புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
68 Posts - 45%
heezulia
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10தமிழக செய்திகள்  - Page 4 Poll_m10தமிழக செய்திகள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக செய்திகள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:48 pm

First topic message reminder :

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.


கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம்,  1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத்  இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.

டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:18 am

புகையிலை பொருட்களுக்கு தடை: அரசாணை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!



குட்கா பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் குட்கா பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனை அடுத்து இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது . இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று புதிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

இதனை அடுத்து தமிழ்நாடு அரசு விரைவில் இது குறித்த அரசாணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:18 am

கன்னியாகுமரி பாதரியார் பெனடிக் ஆன்றோவிற்கு ஜாமீன்: நீதிமன்றம் உத்தரவு



பாலியல் புகாரில் சிக்கி கைதான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த 29 வயது பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அடுத்து அவரது லீலைகள் அம்பலமாகின.,

மேலும் அவர் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த ஜாமீன் மனு என்று நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதனை அடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிரியார் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை விரைவில் முடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:19 am

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா!



ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்வதால் மன அழுத்தம், உடல் நலப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சினைகளில் இருந்து அவர்கள் வெளி வர உதவும் விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் கற்றுக்கொடுத்து வருகிறது.

அதன்படி, நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய சிறைகள், பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகள் என மொத்தம் 73 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’, ‘உப யோகா’, ‘சூரிய சக்தி’ போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர். இவ்வகுப்புகளில் ஆண் மற்றும் பெண் கைதிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:19 am

மிளகாய் பொடியைத் தூவி மருமகனை வெட்டிக் கொல்ல முயன்ற மாமனார்



காதல் திருமணத்தில், பெண் வீட்டார், மிளகாய் பொடியைத் தூவி மருமகனை வெட்டிக் கொல்ல முயற்சி செய்த நிலையில், படுகாயங்களுடன் மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் திகினார் கிராமத்தில் வசிப்பவர் விக்னேஷ் கார்த்திக். இவர் அதேபகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் நடைபெற்ற நிலையில், ஜோதியின் பெற்றொர் கோபத்தில் இருந்தனர்.

நேற்றிரவு ஜோதியின் அப்பா பால்ராஜ், அவரது அம்மா துளசியம்மான் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் விக்னேஷ் கார்த்தியின் வீட்டிற்குச் சென்றனர்.

அப்போது, விக்னேஷ் கார்த்தியின் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

கதறல் சப்தம் கேட்டு அருகிலுள்ளோர் சம்பவ இடத்திற்கு வரவே அங்கிருந்து 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.

விக்னேஷ் கார்த்தி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரும் தற்போது கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடித்து விடுவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:20 am

'' நீ சந்தோஷமா இரு''...காதலிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த காதலன்!



கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காதலியின் தாய் திட்டியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் சசிக்குமார். இவர் அங்குள்ள ஒரு தனியார் செல்போன் விற்பனை கடையில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு அதேகடையில் பணியாற்றிய சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், இருவீட்டிலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்த நிலையில், பெண் வீட்டாரிடம் சம்மதம் வாங்கியுள்ளார் சசிக்குமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், சசிக்குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு முன்பதாக தன் காதலிக்கு, ''நான் பிறந்திருக்கவே கூடாது; நீ சந்தோஷமா இரு'' என்று மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் காதலியின் தாய் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:21 am

விழுப்புரம்: பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியர் - போலீஸ் அதிரடி நடவடிக்கை



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விட்டலாபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சகலகலாதரன் (59) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதேப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியை தலைமை ஆசிரியர் சகலகலாதரன் தனது அறைக்கு அழைத்துச் சென்று சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிராம மக்களிடம் கூறி முறையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து தலைமை ஆசிரியர் சகலகலாதரனுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்து திண்டிவனம் ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களை சமாதானம் செய்து தலைமை ஆசிரியரை மீட்டனர். பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே தலைமை ஆசிரியர் சகலகலாதரனுகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியரை வெளியில் விட்டுவிட்டதாக குற்றம்சாட்டி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பொதுமக்களும், வி.சி.க-வினரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன ‘ காவல்துறை இரண்டொரு நாளில் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தார்.

