புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
69 Posts - 58%
heezulia
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
111 Posts - 59%
heezulia
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_m10பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 04, 2023 11:14 pm

பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்... இ.பி.கோ சட்டப் பிரிவு 100  Ipc_se10
பெண்களைப் பாதுகாக்கும் பேராயுதம்...
இ.பி.கோ சட்டப் பிரிவு 100


‘உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று சொல்லிக் கொடுங்கள் அம்மாக்களே’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.



பெண்களுக்கு தலைகுனிந்து நடக்கக் கற்றுக் கொடுத்தோம்; புழுங்கும் மாதங்களிலும் இழுத்துப் போர்த்திக் கொள்ளப் பழக்கினோம்; அடக்க, ஒடுக்கம் பயிற்றுவித்தோம். எந்தப் பயிற்சியுமே பாலியல் தொல்லையிலிருந்து பெண்களைக் காக்கவில்லை என்பதால், `பெப்பர் ஸ்பிரே' கண்டுபிடித்தோம். கைப்பை யில் கொஞ்சம் மிளகாய்த்தூளை மடித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தினோம். கூட்டுப் பாலியல் வன்கொடுமையிடம் மிளகும், மிளகாயும் தோற்றுப் போயின. மனம் தளராத சமூகம், ‘உன்னோட ஜாக்கெட் ஓர் இன்ச் இறங்கியிருந்தது; உன்னோட ஸ்கர்ட் ஓர் இன்ச் ஏறியிருந்தது; இருட்டுன பிறகு உன்னை யாரு வெளியே போகச் சொன்னது’ என்று பெண்கள் பக்கமே குற்றத்தைத் திருப் பியது. பச்சிளம் குழந்தைகளும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பாததால், அவர்களுக்கு குட் டச், பேட் டச் வகுப்பெடுத்தது.

சமீப வருடங்களாக, ‘உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்வதென்று சொல்லிக் கொடுங்கள் அம்மாக்களே’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அரசாங்கமும் சட்டமும் 1091, 1098, காவலன் செயலி, போக்சோ, விசாகா, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. ஆனால், ‘திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்’ என்கிற நிலைமைதான் இன்று வரை தொடர் கிறது. பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

பாலியல் தொல்லைக்குள்ளாகும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளும் போராட் டத்தில் எதிர்பாராதவிதமாக சம்பந்தப்பட்ட ஆணின் உயிருக்கு ஊறு விளைவித்து விட்டாலோ அல்லது அந்த ஆணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிற அளவுக்கு தாக்கி விட் டாலோ, சட்டமும் காவல்துறையும் அந்தப் பெண்ணை எப்படி நடத்தும் என்பதை விளக்கத்தான் இந்தக் கட்டுரை.

உங்களுக்கு தண்டனை தரப்பட மாட்டாது!



வழக்கறிஞர் சாந்தகுமாரி, ‘`தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை எல்லா உயிர் களுக்கும் உண்டு. ஒருவன் என்னைக் கொல்ல வருகிறான்; அவன் அடித்தால் நான் இறந்து விடுவேன்; என் மீது ஆசிட் வீச வருகிறான்; என்னை வெட்ட வருகிறான்; என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வருகிறான்; என்னைக் கடத்த முயற்சி செய்கிறான்... இப்படிப்பட்ட ஆபத் தொன்றில் சிக்கிக்கொண்ட பெண்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் போராட்டத்தில் எதிராளி யைத் தாக்குவது தற்காப்பு. அந்தப் போராட்டத்தில் தன்னைத் தாக்க வரும் ஆணுக்கு உயிராபத்து ஏற்படுத்திவிட்டாலும், அது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. சம்பந்தப்பட்ட பெண் கொலைக் குற்றவாளியும் கிடையாது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100 இப்படித்தான் சொல்கிறது’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

எதிர்பாராமல் நிகழ்ந்ததா?



மனநல மருத்துவர் ஷாலினி, ‘`இதுபோன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது தற்செயலாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்தாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சில நேரம் மனநல மருத்துவரின் கருத்தையும் காவல் துறையினர் நாடுவர். மனநல மருத்துவர் செய்யும் உண்மை அறிந்துகொள்ளும் பரிசோதனையும் ‘எதிர்பாராமல் நிகழ்ந்தது’ என்கிற உண்மையை உறுதிப்படுத்தும்’’ என்று அச்சம் போக்குகிறார்.

குற்றம் குற்றமாகாத சந்தர்ப்பம் இது!



ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி, ‘`இந்திய தண்டனை சட்டத்தின் பெருமைகளில் ஒன்று இந்த செக்‌ஷன் 100. ஆபத்தில் சிக்கிக் கொண்டவர் மட்டுமல்ல, ஆபத்திலிருக்கிறவரை காப்பாற்ற முயற்சி செய்பவர் ஏற்படுத்தும் கொடுங் காயமும், உயிராபத்தும்கூட மன்னிக்கப்பட வேண்டும் என்கிறது இந்த செக்‌ஷன். குற்றம் குற்றமாகாத சந்தர்ப்பம் இது என்கிறது இந்திய தண்டனை சட்டம். பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பவம் நடந்தவுடன் அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடையலாம். அங்கே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தாக்கினேன் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். அடுத்து, உதவி கண்காணிப்பாளர், காவல் உதவி ஆணையர் போன்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்து அந்தப் பெண் சொல்வது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவார்கள். படிப்பு, வேலை என பல இடங்களுக்கும் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பெண்களுக்கு, சட்டப் படி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் தெரிய வேண்டும்’’ என்கிறார்.

செக்‌ஷன் 100-ன் கீழ் ஒரு பெண்ணை விடுதலை செய்தேன்!



2012-ல் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை செக்‌ஷன் 100-ன் கீழ் காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் விடுவித்தது, அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டது. அதுகுறித்து அவரிடம் பேசினோம்.

‘`அந்தச் சம்பவம் நடந்தபோது நான் மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்தேன். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவரின் கணவர், தங்கள் மகளையே வன்புணர்வு செய்ய முயல்வதைப் பார்த்திருக்கிறார். மகளைக் காப்பாற்றுவதற்காகக் கையில் கிடைத்த கிரிக்கெட் மட்டையால் கணவனைத் தாக்கியிருக்கிறார். அதில் கணவர் உயிரிழந்துவிட, அவரே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து கணவரின் உடலை அனுப்பி விட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதல்கட்டமாக இரண்டு சப் இன்ஸ் பெக்டர்களை வைத்து அந்தப் பெண்ணை விசாரணை செய்தேன். விசாரணையின் முடிவில், ‘இந்த ஆள் இதற்கு முன்னாலும் மகளை வன்புணர்வு செய்ய முயற்சி செய்திருக்கிறான். ஊரில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது’ என்றனர். அடுத்தகட்ட விசாரணையை டிஎஸ்.பி, அடிஷனல் எஸ்.பி லெவலில் இருந்த அதிகாரிகளின் மூலம் செய்ய வைத்தேன். அந்தப் பெண் சொன்னதும், சப் இன்ஸ்பெக்டர்கள் விசாரணையில் சொன்னதும் உறுதியானது. உடனே, அந்தப் பெண்ணை கைது செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு, மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்தேன். அவர்கள் என்னை இந்திய தண்டனை சட்டம் 100-ஐ வாசிக்கும்படி வழிகாட்டினார்கள். அதன்படி, அந்தப் பெண்ணை விடுதலை செய்தேன்.

கணவரின் தரப்பில் உயர் நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்தக் கணவரின் இயல்பு, இதற்கு முன்னரும் அவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றது, எப்படிப்பட்ட சூழலில் அவர் மனைவி இப்படிச் செய்தார், பிணக்கூராய்வு சான்றிதழ், அந்தப் பெண்ணுடைய மகளின் அறிக்கை என அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்தோம். அந்த இறுதி அறிக்கையை மதுரை நீதிமன்றம், ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தது’’ என்றார்.

குற்றம், குற்றமாகாத சூழலில் தற்காப்பால் உந்தப்படுவோம்!


விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 05, 2023 11:57 am

காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் போல எல்லோரும் இருக்கமாட்டார்கள்! “நீங்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது” என்ற பழைய வசனத்தைப் பேசி, கொலைக்கு என்ன தண்டனையோ அதைக் கொடுத்துவிட்டுக் காரில் ஏறிப் போய்விடுவார்கள்!
ஆக, #சமுதாயத்தில் #முதலில் #பாடம் #கற்றுக்கொள்ள #வேண்டியவர்கள் #‘மேலே’ #உள்ளவர்கள்தாம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக