல்லை என்பதே நிதர்சனம்.
ரவுண்ட் ராபின் அடிப்படையில் நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் 9 லீக் போட்டிகளில் இந்திய அணி ஆடியாக வேண்டும். 9 போட்டிகளிலுமே இந்திய அணி ஒரே கொள்கையோடு சீரான ஆட்டத்தை ஆட வேண்டும். ஆசியக்கோப்பையில் கோப்பையையே வென்றபோதும், இடையில் வங்கதேசத்திடம் வீழ்ந்திருப்பார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தொடரையே வென்றபோதும், பெரிய தலைகள் ஆடிய அந்தக் கடைசிப் போட்டியில் இந்திய அணி தோற்கவே செய்திருந்தது. இப்படியான சீரற்ற செயல்பாடுகளை இந்தத் தொடரில் தவிர்த்தே ஆக வேண்டும். மேலும், இந்தியாவின் சமீபத்திய உலகக்கோப்பை எஸ்.டி.டி படி நாக் அவுட்டில்தான் இந்திய அணி தொடர்ந்து சொதப்புகிறது. இந்த முறையும் இந்திய அணி அரையிறுதியை எட்டிவிடும் என்பதே எதிர்பார்ப்பு. அதன்பிறகு என்ன செய்யப்போகிறார்கள் என்பதற்கே, த்ரில்லர் படத்துக்கான சுவாரசியத்தோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மழை காரணமாக சில போட்டிகள் தடைபடலாம் அல்லது டக்வொர்த் லீவிஸ் அடிப்படையில் முடிவுகள் எட்டப்படலாம். ஆக, புள்ளிப்பட்டியலில் ஏடாகூடமான ஏற்ற இறக்கங்கள் அரங்கேறவும் வாய்ப்பிருக்கிறது. இதையும் மனதில் வைத்தே இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் அணுக வேண்டும்.
கபில்தேவுக்குப் பிறகு உலகக்கோப்பை ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ள இந்திய அணி 28 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. தோனிக்குப் பிறகு இப்போது 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘ஒரு உலகக்கோப்பையை வெல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை' என்பதை உணர்த்திய காலகட்டங்கள் இவை. காத்திருப்புக்கேற்ற அற்புதங்கள் நிகழவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல அலசல்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை மிக எளிதாக வீழ்த்தியது நியூசிலாந்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அபார வெற்றி; கான்வே, ரச்சின் சதம்
டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு - இங்கிலாந்து பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதன்படி, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் ஜோடியில் டேவிட் மாலன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் உடன் சிறிது நேரம் ஜோடி அமைத்த பேர்ஸ்டோவ் 33 ரன்னில் அவுட் ஆனார். ஹாரி புரூக் 25 ரன்னிலும், மொயின் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட் 57 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் ஜோடி அமைத்த ஜோஸ் பட்லர் சிறிது தாக்குப் பிடித்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். 42 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்லர் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டோன் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்தார். 3 பவுண்டரிகளை விரட்டிய லிவிங்ஸ்டோன் 20 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் சதம் விளாசி தனி ஒருவனாக போராடி வந்த ரூட் 86 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும், சாம் கர்ரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடில் ரஷித் 15 ரன்னுடனும், மார்க் வூட் 13 ரன்னுடனும் கடைசில் களத்தில் இருந்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 282 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய வில் யங் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திர தொடக்க விரர் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அரைசதம் கடந்து அசத்தினர்.
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 83 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். மறுபுறம் கான்வேக்கு சமமாக அதிரடியில் அசத்திய ரச்சின் ரவீந்தர் 82 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இந்த கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், அதிரடியாக விளையாடிய கான்வே 150 ரன்களை கடந்து அசத்தினார்.
இறுதியில் 36.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 2019 உலககோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்து பழி தீர்த்துள்ளது. மேலும் 2023 உலககோப்பையின் முதல் போட்டியை நியூசிலாந்து தற்போது வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கிய கடைசி வரை களத்தில் இருந்து டெவான் கான்வே 131 பந்துகளில் 19 பவுண்டரி 3 சிக்சருடன் 151 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 11 பவுணட்ரி 5 சிக்சருடன் 123 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்
நியூசிலாந்து:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, டிரென்ட் போல்ட்.
நேருக்கு நேர்
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இதுவரை 95 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 44-ல் வெற்றி பெற்றன. 3 ஆட்டம் சமன் ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 10 முறை மோதியுள்ளன. இதில் 5-ல் நியூசிலாந்தும், 4-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டம் சமன் ஆனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!
» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|