ஆனாலும் அவரை இன்னமும் போலீசார் கைது செய்யவில்லை. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் முகாமிடுவதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீ நாதாவிடம் தலைமை ஆசிரியர் சகலகலாதரனை கைது செய்யுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:22 am

சென்னை: வி.சி.க பிரமுகர் வெட்டிக்கொலை



சென்னை குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதீஷ் (29). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும் அதேப் பகுதி தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ் (25), சுனில் (22) ஆகிய இருவரும் திடீரென அதிசிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரும் சேர்ந்து வெட்டியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதீசின் அண்ணன்கள் முரளி (33), சுகுமார் (38) உள்ளிட்ட 3 பேர் ஓடி வந்து தடுத்துள்ளனர். இதில் அவர்கள் 3 பேருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிரிழந்த அதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதீசின் அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக அதீசின் அண்ணன் மகன்கள் சேர்ந்து அதீசை கொலை செய்து தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளதோடு, வி.சி.க வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:22 am

ஒரேநாளில் 2 அரசாணைகள் நிறுத்தம்: ‘தி.மு.க அரசை இயக்குவது யார்?’ - வானதி சீனிவாசன் கேள்வி



தி.மு.க அரசின் தவறான முடிவுகளுக்குத் தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போது எல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? என்றும், தி.மு.க அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா? என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை ஒரேநாளில் தி.மு.க அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல அரசாணையை வெளியிட்டுவிட்டுத் திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்துள்ளது. தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.

திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இதுதொடர்பாக தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு காரணமாகவே, தி.மு.க அரசை இந்த அளவு பணிய வைத்துள்ளது.

ஒரு பக்கம் சட்டப்பேரவையில் 500 மதுக்கடைகளைக் குறைப்போம் என்று அறிவித்துவிட்டு மறுபக்கம் மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்துள்ளது தி.மு.க அரசு. இது தகவல் தொழில் நுட்ப புரட்சி யுகம். இப்போது ஏமாற்று வேலை மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள்.

தி.மு.க அரசின் தவறான முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போது எல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக, முதலமைச்சரை சந்தித்துக் கோரிக்கை விடுப்பது, கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க-விடம் இருந்து அதிக தொகுதிகளைப் பெற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே தி.மு.க-விடம் இருந்து ஆதாயம் அடைய வேண்டும் என்ற கவலை தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, தி.மு.க அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு ஏதாவது சக்திகள் அரசை இயக்குகிறதா? என்று சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 26, 2023 2:36 am

முதல்வர் தொடங்கி வைத்த விழாவிற்கு வராத அமைச்சர், அதிகாரிகள்; தனியாக நின்ற பூசாரி



தமிழக செய்திகள்  - Page 4 GK8pcw8

முதல்வர் தொடங்கி வைத்த விழாவில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சித்தரேவு மற்றும் நிலக்கோட்டை, ஆகிய இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான விழா ஆத்தூரில் நடைபெறுவதற்காக, தமிழ்நாடு கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்தது.

காலை 10:45- மணிக்கு விழா தொடங்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நண்பகல் 12.30 மணி வரையிலும் அமைச்சரும் அரசு அதிகாரிகளும் விழா நடைபெறும் இடத்திற்கு வரவில்லை. ஆகையால் கலந்து கொள்ள வந்திருந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.

போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக மாறின. விழாவின் அடிக்கல் நாட்டுமிடத்தில் யாரும் இல்லாததால் அடிக்கல் நாட்டும் பூஜை ஈடுபடும் அர்ச்சகர் தான் மட்டுமே தனி ஒருவராக பூஜைகளை செய்து கொண்டிருந்தார். முதலமைச்சர் தொடங்கி வைத்த விழாவில் அமைச்சரும் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 26, 2023 11:29 am

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக